என் மலர்
நீங்கள் தேடியது "Ranji Trophy Cricket"
- மும்பை அணி முதல் இன்னிங்சில் 384 ரன்கள் எடுத்தது.
- முதல் இன்னிங்சில் பரோடா அணி 348 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியின் 2-வது காலிறுதி ஆட்டத்தில் மும்பை மற்றும் பரோடா ஆகிய அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணி முதல் இன்னிங்சில் 384 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக முஷிர் கான் 203 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடர்ந்த பரோடா 348 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக சொலங்கி, ராவத் ஆகியோர் சதம் அடித்தனர். 36 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்ங்சியை ஆடிய மும்பை அணி 569 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
ஒரு கட்டத்தில் மும்பை அணி 337 ரன்களுக்கு 9 விக்கெட்டை இழந்திருந்தது. இந்நிலையில் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தனுஷ் கோட்யான்- துஷார் தேஷ்பாண்டே ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினர். இதன் மூலம் இந்த ஜோடி புதிய வரலாற்று சாதனையை படைத்து.
78 ஆண்டு கால முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் 10-வது மற்றும் 11-வது பேட்டர் இருவரும் சதம் அடிப்பது இதுவே முதல் முறையாகும். தனுஷ் 120 (நாட் அவுட்) ரன்களுடன் தேஷ்பாண்டே 123 (அவுட்) ரன்களும் குவித்தனர். இதன் மூலம் பரோடா அணிக்கு 606 ரன்கள் இலக்காக மும்பை அணி நிர்ணயித்தது. இன்று கடைசி நாள் என்பதால் மும்பை அணியே வெற்றி பெரும் நிலையில் உள்ளது.
- மும்பை அணிக்கு எதிரான அரைஇறுதியில் தமிழகத்தின் முன்னணி சுழற்பந்து வீரரான வாஷிங்டன் சுந்தர் விளையாடுகிறார்.
- இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்ற அவர் அணியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
சென்னை:
ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியின் கால்இறுதி ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தன. தமிழக அணி இன்னிங்ஸ் மற்றும் 33 வித்தியாசத்தில் சவுராஸ்டிராவை வீழ்த்தி ஏற்கனவே அரைஇறுதிக்கு முன்னேறி இருந்தது.
மற்ற கால்இறுதி போட்டிகளில் மத்தியபிரதேசம் 4 ரன்னில் ஆந்திராவையும், விதர்பா 127 ரன் வித்தியாசத்தில் கர்நாடகாவையும் தோற்கடித்தன. பரோடாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் பெற்ற கூடுதல் ரன் மூலம் மும்பை அணி அரைஇறுதிக்கு முன்னேறியது.
அரைஇறுதி ஆட்டங்கள் வருகிற 2-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை நடக்கிறது. நாக்பூரில் நடைபெறும் முதல் அரைஇறுதி ஆட்டத்தில் விதர்பா-மத்தியபிர தேச அணிகளும், மும்பையில் நடைபெறும் 2-வது அரை இறுதியில் தமிழ்நாடு-மும்பை அணிகளும் மோதுகின்றன.
மும்பை அணிக்கு எதிரான அரைஇறுதியில் தமிழகத்தின் முன்னணி சுழற்பந்து வீரரான வாஷிங்டன் சுந்தர் விளையாடுகிறார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்ற அவர் அணியில் இருந்து விடுவிக்கப்படுகிறார். இதனால் வாஷிங்டன் சுந்தர் தமிழக அணியோடு இணைந்து கொள்கிறார். அவரது வருகை சாய் கிஷோர் தலைமையிலான தமிழக அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும்
இதேபோல மும்பை அணியில் ஸ்ரேயாஸ் அய்யர் விளையாடுகிறார். அவர் இந்திய அணியில் இருந்து 2-வது டெஸ்டுக்கு பிறகு நீக்கப்பட்டார்.
- அதிக எடையுடன் இருப்பதாகவும் வலை பயிற்சியின் போது மெத்தனாக இருப்பதாகவும் மும்பை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- மும்பை அணியில் இருந்து நீக்கியதற்கு இன்ஸ்டாகிராமில் பிரித்வி ஷா ஓய்வு தேவை நன்றி என ஸ்டோரி வைத்துள்ளார்.
90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன் எலைட் பிரிவில் இடம் பெற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் மும்பை அணி தான் மோதிய 2 போட்டிகளில் 1 தோல்வி 1 வெற்றி பெற்றுள்ளது.
மும்பை அணி, முதல் போட்டியில் பரோடா அணிக்கு எதிரான போட்டியில் 84 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மகாராஷ்டிரா அணிக்கு எதிரான 2-வது போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து 3-வது போட்டியில் திரிபுரா அணியுடன் 26-ந் தேதி மோத உள்ளது.
இந்நிலையில் பிரித்வி ஷா மும்பை அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் அதிக எடையுடன் இருப்பதாகவும் வலை பயிற்சியின் போது மெத்தனாக இருப்பதாகவும் மும்பை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்திய அணிக்காக அதிக போட்டிகள் விளையாடிய ரகானே, ஷ்ரேயாஸ் அய்யர், ஷர்துல் தாகூர் ஆகியோர் தீவிரமாக வலை பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் இவர் மட்டும் அதனை புறக்கணிப்பதாகவும் மும்பை நிர்வாகம் கூறியது.
மும்பை அணியில் இருந்து நீக்கியதற்கு இன்ஸ்டாகிராமில் பிரித்வி ஷா ஓய்வு தேவை நன்றி என ஸ்டோரி வைத்துள்ளார். இரண்டு போட்டிகளில் விளையாடிய பிரித்வி ஷா 4 இன்னிங்ஸ்களில் 59 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
- பிசிசிஐ-ன் விதிமுறையால் ம், பண்ட், ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் ரஞ்சியில் களமிறங்கவுள்ளனர்.
- விராட் கோலி, கடைசியாக 2012-ம் ஆண்டில் தான் ரஞ்சி டிராபி தொடரில் விளையாடி இருந்தார்.
மும்பை:
இந்திய அணியின் மூத்த வீரர்கள் உட்பட அனைவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாடினால் மட்டுமே இனி இந்திய அணியில் இடம் கிடைக்கும் என பிசிசிஐ திட்டவட்டமாக அறிவித்து உள்ளது. பிசிசிஐ-ன் விதிமுறையால், பண்ட், ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் ரஞ்சியில் களமிறங்கவுள்ளனர்.
இந்த நிலையில் மூத்த வீரரான விராட் கோலி தேசிய அளவில் நடைபெற உள்ள டெஸ்ட் தொடரான ரஞ்சி டிராபி தொடரில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
விராட் கோலி, கடைசியாக 2012-ம் ஆண்டில் தான் ரஞ்சி டிராபி தொடரில் விளையாடி இருந்தார். அவர் அப்போது டெல்லி மாநில அணிக்காக விளையாடி இருந்தார். இப்போதும் அவரது பெயர் டெல்லி மாநில கிரிக்கெட் அமைப்பின் பரிசீலனையில் உள்ளது. அவரை ரஞ்சி டிராபி அணியில் சேர்ப்பதா? வேண்டாமா? என குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.
விராட் கோலிக்கு கழுத்து வலி ஏற்பட்டு இருப்பதாகவும், அதற்காக அவர் ஊசி செலுத்தி கொண்டு இருப்பதாகவும் வெளியாகி இருக்கும் தகவல் தான் இந்த குழப்பத்துக்கு காரணம். இந்த நிலையில். டெல்லி மாநில கிரிக்கெட் அமைப்பின் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் விராட் கோலியின் பெயரை அணியில் சேர்க்கலாமா? வேண்டாமா? என்ற முடிவு எட்டப்படும் என கூறப்படுகிறது.
விராட் கோலி விளையாட மறுத்ததால் கழுத்து வலி என்ற காரணம் சொல்லப்படுகிறதா? அல்லது உண்மையாகவே அவருக்கு கழுத்து வலி இருக்கிறதா? என சமூக வலைதளங்களில் காரசார விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி எந்த வீரர் உள்ளூர் போட்டிகளில் விளையாடவில்லையோ, அந்த வீரரை பிசிசிஐ நடத்தும் எந்த கிரிக்கெட் தொடரில் இருந்தும் நீக்கும் முடிவு எடுக்கப்படும் என்றும், ஐபிஎல் தொடரிலும் கூட அந்த வீரர் விளையாட தடை விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டு இருக்கிறது.
- பஞ்சாப் அணியின் கேப்டன் சுப்மன் கில் முதல் இன்னிங்சில் 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- 2-வது இன்னிங்சில் சுப்மன் கில் சதமடித்தும் பஞ்சாப் அணி இன்னிங்ஸ் தோல்வியடைந்தது.
ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி 23-ந் தேதி தொடங்கிய ஒரு போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான பஞ்சாப் அணியும் மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடகா அணியும் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, மோசமான ஆட்டத்தின் மூலம் 55 ரன்னில் சுருண்டது. அதிகம் எதிர்பார்த்த நட்சத்திர வீரரான சுப்மன் கில் 4 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
இதனையடுத்து களமிறங்கிய கர்நாடகா அணி ஸ்மரண் ரவிச்சந்திரனின் இரட்டை (203) சதத்தால் 475 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இதனால் கர்நாடக அணி 420 ரன்கள் முன்னிலை பெற்றது.
கடினமாக சூழலில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் கேப்டன் சுப்மன் கில்லை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 102 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இறுதியில் பஞ்சாப் அணி 213 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் கர்நாடக அணி இன்னிங்ஸ் மற்றும் 207 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 4 ரன்னில் வெளியேறி நிலையில் சுப்மன் கில் மீது பல்வேறு விமர்சங்கள் எழுந்தது. இதனையடுத்து 2-வது இன்னிங்சில் சதம் விளாசியதன் மூலம் தன் மீதான விமர்சங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
- உள்ளூர் போட்டியில் விளையாடும் விராட் கோலியை பார்க்க ரசிகர்கள் கூட்டம் டெல்லி மைதானத்தில் அலைமோதியது.
- விராட் கோலியை போல்ட் செய்த ரெயில்வே அணியின் ஹிமான்ஷூ சங்வான் ஆக்ரோஷமாக மகிழ்ச்சியை கொண்டாடினார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. இந்திய அணி வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் கட்டாயமாக விளையாட வேண்டும் என்று அறிவித்தது. அந்த வகையில், இந்திய கேப்டன் ரோகித் சர்மா, முன்னணி வீரர் விராட் கோலி ஆகியோர் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடி வருகின்றனர்.
இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி டெல்லி அணிக்காக விளையாடினார். இன்று பேட்டிங் செய்ய களமிறங்கிய விராட் கோலியை பார்க்க அந்த மைதானத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதையடுத்து, 15 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி 6 ரன்கள் எடுத்த நிலையில், ரெயில்வே அணியின் ஹிமான்ஷூ சங்வான் வீசிய பந்தில் போல்டு ஆனார்.
உள்ளூர் கிரிக்கெட்டில் நீண்ட இடைவெளிக்கு பிறகு களமிறங்கிய விராட் கோலி மீண்டும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் இந்திய அணியின் ரன் மிஷினாக விளங்கிய விராட் கோலியை போல்ட் செய்த ரெயில்வே அணியின் ஹிமான்ஷூ சங்வான் ஆக்ரோஷமாக மகிழ்ச்சியை கொண்டாடினார். இதனால் விராட் கோலியை போல்ட் செய்த வீரர் யார் என்பது குறித்து விவரங்களை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் அவரிடம் மைதானத்தில் குவிந்திருந்த ரசிகர்கள் செல்பி மற்றும் ஆட்டோகிராப் வாங்கி மகிழ்ந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ரஞ்சி போட்டியில் ஹிமான்ஷூ சங்வான் வீசிய பந்தில் விராட் கோலி போல்டு ஆனார்.
- விராட் கோலியை போல்ட் செய்தபோது ஹிமான்ஷூ சங்வான் ஆக்ரோஷமாக கொண்டாடினார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. இந்திய அணி வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் கட்டாயமாக விளையாட வேண்டும் என்று அறிவித்தது. அந்த வகையில், இந்திய கேப்டன் ரோகித் சர்மா, முன்னணி வீரர் விராட் கோலி ஆகியோர் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடி வருகின்றனர்.
இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி டெல்லி அணிக்காக விளையாடினார். ரெயில்வே அணிக்கு எதிரான போட்டியில் 15 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி 6 ரன்கள் எடுத்த நிலையில், ஹிமான்ஷூ சங்வான் வீசிய பந்தில் போல்டு ஆனார்.
இதனையடுத்து, விராட் கோலியை போல்ட் செய்த வீரர் யார் என்பது குறித்து விவரங்களை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தேடினர்.
இந்நிலையில், ரஞ்சி கோப்பை போட்டியில் விராட் கோலியின் விக்கெட்டை எடுத்த பதில் அவரிடமே ரயில்வேஸ் அணி வீரர் ஹிமான்ஷு சங்க்வான் ஆட்டோகிராஃப் வாங்கியுள்ளார். இது தொடர்பாக வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
- பந்து வீச்சில் ஷிவம் துபே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் மும்பை அணி 188 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
நாக்பூர்:
90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்குகிறது. 32 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரில் லீக் மற்றும் காலிறுதி சுற்று ஆட்டங்களின் முடிவில் குஜராத், கேரளா, விதர்பா மற்றும் மும்பை அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. இந்நிலையில் அரையிறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கின.
இதில் நாக்பூரில் நடைபெற்று வரும் ஒரு அரையிறுதி ஆட்டத்தில் மும்பை - விதர்பா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் மும்பை அணிக்காக இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷிவம் துபே களமிறங்கினர். இதில் டாஸ் வென்று முதல் இன்னிங்சை தொடங்கிய விதர்பா அணி ஆரம்பம் முதலே சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது.
துருவ் ஷோரே (74 ரன்கள்), டேனிஷ் மாலேவார் (79 ரன்கள்), கருண் நாயர் (45 ரன்கள்) ரத்தோட் (54), ஆகியோரின் கணிசமான பங்களிப்புடன் விதர்பா முதல் இன்னிங்சில் 383 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. மும்பை தரப்பில் ஷிவம் துபே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணியில் ஆயுஷ் மத்ரே 9, சித்தேஷ் லாட் 35, ரகானே 18 என வெளியேறினார். இதனையடுத்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவும் ஷிவம் துபேவும் டக் அவுட்டில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர்.
இதனால் 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் மும்பை அணி 188 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. ஆகாஷ் ஆனந்த் 67 ரன்களுடனும் தனுஷ் கோட்யான் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
- மும்பையை 80 ரன்கள் வித்தியாசத்தில் விதர்பா அணி வீழ்த்தியது.
- ரஞ்சி டிராபி இறுதிப்போட்டியில் விதர்பா- கேரளா அணிகள் வருகிற 26-ந் தேதி மோதுகின்றனர்.
ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டி கடந்த 17-ந் தேதி தொடங்கியது. ஒரு அரையிறுதிப் போட்டியில் மும்பை- விதர்பா அணிகளும் கேரளா- குஜராத் அணிகளும் மோதினர்.
மும்பை விதர்பா அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த விதர்பா அணி முதல் இன்னிங்சில் 383 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி முதல் இன்னிங்சில் 270 ரன்கள் குவித்தது.
இதனால் விதர்பா 103 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கியது. யாஷ் ரத்தோட்டின் சதத்தின் மூலம் (151) விதர்பா அணி 292 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் மும்பை அணிக்கு 408 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
கடினமான இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 124 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து சர்துல் தாகூர் - ஷம்ஸ் முலானி ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷர்துல் தாகூர் அரை சதம் கடந்தார். 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி எதிர்பாரதவிதமாக ரன் அவுட் ஆனது. ஷம்ஸ் 46 ரன்களில் வெளியேறினார். அதனை தொடர்ந்து ஷர்துல் 66 ரன்கள் என்ற நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வீரர்கள் மோஹித் அவஸ்தி- ராய்ஸ்டன் டயஸ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். ஆனாலும் அவஸ்தி 34 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் விதர்பா அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ரஞ்சி டிராபி இறுதிப்போட்டியில் விதர்பா- கேரளா அணிகள் வருகிற 26-ந் தேதி மோதுகின்றனர்.
- விதர்பா முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதன் காரணமாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
- விதர்பா அணிக்கு ரூ.3 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என விதர்பா கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
நாக்பூர்:
90-வது ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் விதர்பா - கேரளா அணிகள் ஆடின. இதில் முதல் இன்னிங்சில் விதர்பா 379 ரன்னும், கேரளா 342 ரன்னும் எடுத்தன. தொடர்ந்து 37 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய விதர்பா 375 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டத்தை டிராவில் முடித்து கொள்ள இரு கேப்டன்களும் ஒப்புகொண்டனர்.
விதர்பா முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதன் காரணமாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த ஆட்டத்தின் ஆட்ட நாயகன் விருது டேனிஷ் மலேவருக்கும், தொடரின் தொடர் நாயகன் விருது ஹார்ஷ் துபேவுக்கும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் மகுடம் சூடிய விதர்பா அணிக்கு ரூ.3 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என விதர்பா கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
மேலும், ஒரே சீசனில் 69 விக்கெட்டுகள் வீழ்த்தி அமர்க்களப்படுத்திய சுழற்பந்து வீச்சாளர் ஹார்ஷ் துபேவுக்கு ரூ.25 லட்சமும், இந்த தொடரில் ரன்கள் குவித்த யாஷ் ரதோட் (960 ரன்), கருண் நாயர் (863 ரன்) ஆகியோருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது. அத்துடன் தலைமை பயிற்சியாளர் உஸ்மான் கானிக்கு ரூ.15 லட்சமும், உதவி பயிற்சியாளர்களுக்கு தலா ரூ.5 லட்சமும் அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி தொடக்க ஆட்டத்தில் மத்திய பிரதேசத்தை எதிர் கொள்கிறது. வருகிற 1-ந்தேதி திண்டுக்கல்லில் இந்த ஆட்டம் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அணி விவரம் :-
பாபா இந்திரஜித் (கேப்டன்), கவுசிக் காந்தி, அபினவ் முகுந்த், முரளிவிஜய், விஜய் சங்கர், பாபா அபராஜித், தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர், ஆர்.அஸ்வின், சாய் கிஷோர், ரகீல்ஷா, எம்.முகமது, கவுசிக், அபிஷேக் தன்வார். #RanjiTrophy2018