என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pillow waterfall"

    • குண்டாறு அணை நிரம்பி வழிகிறது.
    • மலைப்பகுதியில் மழை வெகுவாக குறைந்துவிட்டது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் விவசாய பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.

    நெல்லை மாவட்டத்தில் தொடர்மழையால் பிரதான அணையான 143 அடி கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. நேற்று 100 அடியை எட்டிய அந்த அணையில் இன்று மேலும் 2 அடி நீர் இருப்பு அதிகரித்து 102 அடியாக உள்ளது. இன்று காலை நிலவரப்படி 2 மில்லிமீட்டர் மட்டுமே மழை பெய்துள்ளது.

    ஆனாலும் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் 5 ஆயிரம் கனஅடி நீர் வந்த நிலையில், இன்று 2 ஆயிரம் அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக 806 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று மேலும் 1 அடி உயர்ந்து 115.81 அடியாக உள்ளது.

    118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையில் 78.64 அடி தண்ணீர் உள்ளது. திருக்குறுங்குடி அருகே உள்ள 52.50 அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 51 அடியை எட்டியுள்ள நிலையில், அணைக்கு வரும் 20 கனஅடி நீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்படுகிறது. அந்த அணையில் இருந்து கார் பருவ சாகுபடி பணிக்காக வருகிற 1-ந்தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதற்கிடையே மலைப்பகுதிகளில் மழை குறைந்தாலும், தண்ணீர் வரத்து தொடர்ந்து இருந்து கொண்டே இருப்பதால், மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று 4-வது நாளாக தடை நீடிக்கிறது.

    அதே நேரம் களக்காடு மலைப்பகுதியில் பெய்த கன மழையால் கடந்த 26-ந்தேதி முதல் தலையணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    தென்காசி மாவட்டத்திலும் மலைப்பகுதியில் மழை வெகுவாக குறைந்துவிட்டது. எனினும் அணைகளுக்கு நீர் வரத்து இருப்பதால், அவற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடனா அணை நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 60 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 76 அடியாகவும் உள்ளது.

    குண்டாறு அணை நிரம்பி வழிகிறது. அடவிநயினார் அணை நீர்மட்டம் இன்று 2 அடி உயர்ந்து 92 அடியை எட்டியுள்ளது. அந்த அணை பகுதியில் அதிகபட்சமாக 4 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. 

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மாஞ்சோலை வனப்பகுதி இந்தியாவிலேயே அதிகம் மழைப்பொழிவு பெறும் வனப்பகுதியாகும். இங்கு நேற்று முன்தினம் இரவு திடீரென மழை பெய்ய தொடங்கியது. அங்குள்ள காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட இடங்களில் இரவு முழுவதும் மழை நீடித்தது.

    நேற்றும் பகலில் தொடங்கி இன்று காலை வரையிலும் நாலுமுக்கு, ஊத்து பகுதியில் பலத்த மழை பெய்தது. காக்காச்சி பகுதியில் பரவலாக மழை பெய்தது.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஊத்து எஸ்டேட்டில் 10.1 சென்டிமீட்டரும், நாலுமுக்கில் 9.6 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    இதேபோல் மாஞ்சோலை, காக்காச்சி தேயிலை தோட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. மாஞ்சோலையில் 8 சென்டிமீட்டரும், காக்காச்சியில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நேற்று மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், இன்றும் அங்கு மழை பெய்து வருவதால் 2-வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை வனத்துறை நீட்டித்துள்ளது.

    களக்காடு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக களக்காடு தலையணை சூழல் சுற்றுலா பகுதியில் தலையணையில் நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக சுற்றுலாப் பயணிகள் தலையணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.

    • மணிமுத்தாறு அணைக்கு 1000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
    • ஒரே நாளில் சேர்வலாறு அணை நீர்மட்டம் 4½ அடி உயர்ந்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும், மணிமுத்தாறு வனப்பகுதிகளிலும் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    இன்று அதிகாலை நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்தது. இன்று காலை வரை அதிகபட்சமாக நெல்லை மாவட்டத்தில் சேர்வலாறு பகுதியில் 35 மில்லி மீட்டரும், பாபநாசம் பகுதியில் 28 மில்லி மீட்டரும், கன்னடியன் பகுதியில் 15.20 மில்லி மீட்டரும் மழை பெய்தது.

    இதேபோல் நெல்லை, பாளையங்கோட்டை, மணிமுத்தாறு, களக்காடு, சேரன்மகாதேவி, மூலைக்கரைப்பட்டி, அம்பாசமுத்திரம், நாங்குநேரி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 117.05 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 4½ அடி உயர்ந்து 121.72 அடியாக உள்ளது.

    இதேபோல் 143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 110 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 1½ உயர்ந்து 111.40 அடியாக காணப்படுகிறது.நேற்று 99.92 அடியாக காணப்பட்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் இன்று ½ உயர்ந்து 100.45 அடியாக உள்ளது.

    பிரதான அணையான பாபநாசத்திற்கு வினாடிக்கு 1517 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று 600 கனஅடி தண்ணீர் வந்த நிலையில் இன்று கூடுதலாக 900 கணஅடி தண்ணீர் கூடுதலாக வருகிறது.

    இதேபோல் மணிமுத்தாறு அணைக்கு 1000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகளில் நலன் கருதி கடந்த 5 நாட்களாக மணிமுத்தாறில் குளிக்க தடை விதித்கப்பட்டிருந்தது. இன்று 6-வது நாளாக அங்கு குளிக்க அனுமதிக்கபடவில்லை.

    இதேபோல் களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்து தடுப்பணையை மூழ்கடித்த படி தண்ணீர் பாய்ந்து ஓடுவதால் நேற்று தலையணையில் குளிக்க களக்காடு வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இன்று 2-வது நாளாக தடை நீடிக்கிறது.

    தென்காசி மாவட்டத்திலும் மழை தொடர்ந்து வருகிறது. அதிகப்பட்சமாக புளியங்குடியில் 44 மில்லி மீட்டரும், சிவகிரியில் 20 மில்லி மீட்டரும், ராமநதியில் 19 மில்லி மீட்டரும் மழை பாதிவாகி இருந்தது.

    இதேபோல் தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி, கடனாநதி, கருப்பாநதி பகுதி, அடவிநயினார் பகுதி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் சூரன்குடியில் 42 மில்லி மீட்டரும், கழுகுமலையில் 28 மில்லி மீட்டரும், வேடநத்தத்தில் 22 மில்லி மீட்டரும் மழை பதிவாகியது.

    இதேபோல் தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம், மணியாச்சி, கயத்தாறு, கடம்பூர், சாத்தான்குளம், திருச்செந்தூர், குலசேகரபட்டினம், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், கீழ அரசரடி, காடல்குடி, வைப்பாறு உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை பெய்தது.


    மழை காரணமாக சில இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர். தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலை குண்டும்,குழியாக காணப்படுகிறது. இதில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளுக்கு பள்ளங்கள் தெரியாததால் விபத்தில் சிக்கி வருகிறார்கள்.

    நேற்று இந்த சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற புதுமாப்பிள்ளை ஒருவர் விபத்தில் சிக்கி காயம் அடைந்தார். உடனடியாக இந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×