என் மலர்
நீங்கள் தேடியது "Pradosham"
- திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவிலில் உள்ள மண்டபத்தை ஒரு தடவை சுற்றினால் ஒரு ஆண்டு சுற்றியதற்கான பலன் கிடைக்கிறது.
- மண்டபத்தை 27 நட்சத்திரத்தை சேர்ந்தவர்களும் ஒரு தடவை சுற்றிவந்தால் ஒரு ஆண்டுகாலம் சிவன் கோயிலை சுற்றி வந்த பலன் கிடைக்கிறது.
மூலவர்: நந்தீஸ்வரர்
உற்சவர்: -
அம்மன்/தாயார்: -
தல விருட்சம்: -
தீர்த்தம்: -
ஆகமம்/பூஜை : -
பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்: -
ஊர்: திருநந்திக்கரை
மாவட்டம்: கன்னியாகுமரி
மாநிலம்: தமிழ்நாடு
பாடியவர்கள்: -
திருவிழா:
மார்கழி திருவாதிரை, மகா சிவராத்திரி, சோமவாரத்திலும், பிரதோஷ நாளிலும் விசேஷ பூஜைகள் உண்டு.
தல சிறப்பு:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு சிவனே பிரதிஷ்டை செய்த நந்தி உள்ளது. காளையை சிவபெருமான் அடக்கி இழுத்துவந்தபோது அருகிலிருந்த ஒரு குன்றில் காளை தகராறு செய்தது. காளையின் கால் தடம் பதித்த இடம், கயிறு தடம் ஆகியவற்றை அந்த குன்றில் இப்போதும் காணலாம். இந்த கோவிலின் விசேஷமே நட்சத்திர மண்டபம் ஆகும். 27 நட்சத்திர மண்டலம் கொண்ட கண துவாரங்கள் இங்கு உள்ளன. இந்த மண்டபத்தில் ஆண்டிற்கு 52 வாரங்கள் என்பதைக் குறிக்கும் வகையில் மண்டபத்தைச் சுற்றி 52 மரக்கட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டைகளில் நட்சத்திரங்களின் அதிதேவதை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
பொது தகவல்:
பிரகாரத்தில் கணபதி, விஷ்ணு, சாஸ்தா, நாகர் ஆகியோருக்கும் தனித்தனி சன்னதிகள் உண்டு.
பிரார்த்தனை:
சிவனே பிரதிஷ்டை செய்த நந்தி என்பதால், பிரதோஷ நாட்களில் வழிபாடு செய்ய, இந்தக் கோவிலை விட ஏற்ற கோவில் எதுவுமே இல்லை எனலாம்.
அறிந்தோ, அறியாமலோ கொலைப்பழி பாவம் ஏற்பட்டவர்கள் நந்தீஸ்வரரை வணங்கி மனம் திருந்தப்பெறலாம்.
நேர்த்திக்கடன்:
சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தலபெருமை:
பொதுவாக பிரகார வலம் வரும்போது மூன்று முறை சுற்றுவது வழக்கமாக இருக்கிறது. ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவிலில் உள்ள மண்டபத்தை ஒரு தடவை சுற்றினால் ஒரு ஆண்டு சுற்றியதற்கான பலன் கிடைக்கிறது. இதற்கு ஒரு காரணமும் இருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்கள் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றன. இவற்றை சிவாலய ஓட்ட கோவில்கள் என்கின்றனர்.
சிவராத்திரி திருநாளின்போது இந்த 12 கோவில்களுக்கும் ஓடியே சென்று வழிபடுவது பக்தர்களின் வழக்கமாக இருக்கிறது. இவற்றிற்கு இடையேயான தூரம் 100 கி.மீ., இப்போதும் பக்தர்கள் ஓடிச்செல்லும் வழக்கத்தை கைவிடாமல் வைத்திருக்கிறார்கள். இவற்றில் திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவிலும் ஒன்று.
காளையை சிவபெருமான் அடக்கி இழுத்துவந்தபோது அருகிலிருந்த ஒரு குன்றில் காளை தகராறு செய்தது. காளையின் கால் தடம் பதித்த இடம், கயிறு தடம் ஆகியவற்றை அந்த குன்றில் இப்போதும் காணலாம். காளை அமர்ந்துள்ள இடம் ரிஷப மண்டபம் என அழைக்கப்படுகிறது.
நட்சத்திர மண்டபம் :
இந்த கோவிலின் விசேஷமே நட்சத்திர மண்டபம் ஆகும். 27 நட்சத்திர மண்டலம் கொண்ட கண துவாரங்கள் இங்கு உள்ளன. இந்த மண்டபத்தில் ஆண்டிற்கு 52 வாரங்கள் என்பதைக் குறிக்கும் வகையில் மண்டபத்தைச் சுற்றி 52 மரக்கட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டைகளில் நட்சத்திரங்களின் அதிதேவதை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
மண்டபத்தை 27 நட்சத்திரத்தை சேர்ந்தவர்களும் ஒரு தடவை சுற்றிவந்தால் ஒரு ஆண்டுகாலம் சிவன் கோயிலை சுற்றி வந்த பலன் கிடைக்கிறது.
பரசுராமர் தன் தாயைக் கொல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. தனது தாயைக்கொன்ற பாவம் தீர பரசுராமர் நந்தீஸ்வரர் கோவிலுக்கு வந்து பிரார்த்தனை செய்து இங்குதான் அவரது பாவம் நீங்கியது.
தல வரலாறு:
ஒரு காலத்தில் காளை ஒன்று இந்த பகுதியில் அட்டகாசம் செய்து கொண்டிருந்தது. இதை அடக்க யாராலும் முடியவில்லை. ஊர்மக்கள் சுயம்புலிங்கமாய் எழுந்தருளியிருந்த சிவன் கோவிலுக்கு வந்து காளையை அடக்கும்பிடி சிவனிடம் வேண்டினர்.
சிவபெருமான் அந்த காளையை இழுத்துவந்து ஒரு இடத்தில் இருத்திவைத்தார். காளை அமர்ந்த இடம் பள்ளமாகிவிட்டது. பள்ளத்தைவிட்டு எழ முடியாத அளவுக்கு காளையின் நிலைமை ஆகிவிட்டது. காலப்போக்கில் இதுவே நந்தியாக வணங்கப்பட்டது.
இந்த நந்தி ஒரு பள்ளத்திற்குள் இருப்பதுபோல வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிவனே நந்தியை பிரதிஷ்டை செய்த இடம் என்பதால், திருநந்தீஸ்வரம் என இவ்வூருக்கு பெயர் வந்தது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு சிவனே பிரதிஷ்டை செய்த நந்தி உள்ளது. காளையை சிவபெருமான் அடக்கி இழுத்துவந்தபோது அருகிலிருந்த ஒரு குன்றில் காளை தகராறு செய்தது. காளையின் கால் தடம் பதித்த இடம், கயிறு தடம் ஆகியவற்றை அந்த குன்றில் இப்போதும் காணலாம்.
- அருளானந்த ஈஸ்வரர் கோவிலில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம், பூஜை , யாகம், ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
பல்லடம் :
சிவன் கோவில்களில் பிரதோஷ தினத்தில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். சி வபெருமானை தினமும் வணங்கினாலும் பிரதோஷ நாளில் கோவிலுக்கு சென்று வணங்குவது சிறந்த பலன் அளிக்கும் என முன்னோர்கள் கூறுகின்றனர்.
அந்த வகையில் பல்லடம் பட்டேல் வீதியில் உள்ள அருளானந்த ஈஸ்வரர் கோவிலில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம், பூஜை , யாகம், ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.இதேபோல பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் நவகிரக கோட்டையில் பிரதோஷத்தை முன்னிட்டு அம்மையப்பர் கோவில் திருவீதி உலா நடைபெற்றது.காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் சிறப்பு பூஜைகளை நடத்தி வைத்தார். இதேபோல பல்லடம் பொங்காளியம்மன் கோவில், சந்தைப்பேட்டை விநாயகர் கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில், உள்ளிட்ட சிவன் கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
- சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்தனர்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவில், கண்ணபுரம் விக்ரமசோழீஸ்வரர் கோவில், மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி , உத்தமபாளையம் காசிவிசுவநாதர் கோவில், வெள்ளகோவில், எல்.கே.சி நகர், புற்றிடம் கொண்டீஸ்வரர் கோவில்களில் நேற்று மாலை பிரதோஷத்தையொட்டி சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம், தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள்,சந்தனம், மலர், பன்னீர் ஆகியவற்றை கொண்டு் சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்தனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- நமசிவாயம் சொல்லி சிவனாரை வணங்குங்கள்.
- சனிப் பிரதோஷம், நம் வாழ்க்கையில் ஏற்றத்தையும் மாற்றத்தையும் தரும்
சனிப் பிரதோஷம் சர்வ பாவ விமோசனம் என்பார்கள். பிரதோஷம் எந்த நாளில் வந்தாலும் விசேஷம்தான். குறிப்பாக சனிக்கிழமை அன்று வருகிற பிரதோஷம், இன்னும் சிறப்பானது, வலிமை மிக்கது. அதனால்தான் சனிப் பிரதோஷம் சர்வ பாப விமோசனம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.நம் பாவங்களையெல்லாம் போக்கி அருளும் சனி பிரதோஷ நாளில், சிவாலயம் செல்லுங்கள். சிவ தரிசனம் செய்யுங்கள். நந்திதேவருக்கு நடைபெறும் அபிஷேகத்தை கண்ணார தரிசியுங்கள். நம் பாவமெல்லாம் பறந்தோடும்.
பிரதோஷம் என்பதும் பிரதோஷத்தின் போது சிவ வழிபாடு செய்வதும் மகத்தான பலன்களைத் தந்தருளும். ஒவ்வொரு கிழமையில் வருகிற பிரதோஷத்துக்கு பலன்கள் இருக்கின்றன. திங்கட்கிழமை வருகிற பிரதோஷம் ரொம்பவே மகத்துவம் வாய்ந்தது. திங்கட்கிழமையை சோம வாரம் என்பார்கள். சோமன் என்றால் சந்திரன். சோம என்றால் திங்கள். சந்திரனுக்கு இன்னொரு பெயர் திங்கள். சந்திரனைப் பிறையெனச் சூடிக்கொண்டிருக்கும் ஈசனை, திங்கட்கிழமையன்று வரும் பிரதோஷத்தில் பூஜை செய்து வணங்கினால், மோட்ச கதி அடையலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். முக்தி நிச்சயம் என்கிறார்கள்.
குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில் வரும் பிரதோஷமும் முக்கியத்துவம் வாய்ந்தது. சிவபெருமான், தட்சிணமூர்த்தி அம்சமாக கல்லால மரத்தடியில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு போதித்தார் என்கிறது புராணம். எனவே, குருவாரம் வியாழக்கிழமையில் வரும் பிரதோஷத்தில், சிவ பூஜை செய்வதும் விரதமிருந்து, ருத்ர பாராயணம் செய்வதும் ஞானத்தையும் யோகத்தையும் தந்தருளும் என்கிறார்கள் பக்தர்கள்.
மூன்றாவதாக, அதேசமயம் ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்ததாகச் சொல்லப்படுவது சனிப் பிரதோஷம். சனி பிரதோஷம் சர்வ பாப விமோசனம் என்பார்கள். சனிக்கிழமை வரக்கூடிய பிரதோஷ நாளில், விரதம் இருந்து சிவ தரிசனம் செய்வது அனைத்துப் பாவங்களையும் போக்கக்கூடியது. சனிக்கிழமை அன்று வருகிற பிரதோஷத்தை மகா பிரதோஷம் என்று சிலாகிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
இன்று, சிவனாருக்கும் நந்திதேவருக்கும் விசேஷமான பூஜைகள் நடைபெறும். அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அப்போது 16 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பால், தயிர், சந்தனம், தேன், திரவியப்பொடி முதலான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்வார்கள்.
பிரதோஷ அபிஷேகத்துக்கு, பொருட்கள் வழங்கினால், 108 பிரதோஷம் தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இன்று, சனிக்கிழமை, பிரதோஷம். சனி பிரதோஷம் சகல பாவங்களையும் நிவர்த்தி செய்யக் கூடிய பிரதோஷம் என்பது நாம் அறிந்ததே. அற்புதமான இந்தநாளில், மாலை வேளையில், பிரதோஷ நேரமான மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரத்தில், வீட்டில் விளக்கேற்றி சிவ வழிபாடு செய்யுங்கள். நமசிவாயம் சொல்லி சிவனாரை வணங்குங்கள். ருத்ரம் ஜபித்து, சிவனாருக்கு வில்வம் வழங்குங்கள். நந்திதேவருக்கு வில்வமும் அருகம்புல்லும் வழங்குங்கள்.
சனிப் பிரதோஷம், நம் வாழ்க்கையில் ஏற்றத்தையும் மாற்றத்தையும் தரும்!
- மாலை 4.45 மணிக்கு சிறப்பு அபிஷேகத்துடன் 108 சங்காபிஷேகம் நடக்கிறது.
- இரவு 7 மணிக்கு அன்னதானம் நடைபெற உள்ளது.
ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சனிபிரதோஷ விழா இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி பிற்பகல் 3 மணிக்கு ஹோமங்களும், 108 சங்கு பூஜை, மாலை 4.45 மணிக்கு சிறப்பு அபிஷேகத்துடன் 108 சங்காபிஷேகமும், 6 மணிக்கு அலங்கார தீபாராதனை, பிரதோஷ நாயகர் கோவிலை சுற்றி வலம் வருதலும் நடக்கிறது.
அதனை தொடர்ந்து 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், பிரசாதமும் வழங்கப்படுகிறது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு அன்னதானமும் நடைபெற உள்ளது. பூஜைகளை கோவில் மேல் சாந்தி பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார் நடத்துகிறார்.
இதற்கான ஏற்பாட்டை திருக்கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.
- சிவபெருமானுக்குரிய அஷ்ட விரதங்களில் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
- சிவபெருமானுக்கு பால், தேன், பஞ்சாமிர்த அபிஷேகம் நடத்தப்பட்டது.
அரவேணு,
தமிழகத்தில் சிவபெருமானுக்குரிய அஷ்ட விரதங்களில் சோமவார பிரதோஷம், மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது திங்கட்கிழமையில் வரும் பிரதோஷம் ஆகும். இது மற்ற நாட்களில் வரும் பிரதோஷத்தை விட சிறப்பு வாய்ந்தது. அப்போது சிவபெருமானை வழிப ட்டால் பக்தர்கள் நினைத்தது நடக்கும் என்று ஐதிகம்.
இதன் ஒருபகுதியாக கோத்தகிரி சக்திமலை முருகன் கோவில் வளாகத்தில் உள்ள சிவன் கோவிலில் சோமவார பிரதோஷம் அனுசரிக்கப்பட்டது. அப்போது அதிகாலை நேரத்தில் ஹோமம் நடந்தது.
அதன்பிறகு மாலை நேரத்தில் சிவபெருமானுக்கு பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்த அபிஷேகம் நடத்தப்பட்டது.இதனை தொடர்ந்து சுவாமிக்கு வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அடுத்தபடியாக சிவபெருமானின் வாகனம் நந்தி தேவருக்கும் எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் அபிஷேகம் செய்து, அருகம்புல் சாற்றி மலர் அலங்காரம் செய்து, அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடத்தப்பட்டது.
கோத்தகிரி சக்திமலை சிவன் கோவில் சோமவார பிரதோஷ பூஜையில் திரளான பக்தர்கள் விரதமிருந்து கலந்துகொண்டு லிங்கேஸ்வரரை பக்திப்பரவசத்துடன் தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- நந்திக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் கடந்த மாதம் 25-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். வழக்கமாக நடைபெறும் பிரதோஷ வழிபாடு அன்று வரும் பக்தர்களின் கூட்டத்தை விட நேற்று அதிகமாக இருந்தது. நந்திக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பிரதோஷத்தையொட்டி கோட்டைக்குள் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் பலர் கோட்டை பூங்காவில் அமர்ந்தும் பொழுது போக்கினர். ஏராளமான பக்தர்கள் வருகையால் கோவில் வளாகம் மற்றும் கோட்டை பூங்கா பரபரப்பாக காணப்பட்டது. இதையொட்டி ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- வழிபாடு முடிந்தபின் அன்னதானம் செய்ய வேண்டும்.
- வேதம் முதலிய பயிற்சியும் பிரதோஷ காலத்தில் செய்யக்கூடாது.
பிரதோஷ வழிபாட்டின் பயனாக வறுமை, பயம், மரண வேதனை முதலான பிரச்சினைகள் நீங்கும். அதுமட்டுமின்றி...
1. இன்பம் கிடைக்கும்.
2. மலடு நீங்கி மகப்பேறு பெறுவர்.
3. கடன் நீங்கித் தனம் நிறையப் பெறுவர்.
4. வறுமை ஒழியும்.
5. நோய் நீங்கி நலம் பெறுவர்.
6. அறியாமை நீங்கும்.
7. பாவம் தொலைந்து புண்ணியம் பெறுவார்கள்.
8. தடைகள் நீங்கித் திருமணம் நடைபெறும்.
9. சகல தோஷங்களும் நீங்கிச் சுகம் பெறுவர்.
10. அனைத்துக்கும் மேலாக முக்தி அடையவர்.
நந்தியெம் பெருமான் தன்னை நாடொறும் வணங்கு வோர்க்கு
புந்தியில் ஞானம் சேரும் பொலிவுறு செல்வம் கூடும்
குலமுறை தழைத்தே ஓங்கும் குணம்நிறை மக்கள் சேர்வர்
சிந்தையில் அமைதி தோன்றும் சிறப்புறும் வாழ்வு தானே!
பிரதோஷ காலத்தில் செய்யக்கூடாதவை
ஜீரணமாகாமல் விஷமாக மாறுவதால் சாப்பிடுதலும் யோகத்தை பேணுவதால் உறக்கமும், நல்லொழுக்கம் இயலாததால் பிரயாணமும், உடலை நிலைப்படுத்த முடியாததால் எண்ணைக் குளியலும், சிவனை, விஷ்ணு வணங்கும் நேரமாதலால் விஷ்ணுவைக் கண்டு வணங்குதலும், ஆன்மஹானம் வேண்டுவதால் பஞ்சாட்சரம் அல்லாத மற்ற விருப்பம் வேண்டும் (காம்ய) ஜபம் செய்தலும், அகத்தூய்மை வேண்டுவதால் தவம் செய்தலும், ஒரு நிலைப்பட்ட மனம் தேவையாதலால் வேதம் முதலிய பயிற்சியும் பிரதோஷ காலத்தில் செய்யக்கூடாது.
பிரதோஷ நோன்பு
பிரதோஷ நோன்பு இருப்பது மிகுந்த பலன் தரும். கஷ்ட நஷ்டங்கள் உடனே தீரும். அன்று அதிகாலையில் குளித்து, தூய உடை அணிந்து, நோன்பு தொடங்க வேண்டும். பகல் முழுக்க எதுவும் சாப்பிடக் கூடாது. பசி தாங்காதவர்கள் பால், பழம் சாப்பிட்டுக் கொள்ளலாம்.
மாலையில் பிரதோஷம் தொடங்கிய பின்பு சிவபூஜை பண்ண வேண்டும். வெல்லப் பொங்கல் படைக்க வேண்டும். நெய் விளக்கு ஏற்ற வேண்டும். வில்வ இலையால் அர்ச்சனை பண்ண வேண்டும்.
வழிபாடு முடிந்தபின், இரண்டு பேருக்காவது அன்னதானம் செய்ய வேண்டும். அதன்பின்தான் சாப்பிட வேண்டும். அன்னதானம் செய்யாவிட்டால் நோன்பு இருந்தும் பலன் இல்லை. சிவனே பிச்சாண்டிதானே! மாலையில் கோவிலுக்கு போய் வழிபாடு செய்வதும் நல்லது. அப்போது வெல்லப்பொங்கல் செய்து எடுத்து போக வேண்டும். முடியாவிட்டால் கார அரிசியில் வெல்லம் கலந்து நந்திக்கு படைக்க வேண்டும். அன்னதானம் செய்வது முக்கியம்.
- உற்சவருக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும்.
- நந்திதேவருக்கு அருகம்புல் மாலையை அணிவிக்க வேண்டும்.
* விடியற்காலை எழுந்து நீராடி, தூய ஆடை அணிந்து நெற்றியில் சைவச் சின்னங்களை தரித்துக் கொள்ள வேண்டும்.
* முழு உபாவாசம் இருந்து, படுக்கையில் படுக்காமல், சிவபுராணம், சிவநாமாவளிகளை படித்துக்கொண்டு சிவசிந்தனையோடு இருக்க வேண்டும்.
* மாலையில் சூரியன் அஸ்தமானமாக நான்கு நாழிகைக்கு முன்பு மீண்டும் குளித்து தூய ஆடையுடுத்தி நெற்றியில் திருநீறு பூசிக்கொள்ள வேண்டும்.
* இல்லத்தில் சிவலிங்கமும், நந்தியும் கற்படிமமாகவோ, விக்ரகமாகவோ இருப்பின் அவற்றிற்கு அபிஷேகம் செய்து, வில்வ தளத்தால் அர்ச்சனை, ஆராதனை செய்ய வேண்டும்.
* மாலை பிரதோஷ வேளையில் சிவாலயத்திற்கு சென்று சிவபெருமானுக்கும், நந்தி தேவருக்கும் நடைபெறும் மஹன்யாச ருத்ர ஜபத்துடன் கூடிய அபிஷேகத்தை கண் குளிரக் காண வேண்டும்.
* நந்திதேவருக்கு அருகம்புல் மாலையை அணிவிக்க வேண்டும்.
* மாவினால் அகல் செய்து, தூய்மையன பசு நெய்விட்டு விளக்கெரிக்க வேண்டும்.
கார அரிசியில் வெல்லம் கலந்து நந்தி தேவருக்கு நிவேதனமாக வைக்க வேண்டும்.
* தீபாராதனை வேளையில் நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கிடையே சிவபெருமானைக் கண்டு `ஹர ஹர' என்று கூறி வணங்க வேண்டும்.
* பிரதோஷ நாளில் ஆலயத்தை வலம் வரும் போது அப்ரதட்சிணமாக வரவேண்டும்.
* பின்னர் சிவபெருமான் உமாதேவியாருடன் ரிஷபாரூடராய், பிரதோஷ நாயகராய், பிரதோஷ காலத்தில் (மாலை 5.45 மணி முதல் 6.30 மணி வரை) ஆலயத்தை வலம் வரும் பொழுது கண்டு தரிசிப்பது மிகப்பெரிய புண்ணியமாகும்.
* சிவ ஆலயங்களில் வேத பாராயணத்துடன் முதலிலும், திருமுறை பாராயணத்துடன் இரண்டாவதும், நாதஸ்வர மங்கல இசையுடன் மூன்றாவதுமான மூன்று முறை ஆலய வலம் நடைபெறும். இரண்டாவது வலம் வரும்போது இறைவனையும், இறைவியையும் ஈசான திக்கில் இருந்தளருச் செய்வார்கள். அப்போது காண்பிக்கப்படும் கற்பூர ஆரத்தியைக் கண்டு தரிசிப்போர்க்கு மிகுந்த பலன் உண்டு என்று கூறப்படுகிறது.
* சிவ தரிசனம் முடிந்ததும் இருவருக்காவது அன்னமிட்டு, அதன் பிறகு உண்பதே சிறப்பு என்று கூறப்படுகிறது.
* நந்தி தேவருக்கு அபிஷேகம் செய்யும்போது எண்ணை, பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் போன்றவை தரலாம். அபிஷேகம் முடிந்தபின் அருகம்புல், பூ சாத்திய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்து கொள்வது நமக்கு நன்மை தரும்.
* உற்சவருக்கு அபிஷேக நேரத்தில் பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம் இவைகளைக் கொடுக்கலாம். பூஜை நடக்கும் போதும், `சொர்ண அபிஷேகம்' செய்யும்போதும் நம்மிடம் உள்ள தங்க நகைகளைக் கொடுத்து உற்சவருக்கு சாத்தச் சொல்லி தீபாராதனை முடிந்தபின் அந்த நகைகளை வாங்கி அணிவது மிகவும் நல்லது.
* நந்தீஸ்வரருக்கு நைவேத்தியம் செய்யும் போது பச்சரிசியுடன் வெல்லம் கலந்து நந்தி தேவருக்கு முன் வைத்து நைவேத்தியம் செய்து கொள்ள வேண்டும்.
* நந்தி தேவருக்கு தீபாராதனை முடிந்த பின்பு மூலவருக்கு தீபாராதனை நடைபெறும். அப்போது நந்திதேவரின் பின்பக்கத்திலிருந்து இரண்டு கொம்புகளின் இடையில் தீபாரதனையைப் பார்த்தால் சகல தோஷமும், பாவமும் நீங்கும்.
* மூலவருக்கு தீபாராதனை முடிந்த பின்பு நந்தீஸ்வரர் காதில் யாரும் கேட்காதபடி தன்னுடைய குறைகளையும், வேண்டுதலையும் அவரிடத்தில் கூற வேண்டும். இப்படி நந்தி காதில் 12 பிரதோஷ பூஜை அன்று கூறியதையே கூறி வந்தால் 13-வது பிரதோஷ பூஜை அன்று செல்லும் போது அன்று செல்லும் போது கூறிய விஷயம் நிறைவேறிவிடும்.
நந்தியின் காதில் வேண்டாதவற்றைக் கூறுதல் கொடிய பாவச் செயல் ஆகும். பக்தர்கள் அவ்வாறு செய்வதனைத் தவிர்க்கவும்.
* நந்தி பகவானைத் தொடாமல் தூரத்தில் நின்று அடுத்தவர் காதில் விழாமல் கூற வேண்டும்.
* உற்சவருக்கு நைவேத்தியம், தீபாராதனை இவைகள் முடிந்த பின் தான் நம்மிடமுள்ள பால், வெல்லம் கலந்த அரிசி, பஞ்சாமிர்தம் ஆகியவற்றைத் தர ரேண்டும். இப்படித் தருவதாலும், அல்லது மற்றவர்கள் கொடுப்பதை வாங்கி உண்பதினாலும் நம்முடைய தோஷம், துன்பம், பாவம் நீங்க நன்மை பெறலாம்.
* உற்சவர் உள்வீதி உலா வரும்போது ஒவ்வொரு திசைகளிலும் தீபாராதனை செய்யும்போதும் இறைவனை வணங்கி அவருடைய திருநாமங்களையும், சிவபுராண பாடல்களையும் சொல்லிக் கொண்டோ அல்லது பாடிக்கொண்டோ வரவேண்டும். இதனால் தோஷம், பாபம், கஷ்டம், நீங்கி நன்மை பெறுவதுடன் வாழ்க்கையில் பல முன்னேற்றங்களும் ஏற்படும்.
* உற்சவர் உள்வீதி உலா முடிந்து நைவேத்தியம் செய்த பின்பு கோவிலின் உள்சென்று விடுவார். அப்போது நைவேத்தியம் செய்த சுண்டல், பொங்கல் போன்றவற்றைக் கொடுக்கவும் அல்லது கொடுப்பதை வாங்கி சாப்பிடுவதும் நல்லது. அது மட்டுமல்லாமல் உற்சவருக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும்.
* பிரதோஷ நாளன்று கூடியவரை உப வாசம் இருந்து வர வேண்டும். அன்றைய தினம் தரிசனம் முடிந்த பின்னர் பால், பழம், மட்டும் அருந்தி வெறுந்தரையில் படுத்து உறங்கினால் பிரதோஷ பலன் முழுமையாகக்கிட்டும்.
- திருமாலை தவிர வேறு தெய்வ வடிவங்களைப் படைப்பது மரபல்ல.
- சுருட்டப்பள்ளியில் சிவன் சயன கோலத்தில் காட்சி தருகிறார்.
கடல் நஞ்சினை ஈசன் வாங்கி உண்ட திருப்பதி என்று காவிரிக்கரையின் தென்கரைத் தலமான திருப்புள்ளமங்கை (பசுபதி கோயில், ஆலந்துறை) குறிப்பிடப்படுகிறது.
திருநீலக்குடி என்னும் தேவாரத் தலத்திறைவரும், அப்பருக்குக் கட்டமுதளித்த திருப்பைஞ்ஞீலி தலத்திறைவரும் `திருநீலகண்டேஸ்வரர்' என வழங்கப் பெறுகின்றனர்.
அதுபோல இலுப்பை பட்டு என வழங்கும் திருப்பழ மண்ணிப் படிக்கரையில் பஞ்சபாண்டவருள் முதல்வரான தருமனும், துணைவி திரவுபதியும் போற்றி வணங்கிய வடிவம் நீலகண்டேஸ்வரர் என்று கூறப்பெறுகின்றது.
திரு அம்பர் மாகாளம் என்ற ஊரில் உறை இறைவந் `காள கண்டேஸ்வரர்' எனப் பெறுகின்றார்.
பள்ளிகொண்ட பரமர்
திருமாலை தவிர வேறு தெய்வ வடிவங்களைப் படைப்பது மரபல்ல. ஆனால் ஆந்திர மாநிலத்தில் உள்ள சுருட்டப்பள்ளி என்னும் ஊரில் சிவன் சயனக்கோல கதை வடிவச் சிற்பம் காணப்பெறுகின்றது.
தாயார் மங்களேஸ்வரியின் மடியின் மேல் தலை வைத்து வானோக்கியவாறு சிவன், விஷம் அருந்தியபின் இருந்த சயன வடிவ தோற்றம் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தாரமங்கலதக் கோயில்
பிரதோஷ நாட்களில் மாலை நேரத்தில் சூரிய பூஜையும் நடைபெறும் அற்புதக் திருக்கோயில் தாரமங்கலம் என்னும் ஊரில் அமையப் பெற்றுள்ளது. மேற்கு பார்த்த இத்திருக்கோயிலில் அமைந்துள்ள மூன்று நந்தியின் கொம்புகள் வழியே சூரிய ஒளியானது கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் மேல் விழும் வண்ணம் ஆலயம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரதோஷ பூஜையுடன் சூரிய பூஜையினையும் ஒருங்கே தரிசித்துப் பேறு பெற விரும்புவோர் செல்ல வேண்டிய ஊர் தாரமங்கல்ம் ஆகும்.
பிற கோயில்கள்
பிரதோஷ நாயகரான திருநீலகண்டரைப் போற்றும் வகையில், கோவை மாவட்டத்தில் உள்ள காரமடையில் கலைச்சிறப்பு வாய்ந்த நஞ்சுண்டேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றான பத்மநாபபுரத்தில் `நீலகண்டசுவாமி கோயில்' அமையப் பெற்றுள்ளது.
திருநீலகண்டப் பதிகம்
பிரதோஷ காலத்தில் படிக்க வேண்டிய செய்வினை
கோளாறுகளை நீக்கும் திருஞான சம்பந்தரின் திருநீலகண்டப் பதிகம்
அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லுமஃதறிவீர்
உய்வினை நாடாதிருப்பது முந்தமக் கூனமென்றே
கைவினை செய்தெம் பிரான்கழல் போற்றுது நாமடி யோம்
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்
காவினையிட்டுங் குளம்பல தொட்டுங் கனிமனத்தால்
ஏவினை யாலெயின் மூன்றெரித் தீரென றிருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுது நாமடி யோம்
தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்
மூலைத்தட மூழ்கிய போகங் களுமற்றெவையு மெல்லாம்
விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட விரிசடையீர்
இலைத்தலைத் சூலமுந் தண்டு முழவு மிவை யுடையீர்
சிலைத்தெமைத் தீவினை தீண்டப் பெறாதிரு நீலகண்டம்
விண்ணுலக காள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும்
புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படம் புண்ணியரே
கண்ணிம யாதன மூன்றுடை யீரங் கழலடைந்தோம்
திண்ணிட தீவினை தீண்டப்பெ றாதிருநீலக்கண்டம்
மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை வற்புறுத்திப்
பிறப்பில் பெருமான் றிருந்தடிக் கீழ்ப்பிழை யாதவண்ணம்
பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம்
சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்
கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே
உருகி மலர்க்கொடு வந்துமை யேந்துதுநாமடியோம்
செருவி லரக்கனைச் சீரிலடர்த்தருள் செய்தவரே
திருவிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்
நாற்ற மலர்மிசை நான்முக னாரணன் வாது செய்து
தோற்ற முடைய அடியு முடியும் தொடர்வரியூர்
தோற்றினுந் தோற்றந் தொழுது வணங்குதும் நாமடியோம்
சீற்றம தாம்பினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்
சாக்கியப் பட்டுஞ்சமணுரு வாகி யுடையழிந்தும்
பாக்கியமின்றி யிருதலைப் போகமும் பற்றும் விட்டார்
பூக்கமழ் கொன்றைப் புரிசடை யீரடி போற்றுகின்றோம்
தீக்குழித் தீவினை தீண்டப் பெறாதிரு நீலகண்டம்
பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வம் கழலடைவான்
இறந்த பிறவியுண்டாகி லிமையவர் கோனடிக்கண்
திறம்பயின் ஞானசம் பந்தன் செந்தமிழ் பத்தும்வல்லார்
நிறைந்த வுலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே.
- பூதகணங்களின் தலைவியாக விளங்குபவள் காளி.
- மேற்கு வாயிலில் நாம் 101 லிங்கங்கள் இருப்பதினைக் காண முடியும்.
திருக்காளத்தி என்று இத்தலத்துக்கு பெயர் வந்தது மிகவும் சுவை ததும்பும் வரலாறு ஆகும். இங்கிருக்கும் சிவலிங்கத்திற்கு அருகே சிலந்தி ஒன்று வலையைப் பின்னி இருந்தது. இது சிவலிங்கத்திற்கு ஒரு பந்தலைப் போல காட்சியளித்தது.
தீப்பட்டு அந்த பந்தலானது அறுந்துப் போகாத வகையில் அவ்வப்போது பந்தலினை அந்த சிலந்தி புதுப்பித்துக் கொண்டே அந்த சிலந்தி செய்து வந்தது.
ஆனாலும் ஒரு சமயத்தில் சிலந்தி அமைத்திருந்த பந்தல் தீக்கு இரையாகியது. ஆனாலும் சிலந்தி அதிலிருந்து மீண்டது. பிறகு முக்தி பெற்றது.
அதே காலக்கட்டத்தில் காளன் என்கிற நாகம் ஒன்று இருந்தது. இது யாரையும் கடிப்பது கிடையாது. இது நதமது நஞ்சினை வீணாகாது காத்து அதனை நாகமணியாக திரளச் செய்தது. இந்த நாகமணியை சிவலிங்கத்தின் மீது உமிழ்ந்துத் திருப்பணியை மேற்கொண்டு வந்தது.
அங்கே அந்தி என்கின்ற சிவகணத் தலைவர் ஒருவன் யானையாக அவதாரம் செய்திருந்தான். இந்த யானை பொன் முகலியை கொண்டு வந்து திருக்காளத்தியப்பனுக்கு தம்முடைய துதிக்கையினால் திருமஞ்சனம் செய்து வந்தது. அதோடு பூவையும் சூட்டி மகிழ்ந்துது வந்தது. இது தூய வழிபாட்டு முறையாக காளன் என்கிற பாம்பிற்கு தோன்றவில்லை.
இதனால் நாகத்திற்கு கோபம் உண்டானது. ஒருநாள் யானையின் துதிக்கையில் நுழைந்து அதற்கு துன்பத்தினை தந்தது. இதனால் கோபம் கொண்ட யானை பாம்பினை சுற்றி தரையிலே அடித்துக் கொன்றது. ஆனால் பாம்பு அதனை தீண்டியபோது இருந்த விஷமானது யானையையும் கொன்று போட்டது. இதையடுத்து அந்த யானை, பாம்பு இரண்டும் முக்தி அடைந்து பெருமை பெற்றன.
சிலந்தி, யானை, பாம்பு ஆகிய மூன்றும் முக்தி பெற்ற தலம் என்பதினால் இது சீகாளத்தித் தலமானது சீ என்பது சிலந்தியையும் காளன் என்பது பாம்பையும், அந்தி என்பது யானையையும் குறித்து வரும் சொல்லாகும். இத்தலத்தின் பெயர் இவ்வகையிலேயே உருவானது. இதனால் இந்த தலத்தினை வணங்குகின்றவர்கள் வீடுபேற்றினை அடைவார்கள்.
கோவில் அமைப்பு
ஸ்ரீ காளஹஸ்தி கோவிலில் பல கல்வெட்டுக்கள் காணப்படுகின்றது. இவற்றிலே கோவில் வரலாறு மற்றும் திருப்பணி செய்யப்பட்ட செய்திகளை காணலாம்.
இங்குள்ள வாயில் மாடத்திலே கணபதியும், முருகனும் காட்சி தருகின்றார்கள். இதனையடுத்து விசுவநாதர் ஆலயமும், விசாலாட்சி ஆலயமும் காணப்படுகின்றது.
இதனையடுத்து தேவிமாடம் ஒன்று காணப்படுகின்றது.இங்குள்ள மற்றொரு முக்கியமான சந்நிதி பால கணகம்பாள் சந்நிதியாகும். பாலா என்பது அம்பிகையின் பெயராகும். பூதகணங்களின் தலைவியாக விளங்குபவள் காளி ஆவாள். இவ்விரண்டு பெயர்களும் சேர்ந்தே பாலகணகம்பாள் என்று அழைக்கப்பட்டது.
இவர் வாயிலிலேயே கொலுவீற்றிருப்பது மிகவும் பொருத்தமான ஒன்றாகும். இதற்கு காரணம் இவள் ஆவுடையாரிடம் கோபம் கொண்டு இவ்வாறு தவமியற்றுகின்றாள் என்று கூறுவார்கள்.
இதையடுத்து பாதாள விநாயகர் சந்நிதி உள்ளது. மேற்கு பகுதி இக்கோவிலிலே முடிகின்றது. இதனை அடுத்து மண்டபம் காணப்படுகின்றது.
தெற்குப்புற பெருவழியில் ஒரு மேடைக் கோவில் உள்ளது. இந்த மேடைக் கோவிலில் சிவலிங்கம், கணபதி, பைரவர் உள்ளனர். இவை வலதுபுறமாக அமைந்துள்ளது.
இடதுபுறமாக சுவற்றிலே துளை போட்டுள்ளனர். அந்த துளையில் நாம் பார்க்கின்றபோது நந்தி பெருமானை பார்க்க முடிகின்றது. இதற்கு பிறகு மேடைக் கோவிலில் நாம் சோமநாதர் மற்றும் மீனாட்சியம்மை சந்நிதிகளை பார்க்கலாம்.
இதற்கு அடுத்தப்படியாக மயில்வாகனன் காணப்படுகின்றார். பிறகு நாம் பொன்முகலியை அடையக்கூடிய வாயிற்படியை பார்க்கலாம். இங்கு தமிழிலே அர்ச்சனை நடைபெறுகின்றது.
ராமநாதன் செட்டியார் என்பவர் இந்த கோவிலுக்கு பல அறப்பணிகளைச் செய்துள்ளார். இவருடைய சிலையானது இங்கே வைக்கப்பட்டுள்ளது.
இவருடைய இச்சந்நிதியை அடுத்து நாம் காண்பது சூரியநாராயண சுவாமி கோவில் ஆகும். இங்கு தலவிருட்சம் உள்ள பகுதியாக இது விளங்குகின்றது.
இங்கு பாம்புப பிரதிஷ்டைகள் அதிகம் உள்ளன. இங்கு மகிழமரம் ஒன்று பட்டுப்போய் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் கல்லால மரமும், வில்வ மரமும் ஆகும்.
இதனையடுத்து நாம் பார்த்தால் பொன் முகலியாறு ஓடுவதைக் காணலாம். இது மற்றொரு பாலாறு எனக் கூறப்படுகின்றது. இந்த ஆற்றங்கரையில்தான் கண்ணப்பர் நடந்து வந்து இறைவனை வணங்கியதாக கூறுகின்றார்கள்.
பொன்முகலி ஆற்றங்கரைக்கு நாம் வந்து விட்டால் கண்ணப்பரை வணங்காமல் போகக்கூடாது. இந்த பொன்முகலி ஆறே புனிதக் கங்கையாக ஆகியது. இங்கு பல ஈஸ்வர அருளாளர்கள் நீராடி மகிழ்ந்து பக்திப் பரவசத்திலே ஆழ்நடதுள்ளார்கள் எனக் கூறுவது பொருந்தும்.
இந்த ஆற்று நீரினை எடுத்துத் தலையிலே தெளித்துக் கொள்வதால் நாம் புண்ணியம் அடைந்தவர்கள் ஆகின்றோம். ஈஸ்வரனின் பேரருளைப் பெற்றவர்கள் ஆகின்றோம்.
இங்குள்ள மேற்கு வாயிலில் நாம் 101 லிங்கங்கள் இருப்பதினைக் காண முடியும். லிங்கத்தினை வழிபட்டு 108 அர்ச்சனைகளை செய்ய முடியாதவர்கள் இங்கு வந்து இந்த லிங்கங்களை வணங்கினால் அந்தப் பலனை நிச்சயமாக அடைந்தவர்கள் ஆகின்றனர்.
இந்தக் கோவிலின் கிழக்குப் பகுதியிலே கொடிமரமும் பலிபீட லிங்கமும் உள்ளன. இங்கு விளக்குத் தூண் ஒன்று இருக்கின்றது. இது கொடி மரத்தினையும் விட மிகவும் உயரமாகக் காணப்படுகின்றது.
இங்கு ஒரு மேடை உள்ளது. எட்டுத் திசை யானைகள், பைரவர்கள், திக்குப் பாலகர்கள் ஆகியோரை இந்த மேடையிலே காணலாம். இந்த எட்டுத் திசைகளிலும் நந்தித் தேவர் இருப்பார். இவரை வணங்கிய பின்னரே நாம் காளத்தியப்பரை வணங்க வேண்டும்.
நந்தி பெருமானை திசைக் காவலர்களே சுமக்கின்றார்கள். எனவே இவரோடு நாம் இவர்களையும் சேர்த்து வணங்குதல் வேண்டும். இந்தத் திருத்தலமானது யோகத்திற்குரிய சிறப்புத் தலமாக பேசப்படுகின்றது. இங்கு ஆங்காங்கே பல மாடங்கள் இருக்கின்றன. இவ்விடங்களில் பெரிய யானைலிங்கங்களை காணலாம்.
கருவறையில் உள்ள சிவலிங்கமே காளத்திப்பர் எனப்படுகின்றர். இந்தக் கருவறையின் வாயிலிலே நாம் ஸ்ரீ சக்கரம் இருப்பதைக் காணலாம். இந்தக் கோவிலுக்கு காளிதேவியின் அருள் அதிகமாகவே உள்ளது. இவை பழைமை, சிறப்பு, தலைமை, சித்தி முதலிய பெருமையை பெற்று விளக்குகின்றன.
இங்கு மேலும் மணிகண்டேசர் கோவில் தனியாக உள்ளது. இங்கு இறந்தவர்களை எழுப்பி அவர்கள் காதுகளிலே மந்திரம் ஓதி அனுப்புகின்றார் இவர். இங்குள்ள பொன் முகலியாறு மணிக் கங்கை யெனவும், மணிகர்ணிகை எனவும் அழைக்கப்படுகின்றது. இந்தக் கோவிலின் உட்கோவிலான காசி விஸ்வநாதர் சந்நிதி பூட்டியே உள்ளது.
கண்ணப்பர் ஈஸ்வரருக்குக் கண்களைத் தந்த இடம் இந்த மலையின் உச்சியிலே உள்ளது. கண்ணப்பர் ஆலயத்தினை யடுத்து நாம் சித்தீஸ்வரம் காணுகின்றோம்.இதனையடுத்து ஒற்றை மண்டபக் கோவில் காணப்படுகின்றது.
இங்குள்ள யோக மூர்த்தம் அய்யப்பனின் உருவத்தினை போன்று விளங்குகின்றது. மேலும் தட்சிணாமூர்த்தி செங்கல்வராயர் சந்நிதிகள் உள்ளன.
இங்கு செப்பு நந்தி, சலவைக் கல் நந்தி ஆகியன உள்ளன.இங்குள்ள நந்திகள் முகம் பன்றியைப் போல காணப்படுகின்றது. இது பல்லவர்களின் சின்னமாகிய பன்றியை உணர்த்துகின்ற வகையில் அமைந்து உள்ளது. இங்கு பஞ்சமுகமான லிங்கம் உள்ளது.
இங்கு நமது மனத்தினை கவர்வது காளத்தியார் மூர்த்தம் ஆகும். இங்குள்ள பாணம் மிகவும் முக்கியமானது ஆகும். இது உலோகத்தினால் ஆன கலசத்தினைக் கொண்டு விளங்குகின்றது.
இங்கு கணபதி, பெருமாள், சப்தமுனிவர், சனிபகவான் போன்றோர் ஸ்தாபித்த பல லிங்கங்கள் உள்ளன. கனகதுர்க்க, கார்த்தியாயினி, உடுப்பி பாலசுப்பிரமணியம் ஆலயங்களும் உள்ளன.
இக்கோவில் ஆதிசங்கரர் விஜயம் செய்த தலமாகும். இங்கு காணப்படுகின்ற சண்டிகேசுவரர் சந்நிதி மிகவும் வெளிச்சமாகக் காணப்படுகின்றது.
தேவாரம், திருவாசகம், கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி, திருக்கண்ணப்ப தேவர் திருமறம், திருவருட்பா, திருப்புகழ், ஞானப்பூங்கோதையார் துதி போன்ற பாடல்கள் பெற்றது இத்திருத்தலம்.
- பல லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுயம்பு லிங்கம்.
- நாடி ஜோதிடத்துக்கு பரிகார சிறப்பு ஸ்தலமாகும்.
சென்னை அருகே பல்லாவரம் ரயில் நிலையம் அருகே 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புகழ் சோழ நல்லூர் என்ற பெயர் மருவி பொழிச்சலூர் கிராமத்தில் தொண்டை வள நாட்டு நவ கிரக ஸ்தலங்களில் சனி பகவானுக்கு சிறப்பு சுற்றுலா தலமாக விளங்கும் இவ்வாலயத்தில் இருக்கும் லிங்கம் பல லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுயம்பு லிங்கம் ஆகும்.
இவ்வாலயத்தில் அகத்திய முனிவர் இமயம் விட்டு பொதிகை மலை நாடி தவம் புரிய வந்த பொது இங்கு தங்கி இந்த சுயம்பு லிங்கத்திற்கு பூஜை செய்து இவருக்கு இறைவன் காட்சி அளித்து அருள் தந்ததால் இறைவன் அகத்தீஸ்வரர் ஆகவும் இறைவி ஆனந்தவல்லி ஆகவும் காட்சி அளிக்கின்றனர்.
சனி பகவான் பாவத்தை போக்கி கொள்ள இங்கு நள்ளார் தீர்த்தம் உண்டு பண்ணி சிவ பெருமானை வழிபட்டு தான் பிறர்க்கு செய்த பாவத்தை போக்கி கொண்டதால் இவ்வாலயத்தில் சனி பகவான் திருநள்ளாருக்கு அடுத்ததாக தனியே எழுந்தருளியுள்ளார்.
இதனால் இவ்வாலயம் தொண்டை வள நாட்டு நவகிரக ஸ்தலங்களில் சனி பகவானுக்கு சிறப்பு பரிகார ஸ்தலமாக பொழிசை வட திருநள்ளார் என அழைக்கபடுகிறது.
மேலும் இதில் ஒரு சிறப்பு உள்ளது. இது ராகு கேது பரிகார ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது . ஒரு புண்ணிய ஸ்தலத்திற்கு உண்டான, ஸ்தலம், மூர்த்தி, தீர்த்தம் என்று மூன்று சிறப்பு அம்சங்கள் கொண்டதாகும்.
பல லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுயம்பு லிங்கமாக காட்சி அளிக்கும் இந்த ஆலயம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர் களத்தில் கஜ பிருஷ்ட விமான அமைப்புடன் உள்ள ஸ்தலங்களில் இதுவும் ஒன்று ஆகும்.
இந்த ஆலயத்தில் ஈசன் கிழக்கு புறம் பார்த்து இருப்பதும், அம்மன் தெற்கு புறம் பார்த்து இருப்பதும் வடக்கு புற ராஜ கோபுர வாசல் அமைப்பு கொண்டு கட்ட பெற்றதாகும். பரம்பரையாக வேளாளர் மரபில் இருந்து தனியார் நிர்வாகத்தின் மூலம் நிர்வகிக்கும் ஆலயம் ஆகும்.
இவ்வாலயத்தில் மாணிக்கவாசகர் உற்சவம், ஆருத்திரா, மஹா சிவராத்திரி, சனி பெயர்ச்சி, கார்த்திகை தீபம், சங்காபிசேகம், வள்ளி, தெய்வானை சுப்பிரமணிய திருகல்யாணம், ராகு கால பூஜை, பிரதோஷம் மிக சிறப்பான விசேஷ தினங்கள் ஆகும்.
எனவே பரிகார ஸ்தலமான இவ்வாலயத்தில் தாங்கள், தெரிந்தும் தெரியாமலும் செய்த உங்கள் பாவங்களை போக்கி கொள்ளவும், ராகு கேதுவால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கவும், இவ்வாலயத்தில் வந்து முறைப்படி கேட்டு தெரிந்து கொண்டு தங்களுக்கு ஏற்பட்ட எல்லா தோஷங்களுக்கும், பாவங்கள் நீங்கிடவும், வளமுடன் வாழ இங்கு பரிகாரம் செய்து தோஷ நிவர்த்தி செய்து கொள்ளலாம். நாடி ஜோதிடத்துக்கு பரிகார சிறப்பு ஸ்தலமாகவும், தொண்டை நாட்டு நவகிரக சுற்றுலா ஸ்தலமாகவும் இவ்வாலயம் சிறப்புற்று விளங்கி வருகின்றது.
சர்ப்ப தோஷம் விலக
ஒருவருடைய பிறந்த ஜாதகத்தில் லக்னம் அல்லது 2 -ம் இடத்தில் ராகு அல்லது கேது நின்றால் அது சர்ப்ப தோஷம் ஆகும்.வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணிக்குள் நமது ஊரில் இருக்கும் சிவாலயத்தில் கால பைரவருக்கு பாலபிஷேகம் செய்ய வேண்டும், புனுகு பூச வேண்டும், நாகலிங்கப்பூமாலை அவருக்கு சார்த்த வேண்டும், பால் பாயாசம், பால் சாதம் இவைகளை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும்.
யாருக்கு சர்ப்ப தோஷம் இருக்கிறதோ,அவர் பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அதன்பிறகு,கால பைரவர் சன்னதியின் முன்பாக அமர்ந்து கொண்டு காலபைரவர் 108 போற்றி அல்லது காலபைரவர் 1008 போற்றி அல்லது காலபைரவர் அஷ்டோத்திரத்தை மனதுக்குள் ஒருமுறை ஜபிக்க வேண்டும்.பிறகு நேராக நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும்.இப்படி தொடர்ந்து 8 வெள்ளிக்கிழமைகளுக்கு வழிபாடு செய்ய வேண்டும்.
லக்னம் அல்லது இரண்டாமிடத்தில் ராகு அல்லது கேது இருந்து ராகு மஹாதிசை அல்லது கேது மஹாதிசை வந்தால்,அந்த திசை முழுவதும் வாரம் தவறாமல் இந்த வழிபாட்டைச் செய்து வர வேண்டும்.
இந்த திசை முழுவதுமே அசைவம்,மது,போதைப்பொருட்களை கைவிட வேண்டும்.அவ்வாறு கைவிட்டு இந்த வழிபாட்டைச் செய்து வந்தால்,ராகு மற்றும் கேதுவால் ஏற்பட இருக்கும் அவமானங்கள் படிப்படியாக விலகிவிடும்.நிம்மதியும்,சிறந்த வாழ்க்கைத்துணையும் அமைந்துவிடும் என்பது அனுபவ உண்மை ஆகும்.
பிடித்த வாழ்க்கைத் துணை அமைய
திருமணத்தடை அகல வெள்ளிக்கிழமை ராகு கால நேரமான காலை 10.30 முதல் 12 மணிக்குள் கால பைரவருக்கு சந்தனக்காப்பு பூச ஏற்பாடு செய்ய வேண்டும். புனுகு பூசச் செய்து, தாமரை மலரை அணிவிக்க வேண்டும். அவல் கேசரி, பானகம், சர்க்கரைப்பொங்கல் இவைகளை படையலாக்க வேண்டும்.
படைத்து நமது பெயருக்கு அர்ச்சனை செய்து வர வேண்டும்.
மேலும் ஞாயிறு தோறும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரத்தில் காலபைரவருக்கு சந்தனக்காப்பு பூச வைத்து,நமது பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து 8 வெள்ளிக்கிழமைகளுக்கும்,8 ஞாயிற்றுக்கிழமைகளுக்கும் வழிபாடு செய்து வர திருமணத்தடை நீங்கிவிடும்.