என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pudukottai"

    • இளநிலை மற்றும் முதுநிலை பருவ எழுத்து தேர்வுகள் ஒத்திவைப்பு.
    • திருச்சி லால்குடியில் 24.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    திருச்சி:

    வங்கக் கடலில் ஃபெங்கல் புயல் உருவானதையடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கன மழை மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

    அதன்படி திருச்சி, கரூர், அரியலூர்,பெரம்பலூர் ,புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் நேற்று காலை முதல் தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

    திருச்சி மாவட்டத்தில் தொடர் மழையினால் திருச்சி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று கலெக்டர் பிரதீப் குமார் விடுமுறை அறிவித்தார். அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் கலெக்டர் ரத்தினசாமி விடுமுறை அளித்தார்.

    இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் கலெக்டர் அருணா விடுமுறை அறிவித்து உள்ளார். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த இளநிலை மற்றும் முதுநிலை பருவ எழுத்து தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இந்த தேர்வுக்கான மறு தேதி பின்னர் அறிவிக்கப் படும் என்று பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் ஜெயபிரகாஷ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

    திருச்சி மாவட்டத்தில் மாநகர் மட்டுமல்லாமல் புறநகர் பகுதிகளிலும் தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் இன்று விடிய விடிய மழை பெய்தது. மாநகரில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இடைவிடாத மழையினால் ஊட்டி போன்ற குளுகுளு சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

    திருச்சியில் அதிக பட்சமாக லால்குடியில் 24.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    மாவட்டத்தின் இதர பகுதிகளான கள்ளக்குடி 18.4, நந்தியாறு அணைக் கட்டு 9.2,புள்ளம்பாடி 21.8, தேவி மங்கலம் 12.4, சமயபுரம் 17,சிறுகுடி 22.2, வாத்தலை அணைக்கட்டு 18.4,மணப்பாறை 6,பொன்னடியாறு அணை 8, கோவில்பட்டி 14.2, மருங்காபுரி 13.4, முசிறி 13, புலிவலம் 4, தாப்பேட்டை 12, நவலூர் கொட்டப்பட்டு 11 ,துவாக்குடி 22.5, கொப்பம்பட்டி 11, தென்பர நாடு 16, துறையூர் 13, பொன்மலை 16.4, திருச்சி ஏர்போர்ட் 18.4, திருச்சி ஜங்ஷன் 17.6, திருச்சி டவுன் 17.3 என்ற மில்லி மீட்டர் அளவில் மழை பதிவானது.

    அரியலூர் மாவட்டத்தில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அரியலூர் புதுமார்க்கெட் தெரு, ரயில் நிலையம், காந்தி சந்தை, வெள்ளாளத் தெரு, பெரம்பலூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து சென்றது. பிற்பகலிலேயே பெரம்ப லூர் தஞ்சாவூர் சாலையில் முகப்பு விளக்கு எரிய விட்டவாறு வாகனங்கள் சென்றன.

    ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், கீழப்பழுவூர், திருமானூர், தா.பழூர், ஆண்டிமடம், மீன்சுருட்டி, செந்துறை, பொன்பரப்பி, தளவாய் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.

    இந்த மழையால் மாவட்ட முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

    பெரும்பாலன பகுதி களில் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டது. மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லிமீட்டரில்) வருமாறு:-

    அரியலூர்-27 , திருமானூர்-31 , ஜெயங்கொண்டம்-50, செந்துறை-27.8, ஆண்டிமடம்-16.8, குருவாடி-27, தா.பழுர்-23.2, சுத்தமல்லி டேம்-45.

    அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 247.8 மி.மீ.மழை பெய்துள்ளது. இதன் சராசரி 30.97 மி.மீட்டர் ஆகும். இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருந்தது. காலையிலும் மழை பெய்து வருகிறது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று காலை முதல் விடிய விடிய மழை பெய்தது சில இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. மாவட்டத்தில் அதிகபட்ச மாக அயன்குடி பகுதியில் 57.40 மில்லி மீட்டர் மழை பதிவானது இதர பகுதி களான கந்தர்வகோட்டை 23.40 , கறம்பக்குடி 41.20 ,மலையூர் 30.20, கிளநிலை 14.60, திருமயம் 12.30, அரிமளம் 21.60,

    அறந்தாங்கி 32, நகுடி 39 . 40, மீமிசல 18.40, ஆவுடையார் கோவில் 19 .80,மணமேல்குடி 20, இலுப்பூர் 8 குடுமியான்மலை 14 அன்ன வாசல் 5.40 விராலிமலை 3 உடையாளிப்பட்டி 9 கீரனூர் 16.80 பொன்னம ராவதி 8 ,புள்ளி 20 ,கரையூர் 9.20 என மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 489. 70 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது. இது சராசரி மழை அளவு 20.40 ஆகும்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முதல் தொடர் மிதமான மழை பெய்து வருகிறது. இன்று இரண்டாவது நாளாக இங்கு மழை நீடித்துள்ளது மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 178 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    அதன்படி பெரம்பலூர் 11, இறையூர் 17, கிருஷ்ணாபுரம் 16, வி களத்தூர் 15 , தழுதலை 25, வேப்பந்தட்டை 27, அகரம் சீ கூர்17, லப்பை குடிக்காடு 13 புது வெட்டக்குடி 17 பாடாலூர் 13, செட்டிகுளம் 5 என மில்லி மீட்டர் அளவில் மழை பதிவாகியுள்ளது.

    கரூர் மாவட்டத்தில் நேற்று முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று 99.5 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    • படித்துறை பகுதிக்கு சென்று பறவைகள் பூங்காவை திறந்து வைத்து பார்வையிடுகிறார்.
    • பூங்காவில் செயற்கையான அருவிகள் போன்ற அமைப்பும் உள்ளது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையிலும், திருச்சி மக்கள் மற்றும் குழந்தைகள் பொழுதுப்போக்கும் வகையிலும் திருச்சி கரூர் சாலை கம்பரசம்பேட்டையில் அய்யாளம்மன் படித்துறை அருகே பறவைகள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பறவைகள் பூங்கா திருச்சி மாநகராட்சி சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.13.70 கோடி ரூபாய் செலவில் சுமார் 6 ஏக்கர் நிலப்பரப்பில் மிகவும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

    இதன் திறப்பு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெறுகிறது. பறவைகள் பூங்காவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    இதற்காக அவர் இன்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகிறார். அவருக்கு திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    இதை தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.

    பின்னர் அய்யாளம்மன் படித்துறை பகுதிக்கு சென்று பறவைகள் பூங்காவை திறந்து வைத்து பார்வையிடுகிறார். விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கலெக்டர் பிரதீப்குமார், பழனியாண்டி எம்.எல்.ஏ. மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர்.

    இந்த பூங்காவில் செயற்கையான அருவிகள் போன்ற அமைப்பும் உள்ளது. இந்த பூங்காவில் அரிய வகையிலான பறவைகள் வளர்க்கப்பட இருக்கின்றன. இதுமட்டு மல்லாமல் குழந்தைகள் தெரிந்து கொள்ள 5 வகையான நிலங்கள் அதாவது குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் மற்றும் பாலை போன்ற அமைப்புகளும் செயற்கையாக அமைக்கப்பட்டுள்ளது.

    இதனை குழந்தைகளுக்கு புரியும் வகையில், மலைகள், காடுகள், கடற்கரை, சமவெளி மற்றும் பாலை வனம் போன்ற இடங்கள் தத்ரூபமாக அமைக்கப்பட்டு உள்ளது.

    புல்வெளிகள், சிற்பங்கள், நீருற்றுகள், என பல அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த பூங்கா உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும், கூடுதலாக மினி தியேட்டர் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

    இதில் 50 பேர் உட்காரும் வகையில் அறிவியல் பூர்வ படங்கள் திரையிடப்படும். சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த பறவைகள் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளன.

    பின்னர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கார் மூலம் புதுக்கோட்டை செல்கிறார்.

    புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதியின் மகன் கணேஷ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    • 17 வயது சிறுமிக்கு திருமணம் நடந்த விவகாரத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு.
    • திருமணமான சிறுமி, 2 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்துள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே வடக்கு காட்டுப்பட்டி பகுதியில் 17 வயது சிறுமிக்கு திருமணம் நடந்த விவகாரத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சமூகநலத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அந்த சிறுமி, 2 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது

    இந்த விவகாரம் தொடர்பாக திருப்பதி (21), மூக்கன் (60), ராணி (50), முத்து (62) ஆகிய நால்வர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி விடுமுறை.
    • விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, 15-ஆம் தேதி வேலை நாளாக அறிவிப்பு.

    திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி வரும் 10-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    10-ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, 15-ஆம் தேதி வேலை நாளாக அறிவித்து புதுக்கோட்டை ஆட்சியர் அறிவித்துள்ளார்.

    10-ஆம் தேதி நடைபெறும் அரசு பொதுத்தேர்வுகள் வழக்கம்போரல் நடைபெறும் எனவும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

    தற்போது 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், இன்று 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது.

    • மருத்துவரின் வீட்டிற்கு அருகில் உள்ள 4 வீடுகளின் பூட்டை உடைத்து 10 சவரன் நகைகள் திருடப்பட்டுள்ளன.
    • மாவட்ட கண்காணிபாளர் வந்திதா பாண்டே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் அடுத்தடுத்த வீடுகளில் மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். அரசு மருத்துவரின் வீட்டில் பூட்டை உடைத்து 200 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. மருத்துவரின் வீட்டிற்கு அருகில் உள்ள 4 வீடுகளின் பூட்டையும் உடைத்து 10 சவரன் நகைகள் திருடப்பட்டுள்ளன. அங்கிருந்த 2 மோட்டார் சைக்கிள்களையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மாவட்ட கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கொள்ளை நடந்த வீடுகளில் பதிவாகியிருந்த ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மருத்துவரின் வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை காவல்துறை ஆய்வு செய்கின்றனர்.

    இந்த கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்வதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றப்பிரிவு போலீசார் அடங்கிய ஒரு தனிப்படையும், அன்னவாசல் இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒரு தனிப்படையும், இலுப்பூர் இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த தனிப்படை போலீசார், அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    திருச்சி, புதுக்கோட்டை, கரூரில் பறக்கும் படையினர் சோதனையில் ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #ParliamentElection
    குளித்தலை:

    பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதையடுத்து கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கீழகுறப்பாளையத்தில் உள்ள திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் படை அதிகாரி ஜெயபிரகாஷ் தலைமையில், சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் தேர்தல் பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது திருச்சியில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் அதில் வெளிநாட்டு பணம் 36 யூரோ நோட்டுகள் இருந்தது (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்து 832) கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாதால் காரில் வந்த தம்பதியிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், காரில் வந்தவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அலஞ்சோ (வயது 35) என்பதும், இலங்கையை பூர்வீகமாக கொண்ட இவர் தற்போது பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. தற்போது வெளிநாட்டில் இருந்து தமிழகத்துக்கு வந்திருக்கும் அலஞ்சோ தனது மனைவி மற்றும் குழந்தையுடன் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து விட்டு, ஈரோடு மாவட்டம், காங்கேயத்தில் உள்ள தேவாலயத்திற்கு சென்று கொண்டிருந்தது தெரியவந்தது.

    வெளிநாட்டு பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து குளித்தலை கோட்டாட்சியரும், உதவி தேர்தல் அலுவலருமான லியாகத்திடம் ஒப்படைத்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு பணத்திற்கு உரிய ஆவணங்களை ஒப்படைத்தால் அவற்றை திருப்பி ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருச்சி குழுமணி சாலை லிங்கநகர் சோதனைச்சாவடியில் பறக்கும் படையை சேர்ந்த தாசில்தார் வசந்தா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் திருக்குமரன் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஏகிரிமங்கலம் என்ற இடத்தில் வந்த ஒரு காரை மறித்து சோதனையிட்டனர். அந்த காரில் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ், அவரது மனைவி பிரசன்ன குமாரி ஆகியோர் இருந்தனர். அவர்கள் ரூ.1 லட்சம் வைத்து இருந்தனர். அந்த பணத்திற்கு உரிய ஆவணங்களை அவர்கள் சமர்ப்பிக்காததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை திருச்சி மேற்கு தாசில்தார் ராஜவேலுவிடம் ஒப்படைத்தனர்.

    சுந்தர்ராஜ்-பிரசன்னகுமாரி தம்பதி, அதிகாரிகளிடம் தங்களுடைய மகளுக்கு வருகிற 31-ந்தேதி காதணி விழா நடத்த இருப்பதால் துணிமணிகள் எடுப்பதற்காக இந்த பணத்தை கொண்டு செல்வதாக கூறினர். காதணி விழா அழைப்பிதழையும் அதிகாரிகளிடம் காட்டினர். ஆனாலும் அதிகாரிகள் பறிமுதல் செய்த பணத்தை திரும்ப வழங்கவில்லை. இதனால் அந்த தம்பதியினர் காதணி விழாவுக்காக வைத்திருந்த பணத்தையும் பறிமுதல் செய்து விட்டார்களே? என்ற வேதனையுடன் புலம்பியபடி சென்றனர்.

    இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், சொந்த காரணங்களுக்காக பணத்தை எடுத்து செல்பவர்கள் அந்த பணம் எங்கிருந்து வந்தது என்பதற்கான ஆதாரங்களை கையில் வைத்து இருக்க வேண்டும். அப்படி வைத்து இருந்தால் தான் பணம் பறிமுதல் நடவடிக்கைகளில் இருந்து தப்ப முடியும் என்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கூழையன்விடுதியில் பறக்கும் படையை சேர்ந்த வட்டார கல்வி அதிகாரி நடராஜன் தலைமையில் போலீசார், அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் ஒரு காரில் இருந்த ஒரு பொருளை, லாரிக்கு மாற்றினர். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டனர். லாரியில் சோதனையிட்டபோது அதில் ரூ.1 லட்சத்து 48 ஆயிரம் இருந்தது. அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நெல் வியாபார பணத்தை வைத்திருந்ததாக லாரி டிரைவர் தெரிவித்தார். இருப்பினும் உரிய ஆவணங்களை ஒப்படைத்து பணத்தை பெற்று செல்லலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். #ParliamentElection


    புதுக்கோட்டை மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் முன்னெடுத்து செல்ல நான் பணியாற்றுவேன் என புதிதாக பொறுப்பெற்று கொண்ட கலெக்டர் உமா மகேஸ்வரி கூறினார்.
    புதுக்கோட்டை:

    தமிழகம் முழுவதும் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு கடந்த 16-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, புதுக்கோட்டை கலெக்டராக பணியாற்றி வந்த கணேஷ் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையராக மாற்றப்பட்டார். தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து புதியதாக நியமனம் செய்யப்பட்டு உள்ள கலெக்டர் உமா மகேஸ்வரி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக பொறுப்பெற்று கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டம் பின் தங்கிய மாவட்டம். விவசாயத்தை மட்டுமே பிரதான தொழிலாக கொண்டு உள்ள மாவட்டம் புதுக்கோட்டை. அரசின் திட்டங்கள் யாவும் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடையும் வகையிலும், பின்தங்கி உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயம் மற்றும் தொழில் சார்ந்து வளர்ச்சி பாதையில் முன்னெடுத்து செல்ல நான் பணியாற்றுவேன்.

    இதேபோல கஜா புயலால் பாதிக்கப்பட்டு இதுவரையில் நிவாரணம் கிடைக்காத மக்களுக்கு, புயல் நிவாரணம் கிடைக்கவும், புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு தேவையான கூடுதல் உதவிகளை அரசிடம் கேட்டு பெறுவதோடு, மக்களின் மறுவாழ்விற்காக திட்டங்களை வகுத்து செயல்படுத்துவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் தாக்கிய பகுதிகளை மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை குழு இன்று மாலை பார்வையிட்டது. #GajaCyclone #CentralCommittee
    புதுக்கோட்டை:

    கடந்த 16-ம் தேதி நாகை அருகே கரையை கடந்த கஜா புயல் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
     
    கடந்த 10 நாட்கள் ஆகியும் மீளாத்துயரில் தவித்து வரும் மேற்கண்ட மாவட்டங்களில் அமைச்சர்கள் முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.

    இதற்கிடையே, புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழு பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்கக் கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தினார். அப்போது புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.15 ஆயிரம் கோடி நிதியுதவியை கோரினார்.



    இதையடுத்து டெல்லியில் இருந்து மத்திய உள்துறை இணைச்செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்திய குழு நேற்று இரவு சென்னை வந்தது. அவர்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்.

    மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை குழுவினர் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்து பின்னர் காரில் புதுக்கோட்டை சென்றனர்.

    புதுக்கோட்டையில் குளத்தூர் பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழு ஆய்வு மேற்கொண்டது. 

    அப்போது துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் விஜயபாஸ்கர், கண்காணிப்பு அலுவலர்கள் சுனில் பாலிவால், சம்பு கல்லோலிகர், மாவட்ட ஆட்சியர் கணேஷ் ஆகியோர் உடனிருந்தனர். #GajaCyclone #CentralCommittee
    கஜா புயல் பாதிப்பு காரணமாக நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. #GajaCyclone #AnnaUniversity
    சென்னை:

    வேதாரண்யம் அருகே கரையை கடந்த கஜா புயல் திருவாரூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களை மோசமாக தாக்கியது. தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    புயல் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.



    இந்நிலையில், கஜா புயல் பாதிப்புகள் காரணமாக நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

    புயல் பாதிப்பை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் தெரிவித்துள்ளார். #GajaCyclone #AnnaUniversity
    நிவாரண பணிகள் இன்னும் நிறைவடையாததால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. #GajaCyclone
    புதுக்கோட்டை:

    கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத அளவில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மறுசீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை.

    மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் அதிகளவில் சாய்ந்துள்ளன. அவற்றை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். #GajaCyclone
    கஜா புயலால் பாதிப்பு அடைந்துள்ள தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டு உள்ளது. #GajaCyclone #TASMACLiquorOutlets
    சென்னை:

    கஜா புயல் நேற்று முன்தினம் அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது. தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் பாதிக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.



    இந்நிலையில், கஜா புயலினால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மதுபான கடைகளை மூடும்படி அரசு உத்தரவிட்டு உள்ளது.

    இதுதொடர்பாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குனர் கிர்லோஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மதுக்கடைகளை மூட வேண்டும். மறு உத்தரவு வரும் வரை மதுக்கடைகளை திறக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. #GajaCyclone #TASMACLiquorOutlets
    புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் குடிநீரின்றி பொதுமக்கள் தவித்து வரும் நிலையில் ஒரு லிட்டர் பால் ரூ.100க்கு விற்கப்பட்டு வருகிறது. #GajaCyclone
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வீடுகளின் மாடியில் வைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டிகள் புயலில் சேதமடைந்ததால் குடிநீரின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இதனை பயன்படுத்தி ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த குடிநீர் பாட்டிலை ரூ.50க்கு வியாபாரிகள் சிலர் விற்பனை செய்து வருகின்றனர். மேலும் ஒரு லிட்டர் பால் ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மின்தடையால் மின்சாதன பொருட்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் உணவுகள் தயார் செய்ய முடியாமல் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பல இடங்களில் பெட்ரோல் பங்க்குகள் திறக்கப்படாததால் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப முடியாமல் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.

    சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைப்பதற்காக நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 700க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் முழுமையாக சீரமைக்க இன்னும் 3 நாட்கள் வரை ஆகும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் என்னசெய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

    கந்தர்வக்கோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள மட்டங்காலில் அரசுக்கு சொந்தமான நுகர்பொருள் வாணிப கிடங்கு உள்ளது. இங்கு 12 மிகப்பெரிய கட்டிடங்களில் 50 ஆயிரம் நெல் மூட்டைகள், பருப்பு, கோதுமை, அரிசி என 12 ஆயிரம் மூட்டைகள் இருந்தன. இவற்றின் மேற்கூரைகள் சிமெண்ட்சீட்டால் அமைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் கஜா புயலால் சீட்கூரைகள் காற்றில் பறந்தன. இதன்மூலம் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள அனைத்து உணவு பொருட்களும் மழையில் நனைந்து சேதமாகின. புயல் பாதிப்பு காரணமாக மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. #GajaCyclone
    ×