என் மலர்
நீங்கள் தேடியது "Ranji Trophy"
- மும்பை அணிக்காக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 80 பந்துகளில் 90 ரன்கள் குவித்துள்ளார்.
- அதில் 15 பவுண்டரிகளும் 1 சிக்சரும் அடங்கும்.
இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரின் இந்த ஆண்டுக்கான சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்திய அளவில் மிக பிரபலமான இந்த ரஞ்சி தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு தேசிய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்பதனால் அனைத்து மாநில அணிகளை சேர்ந்த வீரர்களும் இந்த தொடரில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதன்மை அணிக்கு தேர்வாகும் வாய்ப்பினை எதிர்நோக்கி சிறப்பாக செயல்படுவார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டு தற்போது நடைபெற்று வரும் இந்த ரஞ்சி தொடரில் பல்வேறு இந்திய வீரர்களும் கலந்து கொண்டு விளையாடி வரும் வேளையில் மும்பை அணிக்காக சூர்யகுமார் யாதவ் இன்று நடைபெற்று வரும் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி வருகிறார். ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியில் தான் இடம் பிடித்து விளையாட ஆசைப்படுவதால் நிச்சயம் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன் என்று உறுதியளித்திருந்தார்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்று களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி என்று கூட பாராமல் 80 பந்துகளில் 15 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர்கள் என தனது வழக்கமான அதிரடியை கையிலெடுத்து 80 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இருப்பினும் தனது அதிரடியான ரன் குவிப்பை இன்றும் அவர் மும்பை அணிக்காக வழங்கினார். ரகானே தலைமையிலான மும்பை அணியானது தற்போது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. இந்த போட்டியில் ப்ரித்வி ஷா 19 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 90 ரன்களிலும் ஆட்டம் இழந்தாலும் ஜெய்ஷ்வால் மற்றும் ரகானே ஆகியோரது ஜோடி தற்போது மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது.
ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்று தனது ஆசையை வெளிப்படையாக சூர்யகுமார் யாதவ் கூறியவேளையில் தற்போது ரஞ்சி போட்டியிலும் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடியுள்ளதால் அவரின் டெஸ்ட் வாய்ப்பை பிடிக்காமல் விடமாட்டார் என்றே தோன்றுகிறது.
- டெல்லி அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வென்றது.
- ஜார்க்கண்ட் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் புதுச்சேரி அணியை வீழ்த்தியது.
புதுடெல்லி:
ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரில், சென்னையில் நடைபெற்ற குரூப்-பி லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் அசாமை வென்றது. முதலில் ஆடிய தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 540 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய அசாம் அணி 266 ரன்களில் ஆல் அவுட் ஆகி, பாலோ ஆன் பெற்றது. தொடர்ந்து இரண்டாம் இன்னிங்சை ஆடிய அசாம், 204 ரன்களில் சுருண்டது. தமிழகம் தரப்பில் அஜித் ராம் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தம் 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
குரூப்-பி பிரிவில் உள்ள டெல்லி- மும்பை அணிகள் இடையிலான லீக் ஆட்டம் டெல்லியில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் மும்பை 293 ரன்கள் சேர்த்தது. டெல்லி 369 ரன்ககள் குவித்தது. வைபவ் ராவல் 114 ரன்கள் விளாசினார். இரண்டாவது இன்னிங்சில் மும்பை அணி 170 ரன்களில் சுருண்டது. கேப்டன் ரகானே 51 ரன்களும், தனுஷ் 50 ரன்களும் (நாட் அவுட்) எடுத்தனர். டெல்லி தரப்பில் திவிஜ் மெஹ்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதனால் டெல்லி அணியின் வெற்றிக்கு 95 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை எளிதில் எட்டிய டெல்லி அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதேபோல் கர்நாடகா, கேரளா அணிகளுக்கிடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. ராஜஸ்தான் அணி சத்தீஸ்கர் அணியை 167 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கோவா அணி சர்வீசஸ் அணியை வீழ்த்தியது. ஜார்க்கண்ட் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் புதுச்சேரி அணியை வீழ்த்தியது.
- ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா அபாரமாக பந்து வீசினார்.
- இதனால் தமிழக அணி 2-வது இன்னிங்சில் 133 ரன்னில் சுருண்டது.
சென்னை:
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் தமிழ்நாடு, சவுராஷ்டிரா அணிகள் மோதும் கடைசி லீக் ஆட்டம் (பி பிரிவு) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்துவருகிறது.
முதலில் ஆடிய தமிழக அணி முதல் இன்னிங்சில் 324 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பாபா இந்திரஜித், விஜய் சங்கர், ஷாருக்கான் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.
அதன்பின் முதல் இன்னிங்சை ஆடிய சவுராஷ்டிரா அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 3 விக்கெட்டுக்கு 92 ரன்கள் எடுத்து இருந்தது. சிராக் ஜானி 14 ரன்னுடனும், சேத்தன் சகாரியா 8 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இந்நிலையில், 3-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. சேத்தன் சகாரியா 9 ரன்னிலும், கேப்டன் ரவீந்திர ஜடேஜா 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பொறுப்புடன் ஆடிய சிராக் ஜானி 49 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
இறுதியில், சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 192 ரன்னில் ஆட்டம் இழந்தது.
தமிழக அணி தரப்பில் எம்.சித்தார்த், அஜித் ராம் தலா 3 விக்கெட்டும், சந்தீப் வாரியர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
132 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி 36.1 ஓவர்களில் 133 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 37 ரன்னும், பாபா இந்திரஜித் 28 ரன்னும் எடுத்தனர்.
சவுராஷ்டிரா அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா 7 விக்கெட்டும், தர்மேந்திரசிங் ஜடேஜா 3 விக்கெட்டும் சாய்த்தனர்.
வலது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 5 மாத இடைவெளிக்கு பிறகு களம் திரும்பிய முதல் போட்டியிலேயே ரவீந்திர ஜடேஜா அசத்தியுள்ளார்.
சவுராஷ்டிரா அணி வெற்றிபெற 266 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
2-வது இன்னிங்சை தொடங்கிய சவுராஷ்டிரா அணி ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 4 ரன்கள் எடுத்துள்ளது.
இன்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. சவுராஷ்டிரா அணி வெற்றிபெற மேலும் 262 ரன்கள் தேவைப்படுகிறது. அந்த அணி கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் அஜித் ராம் அபாரமாக பந்து வீசினார்.
- இதனால் சவுராஷ்டிரா அணி 2-வது இன்னிங்சில் 206 ரன்னில் சுருண்டது.
சென்னை:
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் தமிழ்நாடு, சவுராஷ்டிரா அணிகள் மோதும் கடைசி லீக் ஆட்டம் (பி பிரிவு) சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்தது.
முதலில் ஆடிய தமிழக அணி முதல் இன்னிங்சில் 324 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பாபா இந்திரஜித், விஜய் சங்கர், ஷாருக்கான் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.
அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய சவுராஷ்டிரா அணி 192 ரன்னில் ஆல் அவுட்டானது. சிராக் ஜானி 49 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
தமிழக அணி சார்பில் எம்.சித்தார்த், அஜித் ராம் தலா 3 விக்கெட்டும், சந்தீப் வாரியர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
132 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி 36.1 ஓவர்களில் 133 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 37 ரன்னும், பாபா இந்திரஜித் 28 ரன்னும் எடுத்தனர்.
சவுராஷ்டிரா அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா 7 விக்கெட்டும், தர்மேந்திரசிங் ஜடேஜா 3 விக்கெட்டும் சாய்த்தனர். காயம் காரணமாக 5 மாத இடைவெளிக்கு பிறகு களம் திரும்பிய முதல் போட்டியிலேயே ரவீந்திர ஜடேஜா அசத்தியுள்ளார்.
இதையடுத்து, சவுராஷ்டிரா அணி வெற்றிபெற 266 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. சவுராஷ்டிரா அணி ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 4 ரன்கள் எடுத்துள்ளது.
இந்நிலையில், நேற்று கடைசி நாள் ஆட்டம் நடந்தது. சவுராஷ்டிரா அணி சார்பில் ஹர்விக் தேசாய் பொறுப்புடன் ஆடி சதமடித்து 101 ரன்னில் ஆட்டமிழந்தார். அர்பித் வாசவதா 45 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், சவுராஷ்டிரா அணி 206 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 59 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு வெற்றி பெற்றது.
தமிழ்நாடு சார்பில் அஜித் ராம் 6 விக்கெட்டும், சித்தார்த் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது அஜித் ராமுக்கு வழங்கப்பட்டது.
- அவர் விளையாடும் 11 வீரர்களில் இருக்க வேண்டாம் ஆனால் அவரை அணியிலாவது எடுத்திருக்க வேண்டும்.
- ரஞ்சி கோப்பை தொடரில் கடந்த 3 சீசன்களாக சர்பராஸ் கான் 100 ரன்களை கடந்து சராசரி வைத்துள்ளார்.
டெல்லி:
இந்திய கிரிக்கெட் அணி வரும் 12-ம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாட உள்ளது.
இதனிடையே டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்கான இந்திய வீரர்கள் பட்டியலை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. டெஸ்ட் அணியில் புஜாராவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ருதுராஜ் கெய்குவாட், எஸ்எஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளிட்ட வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நிச்சயம் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட 25 வயதான இளம் வீரர் சர்பராஸ் கானுக்கு மீண்டும் இடம் கிடைக்காதது பல்வேறு முன்னாள் வீரர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்நிலையில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சர்பராஸ் கான் இந்திய அணியில் சேர்க்காதற்கு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறியதாவது:-
ரஞ்சி கோப்பை தொடரில் கடந்த 3 சீசன்களாக சர்பராஸ் கான் 100 ரன்களை கடந்து சராசரி வைத்துள்ளார். இந்திய அணியில் தேர்வாவதற்கு சர்பராஸ் கான் இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும்.
அவர் விளையாடும் 11 வீரர்களில் இருக்க வேண்டாம் ஆனால் அவரை அணியிலாவது எடுத்திருக்க வேண்டும். அவரது திறமைக்கு வாய்ப்பு வழங்கப்படும் என பிசிசிஐ அவரிடம் கூற வேண்டும். இந்திய அணியின் தேர்வு முழுக்க முழுக்க ஐ.பி.எல் தொடரை சார்ந்தே இருக்கிறது. அதனால் இனிவரும் காலங்களில் சர்ஃபராஸ் கான் போன்ற இளம் வீரர்கள் ரஞ்சி டிராபியில் விளையாட வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதல் இன்னிங்சில் ரியான் பராக் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.
- 2-வது இன்னிங்சில் அவர் 155 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.
இந்தியாவில் விறுவிறுப்பாக துவங்கியுள்ள 2024 ரஞ்சிக் கோப்பையில் ஜனவரி 5ஆம் தேதி துவங்கிய 5-வது லீக் போட்டியில் அசாம் மற்றும் சட்டீஸ்கர் கிரிக்கெட் அணிகள் மோதின. ராய்ப்பூர் நகரில் துவங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அசாம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய சட்டீஸ்கர் அணி முதல் இன்னிங்சில் போராடி 327 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக அமன்தீப் காரே சதமடித்து 116 ரன்களும் சாசங் சிங் 82 ரன்களும் எடுத்தனர். அசாம் தரப்பில் ஆகாஷ் செங்குப்த்தா மற்றும் முக்தர் ஹுசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய அசாம் அணி சட்டீஸ்கர் பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஃபாலோ ஆன் பெற்றது.
அதைத்தொடர்ந்து 168 ரன்கள் பின் தங்கிய நிலைமையில் ஃபாலோ ஆன் பெற்று பேட்டிங் செய்த அசாம் அணிக்கு ரிசவ் தாஸ் 17, ராகுல் ஹசகிரா 39, கடிகோன்கர் 16 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அந்த நிலைமையில் 4-வது இடத்தில் களமிறங்கிய கேப்டன் ரியான் பராக் அதிரடியாக விளையாடி வெற்றிக்கு போராடினார். அதிரடியாக விளையாடிய அவர் 56 பந்துகளில் சதம் விளாசினார். இதன் மூலம் ரஞ்சிக் கோப்பை வரலாற்றில் அதிவேகமாக சதம் அடித்த 2-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்பாக கடந்த 2016 ரஞ்சிக்கோப்பையில் டெல்லி அணிக்காக ரிஷப் பண்ட் 48 பந்துகளில் சதம் விளாசி முதல் இடத்தில் உள்ளார். அதே வேகத்தில் அட்டகாசமாக விளையாடிய ரியான் பராக் 11 பவுண்டரி 12 சிக்சருடன் 155 (87) ரன்களை 178.16 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி அசாம் அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்து அவுட்டானார்.
அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க அசாம் அணி 254 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மீண்டும் சுருட்டிய சட்டீஸ்கர் சார்பில் ஜிவேஷ் புட்டே, வாசுதேவ் பாரேத் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். இறுதியில் 87 ரன்களை துரத்திய சட்டீஸ்கர் அணிக்கு ஏக்நாத் கேர்கர் 31*, ரிசப் திவாரி 48* ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். அந்த வகையில் கேப்டனாக விளையாடிய ரியான் பராக் தன்னுடைய ஐபிஎல் செயல்பாடுகள் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து மாநில அணியை குறைந்தபட்சம் தனி ஒருவனாக இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றினார்.
- கூச் பெஹர் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆண்டுதோறும் நடைபெறுகிறது
- பிரகார் தனது ரன் குவிப்பில் 46 ஃபோர்களும், 3 சிக்ஸர்களும் அடித்தார்
கர்நாடகா மாநில ஷிவமோகா நகரில், கேஎஸ்சிஏ நவுலே மைதானத்தில் (KSCA Navule Stadium) 19 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
ஆண்டுதோறும் நடைபெறும் கூச் பெஹர் கோப்பை (Cooch Behar Trophy) எனும் இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் கர்நாடகா அணியும் மும்பை அணியும் மோதின.
கர்நாடகாவின் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தில், இளம் பேட்டிங் வீரர், பிரகார் சதுர்வேதி (Prakhar Chaturvedi) சிறப்பாக விளையாடினார்.
தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கிய பிரகார், 404 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் புதிய சாதனையை படைத்தார்.
பிரகார் 638 பந்துகளில் தனது அதிரடி பேட்டிங்கால் 46 ஃபோர்கள், 3 சிக்ஸர்கள் அடித்தார்.
இதன் மூலம், ஒரு போட்டி தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் 24 வருடங்களுக்கு முன் புரிந்திருந்த சாதனையான 358 ரன்களை கடந்து பிரகார் சதுர்வேதி புது சாதனையை புரிந்தார்.

தனது சிறப்பான ஆட்டத்தினால் ரஞ்சி கோப்பையில் இடம் பெறும் வாய்ப்புக்கு பிரகார் தகுதி பெற்றவராகிறார்.
பிரகார் சதுர்வேதியின் தந்தை பெங்களூரூவில் மென்பொருள் பொறியாளராக பணி புரிகிறார். பிரகாரின் தாய், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தில் (DRDO) விஞ்ஞானியாக பணி புரிகிறார்.
இரண்டாவது நாள் ஆட்டத்தில் மும்பை அணி 380 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
தொடர்ந்து ஆடிய கர்நாடகா, 223 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து, 890 ரன்கள் குவித்து முதல் இன்னிங்க்ஸ் ரன்கள் (510) அடிப்படையில் வெற்றி பெற்றது.
- ஆந்திர பிரதேசத்துக்கு எதிரான கடந்த போட்டியில் ரகானே கோல்டன் டக் அவுட் ஆனார்.
- கேரளா அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்திலும் ரகானே கோல்டன் டக் அவுட் ஆனார்.
இங்கிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதில் முதல் 2 போட்டிகளில் விளையாடப் போகும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் நட்சத்திர சீனியர் வீரர்கள் புஜாரா மற்றும் ரகானே ஆகியோர் கழற்றி விடப்பட்டுள்ளார்கள்.
ரஞ்சி கோப்பையில் கடினமாக போராடி மீண்டும் கம்பேக் கொடுத்து இந்தியாவுக்காக 100-வது போட்டியில் விளையாடி சாதனை படைப்பதை லட்சியமாக வைத்திருப்பதாக ரகானே சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ரஞ்சிக்கோப்பையில் ஆந்திர பிரதேசத்துக்கு எதிரான கடந்த போட்டியில் ரகானே கோல்டன் டக் ஆனார். இதனையடுத்து இன்று நடைபெற்ற ஒரு போட்டியில் மும்பை- கேரளா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை அணி 0 ரன்னில் 2 விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க வீரரான ஜெய் கோகுல் பிஸ்தா முதல் பந்திலும் ரகானே 2-வது பந்திலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் மும்பை அணி 10 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் எடுத்தது.
கடைசி 2 இன்னிங்சில் 0 (1), 0 (1) என அடுத்தடுத்து டக் அவுட்டான அவர் இன்னும் 2024 ரஞ்சி கோப்பையில் 1 ரன் கூட எடுக்கவில்லை. அதனால் ஏமாற்றமடைந்துள்ள ரசிகர்கள் இப்படி செயல்பட்டால் எப்படி கம்பேக் கொடுக்க முடியும்? என்றும் 100 போட்டிகளில் விளையாடி சாதனை படைக்கும் எண்ணத்தை மறந்து விடுங்கள் என்றும் ரகானே மீது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
- தமிழ்நாடு அணி 144 ஓவரில் 489 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
- ரெயில்வேஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியாவின் முதல்தர போட்டியான ரஞ்சி டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. நான்கு நாட்கள் கொண்ட போட்டியான இதில் 3-வது போட்டி நேற்று தொடங்கியது. கோவை எஸ்.ஆன்.ஆர். கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் தமிழ்நாடு- ரெயில்வேஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரரான ஜெகதீசன் முதல்நாள் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி சதம் விளாசினார். மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் தமிழ்நாடு அணி 5 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்திருந்தது. ஜெகதீசன் 155 ரன்களுடனும், முகமது அலி 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. முகமது அலி 5 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாய் கிஷோர் ஜெகதீசனுடன் இணைந்து சிறப்பாக விளையாடினார். சாய் கிஷோர் 59 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஜெகதீசன் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்தார்.
சாய் கிஷோர் ஆட்டமிழந்த பிறகு எம். முகமது 20 ரன்னிலும், அஜித் ராம் 17 ரன்னிலும், வாரியார் 1 ரன்னிலும் ஆட்டமிழக்க தமிழ்நாடு அணி 144 ஓவரில் 489 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. ஜெகதீசன் 245 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பின்னர் ரெயில்வேஸ் அணி களம் இறங்கியது. இன்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 2 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது தமிழ்நாடு அணி 363 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
குஜராத்துக்கு எதிரான முதல் போட்டியில் தமிழ்நாடு அணி 111 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. திரிபுராவுக்கு எதிரான 2-வது போட்டி டிராவில் முடிந்தது.
- ஜெகதீசன் ஆட்டமிழக்காமல் இரட்டை சதம் (245) அடிக்க தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 489 ரன்கள் குவித்தது.
- 2-வது இன்னிங்சில் சாய் கிஷோர், அஜித் ராம் ஆகியோர் சிறப்பாக பந்து வீச ரெயில்வேஸ் அணி 114 ரன்னில் சுருண்டது.
ரஞ்சி கோப்பைக்கான போட்டிகள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன. கோவையில் நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு- ரெயில்வேஸ் அணிகள் மோதின. இதில் தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 129 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஜெகதீசன் ஆட்டமிழக்காமல் இரட்டை சதம் (245) அடிக்க தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 489 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ரெயில்வேஸ் அணி 246 ரன்னில் ஆல்அவுட் ஆனது. சாய் கிஷோர், வாரியார் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
ரெயில்வேஸ் அணி 243 ரன்கள் பின்தங்கியதால் பாலோ-ஆன் ஆனது. இதனால் தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. 2-வது இன்னிங்சில் சாய் கிஷோர், அஜித் ராம் ஆகியோர் சிறப்பாக பந்து வீச ரெயில்வேஸ் அணி 114 ரன்னில் சுருண்டது. இதனால் தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 129 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சாய் கிஷோர், அஜித் ராம் ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
- ஐதராபாத் அணி வீரர் தன்மய் அகர்வால் ரஞ்சி போட்டியில் முச்சதம் அடித்து அசத்தினார்.
- அதிவேக இரட்டை சதம் மற்றும் அதிவேக முச்சதம் சாதனைகளை முறியடித்தார்.
ஐதராபாத்:
இந்தியாவில் உள்ளூர் போட்டிகளில் ஒன்றான ரஞ்சி டிராபி தொடர் நடந்து வருகிறது.
அதில் ஐதராபாத், அருணாச்சல பிரதேசம் அணிகளுக்கு இடையே ஆன போட்டியின் முதல் நாள் ஆட்டம் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த அருணாச்சல பிரதேசம் 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து, ஐதராபாத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரர்களாக தன்மய் அகர்வால், கேப்டன் ராகுல் சிங் இறங்கினர். இருவரும் சேர்ந்து அருணாச்சல் அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். ராகுல் சிங் 105 பந்துகளில் 185 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
தன்மய் அகர்வால் அதிரடியாக ஆடி சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அவர் 119 பந்துகளில் இரட்டை சதம் கடந்தார். இதன்மூலம் முதல் தர கிரிக்கெட் (உள்ளூர் டெஸ்ட் போட்டிகள் மற்றும் சர்வதேச டெஸ்ட் போட்டிகளை சேர்த்து) வரலாற்றில் அதிவேக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்திய தன்மய் அகர்வால் 147 பந்துகளில் முச்சதம் கடந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 160 பந்துகளில் 323 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அதிவேக முச்சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் தன்மய் அகர்வால் படைத்தார்.
ஒரே நாளில் 300 ரன்கள் குவித்த முதல் இந்திய வீரர், இரண்டாவது ஆசிய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். 21 சிக்சர், 33 பவுண்டரிகள் விளாசி இருந்தார்.
21 சிக்சர் அடித்ததன் மூலம் இந்திய முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் ஒரே இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். ஏற்கனவே, இஷான் கிஷன் 14 சிக்ஸ் அடித்ததே சாதனையாக இருந்தது. அதை தன்மய் அகர்வால் உடைத்தார்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஐதராபாத் அணி 48 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 529 ரன்கள் குவித்தது.
அருணாச்சல பிரதேசம் அணி 172 ரன்கள், ஐதராபாத் அணி 527 ரன்கள் எடுத்த நிலையில் ஒரே நாளில் 701 ரன்கள் குவிக்கப்பட்டது.
விஸ்டன் அல்மனாக்கின் கூற்றுப்படி, முதல் தர கிரிக்கெட் போட்டி 1772-ல் விளையாடப்பட்டது. சுமார் 252 ஆண்டுகளில் இந்த சாதனையை எட்டியது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரஞ்சி கோப்பையில் அறிமுகமான இளம் வயது வீரர் என்ற சாதனை படைத்தார் வைபவ் சூர்யவன்ஷி.
- மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகமாகி உள்ள அவருக்கு 12 வயதாகிறது.
புதுடெல்லி:
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் அறிமுகமான இளம் வயது வீரர் என்ற சாதனையை பீகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகமாகி உள்ள அவருக்கு 12 வயதாகிறது.
இதற்கு முன்பு யுவராஜ் சிங் 15 வயது 57 நாட்களில் விளையாடி இருந்ததே சாதனையாக இருந்தது. பீகார் சிறுவன் சூர்யவன்ஷி அதை முறியடித்துள்ளார்.
கிரிக்கெட்டின் சகாப்தமான சச்சின் தெண்டுல்கர் 15 வயது 230 நாட்களில் ரஞ்சி கோப்பையில் அறிமுகமாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.