என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "reserve bank"

    • கோடக் மஹிந்திரா வங்கி ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை
    • ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, கோடக் மஹிந்திரா வங்கியின் வளர்ச்சியை பாதிக்கும் என சொல்லப்படுகிறது

    கோடக் மஹிந்திரா வங்கி ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கவும், புதிய கிரெடிட் கார்டுகளை வழங்கவும் ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

    2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட திருத்த நடவடிக்கை விதிமுறைகளை தனது ஐடி கட்டமைப்பில் கடைபிடிக்க கோடக் மஹிந்திரா வங்கி தவறியுள்ளது.

    ஆகவே தகவல் பாதுகாப்பு குற்றச்சாட்டு அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

    ரிசர்வ் வங்கியின் இந்த தடையால் தற்போது இவ்வங்கி வாடிக்கையாளர்கள், வாடிக்கையாளர்களின் பணம், வாடிக்கையாளர்களின் சேவை ஆகியவற்றில் எவ்விதமான பாதிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஆனாலும், ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, கோடக் மஹிந்திரா வங்கியின் வளர்ச்சியை பாதிக்கும் என சொல்லப்படுகிறது. காரணம் இவ்வங்கி தனது பெரும்பாலான புதிய வாடிக்கையாளர்களை ஆன்லைன் வாயிலாகவும், மொபைல் சேவை வாயிலாக தான் பெறுகிறது.

    • கோடக் மஹிந்திரா வங்கி ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை
    • ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, கோடக் மஹிந்திரா வங்கியின் வளர்ச்சியை பாதிக்கும் என சொல்லப்படுகிறது

    கோடக் மஹிந்திரா வங்கி ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கவும், புதிய கிரெடிட் கார்டுகளை வழங்கவும் ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

    2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட திருத்த நடவடிக்கை விதிமுறைகளை தனது ஐடி கட்டமைப்பில் கடைபிடிக்க கோடக் மஹிந்திரா வங்கி தவறியுள்ளது.

    ஆகவே தகவல் பாதுகாப்பு குற்றச்சாட்டு அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

    ரிசர்வ் வங்கியின் இந்த தடையால் தற்போது இவ்வங்கி வாடிக்கையாளர்கள், வாடிக்கையாளர்களின் பணம், வாடிக்கையாளர்களின் சேவை ஆகியவற்றில் எவ்விதமான பாதிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஆனாலும், ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, கோடக் மஹிந்திரா வங்கியின் வளர்ச்சியை பாதிக்கும் என சொல்லப்படுகிறது. காரணம் இவ்வங்கி தனது பெரும்பாலான புதிய வாடிக்கையாளர்களை ஆன்லைன் வாயிலாகவும், மொபைல் சேவை வாயிலாக தான் பெறுகிறது.

    இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் காரணமாக கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் 13% வரை சரிவை கண்டுள்ளது.

    இதன்மூலம், கோடக் மஹிந்திரா வங்கியின் நிறுவனரான உதய் கோடக் தனது சொத்து மதிப்பில் சுமார் 10,831 கோடி ரூபாயை இழந்துள்ளார். நேற்றைய நிலவரப்படி அவரிடம் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருந்தது என ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் தெரிவித்துள்ளது.

    • விதிகளை மீறியதாக ஐசிஐசிஐ (ICICI) வங்கிக்கு ₹1 கோடி அபராதம்.
    • யெஸ் (YES) வங்கிக்கு ₹91 லட்சம் அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி.

    விதிகளை மீறியதாக ஐசிஐசிஐ (ICICI) வங்கிக்கு ₹1 கோடியும், யெஸ் (YES) வங்கிக்கு ₹91 லட்சமும் அபராதம் விதித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.

    ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் செலுத்திய கடன் தொகைகளுக்கான விவரங்களை சரிவர பரமரிக்கவில்லை எனவும் யெஸ் வங்கி தனது வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச வைப்புத் தொகையை பராமரிக்கவில்லை எனவும் கூறி இந்திய ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.

    • யூபிஐ மூலம் வரி செலுத்துவதற்கான வரம்பை 1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தபட்டுள்ளது.
    • இதற்கு முன்பு செக் க்ளியரிங் செய்ய இரண்டு வேலை நாட்கள் வரை ஆகும்.

    புதுடெல்லி:

    இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) ஆறு உறுப்பினர்களைக் கொண்ட நாணயக் கொள்கைக் குழு ஆர்பிஐயின் பணவியல் கொள்கை குறித்து இன்று விவாதத்தித்தது.

    இந்த கூட்டத்திற்கு பிறகு குழுவில் எடுக்கப்பட்ட முடிவை ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார்.

    யூபிஐ மூலம் வரி செலுத்துவதற்கான வரம்பை 1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்படுவதாகவும் இது யூபிஐ மூலம் வரி செலுத்துவதை எளிதாக்கும் என்று சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

    மேலும், வங்கி காசோலைகளை சில மணி நேரங்களிலேயே செக் க்ளியரிங் செய்யும் திட்டம் கொண்டுவரப்படவுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

    தற்போது, செக் ட்ரங்கேஷன் சிஸ்டம் (CTS) மூலம் செக் க்ளியரிங் செய்ய இரண்டு வேலை நாட்கள் வரை ஆகும் நிலையில், இந்த புதிய அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

    • LGBTQ சமூகத்தினர் கூட்டு வங்கிக்கணக்கு [JOINT ACCOUNT] தொடங்க எந்த தடையும் இல்லை என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது
    • இதுதொடர்பாக அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

    இந்தியாவில் LGBTQ சமூகத்தினர் கூட்டு வங்கிக்கணக்கு [JOINT ACCOUNT] தொடங்க எந்த தடையும் இல்லை என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தன்பாலின, இருபாலின மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களை உள்ளடக்கிய LGBTQ சமூகத்தைச் சேர்ந்தவர்கள், நாட்டில் உள்ள வங்கிகளில் கூட்டு வங்கிக் கணக்குகளைத் தொடங்கவோ, ஒருவர் தொடங்கிய வங்கிக் கணக்கில், Nominee-ஆக அச்சமூகத்தைச் சேர்ந்தவரை குறிப்பிடவோ எந்தத் தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தன்பாலின திருமணங்களை அங்கீகரிப்பது தொடர்பாகக் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கில் கூறப்பட்ட கருத்துகளின்படி, LGBTQ சமூகத்தினர் பொது சேவைகளைப் பெறுவதில் பாகுபாடு காட்டப்படாது என்பதை மீண்டும் உறுதிப்படுத்த இந்த அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.  

    • மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி தலைமையகத்துக்கு மிரட்டல் வந்துள்ளது
    • மறு பக்கம் பேசியவர் தன்னை லஷ்கர்-இ-தொய்பாவின் சிஇஓ என்று கூறிக்கொண்டார்.

    மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி தலைமையகத்துக்கு ஒரே மாதத்தில் 2 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

    நேற்று [டிசம்பர் 12] மதியம் ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு ரஷிய மொழியில் எழுதப்பட்ட அந்த வெடிகுண்டு மிரட்டலானது வந்துள்ளது. இதுதொடர்பாக மும்பை போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

     

     

    முன்னதாக நவம்பர் 16 ஆம் தேதி, ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

    மறு பக்கம் பேசியவர் தன்னை லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமை நிர்வாக அதிகாரி [சி இஓ] என்று கூறிக்கொண்டார். மேலும் மிரட்டல் விடுப்பதற்கு முன் தொலைபேசியில் அவர் ஒரு பாடலைப் பாடியதாகக் கூறப்படுகிறது.

     

    2008-ம் ஆண்டு நவமபர் 26 ஆம் தேதி மும்பையில் சத்திரபதி சிவாஜி ரெயில் நிலையம், தாஜ் ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 175 பேர் வரை உயிரிழந்தனர், 300 பேர் படுகாயமடைந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவார அமைப்பு பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது. 

    • அச்சிடப்பட்ட எழுத்துக்களிலிருந்து கையால் எழுதப்பட்ட எழுத்துக்களை வேறுபடுத்த உதவுகின்றன.
    • அவற்றால் எழுதப்பட்டவை திருத்தங்கள் என்று தவறாகக் கருதப்படலாம்

    வங்கியில் காசோலைகளை எழுதுவதற்கு  கருப்பு மையை பயன்படுத்துவதை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கட்டாயப்படுத்தியுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகிறது.

    காசோலை எழுதுவதற்கு குறிப்பிட்ட மை நிறங்கள் தேவை என்று ஆர்பிஐ எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று பிரஸ் இன்பர்மேஷன் பீரோவின் உண்மைச் சரிபார்ப்பு பிரிவு (PIB Fact Check) தெளிவுபடுத்தி உள்ளது.

    பொதுவான வங்கி நடைமுறைகளில், நீலம் அல்லது கருப்பு மை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

    ஏனெனில் இந்த வண்ணங்கள் தெளிவாக தெரியவும், காசோலையில் அச்சிடப்பட்ட எழுத்துக்களிலிருந்து கையால் எழுதப்பட்ட எழுத்துக்களை வேறுபடுத்தவும் உதவுகின்றன.

    நீல நிற மை பெரும்பாலும் விரும்பப்படுகிறது, ஏனெனில் இது மிகவும் தனித்து நிற்கிறது, வங்கிகள் கையால் எழுதப்பட்ட விவரங்களை எளிதாகக் வேறுபடுத்தும். கருப்பு மை அதன் தோற்றம் மற்றும் வாசிக்க எளிமையாக இருப்பதன் காரணமாக பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

     

    ஆனால் சிவப்பு மையை படுத்துவதைத் தவிர்க்கவும். இது பொதுவாக முறையற்றதாக கருதப்படுகிறது. சிவப்பு மையால் எழுதப்பட்டவை திருத்தங்கள் என்று தவறாகக் கருதப்படலாம். இதேபோல், பென்சில் அல்லது அழிக்கக்கூடிய மை தவரிக்கப்டுகிறது.

    ஏனெனில் அது எளிதாக மாற்றப்பட வாய்ப்புள்ளதால் பாதுகாப்பு அபாயங்கள் உள்ளன. பச்சை அல்லது ஊதா போன்ற பிற நிறங்கள் வங்கி ஸ்கேனிங் அமைப்புகளுடன் பொருந்தாமல் இருப்பதால் சிக்கல்களுக்கு வழிவகுக்கும், எனவே அதையும் தவிர்ப்பது நல்லது.

    • அவரது தலைமையில் இன்று பணவியல் கொள்கை குழு (MPC) கூட்டம் நடைபெறுகிறது.
    • கார் கடன், வீட்டு கடன், தனிநபர் கடன் போன்றவற்றின் வட்டி குறைந்து EMI குறையும்.

    வங்கிகளின் குறுகியகால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

    வீடு மற்றும் வாகனக் கடன் வாங்குபவர்களுக்கு மிகப்பெரிய நிவாரணத்தை அளிக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கிட்டத்தட்ட ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு வட்டி விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.

    சக்திகாந்த தாஸுக்குப் பிறகு ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கடந்த டிசம்பரில் பதவியேற்றார். அவரது தலைமையில் இன்று பணவியல் கொள்கை குழு (MPC) கூட்டம் நடைபெறுகிறது.

    இந்நிலையில், ரெப்போ விகிதங்களை 25 அடிப்படைப் புள்ளிகள் (bps) குறைத்து 6.25 சதவீதமாக மாற்றும் முடிவை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

    இதனால் வங்கிக் கடன் வாங்குபவர்களின் வட்டி, EMI குறைய வாய்ப்புள்ளது. கார் கடன், வீட்டு கடன், தனிநபர் கடன் போன்றவற்றின் வட்டி குறைந்து EMI குறையும்.   

    கடைசியாக கடந்த 2020 கோவிட் சமயத்தில் ரெப்போ விகிதத்தில் 40 அடிப்படைப் புள்ளிகளை, ரிசர்வ் வங்கி குறைத்தது. ரிசர்வ் வங்கி, பிற வங்கிகளுக்கு கடன் கொடுக்கும் வட்டி விகிதம் ரெப்போ விகிதம் எனப்படும். 

    இதற்கிடையே இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆர்பிஐ ஆளுநர், அடுத்த நிதியாண்டில் (2025-26) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.7 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் 4.2 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    2025-26-ம் நிதியாண் டில் 4 காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி முறையே 6.7, 7, 6.5, 6.5 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பயிர் வருகையின் பின்னணியில் உணவு பணவீக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் தற்போது பணவீக்கம் குறைந்துள்ளது. இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது. ரிசர்வ் வங்கியின் அந்நியச் செலாவணிக் கொள்கை சீராக உள்ளது.

    டிஜிட்டல் மோசடி அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. சைபர் மோசடிகளைச் சரிபார்க்க வங்கிகளுக்கு பிரத்யேக டொமைன் பெயர் இருக்க வேண்டும். இதன் பதிவு ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என்று கூறினார்.

    • குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்வு.
    • இந்திய பொருளாதாரம் தொடர்ந்து மீட்பு திறன் கொண்டதாக உள்ளது.

    வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.5 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதன் மூலம் ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் 5.4% இருந்து 5.9 % மாக அதிகரித்துள்ளது.

    இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுனர் சக்தி காந்ததாஸ், இந்திய பொருளாதாரம் தொடர்ந்து மீட்பு திறன் கொண்டதாக இருக்கிறது என்றார். உலக அளவிலான அரசியல் சூழல், நிதிச் சந்தையில் உள்ள நிச்சயமற்ற தன்மையால் பணவீக்கம் அதிகரித்துள்ளதாகவும், நாட்டின் பணவீணக்கம் தற்போது 7% ஆக உள்ளது என்றும் அவர் கூறினார்.

    நடப்பாண்டின் இரண்டாம் பாதியில் அது 6% இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். தனியார் நுகர்வு அதிகரித்து வருவதாகவும், கிராமப்புற தேவையும் படிப்படியாக அதிகரித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். முதலீட்டு தேவை அதிகரித்துள்ளதாகவும், விவசாயத் துறையும் மீள்தன்மையுடன் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். ரெப்போ வட்டி விகிதம் உயர்வு காரணமாக வங்கி தனிநபர் கடன், வாகன கடன் உள்ளிட்டவற்றின் வட்டி விகிதம் மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

    • எவ்வகையிலும் அநாகரிகமான குறுஞ்செய்திகளை அனுப்பக்கூடாது.
    • தொலைபேசியில் மிரட்டல்கள் விடுக்கக்கூடாது.

    புதுடெல்லி :

    வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்களிடம் கடனை திரும்ப வசூலிக்க கடுமையான அணுகுமுறைகள் பின்பற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த கொடுமையை தாங்க முடியாமல், கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன. இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இருப்பினும், அவை முறையாக பின்பற்றப்படாததால், நேற்று கூடுதலாக உத்தரவுகளை பிறப்பித்தது.

    அதில் ரிசர்வ் வங்கி கூறியிருப்பதாவது:-

    கடன் தவணையை வசூலிப்பதில் கடன் வசூல் முகவர்கள் ஏற்கனவே நாங்கள் பிறப்பித்த விதிமுறைகளை மீறி வருவதாக எங்களுக்கு தெரிய வந்துள்ளது. வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் ஆகியவை தங்களது கடன் வசூல் முகவர்கள், கடன் பெற்றவர்களை எந்த வகையிலும் வாய்மொழியாகவோ, உடல்ரீதியாகவோ துன்புறுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    எவ்வகையிலும் அநாகரிகமான குறுஞ்செய்திகளை அனுப்பக்கூடாது. தொலைபேசியில் மிரட்டல்கள் விடுக்கக்கூடாது. கடன் தவணையை செலுத்துமாறு, இரவு 7 மணிக்கு பிறகும், காலை 8 மணிக்கு முன்பும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளக்கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த புதிய உத்தரவுகள், அனைத்து வணிக வங்கிகள், கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள், சொத்து மறுசீரமைப்பு நிறுவனங்கள், அகில இந்திய நிதி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு பொருந்தும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

    • தங்கத்தின் கையிருப்பும் 7 கோடி டாலா் குறைந்து 4,084 கோடி டாலராக உள்ளது.
    • அந்நியச் செலாவணி சொத்து மதிப்பில் (எஃப்சிஏ) ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சியே அந்நிய செலாவணி கையிருப்பு கணிசமாக சரிவடைந்ததற்கு முக்கிய காரணம்.

    புது டெல்லி:

    இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த வாரத்தில் ரூ.46.28 லட்சம் கோடியாக (60,106 கோடி டாலா்) சரிவடைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

    கடந்த ஜூன் 3-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 60,106 கோடி டாலராக குறைந்துள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் இந்த கையிருப்பு 60,136 கோடி டாலராக இருந்த நிலையில், 30 கோடி டாலா் குறைந்துள்ளது. மேலும், கடந்த மே மாதம் 20-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் அந்நிய செலாவணி கையிருப்பு 59,751 கோடி டாலராக காணப்பட்டது.

    அந்நியச் செலாவணி சொத்து மதிப்பில் (எஃப்சிஏ) ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சியே அந்நிய செலாவணி கையிருப்பு கணிசமாக சரிவடைந்ததற்கு முக்கிய காரணம். ஏனெனில், ஒட்டுமொத்த கையிருப்பில் இதன் பங்களிப்பே அதிகமாக உள்ளது.

    மேலும், தங்கத்தின் கையிருப்பும் 7 கோடி டாலா் குறைந்து 4,084 கோடி டாலராக உள்ளது.

    இவ்வாறு ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள வாராந்திர புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • யுபிஐ பேமன்ட்களில் இனிமேல் கிரெடிட் கார்டுகளையும் இணைக்கும் வசதி கொண்டுவரப்பட உள்ளது.
    • முதலில் ரூபே கிரெடிட் கார்டுகளுக்கு மட்டும் யுபிஐயில் இணைக்கும் வசதி வழங்கப்படுமாம்.

    யுபிஐ பேமன்ட்களின் செயல்பாடுகளில் முக்கிய முன்னேற்றமாக, கிரெடிட் கார்டுகளையும் யுபிஐ செயலிகளில் இணைக்கும் வசதி விரைவில் நடைமுறைக்கு வர உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது முன்னதாக யுபிஐ பேமன்ட்களில் டெபிட்கார்டுகளை மட்டும் இணைக்கும் வசதி இருந்தது. இனிமேல் கிரெடிட் கார்டுகளையும் இணைக்கும் வசதி கொண்டுவரப்பட உள்ளது.

    முதலில் ரூபே கிரெடிட் கார்டுகளுக்கு மட்டும் யுபிஐயில் இணைக்கும் வசதி வழங்கப்படும் எனவும் அதன்பின் மாஸ்டர் கார்டு, விசா போன்ற கிரெடிட் கார்டுகளுக்கு அந்த வசதி நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுவரை பயனர்கள் டெபிட் கார்டுகளை மட்டும்தான் இணைத்திருக்க முடியுமாம்.


    ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அது முடிந்த பின் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திதாஸ் தாஸ் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பயனர்களின் சேமிப்பு கணக்குகளுக்கு வழங்கப்படும் டெபிட் கார்டுகள் அல்லது நடப்பு கணக்குகளை யுபிஐ பேமன்டில் இணைத்துக்கொள்ளும் வசதி தற்போது இருந்து வருகிறது.

    இனிமேல் கிரெடிட் கார்டுகளையும் பயனர்கள் யுபிஐ செயலியில் இணைத்துக் கொள்ளும் வசதி கொண்டு வரப்பட உள்ளது. முதலில் ரூபே கிரெடிட் கார்டுகளுக்கும் பின்னர் படிப்படியாக மாஸ்டர் கார்டு, விசா போன்ற மற்ற கிரெடிட் கார்டுகளுக்கும் அந்த வசதி நீட்டிக்கப்படும்" என அவர் தெரிவித்தார்.

    ×