என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puducherry CM"

    • அமாவாசையையொட்டி திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபட்டு, புதுவை முதலமைச்சர் ரங்கசாமி விருந்தினர் தங்குமிடத்திற்கு வந்தார்.
    • விடுதிக்கு வெளியே துப்பாக்கி ஏந்தி நின்றிருந்த தமிழக போலீசார் முதலமைச்சர் ரங்கசாமிக்கு துப்பாக்கியுடன் மரியாதை செலுத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை முதலமைச்சர் ரங்கசாமி முருக பக்தர். அவர் அடிக்கடி திருச்செந்தூர் கோவிலுக்கு செல்வது வழக்கம்.

    அமாவாசையையொட்டி திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபட்டு விருந்தினர் தங்குமிடத்திற்கு வந்தார். மேல் சட்டையின்றி துண்டு மட்டும் அணிந்து இருந்த நிலையில் விடுதிக்கு வெளியே துப்பாக்கி ஏந்தி நின்றிருந்த தமிழக போலீசார் முதலமைச்சர் ரங்கசாமிக்கு துப்பாக்கியுடன் மரியாதை செலுத்தினர்.

    இதை ஏற்கும் வகையில் அவர்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி பதில் வணக்கம் செலுத்தினார். மேல் சட்டையின்றி துண்டு-வேட்டியுடன் முதல்வர் போலீஸ் மரியாதை ஏற்ற வீடியோ எளிமையான போலீஸ் மரியாதை என குறிப்பிட்டு வைரலாகி வருகிறது.

    • மழை 3 மணி நேரம் பெய்யாமல் இருந்தால் தண்ணீர் வடிந்துவிடும்.
    • தேங்கி உள்ள தண்ணீரை மோட்டார் வைத்து எடுத்து வருகிறோம்.

    புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்கனவே முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். இப்போதும் எடுத்து வருகிறோம். 1971-ம் ஆண்டில் 31 செ.மீ. மழை பெய்தது. அதுதான் அதிகபட்சமான மழை. தற்போது 50 செ.மீ. மழை பெய்துள்ளது. இதுதான் அதிகபட்சமான மழை. எதிர்பார்க்காத மழை.

    எல்லா வாய்க்காலிலும் தண்ணீர் நிரம்பி வழிகிறது. அமாவாசை என்பதால் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. கடல் சீற்றமாக இருந்ததால் மழைநீரை கடல் உள்வாங்கவில்லை. கடல் நீரை உள்வாங்காததால் வாய்க்கால் நிறைந்து தண்ணீர் ஊருக்குள் வந்தது. எல்லா பகுதிகளிலும் மழை அதிகமாக இருந்தது.

    மழை 3 மணி நேரம் பெய்யாமல் இருந்தால் தண்ணீர் வடிந்துவிடும். தேங்கி உள்ள தண்ணீரை மோட்டார் வைத்து எடுத்து வருகிறோம். பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவுகள் கொடுத்து வருகிறோம்.

    மக்களை வெளியே வர வேண்டாம் என்று காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். மக்கள் காவல் துறையினர் சொல்வதை கேட்டு வீட்டில் தங்கி இருக்க வேண்டும்.

    நடேசன் நகர், உப்பளம் வழியாக ஆய்வு மேற்கொண்டுள்ளேன். எல்லா துறையினரும் வேலை செய்து வருகிறார்கள். தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

    • புதுச்சேரியில் ஆண்டு சராசரி மழையளவு 1,399 மி.மீ.. ஆனால் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 1688.8 மி.மீ மழை பெய்துள்ளது.
    • புதுச்சேரி அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்புகிறது.

    ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரியில் ஏற்பட்ட மழை பாதிப்புகளை சரிசெய்ய ரூ.600 கோடி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சூறாவளி புயலின் போது ஏறத்தாழ 500 மரங்கள் மற்றும் 1,596 மின் கம்பங்கள் விழுந்து சேதமடைந்தன. மேலும் 2,15,750 ஏ.சி.எஸ்.ஆர் கண்டெக்டர்கள், 53 எண்ணிக்கையிலான ஆற்றல் திறன் கொண்ட மின்மாற்றிகள் மற்றும் 52 பள்ளிகள்/கல்லூரிகள் கட்டிடங்கள் சேதமடைந்தன.

    புதுச்சேரியில் ஆண்டு சராசரி மழையளவு 1,399 மி.மீ.. ஆனால் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 1688.8 மி.மீ மழை பெய்துள்ளது. சுமார் 1,50,000 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிம்மதிப் பெருமூச்சுவிடுவது அவசியம் என்று கருதுவதால், இந்த அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்புகிறது. இந்த நிர்வாகத்தின் அந்தந்தத் துறைகள், கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களைத் துறை வாரியாக கீழ்க்கண்டவாறு தற்காலிக மதிப்பீட்டை மேற்கொண்டுள்ளன. 

    முதற்கட்டமாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகள் மற்றும் உதவிகளை வழங்குவதற்காக ரூ.600 கோடி விடுவிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் உட்பட 10 பேரை கைது செய்துள்ளனர்.
    • சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை படகுடன் விடுவிக்க முன்னுரிமை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் உட்பட 10 பேரை கைது செய்துள்ளனர்.

    இவர்களை மீட்கக்கோரி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    நாகையிலிருந்து மீன்பிடிக்க காரைக்கால் மாவட்டம் கீழ்காசாக்குடி அன்பழகன், 15 வயது சிறுவன், காரைக்கால்மேடு பாண்டியன், வேலாயுதம், மயிலாடுதுறை மாவட்டம் கலைமணி, தங்கதுரை, செல்வகுமார், ரமேஷ், 16 வயது சிறுவன், நாகை ராஜசேகர் ஆகிய 10 மீனவர்கள் சென்றிருந்தனர்.

    அவர்கள் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கடந்த 8-ந் தேதி இரவு 11.30 மணிக்கு விசைப்படகுடன் கைது செய்யப்பட்டனர்.

    சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை படகுடன் விடுவிக்க முன்னுரிமை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
    • மீனவர்களை சிறை பிடித்தபோது 2 மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    தமிழகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லைதாண்டி மீன் பிடிப்பதாக கூறி சிறைபிடிக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. குறிப்பாக வேதாரண்யம், ராமேசுவரம் மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் காரைக்கால் மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்த சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது.

    காரைக்கால் கிளிஞ்சல்மேடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தவேலு. இவருக்கு சொந்தமான படகில் 13 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கியை காட்டி மிரட்டி காரைக்கால் மீனவர்கள் 13 பேரையும் சிறை பிடித்தனர். அவர்களின் படகு, வலைகளையும் பறிமுதல் செய்தனர்.

    மீனவர்களை சிறை பிடித்தபோது 2 மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 மீனவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் யாழ்பாணம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் காரைக்கால் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

    • எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக 13 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.
    • அப்போது இரண்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் இன்று அதிகாலை காரைக்கால் கிளிஞ்சல்மேடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தவேலு. இவருக்கு சொந்தமான படகில் 13 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கியை காட்டி மிரட்டி காரைக்கால் மீனவர்கள் 13 பேரையும் சிறை பிடித்தனர். அவர்களின் படகு, வலைகளையும் பறிமுதல் செய்தனர்.

    மீனவர்களை சிறைப்பிடித்த போது 2 மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடுநடத்தினர். இதில் 2 மீனவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் யாழ்பாணம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

    இந்த நிலையில் இந்தியாவில் உள்ள இலங்கை தூதரக தூதரை அழைத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், மீனவர்கள் மீது துப்பாக்கிக்சூடு நடத்தப்பட்டதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் மூலமாகவும் இலங்கை அரசிடம் கண்டனம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    எல்லைத் தாண்டி மீன்பிடிப்பதாக இலங்கை ராணுவம் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களை அடிக்கடி கைது செய்து வருகிறது. ஆனால் நீண்ட காலத்திற்குப் பிறகு தற்போது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. அதுவும் இலங்கை அதிபராக அனுர குமார திஷநாயகே பதிவு ஏற்ற பிறகு நடைபெறம் முதல் துப்பாக்கிச்சூடு சம்பவம் இதுவாகும்.

    • கடந்த ஆட்சியில் அரசு பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது.
    • காமராஜரின் எண்ணங்களை, செயல்பாடுகளை கருத்தாக கொண்டு செயல்படுவோம்.

    புதுச்சேரி:

    யூனியன் பிரதேசமான புதுவையில் கடந்த 2011-ம் ஆண்டு காங்கிரசிலிருந்து விலகிய ரங்கசாமி, பிப்ரவரி 7-ந் தேதி என்.ஆர்.காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார்.

    என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 15-ம் ஆண்டு விழா இன்று கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.

    முதலமைச்சர் ரங்கசாமி அலுவலக வாசலில் உள்ள கொடிக்கம்பத்தில் கட்சி கொடியேற்றி கட்சி அலுவலகத்தில் உள்ள சாமி படங்களுக்கு பூஜை செய்தார்.

    தொடர்ந்து கூடியிருந்த தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

    கடந்த ஆட்சியில் அரசு பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. இதனால் அரசு பணிகளே நடைபெறாத சூழ்நிலை இருந்தது. எமது அரசு பொறுப்பேற்றது முதல் காலி பணியிடங்களை தொடர்ந்து நிரப்பி வருகிறோம். அரசின் அனைத்து துறையிலும் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மீதமுள்ள காலிபணியிடங்களையும் நிரப்புவோம்.

    ஆளும்கட்சி, எதிர்கட்சி என எம்.எல்.ஏ.க்களில் வேறுபாடும், வித்தியாசமும் பார்க்காமல், மாநில வளர்ச்சியை குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறோம்.

    கட்சி அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது 11 தொகுதிகளுக்கு நிர்வாகிகள் நியமித்துள்ளோம். மீதமுள்ள தொகுதிகளுக்கும் விரைவில் நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள்.

    என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தமிழகத்திலும் கால் பதிக்க வேண்டும் என பலதரப்பிலும் கோரிக்கை இருந்து வருகிறது. தமிழகத்திலும் காமராஜர் கொள்கையை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இதனால் வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழக தொகுதிகளிலும் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும்.

    காமராஜரின் எண்ணங்களை, செயல்பாடுகளை கருத்தாக கொண்டு செயல்படுவோம். 2026 சட்டமன்ற தேர்தலிலும் நாம் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். மக்களோடு இணைந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் செயல்பட வேண்டும். மக்களின் குறைகளை கேட்டு அதை நிவர்த்தி செய்யுங்கள். அரசிடமும் தெரிவியுங்கள், அரசு அதை நிறைவேற்றும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை தொடங்கும்போதே தமிழகத்திலும் கட்சியை வளர்த்து பணியாற்ற வேண்டும் என்று எண்ணம் இருந்தது.
    • தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து கட்சியில் இணைவதற்காக கேட்டு வருகின்றனர்.

    புதுச்சேரி:

    கடந்த 7-ந்தேதி நடந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 15-ம் ஆண்டு விழாவில் கட்சியின் நிறுவனரும், புதுச்சேரி முதலமைச்சருமான ரங்கசாமி பேசும்போது, கட்சியை தமிழக பகுதிக்கும் விரிவுபடுத்தி நிர்வாகிகளை நியமித்து வரும் சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி கட்சியினருடன் போட்டியிட தயாராகி வருவதாக அறிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பரத்குமார் என்பவரின் தலைமையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி கோரி மேட்டில் உள்ள அப்பா பைத்திய சுவாமி கோவிலில் முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் என்.ஆர். காங்கிரசில் இணைந்தனர்.

    அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை தொடங்கும்போதே தமிழகத்திலும் கட்சியை வளர்த்து பணியாற்ற வேண்டும் என்று எண்ணம் இருந்தது. அந்த நேரத்தில் பல தலைவர்கள் என்னிடம் வந்தனர். நான் யாரிடமும் செல்லாமல், அ.தி.மு.க., கூட்டணியுடன் புதுச்சேரியில் ஆட்சி அமைத்தேன். தற்போது கூட்டணியுடன் ஆட்சி நடத்தி வருகிறேன்.

    நான் தமிழகப் பகுதிகளுக்கு செல்லும்போது, அப்பகுதி மக்கள் மற்றும் எனது நண்பர்கள் தமிழகத்திலும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    அவர்களுக்கு பணியாற்ற வாய்ப்பு அளிக்கும் விதத்தில் வருகிற 2026-ம் ஆண்டு தேர்தலில் தமிழ கத்தில் கூட்டணி கட்சிகளின் செயல்பாடுகளை பொறுத்து போட்டியிடலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து கட்சியில் இணைவதற்காக கேட்டு வருகின்றனர். அதில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் முதலில் இணைந்துள்ளனர். புஸ்சி ஆனந்த் மற்றும் விஜய் எனது நண்பர்கள். அதனால் சந்திக்கின்றனர். தேர்தல் நேரத்தில் கூட்டணி கட்சிகள் பற்றி முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    புதுச்சேரியில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தொடங்கிய 15 ஆண்டில் 2 முறை காங்கிரஸ்-தி.மு.க., கூட்டணியை எதிர்த்து வெற்றி பெற்று முதலமைச்சர் ரங்கசாமி, தற்போது, தமிழகத்திலும் கட்சியை விரிவுபடுத்த தீவிரம் காட்டி வருவது புதுச்சேரி மற்றும் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மாநில அரசு அனுமதியின்றி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்கினால் தடுத்து நிறுத்துவோம் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறி உள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேரு நினைவுநாள் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    நாடு சுதந்திரமடைந்தவுடன் நேரு கையில் நாடு இருந்தால்தான் வளர்ச்சியும், பாதுகாப்பும் கிடைக்கும் என காந்தி நாட்டை ஒப்படைத்தார். சுதந்திரத்திற்கு பிறகு நாட்டின் வளர்ச்சிக்கு நேரு முக்கியத்துவம் அளித்தார்.

    பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, அணைகள், மின்நிலையம், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றை கொண்டுவந்தார்.

    பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கு முன்னதாக ஊடகங்களும், பத்திரிகைகளும் காங்கிரஸ் கட்சியை பற்றி பலவிதமான செய்திகளையும், தகவல்களையும் வெளியிட்டனர். தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட ஆட்களே இல்லை. யாரும் முன்வரவில்லை. பலமான எதிரணி என்பதால் வெற்றி அவர்களுக்குத்தான் என கூறினர்.

    ஆனால் அதை பொருட்படுத்தாமல் சபாநாயகராக இருந்த வைத்திலிங்கத்திற்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என தேர்தலில் நிறுத்தினோம். அவரும் பாராளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற கனவோடு இருந்தார். இதற்காக வேறு ஒரு வேட்பாளரை தயார் செய்த பின்னர் கட்சித்தலைமைக்கு விருப்பத்தை தெரிவித்து வேட்பாளராகினார்.

    காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள், நிர்வாகிகள் இரவு, பகலாக பாடுபட்டீர்கள். ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்தீர்கள். ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வைத்திலிங்கம் வெற்றி பெறுவார் என கூறி வந்தேன். ஆனால் அவர் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    அதோடு மட்டுமின்றி புதுவையில் உள்ள 29 சட்டமன்ற தொகுதிகளில் கூடுதலாக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது. இது புதுவை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கும், அரசுக்கும் கொடுத்துள்ள அங்கீகாரம். இந்த வெற்றிக்கு 6 நாள் போராட்டமும், போராட்டத்திற்கு காரணமானவர்களும் ஒரு காரணம்தான்.

    வெற்றிக்கு உழைத்த தொண்டர்கள், நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் என அனைத்து தரப்பினருக்கும் தலைவணங்குகிறேன். மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. மீதமுள்ள காலத்தில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய பணியும், பொறுப்பும் நமக்கு உள்ளது. அதோடு தொண்டர்களின் பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டும். இதை நன்றிக் கடனாக செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.



    மோடி 2-வது முறை பிரதமராக வெற்றி பெற்றவுடன் பாகுபாடின்றி அனைத்து மாநில வளர்ச்சிக்கும் பாடுபடுவேன் என கூறியுள்ளார். மக்கள் நல திட்டங்களை அனைத்து மாநிலங்களுக்கும் நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    இதனால் அவரை சந்தித்து புதுவைக்கு தேவையான நிதி, திட்டங்களை கேட்டுப்பெறவுள்ளோம். மோடியின் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு வந்தால் அமைச்சரவை பங்கேற்கும்.

    புதுவை, காரைக்கால் பகுதியில் எரிபொருள் எடுக்க ஆய்வு மையம் அமைக்க வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் புதுவை அரசு எந்தவித அனுமதியும் அளிக்கவில்லை.

    மத்திய அரசு அனுமதி அளித்தாலும், மாநில அரசின் அனுமதி இல்லாமல் எந்த பணியையும் செய்ய இயலாது. எங்கள் அனுமதியின்றி பணியை தொடங்கினால் அதை தடுத்து நிறுத்துவோம். இதை சட்டமன்றத்திலும் நான் உறுதியளித்துள்ளேன். புதுவைக்கு தேவையான நல்ல திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு கொடுக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    அதர்மம் தழைப்பதுபோல் தெரிந்தாலும் இறுதியில் தர்மமே வெல்லும் என்று புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவையில் கம்பன் விழா நேற்று 3-வது நாளாக நடந்தது. விழாவில் நடந்த பாராட்டரங்கம் நிகழ்ச்சிக்கு துணை சபாநாயகர் சிவக்கொழுந்து முன்னிலை வகித்தார். பின்னணி பாடகி பி.சுசீலாவை பாராட்டி முதல்-அமைச்சர் நாராயணசாமி நினைவு பரிசு வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    பிரபல பாடகியான பி.சுசீலா பாடலை கேட்கும்போது நாம் மெய்மறப்போம். அவருக்கு இப்போது நாம் பாராட்டு செய்கிறோம். விதி என்பது எல்லோரையும் விடுவதில்லை. என்னையும் விடுவதில்லை. விதியிடம் சிக்காதவர்கள் யாரும் இல்லை. இருந்தாலும் அதை சிறிது சிறிதாக மதியால் வெல்லுகிறோம்.

    அறம் எப்போதுமே வெல்லும். இடையில் அதர்மம் தழைப்பதுபோல் தெரியும். இறுதியில் தர்மமே வெல்லும். இதைத்தான் நான் எனது சொந்த வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் பார்த்துள்ளேன். அறவாழ்க்கை வாழ்ந்தால்தான் எப்போதும் வெற்றிபெற முடியும். இதைத்தான் கம்பராமாயணமும் சொல்கிறது. புதுவையில் எந்த அரசாக இருந்தாலும் புலவர்கள், எழுத்தாளர்களை கவுரவித்து வருகிறோம்.

    இப்போது நமது கலாசாரம் மாறி வருகிறது. நாம் நமது மொழி, கலாசாரத்தை காக்கவேண்டும். நான் வெளிநாட்டில் வாழும் தமிழர்களை சந்திக்கும்போது அவர்கள் தங்கள் குழந்தைகளை தமிழகம் அல்லது புதுச்சேரியில்தான் படிக்க வைக்க விரும்புகின்றனர்.



    பின்னணி பாடகி சுசீலா பெருமை மிக்கவர். அவர் 25 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். அவர்களது பாட்டுகளை கேட்பதால் நமது குழப்பங்கள் போகிறது. நோய்களுக்கான சிகிச்சையில் இசை முக்கிய இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவில் மியூசிக் தெரபி என்ற முறையை ஆரம்பித்து உள்ளனர்.

    அதேபோன்ற ஒரு மையத்தை புதுவையில் அமைக்க இசையமைப்பாளர் இளையராஜா புதுவை அரசை அணுகினார். அதற்கு தேவையான நிலத்தை தரவும் புதுவை அரசு தயாராக உள்ளது.

    இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

    விழாவில் அமைச்சர்கள் கந்தசாமி, ‌ஷாஜகான், செல்வகணபதி எம்.எல்.ஏ. மற்றும் கம்பன் கழக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
    புதுச்சேரியில் ஆளுநருக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி நடத்தும் தர்ணா போராட்டம் 3வது நாளாக நீடிக்கும் நிலையில், மாநிலத்திற்கு இடைக்கால நிர்வாகியை நியமிக்க வேண்டும் என சபாநாயகர் கேட்டுக்கொண்டுள்ளார். #PuducheryCMDharna #KiranBedi
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கிரண்பேடி கவர்னராக பொறுப்பேற்றதில் இருந்து அவருக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கும் இடையிலான பனிப்போர் இப்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டத்தை போலீசார் அமல்படுத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    ஹெல்மெட் விவகாரம் பெரும் கொந்தளிப்பு ஏற்படுத்தியதை அறிந்த முதல் அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். நாராயணசாமி தலைமையில் 3வது நாளாக இன்றும் தர்ணா போராட்டம் நீடிக்கிறது. போராட்டம் ஒருபுறம் நடைபெற்றாலும், இதனை கண்டுகொள்ளாமல் புதுச்சேரியில் இருந்து புறப்பட்ட கவர்னர் கிரண்பேடி, டெல்லி சென்றார்.



    அதேசமயம், ஆளுநர் மாளிகை வளாகம் போராட்டக்களமாக மாறியிருப்பதால், அதிவிரைவு அதிரடிப்படை, துணை ராணுவம் மற்றும் தொழில் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிற்கு அவசர கடிதம் அனுப்பி உள்ளார். புதுச்சேரியில் தற்போது அசாதாரண சூழல் நிலவுவதால் இடைக்கால நிர்வாகியை நியமிக்கவேண்டும் என சபாநாயகர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  #PuducheryCMDharna #KiranBedi
    புதுவை அரியாங்குப்பம் அருகே நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த கருநாக பாம்பை பிடிக்க முதல்-அமைச்சர் நாராயணசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சம்பவம் நடந்துள்ளது. #Narayanasamy
    பாகூர்:

    அரியாங்குப்பம் அருகே உள்ள மணவெளியை சேர்ந்தவர் ராஜா. வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு வசந்த் (வயது 19) என்ற மகனும், சந்தியா (17) மகளும் உள்ளனர்.

    நேற்று இரவு ராஜா வெளியே சென்றிருந்தார். விஜயா தனது குழந்தைகளுடன் வீட்டில் படுத்திருந்தார். நள்ளிரவு 1 மணி அளவில் வீட்டுக்குள் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டது. எனவே விஜயா எழுந்து விளக்கை போட்டு பார்த்தார்.

    அப்போது அங்கே 5 அடி நீளம் கொண்ட கருப்பு நிற பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் தாயும், குழந்தைகளும் தவித்தனர். அக்கம் பக்கத்தினரையும் உதவிக்கு அழைக்க முடியவில்லை.

    இதனால் அவசர போலீஸ் 100 எண்ணுக்கு போன் செய்து உதவி கேட்டனர். அவர்கள் வனத்துறை போன் எண்ணை கொடுத்து அங்கு பேசும்படி கூறினார்கள். அதன்படி வனத்துறை அலுவலகத்துக்கு போன் செய்தனர். ஆனால் யாரும் போனை எடுக்கவில்லை. நீண்ட நேரம் முயற்சித்தும் எந்த பலனும் இல்லை.

    அந்த நேரத்தில் பாம்பு அவர்களை பார்த்து சீறிக் கொண்டிருந்தது. இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவானது. அப்போது வசந்த் அவர்கள் வீட்டில் உள்ள ஒரு அரசு டைரியை எடுத்து அதில் உள்ள போன் நம்பரை தொடர்பு கொண்டு உதவி கேட்கலாம் என்று முடிவு செய்தார்.

    டைரியை திறந்தவுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமியின் போன் எண் அதில் இருந்தது. உடனே நாராயணசாமிக்கு போன் செய்தார். இரவு தூக்கத்தில் இருந்த நாராயணசாமி போனை எடுத்து பேசினார். அப்போது வசந்த் எங்கள் வீட்டில் பாம்பு நுழைந்துவிட்டது. அதை பிடிப்பதற்கு போலீஸ் மற்றும் வனத்துறை உதவியை நாடினோம். யாரும் உதவ முன்வரவில்லை என்று கூறினார்.


    உடனே நாராயணசாமி யாரும் பயப்படாதீர்கள். பாம்பை பிடிக்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறினார். நாராயணசாமி வனத்துறை அதிகாரிகளுக்கு போன் செய்தார். உடனடியாக அங்கு ஆட்களை அனுப்பி பாம்பை பிடிக்க ஏற்பாடு செய்யும்படி கூறினார்.

    அதன்படி விடுமுறையில் இருந்த 2 ஊழியர்களை இரவோடு இரவாக எழுப்பி அங்கு அனுப்பி வைத்தனர். கோபி, தாமரைச்செல்வன் ஆகிய ஊழியர்கள் அந்த வீட்டுக்குள் சென்று பதுங்கி இருந்த பாம்பை பிடித்தனர். அது கருநாகப் பாம்பு ஆகும். கடுமையான வி‌ஷத்தன்மை கொண்டது. பாம்பு பிடிபட்ட பிறகு தான் அவர்கள் நிம்மதியாக தூங்கினார்கள்.

    இன்று காலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி அந்த வீட்டுக்கு மீண்டும் போன் செய்து விசாரித்தார். அப்போது அந்த பகுதியில் இருக்கும் புதரால் அடிக்கடி பாம்பு நடமாட்டம் இருப்பதாக கூறினார்கள். அவற்றை அகற்றுவதற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று நாராயணசாமி உறுதி அளித்தார்.

    அதன்பின்னர் நாராயணசாமி, தொகுதி எம்.எல்.ஏ. அனந்தராமனிடம் தகவல் தெரிவித்து நேரில் சென்று பார்த்து நடவடிக்கை எடுக்கும்படி கூறினார். இதனால் அனந்தராமன் இன்று காலை அங்கு சென்று அங்குள்ள புதர்களை பார்வையிட்டார். அவற்றை அகற்றுவதற்கு உரிய ஏற்பாடு செய்வதாக கூறினார்.  #Narayanasamy
    ×