என் மலர்
நீங்கள் தேடியது "Pro Kabaddi league"
- இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
- 2வது போட்டியில் டெல்லியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றி
புனே:
9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த 7-ம் தேதி தொடங்கி பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. 12 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இன்று நடைபெற்ற போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் பெங்களூரு அணி 37-31 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற 2-வது போட்டியில் தமிழ் தலைவாஸ்-தபாங் டெல்லி அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 49-39 என்ற புள்ளி கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் தமிழ் தலைவாஸ் அணி 3-வது வெற்றியை பதிவு செய்தது.
- புனேரி அணி இதுவரை 9 ஆட்டத்தில் விளையாடி 32 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.
- யு.பி. யோத்தா 8 ஆட்டத்தில் தலா 4 வெற்றி, 4 தோல்வி பெற்று உள்ளது.
பெங்களுரு:
12 அணிகள் பங்கேற்றுள்ள புரோ கபடி லீக் போட்டி பெங்களுருவில் நடந்து வருகிறது. இன்று மூன்று ஆட்டங்கள் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ்-யு மும்பா அணிகள் மோதுகின்றன.
மும்பா அணி 7-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது. 8.30 மணிக்கு நடக்கும் போட்டியில் தபாங் டெல்லி-பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 9.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் புனேரி பல்டான்-யு.பி.யோத்தா அணிகள் மோதுகின்றன.
புனேரி அணி இதுவரை 9 ஆட்டத்தில் விளையாடி 5 வெற்றி, 2 தோல்வி, 2 டை பெற்று 32 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. யு.பி. யோத்தா 8 ஆட்டத்தில் தலா 4 வெற்றி, 4 தோல்வி பெற்று உள்ளது.
- இதுவரை 65 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதன் முடிவில் புனேரி பல்தான் 38 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளது.
- தமிழ் தலைவாஸ், பாட்னா பைரேட்ஸ் தலா 33 புள்ளிகளுடனும் இருக்கிறது.
புனே:
12 அணிகள் இடையேயான புரோ கபடி 'லீக்' போட்டி தற்போது புனேயில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் 41-32 என்ற புள்ளிக் கணக்கில் அரியானா ஸ்டீலர்சையும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 42-39 என்ற புள்ளிக் கணக்கில் மும்பையையும் வீழ்த்தின.
இதுவரை 65 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதன் முடிவில் புனேரி பல்தான் 38 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக ஜெய்ப்பூர் 37 புள்ளியுடனும், பெங்களூர் புல்ஸ் 36 புள்ளியுடனும், யு மும்பை, தமிழ் தலைவாஸ், பாட்னா பைரேட்ஸ் தலா 33 புள்ளிகளுடனும் இருக்கிறது. குஜராத் ஜெய்ன்ட்ஸ் 31 புள்ளியுடனும், தபாங் டெல்லி 30 புள்ளியுடனும், பெங்கால், வாரியர்ஸ், அரியானா தலா 29 புள்ளியுடனும், உ.பி. யோதா 27 புள்ளியுடனும், தெலுங்கு டைட்டனஸ் 8 புள்ளியுடனும் உள்ளன. முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றன.
இன்று நடைபெறும் ஆட்டங்களில் பெங்கால் வாரியர்ஸ்-உ.பி.யோதா (இரவு 7.30 மணி) டெல்லி-தெலுங்கு டைட்டன்ஸ் (8.30 மணி) அணிகள் மோதுகின்றன.
- தமிழ் தலைவாஸ் அணி 5 வெற்றி, 6 தோல்வி, 2 டையுடன் 35 புள்ளிகள் பெற்று 10-வது இடத்தில் உள்ளது.
- இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் டெல்லி-உபி. யோதா மோதுகின்றன.
புனே:
புரோ கபடி 'லீக்' போட்டி புனேயில் நடைபெற்று வருகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன.
தமிழ் தலைவாஸ் அணி 5 வெற்றி, 6 தோல்வி, 2 டையுடன் 35 புள்ளிகள் பெற்று 10-வது இடத்தில் உள்ளது. பாட்னாவை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் 6-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியை ஏற்கனவே வீழ்த்தி இருந்ததால் நம்பிக்கையுடன் ஆடும்.
இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் டெல்லி-உபி. யோதா மோதுகின்றன. இரு அணிகளும் 7-வது வெற்றிக்காக காத்திருக்கின்றன.
- தமிழ் தலைவாஸ் - பாட்னா பைரேட்ஸ் போட்டி சமனில் முடிந்தது
- தபாங் டெல்லியை வீழ்த்தியது யு.பி.யோத்தா.
புனே:
9-வது புரோ கபடி லீக் போட்டிகள் தற்போது புனே நகரில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்றுகள் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெறுகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.
பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டி 33-33 என்ற புள்ளி கணக்கில் சமனில் முடிந்தது. தமிழ் தலைவாஸ் அணி வீரர் நரேந்தர் 3 போனஸ் புள்ளிகள் உட்பட 16 புள்ளிகளை குவித்து அசத்தினார். இதன் மூலம் தமிழ் தலைவாஸ் அணி 38 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 7-வது இடத்திற்கு முன்னேறியது.

நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில், தபாங் டெல்லி-யு.பி.யோத்தா அணிகள் மோதின. இதில் யு.பி.யோத்தா அணி 50-31 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் 7-வது வெற்றியை பெற்ற யு.பி.யோத்தா அணி புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறியது.
- அரியானா 33-23 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.
- இன்றைய போட்டியில் மும்பை-பெங்கால், புனே-தெலுங்கு டைட்டன்ஸ், உ.பி. யோதா-பாட்னா அணிகள் மோதுகின்றன.
ஐதராபாத்:
புரோ கபடி லீக் போட்டி தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் டெல்லி அணி 50-47 என்ற கணக்கில் குஜராத்தை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 26-41 என்ற கணக்கில் ஜெய்ப்பூர் அணியிடம் தோற்றது. தமிழ் தலைவாஸ் 7-வது தோல்வியை தழுவியது.
நேற்று நடந்த கடைசி ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ்-பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. இதில் அரியானா 33-23 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. அரியானா அணி பெற்ற 6-வது வெற்றியாகும். பாட்னா 7-வது தோல்வியை தழுவியது.
புனே அணி 64 புள்ளியுடன் முதல் இடத்திலும், ஜெய்ப்பூர் 59 புள்ளியுடன் 2-வது இடத்திலும், பெங்களூரு 58 புள்ளியுடன் 3-வது இடத்திலும் உள்ளன. உ.பி. யோதா, டெல்லி (தலா 50 புள்ளிகள்) பெங்கால் வாரியர்ஸ், தமிழ் தலைவாஸ் (தலா 48 புள்ளி) ஆகியவை முறையே 4 முதல் 7-வது இடங்களில் உள்ளன.
இன்றைய போட்டியில் மும்பை-பெங்கால், புனே-தெலுங்கு டைட்டன்ஸ், உ.பி. யோதா-பாட்னா அணிகள் மோதுகின்றன.
- இன்று நடைபெற்ற முதல் போட்டியில் தபாங் டெல்லி தோல்வி.
- இரண்டாவது போட்டியில் யுபி யோத்தாவை வீழ்த்தியது தமிழ் தலைவாஸ்.
மும்பை:
புரோ கபடி 9-வது லீக் போட்டி கடந்த அக்டோபர் 7-ந்தேதி முதல் நடைபெற்று வருகின்றன. 12 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் டாப்-2 இடங்களை பிடித்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பால்டன் அணிகள் நேரடியாக அரை இறுதியில் விளையாடுகின்றன. இந்நிலையில் அரையிறுதிக்கு தகுதி பெறும் பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் இன்று மும்பையில் நடைபெற்றன.

இதில் முதல் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ்- தபாங் டெல்லி அணிகள் மோதின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பெங்களூரு அணி, 56-24 என்ற புள்ளிகள் கணக்கில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.
இரண்டாவதாக நடைபெற்ற பிளே ஆப் சுற்று போட்டியில் தமிழ் தலைவாஸ்- உ.பி. யோத்தாஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 36-36 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இதையடுத்து டை பிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது.
இதில் தமிழ் தலைவாஸ் அணி 2-3 என்ற கணக்கில் யுபி யோத்தாவை வீழ்த்தி முதல் முறையாக அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- இரவு 7.30 மணிக்கு நடக்கும் முதலாவது அரைஇறுதியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன.
- இரவு 8.30 மணிக்கு நடக்கும் 2-வது அரைஇறுதியில் தமிழ் தலைவாஸ் அணி, புனேரி பால்டனை எதிர்கொள்கிறது.
மும்பை:
9-வது புரோ கபடி லீக் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் இன்று (வியாழக்கிழமை) இரண்டு அரைஇறுதி ஆட்டங்கள் நடக்கின்றன. இரவு 7.30 மணிக்கு நடக்கும் முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 8.30 மணிக்கு நடக்கும் 2-வது அரைஇறுதியில் அஜிங்யா பவார் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி, பாசெல் அட்ராசலி தலைமையிலான புனேரி பால்டனை எதிர்கொள்கிறது.
உ.பி.யோத்தாசுக்கு எதிரான வெளியேற்றுதல் சுற்றில் டைபிரேக்கர் வரை போராடி வெற்றி பெற்று முதல்முறையாக அரைஇறுதிக்கு வந்துள்ள தமிழ் தலைவாஸ் அணி அரைஇறுதியிலும் கலக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். இவ்விரு அணிகளும் ஏற்கனவே லீக்கில் சந்தித்த இரு ஆட்டங்களில் தலா ஒன்று வீதம் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
- புரோ கபடி லீக் அரையிறுதியில் தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி வென்றது.
- முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய தமிழ் தலைவாஸ் அணியின் கோப்பையை வெல்லும் கனவு தகர்ந்தது.
மும்பை:
9-வது புரோ கபடி லீக் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் நேற்று 2 அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
இரவு 7.30 மணிக்கு நடந்த முதலாவது அரையிறுதியில் முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 49-29 என்ற கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதேபோல், இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற 2-வது அரையிறுதியில் அஜிங்யா பவார் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி, பாசெல் அட்ராசலி தலைமையிலான புனேரி பால்டனை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் புனேரி பால்டன் அணியிடம் 39-37 என்ற புள்ளிக் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியடைந்தது.
வரும் 17-ம் தேதி (சனிக்கிழமை) நடக்கும் மகுடத்திற்கான இறுதிப்போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியுடன், புனேரி பால்டன் அணி மோதுகிறது.
- இறுதிப்போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, புனேரி பால்டனை எதிர்கொண்டது.
- இதில் ஜெய்ப்பூர் அணி 33- 29 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
மும்பை:
9-வது புரோ கபடி லீக் போட்டியில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் சுனில் குமார் தலைமையிலான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, பசெல் அட்ராசலி தலைமையிலான புனேரி பால்டனை எதிர்கொண்டது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தன. இருப்பினும், கடைசி நேரத்தில் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடிய ஜெய்ப்பூர் அணி இறுதியில் 33- 29 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இதனால் 2வது முறையாக புரோ கபடி லீக் தொடரில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
- 10-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் வருகிற நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் மும்பையில் செப்டம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
மும்பை:
நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பால்டன், பெங்களூரு புல்ஸ், உ.பி.யோத்தா, தமிழ் தலைவாஸ், தபாங் டெல்லி உள்பட 12 அணிகள் பங்கேற்கும் 10-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் வருகிற நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் மும்பையில் செப்டம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்த ஏலப் பட்டியலில் கேலோ இந்தியா பல்கலைக்கழக போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இரு அணியினர் உள்பட மொத்தம் 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் இடம்பெறுகிறார்கள். ஏலத்தில் பங்கேற்கும் உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் 4 பிரிவாக (ஏ, பி, சி, டி) பிரிக்கப்படுவார்கள். 'ஏ' பிரிவு வீரர்களுக்கு ரூ.30 லட்சமும், 'பி' பிரிவு வீரர்களுக்கு ரூ.20 லட்சமும், 'சி' பிரிவு வீரர்களுக்கு ரூ.13 லட்சமும், 'டி' பிரிவு வீரர்களுக்கு ரூ.9 லட்சமும் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம். ஒரு அணியில் 18 முதல் 25 வீரர்கள் வரை இடம் பெறுவார்கள். ஒவ்வொரு அணியும் வீரர்களை ஏலத்தில் எடுக்க செலவிடும் தொகை தற்போது ரூ.4.4 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
- இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்.
- லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றை எட்டும்.
ஆமதாபாத்:
ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ள புரோ கபடி லீக் போட்டி 2014-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 10-வது புரோ கபடி லீக் போட்டி ஆமதாபாத்தில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. வருகிற 7-ந் தேதி வரை ஆமதாபாத்தில் நடைபெறும் இந்த போட்டியின் லீக் சுற்று ஆட்டங்கள் அடுத்து பெங்களூரு (வருகிற 8-13), புனே (15-20), சென்னை (22-27), நொய்டா (டிச.29-ஜன.3) மும்பை (ஜன.5-10), ஜெய்ப்பூர் (ஜன.12-17), ஐதராபாத் (ஜன.19-24), பாட்னா (ஜன.26-31), டெல்லி (பிப்.2-7), கொல்கத்தா (பிப்.9-14), பஞ்ச்குலா (பிப்.16-21) ஆகிய நகரங்களில் அடுத்தடுத்து அரங்கேறுகிறது. இதைத்தொடர்ந்து நடைபெறும் பிளே-ஆப் சுற்று அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், 3 முறை சாம்பியனான பாட்னா பைரட்ஸ், முன்னாள் சாம்பியன்கள் யு மும்பா, பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், தபாங் டெல்லி மற்றும் புனேரி பால்டன், தெலுங்கு டைட்டன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், தமிழ் தலைவாஸ், உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் பங்கேற்கின்றன.
கடந்த அக்டோபர் மாதம் நடந்த வீரர்கள் ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை கழற்றி விட்டு விட்டு, தேவையான வீரர்களை விலைக்கு வாங்கியதுடன் அணியை வலுவாக தயார்படுத்தி களம் இறங்குகிறது.
இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றை எட்டும். லீக்கில் டாப்-2 இடங்களை கைப்பற்றும் அணிகள் நேரடியாக அரைஇறுதிக்கு முன்னேறும். 3 முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
கடந்த ஆண்டு 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழைந்து வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் தோற்று அரைஇறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த தமிழ் தலைவாஸ் அணி சாகர் தலைமையில் களம் காண்கிறது. எல்லா அணிகளின் சொந்த ஊரிலும் போட்டி அரங்கேறுவதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
தொடக்க நாளான இன்று 2 லீக் ஆட்டங்கள் நடக்கிறது. தொடக்க ஆட்டத்தில் பசெல் அட்ராசலி தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ், பவன் ஷெராவத் தலைமையிலான தெலுங்கு டைட்டன்சுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் சுரிந்தர் சிங் தலைமையிலான யு மும்பா-பர்தீப் நர்வால் தலைமையிலான உ.பி.யோத்தாஸ் (இரவு 9 மணி) அணிகள் சந்திக்கின்றன.
இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.