என் மலர்
நீங்கள் தேடியது "power tariff hike"
- இன்று வரை வணிகரீதியிலான மின்னுற்பத்தி தொடங்கப்படவில்லை.
- குறைந்தது 75% சொந்தமாக மின் உற்பத்தி செய்யப்பட வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் பிப்ரவரி மாதத்தில் மாலை நேரத்தில் சுமார் 3 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின்பற்றாக்குறை நிலவுவதாகவும், ஏப்ரல் மாதத்தில் இது 4,697 மெகாவாட்டாக அதிகரிக்கும் என்றும் மத்திய மின்சார ஆணையத்தின் அறிக்கையில்தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மின்பற்றாக்குறையை சமாளிக்க சில நேரங்களில் ஒரு யூனிட் ரூ.20 என்ற விலைக்கு மின்சாரத்தை வாங்க வேண்டியிருக்கும் என்று மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்ததாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இன்றைய நிலையில் அனைத்து ஆதாரங்களில் இருந்தும் கிடைக்கும் மின்சாரத்தின் அளவு 15,646 மெகாவாட்டாகவும். அதே நேரத்தில் மாலை மற்றும் இரவு நேர மின் தேவை 18,600 ஆக இருப்பதாகவும் மத்திய மின்சார ஆணையம் தெரிவித்திருக்கிறது.
ஏப்ரல் மாதத்தில் அதிகபட்ச மின் தேவை 23,135 மெகாவாட்டாக இருக்கும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. பகல் நேரங்களில் சூரிய ஒளி மின்சாரத்தின் மூலம் நிலைமையை சமாளித்து விட முடியும் என்றாலும், மாலை நேர மின் தேவையை சமாளிக்க தனியாரிடமிருந்து தான் மின்சாரத்தை வாங்கியாக வேண்டும்.
சில நேரங்களில் ஒரு யூனிட் ரூ.20 என்ற விலைக்கு மின்சாரத்தை வாங்க வேண்டியிருக்கும் என்றும், கோடைக்காலத்தில் மின்சாரத்தின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்ததாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான அனல்மின் நிலையங்களில் ஒரு யூனிட் மின்சாரத்திற்கான உற்பத்திச் செலவு ரூ.6-க்கும் குறைவாகவே இருக்கும் நிலையில் தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்க வேண்டியிருப்பது மிகவும் கவலையளிப்பதாகவும் அந்த அதிகாரி கூறியிருப்பதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தான் பா.ம.க.வும் பல ஆண்டுகளாக கூறி வருகிறது.
ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த மின் தேவையில் குறைந்தது 75% சொந்தமாக உற்பத்தி செய்யப்பட வேண்டும். மீதமுள்ள மின்சாரம் மத்தியத் தொகுப்பில் இருந்து பெறப்பட வேண்டும். அப்போது தான் மின்சார வாரியத்தை லாபத்தில் இயக்க முடியும்.
ஆனால், தமிழ்நாட்டில் நிலைமை தலைகீழாக உள்ளது. தமிழ்நாட்டின் இப்போதைய மின் தேவை 18,600 மெகாவாட்டாக இருக்கும் நிலையில், தமிழகத்தின் அனல் மின்நிலையங்களின் உற்பத்தித் திறன் வெறும் 4320 மெகாவாட் மட்டும் தான். அதிலும் இன்று காலை 2619 மெகாவாட் அளவுக்கு தான் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த 20 ஆண்டுகளில் 2100 மெகாவாட் அளவுக்கு மட்டும் தான் அனல் மின்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கடந்த பத்தாண்டுகளில் ஒரே ஒரு அனல் மின் திட்டம் கூட செயல்படுத்தப்படவில்லை.
வடசென்னை மூன்றாம் நிலை அனல் மின்நிலையம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடையும் நிலையில் இன்று வரை வணிகரீதியிலான மின்னுற்பத்தி தொடங்கப்படவில்லை.
தமிழ்நாட்டில் சுமார் 17,000 மெகாவாட் அளவுக்கு அனல் மின் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 5700 மெகாவாட் அளவுக்கான அனல் மின் திட்டங்களுக்கான அடிப்படைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்பட்டால் தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்க வேண்டிய நிலை ஏற்படாது. ஆனால், தங்களின் சுயநலனுக்காக அப்படி ஒரு நிலை உருவாவதை ஆட்சியாளர்கள் விரும்பவில்லை.
ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.6-க்கும் குறைந்த செலவில் தயாரிக்க முடியும் எனும் நிலையில், ரூ.20-க்கும் அதிக விலை கொடுத்து வாங்குவதை ஏற்க முடியாது. இதேநிலை நீடித்தால் எத்தனை முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் மின்சார வாரியத்தை லாபத்தில் இயக்க முடியாது.
எனவே நிலுவையில் உள்ள அனல் மின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி மின்னுற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- திருப்பூர் எக்ஸ்போர்ட் நிட் பிரிண்டிங் அசோசியேஷன் சங்கத்தின் 18ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது.
- வாரா கடன் பற்றிய விழிப்புணர்வை வழக்கறிஞர் கார்த்திக் ஆகியோர் வழங்கினர்.
வீரபாண்டி :
திருப்பூர் எக்ஸ்போர்ட் நிட் பிரிண்டிங் அசோசியேஷன் சங்கத்தின் 18-ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் திருப்பூர் இடுவம்பாளையம் டெக்பா கலையரங்கத்தில் நடந்தது.
இதில் புதிய மிஷின்கள் வாங்க அரசு மானியம் பெறுவது குறித்த விளக்க உரையை (எப்.சி.ஏ) (எல்.எல்.பி.) அரசப்பன், மற்றும் வாரா கடன் பற்றிய விழிப்புணர்வை வழக்கறிஞர் கார்த்திக் ஆகியோர் வழங்கினர். தீர்மானத்தில், பிரின்டிங் தொழில் என்பது மதிப்பு கூட்டில் சிறு தொழில் நிறுவனங்கள் ஆகும். ஆகவே தமிழக அரசு தாங்கள் ஏற்றிருக்கும் மின் கட்டண உயர்வை விலக்கிக்கொள்ள வேண்டும். அனைத்து பிரிண்டிங் நிறுவனங்களும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியோடு அவர்களின் வழிகாட்டுதலின்படியே செயல்பட வேண்டும். திருப்பூரில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உற்பத்தியாளர்களுக்கு பிரிண்டிங் சேவை செய்திட வேண்டும். திருப்பூர் நகரின் வளர்ச்சிக்காக நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் டெக்பா தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் என பொது குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பூர் சாயம் மற்றும் கெமிக்கல் வியாபாரிகள் சங்கத்தின் 2022-ம் ஆண்டுக்கான மகாசபை கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் தமிழ்நாடு அளவிலான டைஸ் மற்றும் கெமிக்கல் வியாபாரிகளின் மாநாட்டை திருப்பூரில் நடத்துவது, டைஸ் மற்றும் கெமிக்கல்ஸ் திருப்பூரின் வெளியே குடோன் அமைப்பது. நீண்ட நாள் நிலுவை தொகையை விரைவில் வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இனி வரும் காலங்களில் அதிக நாள் கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கோவை மண்டல பொதுக்குழுக்கூட்டம் திருப்பூர் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
கூட்டத்தில், தமிழக அரசு அறிவித்துள்ள மின்கட்டண உயர்வால், கூடுதலாக ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை கட்டணம் உயரும். ஏற்கனவே மூலப்பொருட்களின் விலை உயர்வு, ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்வு போன்றவையால் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மின்கட்டண உயர்வை உடனடியாக தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். வியாபாரிகள் 1 வாரம் முதல் அதிகபட்சமாக 30 நாட்களுக்குள் பொருட்களை வாங்கி ரொக்கப்பரிவர்த்தனை செய்து ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- ஒவ்வொரு ஆண்டும் கட்டணத்தை உயர்த்துவது ஏழை மக்களின் வாழ்வை மோசமாக்கும்.
- மாதம் ஒருமுறை மின் கணக்கெடுப்பு முறையை அமல்படுத்த வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாட்டில் இன்று முதல் மின்சார கட்டணம் ரூ.55 முதல் ரூ.1130 வரை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆண்டுக்கு 6 சதவிகிதம் என்ற அளவில் மின் கட்டண உயர்வு இருக்கும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் கட்டணத்தை உயர்த்துகிற நடைமுறை ஏழை, எளிய, நடுத்தர மக்களது வாழ்வையும், சிறு-குறு தொழில்கள், சிறிய நடுத்தர வியாபாரிகள் வாழ்வினையும் மோசமாக்கி விடும் என்பதை தமிழ்நாடு அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் கட்டணத்தை உயர்த்துகிற நடைமுறை இதுவரை இல்லாதது என்பதையும் கவனப்படுத்துகிறோம். அரிசி, கோதுமை உள்ளிட்டு அனைத்து உணவுப் பொருட்களின் மீது ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் வரலாறு காணாத அளவில் விலைகள் உயர்ந்துள்ளன.
மேலும், பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு, சுங்க கட்டண உயர்வு ஆகியவை சங்கிலித் தொடர் போன்று அனைத்து பொருட்களின் விலை உயர்வையும் வேகப்படுத்திவிட்டது. மோடி அரசின் பொருளாதாரக் கொள்கையை கண்டிக்கும் தமிழ்நாடு அரசு, தன் பங்கிற்கு மின் கட்டணத்தை உயர்த்துவது நியாயமற்ற செயலாகும்.
உத்தேசித்த மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பொதுமக்களும், சிறு-குறு தொழில் முனைவோர்களும் கருத்து கேட்பு கூட்டங்களில் கலந்து கொண்டும், பல்லாயிரக்கணக்கான மனுக்கள் அளித்தும் வலியுறுத்தினர்.
ஆனால் அவைகளை புறந்தள்ளி ஏற்கனவே உத்தேசித்த மின் கட்டண விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யாமல் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தேர்தல் வாக்குறுதி படி, மாதம் ஒரு முறை மின் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதையும் நடைமுறைப்படுத்தாமல் மீண்டும் பழைய முறையிலேயே 2 மாதங்களுக்கு ஒருமுறைதான் கட்டணம் கணக்கிடப்படும் என்ற அறிவிப்பும் செய்துள்ளது.
மின்வாரிய நெருக்கடியை சமாளிக்க அரசியல் கட்சிகள், துறைசார்ந்த நிபுணர்கள், செயல்பாட்டாளர்கள் முன்வைத்துள்ள ஆக்கப்பூர்வமான மாற்று ஆலோசனைகளை செயல்படுத்துவதற்கு மாறாக மக்கள் தலையில் சுமையை ஏற்றுவது அரசுக்கு அவப்பெயரையே உருவாக்கும் என சுட்டிக்காட்டுகிறோம்.
எனவே, ஏழை, எளிய உழைக்கும் மக்களையும், நடுத்தர மக்களையும், சிறுகுறு தொழில்களையும் கடுமையாக பாதிக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்று மார்க்சிஸ்ட் மாநில செயற்குழு வலியுறுத்துவதோடு, மாதம் ஒருமுறை மின் கணக்கெடுப்பு முறையை அமல்படுத்த வேண்டுமென்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- குறைதீர்க்கும் கூட்டத்தில் மின் கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
- தமிழக அரசு மின் கட்டண உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று ேகட்டுக்கொண்டனர்.
மதுரை
தமிழக அரசு மின்கட்டண உயர்வு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறது. இதையொட்டி மாவட்டம் தோறும் குறைதீர்ப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
மதுரை தல்லாகுளம் திருமண மண்டபத்தில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் குறைகேட்பு கூட்டம் இன்று காலை நடந்தது. இதில் மின்வாரிய உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அப்போது அவர்கள் 'மின் கட்டண உயர்வு தேவையற்றது. இதனால் நாங்கள் மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்படும்.
எனவே தமிழக அரசு மின் கட்டண உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று ேகட்டுக்கொண்டனர். மக்களின் கருத்தை அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர்.
- காங்கயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் 120 உறுப்பினர்களைக்கொண்டது.
- கொரோனா பாதிப்பிற்கு பிறகு எங்கள் தொழில் வியாபாரம் குறைந்துள்ளது.
காங்கயம் :
திருப்பூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலை தொழிலுக்கு மின் கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என காங்கயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மின்சாரம், கலால் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி ஆகியோருக்கு, காங்கயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.எஸ்.என்.தனபால் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-
காங்கயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் 120 உறுப்பினர்களைக்கொண்டது. நாங்கள் தேங்காய் எண்ணெய் உற்பத்தி தொழிலை மேற்கொண்டு வருகிறோம். எங்கள் தொழிலானது தென்னை விவசாயத்தை சார்ந்து அதை ஊக்குவிக்கும் தொழிலாக உள்ளது. கொரோனா பாதிப்பிற்கு பிறகு எங்கள் தொழில் வியாபாரம் குறைந்துள்ளது. மேலும் வாராக்கடன்கள் அதிகரித்து எங்கள் தொழில் நலிவடைந்து வருகிறது.
தற்போது உள்ள சூழ்நிலையில் தேங்காய் எண்ணெயின் விலையை விட பாமாயில் எண்ணெய் விலை குறைவாக உள்ளது. அதனால் மக்கள் தேங்காய் எண்ணெயை வாங்கி பயன்படுத்துவதில் தயக்கம் காட்டுகிறார்கள். இவ்வாறு மின்சார கட்டணத்தை உயர்த்தும் போது நாங்கள் அதன் சுமையை தேங்காய் எண்ணெய் விலையின் மீது வைக்கும்போது தேங்காய் எண்ணெயின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அரசு வெளிநாடுகளில் இருந்து பாமாயில் எண்ைணயை இறக்குமதி செய்து ரேஷன் கடைகளில் வினியோகம் செய்து வருகிறது. அதனால் மக்கள் தேங்காய் எண்ணெய் பயன்பாட்டில் இருந்து பாமாயில் பயன்பாட்டிற்கு அதிகப்படியாக மாறி வருகிறார்கள். இதனால் தேங்காய் எண்ணெய் வியாபாரம் குறைந்துள்ளது.
தமிழக அரசு தேங்காய் கொப்பரை குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து கொள்முதல் செய்து எங்கள் தொழிலை ஊக்குவித்து வரும் இந்த வேலையில், தற்போது மின்சார கட்டணத்தை உயர்த்துவதால் எங்களுக்கு மிகுந்த பாதிப்பை அளிக்கிறது. நாங்கள் அரவை கொப்பரையை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் போது குறைவான விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம்.
இதனால் தென்னை விவசாயிகள் நேரடியாக பாதிக்கப்படுகிறார்கள். இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தேங்காய் எண்ணெய் ஆலைகள் உபயோகித்து வரும் மின் இணைப்புகளுக்கு மின்சார கட்டணத்தில் மாற்றம் செய்ய உத்தேசித்துள்ளது. எனவே தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலைக்கு மின்சார கட்டணம் உயர்விலிருந்து முழுமையாக விலக்கு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, 23ம் தேதி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
- நஷ்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் வெளியில் இருந்து மின்சாரத்தை வாங்குவது சரியா?.
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட இருப்பது தொடர்பாக சேலத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:
மின் கட்டணத்தை உயர்த்துமாறு மத்திய அரசு வலியுறுத்தவில்லை. மத்திய அரசு கொடுப்பது மானியம். தேவை எனில் பெற்றுகொள்ளலாம். மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசை குறை கூற வேண்டாம்.
தமிழக அரசு, மின் செயற்கை தட்டுபாட்டை ஏற்படுத்தி, வெளி மார்க்கெட்டில் இருந்து, அதிக பணம் கொடுத்து மின்சாரத்தை வாங்குகிறார்கள். நஷ்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் வெளியில் இருந்து மின்சாரத்தை வாங்குவது சரியா?.
மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி,வரும் 23ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
புதுவையில் முன்னறிவிப்பு இன்றி மின் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தல் முடிவு வெளியான மறுநாளே மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் இன்று காலை உப்பளம் சோனாம் பாளையத்தில் உள்ள மின்துறை தலைமை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா கட்சியினர் மின்சாதன பொருட்களை அடித்து உடைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
மேலும் போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் அம்மிக்கல்லை வைத்து மசாலா அரைத்து தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.