என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "respiratory disease"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொது சுகாதார நெருக்கடிகள் பற்றி பொய் சொல்வதில் சீன அரசு நீண்ட வரலாற்றை கொண்டுள்ளது.
    • உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை எடுக்கும் வரை நாம் காத்திருக்கக் கூடாது.

    சீனாவில் நிமோனியா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குழந்தைகளுக்கு சுவாச நோய்கள் அதிகரித்து வருதால், பெய்ஜிங் உள்ளிட்ட நகரங்களில் நோயாளிகளின் கூட்டம் அலை மோதுகிறது.

    நிமோனியா தொற்று அதிகரித்து வருவதால் பல மாகாணங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் அமெரிக்கா-சீனா இடையேயான பயணங்களுக்கு தடை விதிக்குமாறு அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக மார்கோ ரூபியோ தலைமையிலான குடியரசு கட்சியின் எம்.பி.க்கள் அமெரிக்க அதிபர் ஜோபைனுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் சீனாவில் இதுவரை அறியப்படாத சுவாச நோய் பரவி வருவதால் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான பயணத்தை உடனடியாக கட்டுப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். பொது சுகாதார நெருக்கடிகள் பற்றி பொய் சொல்வதில் சீன அரசு நீண்ட வரலாற்றை கொண்டுள்ளது.

    கொரோனா தொற்றின்போது உண்மையை சீனா மறைத்தது. உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை எடுக்கும் வரை நாம் காத்திருக்கக் கூடாது. அமெரிக்கர்களின் ஆரோக்கியத்தையும் நமது பொருளாதாரத்தையும், பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

    இவ்வாறு கூறியுள்ளனர்.

    • கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரத்தை முழுமையாகக் கவனிக்க வேண்டும்.
    • நெரிசலான பகுதிக்கு செல்லும் போதெல்லாம் முககவசம் அணியுங்கள்.

    HMPV நேரடியாக கர்ப்பத்திற்குத் தீங்கு விளைவிக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாலும், HMPV நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் மிகவும் கடுமையான சுவாச சிக்கல்களை அனுபவிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இது தாயின் ஆரோக்கியம் மற்றும் கருவின் வளர்ச்சி இரண்டையும் பாதிக்கலாம். எனவே, கர்ப்பிணிப் பெண்கள் வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    இந்த நோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இருப்பினும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் HMPV நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று நிபுணர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.


    இதுதவிர, பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் அல்லது சில தீவிர நோய்களால் பாதிக்கப்படக்கூடியவர்களும் உள்ளனர். கர்ப்பிணிப் பெண்களுக்கும் இந்த அச்சம் ஏற்படலாம்.

    HMPV வயிற்றில் உள்ள குழந்தையை எவ்வாறு பாதிக்கும்?

    கர்ப்பிணிப் பெண்களுக்கு எப்போதுமே சுவாசப் பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் அதிகம். உண்மையில், கர்ப்ப காலத்தில் பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது.

    எனவே அவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இது மட்டுமின்றி, கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணுக்கு HMPV இருந்தால், அது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

    கர்ப்ப காலத்தில் HMPV இருப்பது கர்ப்பகால வயதிற்கு சிறிய குழந்தை பிறக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது. இதுவரை போதிய ஆதாரங்கள் இல்லாததால், பெண்கள் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.


    HMPV கர்ப்பத்தை எவ்வாறு பாதிக்கிறது?

    HMPV காரணமாக, கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணுக்கு சுவாச பிரச்சனைகள் இருக்கும். இந்த வகையான பிரச்சனை தாய் மற்றும் குழந்தை இருவரின் ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல.

    கர்ப்ப காலத்தில் தாய்க்கு HMPV இருந்தால், தாய்க்கு சுவாசிப்பதில் சிரமம் இருக்கும். குழந்தைக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்கவில்லை. இதன் காரணமாக அவர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படலாம்.

    HMPV காரணமாக, பிறக்கும் போது குழந்தையின் எடை குறைவாக இருக்கலாம் அல்லது அவரது உயரம் சாதாரண மற்றும் ஆரோக்கியமான குழந்தைகளை விட சிறியதாக இருக்கலாம்.


    கர்ப்ப காலத்தில் HMPVக்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது நிமோனியா போன்ற தீவிர நோயாக மாறும்.

    இதன் காரணமாக குறைப்பிரசவம், குழந்தையின் எடைக் குறைவான பிறப்பு மற்றும் குழந்தைக்கும் தொற்று ஏற்படும் அபாயம் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படலாம்.


    * HMPV ஐத் தவிர்க்க, கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரத்தை முழுமையாகக் கவனிக்க வேண்டும். எதையும் தொட்டவுடன் உங்கள் முகம் மற்றும் கண்களைத் தொடாதீர்கள்.

    * HMPV தடுக்க, ஆல்கஹால் அல்லாத சானிடைசர் மூலம் கைகளைச் சுத்தப்படுத்தவும்.

    * HMPV -ன் அறிகுறிகள் தோன்றினால், வீட்டை விட்டு வெளியே செல்வதைத் தவிர்க்கவும்.

    * நீங்கள் நெரிசலான பகுதிக்கு செல்லும் போதெல்லாம், எப்போதும் முககவசம் அணியுங்கள்.

    * கர்ப்பிணிப் பெண்கள் உடனடியாக ஒரு மருத்துவரை அணுகி, தங்களைத் தாங்களே பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

    • கை, கால்கள் மரத்துப் போதல், நீடித்த வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை அறிகுறிகளாகும்
    • மும்பையில் GBS நோயால் 53 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

    மகாராஷ்டிரா மாநிலம் புனே, மும்பை சுற்றுவட்டார பகுதிகளில் குய்லின்-பாரே சிண்ட்ரோம்(GBS) என்ற நரம்பியல் கோளாறு கடந்த மாதம் முதல் பரவி வருகிறது. இந்த நோய் மனிதர்களின் மூளை மற்றும் முதுகெலும்புக்கு வெளியே உள்ள நரம்புகளைத் தாக்கும்.

    கை, கால்கள் மரத்துப் போதல், நீடித்த வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை அறிகுறிகளாகும். இந்த நோய் பாதிப்பு பாக்டீரியா, வைரஸ் தாக்கத்தால் ஏற்படுகிறது. அறிகுறிகள் தெரிந்தவுடன் நரம்பியல் டாக்டரை அணுக அறிவுறுத்தப்பட்டது.

    இந்நிலையில் நோய் பாதிப்பு 205 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் தற்போது மேலும் இரண்டு பேருக்கு GBS நோய் கண்டறியப்ப்டுள்ளது என்றும் சந்தேகிக்கப்படும் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட GBS பாதிப்புகளின் எண்ணிக்கை 205 ஐ எட்டியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும், மாநிலத்தில் GBS நோய் காரணமாக இதுவரை 8 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. சமீபத்தில் மும்பையில் GBS நோயால் 53 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். GBS காரணமாக மும்பையில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு இதுவாகும். எனவே மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது.

    ×