என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "planted"
- அன்னிய தாவரங்களை முழுமையாக அகற்ற உதவ முன்வர வேண்டும்.
- சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்திலும் மாவட்ட பசுமைக்குழு உருவாக்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் அந்த குழுவின் கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்த மாதத்திற்கான கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். இதில் நீலகிரி மாவட்டத்தில் காணப்படும் அன்னிய தாவரங்கள் குறித்து, வனத்துறையால் அன்னிய தாவரங்களின் படங்களுடன் விரிவான முறையில் குழு உறுப்பி னர்களுக்கு விளக்கப்பட்டது.
மேலும் அந்நிய தாவரங்களுக்கு மாற்றாக, நீலகிரி மாவட்ட சீதோஷ்ண நிலையில் நன்கு வளரக்கூடிய சோலை நாற்றுகளின் விவரங்களும் படங்களுடன் எடுத்து கூறப்பட்டன. ஒவ்வொரு அரசு துறையும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட வன அலுவலர்களால் விளக்கப்பட்டது. பின்னர் இது குறித்து கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் வளர்ந்துள்ள அன்னிய தாவரங்கள் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதால், அவற்றை படிப்படியாக அகற்ற அனைத்து துறைகளும் கூட்டாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அவ்வாறு அன்னிய தாவரங்கள் அகற்றப்பட்ட இடங்களில், சோலை மரக்கன்று மட்டுமே நடப்பட வேண்டும். நடப்பட்ட மரங்கன்றுகளை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். வனத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, தோட்டக்கலைத்துறை ஆகிய துறைகளின் மூலம் பராமரிக்கப்படும் நர்சரிகளில், தேவைக்கேற்ப சோலை நாற்றுகள் அதிகம் உற்பத்தி செய்யப்பட வேண்டும்.
அன்னிய தாவரங்கள் அரசு நிலங்களில் மட்டும் அல்லாமல், தனியார் பட்டா நிலங்களிலும் காணப்படுவதால், பொதுமக்களும் தங்கள் முழு ஒத்துழைப்பை வழங்கி, அன்னிய தாவரங்களை இந்த மாவட்டத்தில் இருந்து முழுமையாக அகற்ற உதவ முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர்கள் சச்சின் போஸ்லே தூக்காராம், கொம்மு ஓம்காரம், வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனப்பிரியா, ஆர்.டி.ஓ.க்கள் துரைசாமி, சரவணக்கண்ணன் (கூடலூ ர்), நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் குழந்தைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கரூர்:
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலெக்டர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலெக்டர் தெரிவித்ததாவது:-
வருடத்திற்கு ஒரு முறை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. ஜமாபந்தி பொதுமக்களின் நில உடைமைகளை உறுதி செய்வதற்காகவும், வேளாண் விளை நிலம் வரி கணக்குகள் சரிபார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றன. அந்தந்த கிராமங்களின் வருவாய் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு பட்டா மாறுதல்கள் செய்யப்பட்டிருக்கும் நபர்களின் பெயர்கள் பதிவெடுகளில் உள்ளனவா? என்பதையும், பயிர் கணக்குகள் உள்ளிட்டவைகள் ஆய்வு செய்யப்படுகின்றன. மேலும், கூட்டு பட்டாவில் உள்ளவர்கள் தனிப் பட்டாவாக மாற்றிக் கொள்ளவும் உதவுகின்றது. பிறந்த நாள், திருமண நாள் உள்ளிட்ட விழாக்காலங்களில் ஒவ்வொருவரும் மரக்கன்றுகளை நட்டு பயிரிட வேண்டும். மேலும் நம் மாவட்டத்தில் விதைபந்து திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளை கொண்டு விதைகள் விதைத்திடவும் திட்ட மிடப்பட்டு தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்டவும், அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். முருங்கை சாகுபடியை ஊக்குவிக்கும் விதமாக முருங்கையிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்து சந்தையிட விவசாயிகளுக்கு உதவப்படும்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அங்குள்ள மலையை சுற்றி கிரிவலம் சென்று வழிபடுவர்.
இந்த கிரிவலப்பாதை 14 கிலோ மீட்டர் தூரம் கொண்டதாகும். பக்தர்கள் கிரிவலம் செல்லும்போது நெருக்கடி ஏற்படாமல் இருக்க கிரிவலப்பாதை அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
மேலும் இந்த பாதையை பசுமையாக்கும் விதமாக நெடுஞ்சாலைத்துறை மூலம் 2 ஆயிரம் மரங்கள் நடுவதற்கு முடிவு செய்யப்பட்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த இடங்களை கலெக்டர் கந்தசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது :-
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் வனத்துறை அலுவலர்கள் மற்றும் வேளாண்மை பல்கலைக்கழகம் பேராசிரியர்கள் மூலம் ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில் 62 மரங்கள் வாடியுள்ளதாக தெரியவந்தது. இவற்றில் 6 மரங்கள் தொடர்ந்து வளரச்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது கிரிவலப்பாதையில் பக்தர்கள் நடந்து செல்லும் இடங்களில் நெடுஞ்சாலைத் துறை மூலமாக கூடுதலாக 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளன. அண்ணா நுழைவு வாயில் முதல் காஞ்சி சாலை அபய மண்டபம் வரை இதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மரங்கள் நடுவதற்கான இடங்கள் தகுதியாக உள்ளதா, பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்கிறதா என ஆய்வு செய்யப்பட்டது. இந்த மரக்கன்றுகள் நடும் பணி அடுத்த 10 நாட்களில் முடிக்கப்படும். மேலும், தற்போது கிரிவலப் பாதையில் மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவாக்கப் பணிகள் 3 மாதத்தில் முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, அபயமண்டபம் அருகில் முற்றிலும் பட்டுப்போன மரம் நெடுஞ்சாலைத் துறை மூலம் பராமரிக்கப்பட்டு உயிர் பெற்று மீண்டும் அந்த மரத்தில் கிளைகள் வளர்ந்துள்ளதை கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.