என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Punjab Kings"

    • இவ்விரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
    • இரு அணியும் எந்த வித மாற்றமும் இல்லாமல் களமிறங்குகிறது.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 22-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இரு அணியும் எந்த வித மாற்றமும் இல்லாமல் களமிறங்குகிறது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 16-ல் சென்னையும், 14-ல் பஞ்சாப்பும் வென்று இருக்கின்றன.

    • சென்னை அணியில் பேட்டிங் கவலைக்குரியதாக இருக்கிறது.
    • வெற்றிப் பாதைக்கு திரும்ப இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இதில் பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் 22-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் அணி முதலாவது ஆட்டத்தில் 11 ரன் வித்தியாசத்தில் குஜராத்தையும், 2-வது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவையும் தோற்கடித்தது. கடந்த ஆட்டத்தில் 50 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் வீழ்ந்தது. அந்த ஆட்டத்தில் 206 ரன் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி 155 ரன்னில் அடங்கியது.

    உள்ளூரில் தனது முதல் ஆட்டத்தில் தோல்வியை தழுவிய பஞ்சாப் அணி வெற்றிப்பாதைக்கு திரும்பும் ஆர்வத்தில் உள்ளது. பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் ஸ்ரேயாஸ் அய்யர், நேஹல் வதேரா சூப்பர் பார்மில் உள்ளனர். பிரப்சிம்ரன் சிங், மேக்ஸ்வெல், ஷசாங் சிங் நம்பிக்கை அளிக்கிறார்கள். பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், லோக்கி பெர்குசன், மார்கோ யான்சென் வலுசேர்க்கிறார்கள். சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் மூன்று ஆட்டங்களில் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தி இருக்கிறார்.

    நடப்பு சீசனில் சென்னை அணி மோசமான தொடக்கம் கண்டுள்ளது. தொடக்க ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வென்ற சென்னை அதன் பிறகு நடந்த ஆட்டங்களில் 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவிடமும், 6 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடமும், 25 ரன் வித்தியாசத்தில் டெல்லியிடமும் அடுத்தடுத்து தோற்றது. கடந்த 3 ஆட்டங்களிலும் 180-க்கு மேலான ரன்னை விரட்டிப்பிடிக்க முடியாமல் முடங்கியது.

    சென்னை அணியில் பேட்டிங் கவலைக்குரியதாக இருக்கிறது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா தவிர மற்றவர்களின் பேட்டிங் மெச்சும்படி இல்லை. மிடில் வரிசையில் அதிரடி ஆட்டக்காரர் ஷிவம் துபேவும் சொதப்புகிறார். விக்கெட் கீப்பரும், போட்டியை வெற்றிகரமாக முடிப்பதில் வல்லவருமான 43 வயது டோனியின் பேட்டிங் இந்த முறை விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. வயது அதிகரிப்பால் அவரது பேட்டிங் வேகம் குறைந்து விட்டது. இதனால் அவர் கடைசி கட்டத்தில் களத்தில் நின்றாலே வெற்றி என்ற தனது தனித்துவமான அடையாளத்தை இழந்து வருகிறார்.

    கடந்த இரு ஆட்டங்களில் அவர் களத்தில் இருந்தும் அணியை வெற்றிக்கு அழைத்து செல்ல முடியாததால் டோனி ஓய்வு பெறுவதே மேலானது என்று ரசிகர்கள் வெளிப்படையாக பேச ஆரம்பித்து விட்டனர். டோனியின் ஆக்ரோஷமற்ற ஆட்டம் சென்னை அணியின் பேட்டிங் கலவையை சீர்குலைக்கும் வகையில் உள்ளது.

    சென்னை அணி சரிவில் இருந்து மீண்டு எழுச்சி பெற பேட்ஸ்மேன்கள் ஒருசேர கைகோர்த்து நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் நூர் அகமது, கலீல் அகமது, பதிரானா பலம் சேர்க்கிறார்கள். ஆனால் மூத்த சுழற்பந்து வீச்சாளர்களான ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் போதிய தாக்கம் தென்படவில்லை.

    வெற்றிப் பாதைக்கு திரும்ப இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இருப்பினும் உள்ளூர் சூழலில் பஞ்சாப் அணியின் கையே ஓங்க அதிக வாய்ப்புள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 16-ல் சென்னையும், 14-ல் பஞ்சாப்பும் வென்று இருக்கின்றன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:

    பஞ்சாப்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), நேஹல் வதேரா, மார்கஸ் ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல், ஷசாங் சிங், ஹர்பிரீத் பிரார், மார்கோ யான்சென், அர்ஷ்தீப் சிங், லோக்கி பெர்குசன், யுஸ்வேந்திர சாஹல்.

    சென்னை: ரச்சின் ரவீந்திரா, டிவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), விஜய் சங்கர், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, டோனி, ஆர்.அஸ்வின், அன்ஷூல் கம்போஜ், நூர் அகமது, பதிரானா, கலீல் அகமது,

    • தொடர்ந்து 3 தோல்வியை சி.எஸ்‌.கே. அணி சந்தித்துள்ளது.
    • பேட்ஸ்மேன்கள் அனைவரும் முழு திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றிப்பாதைக்கு திரும்ப இயலும்.

    சென்னை:

    10 அணிகள் பங்கேற் றுள்ள ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 22- ந் தேதி தொடங்கியது.நேற்றுடன் 19 லீக் ஆட்டங் கள் முடிந்தன. ஒவ்வொரு அணியும் 14 போட்டிகளில் ஆட வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) அணி சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 23-ந் தேதி நடந்த முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை தோற்கடித்தது.

    2-வது ஆட்டத்தில் பெங்களூருவிடம் 50 ரன்னில் மோசமாக தோற்றது. கவுகாத்தியில் விளையாடிய 3-வது போட்டியில் 6 ரன்னில் ராஜஸ்தானிடம் தோற்றது. அதைத் தொடர்ந்து சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் நடந்த 4-வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்சிடம் 25 ரன்னில் வீழ்ந்தது. சி.எஸ். கே. 1 வெற்றி, 3 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது.

    ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது போட்டியில் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்சை நாளை (செவ்வாய்க்கிழமை) நியூ சண்டிகரில் (முலான்பூர்) இரவு 7.30 மணிக்கு சந்திக்கிறது.

    தொடர்ந்து 3 தோல்வியை சந்தித்துள்ள சி.எஸ்.கே. அதில் இருந்து மீளூமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.

    சென்னை சூப்பர் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் தொடர்ந்து மோசமான நிலையில் இருக்கிறது. 4 போட்டியிலும். 2-வது தான் பேட்டிங் செய்தது. இதனால் நாளை போட்டியிலாவது அணுகுமுறையை மாற்றுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பவர் பிளேயில் ரன் குவிப்பது மிகவும் அவசியமாகும். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க வீரராக ஆடுவாரா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. பேட்ஸ்மேன்கள் அனைவரும் முழு திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றிப்பாதைக்கு திரும்ப இயலும்.

    பஞ்சாப் அணி சி.எஸ்.கேவை வீழ்த்தி 3- வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி முதல் 2 ஆட்டத்தில் முறையே குஜராத் ( 11 ரன்), லக்னோவை (8 விக்கெட்) வீழ்த்தியது. 3- வது போட்டியில் ராஜஸ்தானிடம் 50 ரன்னில் மோசமாக தோற்றது.

    அந்த அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது.

    முன்னதாக நாளை மாலை 3.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ரகானே தலைமை யிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- ரிஷப்பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் 2 வெற்றி, 2 தோல்வியுடன் உள்ளன. இதனால் 3-வது வெற்றியை பெறப்போவது யார்? என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    • பஞ்சாப் அணி விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது.
    • ராஜஸ்தான் ராயல்ஸ் 3-ல் ஒரு போட்டியில் வெற்றி பெற்று 9ஆவது இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் 2025 சீசனின் 18ஆவது ஆட்டம் மொகாலியில் நடைபெறுகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    • ராஜஸ்தான் அணி முதல் இரு ஆட்டங்களில் ஐதராபாத், கொல்கத்தா அணிகளிடம் வீழ்ந்தது.
    • இவ்விரு அணிகளும் இதுவரை 28 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன.

    ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மாலை 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறும் 17-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்சை சந்திக்கிறது.

    இதனை தொடர்ந்து இன்றிரவு 7.30 மணிக்கு பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்சை எதிர் கொள்கிறது.

    பஞ்சாப் அணி முதல் இரு ஆட்டங்களில் குஜராத், லக்னோ அணிகளை அடுத்தடுத்து புரட்டியெடுத்தது. அந்த அணியில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தொடர்ச்சியாக 2 அரைசதம் அடித்து அசத்தினார். பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா, ஷசாங் சிங் ஆகியோரும் பேட்டிங்கில் பலம் சேர்க்கிறார்கள். பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், மார்கோ யான்சென் சிறப்பாக செயல்படுகிறார்கள்.

    ராஜஸ்தான் அணி முதல் இரு ஆட்டங்களில் ஐதராபாத், கொல்கத்தா அணிகளிடம் வீழ்ந்தது. கடந்த ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் சென்னையை தோற்கடித்தது. கைவிரல் காயத்தில் இருந்து முழுமையாக மீளாததால் கடந்த மூன்று ஆட்டங்களில் 'இம்பேக்ட்' வீரராக மட்டும் ஆடிய சஞ்சு சாம்சன் இதில் இருந்து கேப்டன் பொறுப்பை ஏற்பதுடன் விக்கெட் கீப்பிங் பணியையும் கவனிக்க இருக்கிறார். பேட்டிங்கில் சாம்சன், ரியான் பராக், நிதிஷ் ராணா, துருவ் ஜூரெலும், பந்து வீச்சில் தீக்ஷனா, ஹசரங்கா, சந்தீப் ஷர்மா, துஷர் தேஷ்பாண்டேவும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

    மொத்தத்தில் ஹாட்ரிக் வெற்றியை ருசிக்க பஞ்சாப் அணியும், வெற்றிப்பாதையில் பயணிக்க ராஜஸ்தான் அணியும் மல்லுக்கட்டும். உள்ளூர் சூழல் பஞ்சாப் அணிக்கு சற்று சாதகமாக இருக்கும். இவ்விரு அணிகளும் இதுவரை 28 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் ராஜஸ்தான் 16 ஆட்டங்களிலும், பஞ்சாப் 12 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • பந்து வீச்சில் ஷர்துல் தாக்குர், திக்வேஷ் ரதி, ரவி பிஷ்னோய், ஆவேஷ்கான் பலம் சேர்க்கிறார்கள்.
    • இவ்விரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லக்னோவில் இன்று நடைபெறும் 13-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் சந்திக்கின்றன.

    ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியிடம் வீழ்ந்தது. அடுத்த ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை பதம் பார்த்தது. லக்னோ அணியில் பேட்டிங்கில் நிகோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ் (இருவரும் தலா இரு அரைசதம்), டேவிட் மில்லர் நல்ல நிலையில் உள்ளனர். மார்க்ரம், கேப்டன் ரிஷப் பண்ட், ஆயுஷ் பதோனி ஆகியோரின் பேட்டில் இருந்து இன்னும் போதிய ரன் வரவில்லை. பந்து வீச்சில் ஷர்துல் தாக்குர், திக்வேஷ் ரதி, ரவி பிஷ்னோய், ஆவேஷ்கான் பலம் சேர்க்கிறார்கள். இந்த சீசனில் தங்களது சொந்த மைதானத்தில் முதல்முறையாக அடியெடுத்து வைக்கும் லக்னோ அணி தித்திப்போடு தொடங்க தீவிரம் காட்டும்.

    ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் தனது முதலாவது ஆட்டத்தில் 11 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (97 ரன்), பிரியான்ஷ் ஆர்யா (47), ஷசாங் சிங் (44) ஆகியோரின் பங்களிப்பால் 243 ரன்கள் குவித்த பஞ்சாப் அணி, 232 ரன்னில் குஜராத்தை மடக்கியது. பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், மார்கோ யான்சென், விஜய்குமார் வைஷாக் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் மூன்றில் லக்னோவும், ஒன்றில் பஞ்சாப்பும் வெற்றி பெற்றுள்ளன.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • இதுவரை ஐ.பி.எல். கோப்பையை வெல்லாத அணிகளில் பஞ்சாப் கிங்சும் ஒன்று.
    • இரு அணிகளும் ஏறக்குறைய சரி சம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கும் 5-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர்கொள்கிறது.

    2022-ம் ஆண்டு அறிமுக தொடரிலேயே மகுடம் சூடிய குஜராத் அணி 2023-ம் ஆண்டில் 2-வது இடத்தை பிடித்தது. ஆனால் கடந்த சீசனில் 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. தற்போது ஜோஸ் பட்லர், ரபடா, முகமது சிராஜ் வருகையால் அந்த அணி மேலும் வலுவடைந்துள்ளது. சமீபகாலமாக இங்கிலாந்து ஒரு நாள் போட்டி அணியில் ஜொலிக்காத ஜோஸ் பட்லர், ஐ.பி.எல். மூலம் இழந்த பார்மை மீட்கும் முனைப்புடன் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளார். தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் சுப்மன் கில்லும், சாய் சுதர்சனும் பேட்டிங் தூண்களாக உள்ளனர். ரஷித்கான், சாய் கிஷோர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சுழலில் மிரட்ட காத்திருக்கிறார்கள். உள்ளூர் சீதோஷ்ண நிலை அவர்களுக்கு சாதகமாக இருக்கும்.

    இதுவரை ஐ.பி.எல். கோப்பையை வெல்லாத அணிகளில் பஞ்சாப் கிங்சும் ஒன்று. இந்த சீசனில் நிறைய மாற்றங்களுடன் வந்திருக்கிறது. குறிப்பாக கொல்கத்தா அணிக்கு கோப்பையை வென்றுத்தந்த ஸ்ரேயாஸ் அய்யரை ரூ.26¾ கோடிக்கு எடுத்து அவரையே கேப்டனாக்கி இருக்கிறார்கள். அவரது வருகை பஞ்சாப் அணியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    பேட்டிங்கில் இங்லிஸ், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டெல்லி பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்சர் நொறுக்கிய பிரியான்ஷ் ஆர்யா ஆகியோரும், பந்து வீச்சில் மார்கோ யான்சென், அர்ஷ்தீப்சிங், யுஸ்வேந்திர சாஹலும் வலு சேர்க்கிறார்கள். இரு அணிகளும் ஏறக்குறைய சரி சம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

    இவ்விரு அணிகள் இதுவரை 5 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 2-ல் பஞ்சாப்பும், 3-ல் குஜராத்தும் வெற்றி பெற்றுள்ளன. இங்குள்ள ஆடுகளத்தன்மை எப்படி இருக்கும் என்பதை கணிப்பது கடினம். ஏனெனில் கடந்த ஆண்டு டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 89 ரன்னில் சுருண்ட குஜராத், சென்னைக்கு எதிராக 231 ரன்கள் திரட்டி ஆச்சரியப்படுத்தியது. ஆனால் சென்ற ஆண்டு இங்குநடந்த 8 ஆட்டங்களில் 6-ல் 2-வது பேட் செய்த அணியே வெற்றியை வசப்படுத்தியது நினைவுகூரத்தக்கது.

    போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

    குஜராத்: சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், சாய் சுதர்சன், கிளென் பிலிப்ஸ், ஷாருக்கான், வாஷிங்டன் சுந்தர், ராகுல் திவேதியா, ரஷித்கான், சாய் கிஷோர், ககிசோ ரபடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

    பஞ்சாப்: பிரப்சிம்ரன் சிங், ஜோஷ் இங்லிஸ், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), மேக்ஸ்வெல், நேஹல் வதேரா அல்லது பிரியான்ஷ் ஆர்யா, மார்கஸ் ஸ்டோனிஸ், ஷசாங் சிங், மார்கோ யான்சென், ஹர்பிரீத் பிரார், விஜய்குமார் வைஷாக், அர்ஷ்தீப்சிங், யுஸ்வேந்திர சாஹல்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • இந்திய கிரிக்கெட்டின் ஒருங்கிணைந்த பகுதி ஐ.பி.எல். என அறிவோம்.
    • பயிற்சியாளருடன் பணிபுரிவது நன்றாக இருக்கிறது என தெரிவித்தார்.

    சண்டிகர்:

    ஐ.பி.எல். 2025 தொடர் வரும் சனிக்கிழமை தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும், தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கும் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது:

    வரும் ஐ.பி.எல். தொடரில் மூன்றாவது வரிசையில் களமிறங்கவே விரும்புகிறேன்.

    இந்திய கிரிக்கெட்டின் ஒருங்கிணைந்த பகுதி ஐ.பி.எல். என்பதை ஏற்கனவே அறிவோம். ஐ.பி.எல்.லில் ஏதாவது ஒரு இடத்தில் என்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பினால், அது மூன்றாவது இடத்தில் இருக்கும்.

    நான் அதில்தான் கவனம் செலுத்துகிறேன். இந்த முறை அந்த நிலை குறித்து எனக்கு தெளிவாகத் தெரியும். பயிற்சியாளர் என்னை அங்கீகரிக்கும் வரை அந்த எண்ணில் கவனம் செலுத்தப் போகிறேன்.

    நான் அவருடன் கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அவர் மைதானத்திலும், வெளியேயும் ஒவ்வொரு நபரைப் பற்றியும் எப்படி நினைக்கிறார் என்பது எனக்குத் தெரியும்.

    அவர் அனைவரையும் ஆதரிக்கிறார். சில இடங்களில் சீனியர்-ஜூனியர் கலாசாரம் இருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். ஆனால் நான் அவருடன் முதல் முறையாகப் பணியாற்றியபோது, நான் ஒரு சிறந்த வீரர் என்ற உணர்வை அவர் எனக்கு ஏற்படுத்தினார்.

    அவருடன் பணிபுரிவது நன்றாக இருக்கிறது. முடிவு இங்கும் அங்கும் சென்றாலும் அவரது மனம் ஊசலாடுவதில்லை. அவர் அதே வழியில் சிந்திக்கிறார். மேலும் அவர் வெற்றி பெற விரும்புகிறார்.

    கோப்பையை வெல்வதே முக்கியம். இதில் எந்த அழுத்தமும் இல்லை. இது ஒரு வாய்ப்பு என தெரிவித்தார்.

    • 2019 முதல் 2021 வரை ஏற்கனவே பேட்டிங் பயிற்சியாளராக இருந்தார்
    • ஆஸ்திரேலியாவின் பிராட் ஹடின் துணை பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர். ரஞ்சி கோப்பையில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமைக்குரிய இவர், கடந்த 2019 முதல் 2021 வரை பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்தார். கடந்த 2022 தொடருக்கு முன் மெகா ஏலம் நடைபெற்றது. அப்போது பயிற்சியாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக மார்க் வுட் என்பவரை பயிற்சியாளராக நியமித்தது.

    இந்த நிலையில், தற்போது 2023 சீசனில் வாசிம் ஜாபர் மீண்டும் பேட்டிங் பயிற்சியாளராக செயல்படுவார் என பஞ்சாப் கிங்ஸ் அணி அறிவித்துள்ளது.

    ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் விக்கெட் கீப்பர் பிராட் ஹடின் துணை பயிற்சியாளராக செயல்படுவார் எனவும் அறிவித்தள்ளது.

    பஞ்சாப் அணி மயங்க் அகர்வால் உள்பட முக்கிய வீரர்களை ரிலீஸ் செய்தது. அந்த அணியிடம் தற்போது 32.20 கோடி ரூபாய் உள்ளது, மினி ஏலத்தின்போது தேவைப்பட்டால் மயங்க் அகர்வால் உள்பட ரிலீஸ் செய்ய வீரர்களை எடுத்துக் கொள்ள முடியும்.

    15 சீசனில் இதுவரை ஒரு முறை கூட பஞ்சாப் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது கிடையாது. கடந்த முறை 6-வது இடத்தை பிடித்தது.

    • இதுவரை நடந்த 15 சீசனில் 14 கேப்டன்கள் அந்த அணிக்கு தலைமை தாங்கியுள்ளனர்.
    • ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லாத அணிகளுள் அந்த அணியும் ஒன்று.

    சென்னை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

    இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்துள்ளன. இதில் மும்பை இந்தியன்ஸ் அதிக பட்சமாக 5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் 4 தடவை பட்டம் பெற்றுள்ளது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தலா 1 தடவையும் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளன. 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது.

    இந்நிலையில் ஐபிஎல் தொடரில் அதிக கேப்டன்களை மாற்றிய அணியாக பஞ்சாப் புதுவிதமான சாதனை ஒன்றை படைத்துள்ளது. இதுவரை நடந்த 15 சீசனில் 13 கேப்டன்கள் அந்த அணிக்கு தலைமை தாங்கியுள்ளனர். ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லாத அணிகளுள் பஞ்சாப் அணியும் ஒன்று. இந்தாண்டு பஞ்சாப் கேப்டனாக ஷிகர் தவான் செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன்கள் பட்டியல்:-

    யுவராஜ் சிங் -இந்தியா

    குமார் சங்ககாரா -இலங்கை

    ஜெயவர்தனே -இலங்கை

    கில்கிறிஸ்ட் -ஆஸ்திரேலியா

    டேவிட் ஹசி -ஆஸ்திரேலியா

    பெய்லி -ஆஸ்திரேலியா

    சேவாக் - இந்தியா

    டேவிட் மில்லர் -தென் ஆப்பிரிக்கா

    முரளி விஜய் -இந்தியா

    மேக்ஸ்வெல் -ஆஸ்திரேலியா

    அஸ்வின் -இந்தியா

    கேஎல் ராகுல் - இந்தியா

    அகர்வால் -இந்தியா

    • ஐ.பி.எல். தொடரில் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் மிகவும் மிகவும் அதிக விலைக்கு ஏலம் போனார்.
    • சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அவரை 20.50 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.

    துபாய்:

    17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

    ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போவார்கள் என முன்னணி வீரர்கள் கருத்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், இந்தியாவின் ஹர்ஷல் படேலை பஞ்சாப் கிங்ஸ் அணி 11.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. இவர் தான் நடப்பு சீசனில் அதிகம் ஏலத்துக்கு எடுக்கப்பட்ட இந்திய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஐ.பி.எல். தொடரில் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் மிகவும் மிகவும் அதிக விலைக்கு ஏலம் போனார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அவரை 20.50 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.

    • தென் ஆப்பிரிக்காவின் ரைலி ரூசோவை 8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ்.
    • ஐ.பி.எல். தொடரில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் மிகவும் அதிக விலைக்கு ஏலம் போனார்கள்.

    துபாய்:

    17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவின் ரைலி ரூசோவை 8 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.

    ஏற்கனவே, இந்தியாவின் ஹர்ஷல் படேலை பஞ்சாப் கிங்ஸ் அணி 11.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. இவர் தான் நடப்பு சீசனில் அதிகம் ஏலத்துக்கு எடுக்கப்பட்ட இந்திய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×