என் மலர்
நீங்கள் தேடியது "Pani"
- ராஜபாளையத்தில் ஊரணி சுற்றுப்பாதை பணிகள் நகர்மன்ற தலைவி பார்வையிட்டார்.
- பொதுமக்களின் கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் நகராட்சி 27-வது வார்டில் கருப்பஞானியார் கோவில் அருகே வடுக ஊரணி உள்ளது. இந்த ஊரணியை சுற்றி சுற்றுப்பாதை அமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தற்போது நகராட்சி சார்பில் சுற்றுப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் சுற்றுப்பாதை அமைக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சுற்று வட்டார பகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அந்த பகுதிகளில் சாலைகள் மற்றும் பாலங்கள் அமைக்க அவர்கள் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
இதில் தி.மு.க நகர செயலாளர் ராமமூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்கள் சுமதி ராமமூர்த்தி, வீரலட்சுமி, ராமலட்சுமி, குருசாமி, மாரியப்பன், . நாகேஸ்வரன், கோவில் தர்மகர்த்தா டாக்டர் ஆறுமுகபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வாணி ஊரணியை பொதுமக்கள் தூர்வாரினர்.
- தூர்வாரப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த ஊரணியை ஊராட்சி மன்றத் தலைவர் பார்வையிட்டு பாராட்டினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த வாணி கிராமத்தில் மன்னர் காலத்தில் தானமாக வழங்கப்பட்ட குளம் பராமரிப்பு இல்லாமல் கிடந்தது. இதனை பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்திற்கும், ஊராட்சி நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
வாணி ஊரணி பெரிய பரப்பளவை கொண்டதால் அதனை தூர்வார அதிகளவில் நிதி செலவினம் ஆகும். இதனால் தூர்வாறும் பணி தாமதமானது.
இதுகுறித்து தற்போதைய கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து அவர் சக்கரக்கோட்டை ஊராட்சி மூலம் ரூ.2 லட்சம் நிதி வழங்க பரிந்துரைத்தார். அதனைத்தொடர்ந்து ஊராட்சி மன்றத் தலைவர் செ.யாழினி புஷ்பவள்ளி நிதியை அனைத்து சமுதாய மக்களிடம் வழங்கினார். அதனை தொடர்ந்து வாணி கிராம ஜமாத்தார்கள், அனைத்து சமுதாய பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றி ணைந்து வாணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்தவர்களிடம் ரூ. 20 லட்சம் வரை திரட்டினர்.
அதனை தொடர்ந்து ஊரணியை தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். பொதுமக்களின் சீரிய முயற்சியால் தூர்வா ரப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த ஊரணியை ஊராட்சி மன்றத் தலைவர் பார்வை யிட்டு பாராட்டினார்.அதனைத் தொடர்ந்து மழை வேண்டி அனைத்து சமுதாய மக்களால் பிரார்த் தனை செய்யப்பட்டது.
- சமீபத்தில் மலையாள திரைப்படமான பணி திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
- நடிக்கும் கதாப்பாத்திரங்களில் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார்.
நாடோடிகள், சீதம்மா வகிட்லோ சிரிமல்லி சேத்து, மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றவர் நடிகை அபிநயா. சமீபத்தில் மலையாள திரைப்படமான பணி திரைப்படத்தில் ஜோஜு ஜார்ஜ் மனைவி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நடிகை அபினயா விரைவில் அவரது நீண்ட நாள் காதலனை திருமண செய்துக் கொள்ளப்போவதாகவும் அவர்கள் இருவருக்கும் நிச்சயம் நடைப்பெற்றதையும் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
யார் அந்த காதலன் என தெரியவில்லை? அனைவரும் பெரும் எதிர்ப்பார்ப்புடன் காத்துக்கொண்டுள்ளனர்.
இவர் பேச்சு மற்றும் செவி திறன் இல்லாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இவர் நடிக்கும் கதாப்பாத்திரங்களில் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார்.
தற்பொழுது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக தமிழில் சுந்தர் சி இயக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடிக்கவுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ரூ.31 லட்சம் செலவில் ஊரணியை தூர்வாரி பராமரிக்க பூமிபூஜை நடந்தது.
- 20ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஊரணி பராமரிக்கப்படாமல் குப்பை கொட்டும் இடமாக இருந்து வந்தது.
சிவகங்கை
சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட சவக்கட்டு ஊரணி 20ஆண்டுகளுக்கு மேலாக பராமரிக்கப்படாமல் குப்பை கொட்டும் இடமாக இருந்து வந்தது. அதனை தூர்வாரி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து சவக்கட்டு ஊரணி தூர்வாரபட்டு நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைக்கும் பணி, கம்பி வேலி அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.
நகர் மன்ற தலைவர் துரைஆனந்த் தலைமை தாங்கினார். இதில் நகர் மன்ற பொறியாளர், கவுன்சிலர்கள் அன்புமணி, சண்முக ராஜன், விஜயகுமார், அயூப்கான், ராமதாஸ், ஆறு சரவணன், கீதாகார்த்திகேயன், மதியழகன், வழக்கறிஞர் ராஜஅமுதன், ஒப்பந்ததாரர் மதி, தொழில்நுட்ப பிரிவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.