என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "porur"

    • பூந்தமல்லி பணிமனை - முல்லை தோட்டம் இடையே சுமார் 2.5 கி.மீ. தூரத்திற்கு முதற்கட்ட சோதனை ஓட்டம்.
    • மெட்ரோ ரெயிலின் 2-வது கட்ட சோதனை ஓட்டம் இன்று மாலை நடைபெற்றது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், 2ம் கட்ட திட்டத்தில் ஓட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரெயில்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

    இதற்கென தலா 3 ரெயில் பெட்டிகளை கொண்ட 70 மெட்ரோ ரெயில்கள் தயாரிக்கப்படுகின்றன. இதற்கான ஒப்பந்தம் BEML நிறுவனத்திற்கு ரூ.3,657.53 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

    இதன்படி சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், பூந்தமல்லி- போரூர் இடையே கடந்த மாதம் ஓட்டுனர் இல்லாமல் ரெயிலை இயக்கி முதல்கட்ட சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.

    மேலும், பூந்தமல்லி பணிமனை - முல்லை தோட்டம் இடையே சுமார் 2.5 கி.மீ. தூரத்திற்கு முதற்கட்ட சோதனை ஓட்டம், கடந்த மார்ச் 20-ந் தேதி வெற்றிகரமாக நடைபெற்றது.

    இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பூந்தமல்லி - போரூர் தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயிலின் 2-வது கட்ட சோதனை ஓட்டம் இன்று மாலை நடைபெற்றது.

    அதன்படி, பூந்தமல்லி- போரூர் இடையே 9.1 கிலோ மீட்டர் தொலைவிலான 2ம் கட்ட ஓட்டுநர் இல்லா சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவுபெற்றது. இந்த மெட்ரோ ரெயில் 35- 40 கி.மீ வேகத்தில் ரெயில் இயக்கப்பட்டது.

    • சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
    • வளசரவாக்கம் மற்றும் ஆற்காடு பிரதான சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    சென்னை:

    சென்னை போரூர் சிக்னல் அருகே குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆறாக சாலையில் ஓடியது. இந்த தண்ணீரால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

    குழாயில் ஏற்பட்ட உடைப்பால், பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகியுள்ளது. சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

    இதனால் வளசரவாக்கம் மற்றும் ஆற்காடு பிரதான சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.


    • முடிச்சூரில் ஆம்னி பஸ்கள் நிறுத்தும் இடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
    • இந்தப் பஸ் நிறுத்துமிடத்தில் அதிகபட்சமாக 150 பேருந்துகள் வரை நிறுத்தலாம்.

    சென்னை:

    அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அ.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அருகில் முடிச்சூரில் ரூ.42.70 கோடியில் ஆம்னி பஸ்கள் நிறுத்தும் இடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்தப் பஸ் நிறுத்துமிடத்தில் அதிகபட்சமாக 150 பேருந்துகள் வரை நிறுத்தலாம்.

    ஆம்னி பஸ்கள் கோயம்பேடு அருகில் உள்ள டிராவல்ஸ் நிறுவனங்களின் பணிமனைகள் மற்றும் போரூர் சுங்கச்சாவடி அருகில் இருந்தும் தமிழகத்தின் தென் பகுதிகளுக்கு இயக்க சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளதன்படி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    ஈசிஆர் சாலை வழியாக புதுச்சேரி, பூந்தமல்லி சாலை வழியாக கிருஷ்ணகிரி, பெங்களூரு செல்லும் வாகனங்கள் கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன.

    சென்னை ஐகோர்ட்டின் அடுத்த உத்தரவு வரும் வரை ஆம்னி பஸ்கள் கோயம்பேடு மற்றும் போரூர் சுங்கச்சாவடியில் இருந்து தமிழகத்தின் தென்பகுதிகளுக்கு இயக்கப்படும்.

    மேலும், தமிழக அரசால் கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள பஸ் நிலையம் அந்தப் பகுதியை சேர்ந்த மற்றும் ஈசிஆர் பகுதியை சேர்ந்த பயணிகளுக்கும் பயனுள்ளதாக உள்ளது.

    இந்த பஸ் நிலையத்தை சென்னையிலிருந்து புறப்படும் அனைத்து ஆம்னி பஸ்களும் பயன்படுத்தி 20 சதவீதத்துக்கு மேல் பயணிகளை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திலிருந்து ஏற்றிச்செல்கிறோம். இந்த பஸ் நிலையம் அந்தப் பகுதி மக்களுக்கும் பயனுள்ளதாக உள்ளது. இந்த பஸ் நிலையத்துடன் மின்சார ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில் போக்குவரத்து இணைக்கும் பயணிகளுக்கு அதிக பயன்களை தரும்.

    இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டின் அடுத்த உத்தரவு வரும் வரை தமிழக தென்பகுதிகளுக்குச் செல்லும் ஆம்னி பஸ்கள் கோயம்பேடு அருகில் உள்ள டிராவல்ஸ் நிறுவனங்கள் மற்றும் போரூர் சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் இருந்து கிளாம்பாக்கம் வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உணவக ஊழியர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • ஆன்லைன் மூலம் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார்.

    போரூர்:

    போரூர், அடுத்த காரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று இரவு ஆன்லைன் மூலம் அய்யப்பந்தாங்கல் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல உணவகத்தில் சிக்கன் ஆர்டர் செய்தார்.

    சிறிது நேரத்தில் அங்கு வந்த டெலிவரி ஊழியர் கார்த்திகேயனிடம் உணவு பார்சலை கொடுத்துவிட்டு சென்றார். பார்சலை பிரித்த போது அதில் உள்ள சிக்கனில் இருந்து புழுக்கள் ஒவ்வொன்றாக நெளிந்து வெளியே வந்தது. இதனை கண்டு கார்த்திகேயன் அதிர்ச்சி அடைந்தார்.

    இதனை உடனடியாக வீடியோவாக பதிவு செய்த அவர் உணவகத்திற்கு நேரில் சென்று அங்கிருந்த ஊழியர்களிடம் கூறினார்.

    ஆனால் ஊழியர்கள் சரிவர பதில் கூறவில்லை என்று தெரிகிறது. இதனால் கார்த்திகேயனுக்கும், உணவக ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உணவத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது தொடர்பாக கார்த்திகேயன் தேசிய உணவு பாதுகாப்புத் துறைக்கு ஆன்லைன் மூலம் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கைதான இருவரும் சீர்காழியை சேர்ந்த சதாம் என்பவரிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை வாங்கி வந்ததா தெரிவித்து உள்ளனர்.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போரூர்:

    போரூர் அருகே குன்றத்தூர் சாலையில் உள்ள எம்.எஸ்.நகர் பகுதியில் நேற்று இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுப்டனர். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் பெரிய பையுடன் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.

    அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் ஏற்கனவே செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக இருந்தது. விசாரணையில் அவர்கள் அனகாபுத்தூரை சேர்ந்த ரஞ்சித்குமார்(34) மற்றும் பம்மலை சேர்ந்த அங்குராஜ் (37) என்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்த மொத்தம் ரூ.28லட்சம் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைதான இருவரும் சீர்காழியை சேர்ந்த சதாம் என்பவரிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை வாங்கி வந்ததா தெரிவித்து உள்ளனர். இந்த பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுத்தால் ரூ.1 லட்சத்திற்கு ரூ.4 ஆயிரம் வீதம் கமிஷன் தொகை கிடைக்கும் என்பதால் பணத்தை மாற்ற இருவரும் சென்னையில் தங்கி தொடர்ந்து முயற்சி செய்து வந்ததாக தெரிவித்து உள்ளனர்.

    அவர்களுடன் தொடர்பில் உள்ள பழை ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுப்பதாக கூறி மோசடியில் ஈடுபடும் நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போரூர் அருகே என்ஜினீயர் வீட்டில் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    எம்.ஜி.ஆர். நகரை அடுத்த ஜாபர்கான்பேட்டையை சேர்ந்தவர் பாபுசங்கர். சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் கடந்த 16-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு ஓட்டு போடுவதற்காக குடும்பத்துடன் திருவண்ணாமலை சென்றார்.

    நேற்று அதிகாலை திரும்பி வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 சவரன் நகை மற்றும் வெள்ளி குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து எம்.ஜி.ஆர். நகர் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை, போரூர் அருகே அமைந்துள்ள தனியார் கார் பார்க்கிங்கில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 200க்கு மேற்பட்ட கார்கள் எரிந்து நாசமாகின. #PorurCallTaxiFire
    சென்னை:

    சென்னை, போரூர் அருகே தனியார் வாடகை கார்கள் நிறுத்துமிடத்தில் இன்று மதியம் திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டள்ளது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களில் மளமளவென தீ பிடித்தது. 

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கார்களில் பற்றி எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடினர். 



    கார்களில் பிடித்த தீ காரணமாக அப்பகுதியில் ஏற்பட்ட புகையால், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள், மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இந்த தீவிபத்தில் சுமார் 214 கார்கள் எரிந்து நாசமாகின.

    ஏற்கனவே, பெங்களூருவில் நேற்று நடைபெற்ற விமான கண்காட்சி கார் பார்க்கிங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் 300 கார்கள் தீயில் எரிந்து நாசமானது குறிப்பிடத்தக்கது. #PorurCallTaxiFire
    போரூர் அருகே கணவரின் குடிப்பழக்கத்தால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    எம்.ஜி.ஆர் நகர் கங்கை கொண்ட சோழன் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    கார்த்திகேயனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று கார்த்திகேயன் குடிப்பதற்காக வீட்டில் இருந்த உண்டியலை உடைத்து பணத்தை எடுத்து சென்று விட்டார். இதில் மனம் உடைந்த லட்சுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து எம்.ஜி.ஆர். நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவர்களுக்கு திருமணம் முடிந்து 5 ஆண்டுகளே ஆவதால் கிண்டி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தர விடப்பட்டுள்ளது.

    போரூர் அருகே கார் மோதி வேன் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    சென்னை மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் சக்கரபாணி (50). தனியார் கேட்டரிங் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.

    சக்கரபாணி மினி வேன் மூலம் மாங்காட்டில் நடைபெறும் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு சமையல் பொருட்களை இறக்கி விட்டு திரும்பும் வழியில் அதிகாலை 1.30 மணி அளவில் போரூர் தனியார் மருத்துவமனை அருகில் வேனை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு கடைக்கு சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வேனை நோக்கி வந்தார்.

    அப்போது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக சக்கரபாணி மீது மோதியது இதில் தூக்கி வீசப்பட்ட அவர் தலையில் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சக்கரபாணி பரிதாபமாக இறந்தார்.

    பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் அசோக் நகரைச் சேர்ந்த விஜயன் (37 என்பவரை கைது செய்தனர்.

    போரூர் போலீஸ் நிலையம் அருகே வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்ப வந்த ஊழியரை கத்தியால் வெட்டி, ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்து சென்றவர்களை, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர். #ATM #MoneyRobbery
    பூந்தமல்லி:

    சென்னை போரூரை அடுத்த நூம்பல் மூவேந்தர் நகர் பகுதியில் கனரா வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று இரவு 8.30 மணியளவில் தனியார் ஏஜென்சி ஊழியர்களான தேவராஜ் (வயது 35), முரளி(30) ஆகியோர் இந்த ஏ.டி.எம்-மில் பணம் நிரப்ப காரில் வந்தனர்.

    மொத்தம் ரூ.14 லட்சம் வைத்து இருந்தனர். அதில் ரூ.4 லட்சத்தை ஏ.டி.எம். எந்திரத்தில் வைத்து கொண்டு இருந்தனர். ஆனால் அவர்கள், ஏ.டி.எம். மையத்தின் ஷட்டரை அடைக்காமல், திறந்து இருந்த நிலையிலேயே வைத்து இருந்தனர். அவர்களிடம் இருந்த பெட்டியில் மீதம் ரூ.10 லட்சம் இருந்தது.

    அப்போது 2 மர்மநபர்கள் மோட்டார்சைக்கிளில் அங்கு வந்தனர். இருவரும் தலையில் ஹெல்மெட்டும், கை உறையும் அணிந்து இருந்தனர். ஒருவர் மோட்டார்சைக்கிளில் இருக்க, மற்றொருவர் மட்டும் ஏ.டி.எம். மையத்துக்குள் சென்று, தேவராஜ் கையில் ரூ.10 லட்சம் இருந்த பெட்டியை தரும்படி கேட்டார்.

    காயம் அடைந்த தேவராஜ்.

    ஆனால் அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த மர்மநபர், கத்தியால் தேவராஜின் கையில் வெட்டினார். பின்னர் அவரிடம் இருந்து ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்துவிட்டு, அங்கு தயாராக நின்ற தனது கூட்டாளியுடன் மோட்டார்சைக்கிளில் ஏறி தப்பிச்சென்று விட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த தேவராஜ், முரளி இருவரும் வெளியே ஓடிவந்து கூச்சலிட்டனர். இதுபற்றி மதுரவாயல் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்துக்கு துணை கமிஷனர் சுதாகர், உதவி கமிஷனர் ஜான்சுந்தர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். கொள்ளையன் கத்தியால் வெட்டியதில் காயம் அடைந்த தேவராஜூக்கு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரித்தனர்.

    அதில், தேவராஜ், முரளி இருவரும் நேற்று மதியம் முதல் ரூ.35 லட்சம் பணத்துடன் வடபழனி, விருகம்பாக்கம், வளசரவாக்கம், போரூர், காட்டுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கனரா வங்கி ஏ.டி.எம்.களில் பணத்தை நிரப்பினர். பின்னர் கடைசியாக ரூ.14 லட்சம் பணத்துடன் இரவு 8.30 மணியளவில்தான் நூம்பல் பகுதியில் உள்ள இந்த ஏ.டி.எம். மையத்துக்கு வந்து பணத்தை நிரப்பினர்.

    கொள்ளையர்கள் இவர்கள் இருவரையும் பின்தொடர்ந்து வந்து, பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையர்கள் உருவம் மற்றும் அவர்கள் தப்பிச்சென்ற மோட்டார்சைக்கிள் எண் பதிவாகி இருந்தது. அதை வைத்து கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த கொள்ளை சம்பவத்தில் தேவராஜ், முரளி ஆகியோருக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

    கொள்ளை நடந்த ஏ.டி.எம். மையம் அருகிலேயே போரூர் போலீஸ் நிலையம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  #ATM #MoneyRobbery
     
    போரூர் அருகே வீட்டில் புதிதாக பொருத்திய இரும்புகேட் சரிந்து விழுந்து சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    போரூர், கணேஷ் அவின்யூ 8-வது தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை. கூலி தொழிலாளி. இவரது மகன் விஷால் (வயது6). அருகில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.

    ஆசிரியர்கள் போராட்டத்தால் இன்று காலை அவன் பள்ளிக்கு செல்லவில்லை. இந்த நிலையில் வீட்டின் அருகில் புதிதாக கட்டிய வீட்டில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு கேட் மீது ஏறி அவன் விளையாடினான்.

    அப்போது திடீரென இரும்பு கேட் சரிந்து சிறுவன் விஷால் மீது விழுந்தது. இதில் விஷால் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

    போரூர் இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் மற்றும் போலீசார் விஷாலின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். சக்கரத்துடன் உள்ள இரும்பு கேட் சரியாக பொருத்தப்படாததால் அது சரிந்து விபத்து ஏற்பட்டது தெரிந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர் அருகே ஆட்டோவில் போதை பாக்கு- புகையிலை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    போரூரை அடுத்த அய்யப் பந்தாங்கல் பஸ் நிலையம் அருகே இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அவ்வழியே வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை நடத்தியபோது அதில் மூன்று மூட்டைகளில் மாவா தயாரிக்கும் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை, பாக்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து ஆட்டோ டிரைவர் வியாசர்பாடியைச் சேர்ந்த விஜய்யை போலீசார் கைது செய்தனர். ஆட்டோ மற்றும் 200 கிலோ மாவா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    விஜய் அளித்த தகவலின் படி பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிவேஷ்குமார், ராஜேஷ்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் பாரிமுனை பகுதியில் இருந்து மாவா பொருட்கள் வாங்கி வந்து அய்யப்பந்தாங்கல் பகுதியில் வீட்டில் வைத்து அறைத்து தயார் செய்து பொட்டலங்களாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    அதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×