என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rajapalayam"

    • ராஜபாளையத்தில் கனமழை பெய்தது. இதனால் அய்யனார் கோவில் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் நகருக்கு குடிநீர் ஆதாரமாக திகழும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் நேற்று இரவு கனமழை பெய்தது.

    மழையின் காரணமாக அய்யனார் கோவில், நீராவி ஆறு, 6-வது மைல் நீர்த்தேக்க ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    நகர்மன்ற தலைவர் பவித்ராஷியாம்ராஜா ஆலோசனையின்படி அய்யனார் கோவில் ஆற்றில் இருந்து வரக்கூடிய தண்ணீர் 6-வது மைல் நீர்த்தேக்கத்தில் திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    இதன் காரணமாக இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதிதெரிவித்தார்.

    மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நகர் பகுதியில் தொடர்மழை பெய்ததால் நிலத்தடி நீரும் உயர்ந்து வருவதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • ராஜபாளையத்தில் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.
    • குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சத்திரப்பட்டி சாலையில் ெரயில்வே மேம்பால பணிகள், ராஜபாளையம் நகர் பகுதி முழுவதும் பாதாள சாக்கடை திட்டம், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் ஆகிய 3 பணிகளும் ஒரே சமயத்தில் தொடங்கப்பட்டது. இதனால் அனைத்து பாதைகளும் குண்டும் குழியுமாகி விட்டது.

    பொதுமக்கள் அன்றாடம் செத்துப் பிழைக்கும் நிலை இருந்து வருகிறது. குறிப்பாக ராஜபாளையத்தில் பிரதான சாலையான தென்காசி தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

    இதில் ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் முதல் புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் வரை செல்வதற்கு குறைந்தபட்சம் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் ஆகிறது.

    இதனால் ராஜபாளையம் வழியாக செல்லும் கனரக வாகனங்கள் பெரும்பாலும் ராஜபாளையத்தை தவிர்த்து வேறு வழியாக சென்று வருகின்றனர். உள்ளூர் வாசிகள் சென்றாக வேண்டிய கட்டா யத்தில் தூசிகளுக்கிடையே சென்று வருகிறார்கள்.

    இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கும், கலெக்டருக்கும் ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் சார்பில் நினைவூட்டல் செய்தும் எந்த ஒரு பலனும் இல்லை.

    இதை கண்டித்தும், சாலை மற்றும் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலிறுத்தி தொழில் வர்த்தக சங்கம் சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. 95 சதவீத கடைகள் அடைக்கப்பட்டதால் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. கடை அடைப்பால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

    • ராஜபாளையம் அன்னப்பராஜா பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
    • தலைமையாசிரியர் ரமேஷ் வரவேற்றார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா பள்ளிச்செயலர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமையில் நடந்தது. தலைமையாசிரியர் ரமேஷ் வரவேற்றார். ராஜபாளையம் நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம்ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விலையில்லா சைக்கிள்களை மாணவ,மாணவிகளுக்கு வழங்கி பேசினார்.

    ராமச்சந்திர ராஜா அறக்கட்டளை தாளாளர் மஞ்சுளா கிருஷ்ணமூர்த்திராஜா, அறக்கட்டளை உறுப்பினர்கள் ராம்விஷ்ணு ராஜா, ராம்வெங்கட்ராஜா மற்றும் ராகஜோதி ராம்விஷ்ணு ராஜா, கருத்தாளர்கள் சிவகுமார், பழனியப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர். உதவி தலைமையாசிரியர் மாரியப்பன் நன்றி கூறினார்.

    • முதல்-அமைச்சருக்கு ராஜபாளையம் ஒன்றிய தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
    • விருதுநகரில் வருகிற 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. முப்பெரும் விழா நடக்கிறது.

    ராஜபாளையம்

    விருதுநகரில் வருகிற 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. முப்பெரும் விழா நடக்கிறது. இதில் பங்கேற்கும் மு.க.ஸ்டாலினுக்கு ராஜபாளையம் ஒன்றிய தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்தும், இந்த விழாவில் ஒன்றிய தி.மு.க. சார்பில் திரளான தொண்டர்களுடன் பங்கேற்பது குறித்தும் ராஜபாளையம் ஒன்றிய தி.மு.க. அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

    ஒன்றிய செயலாளரும், ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான தங்கப்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தனுஷ் குமார் எம்.பி. முன்னிலை வகித்தார்.

    இந்த கூட்டத்தில் யூனியன் சேர்மன் சிங்கராஜ், பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், நகர செயலாளர் (வடக்கு) மணிகண்டராஜா, ஒன்றிய அவைத்தலைவர் மிசா நடராஜன், பேரூர் சேர்மன் ஜெயமுருகன், பாலசுப்பிரமணியன், பேரூர் செயலாளர்கள் இளங்கோவன், சிங்கப்புலி அண்ணாவி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, ஒன்றிய துணை சேர்மன் துரைகற்பகராஜ், ஒன்றிய நிர்வாகிகள் மலர்மன்னன், குமார், ஜெயந்தி, காந்தி, திருக்குமரன், ஜெயராஜ் மற்றும் கிளை செயலாளர்கள், கவுன்சிலர்கள், நிர்வாகிகள், முன்னோடிகள் கலந்து கொண்டனர்.

    • சித்தி விநாயகர் சிலை ராஜபாளையம் வந்து சேர்ந்தது.
    • சுபகிருதி விநாயகர், சகாரம்ப விநாயகர், சித்தி விநாயகர் விக்ரகங்களின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தர்மாபுரம்தெரு மாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர் நற்பணிமன்ற தலைவரும், சமூக சேவகருமான ராமராஜ் பொதுமக்கள் பங்களிப்போடு 35-வது ஆண்டு விநாயகர் சதூர்த்தி வீதி உலாவை நடத்துகிறார்.

    இதையொட்டி பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மும்பையில் வடிவமைக்கப்பட்ட மும்பை சித்தி விநாயகர், வல்லப விநாயகர் சிலை இன்று அதிகாலை ராஜபாளையம் வந்து சேர்ந்தது. மேலும் நடப்பு தமிழ் வருடத்தை போற்றும் வகையிலான சுபகிருதி விநாயகர், சகாரம்ப விநாயகர், சித்தி விநாயகர் விக்ரகங்களின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

    • தமிழக அரசு விவசாயிகளுக்கான நகைக்கடனை முறையாக தள்ளுபடி செய்யவில்லை.
    • ராஜபாளையம்-புளியரை நான்கு வழிச்சாலைப் பணியை விரைவு படுத்த வேண்டும்.

    கடையநல்லூர்:

    தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவர் யுவராஜா கடையநல்லூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேசியக்கொடி

    தி.மு.க. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. விவசாயிகளுக்கான நகைக்கடனை முறையாக தள்ளுபடி செய்யவில்லை. ஏமாற்றத்தை மட்டுமே மக்களுக்கு கொடுத்து வருகிறது.

    குற்றாலம்

    மதுரையில் நடைபெற்ற சம்பவம் தவறானதுதான். ஆனால் அதே நேரம் அநாகரீக அரசியலுக்கு வித்திட்டது தி.மு.க.தான். குற்றாலத்திற்கு இந்தியா முழுவதும் இருந்து ஏராளமானோர் வருகின்றனர்.

    குற்றாலம் மலையின் மேல்பகுதியில் அணை கட்டி வருடம்தோறும் தண்ணீர் விழ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வேளாண் கல்லூரி

    ராஜபாளையம்-புளியரை நான்கு வழிச்சாலைப் பணியை விரைவு படுத்த வேண்டும். தென்காசி மாவட்டத்தில் வேளாண் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளை கொண்டு வர வேண்டும்.

    மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் மின்வேலி அமைத்து விவசாய நிலங்களை வன விலங்குகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும். செண்பகவல்லி அணை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

    தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்ப–ட்டுள்ளது. காவல்துறைக்கு பணிச்சுமை அதி கரித்துள்ளது. தமிழகத்தில் விளம்பர ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க.வுடன் எங்கள் கூட்டணி தொடர்ந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது தென்காசி மாவட்ட தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் அய்யாத்துரை, மாநில இளைஞரணி துணைத் தலைவர் கார்த்தி, நகர த.மா.கா. தலைவர் மக்தும், இளைஞரணி தலைவர் பூமாரியப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


    • செஸ் ஒலிம்பியாட்போட்டி சிவகாசி-குற்றாலத்திற்கு சைக்கிள் பேரணி சென்ற கல்லூரி மாணவர்களை ராஜபாளையத்தில் வரவேற்றனர்.
    • 240 கி.மீ. தூர சைக்கிள் பேரணியை தொடங்கினார்கள்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தனியார்கல்லூரியின் உடற் கல்வியியல் துறை மாணவர்கள் 210 பேர் தமிழக அரசு சார்பாக மாமல்லபுரத்தில்நடந்து வரும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி பற்றியவிழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த திட்டமிட்டனர்.

    இதைத்தொடர்ந்து சிவகாசியில் இருந்து குற்றாலம் வரை 240 கி.மீ. தூர சைக்கிள் பேரணியை தொடங்கினார்கள். கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த சைக்கிள் பேரணி ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக ராஜபாளையம் வந்தடைந்தது.

    ராஜபாளையம் அன்ன ப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் வைத்து தாளாளர்

    என். ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா, தலைமை ஆசிரியர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் உடற்கல்வி மாணவர்கள் வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் தளவாய்புரம், முகவூர், தேவதானம்

    • ராஜபாளையத்தில் இரட்டைமலை சீனிவாசன் உருவப்படம் திறக்கப்பட்டது.
    • மாநில தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம்-மதுரைரோட்டில் பழைய பஸ் நிலையம் அருகே சிவகுலத்தோர் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் இரட்டைமலை சீனிவாசன் உருவப்பட திறப்பு விழா நடந்தது.

    மாநில தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் வேல்முருகன், பொருளாளர் சுகுநாதன் முன்னிலை வகித்தனர்.மாநில மகளிரணி தலைவி கலையரசி வரவேற்றார்.

    முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லிங்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இரட்டைமலை சீனிவாசனின் உருவ படத்தை திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் வெங்கடேஷ், மாவட்ட தலைவர் லட்சுமிகாந்தன், மாவட்டமகளிரணி தலைவி தமிழ்செல்வி, நகர செயலாளர் சரவணகுமார், ஒன்றிய செயலாளர் ராசுக்குட்டி, வனராஜ், முனியசாமி,இளைஞரணி முனிசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்ட செயலாளர் குமரன் நன்றி கூறினார்.

    • ராஜபாளையம் பகுதியில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
    • ராஜபாளையம் மின்வாரிய பகிர்மானம் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு அறிவிப்பு

     ராஜபாளையம்

    ராஜபாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (7-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பி.எஸ்.கே நகர், அழகைநகர், தெற்கு மலையடிபட்டி, சங்கரன்கோவில்முக்கு, தென்காசிரோடு, அரசு மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம், ஜ.என்.டி.யு.சி.நகர், பாரதிநகர்,கே.ஆர்.நகர், சமுசிகாபுரம்,சத்திரப்பட்டி, எஸ்.ராமலிங்காபுரம், கலங்காபேரி புதூர், மொட்டைமலை,வ.உ.சி நகர்,பி.ஆர்.ஆர் நகர், பொன்னகரம்,எம்.ஆர்.நகர், லட்சுமியாபுரம்,ராம்கோ நகர்,

    பி.டி.ஆர் நகர், நத்தம்பட்டி,வரகுணராமபுரம்,அம்மன்கோவில்பட்டி, போலீஸ்காலனி,ஸ்ரீபுரம், மீனாட்சிபுரம், ஆண்டாள்புரம், வேப்பம்ப ட்டி, சங்கரபாண்டியபுரம்ம ற்றும் தொட்டியபட்டி உப மின் நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு காரணமாக புதுப்பட்டி, கோதைநாச்சியார்புரம், கொத்தன்குளம்,தொட்டியபட்டி, முத்துலிங்காபுரம், அழகாபுரி,கலங்காபேரி, கலங்காபேரி புதூர், ராஜீவ்காந்தி நகர், இ.எஸ்.ஐ காலனி, வேட்டை பெருமாள்கோவில், விஷ்ணுநகர், ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை ராஜபாளையம் மின்வாரிய பகிர்மானம் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

    ராஜபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் புது தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 74). இவர் அதே பகுதியில் உள்ள பஸ் நிலையம் முன்பு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக கணேசன் மீது மோதியது.

    இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக சேத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் விசாரணை நடத்தி மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய சொக்கநாதன் புத்தூரை சேர்ந்த யோகராஜ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ராஜபாளையத்தில் மது-புகையிலை விற்ற 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவின் பேரிலும், ராஜபாளையம் டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் ஆலோசனையின் பேரிலும் ராஜபாளையம் பகுதியில் சட்ட விரோதமாக மது-புகையிலை பொருட்கள் விற்பதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    நேற்று ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து சென்றனர். அப்போது பல்வேறு பகுதிகளில் பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

    இது தொடர்பாக பூபால்பட்டி தெருவைச் சேர்ந்த அக்னி (வயது 40), சின்ன சுரைக்காய்பட்டியைச் சேர்ந்த பழனிசெல்வம் (42), டி.பி.மில்ஸ் ரோடு ராதாகிருஷ்ணன் (45), சுந்தரநாச்சியாபுரம் பீட்டர் பால்ராஜ் (46), சத்திரபட்டி சீனிவாசன் (35), வி.புதூர் தங்கபாக்கியம் (36), அய்யனாபுரம் தண்டாயுதபாணி (39) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 1,150 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ராஜபாளையம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் லிங்குசாமி (தெற்கு), அய்யாத்துரை பாண்டியன் (தளவாய்புரம்) மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் (சேத்தூர்) ஆகியோர் ரோந்து சென்றனர்.

    அப்போது மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்ற மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த கென்னடி (55), வடக்கு மலையடிப்பட்டியைச் சேர்ந்த கண்ணன் (42), இனாம் கோவில்பட்டியைச் சேர்ந்த அன்பு ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 28 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ராஜபாளையம் அருகே வாலிபரை கொன்று கிணற்றில் உடலை வீசிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    விருதுநகர்:

    ராஜபாளையம் அருகே உள்ள நக்கனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கி (வயது 34). இவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தார். தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர்.

    விசாரணையில், சம்பவத்தன்று இசக்கி குடிபோதையில் இருந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (24), முனீஸ்வரன் (28) ஆகியோரும் மது குடித்துவிட்டு வந்து இசக்கியிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. இதில் இசக்கியை, 2 பேரும் கொலை செய்து உடலை கிணற்றில் வீசியுள்ளனர் என தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    ×