என் மலர்
நீங்கள் தேடியது "Priyanka Chopra"
- பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் பிரியங்கா சோப்ரா.
- இவருக்கு மல்டிமேரி என்ற பெண் குழந்தை உள்ளது.
பாலிவுட் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் கடந்த 2018- ஆம் ஆண்டு பாடகர் நிக் ஜோனாசை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மல்டி மேரி என்ற பெண் குழந்தை உள்ளது.

பிரியங்கா சோப்ரா
அமெரிக்காவில் வசித்து வரும் பிரியங்கா, சமீபத்தில் இந்தியா வந்துள்ளார். அப்போது அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, " நடிகர், நடிகைகள் செய்வதெல்லாம் யாரோ ஒருவரின் வசனங்களைப் பேசுவதும் பிறர் குரலில் உதடுகளை அசைப்பதும்தான். அவர்கள் ஆடும் நடனம் கூட பிறர் ஆடிகாட்டுவது தான். சினிமாவில் அவர்களின் வேலை மிகக் குறைவு. எதுவும் செய்யாத அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். சிறந்த இயக்குனர்களுடன் பணியாற்றும்போதுதான் சிறந்த நடிப்பைக் கற்றுக்கொள்ள முடியும். நான் அப்படித்தான் கற்றுக்கொண்டேன்" என்று கூறினார்.
- கடந்த 2018 ஆம் ஆண்டு பாடகர் நிக் ஜோனாசை, பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்டார்.
- இவர்களுக்கு மால்தி மேரி என்ற பெண் குழந்தை உள்ளது.
பாலிவுட் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். கடந்த 2018 ஆம் ஆண்டு பாடகர் நிக் ஜோனாசை, பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இருவரும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தனர். அந்த பெண் குழந்தையின் பெயர் மால்தி மேரி. இந்த குழந்தை பிறந்ததை இந்த தம்பதியினர் அவர்களது சமூக வலைதள பக்கத்தின் மூலம் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினர்.

மகள் மால்தி மேரியுடன் பிரியங்கா சோப்ரா
குழந்தைக்கு மருத்துவ ரீதியாக சில சிக்கல்கள் இருந்ததால் சில நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியது இருந்தது. இதனால் பல மாதங்களாக தனது குழந்தையின் முகத்தை வெளி உலகிற்கு காட்டாமலே இருந்து வந்தார் பிரியங்கா. இந்நிலையில் பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனஸ் மற்றும் அவரின் சகோதரர்கள் கலந்துகொண்ட 'வாக் ஆஃப் ஃபேம்' (Walk of Fame) நிகழ்ச்சியில் தனது மகளோடு கலந்து கொண்டார்.

மகள் மால்தி மேரியுடன் பிரியங்கா சோப்ரா
இதில் பிரியங்கா சோப்ரா தனது மகள் 'மால்தி மேரி' முகத்தை முதன்முறையாகப் பத்திரிகையாளர்களுக்குக் காட்டினார். அதோடு குடும்பத்தோடு குரூப் போட்டோ எடுக்கும்போதும் குழந்தையின் முகத்தை அனைவருக்கும் காட்டினார்.
- பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தவர் பிரியங்கா சோப்ரா.
- இவர் தற்போது ஹாலிவுட்டில் பல படங்களில் நடித்து வருகிறார்.
பாலிவுட் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்த இவர் தொடர்ந்து ஹாலிவுட்டிலும் தடம் பதிக்க ஆரம்பித்தார்.

பிரியங்கா சோப்ரா
கடந்த 2018- ஆம் ஆண்டு பாடகர் நிக் ஜோனசை, பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்டார். இருவரும் வாடகைத் தாய் மூலம் மால்தி மேரி என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தனர். ஹாலிவுட்டில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் பிரியங்கா சோப்ரா ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில், ஏன் பாலிவுட்டில் இருந்து விலக என்ன காரணம் என்று கேள்வி எழுப்பினர்.

பிரியங்கா சோப்ரா - நிக்ஜோனஸ்
இதற்கு பிரியங்கா கூறியதாவது, "பாலிவுட் சினிமாவில் இருந்து நான் ஓரம் கட்டப்பட்டேன். பட வாய்ப்புகள் படிப்படியாக குறைய தொடங்கின. எனக்கு அங்கு நடந்த அரசியல் சரியாகபடவில்லை. எனக்கு சற்று ஓய்வு தேவைப்பட்டது. அதே நேரத்தில் ஹாலிவுட்டில் வாய்ப்பு வந்ததால் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டேன்" என்று கூறினார்.
- பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தவர் பிரியங்கா சோப்ரா.
- இவர் பாலிவுட்டில் இருந்து தான் வெளியேறுவதற்கான காரணத்தை சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
பாலிவுட் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்த இவர் தொடர்ந்து ஹாலிவுட்டிலும் தடம் பதிக்க ஆரம்பித்தார்.

பிரியங்கா சோப்ரா
ஹாலிவுட்டில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் பிரியங்கா சோப்ரா பாலிவுட்டில் இருந்து விலகுவதற்கு என்ன காரணம் என்று ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில், "பாலிவுட் சினிமாவில் இருந்து நான் ஓரம் கட்டப்பட்டேன். பட வாய்ப்புகள் படிப்படியாக குறைய தொடங்கின. எனக்கு அங்கு நடந்த அரசியல் சரியாகபடவில்லை. எனக்கு சற்று ஓய்வு தேவைப்பட்டது. அதே நேரத்தில் ஹாலிவுட்டில் வாய்ப்பு வந்ததால் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டேன்" என்று கூறினார்.

கங்கனா ரனாவத் - கரண் ஜோஹர்
இந்நிலையில், பிரியங்கா சோப்ரா பாலிவுட்டில் இருந்து வெளியேறியதற்கு பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தான் காரணம் என நடிகை கங்கனா ரனாவத் சாடியுள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில், ஷாருக்கான் உடனான பிரியங்கா சோப்ராவின் நட்பின் காரணமாக அவரை இந்தியாவை விட்டு வெளியேற்ற கரண் ஜோஹர் நினைத்ததாகவும் பாலிவுட்டிற்கு கலங்கம் விளைவிக்கும் இதுபோன்ற செயலுக்கு கரண் ஜோஹர் பொறுப்பேற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
- பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பிரியங்கா சோப்ரா.
- இவர் தற்போது ஹாலிவுட்டில் பல படங்களில் நடித்து வருகிறார்.
பாலிவுட் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்த இவர் தொடர்ந்து ஹாலிவுட்டிலும் தடம் பதிக்க ஆரம்பித்தார்.

பிரியங்கா சோப்ரா
கடந்த 2018- ஆம் ஆண்டு பாடகர் நிக் ஜோனசை, பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்டார். இருவரும் வாடகைத் தாய் மூலம் மால்தி மேரி என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தனர். பிரியங்கா சோப்ரா தற்போது நடித்திருக்கும் 'லவ் அகெய்ன்' என்ற திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். படத்தின் பெயர் 'லவ் அகெய்ன்' என்பதால், பாலிவுட்டில் தனது பழைய நண்பர்களைப் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார்.
நிக் ஜோன்ஸை சந்திப்பதற்கு முன்பு அவர் ஷாகித் கபூர், ஹர்மான் பவேஜா, ஷாருக்கான், ஆகியோருடன் காதலில் இருந்த காலத்தில் இந்தியாவில் தலைப்புச்செய்திகளில் பேசப்பட்டதையும் ஒப்புக்கொண்டிருக்கிறார். இது பற்றி அவர் கூறியிருப்பதாவது:-நான் டேட்டிங் செய்த அனைவருமே அற்புதமானவர்கள். நான் எப்படியெல்லாம் எங்கள் நட்பு இருக்க வேண்டும் என்பதை நினைத்தேனோ அப்படியெல்லாம் இருந்தோம் என்று அவர் கூறினார்.
- கூகுளில் அதிகம் தேடப்படும் ஆசிய நடிகை பட்டியலிலும் முதல் பத்து இடங்களில் ஐஸ்வர்யா ராய் இருக்கிறார்.
- இந்தியாவில் அதிக வருமான வரி செலுத்தும் நடிகையாக கருதப்படும் பிரியாங்கா சோப்ராவின் சொத்து மதிப்பு ரூ.760 கோடி என கூறப்படுகிறது.
ஒவ்வொரு படத்தின் வெற்றிக்கு பிறகும் நடிகர்-நடிகைகளின் சம்பளம் அதிகமாகி கொண்டே இருக்கிறது. அந்தவகையில் சம்பளத்தின் மூலமாக அதிக சொத்துகள் சேர்த்த ஆசிய நடிகைகள் பட்டியல் வெளியாகி இருக்கிறது.
இதில் சீனாவை சேர்ந்த பேன் பிங் பிங் என்ற நடிகை முதலிடம் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.900 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது. அதிக சொத்து மதிப்பு மட்டுமல்லாது, அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலிலும் இவரே முன்னிலையில் உள்ளார். இவரது சம்பளம் 20 மில்லியன் டாலர். கடந்த 2018-ம் ஆண்டு வரி ஏய்ப்பு செய்ததற்காக 3 மாதம் தலைமறைவாக இருந்த நடிகை பிங் பிங், பிறகு சமூகவலைதளத்தில் அதற்காக மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு அடுத்த இடத்தில் இந்தியாவை சேர்ந்த ஐஸ்வர்யா ராய் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.800 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோல கூகுளில் அதிகம் தேடப்படும் ஆசிய நடிகை பட்டியலிலும் முதல் பத்து இடங்களில் ஐஸ்வர்யா ராய் இருக்கிறார்.
ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்தபடியாக, 3 மற்றும் 4-வது இடங்களில் முறையே பிரியங்கா சோப்ராவும், தீபிகா படுகோனேவும் உள்ளார்கள். இந்தியாவில் அதிக வருமான வரி செலுத்தும் நடிகையாக கருதப்படும் பிரியாங்கா சோப்ராவின் சொத்து மதிப்பு ரூ.760 கோடி என கூறப்படுகிறது.
- இந்த பட்டியலில் முதல் இடத்தை இந்த ஆண்டு பதான், ஜவான் என அடுத்தடுத்து மாபெரும் வெற்றி படங்களை கொடுத்த பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பிடித்துள்ளார்.
- டாப் 50 பட்டியலில் மூன்றாவது இடத்தையும் இந்திய நடிகையாக பிரியங்கா சோப்ரா பெற்று உள்ளார்.
2023 ஆம் ஆண்டில் ஆசிய அளவிலான் டாப் 50 பிரபலங்கள் பட்டியல் பற்றிய தகவல் வெளியானது. இந்த பட்டியலில் இந்திய திரைப்பட கலைஞர்களும் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டனில் உள்ள பிரபல வார இதழான ஈஸ்டர்ன் என்ற பத்திரிக்கை ஆசிய அளவிலான டாப் 50 செலிப்ரெட்டீஸ் பற்றிய பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது 2023 ஆம் ஆண்டிற்கான பட்டியல் ஆகும். இந்த பட்டியலில் முதல் இடத்தை இந்த ஆண்டு பதான், ஜவான் என அடுத்தடுத்து மாபெரும் வெற்றி படங்களை கொடுத்த பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பிடித்துள்ளார்.
அதே பால் இந்த டாப் 50 பிரபலங்களில் இரண்டாவது இடத்தை பாலிவுட் நடிகை ஆலியா பட் பிடித்துள்ளார். இவர் 2023 ஆம் ஆண்டு ரன்வீர் சிங் உடன் இணைந்து ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி என்ற படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி ஹார்ட் ஆஃப் ஸ்டோன் என்ற ஹாலிவுட் படத்திலும் நடத்தார் ஆலியா பட்.
இந்த டாப் 50 பட்டியலில் மூன்றாவது இடத்தையும் இந்திய நடிகையாக பிரியங்கா சோப்ரா பெற்று உள்ளார்.

இந்த ஆசிய பிரபலங்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களை இந்திய நடிகர்கள் பெற்றாலும் நாம் எதிர்பார்ப்பது எனவோ தமிழ் பிரபலங்களை தான். அந்த வகையில் இந்த பட்டியலில் தென்னிந்திய சினிமா துறையில் மிகவும் பிரபலமான நடிகரான தளபதி விஜய் இடம் பிடித்துள்ளார்.
இந்த ஆண்டு வாரிசு மற்றும் லியோ வெற்றி படங்களை கொடுத்த விஜய் டாப் 50 ஆசிய பிரபலங்கள் பட்டியலில் எட்டாவது இடத்தை பெற்றுள்ளார். முதல் பத்து இடத்தில் இடம் பிடித்தவர்களில் தென்னிந்திய சினிமாவை சேர்ந்த ஒரே பிரபலம் நடிகர் விஜய் தான். இதன் படி முதல் 10 இடங்களில் இந்தியாவை சேர்ந்த நான்கு நடிகர்கள் இடம் பிடித்துள்ளர். மேலும் இந்த பட்டியலில், அமிதாப் பச்சன், அரிஜித் சிங், தீபிகா படுகோனே, அனில் கபூர், அர்மான் மாலிக் உள்ளிட்ட இந்திய பிரபலங்களும் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இஷா அம்பானியின் நெருங்கியதோழி பிரியங்கா ஆவார்
- இதில் பாலிவுட் நட்சத்திரங்கள்பிரியங்கா சோப்ரா, மாதுரி தீட்சித், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பல பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்றனர்
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி ஏற்பாடு செய்த "ரோமன் ஹோலி" கொண்டாட்டம் நிகழ்ச்சி மும்பை 'ஆன்டிலியா'ஜியோ வேர்ல்ட் பிளாசாவில்நேற்று மாலை நடந்தது.
இதில் பாலிவுட் நட்சத்திரங்கள்பிரியங்கா சோப்ரா, மாதுரி தீட்சித், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பல பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

வண்ண ரத்தினக் கற்களின் மாஸ்டர் என்று அழைக்கப்படும் அற்புதமான ரோமானிய பெரிய நகைக் கடையான பல்கேரி, இந்திய வண்ண பண்டிகையான ஹோலி பண்டிகையை 'ரோமன் ஹோலி'என்ற பெயரில் கொண்டாடியது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபல்கேரிய நகைக் கடையின் உலகளாவிய தூதராக உள்ள நடிகை பிரியங்கா சோப்ரா கவர்ச்சி 'ஸ்லிட் புடவை' ரூ.8 கோடி மதிப்பு உள்ள :'பவ்ல்காரி நெக்லஸ்' அணிந்து இருந்தார்.இஷா அம்பானியின் நெருங்கியதோழி பிரியங்கா ஆவார்.
அம்பானி வீட்டு பெண்களான இஷா அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட்,ஷ்லோகா மேத்தா ஆகியோருடன் பிரியங்கா சோப்ரா, மகிழ்ச்சியாக புகைப்படங்களுக்கு 'போஸ்' கொடுத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அதில் பங்கேற்ற அனைத்து பாலிவுட் நட்சத்திரங்களுக்கும் அம்பானியின் வீட்டில் இரவு ருசியான பல்சுவையான விருந்து வழங்கப்பட்டது.
- அயோத்தியில் ராமர் கோவிலில் கடந்த ஜனவரியில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
- இதையடுத்து தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து பால ராமரை தரிசனம் செய்து வருகின்றனர்.
லக்னோ:
அயோத்தியில் மிக பிரமாண்டமான 3 அடுக்குகள் கொண்ட ராமர் கோவில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது. அங்கு கடந்த ஜனவரி மாதம் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இதையடுத்து, அயோத்தி நகருக்கு தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து பால ராமரை தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் பல்வேறு அரசியல் பிரபலங்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் உள்பட பலர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தனது கணவர் நிக் ஜோனாஸ் மற்றும் தனது குழந்தையுடன் அயோத்தி ராமஜென்ம பூமிக்கு இன்று சென்றார். அங்கு பால ராமரை தரிசனம் செய்தார். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.
இதுதொடர்பான புகைப்படங்களை கோவில் பூசாரி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
- முன்னணி நடிகர், நடிகைகள் ஓ.டி.டி. படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
- ஒரு எபிசோட்டில் நடிக்க ரூ.18 கோடி வாங்குவதாக கூறப்படுகிறது.
ஓ.டி.டி. தளங்கள் சமீப காலத்தில் அசுர வளர்ச்சி பெற்றுள்ளன. தியேட்டர்களுக்கு சென்று படம் பார்ப்பதை விட ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் தொடர்களை பார்க்கவே ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஓ.டி.டி.யில் வெளியிடுவதற்காகவே பிரத்யேகமாக படங்கள், வெப் தொடர்கள் தயாராகின்றன. முன்னணி நடிகர், நடிகைகள் ஓ.டி.டி. படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இதில் அதிக சம்பளமும் கிடைக்கிறது.
இந்த நிலையில் ஓ.டி.டி. தொடர்களில் நடிக்க அதிக சம்பளம் பெறும் நடிகர்கள் விவரம் வெளியாகி இருகிறது. இந்த பட்டியலில் இந்தி நடிகர் அஜய்தேவ்கான் முதல் இடத்தில் இருக்கிறார். இவர் ஓ.டி.டி. வெப் தொடரில் ஒரு எபிசோட்டில் நடிக்க ரூ.18 கோடி வாங்குவதாக கூறப்படுகிறது.

அஜய்தேவ்கான் நடிப்பில் சமீபத்தில் `ருத்ரா' என்ற வெப் தொடர் வெளியானது. இதில் 7 எபிசோடுகள் இருந்தன. ஒரு எபிசோடுக்கு ரூ.18 கோடி வீதம் மொத்தம் ரூ.126 கோடி வாங்கியதாக கூறப்படுகிறது. இவருக்கு அடுத்து இந்தி நடிகர் மனோஜ் பஜ்பாய் ஒரு எபிசோடுக்கு ரூ.10 கோடி பெறுகிறார்.



நடிகைகள் தமன்னா, சமந்தா, பிரியங்கா சோப்ரா ஆகியோரும் வெப் தொடர்களில் நடிக்க அதிக சம்பளம் பெறுகிறார்கள்.
- இந்த வைர நெக்லஸ் பல்கேரிய நகைக்கடையின் விலை உயர்ந்த ஆபரணங்களில் ஒன்றாகும்.
- இந்த நெக்லஸை செய்து முடிக்க 2800 மணி நேரங்கள் ஆனது.
ரோமானிய பெரிய நகைக் கடையான பல்கேரியின் 140 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இத்தாலியில் உள்ள இந்த நகைக்கடை வாட்சுகள், வாசனை திரவியங்கள், தோல் பொருட்களுக்கும் புகழ் பெற்றது.
இந்த விழாவில் பல்கேரிய நகைக்கடையின் புதிய உயர்தர நகை சேகரிப்பான Aeterna வெளியிடப்பட்டது. இந்த விழாவில் பல்கேரிய நகைக் கடையின் உலகளாவிய தூதராக உள்ள பாலிவுட் பிரபலம் பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார்.
இந்த விழாவில் பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த 140 கேரட் வைர நெக்லசின் விலை 358 கோடி என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வைர நெக்லஸ் பல்கெரிய நகைக்கடையின் விலை உயர்ந்த ஆபரணங்களில் ஒன்றாகும். 358 கோடி மதிப்புள்ள இந்த நெக்லஸை செய்து முடிக்க 2800 மணி நேரங்கள் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி ஏற்பாடு செய்த "ரோமன் ஹோலி" கொண்டாட்டம் நிகழ்ச்சி மும்பை 'ஆன்டிலியா'ஜியோ வேர்ல்ட் பிளாசாவில் கடந்த மார்ச் மாதம் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல்கேரிய நகைக் கடையின் உலகளாவிய தூதராக உள்ள நடிகை பிரியங்கா சோப்ரா கவர்ச்சி 'ஸ்லிட் புடவை' ரூ.8 கோடி மதிப்பு உள்ள நெக்லஸ் அணிந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரியங்கா சோப்ரா கால் இடறி விழ முற்பட்டார்.
- சம்பவத்தின் வீடியோ வைரலாகியுள்ளது.
நடிகை பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் சமீபத்தில் போட்டோஷூட் ஒன்றில் கலந்துக் கொண்டார். அப்போது, லிஃப்டில் படம் படிக்கப்பட்டுள்ளது.
பிறகு, பிரியங்கா சோப்ரா லிஃப்டில் இருந்து வெளியில் வரும்போது அவரது குதிகால் லிஃப்டில் சிக்கிக் கொண்டது.
இதனால் பிரியங்கா சோப்ரா கால் இடறி விழ முற்பட்டார். இருப்பினும், அவர் தாமாக நிலைக்கு வந்தார் இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாகியுள்ளது. அதில், பிரியங்கா சோப்ராவின் கால் செருப்பு லிஃப்டில் சிக்கியது. பிறகு, அவர் செருப்பை லாவகமாக எடுத்து, தனது போட்டோஷூட்டை தொடரும் காட்சி பதிவாகியுள்ளது.