என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Regupathy"

    • தமிழ்நாட்டின் நம்பர் 1 துரோகி யார்? எனக் கேட்டால் அரசியல் தெரியாத ஆறாம் வகுப்பு மாணவன் கூட எடப்பாடி பழனிசாமியை கை காட்டுவான்.
    • திரையில் துரோகத்திற்குக் கட்டப்பா என்றால், தரையில் பழனிசாமிதானே!

    தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    யார் அந்தத் தியாகி? என்ற அதிமுகவின் முனை மழுங்கிய கேள்விக்கு "நொந்து போய் நூடுல்ஸ் ஆன அதிமுக தொண்டர்கள்தான் அந்த தியாகிகள்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதிலில், நொந்து போன எதிர்க்கட்சித் தலைவர் வீராவேசமாகக் கருத்து சொல்லியிருக்கிறார்.

    தியாகியை விடுங்கள். துரோகியைத் தெரியுமா? தமிழ்நாட்டின் நம்பர் 1 துரோகி யார்? எனக் கேட்டால் அரசியல் தெரியாத ஆறாம் வகுப்பு மாணவன் கூட எடப்பாடி பழனிசாமியை கை காட்டுவான். அரசியல் அறத்தை அடகு வைத்து விட்டு, துரோகங்களை மட்டுமே செய்து முன்னேறியவர் பழனிசாமி.

    ஜெயலலிதா அருகில் கூனி குறுகி நிற்பார்; ஜெயலலிதாவின் கார் டயரை தொட்டு வணங்குவார்; ஆனால், ஜெயலலிதாவின் கொள்கைக்கு எதிராக பாஜக-வின் பாதம்தாங்கியாக மாறி ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்தவர் பழனிசாமி.

    தவழ்ந்து, ஊர்ந்து சென்று நாடகமாடி ஆட்சியைப் பிடித்த பிறகு, சசிகலாவுக்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி. திரையில் துரோகத்திற்குக் கட்டப்பா என்றால், தரையில் பழனிசாமிதானே!

    சுயநலத்துக்காக எடப்பாடி பழனிச்சாமி எந்த எல்லைக்கும் செல்வார்? எந்தத் துரோகத்தையும் செய்வார் என்பதற்கு நடமாடும் சாட்சிகள் ஓ.பன்னீர்செல்வமும் தினகரனும். உண்மையில் எடப்பாடி பழனிச்சாமியின் சுயரூபம் தெரியாமல் அவரை நம்பி மோசம் போன இவர்கள்தான் அந்தத் தியாகிகள்!

    கடந்த 2 ஆண்டுகளாக பாஜகவுடன் கூட்டணி கிடையாது'' என்று சத்தியம் செய்து வந்த பழனிசாமி, இன்று டெல்லி மேலிடத்தின் மிரட்டலுக்குப் பயந்து, சிறைக்கு அஞ்சி தாங்கள் அடித்த கொள்ளை பணத்தைப் பாதுகாக்க மீண்டும் பாஜக கூட்டணிக்குத் தயாராகி விட்டார்.

    அவரும் அவருடைய அடிவருடிகளும் பாஜகவின் பிரமுகர்களை முறை போட்டுப் போய் பார்த்துவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமியின் வார்த்தையை நம்பி ஏமாற்றம் அடைந்த அதிமுகவின் ஒவ்வொரு தொண்டனுமே தியாகிகள்தான்! அவர்களுக்கும் எடப்பாடி துரோகிதான்!

    பாஜகவுடன் இதுகாலம் வரையில் இருந்த கள்ளக்கூட்டணி, கரம் பிடிக்கும் கூட்டணியாக மாறப் போவதால், ரத்தத்தின் ரத்தங்களும் மக்களும் நாக்கை பிடுங்கும் வகையில் கேள்வி கேட்பார்கள். அதை மடைமாற்ற திமுக அரசு மீது வதந்திகளை பழனிசாமி பரப்பி வருகிறார்; பாஜகவின் தயவில் அரசியல் வண்டியை ஓட்ட நினைக்கிறார் பழனிசாமி. தனக்கு முதுகெலும்பு இருப்பதே, பாஜகவிற்கு வளைந்து கொடுத்து அடிமை சேவகம் செய்வதற்குத்தான் என ஒன்றிய அரசின் காலடியில் வீழ்ந்து கிடக்கும் பாஜகவின் பண்ணையடிமைதான் பழனிசாமி.

    தனது டெல்லி எஜமானர்களின் ஏவல் படையான அமலாக்கத்துறை தமிழ்நாடு டாஸ்மாக் அலுவலகத்தில் நடத்திய ஒரு முகாந்திரமற்ற சோதனையை வைத்துக் கொண்டு, அபத்தமான கேள்வியோடு தனது கோமாளித்தனத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி. யார் அந்த சார்? என்ற புரளி நாடகம் அம்பலப்பட்ட பிறகு வேறு ஏதேனும் கிடைக்காதா என்று திணறிக் கொண்டிருக்கிறார்.

    கள்ளக் கூட்டணியை உறுதி செய்ய டெல்லியில் அமித்ஷாவை பதுங்கிப் பதுங்கி, கார்கள் மாறி மாறி சென்று சந்தித்த கோழை பழனிசாமி, தமிழ்நாட்டு முதலமைச்சரைப் பற்றிப் பேசத் திராணியிருக்கிறதா? தன் மீதான ஊழல் குற்றச்சாட்டிற்கு சிபிஐ விசாரணை வேண்டாம் என நீதிமன்றத்திற்கு ஓடிப் போய் தடையாணை வாங்கிய பயந்தாங்கொள்ளி பழனிசாமி பேசுவது அத்தனையும் கேலிக்கூத்துகள்தான்.

    தமிழ்நாட்டுக்கு நிதி தராமல் துரோகம், இந்தியைத் திணித்து துரோகம், தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்து துரோகம் என பாஜக வரிசையாக துரோகங்களைச் செய்து சதித்திட்டம் தீட்டி வருகிறது. கொஞ்சம் கூட வெட்கமின்றி, தமிழ்நாட்டு மக்களைப் பற்றி துளியும் யோசிக்காமல் கூட்டணிக்கு அச்சாரம் போட்டுக் கொண்டிருக்கும் எடப்பாடி தமிழ்நாட்டுக்கே துரோகி!

    இன்றைக்குத் தமிழ்நாடு மட்டுமல்ல ஒட்டுமொத்தத் தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாத்து, நாட்டின் கூட்டாட்சி கோட்பாட்டை உயர்த்திப்பிடித்து வரும் தமிழ்நாடு முதலமைச்சரை இன்று உலக அளவில் ஊடகங்கள் பாராட்டி வருகின்றன. அதைப் பொறுக்க முடியாமல், தனது பதவி நலனுக்காக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் 'பாஜகவின் அடிமையாக வாழ்வதையே அரசியல்' என வாழும் பாதந்தாங்கி பழனிசாமி டெல்லி எஜமானர்களின் ஆணையின்படி இந்த நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த நாடகமும் மக்களிடம் அம்பலப்பட்டு பழனிசாமி அவமானப்படுவது உறுதி.

    இவ்வாறு ரகுபதி தெரிவித்துள்ளார்.

    • தேர்தலை பார்த்து பயப்படும் கட்சியும் திமுக இல்லை.
    • கச்சத்தீவு விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெற்றது போன்று எதுவும் தெரியவில்லை.

    தமிழக சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவு மீட்பு தொடர்பாக அரசினர் தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்தலை கருத்தில் கொண்டு கச்சத்தீவு மீட்பு தீர்மானத்தை திமுக அரசு கொண்டு வந்துள்ளதாக தெரிவித்திருந்தார். இதற்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார்.

    இ.பி.எஸ்.க்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் ரகுபதி கூறியதாவது:-

    * தேர்தலுக்காக தீர்மானம் கொண்டு வரும் கட்சி திமுக இல்லை.

    * தேர்தலை பார்த்து பயப்படும் கட்சியும் திமுக இல்லை.

    * கச்சத்தீவு விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெற்றது போன்று எதுவும் தெரியவில்லை.

    * இந்தியா- இலங்கை பிரிக்கப்பட்டபோது கச்சத்தீவு இலங்கைக்கு பிரிக்கப்பட்டது.

    * எங்களை சொல்லும் அதிமுக, அவர்கள் மத்தியில் கூட்டணியில் இருந்தபோது கச்சத்தீவை மீட்டு இருக்கலாம்.

    * கச்சத்தீவு குறித்து திமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

    இவ்வாறு ரகுபதி தெரிவித்தார்.

    • சிறையில் கைதிகளுக்கு புதிய உணவு முறை, உணவின் அளவை மாற்றி அமைக்கும் திட்ட தொடக்க விழா நடைபெற்றது.
    • அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு கைதிகளுக்கு சிறப்பு உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் சிறைத் துறையின் மானிய கோரிக்கையின்போது சட்டம் நீதிமன்றங்கள் மற்றும் சிறை துறைகள் துறை அமைச்சர் ரகுபதி புதிய அறிவிப்பு வெளியிட்டார்.

    அதன்படி கைதிகளின் நலனுக்காக நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில் கைதிகளின் உணவு முறை மற்றும் உணவின் அளவை ஆண்டுக்கு ரூ.26 கோடி செலவில் மாற்றி அமைக்கப்படும் என அறிவித்தார்.

    இந்த அறிவிப்பை தொடர்ந்தும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டும் சென்னை புழல் சிறையில் கைதிகளுக்கு புதிய உணவு முறை மற்றும் உணவின் அளவை மாற்றி அமைக்கும் திட்ட தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

    விழாவில் அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு கைதிகளுக்கு சிறப்பு உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் சிறைத்துறை இயக்குனர் அமரேஷ் பூஜாரி, டி.ஐ.ஜி.க்கள் கனகராஜ், முருகேசன், சூப்பிரண்டுகள் கிருஷ்ணராஜ், நிகிலா நாகேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • முதல்வர் மருந்தகம் மாநிலம் முழுவதும் 1,000 திறக்கப்பட உள்ளது.
    • விக்கிரவாண்டி தேர்தலை பார்த்து பயந்தவர்கள் அதிமுகவினர்.

    நாகப்பட்டினம்:

    தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நாகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னையில் நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக அரசு, ஸ்டிக்கர் ஒட்டி திட்டங்களை அறிமுகப்படுத்துகிறார்கள் என்று விமர்சித்துள்ளார். 'ஸ்டிக்கர் பாய்ஸ்' என்று பெயர் பெற்றவர்கள் அதிமுகவினர்.

    அம்மா மருந்தகத்தை முதல்வர் மருந்தகம் என்ற பெயர் மாற்றி விட்டதாகவும் கூறியுள்ளார். அம்மா மருந்தகம் வேறு, முதல்வர் மருந்தகம் வேறு. அம்மா மருந்தகம் கூட்டுறவு துறையோடு இயங்கியது. மாநிலம் முழுவதும் அம்மா மருந்தகம் 380 தான் இருந்தது.

    ஆனால் முதல்வர் மருந்தகம் மாநிலம் முழுவதும் 1,000 திறக்கப்பட உள்ளது. முதல்வர் மருந்தகம் மூலம் அனைத்து வகையான மருந்துகளும் கிடைப்பதுடன், வேலையில்லா திண்டாட்டமும் குறையும்.

    மேலும் அம்மா சிமெண்டு் திட்டத்தை வலிமை சிமெண்டு திட்டமாக மாற்றி விட்டதாகவும் விமர்சித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்திலேயே அம்மா சிமெண்ட் திட்டம் கைவிடப்பட்டது. ஏழை மக்களுக்கு பயன்பெறும் வகையில் வலிமை சிமெண்டு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் சில தொகுதிகளில் அதிமுக 3, 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. அதிமுகவில் உள்ளவர்கள் கட்சியில் இருந்து வெளியேறுவதை தவிர்க்கவே ஜெயக்குமார் இதுமாதிரி பேசி வருகிறார்.

    விக்கிரவாண்டி தேர்தலை பார்த்து பயந்தவர்கள் அதிமுகவினர். திமுக எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது. கவர்னரை தன் பக்கம் வைத்துக்கொள்ள தேநீர் விருந்தில் கலந்து கொண்டதாக குற்றம் சாட்டுகின்றனர்.

    திமுகவினருக்கு ஒருபோதும் பாஜகவின் துணை தேவையில்லை. அதிமுகவுக்கு வேண்டுமானால் பாஜக எஜமானர்களாக இருக்கலாம். இந்தியாவிலேயே பாஜகவை எதிர்ப்பதில் முன்னோடியாக இருந்தவர் தமிழ்நாடு முதலமைச்சர் மட்டும்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர யாரும் தயாராக இல்லை.
    • திருமாவளவனை பொறுத்தவரை திமுக கூட்டணியில் உறுதியோடு இருக்கிறார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் இந்து அறநிலை துறை சார்பாக 3 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கை. எடப்பாடி பழனிசாமி பகல் கனவு காண ஆரம்பித்துவிட்டார். வேறு வேலையில்லாததால். தி.மு.க. கூட்டணியை அவர் உடைக்கவும் முடியாது, கொளுத்தவும் முடியாது, பிரிக்கவும் முடியாது, நசுக்கவும் முடியாது.

    இது அனைத்தும் அவர் சார்ந்திருக்கக்கூடிய கட்சிக்கு வேண்டுமென்றால் ஏற்படுமே தவிர, தி.மு.க.வுக்கும் தி.மு.க. கூட்டணிக்கும் எந்த ஒரு சிறு பாதிப்பும் ஏற்படாது. தமிழ்த்தாய் வாழ்த்து இருக்காது என்பது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் கருத்தாக இருக்கலாம்.

    தமிழ் தாய் வாழ்த்து என்பது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அத்தனை மக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அனைவராலும் பாடப்பட்டு வருகிறது. சீமான் அதில் புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளார். தமிழ்நாடு, திராவிடம் இதை இரண்டையும் தமிழ் மண்ணில் இருந்து பிரிக்க முடியாத சொற்கள்.

    தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் திராவிடம் என்ற பெயரோடு தான் இருக்கிறது. இங்கு உள்ள கட்சிகள் திராவிடம் சார்ந்த கட்சிகள் தானே தவிர திராவிடம் சாராத கட்சிகள் இல்லை. யாரும் கட்சி ஆரம்பித்தால் கூட திராவிடம் சார்ந்து தான் கட்சியை ஆரம்பிக்கின்றனர். திராவிடம் என்பது தமிழ் மண்ணிலே ஊறிப்போன ஒன்று. அதை திராவிட கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் முன்னெடுத்துச் செல்லும்.

    ஒரு இயக்கத்தை நாங்கள் அழிக்க வேண்டிய அவசியம் கிடையாது. அந்த இயக்கத்தின் தலைமை பலவீனமாக இருந்துவிட்டால் அந்த இயக்கம் தானாகவே அழிந்து விடும். இன்று எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை பலவீனமாக உள்ளது. அதனுடைய எடுத்துக்காட்டு தான் இந்த குழப்பம்.

    அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர யாரும் தயாராக இல்லை. நம்பிக்கைக்குரிய இணையாக அ.தி.மு.க.வை ஏற்றுக்கொள்ள எந்த கட்சியும் தயாராக இல்லை. அவரும் என்னென்னமோ எண்ணி வலைவீசி பார்க்கிறார். யாரும் அவர் பக்கம் செல்வதற்கு தயாராக இல்லை. அவரை திரும்பி கூட பார்க்கவில்லை. அதுதான் உண்மை.

    சீமான் கற்பனையில் எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டு போகலாம். ஏதாவது குட்டி கலாட்டா செய்ய வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம். திருமாவளவனை பொறுத்தவரை திமுக கூட்டணியில் உறுதியோடு இருக்கிறார். தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மீண்டும் அரசு அமைவதில் அவர் உறுதியோடு இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது வடக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன், முத்துராஜா எம்.எல்.ஏ., அறங்காவலர் குழு தலைவர் தவ. பாஞ்சாலன், மாமன்ற உறுப்பினர் கனக அம்மன் பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

    • எடப்பாடி பழனிசாமியின் சமீபத்திய பொய்களை ஆதாரத்துடன் திமுக அரசு தவிபொடியாக்கியது.
    • எடப்பாடி பழனிசாமி கொந்தளித்த குற்றச்சாட்டு அனைத்தும் புஸ்வானமாகி விட்டது என்று கூறியுள்ளார்.

    சென்னை:

    எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, அரைத்த பொய்களையே தொடர்ந்து அரைப்பதாகவும், பொய்களை எத்தனை முறை கூறினாலும் எடுபடாது எனவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது.

    "அறிக்கைகளிலும் எக்ஸ் தளத்திலும் பேட்டிகளிலும் சட்டமன்றத்திலும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கொந்தளித்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் புஸ்வானமான நிலையில், இப்போது யூடியூப்பிலும் வந்து அதே புலம்பலை, அதே பொய்களைக் கடைப்பரப்ப ஆரம்பித்துவிட்டார்.

    ஃபெஞ்சல் புயல், சாத்தனூர் அணைத் திறப்பு, பாலம் உடைப்பு, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சிபிஐ விசாரணை உத்தரவு என அவருடைய சமீபத்திய பொய்களை எல்லாம் உடனுக்குடன் ஆதாரத்துடன் திமுக அரசு தவிடுபொடியாக்கியும்கூட, கொஞ்சமும் கூச்சப்படாமல் அதே பொய்களை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார்."

    வயிற்றெரிச்சலில் கூறிய பொய்களையே திரும்பத் திரும்ப எத்தனை முறை கூறினாலும் எடுபடாது. ஆயிரம் பொய்களைக் கூறினாலும் திராவிட மாடல் நல்லாட்சி மீது சிறு கீறல் கூட விழவைக்க முடியாது."

    இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    ×