என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ravichandran Ashwin"

    • வீடியோவில் ஐ.பி.எல். விருதுகள் பற்றி பேசியுள்ளார்.
    • எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.

    ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.

    இந்த சீசனில் முன்னாள் இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். போட்டிகளை தவிர்த்து சமூக வலைதளங்களில் கிரிக்கெட் பற்றி பேசுவதை அஸ்வின் வாடிக்கையாக கொண்டிருக்கிறார். அந்த வகையில், அஸ்வின் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் ஐ.பி.எல். விருதுகள் பற்றி பேசியுள்ளார்.

    அப்போது, "ஐ.பி.எல். தொடர்களில் போட்டி முடிந்த பிறகு நடைபெறும் விருது வழங்கும் விழாக்களில் பத்து விருதுகள் வரை வழங்கப்படுகிறது. இவற்றில் இரு அணி வீரர்கள் சமபங்கு அளவுக்கு விருதுகளை பெற்று வருகின்றனர். எனினும், ஒரு பந்துவீச்சாளர் சிறப்பாக பந்துவீசினால் கூட அவருக்கு ஒரு விருது வழங்கப்படுவதில்லை.

    சூப்பர் ஸ்டிரைக், சூப்பர் ஃபோர், சூப்பர் சிக்ஸ் என எல்லாவற்றுக்கும் விருது வழங்கப்படுகிறது. ஆனால் சூப்பர் பந்துக்கான விருது வழங்கப்படுவதில்லை. ஒரு காலத்தில் அதிவேக பந்துவீசியதற்கு விருது வழங்கப்பட்டது. அந்த பந்து சிக்சருக்கு அடிக்கப்பட்டால் கூட அந்த பந்துவீச்சாளருக்கு அதிவேக பந்து வீசியதற்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

    இதே நிலை நீடித்தால் பந்துவீச்சாளர் பந்துடன் மைதானத்தை விட்டு ஓடும் காலம் வெகுதூரம் இல்லை. நாங்கள் பந்துவீசாமால் உங்களால் எப்படி அதனை அடித்துவிட முடியும்?," என்று ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டார்.

    • நடப்பு ஐபிஎல் தொடரில் தமிழக வீரர் அஸ்வின் சென்னை அணிக்காக விளையாட உள்ளார்.
    • சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து அஸ்வின் ஓய்வை அறிவித்தார்.

    ஐபிஎல் தொடர் நாளை கொல்கத்தாவில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இதன் தொடக்க போட்டியில் கொல்கத்தா - பெங்களூரு அணிகள் மோதுகின்றனர்.

    நடப்பு ஐபிஎல் தொடரில் தமிழக வீரர் அஸ்வின் சென்னை அணிக்காக விளையாட உள்ளார். அவர் சென்னை அணியிடன் இணைந்து தீவிர வலை பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் சென்னையில் மேற்கு மாம்பலத்தில் உள்ள ராமகிருஷ்ணாபுரம் 1-வது தெருவிற்கு 'ரவிச்சந்திரன் அஷ்வின் சாலை' என பெயர் சூட்ட சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.கார்த்திக் என்பவரின் கோரிக்கையை ஏற்று, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து அஸ்வின் ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பவர் ப்ளே தான் ஆட்டத்தை தீர்மானிக்கிறது என்பது பலருக்கும் தெரியாத உண்மையாக உள்ளது.
    • டி20 கிரிக்கெட் என வரும்போது, வெற்றி தோல்விகள் மிகவும் சிறிய ரன் வித்தியாசத்தில் தான் இருக்கும்.

    சென்னை:

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்து 2 வாரங்கள் ஆகிவிட்டது. எனினும் இந்தியா மீதான விமர்சனங்கள் மட்டும் இன்னும் குறைந்தபாடில்லை. இந்திய அணியில் ரோகித் சர்மாவின் கேப்டன்சியை மாற்ற வேண்டும், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை மாற்ற வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

    இந்நிலையில் இந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்று ஆடிய ரவிச்சந்திரன் அஸ்வினே தற்போது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

    இதுகுறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசியதாவது:-

    டி20 கிரிக்கெட் என வரும்போது, வெற்றி தோல்விகள் மிகவும் சிறிய ரன் வித்தியாசத்தில் தான் இருக்கும். ஒரே ஒரு பந்தில் தோற்கலாம் அல்லது ஒரே ஒரு பந்தில் வெற்றி பெறலாம். இதனை விட முக்கியமான ஒன்று பவர் ப்ளே.

    நிறைய போட்டிகளின் முடிவு பவர் ப்ளேவிலேயே தெரிந்துவிடும். ஒரு அணி பவர் ப்ளேவின் முடிவில் 30 ரன்கள் அடித்து, எதிரணி 60 ரன்களை அடித்தால் அங்கேயே ஆட்டம் முடிந்தது. ஆனால் பவர் ப்ளே தான் ஆட்டத்தை தீர்மானிக்கிறது என்பது பலருக்கும் தெரியாத உண்மையாக உள்ளது. பரிசோதனை செய்து பார்ப்பதற்கு டி20 கிரிக்கெட்டில் நிறைய இடங்கள் உள்ளன. ஆனால் முக்கியமான போட்டிகளில் நம் பலத்தை அறிந்து முழுமையாக அதனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இவை அனைத்துமே இந்திய ஓப்பனர்கள் ரோகித் - கே.எல்.ராகுலை குறிக்கின்றன. இந்த தொடரின் பவர் ப்ளேவின் மிகவும் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டுடன் இருந்த 4வது அணி இந்தியா ஆகும் (95.85 ). 9 பந்துகளுக்கு ஒரு பவுண்டரி தான் சென்றுள்ளது. அதாவது ரோகித் , கே.எல்.ராகுல் ஆகியோர் ஒரு பந்திற்கு ஒரு ரன்னிற்கும் குறைவாக அடித்துள்ளனர்.

    ரோகித் - கே.எல்.ராகுல் ஜோடி மொத்தமாக 6 போட்டிகளில் 88 ரன்களை மட்டுமே அடித்தனர். அவர்களின் சராசரி பார்ட்னர்ஷிப் 14.66 ரன்கள் மட்டுமே ஆகும். அரையிறுதியில் இந்தியா 38/ 1 என இருக்க, இங்கிலாந்து அணி 66/1 என வலுவான நிலையில் இருந்தது. இதனை தான் அஸ்வின் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.

    • 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
    • அஸ்வின் ஆட்ட நாயகனாகவும், புஜாரா தொடர் நாயகனாகவும் அறிவிப்பு.

    மிர்பூர்:

    வங்காள தேசம் அணிக்கு எதிராக மிர்பூரில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. கடைசி நாளான நேற்று இந்திய அணி 74 ரன்களில் 7 விக்கெட்களை இழந்து தடுமாறிய நிலையில், ரவிச்சந்திரன் அஷ்வின் ஸ்ரேயாஸ் ஐயரும் ஜோடி சேர்ந்து அணியை வெற்றி பெற செய்தனர். அஸ்வின் 42 ரன்களுடனும், ஐயர் 29 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடர்ச்சியாக 16வது வெற்றியை பெற்றுள்ளது. அஸ்வின் ஆட்ட நாயகன் விருதையும், புஜாரா தொடர் நாயகன் விருதையும் பெற்றனர். இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்கும் இந்தியாவின் நம்பிக்கைக்குரிய வீரராக ஸ்ரேயஸ் ஐயர் திகழ்வதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

    நான்காவது நாள் ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்கள் சாதகமாக இருந்தாலும், ஸ்ரேயஸ் தனது திறமையை வெளிப்படுத்தியதாகவும், அடுத்த ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடக்கும் டெஸ்ட் தொடருக்கு அவரது பார்ம் முக்கியமானதாக இருக்கும் என்றும் தமது டுவிட்டர் பதிவில் கஃப் குறிப்பிட்டுள்ளார்.

    • வெஸ்ட் இண்டீஸ் வீரர் வின்ஸ்டன் பெஞ்சமினின் 34 ஆண்டு கால சாதனையை அஸ்வின் முறியடித்து உள்ளார்.
    • முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்.

    மிர்பூர்:

    வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்த வெற்றிக்கு 8-வது விக்கெட் ஜோடியான ஷ்ரேயாஸ் அய்யர், அஸ்வின் காரணமாக இருந்தனர். 145 ரன் இலக்குடன் விளையாடிய இந்திய அணி 74 ரன்னில் 7 விக்கெட்டை இழந்தது.

    இதனால் இந்திய அணி தோல்வி அடையும் நிலைக்கு சென்றது. இருவரும் சிறப்பாக ஆடி தோல்வியில் இருந்து அணியை காப்பாற்றி வெற்றி பெற வைத்தனர்.

    இந்த டெஸ்டில் அஸ்வின் முதல் இன்னிங்சில் 12 ரன்னும், 2-வது இன்னிங்சில் 42 ரன்னும் எடுத்தார். முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டும் கைப்பற்றி னார்.

    2-வது இன்னிங்சில் அஸ்வின் எடுத்த 42 ரன் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது. இதனால் ஆட்ட நாயகன் விருதை தட்டி சென்றார்.

    36 வயதான அஸ்வின் 88 டெஸ்டில் விளையாடி 3043 ரன்கள் எடுத்துள்ளார். 449 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் டெஸ்டில் 3 ஆயிரம் ரன்கள் மற்றும் 400 விக்கெட்டுக்கு மேல் எடுத்த வீரர் என்ற புதிய சாதனை யை அவர் படைத்தார்.

    இதற்கு முன்பு கபில்தேவ் (இந்தியா), ஹேட்லி (நியூசிலாந்து) பொல்லாக் (தென் ஆப்பிரிக்கா), வார்னே (ஆஸ்திரேலியா), ஸ்டூவர்ட் பிராட் (இங்கிலாந்து) ஆகியோர் இந்த சாதனையை படைத்து இருந்தனர். இந்த வரிசையில் 6-வது வீரராக தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் இணைந்து உள்ளார்.

    கபில்தேவ் 131 டெஸ்டில் விளையாடி 5248 ரன் குவித்துள்ளார். 434 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ரிச்சர்டு ஹேட்லி 86 டெஸ்டில் 3124 ரன்னும், 431 விக்கெட்டும், வார்னே 145 டெஸ்டில் 3154 ரன்னும், 708 விக்கெட்டும் எடுத்துள்ள னர்.

    பொல்லாக் 108 டெஸ்டில் 3781 ரன்னும், 421 விக்கெட்டும், ஸ்டூவர்ட் பிராட் 159 டெஸ்டில் 3550 ரன்னும், 566 விக்கெட்டும் எடுத்துள்ளனர்.

    சென்னையை சேர்ந்த அஸ்வின் 450 விக்கெட் கைப்பற்றி மேலும் ஒரு மைல்கல்லை தொட இன்னும் ஒரு விக்கெட்டே தேவை. கும்ப்ளே குறைந்த டெஸ்டில் 450 விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்து இருந்தார். 93-வது டெஸ்டில் அவர் இதை செய்து இருந்தார். அவரது சாதனையை முறியடித்து அதிவேகத்தில் 450 விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற அஸ்வினுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது.

    அஸ்வின் நேற்று மேலும் ஒரு சாதனை புரிந்தார். 9-வது வீரராக களம் இறங்கி அதிக ரன்களை எடுத்து சேசிங் செய்து அணியை வெற்றி பெற வைத்தார் என்ற சாதனையை படைத்தார்.

    இதற்கு முன்பு 1988-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் வீரர் வின்ஸ்டன் பெஞ்சமின் 9-வது வீரராக களம் இறங்கி 40 ரன்களை எடுத்து அணியை வெற்றி பெற வைத்து இருந்தார். தற்போது அஸ்வின் 42 ரன் எடுத்து வெற்றி பெற வைத்துள்ளார். இதன் மூலம் 34 ஆண்டு கால சாதனையை அஸ்வின் முறியடித்து உள்ளார்.

    • இந்தியா பாகிஸ்தானுக்கு வராவிட்டால் உலகக்கோப்பை போட்டியை புறக்கணிப்போம் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
    • ஆசிய கோப்பை இலங்கைக்கு மாற்றப்படலாம்.

    சென்னை:

    6 அணிகள் பங்கேற்கும் 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இரு நாட்டு உறவு சீராக இல்லாததால் இந்திய அணியால் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட முடியாது. அதற்கு பதிலாக இந்த போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய்ஷா அறிவித்தார்.

    இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து இது குறித்து விவாதித்து முடிவு எடுக்க பக்ரைனில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. பாகிஸ்தானுக்கு சென்று விளையாட வாய்ப்பில்லை என்று இந்தியாவும், தங்கள் நாட்டில் தான் ஆசிய கோப்பை போட்டியை நடத்தியாக வேண்டும் என்பதில் பாகிஸ்தானும் விடாப்பிடியாக இருந்ததால் கூட்டத்தில் எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை.

    போட்டி நடக்கும் இடம் குறித்து அடுத்த மாதம் மீண்டும் விவாதித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரை பாகிஸ்தான் புறக்கணிக்காது என இந்திய வீரர் அஷ்வின் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    பாகிஸ்தானுக்கு நாம் செல்லாவிட்டால் அவர்கள் இந்தியாவுக்கு வரமாட்டோம் என்கிறார்கள். ஆனால் இப்படி நடப்பதை நாம் பலமுறை பார்த்திருப்போம். ஆசிய கோப்பை தொடரை அங்கு நடத்தக்கூடாது என நாம் சொல்லும் போது அவர்களும் நமது இடத்துக்கு வரமாட்டோம் என்று சொல்வார்கள். ஆனால் அது சாத்தியமில்லை என்று நான் நினைக்கிறேன்.

    ஆசிய கோப்பை இலங்கைக்கு மாற்றப்படலாம். இது 50 ஓவர் உலகக்கோப்பைக்கு ஒரு முன்னிலையாக இருக்கலாம். துபாயில் பல தொடர்கள் நடைபெற்றுள்ளன. ஆசிய கோப்பை தொடர் இலங்கைக்கு மாற்றப்பட்டால் நான் மகிழ்ச்சி அடைவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அஸ்வின் போலவே பந்து வீசக்கூடிய மகேஷ் பித்தியாவை வைத்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பயிற்சி மேற்கொண்டனர்.
    • நாக்பூர் ஆடுகளம் மிகவும் வறண்டு காணப்படுகிறது. இதனால் சுழற்பந்து வீச்சுக்கு எடுபடும் என்று நினைக்கிறேன்.

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுழற் பந்து வீச்சை எதிர் கொள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அஸ்வின் சுழலை சமாளிக்க வியூகங்களை வகுத்துள்ளனர். அஸ்வின் போலவே பந்து வீசக்கூடிய மகேஷ் பித்தியாவை வைத்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பயிற்சி மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் அஸ்வின் பந்து வீச்சை எதிர் கொள்ள தயார் என்று ஆஸ்திரேலிய முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவ் சுமித் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நாங்கள் பல ஆப் ஸ்பின்னர்களுக்கு எதிராக விளையாடி இருக்கிறோம். அஸ்வின் போன்று மகேஷ் பித்தியா பந்து வீசுகிறார். நாங்கள் அதிகமாக சிந்திக்கவில்லை. அஸ்வின் ஒரு தரமான பந்து வீச்சாளர். ஆனால் அவரது பந்து வீச்சை எதிர் கொள்ள தயாராக இருக்கிறோம். அதற்கு வியூகங்கள் எங்களிடம் உள்ளது.

    நாக்பூர் ஆடுகளம் மிகவும் வறண்டு காணப்படுகிறது. இதனால் சுழற்பந்து வீச்சுக்கு எடுபடும் என்று நினைக்கிறேன் என்றார்.

    • பேட் கம்மின்ஸ் 3-வது இடத்தில் உள்ளார்.
    • இந்திய வீரர் ஜடேஜா 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    டெஸ்ட் போட்டியில் சிறந்த பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர், ஆல் ரவுண்டர்களின் தரவரிசை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.

    டெஸ்ட் போட்டியில் சிறந்த பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர், ஆல் ரவுண்டர்களின் தரவரிசையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி பந்துவீச்சாளர் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் பேட் கம்மின்ஸை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்துவீசியதால் அவர் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடியதால் அவர் முன்னேறியுள்ளார்.

    மேலும் பேட் கம்மின்ஸ் 3-வது இடத்தில உள்ளார். இந்திய வீரர் ஜடேஜா 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆல் ரவுண்டர் பட்டியலில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா முதலிடம், 2 வது இடத்தில் அஸ்வின் உள்ளனர். அக்சர் படேல் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடியதால் அவர் முன்னேறியுள்ளார். பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில், ஆஸ்திரேலிய அணியின் மார்னஸ் லபுஸ்சேன் முதலிடத்தில் உள்ளார். இந்திய அணியின் ரிஷப் பண்ட் 6-வது இடத்திலும் ரோகித் சர்மா 7 -வது இடத்திலும் இடத்திலும் உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அஸ்வின் கிரிக்கெட் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
    • பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் தொடர் நாயகனாக அஸ்வின் மற்றும் ஜடேஜா தேர்வு செய்யப்பட்டனர்.

    சமீபத்தில் நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. தொடர் நாயகனாக அஸ்வின் மற்றும் ஜடேஜா தேர்வு செய்யப்பட்டனர்.

    அஸ்வின் கிரிக்கெட் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

    இந்நிலையில் டுவிட்டர் கணக்கை பாதுகாப்பது குறித்து எலான் மஸ்க்கை டேக் செய்து அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார். 


    அதில் கூறியிருப்பதாவது, எனது டுவிட்டர் கணக்கில் தொடர்ந்து பாப் அப்கள் வருகின்றது. ஆனால் இணைப்புகள் எதுவும் தெளிவுபடுத்தவில்லை. மார்ச் 19-ம் தேதிக்கு முன் எனது கணக்கை எப்படிப் பாதுகாப்பது என்பதை சரியான திசையில் சுட்டிக்காட்டுங்கள் ப்ளீஸ் என கூறினார்.

    இதற்கு நிறைய ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

    • நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை ஆண்கள் பள்ளியில் இதற்கான பயிற்சி நடக்கிறது.
    • இதே போல மாநகராட்சி பள்ளியை சேர்ந்த 20 மாணவிகள் உள்பட 60 பேருக்கு கால்பந்து பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

    சென்னை:

    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் ஆர்.அஸ்வின்.

    சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அவர் 25 விக்கெட் வீழ்த்தி முத்திரை பதித்தார்.

    36 வயதான அஸ்வின் 92 டெஸ்டில் விளையாடி 474 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார். விரைவில் அவர் 500 விக்கெட்டை தொட்டு சாதனை படைக்க இருக்கிறார்.

    இதற்கிடையே அஸ்வின் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கிறார். நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை ஆண்கள் பள்ளியில் இதற்கான பயிற்சி நடக்கிறது. இந்த பயிற்சிக்காக 30 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு அடுத்த வாரம் பயிற்சி கொடுக்க முடிவு செய்துள்ளார்.

    மாநகராட்சி பள்ளியில் கிரிக்கெட் உள்கட்டமைப்பு வசதியை உருவாக்கும் முயற்சியில் பெருநகர மாநகராட்சி ஈடுபட்டு உள்ளது. அதன்படி இந்த பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.

    இதே போல மாநகராட்சி பள்ளியை சேர்ந்த 20 மாணவிகள் உள்பட 60 பேருக்கு கால்பந்து பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

    • ஜாஸ் பட்லரை மன்கட் முறையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்யதது பரபரப்பாக பேசப்பட்டது.
    • பட்லரும், அஸ்வினும் ஒரே அணியில் தான் விளையாடி வருகின்றனர்.

    ஐபிஎல் 2023 சீசனில் 8-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

    முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 20 ஓவரில் 197 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி வெற்றிக்கு அருகில் சென்ற எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவியது.

    முன்னதாக, பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் விளையாடியபோது ரவிச்சந்திரன் அஸ்வின் 4 ஓவர்கள் வீசி 25 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

    அவர் 7-வது ஓவரை வீசியபோது திடீரென பாதியிலேயே நின்று ஸ்டம்ப்பை திரும்பிப் பார்த்தார். அப்போது நான்-ஸ்டிரைக்கராக நின்றுகொண்டிருந்த ஷிகர் தவன் கோட்டுக் வெளியே இருந்தார். பின்னர் சுதாரித்துக் கொண்ட தவன், சட்டென்று கோட்டில் பேட்டை வைத்தார். இருவரும் பரஸ்பரம் புன்னகை செய்தனர்.

    முன்பு ஒருமுறை ஜாஸ் பட்லரை மன்கட் முறையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்யதது பரபரப்பாக பேசப்பட்டது.

    தற்போது பட்லரும், அஸ்வினும் ஒரே அணியில் தான் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    நேற்றைய தினம் ஷிகர் தவனை அஸ்வின் மன்கட் முறையில் ஆட்டமிழக்கச் செய்ய முயற்சித்தபோது பீல்டிங் செய்துகொண்டிருந்த பட்லர் முகத்தை கேமிராமேன் ஃபோகஸ் செய்தார். இதனால் ரசிகர்களும் ஆர்ப்பரிக்க தொடங்கினர்.

    இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.
    • ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் அகமதாபாத் நகரில் நடைபெற்ற 23-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    இதில் 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அசத்தல் வெற்றி பெற்றது. இதன் மூலம் ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

    இந்நிலையில் இந்த போட்டி முடிந்த பிறகு குஜராத் அணியை வீழ்த்திய சந்தோசத்தை கொண்டாடும் விதமாக அஸ்வின்- சாம்சன் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    குஜராத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற பின், ராஜஸ்தான் அணி வீரர்களுடன் "நீங்க மட்டும் தோத்தாலும் ஜெயிச்சாலும் விசில் போட்டு சந்தோஷமா இருக்கீங்க. தம்பி அடிச்ச அடியில குஜராத்தே குலுங்கிடுச்சு என்று அந்த அணியை கலாய்த்து உரையாடினார்கள்.

    தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

    ×