என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rameswaram"

    • மீனவர்களின் பிரச்சனைகளுக்கும் மத்திய அரசு துணை நிற்கும் என்றார் பிரதமர் மோடி.
    • எனக்கு கடிதம் எழுதும் அரசியல் தலைவர்கள், கையெழுத்தையாவது தமிழில் போடுகள்.

    ராமேஸ்வரத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ் மொழியின் பாரம்பரியம் உலகில் உள்ள ஒவ்வொரு பகுதிகக்கும் சென்றடைந்துள்ளது.

    21ம் நூற்றாண்டில் தமிழகத்தின் பாரம்பரியத்தை மேலும் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.

    மீனவர்களின் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் மத்திய அரசு துணை நிற்கும்.

    மத்திய அரசின் முயற்சியால் கடந்த 10 ஆண்டுகளில் 3700 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

    தமிழகத்தில் இருந்து தமக்கு கடிதம் எழுதுபவர்களின் கையெழுத்து ஆங்கிலத்திலேயே உள்ளது.

    எனக்கு கடிதம் எழுதும் அரசியல் தலைவர்கள், கையெழுத்தையாவது தமிழில் போடுகள்.

    100 ஆண்டுக்கு முன்பு பாம்பன் பாலத்தை கட்டியது ஒரு குஜராத்தி. இன்று புதிய பாம்பன் பாலத்தை திறந்த நானும் குஜராத்தி.

    தேசத்தின் அனைத்து இடத்திலும் பாஜக தொண்டர்கள் மக்களுக்கு சேவை ஆற்றுவதை பார்த்து பெருமைப்படுகிறேன்.

    சேவையாற்றும் கோடிக்கணக்கான பாஜக தொண்டர்களுக்கு நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.

    நன்றி, வணக்கும், மீண்டும் சந்திக்கிறேன் என தனது உரையை பிரதமர் மோடி நிறைவு செய்தார்.

    • காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இருந்தபோது தமிழகத்திற்கு வழங்கப்பட்ட நிதியை விட கூடுதலாக நிதி வழங்கப்பட்டுள்ளது.
    • 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு 3 மடங்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.

    ராமேஸ்வரத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அப்போது அவர் ஜம்முவில் உயர்மட்ட பாலம், மும்பையில் மிக நீளமான ரெயில் பாலம், பாம்பனில் செங்குத்து தூக்குப்பாலம் என பட்டியலிட்டு பிரதமர் மோடி பேசினார்.

    மேலும் அவர் கூறியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

    10 ஆண்டுகளில் சாலை, விமானம், துறைமுகம், குடிநீர், கேஸ் போன்றவைகளுக்காக கட்டமைப்புகள் 6 மடங்கு அதிகரிப்பு.

    இந்தியாவில் முதல் புல்லட் ரெயில்களுக்கான பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு உள்ளது.

    காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இருந்தபோது தமிழகத்திற்கு வழங்கப்பட்ட நிதியை விட கூடுதலாக நிதி வழங்கப்பட்டுள்ளது.

    10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு 3 மடங்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டிற்கு பல திட்டங்கள், கூடுதல் நிதி ஒதுக்கியும் சிலர் அழுதுகொண்டே இருக்கிறார்கள், அவர்கள் அழுதுவிட்டு போகட்டும்.

    பா.ஜ.க. ஆட்சிக்கு முன்னதாக தமிழக ரெயில்வேக்கு ரூ.900 கோடி மட்டுமே கிடைத்தது. தற்போது ரூ.6000 கோடிக்கு மேல் ஒதுக்கீடு.

    ரெயில்வே துறையில் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு 7 மடங்கு நிதி அதிகமாக வழங்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு ரெயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    10 ஆண்டுகளில் கிராமப்புறம், நெடுஞ்சாலைகள் துறை மூலம் தமிழ்நாட்டில் 4,000 கி.மீ. அளவிற்கு சாலை போடப்பட்டுள்ளது.

    தற்போது ரூ.8000 கோடி மதிப்பிலான சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் வல்லமை எவ்வளவு உயர்கிறதோ, அதே அளவு இந்தியாவில் வலிமை உயரும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழகத்தின் சங்க இலக்கியத்திலும் ராமரை பற்றி கூறப்பட்டுள்ளது.
    • புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாம்பன் பாலத்தை உருவாக்கிய அனைவருக்கும் பாராட்டுகள்.

    ராமேஸ்வரத்தில் நடைபெறும் விழாவில் வணக்கம் என தமிழில் பிரதமர் மோடி தனது உரையைத் தொடங்கினார்.

    அப்போது ராம நவமி நன்னாளில் ஸ்ரீராம் என முழக்கமிடுங்கள் என பிரதமர் கூறிய உடன் அனைவரும் ஸ்ரீராம் என முழக்கமிட்டனர்.

    விழாவில் அவர் மேலும் கூறியதாவது:-

    ராம நவமி நாளில் ராமநாத சுவாமி கோவிலில் தரிசனம் செய்தது எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன். ராமேஸ்வரம் பாரத ரத்னா கலாம் அவர்களின் பூமி, அறிவியலும் ஆன்மீகவும் இணைந்தது தான் வாழ்வு என்பதை நினைவுபடுத்துகிறது.

    தமிழகத்தின் சங்க இலக்கியத்திலும் ராமரை பற்றி கூறப்பட்டுள்ளது. சற்று நேரம் முன்புதான் அயோத்தியா ராமர் கோவிலில் ராமரின் நெற்றியில் சூரிய கதிர்கள் தெரிந்தன.

    புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாம்பன் பாலத்தை உருவாக்கிய அனைவருக்கும் பாராட்டுகள். பாம்பன் பாலம் தான் நாட்டின் முதல் செங்குத்து தூக்கு ரெயில் பாலம். பாம்பன் பாலப்பணிகள் பல ஆண்டுகளாக நடந்தாலும் அதனை திறந்து வைக்க வாய்ப்பு கிடைத்தது பெருமை.

    ராமேஸ்வரத்தில் இருந்து பிற பகுதிகளுக்கு ரெயில் சேவை கிடைப்பதன் மூலம் வளர்ச்சி மேம்படும் என பிரதமர் நம்பிக்கை. ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை வரை இயங்கும் ரெயில் மூலம் சுற்றுலா, வேலைவாய்ப்பு போன்றவை அதிகரிக்கும். நாட்டின் பல துறைகளின் செயல்பாடுகளை 6 மடங்கு உயர்த்தி உள்ளோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ராமேஸ்வரம் வந்தடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்றார்.
    • ராமேஸ்வரம் வந்த பிரதமர் மோடியை தமிழக அரசு சார்பில் சால்வை அணிவித்து அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்றார்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • தொடர் விடுமுறையையொட்டி ராமேசுவரத்தில் இன்று குவிந்த சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
    • புனித தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    ராமேசுவரம்

    ெதன்தமிழகத்தின் பிர சித்தி பெற்ற புண்ணிய ஸ்தலமாக விளங்கும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்ேதாறும் ஆயி ரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    இங்குள்ள அக்னி தீர்த்தகடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது இந்துக்களின் கடமையாக கருதப்படுகிறது.

    இதன் காரணமாக ராமே சுவரத்தில் நாள்தோறும் பக்தர்கள் கூட்டம் காணப் படும். குறிப்பாக அமா வாசை, விடுமுறை நாட்களில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகரித்து காணப்படும்.

    இந்த நிலையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமையான இன்று வழக்கத்தைவிட பக்தர்கள், சுற்றுலா பயணி களின் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

    அதிகாலை முதலே அக்னி தீர்த்தகடலில் பெண்கள் உள்பட ஏராள மானோர் புனித நீராடி பின்னர் கோவிலில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    அதேபோல் ராமேசு வரத்தில் உள்ள தனுஷ் கோடி, அரிச்சல் முனை, அப்துல்கலாம் நினைவு மண்டபம் போன்ற பகுதி களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

    • ராமேசுவரத்தில் பக்தர்கள் வெள்ளத்தில் ஆடித்தேரோட்டம் நடந்தது.
    • பர்வதவர்தினி அம்பாள் வெள்ளி ரதத்தில் வீதிஉலா வந்தார்.

    ராமேசுவரம்

    ராமேசுவரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராமநாத சுவாமி கோவிலில் கடந்த 13-ந் தேதி ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 17 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை, இரவில் சுவாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சியளித்து வருகின்றனர்.

    கடந்த 17-ந் தேதி ஆடி அமாசாசையன்று ராமர் தங்ககருட வாகனத்தில் அக்னி தீர்த்த கடலில் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. 19-ந் தேதி பர்வதவர்தினி அம்பாள் வெள்ளி ரதத்தில் வீதிஉலா வந்தார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சி யான ஆடித்தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) விமரிசையாக நடந்தது. முன்னதாக ராமநாத சுவாமி-பர்வதவர்தினிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கா ரங்கள் நடைபெற்றன. காலை 9.30 மணியளவில் அம்பாள் திருத்தேரில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்த பின் தேரோட்டம் தொடங்கியது. பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    • பாதயாத்திரை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29-ந் தேதி தொடங்கியது.
    • 4,000 கிலோ மீட்டர் தெர்மாகோல் மூலம் நமஸ்காரம் செய்து கொண்டே யாத்திரை செல்கிறோம்.

    வந்தவாசி:

    மத்திய பிரதேச மாநிலத்தில் கங்காப்பூர் என்ற இடத்தில் கோலோ கோதாம் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது.

    கொரோனா தாக்கத்திலிருந்து விடுபடவும் இது போன்ற கொடிய நோய் மீண்டும் உலகம் சந்திக்க கூடாது என்ற நோக்கத்திலும் ஆசிரமத்தில் உள்ள சீடர்கள் 3 பேர் சாலையில் ஊர்ந்தப்படி ராமேஸ்வரம் வரை யாத்திரை செல்ல முடிவு செய்தனர்.

    அதன்படி அவர்களுடைய பாதயாத்திரை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29-ந் தேதி தொடங்கியது.

    சீடர்கள் 3 பேரும் சாலையில் தெர்மாகோல் சீட் மீது படுத்து ஊர்ந்த படி ராமேஸ்வரம் நோக்கி பாதரையாத்திரையாக செல்கின்றனர்.

    இவர்கள் நேற்று திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் ஊர்ந்தபடி யாத்திரை சென்றனர். இதனை கண்ட பொதுமக்கள் அவர்களை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

    உலக நன்மைக்காகவும் கொரோனா போன்ற கொடிய நோய் மீண்டும் பரவக்கூடாது என்ற நோக்கத்திலும் உத்தரகாண்டில் இருந்து ராமேஸ்வரம் வரை 4,000 கிலோ மீட்டர் தெர்மாகோல் மூலம் நமஸ்காரம் செய்து கொண்டே யாத்திரை செல்கிறோம்.

    தினமும் 10 கிலோமீட்டர் வரை செல்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

    • தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளதாக ராமேசுவரம் கூட்டத்தில் அமித்ஷா கூறியுள்ளார்.
    • உதயநிதியை முதல்வராக்க ஸ்டாலின் விரும்புகிறார்.

    ராமேசுவரம்

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' நடைபயணத்தை ராமேசுவரத்தில் நேற்று தொடங்கினார். இதன் தொடக்க விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழகத்தின் பாரம்பரி யத்தையும், பெருமையையும் பதிய வைக்கும் பயணமாக அண்ணாமலையின் நடைபயணம் அமையும். இது வெறும் அரசியல் சார்ந்த பயணம் அல்ல. தமிழகத்தில் குடும்ப ஆட்சியை ஒழிக்கும் பயணமாக இருக்கும்.

    ஏழைகளில் நலன் கருதி முன்னாள் முதல்- அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்தி உள்ளது. அதனை மீண்டும் செயல்படுத்த இந்த நடைபயணம் வழிவகுக்கும். தமிழ் மொழியின் பெருமை யை பிரதமர் மோடி உலகெங்கும் பறை சாற்றி வருகிறார்.

    ஐக்கிய நாடுகள் சபை, ஜி20 மாநாடு என உலக ளவிலான நிகழ்வுகளில் தமிழ் மொழி பெருமை குறித்து பிரதமர் மோடி பேசியுள்ளார். தமிழர்களின் பாரம்பரி யத்தை பாதுகாக்க இலங்கை யில் ரூ.120 கோடி மதிப்பில் கலாச்சார மையம் அமைக் கப்பட்டுள்ளது.

    பாரதியாரின் பிறந்தநாள் இந்திய தேசிய மொழிகள் தினமாக அறிவிக்கப் பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழகத்தின் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது என எண்ணற்ற தமிழ் பணிகளை பிரதமர் மோடி செய்துள்ளார்.

    நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசாக தமிழகத்தின் தி.மு.க. அரசு உள்ளது. தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. அமலாக்கத் துறையால் ஊழல் வழக்கில் அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்ப டுகிறார். அவரை பதவியில் இருந்து நீக்காமல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மவுனம் சாதிக்கிறார். அதற்கு அவர் வெட்கப்பட வேண்டும்.

    மத்தியில் 10 ஆண்டுகளாக கூட்டணி ஆட்சி செய்த காங்கிரஸ் மற்றும் தி.மு.க. மக்களிடம் வாக்கு கேட்க செல்லும் போது 2ஜி, காமன்வெல்த், ஹெலிகாப்டர், இஸ்ரோவில் செய்த ஊழல்கள் தான் நினைவுக்கு வரும். இலங்கை தமிழர்களை அழிக்க கார ணமாக இருந்தது தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி.

    உதயநிதியை முதல்வராக்க ஸ்டாலின் விரும்புகிறார். அவரை போல் அவரது கூட்டணி தலைவர்களும் தங்களது குடும்ப உறுப்பினர்களை முன்னிலைப் படுத்து கின்றனர். அண்ணா மலையின் இந்த நடை பயணம் முடியும் போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்கும். வரும் மக்களவை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் அதிக எம்.பிக்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் ஆர். சி. பால் கனகராஜ், வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் வி. வணங்காமுடி, மாநிலத் துணைத் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சஞ்சய் ராமசாமி, மற்றும் மாநில செயலாளர்கள், ஆர். பரமசிவம், பா. வஜ்ரவேலு, எஸ். திவாகர், ஆர். சி. கார்த்திகேயன், சி. எம். சஜு,

    ராமநாதபுரம் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் தரணி ஆர்.முருகேஷன், மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.பி.எஸ். நாகேந்திரன், ஓ.பி.சி அணி மாநில செயலாளர் கவுன்சிலர் முருகன், பட்டியணி முன்னாள் மாவட்ட தலைவர் ரமேஷ் கண்ணன், உள்ளபட பலர்.

    முதுகுளத்தூர் அ.தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் செந்தில்குமார், மாநில இளைஞர் அணி செயலாளர் டாக்டர் ராம்குமார், பா.ஜ.க. மாநில ராணுவ அணி செயலாளர் எம்.சி. ரமேஷ்,

    மாநில பொதுச் செய லாளர் ராம.சீனிவாசன், மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் மகா.சுசீந்திரன், மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு, பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், மாவட்ட பொதுச் செயலாளர் ராஜ்குமார், மாவட்ட செயலாளர்கள் சுப்பா நாகலு, ஓம்சக்தி தனலட்சுமி, கோவில் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் காந்திகுமாரி, மாவட்ட ஓ.பி.சி. அணி தலைவர் சரவணகுமார், விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் கிருஷ்ணன், மதுரை காளவாசல் மண்டல பொதுச்செயலாளர் ஸ்ரீராம், ஊடக பிரிவு மாவட்டத்தலைவர் ரவிச்சந்திரபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ராமேசுவரம் பகுதியில் 2 நாட்கள் மின்தடை ஏற்படும்.
    • மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட மின்வாரியம் தெரிவித்துள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் துணை மின் நிலையத்தில் அரியமான் முதல் ராமேசுவரம் வரை சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை (7-ந்தேதி) மற்றும் மறுநாள் (8-ந்தேதி) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்காணும் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.

    மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் வருமாறு:-

    அரியமான், சுந்தரமுடையான், வேதாளை, மரைக்கா யர் பட்டினம், மண்டபம், பாம்பன், அக்காள்மடம், ராமேஸ்வரம் பேருந்து நிலையம் , நீதிமன்றம், திட்டக்குடி, கோவில், வேர்க்கோடு, புதுரோடு தங்கச்சிமடம், ஆத்திக்காடு, சத்யா நகர், செம்ம மடம், மெய்யம்புளி.

    பொந்தபுளி, ராமர் தீர்த்தம் வடக்கு மற்றும் தெற்கு, மார்க்கெட் தெரு, பருவதம், பாரதி நகர், முருங்கை வாடி, எம் ஆர் டி நகர், கரையூர், மல்லிகை நகர், ெரயில்வே பீடர் ரோடு, பேக்கரும்பு , அரி யான் குண்டு, பகுதி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.

    இதேபோல் பட்டினம் காத்தன் துணை மின் நிலையத்தில் உள்ள ராமநாதபுரம் உயர் மின் அழுத்த பீடரில் மாதாந்திர பராமரிப்பு பணி நடை பெறுவதால் நாளை (7-ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காவனூர் சுற்றியுள்ள பகுதிகள், தொருவளூர், வயலூர், பனையூர், குளத்தூர், தேர்த்தாங்கல், கிளியூர், முதலூர், கடம்பூர், இல்லுமுள்ளி, வைரவ னேந்தல், வீரவனூர், பாப்பாகுடி, வண்ணிவயல், கவரங்குளம். தேவிபட்டினம் சுற்றியுள்ள பகுதிகள், கழனிக்குடி, சித்தார்கோட்டை, பெருவயல் ,சிறுவயல் , நரியனேந்தல்,மரப்பாலம், இலந்தை கூட்டம்.

    திருப்பாலைக்குடி சுற்றியுள்ள பகுதிகள், பொட்டகவயல், கருப்பூர், சம்பை,வெண்ணத்தூர், வைகை, பத்தனேந்தல், மாதவனூர், பாப்பனேந்தல், பூத்தோண்டி, அரசனூர், நாரணமங்கலம், எருமைப்பட்டி, வளமானூர், சோழந்தூர். காட்டூரணி சுற்றியுள்ள பகுதிகள், ஆர்.கே. நகர், எம்.ஜி.ஆர் நகர், ரமலான் நகர், மேலக்கோட்டை, மாடக் கோட்டான், இளமனூர், பேராவூர்.

    தில்லைநாயகி புரம், பழங்குளம், திருப்புல்லானி, அம்மன் கோவில், தெற்கு தரவ, கருங்குளம், மஞ்சன மாரியம்மன் கோவில், லாந்தை, புத்தனேந்தல், தெற்குதரவை, பசும்பொன் நகர், கூரியூர், பொக்க னேந்தல், பால்கரை, நாக நாதபுரம், இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட மின்வாரியம் தெரிவித்துள்ளது.

    • ராமேஸ்வரம் கோவிலுக்கு எதிரே உள்ள கடலே ‘‘அக்கினி தீர்த்தம்’’ ஆகும்.
    • மண்ணால் லிங்கம் செய்து, பூஜித்து, பித்ரு தர்ப்பணம் செய்வது சிறப்பு.

    அமாவாசை திதியில் கடலில் நீராடுவது மிகவும் போற்றப்படுகிறது. இந்நாளில் கடலில் நீராடி முன்னோர்களுக்கு பிதுர் பூஜை செய்தால், குடும்பத்தில் சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறுவதுடன், முன்னோர் களின் ஆசீர்வாதமும் கிடைக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

    தீர்த்தம் என்பது நம் பாவங்களைப் போக்கி, ஆத்ம சுத்தம் தந்து, நம்மை ஆரோக்கியமுடன் வாழவைக்கும் சக்தி கொண்டது என ஞான நூல்கள் கூறுகின்றன.

    கடல் நீராடலுக்கும், பிதுர் பூஜைக்கும், தோஷ நிவர்த்திக்கும் மிகவும் புகழ் பெற்றதாக திகழ்வது ராமேஸ்வரம் தலத்தில் உள்ள அக்னி தீர்த்தக் கடலாகும். இத் தீர்த்தத்தில் ராமபிரான் நீராடி சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

    ராமேஸ்வரம் கோவிலுக்கு எதிரே உள்ள கடலே ''அக்கினி தீர்த்தம்'' ஆகும். சீதை மீது சந்தேகப்பட்ட ராமர், சீதையை தீக்குளிக்கச் சொன்ன போது, சீதை தீக்குள் இறங்கியதும், சீதையின் கற்புக்கனல் தாங்காது, அக்கினி ஓடிவந்து இந்த கடலில் குளித்துதான் குளிர்ந்தது என்று புராணங்கள் கூறுகின்றன. இதனாலேயே இந்த தீர்த்தம் ''அக்கினி தீர்த்தம்'' என்று அழைக்கப்படுகிறது.

    அக்கினி தீர்த்தம் என்ற பெயருக்கேற்ப இந்த தீர்த்தத்தில் நீராடும் போது வெதுவெதுப்பாக இருக்கிறது.

    இந்த அக்கினி தீர்த்தக் கடல் ஆழமும் இல்லை, அலையும் இல்லை. ஆனால், இந்த அக்கினி தீர்த்தத்தில் குளிக்க எந்தவித நியமமும் கிடையாது. யாரும், எந்நேரமும் அக்கினி தீர்த்தத்தில் குளிக்கலாம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    நம் நாட்டில் வேறு எங்கும் கடல் ''அக்கினி தீர்த்தத்தில்'' இருப்பது போல் அமைதியாக இருப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இந்த அக்கினி தீர்த்தக் கரையில் ஆதி சங்கரர் வந்து நின்ற இடம் இருக்கிறது. இந்த அக்கினி தீர்த்தக் கடலில் குளிப்பது, கடலில் குளிப்பது போல் அல்லாமல் பெரிய ஏரியில் குளிப்பது போல் அமைதியாக குளிக்க முடியும். இந்த அக்கினி தீர்த்தக் கரையில் மண்ணால் லிங்கம் செய்து, பூஜித்து, பித்ரு தர்ப்பணம் செய்வது சிறந்த ஒரு புண்ணியம் ஆகும்.

    இந்த தீர்த்தங்கள் யாவும் இயற்கையில் காந்த சக்தி மிகுந்தவையாகவே உள்ளன. இது உடல் ஆரோக்கியத்தை வளப்படுத்தக் கூடியதாகும். உடம்பின் அணுசக்தியை வலுப்படுத்தக் கூடியதும் ஆகும்.

    இந்த தீர்த்தங்களின் மின்னோட்ட மகிமையை தங்களது ஞானத்தாலும், யோகத்தாலும் அறிந்த நமது முன்னோர்கள் இந்த தீர்த்தங்களை ஏற்படுத்தி, அதை ஆன்மிகத்தோடு இணைத்து நமக்கு வழங்கி உள்ளார்கள்.

    இத்தகைய சிறப்புமிக்க தீர்த்தங்களில் நீராடுவதால் புத்திர பாக்கியம் உண்டாகிறது. உடல் பிணி தீருகிறது. பாவங்கள் தொலைகிறது. அனைத்து நலன்களும் கிடைக்கின்றன. இந்த தீர்த்தங்களில் நீராடித்தான் நீண்ட காலம் குழந்தை இல்லாமல் இருந்த ராமகிருஷ்ண பரமஹம்சரின் பெற்றோர்களுக்கு குழந்தைகள் பிறந்தனவாம். இதனால்தான் ''ராமேஸ்வரம் போய் குளிக்காதவன் போல'' என்று ஒரு பழமொழி சொல்கிறார்கள். இப்பழமொழி, ராமேஸ்வரத்தில் தீர்த்தம் ஆடுவது எவ்வளவு சிறப்பு என்பதை எடுத்துரைக்கிறது.

    அயோத்தி சென்று முடிசூட்டிக் கொண்ட ராமர், மீண்டும் ராமேஸ்வரத்திற்கு வந்து தீர்த்தமாடியதாக ''ஆனந்த ராமாயணம்'' கூறுகிறது.

    இத்தகைய சிறப்புமிக்க தீர்த்தங்களில் ஒவ்வொருவரும் நீராடுவது அவசியம் ஆகும். இங்கு, தங்குவதில் இருந்து உணவு, போக்குவரத்து என அனைத்து வசதிகளும் உள்ளன.

    ஆலயத்தின் உள்ளே உள்ள இருபத்தி இரண்டு தீர்த்த கிணறுகளிலும் குறிப்பிட்ட காசு கொடுக்க, அங்குள்ள பையன்கள் நமக்கு தண்ணீர் இறைத்து ஊற்றுவார்கள். ஒவ்வொரு இந்துவும், ''காசி ராமேஸ்வரம்'' பயணம் மேற்கொள்வது முக்கிய கடமைகளில் ஒன்றாகும்.

    இதனை மேற்கொள்ளும் முறையானது, முதலில் ராமேஸ்வரம் வந்து கடலில் நீராடி, ராமநாதரை வழிபட்ட பின்பு, இங்கிருந்து மண்ணை எடுத்துக் கொண்டு காசி சென்று, கங்கையில் கரைத்து, கங்கையில் நீராடி விசுவநாதரை வழிபட்டு, பின்பு அங்கிருந்து கங்கை நீரைக் கொண்டு வந்து ராமேஸ்வரம் ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்து, வணங்கி, ''காசி ராமேஸ்வர'' பயணத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

    மேலும் ராமேஸ்வரம் தீர்த்தமாட செல்லும் முறையானது முதலில் ராமநாதபுரத்தை ஒட்டி உள்ள ''உப்பூர் விநாயகர்'' கோவில் தீர்த்தத்தில் நீராடி, விநாயகரை வணங்கி தொடங்க வேண்டும். இலங்கை செல்ல கடலைக் கடப்பதற்கு முன், ராமர் இங்கேதான் நீராடிவிட்டு, சங்கல்பம் செய்து கொண்டு சென்றார்.

    இதன்பின் தேவிபட்டினத்தில் கடலுக்குள் உள்ள நவ பாஷாண நவக்கிரகங்களை வழிபட்டு, அங்குள்ள கடலிலும், சக்கர தீர்த்தத்திலும் நீராட வேண்டும். பின்பு, திருப்புல்லாணி வந்து இங்குள்ள சக்கர தீர்த்தத்தில் நீராட வேண்டும். பின்பு, தனுஷ்கோடி வந்து சேது தீர்த்தத்தில் நீராட வேண்டும். பின்பு ஆலயத்தின் வெளியே உள்ள தீர்த்தங்களில் நீராட வேண்டும். பின்பு ஆலயத்தின் எதிரே உள்ள கடல் ஆகிய ''அக்கினி தீர்த்தத்தில்'' நீராட வேண்டும்.

    பின்பு ஆலயம் வந்து 22 தீர்த்தங்களிலும் நீராடி, இறைவனையும், அம்பாளையும் வழிபட்டு, பின்பு மீண்டும் திருப்புல்லாணி வந்து தீர்த்தமாடி, அன்னதானம் செய்துவிட்டு, ராமநாதபுரம் சென்று அங்கு அரண்மனையில் உள்ள சேதுபதி மன்னன் சிலையை தரிசிக்க வேண்டும். இதுவே ராமேஸ்வரம் தீர்த்தமாடலின் விதிமுறையாகும்.

    ராமேஸ்வரம் திருக்கோவில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையில் திறந்திருக்கும். இதில் மதியம் ஒரு மணி முதல் மூன்று மணி வரை கோவில்நடை பூட்டி இருக்கும். நாள்தோறும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது. ஆடி அமாவாசை அன்று நாள் முழுவதும் பூஜையும், அர்ச்சனையும், தரிசனமும் பக்தர்களுக்கு உண்டு.

    தினமும் காலை 5 மணிக்கு நடைபெறும் ''திருவனந்தல் பூஜை''யில் முக்கிய அபிஷேகங்கள் உண்டு. இதில், ''மரகதலிங்கத்தை'' மூலவருக்கு முன்பாக வைத்து, அபிஷேகம் செய்வார்கள். இதை தரிசிப்பது மிகவும் விசேஷமானது ஆகும்.

    இத்தலத்தில் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய, கட்டணத்திற்கு கங்கை தீர்த்தம் கிடைக்கும். இதேபோல், கங்கை தீர்த்தம் கொண்டு வருபவர்கள் கட்டணம் செலுத்தியே இறைவன் அபிஷேகத்திற்குக் கொடுக்க வேண்டும்.

    இந்த தீர்த்த சொம்பு பித்தளை, வெங்கலப் பாத்திரம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

    மேலும் இந்த ராமேஸ்வர தலத்தில் பிதுர்களுக்கு தர்ப்பணம் செய்வது, புத்திர பாக்கியத்துக்கான பரிகாரம், பிதுர்கள் தோஷம் போக்குதல் முதலியன சிறப்பான முறையில் நடைபெறுகிறது. இத்தகைய சிறப்புமிக்க, இந்தியாவின் தலை சிறந்த தீர்த்தமாகிய ''ராமேஸ்வரம்'' பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆலய நிர்வாக அதிகாரியைத் தொடர்பு கொள்ளாலம்.

    இத்தகைய சிறப்புமிக்க ராமேஸ்வரம் தீர்த்தங்களில் ஒவ்வொரு இந்துவும் நீராட வேண்டியது முக்கிய கடமைகளில் ஒன்றாகும்.

    அக்னி தீர்த்தம் எல்லாக் காலங்களிலும் வெது வெதுப்பாக இருக்கும். மேலும், அலைகள் அதிக மில்லாமல் ஆபத்தின்றி நீராடவும் இந்த தீர்த்தம் அருள்புரிகிறது!

    ராமேஸ்வரம் சேதுக் கரை கடல் நீர் சுமார் இரண்டு லட்சம் மைல்கள் சுற்றிச் சுழன்று வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதனால் இக்கடல் நீரோட்டம் அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, நவமி ஆகிய நாட்களில் அதிக வேகம் பெறுவதால், கடலின் அடியிலுள்ள மூலிகைகள், சங்கு, பவளம் போன்றவற்றின் ஜீவ சத்துகள் புரட்டப் பட்டு கடலின் மேல்மட்டத்திற்கு வருகின்றன. அந்த நாட்களில் அக்னி தீர்த்தக் கடல் நீர் அமிர்தம் கலந்த நீராகவும், உடல்நலத்தைக் காக்க உதவுவதாகவும் கருதப்படுகிறது.

    கடலில் எல்லா காலத்திலும் நீராடக் கூடாது என்பது விதியாகும். ஆனால், அக்னி தீர்த்தமான இக்கடலில் எல்லா நாட்களிலும் எந்த வேளையிலும் நீராடலாம் என்று சேது மகாத்மியம் என்ற நூல் கூறுகிறது.

    இந்த தீர்த்தத்தில் நீராடினால் கங்கை நதியில் நீராடிய பலன் கிட்டும், கிரக தோஷங் கள் நீங்கும். நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு பரிகாரம் செய்து நல்ல பலன் பெறுகிறார்கள். புத்திர தோஷம், பிதுர்தோஷம் நீக்கும் தீர்த்தம் என்றும் இது போற்றப்படுகிறது.

    ஆடி அமாவாசையில் பிதுர்பூஜையை வேத விற்பன்னர் மேற்பார்வை யில் செய்வதால், முன்னோர்கள் நரகத்திலிருந்தாலும் நற்கதி அடைவார்களாம்.

    பிதுர்பூஜை செய்தபின் தானதர்மங்கள், அன்னதானம் செய்வது சிறப்பிக்கப்படுகிறது. வசதி இல்லாதவர்கள் அங்குள்ள பசுமாட்டுக்கு வாழைப் பழங்கள், அகத்திக் கீரை கொடுத்தாலும் புண்ணியம் கிட்டும்.

    • நள தீர்த்தம் - இறையருளைப் பெற்ற சொர்க்கத்தை அடையலாம். நீல தீர்த்தம் - யாகப் பலன் கிட்டும்.
    • சந்திர தீர்த்தம் - கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம். சூரிய தீர்த்தம் - ஞானம் பெறலாம்.

    ராமபிரான் புண்ணிய தீர்த்ததில் நீராடி, சிவலிங்க பூஜை செய்து, பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட்ட தலம் ராமேஸ்வரம். இங்கு தான் 22 புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன.

    22 புண்ணிய தீர்த்தங்களும், நீராடினால் கிடைக்கும் பலன்களும் வருமாறு:-

    மகாலட்சுமி தீர்த்தம் - சகல ஐஸ்வரியங்கள் பெருகும் சாவித்திரி, காயத்ரி, சரஸ்வதி தீர்த்தங்கள் - சடங்குகளைச் செய்யாதவர்களும், சந்ததி இல்லாதவர்களும் நற்கதி பெறலாம்.

    சங்கு தீர்த்தம் - நன்றி மறந்த பாவம் நீங்கும்.

    சக்கர தீர்த்தம் - தீராதி நோயும் தீரும்.

    சேது மாதவ தீர்த்தம் - செல்வம் கொழிக்கும்.

    நள தீர்த்தம் - இறையருளைப் பெற்ற சொர்க்கத்தை அடையலாம்.

    நீல தீர்த்தம் - யாகப் பலன் கிட்டும்.

    கவாய தீர்த்தம் - மனவலிமை பெறலாம்.

    கவாட்ச தீர்த்தம் - தேக ஆரோக்கியம் உண்டாகும்.

    கந்தமான தீர்த்த - தரித்திரம் நீங்கும்

    பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம் - பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்; பில்லி சூனியப் பிரச்சனைகள் விலகும்.

    சந்திர தீர்த்தம் - கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.

    சூரிய தீர்த்தம் - ஞானம் பெறலாம்.

    சாத்யாம்ருத தீர்த்தம் - தேவதைகளில் கோபத்தில் இருந்து விடுபடலாம்.

    சிவ தீர்த்தம் - சகல ஐஸ்வரியங்களையும் பெறலாம்.

    சர்வ தீர்த்தம் - அனைத்து யோகங்களும் கைகூடும்

    கயா, யமுனா மற்றும் கங்கா தீர்த்தங்கள் - பிறவிப்பயனை அடையலாம்.

    கோடி தீர்த்தம் - ஸ்ரீராமர், சிவலிங்க அபிஷேகத்துக்குப் பயன்படுத்திய தீர்த்தம் இது.

    சிவனாரின் அருளையும் ஸ்ரீராமரின் அருளையும் பெற்று பெருவாழ்வு வாழவைக்கும் மகா தீர்த்தம் இது. இந்த 22 தீர்த்தங்களையும் தவிர, கடலிலேயே கலந்திருக்கிறது அக்னி தீர்த்தம். இதில் நீராடிவிட்டே ஆலய தரிசனத்துக்கு செல்ல வேண்டும்.

    • புனித தீர்த்தங்களில் ஒன்று அக்னி தீர்த்தம்.
    • அக்னி தீர்த்தத்தில் நீராடினால் பாவம் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    புனித தீர்த்தங்களான காவிரிக்கரை, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, திருச்சி முக்கொம்பு, மயிலாடு துறை நந்திக்கட்டம், திருவையாறு தீர்த்தக் கட்டம், பவானி முக்கூடல், பாப நாசம், சொரி முத்து அய்யனார் கோவில், ஏரல் சேர்மன் சுவாமிகள் கோவில் ஆறு உள்பட பல நீர்நிலைகளில் ஆடி அமாவாசை தினத்தன்று பக்தர்கள் அதிக அளவில் தர்ப்பணம் செய்வார்கள்.

    நதிக்கரைகள் மட்டுமின்றி, கடற்கரை ஸ்தலங்களான ராமேஸ்வரம், தனுஷ் கோடி, முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி, பூம்புகார், வேதாரண்யம், கோடியக்கரை ஆகிய கடற்கரை பகுதிகளும் பிதுர் பூஜைகளுக்கு ஏற்றவை. தஞ்சையில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு செல்லும் பாதையில் கண்டியூரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருத்தலம் திருப்பூந்துருத்தி. இந்த தலமும் ஆடி அமாவாசைக்கு ஏற்ற தலம் தான்.

    பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து தர்ப்பணம் செய்வதால் மூதாதையர்களின் தோஷங்களில் இருந்து விடுதலை பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. ஆடி அமாவாசை காலத்தில் கடல் தீர்த்தம் ஆடுதல் பாவத்தைப் போக்கி விமோசனத்தை தரவல்லது.

    ஆடி அமாவாசை அன்று ராமேஸ்வரம், ராமநாதசாமி கோவிலில் வழிபாடு செய்தால் முழு பலன் கிடைக்கும். ஆனால் அங்கு புனித நீராட சில ஐதீகங்கள் உள்ளன. ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் மொத்தம் 22 புனித தீர்த்தங்கள் உள்ளன.

    பக்தர்கள் அந்த தீர்த்தங்களில் புனித நீராடிய பிறகு சாமி தரிசனம் செய்வது வழக்கம். இப்புனித தீர்த்தங்களில் ஒன்று அக்னி தீர்த்தம். இலங்கையில் ராவணன் பிடியிலிருந்து சீதை மீட்கப்பட்ட பின்பு தனது கற்பு திறனை நிரூபிக்க தீக்குளித்தாள்.

    ராமேசுவரத்தில் கோவிலை ஒட்டியிருக்கும் கடற்கரை அருகே தான் சீதை தீக்குளித்தாள் என்றும் அந்த இடம் அக்னி என்று அழைக்கப்பட்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன. தீக்குளித்த பின்பு சீதை நீராடிய இடமே அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. அக்னி தீர்த்தத்தில் நீராடினால் பாவம் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அக்னி தீர்த்தத்தில் நீராடிய பிறகே மற்ற புனித தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்ய வேண்டும்.

    லவகுச குளத்தில் நீராடுங்கள்

    கோயம்பேடு தலத்தில் லவனும் குசனும் சிவ வழிபாடு செய்து வந்த போது, தினமும் தாங்கள் நீராடவும், லிங்கத்தை அபிஷேகிக்கவும் குளம் ஒன்றை உருவாக்கினர். சிவனாருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதில் மகிழ்ந்த ஈசன், அவர்களுக்கு காட்சி தந்தார்.

    அவரின் திருவருளால் லவகுசரின் பாவம் தொலைந்து தந்தையுடன் இணைந்து வாழ்ந்தனர் என்கிறது ஸ்தலபுராணம். ஸ்ரீராமரின் மைந்தர்களான லவனும் குசனும் ஏற்படுத்திய இந்த திருக்குளத்தில் நீராடி, ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி சமேத ஸ்ரீகுறுங்காலீஸ்வரரை வணங்கினால், அனைத்து தோஷங்களும் விலகும், மன சஞ்சலம் நீங்கும், பித்ருக்களின் அசீர்வாதம் கிடைக்கும்.

    ஆடி அமாவாசை நாளில், குசலவ தீர்த்தக்குளத்தில் நீராடி, பிதுர் காரியங்களை குளக்கரையில் செய்துவிட்டு, இறைவனை வணங்கினால் முன்னோர்களின் அருளும் ஆசீர்வாதமும் கிடைக்கும்.

    21 பிண்டங்கள்

    பித்ருக்களின் ஆத்மா சாந்தி அடைவதற்காக செய்யப்படும் வழிபாட்டை சடங்குகளில், நாராயண பலி எனும் பூஜையும் ஒன்று. அகால மரணம் மற்றும் துர்மரணம் அடைந்தவர்களுக்கு இந்த பரிகாரத்தை செய்வார்கள். ராமேஸ்வரம் தலத்தில் 21 பிண்டங்கள் (ஒரு தலைமுறைக்கு ஒன்று வீதம்) வைத்து வழிபாடுவார்கள். பவானி கூடுதுறை தலத்தில் 77 தலைமுறையினருக்காக 7 பிண்டங்கள் வைத்து பித்ருகாரியம் செய்வது குறிப்பிடத்தக்கது.

    ×