என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pear"

    • ஆப்பிளை விட விலை மிகவும் குறைவானது.
    • பேரிக்காயில் நீர்ச்சத்து அதிகமுள்ளது.

    பேரிக்காயின் ஆங்கில பெயர் பியர். இது ஆப்பிள் வகையைச் சேர்ந்தது. ஆப்பிளை விட விலை மிகவும் குறைவானது. அதனால்தான், இதை `ஏழைகளின் ஆப்பிள்' என்று அழைக்கிறார்கள். பேரிக்காய் நன்கு முற்றி கனியாகிறது. நாம் சாப்பிடுவது பேரிக்கனிதான். ஆனால் பொதுவாக பேரிக்காய் என்றே சொல்கிறோம். பேரிக்காயில் நீர்ச்சத்து அதிகமுள்ளதால் இங்கிலாந்து மக்கள் பேரிக்காயை `கோடைக்கால தண்ணீர்குடம்' என்று கூறுகிறார்கள்.

    நன்மைகள்

    பேரிக்காயில் கால்சியம், பாஸ்பரஸ் கணிசமாக உள்ளதால் எலும்பு வளர்ச்சிக்கும் நல்லது. இதை ஜூஸ் ஆக குடிப்பதை விட, துண்டுகளாக்கி மென்று தின்பதால், இதில் உள்ள சத்துப்பொருட்கள் சிதையாமல் முழுவதும் கிடைக்கும். பேரிக்காயை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து ரத்த ஓட்டத்தை சீராக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும். ரத்தத்தில் ஆக்சிஜன் அதிகம் கிடைக்கச் செய்யும். அஜீரணக் கோளாறுகளை அகற்றி, நன்கு பசியை உண்டாக்கும்.

    பெக்டின் உள்ளதால் குடல் புற்றுநோய் திசுக்கள் வளராது காக்கும் ஆற்றலும் கொண்டது. இதில் நுண்ணூட்ட சத்துகளும், விட்டமின்களும் தாராளமாக இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தொடர்ந்து சாப்பிட்டால் சோர்வு, மன இறுக்கம் நீங்கி புத்துணர்வு தரும். கோடை காலத்தில் உடல் உஷ்ணத்தைக் குறைத்து, குளிர்ச்சியை ஏற்படுத்தும். நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் பேரிக்காயை அடிக்கடி உண்டு வர, நரம்புகள் பலம் பெறும்.

    சத்துகள்

    பேரிக்காயில் புரதம், மாவுப்பொருட்கள், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, நார்சத்துக்கள், மெக்னீசியம், சோடியம், தாமிரம், கந்தகம், குளோரின், வைட்டமின்கள் 'ஏ', 'பி', பெக்டின் முதலிய சத்துகள் உள்ளன.

    • ஆப்பிளை விட கடினமான தோல் பகுதியை கொண்டது.
    • பேரிக்காய் நரம்புத்தளர்ச்சி நோய்க்கு நல்லது.

    தமிழ்நாட்டில் பேரிக்காய்தான் அதிக அளவில் பயிராகும் குளிர்மண்டல பழப்பயிராகும். இது மலைப்பகுதிகளில் சுமார் 1500 முதல் 2500 மீட்டர் உயரமுள்ள இடங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. 10 முதல் 12 ஆண்டு வயதுடைய மரங்களில் இருந்து 100 முதல் 120 கிலோ பழங்கள் கிடைக்கும்.

    மே-ஜூன் மாதங்களில் வால்பேரியும், ஆகஸ்டு முதல் செப்டம்பர் வரை இதர பேரி வகைகள் மற்றும் நாட்டுப்பேரி வகைகள் அறுவடைக்கு வருகின்றன. பேரிக்காய் மரத்தின் தாவரவியல் பெயர் 'பைரஸ் கம்யூனிஸ்' என்பதாகும்.

    பேரிக்காய் வடிவத்தில் ஆப்பிள் போல் தோற்றமளிக்கும். ஆனால், ஆப்பிளை விட கடினமான தோல் பகுதியை கொண்டது. இதன் மேல் தோல் கடினமாகவும், கசப்பாகவும் இருக்கும். எனவே மேல்தோல் நீக்கி உண்ணுவது வழக்கம். 100 கிராம் பேரிக்காயில் புரதம், நார்ப்பொருள், மாவுப் பொருள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, தயமின், ரைபோபிளோவின், நியாசின், மெக்னீஷியம், சோடியம், பொட்டாஷியம், தாமிரம், கந்தகம், குளோரின், ஆக்சாலிக் அமிலம், பைட்டின் பாஸ்பரஸ், கரோட்டின் உள்ளிட்ட சத்துக்கள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    பேரிக்காய் நரம்புத்தளர்ச்சி நோய்க்கு நல்லது. இதயத்தை பலப்படுத்தும். சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் கீல்வாதத்திற்கும் சிறந்தது. கல் அடைப்பை நீக்கும் குணங்கள் பேரிக்காயில் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவிக்கிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பேரிக்காயானது 100 கிராமுக்கு 56 கலோரிகளை மட்டுமே கொண்டுள்ளது.
    • பேரிக்காய் பழம் அதிகமான அளவில் நீரால் ஆனது.

    பேரிக்காய் ஒரு பருவ மழைக்கால பழமாகும். இது பொட்டாசியம், பெக்டின் மற்றும் டானின்கள் போன்ற ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. மேலும் யூரிக் அமிலத்தை கரைத்து அதன் மூலம் வாத நோய்களை குணப்படுத்துகிறது. அதில் இருக்கும் மற்ற சத்து விவரங்களையும் தெரிந்து கொள்வோம்...


    நார்ச்சத்து நிறைந்தது

    அனைத்து ஊட்டச்சத்துக்களும் தினமும் நமக்கு குறிப்பிட்ட அளவில் தேவைப்படுகிறது. ஒரு ஊட்டச்சத்து நிறுவனமானது பேரிக்காய் குறித்து கூறும்போது ஒரு நடுத்தர பேரிக்காயானது ஆறு கிராம் நார்ச்சத்தை கொண்டுள்ளதாகவும், பெண்களின் தினசரி தேவையான நார்ச்சத்து அளவில் 24 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது எனவும் கூறுகிறது. நார்ச்சத்து நமது வயிறை முழுமையாக்குகிறது. பசி எடுப்பதும் குறைகிறது.

    குறைந்த கலோரி

    உடல் எடையை குறைப்பதற்கு முக்கிய ஆதாரமாக கலோரிகள் உள்ளன. நமது உடலில் கலோரிகளை குறைப்பதன் மூலம் நம்மால் உடல் எடையையும் குறைக்க முடியும். எனவே நாம் குறைந்த கலோரிகள் கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம். பேரிக்காயானது 100 கிராமுக்கு 56 கலோரிகளை மட்டுமே கொண்டுள்ளது. எனவே உடல் எடையை குறைப்பதில் இது நன்மை பயக்கிறது.


    அதிக நீர்ச்சத்து கொண்டது

    பேரிக்காய் பழம் அதிகமான அளவில் நீரால் ஆனது. கிட்டத்தட்ட இது 84 சதவீதம் நீர் உள்ளது. அதிகமான அளவில் நீர்ச்சத்தை கொண்டிருந்தாலும் கூட இது குறைவான அளவில் கலோரிகளை உள்ளடக்கியது. எனவே எடை இழப்பிற்கு மட்டுமின்றி உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ளவும் இது உதவுகிறது.

    செரிமானத்திற்கு உதவுகிறது

    பேரிக்காய் நமது செரிமான ஆரோக்கியத்திற்கும், மலச்சிக்கலை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. இதில் அதிக நீர் உள்ளடக்கம் மற்றும் நார்ச்சத்து இருப்பதால் செரிமானத்திற்கும் எடை இழப்பிற்கும் வித்திடும். ஆரோக்கியமான குடல் மற்றும் நல்ல செரிமான அமைப்பு இவை இரண்டுமே எடை இழப்பிற்கு உதவும் காரணிகளாக உள்ளன.

    • நீலகிரி மாவட்டம் மலை பிரதேசமாக உள்ளதால் குளு குளு சீசன் நிலவி வருகிறது.
    • அரசு தோட்டக்கலைத்துறையின் கீழ் உள்ள குன்னூர் சிம்ஸ் பூங்கா பழப் பண்ணையில் பேரிக்காய், பிளம்ஸ், பீச் உட்பட பழமரங்கள் உள்ளன.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் மலை பிரதேசமாக உள்ளதால் குளு குளு சீசன் நிலவி வருகிறது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட போது நீலகிரி மாவட்டம் இங்கிலாந்தின் சீதோஷ்ண நிலையை ஒத்து இருந்ததால் அங்கு விளையக்கூடிய பிளம்ஸ், பேரி, பீச் உட்பட பல்­வேறு வகை பழ வகைகளை பயிரிட்டு விளைவித்தனர்.

    அவ்வப்போது நிலவும் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப பழங்கள் மகசூல் கொடுத்தன. தற்போது மாவட்டத்தில் பேரிக்காய் சீசன் நிலவி வருகிறது. இதனை விவசாயிகள் ஊடுபயிராகவும் தனியாகவும் பயிரிட்டு மகசூல் எடுத்து வருகின்றனர். அரசு தோட்டக்கலைத்துறையின் கீழ் உள்ள குன்னூர் சிம்ஸ் பூங்கா பழப் பண்ணையில் பேரிக்காய், பிளம்ஸ், பீச் உட்பட பழமரங்கள் உள்ளன.

    ஜாம் தயாரிக்கும் பணி சீசனுக்கு ஏற்ப பழங்கள் பழப் பண்ணையிலிருந்து பழவியல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு நிலையத்தில் ஜாம், ஸ்குவாஸ், ஊறுகாய் உள்பட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    தற்போது குன்னுார் பகுதிகளில் பேரிக்காய் சீசன் களைகட்டியுள்ளதால் அரசுப்பழப் பண்ணையில் விளைந்த பேரிக்காய் கொண்டு வரப்பட்டு ஒரு டன் அளவிலான பேரிக்காயை கொண்டு ஜாம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளில் தோட்டக்கலைத்துறையின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்னும் ஓரிரு நாட்களில் பேரிக்காய் ஜாம் தயாரிக்கும் பணி முழுமையாக முடித்து தோட்டக்­கலைக்கு சொந்தமான விற்பனை நிலையங்களுக்கு அனுப்ப, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாத பூங்கா நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ×