என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rahul Dravid"

    • ரியான் பராக் 4வது வரிசையில் இறங்கி மிகச் சிறப்பாகச் செயல்பட்டார்.
    • ரியான் பராக் எந்த நிலையிலும் பேட்டிங் செய்யக்கூடிய திறன் கொண்டவர்.

    நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் 3 போட்டிகளுக்கு மட்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட்டார்.

    ராஜஸ்தான் அணியின் முதல் 3 போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தி மைதானத்தில் நடைபெறுவதால் அசாம் மாநிலத்தை சேர்ந்த ரியான் பராக் கேப்டனாக நியமிக்கப்பட்டவுள்ளார். காயம் காரணமாக சாம்சன் பேட்ஸ்மேனாக (இம்பாக்ட் பிளேயர்) மட்டும் இந்த போட்டிகளில் விளையாடுவார் என்று அறிவிக்கப்ட்டது.

    அதன்படி ரியான் பராக் கேப்டனாக செயல்பட்ட முதல் 2 போட்டிகளில் ராஜஸ்தான் அணி தோல்வியை தழுவியது. தற்போது 3 ஆவது போட்டியில் இன்று சென்னை அணியை கவுகாத்தி மைதானத்தில் ராஜஸ்தான் எதிர்கொள்கிறது.

    2024 இல் 4 ஆம் வரிசையில் களமிறங்கி சிப்பாராக விளையாடிய ரியான் பராக் இந்தாண்டு 3 ஆம் வரிசையில் களமிறங்கி 4 மற்றும் 25 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

    இந்நிலையில், ரியான் பராக் குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், "ரியான் பராக் 4 ஆம் வரிசையில் இருந்து 3 ஆம் வரிசைக்கு பதவி உயர்வு பெற்றுள்ளார். ரியான் பராக் எங்கள் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர்.

    நேர்மையாகச் சொல்லப் போனால், ரியான் பராக் எவ்வளவுக்கு எவ்வளவு பந்துகள் விளையாடுகிறாரோ அவ்ளவுக்கு அவ்வளவு அணிக்கு நல்லது. ரியான் பராக் 4வது வரிசையில் இறங்கி மிகச் சிறப்பாகச் செயல்பட்டார் என்பது எங்களுக்குத் தெரியும். அனால் அவருக்கு பேட்டிங் செய்ய நிறைய நேரம் தருவதற்காக 3 ஆம் இடத்தில தற்போது இறங்குகிறார்.

    அவருக்கு அதிக நேரம் கிடைத்தால், அவர் அதிக ரன்கள் எடுக்க முடியும், அது அணிக்கு பயனளிக்கும். அவர் எந்த நிலையிலும் பேட்டிங் செய்யக்கூடிய திறன் கொண்டவர்" என்று தெரிவித்தார்.

    • தனக்கு கிடைத்த 2.5 கோடி பரிசுத் தொகையை துணைப் பயிற்சியாளர்களுக்கு டிராவிட் பகிர்ந்து கொடுத்தார்.
    • சாம்பியன்ஸ் ட்ராபியை வென்றதற்காக கவுதம் கம்பீருக்கு பிசிசிஐ 3 கோடி பரிசு தொகை அறிவித்துள்ளது.

    பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது.

    சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ ரூ.58 கோடியை பரிசுத்தொகையாக அறிவித்துள்ளது. வீரர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு 3 கோடியும் துணை பயிற்சி ஊழியர்களுக்கு தலா ரூ.50 லட்சமும் பகிர்ந்து அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தனது துணை ஊழியர்களை விட அதிக பரிசு தொகை வேண்டாம் என்று கூறிய ராகுல் டிராவிட்டின் முன்மாதிரியை கவுதம் கம்பீர் பின்பற்றுவாரா என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    ஸ்போர்ட்ஸ்டார் இதழில் சுனில் கவாஸ்கர் எழுதிய கட்டுரையில், "2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு அப்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தனது சக துணை ஊழியர்களை விட அதிகமான பரிசுத்தொகை வேண்டாம் என்று மறுத்துவிட்டார். மேலும், தனக்கு கிடைத்த 2.5 கோடி பரிசுத் தொகையை துணைப் பயிற்சியாளர்களுக்கு டிராவிட் பகிர்ந்து கொடுத்தார்.

    2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்றதற்காக தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு பிசிசிஐ 3 கோடி பரிசு தொகை அறிவித்துள்ளது. ஆனால் மோர்னே மோர்கெல், திலிப் உள்ளிட்ட துணைப் பயிற்சியாளர்களுக்கு 50 லட்சம் மட்டுமே பரிசாகக் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் கவுதம் கம்பீர், ராகுல் டிராவிட் போல எந்த அறிவிப்பும் வெளியிட்டதாக தெரியவில்லை. அப்படியானால் ராகுல் டிராவிட் நல்ல ரோல் மாடலாக இல்லையா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    • அவர் தற்போது உலகின் நம்பர் ஒன் டி20 வீரராக இருக்கிறார்.
    • ஒவ்வொரு முறையும், சந்தேகத்திற்கு இடமின்றி அவர் விளையாடுகிறார்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 12 சுற்று கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா ஜிம்பாப்வே அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில் சூரியகுமார் யாதவ் 61 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

    போட்டி நிறைவுக்கு பின்னர் மெல்போர்னில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இது குறித்து கூறியதாவது:

    அவர் (சூரியகுமார்) முற்றிலும் தனித்துவமானவர் என்றே நான் நினைக்கிறேன். அவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறார். நல்ல ஃபார்மில் இருக்கும்போது அவர் பேட்டிங் செய்வதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு முறையும், சந்தேகத்திற்கு இடமின்றி அவர் விளையாடுவது, புதிதாக ஒரு நிகழ்ச்சியை பார்ப்பது போலவே இருக்கிறது.

    25 பந்துகளில் 61 ரன்கள் விளாசியது நம்ப முடியாதது. அதனால்தான் அவர் தற்போது உலகின் நம்பர் ஒன் டி20 வீரராக இருக்கிறார். 225 ரன்களுடன், இந்த தொடரில் இந்திய அணியில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீராக அவர் திகழ்கிறார். விராட் கோலி (246) மட்டுமே அவரை விட அதிகமாக ஸ்கோர் செய்துள்ளார்.

    தனது உடலை எவ்வாறு கவனித்துக் கொள்கிறார், உடற் பயிற்சிக்காக எவ்வளவு நேரம் செலவிடுகிறார் என்பதைப் பார்க்கும்போது, நிறைய கடின உழைப்புக்கு அவர் வெகுமதியைப் பெறுகிறார் என்றே நான் நினைக்கிறேன். நீண்ட காலம் இது தொடர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வருங்காலத்தில் டி20 கேப்டனாக என்னை பொருத்த வரை ஹர்திக் பாண்டியா இருக்க வேண்டும்.
    • ஓய்வு பெற்ற யாரையாவது ஒருவரை தேர்வு செய்யுங்கள்.

    ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007-க்குப்பின் 2-வது கோப்பை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா ஃபைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது.

    குறிப்பாக 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவம் நிறைந்த கேப்டன் ரோகித் சர்மா இந்த தொடரில் பேட்டிங்கில் சொதப்பியத்துடன் கேப்டனாகவும் சுமாராகவே செயல்பட்டார். அதை விட கடந்த டி20 உலக கோப்பைக்குப் பின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற அவருக்கு உறுதுணையாக பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ஜாம்பவான் ராகுல் டிராவிட் சோதனை முயற்சி என்ற பெயரில் கடந்த ஒரு வருடமாக செய்த தேவையற்ற மாற்றங்கள் ஏற்கனவே அனைவரையும் அதிருப்தியடைய வைத்தது.

    இந்நிலையில் சீனியர் வீரர்கள் மட்டுமல்லாது பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டையும் மாற்ற வேண்டும் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் வெளிப்படையாக கேட்டுக் கொண்டுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கேப்டன் மட்டுமல்ல டி20 கிரிக்கெட்டை நன்கு புரிந்து கொண்டு சமீபத்தில் ஓய்வு பெற்ற ஒருவரை நீங்கள் பயிற்சியாளராக தேர்வு செய்ய வேண்டும். ராகுல் டிராவிட் மிகவும் மரியாதைக்குரியவர். என்னுடைய நண்பர் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

    நாங்கள் இருவரும் இணைந்து நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளோம். அவரிடம் கிரிக்கெட்டின் அபாரமான மூளை உள்ளது. ஆனால் ஒருவேளை அவரை நீங்கள் டி20 கிரிக்கெட்டின் பயிற்சிளராக நீக்காமல் போனால் குறைந்தபட்சம் அவருக்கு உதவி செய்வதற்காக சமீபத்தில் ஓய்வு பெற்ற ஒருவரை தேர்வு செய்யுங்கள்.

    அதிலும் ஆசிஷ் நெஹ்ரா போன்றவர் சிறந்த கிரிக்கெட் மூளையை கொண்டவர். குஜராத் டைட்டன்ஸ் அணியில் அவர் என்ன செய்தார் என்பதை பாருங்கள். விரைவில் நீங்கள் இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வரும் திட்டத்தை வைத்திருப்பதால் அவர் இந்த நிலைமையில் சரியாக பொருந்தவர்.

    அவரில்லை என்றாலும் சமீபத்தில் ஓய்வு பெற்ற யாரையாவது ஒருவரை தேர்வு செய்யுங்கள். மேலும் வருங்காலத்தில் டி20 கேப்டனாக என்னை பொருத்த வரை ஹர்திக் பாண்டியா இருக்க வேண்டும். அவரை விட சிறந்த தேர்வு யாரும் இருக்க முடியாது. டி20 அணியின் சிறந்த வீரரான அவரைப் போன்ற நிறைய பேர் உங்களுக்கு தேவைப்படுகிறது

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டிராவிட்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், லஷ்மண் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • பவர் பிளேயில் அதிரடியாக விளையாடும் போக்கு இந்திய அணியிடம் இல்லை என விமர்சனம் வைக்கப்பட்டது.

    டி20 உலகக் கோப்பை முடிந்த கையோடு இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டி20, மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது.

    நாளை டி20 கிரிக்கெட் தொடங்குகிறது. முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இளம் வீரர்கள் பலர் களம் காண்க இருக்கிறார்கள்.

    டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தோல்விக்கு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தாததுதான். அதுவும் குறிப்பாக பவர் பிளேயில் அதிரடியாக விளையாடும் போக்கு இந்திய அணியிடம் இல்லை என விமர்சனம் வைக்கப்பட்டது.

    இதனால் நியூசிலாந்து தொடரில் இருந்து இந்திய அணி தனது அணுகுமுறையை மாற்றலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    இந்த நிலையில் பயிற்சியாளரான லஷ்மண் பயமின்றி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள் என இளம் வீரர்களுக்கு அட்வைஸ் வழங்கியுள்ளார்.

    இது குறித்து லஷ்மண் கூறுகையில் டி20 கிரிக்கெட்டில் நாம் சுதந்திரமாக, பயமின்றி விளையாடுவது அவசியம். இந்த எண்ணத்துடன் களத்தில் சென்று விளையாடக் கூடிய வீரர்கள் எங்களிடம் உள்ளனர். இந்த தகவல் கேப்டன் மற்றும் நிர்வாகம் மூலம் வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதுவேளையில், சீதோஷண நிலை, அப்போதைய போட்டியின் சூழ்நிலை ஆகியவற்றை மனதில் வைத்துக் கொண்டு யுக்திகளை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதிகமான பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும் என்றால், டாப் ஆர்டர் வீரர்களில் சுதந்திரமாக நெருக்கடி இன்று தங்களது ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். இதுதான் டி20 விளையாட்டிற்கு தேவை. ஏராளமான அணிகள் இந்த முறையை கொண்டு வர முயற்சிக்கும் வகையில் அப்படிபட்ட வீரர்களை அடையாளம் காணும் தேர்வு நடவடிக்கையை மேற்கொள்ளும்.

    ஹர்திக் பாண்ட்யா அற்புதமான கேப்டன். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் என்ன செய்தார் என்பதை நாம் பார்த்தோம். அயர்லாந்தில் இருந்து அவரிடம் குறிப்பிட்ட நேரத்தை செலவழித்துள்ளேன். அவரது இருப்பும் பணி நெறியும் முன்னுதாரணமானது. அவர் ஒரு வீரர்களின் கேப்டன் மற்றும் அணுகக்கூடியவர். வீரர்கள் அவரை நம்புகிறார்கள். அவர் முன்மாதிரியாக வழி நடத்துகிறார் என்றார்.

    • அயர்லாந்து தொடரின்போது ராகுல் டிராவிட்டுக்கு ஓய்வு வழங்கப்பட்டது
    • தற்போது நியூசிலாந்து தொடரிலும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் ரவி சாஸ்திரி. அவர் பதவிக்காலம் முடிந்த பிறகு ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவரது தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையை எதிர்கொண்டது. இதில் இநதிய அணி அரையிறுதியில் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தது.

    தற்போது ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு சென்றுள்ளது. தலா மூன்று டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டி நாளை தொடங்குகிறது.

    நியூசிலாந்து தொடரில் ராகுல் டிராவிட்டுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. லஷ்மண் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் தலைமை பயிற்சியாளர் அடிக்கடி ஓய்வு எடுப்பது சரியாக இருக்காது என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

    மேலும் இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறியதாவது:-

    நான் ஓய்வு (Brealks)என்று நம்பவில்லை. ஏனென்றால் நான் எனது அணியை புரிந்து கொள்ள விரும்புகிறேன். அதன்பின் அணியை எனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள விரும்புவேன். இந்த ஓய்வுகள் (Breaks)... நேர்மையாக இருக்க உங்களுக்கு இவ்வளவு ஓய்வுகள் தேவையா?. ஐ.பி.எல். தொடரின்போது 2 அல்லது மூன்று மாதங்கள் கிடைக்கும். இது உங்களுக்கு ஓய்வு எடுக்க போதுமானது. ஆனால் மற்ற நேரங்களில், ஒரு பயிற்சியாளர் பயிற்சியாளராகத்தான் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

    இவ்வாறு ரவி சாஸ்திரி குறிப்பிட்டுள்ளார்.

    • சச்சின்- டிராவிட் இணைந்து பேட்டிங் செய்யும்போது ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டுள்ளார்.
    • நடந்த சம்பவத்திற்கு ராகுல் டிராவிட்டிடம் சென்று மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.

    இந்தியா- வங்காளதேசம் அணிகளுக்கு இடையில் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. வங்காளதேச அணியின் பயிற்சியாளராக டொனால்டு உள்ளார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் உள்ளார்.

    இருவரும் அவர்கள் விளையாடிய காலத்தில் தலைசிறந்த வீரர்களாக திகழ்ந்தனர். தென்ஆப்பிரிக்காவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக டொனால்டு திகழ்ந்தார். இவரது பந்து வீச்சை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் நடுவாங்குவார்கள்.

    அதேபோல், எந்தவொரு வேகப்பந்து வீச்சாளர் பந்து வீசினாலும் எளிதாக தடுத்து விளையாடுவார் ராகுல் டிராவிட்.

    1997-ம் ஆண்டு இந்திய அணி தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டர்பனில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியது. அப்போது இலக்கை நோக்கி இந்திய சென்றபோது ராகுல் டிராவிட், சச்சின் தெண்டுல்கர் ஆகியோர் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தனர்.

    இந்த ஜோடியை பந்து வீச்சால் விரைவில் பிரிக்க முடியாத தென்ஆப்பிரிக்கா வீரர்கள், ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் எல்லை மீறியதாக தெரிகிறது.

    இது டொனால்டு மனதில் சங்கடத்தை ஏற்படுத்திக் கொண்டே இருந்திருக்கிறது. தற்போது இருவரும் சந்தித்து பயிற்சியாளராக இருக்கும் நிலையில், அந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார் டொனால்டு, அத்துடன் ராகுல் டிராவிட்டை டின்னருக்கு அழைத்துள்ளார்.

    இதுகுறித்து டொனால்டு தெரிவிக்கும்போது ''டர்பனில் மோசமான நிகழ்வு ஒன்று நடந்தது. நான் அதைப் பற்றி இங்கு பேச விரும்பவில்லை. சச்சின் மற்றும் ராகுல் டிராவிட் அனைத்து வகையிலும் எங்களை சிதைத்துக் கொண்டிருந்தார்கள். நான் கொஞ்சம் அதிகமாக எல்லை மீறி விட்டேன். ராகுல் டிராவிட் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை. அதைத்தவிர ஒன்றுமில்லை.

    நடந்த சம்பவத்திற்கு ராகுல் டிராவிட்டிடம் சென்று மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். அவருடைய விக்கெட்டை வீழ்த்த நான் சற்று சின்னப்பிள்ளை தனமாக நடந்து கொண்டேன். அதற்காக இன்னும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

    அவர் சிறந்த மனிதன். சிறந்த வீரர். ஆகவே, நீங்கள் அதை புரிந்து கொண்டால், உங்களுடைய இரவில் உணவு சாப்பிட விரும்புகிறேன்'' எனத் தெரிவித்தார்.

    இதற்கு ராகுல் டிராவிட், ''நிச்சயமாக, நான் அதை எதிர்பார்க்கிறேன். குறிப்பாக, நீங்கள் பணம் செலுத்துவதாக இருந்தால்...'' எனப் பதில் அளித்துள்ளார்.

    • பயிற்சியாளர்கள் இந்திய அணியில் எதற்கு உள்ளார்கள்? தேர்வுக்குழுவினர் எதற்கு உள்ளார்கள்?
    • குறிப்பாக பிரித்வி ஷா போன்றவர்களை சரியான பாதையில் கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும்.

    இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. அதில் முதலாவதாக நடைபெறும் டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள தலைமையில் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த தொடரில் சமீப காலங்களில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வாய்ப்புக்காக காத்திருக்கும் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் டெல்லியைச் சேர்ந்த இளம் வீரர் பிரிதிவி ஷா இத்தொடரில் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது ஒரு சிலருக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. பயிற்சியாளர் என்ன பண்றிங்க: 2018 அண்டர்-19 உலகக் கோப்பை வென்ற இந்திய கேப்டனாக சாதனை படைத்து சர்வதேச அரங்கில் அறிமுகமான அவர் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். அதனால் சச்சின், சேவாக், லாரா ஆகியோர் கலந்த கலவை என்று அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டினார்.

    அவருக்கு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வுக்குழுவிடம் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு:-

    பயிற்சியாளர்கள் இந்திய அணியில் எதற்கு உள்ளார்கள்? தேர்வுக்குழுவினர் எதற்கு உள்ளார்கள்? அவர்கள் அணியை தேர்ந்தெடுப்பதற்கு மட்டுமல்ல தரமான வீரர்களை கண்டறிந்து அவர்களை போட்டிக்கு தயார்படுத்துவதற்கும் உள்ளனர். தேர்வாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினர் இவர்களைப் போன்ற இளம் வீரர்களை மீண்டும் அணிக்குள் கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.

    குறிப்பாக பிரித்வி ஷா போன்றவர்களை சரியான பாதையில் கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும். அது அணி நிர்வாகத்தின் முக்கிய வேலைகளில் ஒன்றாகும். அணியினரை தயார்படுத்தி பயிற்சிக்கு உதவுவது மட்டும் அவர்களது வேலையல்ல. அந்த வகையில் ராகுல் டிராவிட் அல்லது தேசிய தேர்வுக்குழுவினர் அவரிடம் (பிரிதிவி) பேச்சுவார்த்தை நடத்தி தேர்வு பற்றி தெளிவுபடுத்தியிருக்க வேண்டும்.

    சொல்லப்போனால் அவர் இந்திய அணியை சுற்றியிருக்க வேண்டும். எப்போதும் சரியான பாதையில் இல்லாதவர்களை நீங்கள் அணியை சுற்றியிருக்க வைத்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அவர்களை கண்டுகொள்ளாமல் விட்டால் பின்னர் நீங்கள் அவரைப் போன்ற தரமான வீரரை தேடி அனைத்து இடங்களிலும் அலைய நேரிடும்.

    நாட்டுக்காக விளையாட நீங்கள் போதுமான அர்ப்பணிப்பு ஆர்வத்துடன் அனைத்து அளவுருக்களையும் சரியாக செய்ய வேண்டும். அது உடற்பயிற்சியாக இருந்தாலும் சரி ஒழுக்கமாக இருந்தாலும் சரி. அதை பிரிதிவி ஷா செய்வதற்கு பயிற்சியாளர்கள் தான் தூண்ட வேண்டும். மேலும் அவரைப் போன்ற ஒரு இளம் வீரருக்கு குறைந்தபட்சம் ஓரிரு வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். ஒருவேளை அதிலும் அவர் எதுவுமே செய்யவில்லை என்றால் பின்னர் அவர் நாட்டிற்காக ஆர்வத்துடன் விளையாடுவதற்கு தயாராக இல்லை என்று முடிவெடுக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு உதவ முயற்சிக்கிறோம்.
    • மேலும் அவர்களின் திறமையில் இருந்து சிறந்ததை பெறுவதற்கு சரியான சூழலை உருவாக்குகிறோம்.

    இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் எடுத்தது. இதனால் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இளம் வீரர்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்று கொள்வார்கள் எனவும் அவர்களுக்கு ஆதரவாக இருப்போம் எனவும் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

    இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியதாவது:-

    எந்த வடிவத்திலும் யாரும் நோ-பால் வீச விரும்புவதில்லை. அது குறிப்பாக 20 ஓவர் போட்டிகளில் உங்களை காயப்படுத்தலாம்.

    இந்த இளம் வீரர்களுடன் நாம் பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்று கொள்வார்கள்.

    இந்திய அணியில் நிறைய இளம் வீரர்கள் உள்ளனர். குறிப்பாக பந்து வீச்சில் இளம் வீரர்கள் உள்ளனர். அவர்கள் சில சமயங்களில் இது போன்ற விளையாட்டுகளை விளையாட வேண்டியதிருக்கும். அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு உதவ முயற்சிக்கிறோம். தொழில் நுட்ப ரீதியாக ஆதரவளிக்கிறோம்.

    மேலும் அவர்களின் திறமையில் இருந்து சிறந்ததை பெறுவதற்கு சரியான சூழலை உருவாக்குகிறோம். சர்வதேச கிரிக்கெட்டில் கற்று கொள்வது எளிதானதல்ல. அதிலிருந்து கற்று கொள்ள வேண்டும்.

    நல்ல விஷயம் என்னவென்றால் ஒருநாள் போட்டி உலக கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப்பை மையமாக கொண்டு குறைந்தபட்சம் 20 ஓவர் போட்டியில் நிறைய இளம் வீரர்களை முயற்சித்து பார்க்க எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது என்றார்.

    • மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் தான் டிராவிட் பிறந்தார்.
    • தொடர் நாயகனாக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டார்.

    இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியது. ஆட்டநாயகனாக ஷர்துல் தாகூரும் தொடர் நாயகனாக சுப்மன் கில்லும் தேர்வு செய்யப்பட்டனர்.

    போட்டி முடிந்தவுடன் தொடர் நாயகன் விருது பெற்ற சுப்மன் கில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார்.

    அதில் இந்தூர் ஸ்டேடியத்தில் உங்கள் பெயர் வைக்கப்பட்டுள்ள டிரெஸ்ஸிங் ரூமுக்குள் நுழைவதை எப்படி பார்க்கிறீர்கள் என்று ராகுல் டிராவிட்டிடம் கில் கேட்டார்.


    அதற்கு ராகுல் டிராவிட், "இதற்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இதை நான் பெருமையாக கருதுகிறேன். சில நேரங்களில் சங்கடமாகவும் இருக்கும். நீண்ட ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாட முடிந்ததை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்" என்றார்.

    மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் தான் டிராவிட் பிறந்தார். பின்னர், அவரது குடும்பத்தினர் பெங்களூருக்கு குடிபெயர்ந்தனர். அங்கிருந்துதான் கிரிக்கெட் பயணத்தை ராகுல் தொடங்கினார்.

    இந்தூரில் டிராவிட் பிறந்ததை கொண்டாடும் வகையில், அவரது பெயரை அங்குள்ள மைதானத்தின் டிரெஸ்ஸிங் ரூமிற்கு சூட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உலகக் கோப்பை மிகப்பெரிய போட்டி. இந்தியாவில் 9 நகரங்களில் நடக்கிறது.
    • சூர்யகுமார் யாதவ் நிறைய 20 ஓவர் கிரிக்கெட்டில் விளையாடி இருக்கிறார்.

    சென்னை:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியையொட்டி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) நடக்கிறது. அதற்கு முன்பாக உள்ளூரில் இந்த சீசனில் 9 ஒரு நாள் போட்டிகளில் விளையாட வேண்டி இருந்தது. அதில் 8 ஆட்டங்களில் விளையாடி விட்டோம். இன்றைய ஆட்டம் முடிந்ததும் நிறைய விஷயங்களில் எங்களுக்கு தெளிவு கிடைக்கும். அதை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டியது முக்கியம்.

    உலகக் கோப்பை மிகப்பெரிய போட்டி. இந்தியாவில் 9 நகரங்களில் நடக்கிறது. வெவ்வேறு சீதோஷ்ண நிலையில் ஆட வேண்டி இருப்பதால் தான் இப்போது பரிசோதனை முயற்சியாக ஆடும் லெவனில் பல்வேறு மாற்றங்களை செய்து களம் காணுகிறோம். நிலைமைக்கு தக்கபடி மாற்றம் செய்யும் வகையில் அணியில் வீரர்கள் வேண்டும். உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணிக்கு ஏறக்குறைய 17-18 வீரர்களை அடையாளம் கண்டு விட்டோம். அதில் சிலர் காயத்தில் இருந்து மீண்டு வர வேண்டி உள்ளது.

    துரதிர்ஷ்டவசமாக ஸ்ரேயாஸ் அய்யர் காயத்தால் இந்த தொடரில் விளையாட முடியாமல் போய் விட்டது. அனேகமாக 4-வது வரிசையில் அவருக்கு தான் அண்மை காலமாக அதிகமான வாய்ப்புகள் வழங்கப்பட்டது. இப்போது அவர் இல்லாததால் சூர்யகுமார் அந்த வரிசையில் ஆடுகிறார். முதல் இரு ஆட்டங்களிலும் சூர்யகுமார் 'டக்-அவுட்' ஆனாலும் உண்மையில் அவரது பார்ம் குறித்து கவலைப்படவில்லை. அவர் இரண்டு நல்ல பந்தில் தான் ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் நிறைய 20 ஓவர் கிரிக்கெட்டில் விளையாடி இருக்கிறார். ஐ.பி.எல்.-ல் மட்டும் 10 ஆண்டுகள் விளையாடி உள்ளார். அதே சமயம் அவர் ஒரு நாள் கிரிக்கெட்டை அதிகமாக விளையாடியதில்லை. 50 ஓவர் கிரிக்கெட்டில் இப்போது தான் நிறைய கற்று வருகிறார். எனவே அவருக்கு போதுமான வாய்ப்புகளை வழங்கி பொறுமை காக்க வேண்டியது அவசியம். நிச்சயம் அவர் நல்ல நிலையை எட்டுவார்.

    இவ்வாறு டிராவிட் கூறினார்.

    • குஜராத் அணிக்காக ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஷிப் சிறப்பாகவே இருந்தது.
    • என்னைப் பொருத்தவரை ஹர்திக் பாண்டியாவிற்கு தேவையான ஆதரவை ராகுல் டிராவிட் கொடுப்பதில்லை என நினைக்கிறேன்.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் 2 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது.

    தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்வியடைந்ததன் மூலம் ஹர்திக் பாண்ட்யா கேப்டன்ஷிப் குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யாவிற்கு தேவையான ஆதரை ராகுல் டிராவிட் கொடுப்பதில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்திவ் படேல் கூறியுள்ளார்.


    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஹர்திக் பாண்டியா டி20 தொடரில் இரண்டு முக்கிய தவறுகளை செய்து விட்டார். ஒன்று ஹர்திக் பாண்டியா முதல் டி20 போட்டியின் போது பவர் பிளே ஓவரில் அக்சர் பட்டேலை வீச சொன்னார். அதுவும் நிக்கோலஸ் பூரான் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அக்சர் பட்டேல் வீசியதால் அந்த ஓவர் அதிக ரன்கள் சென்றது.

    இதேபோன்று இரண்டாவது டி20 போட்டியில் சாஹல் 4 ஓவர்கள் கொடுக்காமல் ஹர்திக் பாண்டியா விட்டு விட்டார். ஆனால் குஜராத் அணிக்காக ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஷிப் சிறப்பாகவே இருந்தது. ஆனால் அங்கு அவருக்கு ஆசிஸ் நெஹ்ராவின் ஆதரவு இருக்கிறது. ஆனால் ராகுல் டிராவிட் டி20 கிரிக்கெட் போட்டிக்கு ஏற்ற பயிற்சியாளர் கிடையாது. நெஹ்ரா போன்ற துடிப்பான பயிற்சியாளர் டி20 கிரிக்கெட்டிலும் வேண்டும்.

    ஹர்திக் பாண்டியாவுக்கு அந்த வெறி இருக்கிறது. ஆனால் அவருக்கு வேண்டிய ஆதரவு கிடைக்கவில்லை. என்னைப் பொருத்தவரை ஹர்திக் பாண்டியாவிற்கு தேவையான ஆதரவை ராகுல் டிராவிட் கொடுப்பதில்லை என நினைக்கிறேன். டி20 கிரிக்கெட் பொறுத்தவரை சில சில தருணங்கள் தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றும் என்றும் இதனால் ஒவ்வொரு முடிவும் டி20 போட்டியில் முக்கியமானவை என்றும் குறிப்பிட்டுள்ள பார்த்தீவ் பட்டேல், அந்த முடிவுகளை கேப்டன் எடுப்பதற்கு பயிற்சியாளர் துணை நிற்க வேண்டும்.

    இவ்வாறு படேல் கூறியுள்ளார்.

    ×