என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PBKS"

    • ஷ்ரேயாஸ் அய்யர் 36 பந்தில் 82 ரன்கள் விளாசினார்.
    • பவர் பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் குவித்தது.

    ஐபிஎல் 2025 தொடரின் 27ஆவது போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    அதன்படி அந்த அணியின் பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட வேண்டும் என்ற எண்ணத்தில் வந்தனர். அவர்களின் எண்ணம் போன்று பந்து பேட்டில் நன்றாக பட்டது.

    ஷமி வீசிய முதல் ஓவரின் கடைசி 3 பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார் பிரப்சிம்ரன் சிங். இதனால் முதல் ஓவரில் பஞ்சாப் அணிக்க 14 ரன்கள் கிடைத்தது. அடுத்த ஓவரை கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரில் பிரியான்ஷ் ஆர்யா ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். பிரப்சிம்ரன் சிங் ஒரு பவுண்டரி அடிகக் 16 ரன்கள் கிடைத்தது. 3ஆவது ஓவரை ஷமி வீசினார். இந்த ஓவரில் ஆர்யா இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்தார். பிரப்சிம்ரன் ஒரு சிக்ஸ் அடித்தார். இதனால் இந்த ஓவரில் 23 ரன்கள் கிடைத்தது. அத்துடன் பஞ்சாப் கிங்ஸ் 53 ரன்கள் சேர்த்தது.

    4ஆவது ஓவர ஹர்ஷல் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்த ஆர்யா கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 13 ரன்கள் கிடைத்தது. பஞ்சாப் கிங்ஸ் 4 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 66 ரன்கள் எடுத்தது.

    5ஆவது ஓவரை கம்மின்ஸ் வீசினார். பிரப்சிம்ரன் சிங் உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 8 ரன்கள் கிடைத்தது. 6ஆவது ஓவரை ஹர்ஷல் படேல் வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 15 ரன்கள் கிடைத்தன. இதனால் பவர்பிளேயில் பஞ்சாப் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் குவித்தது.

    7ஆவது ஓவரை எஷான் மலிங்கா வீசினார். இந்த ஓவரின் 5ஆவது பந்தில் பிரப்சிம்ரன் சிங் ஆட்டமிழந்தார். இவர் 23 பந்தில் 42 ரன்கள் விளாசினார்.

    அதன்பின் ஷ்ரேயாஸ் அய்யர் உடன் வதேரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அதிரடியாக விளையாடியது. 8.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. 12.2 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது. ஷ்ரேயாஸ் அய்யர் 22 பந்தில் அரைசதம் அடித்தார்.

    13.3 ஓவரில் 164 ரன்கள் எடுத்திருக்கும்போது வதேரா ஆட்டமிழந்தார். அவர் 22 பந்தில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷஷாங் சிங் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். 17ஆவது ஓவரை எஷான் மலிங்கா வீசினார். இந்த ஓவரில் ஷ்ரேயாஸ் அய்யர் 4 பவுண்டரிகள் விரட்டினார். அத்துடன் 17 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 205 ரன்கள் குவித்தது.

    18ஆவது ஓவரை ஹர்ஷல் படேல் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் மேக்ஸ்வெல் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 3ஆவது பந்தில் ஷ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழந்தார். அவர் 36 பந்தில் தலா 6 பவுண்டரி, சிக்சருடன் 82 ரன்கள் குவித்தார். இந்த ஓவரில் பஞ்சாப் அணிக்கு 5 ரன்கள்தான் கிடைத்தது. 18 ஓவர் முடிவில் பஞ்சாப் 210 ரன்கள் எடுத்திருந்தது.

    19ஆவது ஓவரை கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரில் 8 ரன்கள் மட்டுமே கிடைத்தது. கடைசி ஓவரை ஷமி வீசினார். இந்த ஓவரின் கடைசி 4 பந்துகளையும் சிக்சருக்கு விரட்டினார் மார்கஸ் ஸ்டோய்னிஸ். இதனால் பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்துள்ளது. கடைசி ஓவரில் 27 ரன்கள் கிடைத்தன.

    ஸ்டோய்னிஸ் 11 பந்தில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    • பஞ்சாப் கிங்ஸ் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
    • சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் எஷான் மலிங்கா சேர்க்கப்பட்டுள்ளார்.

    ஐபிஎல் 2025 தொடரின் 27ஆவது போட்டி ஐதராபாத்தில் நடக்கிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

    பஞ்சாப் கிங்ஸ்:-

    பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஷ்ரேயாஸ் அய்யர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், நேஹல் வதேரா, மேக்ஸ்வெல், ஷஷாங்க் சிங், மார்கோ யான்சன், சாஹல், அர்ஷ்தீப் சிங், பெர்குசன்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத்:-

    அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, கிளாசன், அனிகெட் வர்மா, கம்மின்ஸ், ஹர்ஷல் படேல், ஜீஷன் அன்சாரி, முகமது சமி, எஷான் மலிங்கா

    • பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 219 ரன்கள் குவித்தது.
    • சென்னை அணி 20 ஓவர் முடிவில் 201 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 219 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து 220 எடுத்தால் வெற்ற என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.

    இந்த வெற்றிக்கு பின்பு பஞ்சாப் கிங்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் மாஸ்டர் பட விஜய் புகைப்படத்தை பகிர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பதிலடி கொடுத்தது.

    பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக மாஸ்டர் படத்தின் இறுதிக்காட்சியில் விஜய் - விஜய் சேதுபதி மோதும் புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது.
    • பஞ்சாப் அணி ஐபிஎல் தொடரில் தனது 3-வது வெற்றியை பதிவு செய்தது.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். பிரப்சிம்ரன் சிங் 0 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 9, ஸ்டோய்னிஸ் 4, நெகல் வேதேரா 9, மேக்ஸ்வெல் 1 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் அந்த அணி 83 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.

    ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் பிரியான்ஷ் ஆர்யா அதிரடியாக அரை சதம் கடந்தார். அந்த சமயத்தில் பிரியான்ஷ் ஆர்யாவுடன் ஷஷாங்க் சிங் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

    இதனால் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 219 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 220 எடுத்தால் வெற்ற என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி வீரர்கள் ராசின் ரவீந்திரா 36 ரன்களும், ருதுராஜ் 1 ரன்களும், துபே 42 ரன்களும், கான்வே 69 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். டோனி 27 ரன்களில் வெளியேறினார். விஜய் சங்கர் 2 ரன்னும், ஜடேஜா 9 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    இறுதியில் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது. இதனைதொடர்ந்து 6 புள்ளிகளுடன் பஞ்சாப் அணி  ஐபிஎல் தொடரில் தனது 3-வது வெற்றியை பதிவு செய்தது.

    • ருத்ர தாண்டவம் ஆடிய ஆர்யா 39 பந்தில் சதம் விளாசி அசத்தினார்.
    • சென்னை அணி தரப்பில் அஸ்வின், கலீல் அகமது தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். பிரப்சிம்ரன் சிங் 0 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 9, ஸ்டோய்னிஸ் 4, நெகல் வேதேரா 9, மேக்ஸ்வெல் 1 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் அந்த அணி 83 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.

    ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் பிரியான்ஷ் ஆர்யா அதிரடியாக அரை சதம் கடந்தார். அந்த சமயத்தில் பிரியான்ஷ் ஆர்யாவுடன் ஷஷாங்க் சிங் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

    ருத்ர தாண்டவம் ஆடிய ஆர்யா 39 பந்தில் சதம் விளாசி அசத்தினார். இதில் 9 சிக்சர் 7 பவுண்டரிகள் அடங்கும். அவர் 42 பந்தில் 103 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த யான்செனும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    இதனால் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 219 ரன்கள் எடுத்தது. ஷஷாங்க் சிங் 52 ரன்களிலும் யான்சென் 34 ரன்களிலும் களத்தில் இருந்தனர். சென்னை அணி தரப்பில் அஸ்வின், கலீல் அகமது தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • ஐபிஎல்லில் வேகமான சதம் அடித்த வீரர்களில் பிரியான்ஷ் ஆர்யா 5-வது இடத்தில் உள்ளார்.
    • அன்கேப்டு வீரர்களில் சதம் அடித்தவர்கள் பட்டியலில் 8-வது வீரராக ஆர்யா இடம் பிடித்துள்ளார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி தொடக்கத்தில் இருந்தே தடுமாறியது. இதனால் அந்த அணி 83 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் பிரியான்ஷ் ஆர்யா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அவர் 39 பந்தில் சதம் விளாசி அசத்தினார். இதில் 9 சிக்சர் 7 பவுண்டரிகள் அடங்கும். இதன்மூலம் அவர் பல சாதனைகளை படைத்துள்ளார்.

    ஐபிஎல்லில் வேகமான சதம் அடித்த வீரர்களில் பிரியான்ஷ் ஆர்யா 5-வது இடத்தில் உள்ளார். மேலும் அன்கேப்டு வீரர்களில் சதம் அடித்தவர்கள் பட்டியலில் 8-வது வீரராக ஆர்யா இடம் பிடித்துள்ளார்.

    ஐபிஎல்லில் வேகமான சதம் (எதிர்கொண்ட பந்துகள் மூலம்)

    30 - கிறிஸ் கெய்ல் (RCB) vs பி.டபிள்யூ.ஐ, பெங்களூரு, 2013

    37 - யூசுப் பதான் (RR) vs மும்பை, மும்பை பிஎஸ், 2010

    38 - டேவிட் மில்லர் (KXIP) vs ஆர்சிபி, மொஹாலி, 2013

    39 - டிராவிஸ் ஹெட் (SRH) vs ஆர்சிபி, பெங்களூரு, 2024

    39 - பிரியான்ஷ் ஆர்யா (PBKS) vs சிஎஸ்கே, முல்லாப்பூர், 2025*

    ஐபிஎல் தொடரில் அன்கேப்டு வீரர்களின் சதம்:-

    ஷான் மார்ஷ் vs RR, 2008

    மணீஷ் பாண்டே vs DEC, 2009

    பால் வால்தாட்டி (KXIP) vs CSK, 2009

    தேவ்தத் படிக்கல் (RCB) vs RR, 2021

    ரஜத் படிதார் (RCB) vs LSG, 2022

    யஷஸ்வி ஜெய்ஸ்வால் (RR) vs MI, 2022

    பிரப்சிம்ரன் சிங் vs (DC), 2023

    பிரியான்ஷ் ஆர்யா (பிபிகேஎஸ்) எதிராக சிஎஸ்கே, 2025*

    • பஞ்சாப் அணி தொடக்கவீரர் பிரியன்ஸ் ஆர்யா 8 ரன்கள் அடித்திருந்தபோது திக்வேஷ் ரதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
    • வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    ஐபிஎல் 2025 தொடரின் 13-ஆவது ஆட்டம் லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 16.2 ஓவர்களில் 177 ரன்கள் எடுத்தது. இதனால் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதனிடையே, பஞ்சாப் அணி தொடக்கவீரர் பிரியன்ஸ் ஆர்யா 8 ரன்கள் அடித்திருந்தபோது திக்வேஷ் ரதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட்டை கொண்டாடும் விதமாக பிரியன்ஸ் ஆர்யா பக்கத்தில் சென்று தனது கைகளில் எழுதுவது போன்ற 'notebook' கொண்டாட்டத்தில் திக்வேஷ் ஈடுபட்டார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இந்த நிலையில், பிரியன்ஸ் ஆர்யாவின் விக்கெட்டை வீழ்த்தியதை வித்தியாசமாக கொண்டாடிய திக்வேஷ் ரதிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவருக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 25% அபராதமும் 1 டிமெரிட் பள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. 4 - 7 டிமெரிட் புள்ளிகள் பெற்றப்பட்டால் ஒரு போட்டியில் அந்த வீரர் விளையாட முடியாது என்பது விதிமுறையாகும்.



    • லக்னோவை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி பெற்றது.
    • பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்படுவேனோ என்று பதட்டமாக இருந்தது என பண்ட் கூறியிருந்தார்.

    ஐபிஎல் 2025 தொடரின் 13-ஆவது ஆட்டம் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது.

    இதனைத்தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 16.2 ஓவர்களில் 177 ரன்கள் எடுத்தது. இதனால் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    2025 ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக, லக்னோ அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டது குறித்து பேசிய ரிஷப் பண்ட், "எனக்கு ஒரே ஒரு பதற்றமாக இருந்தது, அது பஞ்சாப் அணியிடம் அதிகமான ஏலத்தொகை இருந்தது. ஷ்ரேயாஸ் பஞ்சாப் அணிக்கு சென்றால், நான் லக்னோ அணியால் எடுக்கப்படுவேன் என்று நினைத்தேன். ஆனால் ஏலத்தில் உங்களுக்குத் தெரியாது. அதனால் ஏலத்தை பதற்றத்துடன் பார்த்து கொண்டிருந்தேன்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், பஞ்சாப் அணியிடம் லக்னோ அணி தோல்வியை தழுவிய பின்னர், ரிஷப் பண்டை கிண்டல் செய்யும் விதமாக "ஏலத்திலேயே பதற்றம் முடிவுக்கு வந்தது" என்று பஞ்சாப் கிங்ஸ் அணி பதிவிட்டுள்ளது.

    • பஞ்சாப் வீரர் பிரியன்ஸ் ஆர்யா 8 ரன்கள் அடித்திருந்தபோது திக்வேஷ் ரதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
    • ரியன்ஸ் ஆர்யா பக்கத்தில் சென்று 'notebook' கொண்டாட்டத்தில் திக்வேஷ் ஈடுபட்டார்.

    ஐபிஎல் 2025 தொடரின் 13-ஆவது ஆட்டம் லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது.

    இதனைத்தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 16.2 ஓவர்களில் 177 ரன்கள் எடுத்தது. இதனால் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பஞ்சாப் அணி தொடக்கவீரர் பிரியன்ஸ் ஆர்யா 8 ரன்கள் அடித்திருந்தபோது திக்வேஷ் ரதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட்டை கொண்டாடும் விதமாக பிரியன்ஸ் ஆர்யா பக்கத்தில் சென்று தனது கைகளில் எழுதுவது போன்ற 'notebook' கொண்டாட்டத்தில் திக்வேஷ் ஈடுபட்டார்.

    2019 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் தீவின் கெஸ்ரிக் வில்லியம்ஸ் பந்துவீச்சில் சிக்ஸ் அடித்த பிறகு 'நோட்புக்' கொண்டாட்டத்தில் விராட் கோலி ஈடுபட்டார்.

    விராட் கோலியின் 'நோட்புக்' கொண்டாட்டத்தை திக்வேஷ் செய்தது இணையத்தில் வைரலானது.

    • டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
    • பஞ்சாப் அணியின் சார்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    ஐபிஎல் 2025 தொடரின் 13-ஆவது ஆட்டம் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக மார்கிராம், மிட்செல் மார்ஷ் களமிறங்கினார். இதில் மிட்செல் மார்ஷ் முதல் பந்திலேயே ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

    அடுத்து நிக்கோலஸ் பூரன் களம் இறங்கினார். நிக்கோலஸ் பூரன் நிதானமாக விளையாடினார். ரிஷப் பண்ட் 2 ரன்னில் வெளியேறினார். பூரன் உடன் ஆயுஷ் படோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது.

    20 ஒவர்களில் லக்னோ அணி 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக பூரண் 44 ரன்களும், ஆயுஷ் பதோனி 41 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் அணியின் சார்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    இதனைத்தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் வீரர்கள் பிரியன்ஸ் ஆர்யா 8 ரன்களில் வெளியேறினார். பிரப்சிம்ரன் சிங் 69 ரன்கள் ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 52 ரன்களும், நேஹால் வதேரா 43 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.

    இறுதியில் பஞ்சாப் அணி 16.2 ஓவர்களில் 177 ரன்கள் எடுத்தது. இதனால் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • நிக்கோலஸ் பூரன் 44 ரன்னும், படோனி 41 ரன்களும் சேர்த்தனர்.
    • அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    ஐபிஎல் 2025 தொடரின் 13-ஆவது ஆட்டம் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி மார்கிராம், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார். முதல் இரண்டு போட்டிகளில் அரைசதம் விளாசிய மிட்செல் மார்ஷ், தான் சந்தித்த முதல் பந்திலேயே ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

    அடுத்து நிக்கோலஸ் பூரன் களம் இறங்கினார். நிக்கோலஸ் பூரன் நிதானமாக விளையாடினார். மார்கிராம் அதிரடியாக விளையாட முயற்சித்தார். இருந்தாலும் 18 பந்தில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் 2 ரன்னில் வெளியேறினார்.

    இதனால் லக்னோ 35 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது திணறியது. 4-வது விக்கெட்டுக்கு பூரன் உடன் ஆயுஷ் படோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. வாய்ப்பு கிடைக்கும்போது பூரன் பந்தை பவுண்டரிக்கும், சிக்சருக்கும் விரட்டினார்.

    அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், பூரன் 30 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் ஆட்டமிழந்தார். அப்போது லக்னோ 11.3 ஓவரில் 89 ரன்கள் எடுத்திருந்தது.

    அடுத்து வந்த மில்லர் 19 பந்தில் ஆட்டமிழந்தார். 6-வது விக்கெட்டுக்கு ஆயுஷ் படோனி உடன் அப்துல் சமாத் ஜோடி சேர்ந்தார். அப்துல் சமாத் அதிரடியாக விளையாட லக்னோ அணி 150 ரன்னைக் கடந்தது. அர்ஷ்தீப் வீசிய 18-ஆவது ஓவரில் லக்னோ 20 ரன்கள் விளாசியது.

    யான்சன் வீசிய 19-ஆவது ஓவரில் 8 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் 19 ஓவரில் 164 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரின் 2-ஆவது பந்தில் படோனி ஆட்டமிழந்தார். அவர் 33 பந்தில் 41 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    4-ஆவது பந்தில் அப்துல் சமாத் ஆட்டமிழந்தார். இவர் 12 பந்தில் 27 ரன்கள் எடுத்தார். கடைசி 2 பந்தில் ஒரு வைடு உடன் 3 ரன்கள் அடிக்க இந்த ஓவரில் 7 ரன்கள் கிடைத்தது. இதனால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது.

    பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப் சிங் 4 ஓவரில் 43 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். பெர்குசன், மேக்ஸ்வெல், யான்சன், சாசல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • லக்னோ இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது.
    • பஞ்சாப் கிங்ஸ் ஒரு போட்டியில் விளையாடி அதில் வெற்றி பெற்றுள்ளது.

    ஐபிஎல் 2025 தொடரின் 13-ஆவது ஆட்டம் லக்னோவில் நடக்கிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    லக்னோ அணி:-

    மார்கிராம், மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன், ரிஷப் பண்ட், ஆயுஷ் படோனி, திப்வேஷ் ரதி, டேவிட் மில்லர், அப்துல் சமாத், ஆவோஷ் கான், ஷர்துல் தாகூர், ரவி பிஷ்னோய்.

    பஞ்சாப் கிங்ஸ்:-

    பிரப்சிம்ரன் சிங், பிரியன்ஸ் ஆர்யா, ஷ்ரேயாஸ் அய்யர், ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோய்னிஸ், சுர்யன்ஷ் ஷெட்ஜ், மேக்ஸ்வெல், மார்கோ யான்சன், சாஹல், பெர்குசன், அர்ஷ்தீப் சிங்.

    ×