என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Raging"

    • அனைவரையும் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நிற்க வைத்தனர்
    • மாணவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    குஜராத் மாநிலத்தில் மருத்துவக்கல்லூரியில் சீனியர்களின் ராகிங் கொடுமையால் 18 வயது மாணவன் பரிதமபாக உயிரிழந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

    குஜராத்தின் பதான் மாவட்டத்தில் உள்ள தர்பூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை விடுதியில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. விடுதியில் தங்கியிருக்கும் முதலாமாண்டு எம்.பி.பி.எஸ். படிக்கும் மாணவர்களை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்து வந்துள்ளனர்.

    நேற்று முன்தினம் இரவு சீனியர் மாணவர்கள் சிலர் முதலாமாண்டு மாணவர்களை அழைத்து, அவர்கள் அனைவரையும் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நிற்க வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது 18 வயதான அணில் மெதானியா என்ற மாணவர், திடீரென மயங்கி விழுந்தார்.

    அவரை சக மாணவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் மாணவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடதுக்கு வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மாணவனின் மரணத்துக்கு உரிய நீதி  கிடைக்க வேண்டும் என்று உறவினர்கள் வலியறுதியள்ளனர்.

    • சீனியர்களுக்கு எதிராக போலீசில் புகார் அளித்திருந்தார்.
    • அவரைக் காணவில்லை என்பதும், அவருடன் இருந்த மற்றொரு மாணவரை அவர்களுடன் அழைத்துச் சென்றனர்.

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் ஏழு சீனியர்கள் முதலாம் ஆண்டு மாணவரை கொடூரமான முறையில் ரேகிங் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    திருவனந்தபுரத்தில் உள்ள கரியவட்டம் அரசு கல்லூரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த பிப்ரவரி 11 அன்று கரியவட்டம் அரசுக் கல்லூரியில் சீனியர்களுக்கும் ஜூனியர்களுக்கும் இடையே ஒரு சண்டை நடந்தது. இதில் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் காயமடைந்தார். அவர் சீனியர்களுக்கு எதிராக போலீசில் புகார் அளித்திருந்தார்.

    காவல்துறையிடம் புகார் செய்ததால், சீனியர்கள் மேலும் கோபமடைந்தனர். புகார் அளித்த முதலாமாண்டு மாணவரின் விடுதிக்குள் நுழைந்து அவரை தேடினர். அவரைக் காணவில்லை என்பதும், அவருடன் இருந்த மற்றொரு மாணவரை அவர்களுடன் அழைத்துச் சென்றனர்.

    ஒரு அறையில் வைத்து அந்த ஜூனியர் மாணவரை மண்டியிட்டு உட்கார வைத்து சுமார் ஒரு மணி நேரம் அடித்ததுள்ளனர். குடிக்க தண்ணீர் கேட்டபோது, அதில் எச்சில் துப்பிய பிறகு தண்ணீர் கொடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட மாணவர் தெரிவித்தார். அவர் இந்த தண்ணீரைக் குடிக்க மறுத்தபோது, மேலும் தாக்கப்பட்டார்.

    கல்லூரியின் ராகிங் தடுப்புப் பிரிவு ஜூனியர் மாணவரின் புகாரை விசாரித்தது. கல்லூரி மற்றும் விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளையும் அவர்கள் ஆராய்ந்ததில் நடந்தது உண்மைதான் என்பதை கண்டறிந்து கல்லூரியிடம் அறிக்கை சமர்ப்பித்தனர்.

    அதன் அடிப்படையில் 7 சீனியர் மாணவர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் போலீசார் ராகிங் தடுப்புச் சட்டத்தின கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  

    கோவையில் ராக்கிங் செய்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் 4 பேரும் கல்லூரி விடுதியில் இருந்து ஒரு ஆண்டுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
    கோவை:

    தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராக்கிங் கொடுமை தாங்காமல் சில மாணவர்கள் விபரீத முடிவு எடுத்தனர். எனவே ராக்கிங் கொடுமையை தடுக்க கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

    இதன் மூலம் ராக்கிங் செய்வது தடுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கல்லூரிகளில் ராக்கிங் செய்வது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை ராக்கிங் செய்த 2-ம் ஆண்டு மாணவர்கள் சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதே போல கோவை அரசு கலைக்கல்லூரியில் ராக்கிங்கில் ஈடுபட்ட 3 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    தற்போது கோவை அரசு மருத்துவ கல்லூரியிலும் ராக்கிங் கொடுமை அரங்கேறி உள்ளது. திருவண்ணாமலையை சேர்ந்த மாணவர் ஒருவர் விடுதியில் தங்கி இருந்து மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். அவரை, விடுதியில் தங்கியிருக்கும் சீனியர் மாணவர்கள் 4 பேர் ராக்கிங் செய்து உள்ளனர்.

    இது குறித்து அந்த மாணவர் தனது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார். உடனே அவர்கள், டெல்லியில் உள்ள ராக்கிங் தடுப்பு கமிட்டிக்கு புகார் மனு அனுப்பினர்.

    இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி ராக்கிங்கில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அதற்கான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் அசோகனுக்கு ராக்கிங் கமிட்டி அறிவுறுத்தியது.

    இதையடுத்து ராக்கிங்கில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்கும் வகையில் கல்லூரி துணை முதல்வர், ஆர்.டி.ஓ., மனநல மருத்துவர், விடுதி காப்பாளர் உள்பட 10 பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில் பொள்ளாச்சி, தர்மபுரி, திருப்பூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 3-ம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் 4 பேர் தான் திருவண்ணாமலையை சேர்ந்த மாணவரை ராக்கிங் செய்தது தெரியவந்தது.

    இதையடுத்த அந்த மாணவர்கள் 4 பேரும் கல்லூரி விடுதியில் இருந்து ஒரு ஆண்டுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    இது குறித்து மருத்துவகல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் அசோகன் கூறியதாவது:-

    கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் 750 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மருத்துவ படிப்பு படித்து வரும் மாணவ-மாணவி களின் வசதிக்காக கல்லூரி வளாகத்தில் தங்கும் விடுதி உள்ளது.

    இங்கு சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்வதை தடுக்கும் வகையில் 10 பேர் கொண்ட ராக்கிங் தடுப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக கல்லூரி வளாகத்தில் ஆங்காங்கே விழிப்புணர்வு நோட்டீசுகளும் ஒட்டப்பட்டு உள்ளன. அதில், ராக்கிங் செய்வது சட்டப்படி குற்றம். அதையும் மீறி ராக்கிங் செய்தால் சம்பந்தப்பட் டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதுதவிர கல்லூரி மற்றும் விடுதிகளில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு ராக்கிங் தடுப்பு குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதையும் மீறி மருத்துவ கல்லூரி விடுதியில் ராக்கிங் நடந்து உள்ளது. இதில் 4 மாணவர்கள் ராக்கிங் செய்தது உறுதி செய்யப்பட்டது. எனவே ராக்கிங் செய்த மாணவர்கள் 4 பேரும் ஒரு ஆண்டுக்கு விடுதியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். இதில் ஒரு மாணவர் மட்டும் ஒரு மாதத்துக்கு கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.

    இங்குள்ள விடுதியில் சீனியர் மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களை ராக்கிங் செய்வார்கள் என்பதற்காக பிற மாணவர்கள் செல்ல முடியாத வகையில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தனியாக விடுதி அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் தான் 3-ம் ஆண்டு மாணவர்கள் 2-ம் ஆண்டு மாணவரை ராக்கிங் செய்து உள்ளனர்.

    இது குறித்த அறிக்கை டெல்லியில் உள்ள ராக்கிங் தடுப்பு கமிட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து ராக்கிங் நடக்காத வகையில் கண்காணிக்கப் பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    ×