என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PCB"

    • பாகிஸ்தான் சென்று இந்திய அணி கிரிக்கெட் விளையாடாது என பிசிசிஐ அறிவிப்பு.
    • அடுத்த வருடம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது. 2022-ம் ஆண்டில் இருந்து பாகிஸ்தானில் நடைபெறும் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க மாட்டோம் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. 2023-ம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற இருந்தது. இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவித்ததால் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் போட்டிகள் நடத்தப்பட்டன.

    அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இந்தியா விளையாட மறுப்பு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் மற்றும் வெளிநாடுகளிலும் போட்டி நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் ஐசிசி தொடர்களை புறக்கணித்தால் அது பின் விளைவை ஏற்படுத்தும் என இந்திய அணிக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக ரஷித் லத்தீப் கூறியதாவது:-

    இரு நாடுகளுக்கு இடையிலான தொடரை நீங்கள் மறுக்க முடியும். ஐசிசி தொடர்களை மறுப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். ஐசிசி திட்டத்தை வெளியிடும்போது, அவர்கள் எங்கே சென்று விளையாட வேண்டும் என்பது அணிகளுக்கு தெரியும். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு சென்று விளையாட வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு தெரிந்திருந்தது. அதன் அடிப்படையில்தன் கிரிக்கெட் ஒப்பந்தத்தில் கிரிக்கெட் போர்டுகள் கையெழுத்திடுகின்றன.

    1996 உலகக் கோப்பை தொடரின்போது ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இலங்கை சென்று விளையாட மறுத்தது. இதனால் போட்டிகளில் விளையாடாமல் காலிறுதிக்கு முன்னேறியது. அதோடு உலகக் கோப்பையையும் வென்றது. இந்தியா பாகிஸ்தான் வந்து விளையாட மறுப்பு தெரிவித்தால் அது பிசிசிஐக்கு பின் விளைவை ஏற்படுத்தும்.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்த பாகிஸ்தான் கராச்சி, ராவல்பிண்டி, லாகூர் மைதானங்களை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தேர்வு செய்துள்ளது. இந்திய அணிகளின் ஆட்டங்களை ஒரே மைதானத்தில் நடத்த ஐசிசி-க்கு பரிந்துரைத்துள்ளது.

    • அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் தோல்வியடைந்தது மிகப்பெரிய பாதிப்பாக அமைந்தது.
    • இந்தியாவிடம் தோல்வியடைந்ததால் வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. குரூப் "ஏ" பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா, நமீபியா அணிகள் இடம் பிடித்திருந்தன.

    பாகிஸ்தான்- அமெரிக்கா இடையிலான போட்டி "டை"யில் முடிந்தது. பின்னர் சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்தது. அதன்பிறகு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் தோல்வியை சந்தித்தது.

    இதனால் சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி வீரர்கள் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றன.

    வீரர்களுக்கான ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் உள்ள சில தலைவர்கள், முன்னாள் வீரர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோஹ்சின் நக்வி-க்கு ஆலோசனை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நக்வி தோல்விக்காக கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்தார், வீரர்கள் அவர்களுக்கான மத்திய ஒப்பந்த மறுஆய்வு, சம்பளம், போட்டிக்கான கட்டணம் குறைவு ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது.

    பாகிஸ்தான் அணிக்குள் மூன்று பிரிவுகள் உள்ளன. மூத்த வீரர்கள் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என விமர்சனம் வைக்கப்படுகிறது.

    இதுவரை முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை. ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு, தலைவருடன் கடுமையான நடவடிக்கைக்கான ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த வருடம் வீரர்களுக்கான சம்பளம் குறிப்பிடத்தகுந்த வகையில் உயர்த்தப்பட்டது. அதேபோல் ஐசிசி-யிடம் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு கிடைக்கும் வருவாயில் குறிப்பிட்ட பங்கு வீரர்களுக்கு சென்றடைய முடிவு எடுக்கப்பட்டது.

    உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றால் ஒவ்வொரு வீரர்களுக்கும் போனஸாக ஒரு லட்சம் அமெரிக்க டாலர் வழங்கப்படும் என நக்வி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாபர் அசாம் மீண்டும் கேப்டனாக பதவி ஏற்ற பிறகு, வீரர்களை ஒன்றிணைக்கும் சவால் அவர் முன் இருந்தது. ஆனால், வீரர்களிடையே குரூப் உருவானதால் அவரால் அதை திறம்பட செய்ய முடியாமல் போனது.

    பாபர் அசாம் தலைமையில் ஒரு குரூப், ஷாஹீன் அப்ரிடி தலைமையில் ஒரு குரூப், முகமது ரிஸ்வான் தலைமையில் ஒரு குரூப் என அணியில் மூன்று குரூப் இருந்ததாக கூறப்படுகிறது.

    ஷாஹீன் அப்ரிடி கேப்டன் பதவியை இழந்தபோது அப்செட் ஆனார். அந்த நேரத்தில் பாபர் அசாம் அவருக்கு உதவவில்லை. ரிஸ்வான் தனது பெயர் கேப்டன் பதவிக்கு பரிந்துரை செய்யப்படாததால் அதிருப்தி அடைந்தார்.

    • இதனை பாகிஸ்தான் முதல் முறையாக 2025-ல் நடத்துகிறது.
    • 5 போட்டிகள், ராவல்பிண்டியிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    "மினி உலக கோப்பை" என அழைக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி 1998-ம் ஆண்டு வங்காளதேசத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் தென் ஆப்பிரிக்கா கோப்பையை கைப்பற்றியது. இதுவரை 8 போட்டித் தொடர் நடைபெற்றுள்ளது.

    கடைசியாக 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் கோப்பையை வென்றது. 9-வது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டி 8 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற இருக்கிறது. இதனை பாகிஸ்தான் முதல் முறையாக 2025-ல் நடத்துகிறது.

    ஒருநாள் போட்டித் தர வரிசையில் டாப் 8 நாடுகள் இதில் பங்கேற்கின்றன. வெஸ்ட்இண்டீஸ், இலங்கை ஆகியவை தகுதிபெறும் வாய்ப்பை இழந்தன. சாம்பியன்ஸ் டிராபி போட்டியை பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை கராச்சி, லாகூரில் நடத்த திட்டமிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

    தொடக்க ஆட்டம், அரை இறுதி உள்பட 3 போட்டிகள் கராச்சியிலும், இறுதிப் போட்டி உள்பட 7ஆட்டங்கள் லாகூரிலும், அரையிறுதி உள்பட 5 போட்டிகள், ராவல்பிண்டியிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்காக இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. பாதுகாப்பு கருதி மத்திய அரசு அனுமதி மறுப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    பொதுவான இடமான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது இலங்கையில் விளையாட தயார் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வருகிற 19-ந்தேதி ஐ.சி.சி.யின் கூட்டம் கொழும்பில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் இதுபற்றி முடிவு செய்யப்படும்.

    இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாட இந்திய அரசு அனுமதி மறுப்பதற்கு எழுத்துப்பூர்வ ஆதாரத்தை அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ-இடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேட்டுள்ளது.

    இந்த கடிதத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) இந்திய கிரிக்கெட் வாரியம் வழங்குவது கட்டாயம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2023-ம் ஆண்டு பாகிஸ்தானில் நடந்த ஆசிய கோப்பையில் இந்திய அணி விளையாட மறுத்து இலங்கையில் ஆடியது குறிப்பிடத்தக்கது.

    • வங்காளதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்கிறது.
    • அந்த அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    கராச்சி:

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்யும் வங்காளதேச அணி, அந்த அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடர் ஆகஸ்ட் 21-ம் தேதி தொடங்குகிறது.

    முன்னதாக, கனடிய லீக் தொடர் ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், இந்தத் தொடரில் பங்கேற்க முன்னணி வீரர்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷாஹீன் ஷா அப்ரிடி உள்ளிட்டோருக்கு என்.ஓ.சி. சான்றிதழ் வழங்கப்படவில்லை.

    அனைத்து வடிவங்களிலும் விளையாடும் வீரர்களுக்கு பாலிசியின்படி சான்றிதழ் வழங்கப்படாமல் இருப்பதே என்ஓசி மறுக்கப்படக் காரணம் என கூறிய பிசிபி, வீரர்களுக்கு உடல் தகுதி மற்றும் செயல்திறன் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படும். அளவுகோல்களுக்கு பொருந்தாத வீரர்களுக்கு இடமில்லை. ஒழுக்கத்திலும் எந்த சமரசமும் இருக்காது என தெரிவித்துள்ளது.

    வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடிக்கு குழந்தை பிறக்க உள்ளதால் வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பது சந்தேகம் என பிசிபி தெரிவித்துள்ளது.

    • பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராகவும் இருந்து வருகிறார்.
    • ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் இரண்டு பதவிகளையும் ராஜினாமா செய்ய உள்ளார்.

    இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா ஐசிசி தலைவராக ஒருமனதாக தேர்வாகியுள்ளார். டிசம்பர் மாதத்தில் இருந்து ஐசிசி தலைவர் பொறுப்பை ஏற்க இருக்கிறார்.

    பிசிசிஐ செயலாளரான ஜெய் ஷா ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராகவும் இருந்து வருகிறார். தற்போது ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டதால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

    இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவராக இருக்கும் மெஹ்சின் நக்வி அடுத்த ஆசிய கிரிக்கெட் சங்க தலைவர் பதவியை ஏற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பதவிக்கான போட்டியில் அவர் முன்னிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த வருட இறுதியில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருட இறுதியில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் நடைபெற இருக்கிறது. அப்போது அடுத்த இரண்டு வருடத்திற்கு தலைவராக நியமிக்கப்படுவது உறுதியாகும்.

    பிசிசிஐ-யின் செயலாளர் பதவியையும் ராஜினாமா செய்ய இருப்பதால், புதிய செயலாளராக அருண் ஜெட்லியின் மகன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • பயிற்சியாளர் பதவியில் தனது கவனத்தை செலுத்த முகமது யூசுப் இந்த முடிவை எடுத்துள்ளார்.
    • ஏற்கனவே பாகிஸ்தான் யு-19 அணிக்கு தலைமை பயிற்சியாளராக பணியாற்றி உள்ளார்.

    கராச்சி:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுவில் இருந்து முகமது யூசுப் திடீரென விலகியுள்ளார்.

    இதுதொடர்பாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தேர்வுக் குழுவில் இருந்து முகமது யூசுப் விலகியுள்ளார். பயிற்சியாளர் பதவியில் தனது கவனத்தைச் செலுத்த இந்த முடிவை எடுத்துள்ளார் என தெரிவித்துள்ளது.

    இவர் ஏற்கனவே பாகிஸ்தான் யு-19 அணிக்கு தலைமை பயிற்சியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டி20 உலகக்கோப்பையை ஒட்டி மீண்டும் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் நியமனம் செய்யப்பட்டார்.
    • டி20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு கூட முன்னேற முடியாமல் பரிதாபமாக பாகிஸ்தான் வெளியேறியது.

    இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் ஜொலிக்காததைத் தொடர்ந்து பாபர் அசாம் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.

    இதனால் ஷாஹீன் அப்ரிடி பாகிஸ்தான் டி20 அணி கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் பாகிஸ்தான் அணி தொடர் தோல்விகளை சந்தித்து.

    இதனையடுத்து டி20 உலகக்கோப்பையை ஒட்டி மீண்டும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக பாபர் அசாம் நியமனம் செய்யப்பட்டார்.

    ஆனால் டி20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு கூட முன்னேற முடியாமல் பரிதாபமாக பாகிஸ்தான் வெளியேறியது.

    இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக பாபர் அசாம் அறிவித்துள்ளார்.

    பணிச்சுமை அதிகமாக உள்ளதால் கேப்டன்சியில் இருந்து விலகி தனது ஆட்டத்தில் கவனம் செலுத்தவுள்ளதாக பாபர் அசாம் கூறியுள்ளார்.

    • சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தான் வரும் என மோசின் நக்வி கூறினார்.
    • 3 முறை பாகிஸ்தான் அணி இந்தியா சென்று விளையாடியுள்ளதால் இம்முறை இந்திய அணி நிச்சயம் எங்களை ஏமாற்றாது.

    கராச்சி:

    2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட 8 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. ஆனால் இந்த தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லுமா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.

    மேலும் 2023 ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடைபெற்றது. ஆனால் அப்போது பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாத இந்தியா தங்களது போட்டிகளை இலங்கையில் விளையாடி சாம்பியன் பட்டம் வென்றது. அதேபோல 2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை துபாய் அல்லது இலங்கைக்கு மாற்றுமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) பி.சி.சி.ஐ கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இது குறித்து ஐ.சி.சி இன்னும் முடிவு செய்யவில்லை.

    மறுபுறம் இந்தியா வரவில்லை என்றால் அவர்களைப் புறக்கணித்து விட்டு மற்ற அணிகளை வைத்து சாம்பியன்ஸ் டிராபியை தங்களது நாட்டிலேயே நடத்த பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளது. ஆனால் அரசியலையும் விளையாட்டையும் ஒன்றாக கலக்காமல் தங்கள் நாட்டுக்கு வந்து விளையாடுமாறு இந்தியாவிற்கு தொடர்ந்து பல பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தான் வரும் என நம்புவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோசின் நக்வி கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:- 

    நீண்ட இடைவெளிக்கு பிறகு பாகிஸ்தானில் நடக்க உள்ள ஐசிசி தொடர் என்பதால் பலத்த பாதுகாப்புடன் தொடரை நடத்த ஆயத்தமாகி வருகிறோம். எனவே அடுத்த ஆண்டு அனைத்து நாடுகளும் பாகிஸ்தான் வந்து விளையாடும் என்பதால் நிச்சயம் இந்திய அணியும் பாகிஸ்தான் வந்து விளையாடும் என்ற நம்பிக்கை உள்ளது.

    கடந்த 2008-ம் ஆண்டு ஜூலைக்கு பிறகு 3 முறை பாகிஸ்தான் அணி இந்தியா சென்று விளையாடியுள்ளதால் இம்முறை இந்திய அணி நிச்சயம் எங்களை ஏமாற்றாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாபர் அசாம் நீக்கப்பட்டுள்ளது கவலையை கொடுக்கிறது.
    • 2020 - 2023 காலகட்டங்களில் சுமாராக செயல்பட்ட போது விராட் கோலியை இந்தியா பெஞ்சில் அமர வைக்கவில்லை.

    பாகிஸ்தான் அணி சமீப காலங்களில் அடுத்தடுத்த படுதோல்விகளை சந்தித்து வருகிறது. கடந்த மாதம் கத்துக்குட்டியான வங்கதேசத்துக்கு எதிராக அந்த அணி முதல் முறையாக டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்தது.

    அந்த சூழ்நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் துவங்கியுள்ள 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

    அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இன்னிங்சில் 500+ ரன்கள் அடித்தும் கடைசியில் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்த முதல் அணியாகவும் பாகிஸ்தான் மோசமான உலக சாதனை படைத்தது.

    இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 2 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணி வெளியிடப்பட்டுள்ளது. அதில் கடந்த சில வருடங்களாகவே சுமாராக செயல்பட்டு வரும் பாபர் அசாம் ஓய்வு என்ற பெயரில் கழற்றி விடப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் 2019-க்குப்பின் சதமடிக்காமல் தடுமாறிய போதும் விராட் கோலியை இந்தியா கழற்றி விடவில்லை அப்படிப்பட்ட சூழ்நிலையில் பாபர் அசாமை கழற்றி விட்டு பாகிஸ்தான் தவறு செய்துள்ளதாக பாகிஸ்தான் வீரர் ஃபகர் சமான் விமர்சித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பாபர் அசாம் நீக்கப்பட்டுள்ளது கவலையை கொடுக்கிறது. 2020 - 2023 காலகட்டங்களில் சுமாராக செயல்பட்ட போது விராட் கோலியை இந்தியா பெஞ்சில் அமர வைக்கவில்லை. அந்த காலகட்டங்களில் அவர் முறையே 19.33, 28.21, 26.50 என்ற சுமாரான சராசரியையே கொண்டிருந்தார்.

    அப்படிப்பட்ட சூழ்நிலையில் நம்முடைய முதன்மை பேட்ஸ்மேனை சொல்லப்போனால் பாகிஸ்தான் உருவாக்கிய சிறந்த வீரரை ஒதுக்குவது அணியின் மற்ற வீரர்களுக்கு எதிர்மறையான செய்தியைக் கொடுக்கும். பதற்றம் எனும் பொத்தானை அமுக்குவதற்கு நமக்கு இன்னும் நேரம் இருக்கிறது. நம்முடைய வீரர்களை குறைத்து மதிப்பிடுவதற்கு பதிலாக அவர்களுக்கு பாதுகாப்பும் வாய்ப்பும் கொடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

    என்று ஃபகர் சமான் கூறினார்.

    • ஷான் மசூத் தலைமையில் பாகிஸ்தான் தொடர்ந்து 6 தோல்விகளை தழுவியது.
    • இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் வென்றது.

    இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்தது. இதனால் பாகிஸ்தான் 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று தொடர் தோல்விக்கு பதிலடி கொடுத்தது.

    இந்நிலையில் போட்டி முடிந்த பின் வர்ணனையாளருடன் பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் உரையாடினார். அப்போது பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத்தை நேர்காணல் செய்யும் போது முன்னாள் பிசிபி தலைவரும் வர்ணனையாளருமான ரமீஷ் ராஜா கேலி செய்தார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.

    இங்கிலாந்துக்கு எதிரான பாகிஸ்தான் தொடரை வென்றதைத் தொடர்ந்து, ரமிஸ் ஷானிடம், "தொடர்ந்து ஆறு தோல்விகளை எப்படி அடைந்தீர்கள்?" இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன் மசூத்தின் சாதனையை குறிப்பிடுகிறார். ஷான் மசூத் தலைமையில் பாகிஸ்தான் தொடர்ந்து 6 தோல்விகளை தழுவியது.

    • கடந்த மே மாதம் தலைமை பயிற்சியாளராக பதவி ஏற்றார்.
    • இவரது தலைமையில் பாகிஸ்தான டி20 உலகக் கோப்பையில் தகுதி சுற்றோடு வெளியேறியது.

    பாகிஸ்தான் ஒயிட்பால் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த கேரி கிரிஸ்டன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மே மாதம்தான் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது. சுமார் ஆறு மாதங்கள் மட்டுமே பயிற்சியாளராக நீடித்துள்ளார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஒவ்வொரு ஸ்டாஃப் ஆக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நீக்கி வருகிறது. கேரி கிரிஸ்டன் மட்டும்தான் நீடித்து வந்தார். இந்த நிலையில்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே செல்லும் நிலையில் கேரி கிர்ஸ்டன் அணியுடன் செல்லமாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளார.

    பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. கிர்ஸ்டன் டேவிட் ரெய்ட்-ஐ ஹை பெர்மார்மன்ஸ் கோச்சாக நியமிக்க வலியுறுத்தியுள்ளார். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் அவரது கோரிக்கையை நிராகரித்துள்ளது.

    டேவிட் ரெய்ட்-க்குப் பதிலாக மற்றொரு ஆலோசனை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு வழங்கியுள்ளது. அதை கேரி கிர்ஸ்டன் ஏற்க மறுத்துவிட்டார். இதனால்தால் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக உள்ள ஜேசன் கில்லெஸ்பி அல்லது தேசிய அணியின் தேர்வாளராக உள்ள அக்யூப் ஜாவித் ஆகியோரில் ஒருவர் தேர்வாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    ஆஸ்திரேலியா தொடர் தொடங்க இருக்கும் நிலையில் முகமது ரிஸ்வானை கேப்டனாக பாகிஸ்தான் அணி நியமித்துள்ளது.

    • பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.
    • அரசியல் மற்றும் பாதுகாப்பு ரீதியான காரணங்களால் இரு அணிகளும் நேரடி தொடரில் மோதுவதில்லை.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. பாகிஸ்தான், இந்தியா உட்பட எட்டு அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. இந்த தொடருக்காக இந்தியா அணி பாகிஸ்தான் செல்லுமா என்பது இன்னும் வரை கேள்வி குறியாகவே உள்ளது.

    கடைசியாக இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2008-ல் பாகிஸ்தானில் விளையாடி இருந்தது. அதன் பிறகு அங்கு சென்று விளையாடவில்லை. இரு அணிகளுக்கு இடையிலான நேரடி தொடர் அரசியல் மற்றும் பாதுகாப்பு ரீதியான காரணங்களால் நடைபெறுவதில்லை. ஐசிசி நடத்தும் தொடர்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் விளையாடி வருகிறது.

    இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா விளையாடுவதற்காக ஹைபிரிட் மாடல் நடைமுறைப்படுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் ஜார்ஜா அல்லது சவுதி அரேபியாவில் நடைபெறும் என நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

    ×