என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Punjab"

    • அரவிந்த் கெஜ்ரிவால் மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது.
    • கெஜ்ரிவால் மகளின் திருமணம் ஏப்ரல் 18 ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.

    டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா கெஜ்ரிவால், சம்பவ் ஜெயின் என்பவரை நேற்று திருமணம் செய்தார்.

    இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் தனது மகள் ஹர்ஷிதா கெஜ்ரிவாலின் நிச்சயதார்த்த விழாவில் நடனமாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில், அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் சாமி பாடலுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் தனது மனைவி சுனிதா கெஜ்ரிவாலுடன் இணைந்து நடனமாடுகிறார்

    இதே போல், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இந்த நிகழ்வில் நடனமாடிய மற்றொரு வீடியோவும் இணையத்தில் வைரலானது.

    • பஞ்சாபின் காவல் நிலையங்கள் மீது பல பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்திவிட்டு, அதற்கு பொறுப்பேற்றார்.
    • பாகிஸ்தான் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ உடன் செயல்பட்டார்.

    பஞ்சாபில் கடந்த 5 மாதங்களாக நடந்த 14 வெடிகுண்டுத் தாக்குதலில் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த குற்றவாளி ஹேப்பி பாசியா அமெரிக்காவில் கைது செய்யப்ட்டுள்ளார்.

    ஹேப்பி பாசியா என்ற ஹர்ப்ரீத் சிங், பஞ்சாபின் காவல் நிலையங்கள் மீது பல பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்திவிட்டு, அதற்கு சமூக வலைத்தளத்தில் பொறுப்பேற்றதாக கூறப்படுகிறது.

    நவம்பர் 2024 முதல் அமிர்தசரஸில் உள்ள காவல் நிலையங்களை குறிவைத்து தொடர் குண்டுவெடிப்பு வழக்குகளில் அவர் தேடப்பட்டு வந்தார். அவர் குறித்த தகவலுக்கு ரூ.5 லட்சமும் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.

    பாகிஸ்தான் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ மற்றும் பப்பர் கல்சா இன்டர்நேஷனலுடன் இணைந்து ஹேப்பி பாசியா பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியதாக பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்தன.

    தற்போது அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள ஹேப்பி சிங் ICE (குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு) காவலில் உள்ளார். 

    • காம்போஜ் இன்ஸ்டாகிராம் மூலமாக சுக்சரண் சிங் உடன் பழக்கமாகி குண்டு தயாரிக்க கற்றுக்கொள்வது வரை சென்றுள்ளார்.
    • அவர் 5 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

    பஞ்சாப் மாநிலம் ஜலத்தினரில் யுடியூபர் ஒருவரின் வீட்டில் கடந்த மாதம் மர்ம நபர் கையெறி குண்டை (GRENADE) வீசி எறிந்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த குண்டு வெடிக்கவில்லை. குண்டு வீசிய மர்ம நபர் ஹர்திக் காம்போஜ் என்று அடையாளம் காணப்பட்டார்.

    காம்போஜிடம் பஞ்சாப் போலீஸ் நடத்திய விசாரணையில் அவருக்கு GRENADE தயாரிக்க ஜம்மு காஷ்மீரில் இருந்து பஞ்சாபின் முக்த்சார் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் சுக்சரண் சிங் என்பவர் ஆன்லைனில் பயிற்சி அளித்தது தெரியவந்தது.

    காம்போஜ் இன்ஸ்டாகிராம் மூலமாக சுக்சரண் சிங் உடன் பழக்கமாகி குண்டு தயாரிக்க கற்றுக்கொள்வது வரை சென்றுள்ளார்.

    இந்நிலையில் நேற்று ராணுவ வீரர் சுக்சரண் சிங் பஞ்சாப் போலீசார் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 5 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். பஞ்சாபில் சமீக காலமாக குண்டுவீச்சு சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • அந்த பெண் திடீரென சத்தம் எழுப்பியதால் மாணவனின் திட்டம் தோல்வியடைந்தது.
    • சூட்கேஸைத் திறந்ததும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

    பஞ்சாப் மாநிலம் சோனிபட் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவன் தனது காதலியை சூட்கேசில் அடைத்து தான் தங்கியிருக்கும் பாய்ஸ் ஹாஸ்டலுள் கொண்டு செல்ல முயன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.

    ஆனால் அந்த பெண் திடீரென சத்தம் எழுப்பியதால் மாணவனின் திட்டம் தோல்வியடைந்தது. சத்தம் கேட்டவுடன் செக்யூரிட்டிகள் மாணவனைத் தடுத்து நிறுத்தினர். அவர்கள் சூட்கேஸைத் திறந்ததும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

    தற்போது வைரலாகி வரும் காணொளியில், காரிடாரில் வைத்து சில காவலர்கள் ஒரு பெரிய சூட்கேஸைத் திறப்பதைக் காணலாம். சூட்கேஸ் திறந்ததும், அதனுள் இருந்து ஒரு பெண் வெளியே வருகிறாள்.

    அங்கிருந்தவர்கள் இந்தக் காட்சியைத் தங்கள் மொபைல் போன்களில் பதிவு செய்தனர். இணையத்தில் பரவி வரும் இந்த காணொளி அனைவரிடையேயும் சிரிப்பலையை ஏற்படுத்தி வருகிறது.

    • தனது மகனுக்கு படிப்பில் கவனம் செலுத்தவும், செல்போன் பார்க்கும் நேரத்தைக் குறைக்கவும் அறிவுறுத்தினார்.
    • "உங்கள் மகன் இறந்துவிட்டான்" என்ற செய்தியே அவர்களுக்கு கிடைத்துள்ளது.

    பஞ்சாபில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் ஷாப்பிங் மாலின் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    நேற்று முன்தினம் பஞ்சாபில் மொஹாலியில் உள்ள பிரபல ஷாப்பிங் மால் ஒன்றின் 4 ஆவது மாடியில் இருந்து அந்த மாணவர் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இறந்த மாணவர் 17 வயது அபிஜித் என அடையாளம் காணப்பட்டார். தனது தந்தையுடன் ஏற்பட்ட ஒரு சிறிய வாக்குவாதத்திற்குப் பிறகு அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

    காவல்துறையினரின் கூற்றுப்படி, அன்றைய தினம் காலை 10 மணியளவில் காவல்துறைக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் ஒருவர் மாலின் நான்காவது மாடியில் இருந்து குதித்ததாகத் தெரிவித்தனர்.

    ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த இளைஞரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றது, அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

     அபிஜித்தின் தந்தை மன்மோகன் சிங், தனது மகன் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த சில நாட்களாக உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருப்பதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.

    சம்பவம் நடந்த அன்று காலை, தனது மகனுக்கு படிப்பில் கவனம் செலுத்தவும், செல்போன் பார்க்கும் நேரத்தைக் குறைக்கவும் அறிவுறுத்தினார். இது ஒரு சிறிய வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது.

    பின்னர் அபிஜித் விதமாக வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் குடும்பத்தினர் அவரைத் தேடத் தொடங்கினர். இந்நிலையில் "உங்கள் மகன் இறந்துவிட்டான்" என்ற செய்தியே அவர்களுக்கு கிடைத்துள்ளது.

    [தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050]

    • குண்டுவெடிப்பில் கோயிலின் ஒரு பகுதி சேதமடைந்தது.
    • கடந்த நவம்பர் மாதத்திலிருந்து பஞ்சாபில் பல இடங்களில் கையெறி குண்டுத் தாக்குதல்கள் நடந்துள்ளன.

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் கோவிலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அமிர்தசரஸின் கண்ட்வாலா பகுதியில் உள்ள தாக்குர்த்வாரா கோவிலின் மீது நேற்று முன் தினம் இரவு சுமார் 12:35 மணியளவில் பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் 2 கையெறி குண்டுகளை வீசினர். அதிர்ஷ்டவசமாக, இந்த கையெறி குண்டு வெடித்தபோது கோவிலில் பக்தர்கள் யாரும் இல்லை.

     

    அங்கு தூங்கிக்கொண்டிருந்த கோவில் பூசாரியும் நூலிழையில் காயங்களின்றி உயிர் தப்பினார். குண்டுவெடிப்பில் கோயிலின் ஒரு பகுதி சேதமடைந்தது. தாக்குதலின்போது அந்த மர்ம நபர்களின் ஒரு கையில் மத கொடி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

    கடந்த நவம்பர் மாதத்திலிருந்து பஞ்சாபில் பல இடங்களில் கையெறி குண்டுத் தாக்குதல்கள் நடந்துள்ளன. ஆனால் ஒரு கோவிலை குறிவைத்துத் தாக்குதல் நடத்துவது இதுவே முதல் முறை.

    முதற்கட்ட விசாரணையில் பாகிஸ்தானின் உளவுத்துறை நிறுவனமான ஐ.எஸ்.ஐ-யின் தொடர்பு இருப்பதாக காவல்துறை ஆணையர் குர்பிரீத் சிங் புல்லர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

    மேலும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த இளைஞர்களை ஐ.எஸ்.ஐ மூளைச்சலவை செய்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுத்துகிறது என்று அவர் கூறினார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், தாக்குதல் நடத்தியவர்களை போலீஸ் குழுக்கள் தேடி வருகின்றன என்று தெரிவித்தார். 

    • இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் IISER-ல் விஞ்ஞானியாக பணியாற்றி வந்தவர்
    • குற்றம் சாட்டப்பட்ட மோன்டி தான் அபிஷேக்கை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

    பஞ்சாபில் மொஹாலியில் இயங்கி வரும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் IISER-ல் விஞ்ஞானியாக பணியாற்றி வந்தவர் அபிஷேக் ஸ்வர்ண்கர் (40). ஜார்க்கண்டை சேர்ந்த இவர் பஞ்சாபின் மொஹாலியின் செக்டார் 66 இல் தனது பெற்றோருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டுக்கு அருகே அவர் தனது பைக்கை நிறுத்திக் கொண்டிருந்தபோது அவரது பக்கத்து வீட்டுக்காரர் மோன்டி (26) அதை எதிர்த்தார்.

    இதன் பிறகு, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மோன்டி அபிஷேக்கை அடிக்கத் தொடங்கினார், இதனால் அவர் சாலையில் விழுந்தார்.

    தரையில் விழுந்த அபிஷேக்கை மோன்டி தாக்கினார். அருகில் இருதவர்கள் அவரை கட்டுப்படுத்தினர். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளது. வீடியோவில், அபிஷேக்கை சிறிது நேரம் எழுந்து நிற்பது காணப்பட்டது. ஆனால் பின்னர் அவர் மீண்டும் விழுந்தார்.

    இதன் பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட மோன்டி தான் அபிஷேக்கை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுபான ஆலை செயல்பட உள்ளூர் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு.
    • மக்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதுடன் நீர் ஆதாரங்களை அழிப்பதாக குற்றச்சாட்டு.

    பெரோஸ்பூர்:

    பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் மாவட்டம் மன்சுர்வால் கிராமத்தில் உள்ள மதுபான ஆலைக்கு எதிராக அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் நீண்ட காலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்த தொழிற்சாலை உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதுடன் அப்பகுதி நீர் ஆதாரங்களையும் அழிப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மதுபான ஆலைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி கடந்த ஜூலை மாதத்தில் இருந்து அந்த பகுதியில் போராட்டம் நடைபெற்று வந்தது.

    மதுபான ஆலையால் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதுடன் விளைச்சல் குறைந்ததாகவும் குற்றம் சாட்டி, அந்த ஆலையின் வாயிலை இன்று முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு விரைந்து வந்த போலீசார் போராட்டக்கார்களை தடுத்து நிறுத்த முற்பட்டபோது இரு தரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பதற்றமான நிலை காணப்பட்டது.

    • தற்போது சுட்டுவீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் டிரோன் அம்ரித்சர் பகுதியில் கீழே விழுந்தது.
    • இதில் இருந்த போதை பொருளின் மதிப்பை அறிந்து கொள்வதற்கான பரிசோதனை நடைபெற்று வருகிறது.

    சர்வதேச எல்லை பகுதியில் பஞ்சாப் வழியே இந்தியாவுக்குள் போதை பொருளை கொண்டுவந்த பாகிஸ்தான் டிரோனை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். கடந்த நான்கு நாட்களில் இது போன்ற டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது ஐந்தாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    தற்போது சுட்டுவீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் டிரோன் அம்ரித்சர் பகுதியில் கீழே விழுந்தது. கீழே விழுந்த கருப்பு நிற டிரோனை எல்லை பாதுகாப்பு படையினர் மீட்டனர். அளவில் பெரியதாகவும், கருப்பு நிறத்திலும் இருந்த டிரோனில் சந்தேகத்திற்குரிய போதை மருந்து வைக்கப்பட்டு இருந்தது. இதில் இருந்த போதை பொருளின் மதிப்பை அறிந்து கொள்வதற்கான பரிசோதனை நடைபெற்று வருகிறது.

     

    மே 19 ஆம் தேதி முதல் இந்திய எல்லைக்குள் இதே போன்று அத்துமீறி நுழைந்த ஐந்தாவது டிரோன் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பல சமயங்களில் டிரோன் பறந்து வருவது போன்ற சத்தம் மட்டும் கேட்கும். ஆனால் விசாரணையில் டிரோன் எதுவும் மீட்கப்படாத சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன.

    ஏற்கனவே இரண்டு டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. மூன்றாவது டிரோன் ஊடுறவ முயன்ற போது சுட்டதில், அது பாகிஸ்தான் எல்லை பகுதியில் வீழ்ந்தது என்று எல்லை பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மே 20 ஆம் தேதி ஊடுறவிய டிரோனில் 3.3 கிலோகிராம் போதை பொருள் இருந்தது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

    • மக்களவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் தனித்து களம் காணலாம் என்பது காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து எடுத்த முடிவுதுதான்
    • டெல்லியில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே தொகுதிக் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    "மக்களவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் தனித்து களம் காணலாம் என்பது காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து எடுத்த முடிவுதுதான். இதுகுறித்து எந்த மோதலும் எங்களுக்குள் இல்லை" என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காங்கிரஸ் தலைவரான அபிஷேக் சிங்வியின் வீட்டிற்கு மதிய உணவுக்காக சென்றிருந்தார். அதன் பின்னர், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தனித்து போட்டியிடுவது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் தனித்து களம் காணலாம் என்பது காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து எடுத்த முடிவுதுதான். இதுகுறித்து எந்த மோதலும் எங்களுக்குள் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், டெல்லியில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே தொகுதிக் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. டெல்லியில் கூட்டணி இல்லாவிட்டால் பாஜகவுக்கு வெற்றிவாய்ப்பு எளிதாகிவிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தலில் டெல்லியில் உள்ள ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    பஞ்சாபில் உள்ள 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் அறிவித்திருந்தார். பஞ்சாபில் காங்கிரஸின் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான பர்தாப் சிங் பஜ்வா, "முதலமைச்சர் பகவந்த் மானுக்கு 'நன்றி' தெரிவித்து, இதைத்தான் காங்கிரஸ் கட்சியும் விரும்புகிறது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 7 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதி சுற்றுக்குத் தமிழ்நாடு அணி தகுதி பெற்றுள்ளது.
    • 7 ஆட்டங்களில் ஒரு தோல்வி, 4 வெற்றிகளுடன் 28 புள்ளிகள் எடுத்து ‘சி’ பிரிவில் முதலிடத்தில் உள்ளது தமிழக அணி

    ரஞ்சி கோப்பைப் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியது. இந்த வெற்றியின் மூலம், 7 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதி சுற்றுக்குத் தமிழ்நாடு அணி தகுதி பெற்றுள்ளது.

    சேலத்தில் நடைபெற்ற தனது கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியுடன் தமிழக அணி மோதியது. இந்த ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தமிழ்நாடு வெற்றி பெற்றது.

    இப்போட்டியில், முதல் இன்னிங்ஸில் தமிழக அணி 435 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இந்திரஜித் 187 ரன்களும், விஜய் சங்கர் 130 ரன்களும் அடித்தனர். இதைத் தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி முதல் இன்னிங்ஸில் 274 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அன்மோல் மல்ஹோத்ரா 64 ரன்கள் எடுத்தார். தமிழக அணியின் அஜித் ராம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து பஞ்சாப் அணிக்கு ஃபாலோ ஆன் வழங்கப்பட்டது.

    2-வது இன்னிங்ஸை தொடங்கிய பஞ்சாப் அணி 231 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக நேஹல் வதேரா 109 ரன்களை குவித்தார். தமிழக அணி தரப்பில் அதிகபட்சமாக சாய் கிஷோர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் பிறகு தமிழக அணிக்கு 71 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை தொடங்கிய தமிழக அணி 7 ஓவர்களில் இந்த இலக்கை எட்டி, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் 7 ஆட்டங்களில் ஒரு தோல்வி, 4 வெற்றிகளுடன் 28 புள்ளிகள் எடுத்து 'சி' பிரிவில் முதலிடத்தில் உள்ளது தமிழக அணி. இன்னும் ஒரு சில அணிகள் தங்களின் கடைசி லீக் ஆட்டங்களில் விளையாடி வருவதால், அதன் முடிவுகளை பொறுத்தே காலிறுதி போட்டிக்கான அட்டவணை அமையும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 58 வயதான சரண் சிங்கின் ஒரே மகனான சித்து மூஸ்வாலாவின் திடீர் மரணம் அவர்களை வெகுவாக பாதித்துள்ளது.
    • தனது மகனின் நினைவாக ஒரு குழந்தை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் செயற்கை கருவுறுதல் முறையில் அவர் கருவுற்றிருக்கிறார்

    மறைந்த பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவின் அம்மா சரண் சிங் கர்ப்பமாக உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. செயற்கை கருத்தரித்தல் முறையில் அவர் கர்ப்பமாகியுள்ளார். வரும் மார்ச் மாதம் அவர் குழந்தையை பெற்றெடுப்பார் என்று சொல்லப்படுகிறது.

    புகழ்பெற்ற பஞ்சாப் பாடகரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான சித்து மூஸ் வாலா, அங்குள்ள மன்சா மாவட்டத்தில் 2022-ம் ஆண்டு மே 29-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். கனடாவைச் சேர்ந்த கூலிப்படைத் தலைவர் கோல்டி பிரார் இந்த கொலை சம்பவத்துக்கு பொறுப்பேற்றாா். இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், 58 வயதான சரண் சிங்கின் ஒரே மகனான சித்து மூஸ்வாலாவின் திடீர் மரணம் அவர்களை வெகுவாக பாதித்துள்ளது. ஆதலால் தனது மகனின் நினைவாக ஒரு குழந்தை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் செயற்கை கருவுறுதல் முறையில் அவர் கருவுற்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

    ×