என் மலர்
நீங்கள் தேடியது "RCBW"
- டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது.
- மும்பை அணி 20 ஓவரில் 188 ரன்கள் எடுத்தது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பார்போர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 20-வது லீக் போட்டி மும்பை இந்தியன்ஸ் - ஆர்சிபி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த ஆர்சிபி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 53, ரிச்சா கோஷ் 36, பெர்ரி 49 ரன்கள் அடித்துள்ளனர்.

இதையடுத்து 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை களமிறங்கியது.
இறுதியில் மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டு இழந்து 188 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஆர்சிபி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த போட்டி ஆர்சிபி அணி ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.
- ஷோபி டிவைன் 27 பந்தில் 32 ரன்கள் அடித்தார்.
- எலிஸ் பெர்ரி 37 பந்தில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிக்காமல் இருந்தார்.
பெண்கள் பிரீமியர் லீக் 2024 சீசனின் இறுதிப் போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 113 ரன்னில் சுருண்டது. அந்த அணியின் தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மான அதிகபட்சமாக 27 பந்தில் 44 ரன்கள் சேர்த்தார். மற்றொரு தொடக்க வீராங்கன மெக் லேனிங் 23 பந்தில் 23 ரன்கள் அடித்தார். இந்த ஜோடி பவர் பிளேயில் விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் குவித்தது. அதன்பின் 52 ரன்னுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பெங்களூர் அணி சார்பில் சோபி மோலினெக்ஸ் 3 விக்கெட்டும், ஷ்ரேயாங்கா பாட்டில் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 114 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி அணி களம் இறங்கியது. தொடக்க வீராங்கனைகளான ஸ்மிரிதி மந்தனா- ஷோபி டிவைன் ஆகியோர் நிதானமாக விளையாடினர். குறைந்த இலக்கு என்பதால் ஆட்டத்தில் வேகம் காட்டவில்லை.
அணியின் ஸ்கோர் 8.1 ஓவரில் 49 ரன்களாக இருக்கும்போது டிவைன் 27 பந்தில் 32 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன்பின் எலிஸ் பெர்ரி களம் இறங்கினார். இவர் நிதானமாக விளையாடினார். மறுமுனையில் மந்தனா அதிரடி ஆட்டத்தை தொடங்க நினைக்கும்போது 39 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அப்போது ஆர்சிபி 15 ஓவரில் 82 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஐந்து ஓவரில் 32 ரன்கள் தேவைப்பட்டது, எலிஸ் பெர்ரி உடன் ரிச்சா கோஷ் ஜோடி சேர்ந்தார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீராங்கனைகள் போட்டியை கடைசி ஓவர் வரை கொண்டு சென்றனர்.
ஆர்சிபி வீராங்கனைகள் வாய்ப்பு கிடைக்கும்போது மட்டும் பந்தை பவுண்டரிக்கு விரட்டினர். ஆர்சிபி அணிக்கு கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்டது. முதல் இரண்டு பந்துகளிலும் தலா ஒரு ரன் கிடைத்தது. 3-வது பந்தை ரிச்சா கோஷ் பவுண்டரிக்கு விரட்ட ஆர்சிபி 19.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. எலிஸ் பெர்ரி 37 பந்தில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிக்காமல் இருந்தார். ரிச்சா கோஷ் 14 பந்தில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கடந்த ஆண்டுதான் பெண்கள் பிரீமியர் லீக் தொடங்கியது. 2-வது சீசனான இதில் ஆர்சிபி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
- டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.
- பெங்களூரு தரப்பில் எலிஸ் பெர்ரி 81 ரன்கள் எடுத்தார்.
3-வது மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதற்கட்ட போட்டிகள் வதோதராவில் முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட லீக் போட்டிகள் பெங்களூருவில் இன்று தொடங்கியது.
இன்றைய போட்டியில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொண்டு ஆடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.
இதையடுத்து பெங்களூருவின் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா மற்றும் டேனி வயட் ஹாட்ஜ் களமிறங்கினர். இதில் டேனி வயட் ஹாட்ஜ் 9 ரன்னிலும், மந்தனா 26 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து எலிஸ் பெர்ரி ஒருபுறம் நிலைத்து நின்று ஆடினார். மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்தது.
இதில் ராக்வி பிஸ்ட் (1), கனிகா அகுஜா (3), ரிச்சா கோஷ் (28), ஜார்ஜியா வரேஹம் (6) ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். அதிரடியாக ஆடிய எலிஸ் பெர்ரிஅரைசதம் அடித்து அசத்தினார். இவர் 81 ரன்களில் அவுட் ஆனார்.
இன்னிங்ஸ் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்துள்ளது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக எலிஸ் பெர்ரி 81 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 168 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி ஆட உள்ளது.