என் மலர்
நீங்கள் தேடியது "ricky ponting"
- தென் ஆப்பிரிக்க அணி ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள்.
- நான் விளையாடும் ஒவ்வொரு பெரிய ஆட்டத்திலும் குறிப்பாக ஆஸ்திரேலியாவின் கேப்டனாக இருந்தபோது வீரர்களிடம் அந்த தருணத்தை அனுபவிக்க சொல்வேன்.
20 ஓவர் உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கணித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இறுதிப்போட்டி நடைபெறும் மெல்போர்னுக்கு யார் செல்வார்கள் என்று யாருக்கு தெரியும்? ஆனால் ஆஸ்திரேலியா தனது பிரிவில் இருந்து அரை இறுதிக்கு செல்லும். தென் ஆப்பிரிக்க அணி ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் என்று நம்புகிறேன்.
நான் விளையாடும் ஒவ்வொரு பெரிய ஆட்டத்திலும் குறிப்பாக ஆஸ்திரேலியாவின் கேப்டனாக இருந்தபோது வீரர்களிடம் அந்த தருணத்தை அனுபவிக்க சொல்வேன். இது ஒரு பெரிய விளையாட்டு என்பதை உணர்ந்து உங்களுக்கும், மற்றவர்களுக்கும் எவ்வளவு அதிகமான திறமையை வெளிப்படுத்த முடியுமோ அவ்வளவு வெளிப்படுத்தினால் சிறப்பாக விளையாடுவீர்கள் என்றார்.
- ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் வர்ணனை செய்தார்.
- ரிக்கி பாண்டிங் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெர்த்:
ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் வர்ணனையாளராக முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், வர்ணனையின்போது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். டாக்டர்கள் அவரது உடல்நிலையைக் கண்காணித்து வருகின்றனர்.
- இந்தியாவில் இருந்த அரசியலை கையாண்ட விதத்தில் ரிக்கி பாண்டிங்கை விட டோனி முன்னிலை பெறுகிறார்.
- 3 விதமான ஐசிசி உலக கோப்பைகளை வென்ற முதல் கேப்டன் என்ற ரிக்கி பாண்டிங் படைக்காத சாதனையும் டோனி படைத்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஸ்டீவ் வாக் தலைமையில் ஆஸ்திரேலியா 1999 உலகக் கோப்பை வென்று அசத்தியது. அவருக்குப்பின் பொறுப்பேற்ற ரிக்கி பாண்டிங் அவரையும் மிஞ்சும் வகையில் ஆஸ்திரேலியாவை வழி நடத்தி 2007, 2011 ஆகிய அடுத்தடுத்த உலகக் கோப்பைகளை வென்று சரித்திரம் படைத்தார்.
2007-ல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் டி20 உலக கோப்பையில் இளம் வீரர்களை மிகச் சிறப்பாக வழி நடத்தி முக்கிய நேரங்களில் தைரியமான முடிவெடுத்த எம்எஸ் டோனி இந்தியாவுக்கு முதல் டி20 உலக கோப்பையை வென்று கொடுத்தார்.
மேலும் சச்சின் முதல் லக்ஷ்மன் வரை அனைத்து மூத்த வீரர்களையும் அற்புதமாக வழி நடத்திய அவர் 2010-ல் வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவை உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் கிரிக்கெட் அணியாக தரம் உயர்த்தி 2011இல் சௌரவ் கங்குலி உருவாக்கிய வீரர்களை வைத்து 28 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்று இந்திய ரசிகர்களின் மற்றுமொரு தாகத்தை தணித்தார்.
அதை விட 2013-ல் தாம் உருவாக்கிய விராட் கோலி, ரோஹித் சர்மா, ரெய்னா உள்ளிட்ட இளம் வீரர்களை வைத்து சாம்பியன்ஸ் டிராபியை வென்ற அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 3 விதமான ஐசிசி உலக கோப்பைகளை வென்ற முதல் கேப்டன் என்ற ரிக்கி பாண்டிங் படைக்காத சாதனையும் அவர் படைத்தார்.
இந்நிலையில் களத்திற்கு வெளியே வாரியத்திலும் அணி நிர்வாகத்திலும் நடந்த அரசியல்களை ரிக்கி பாண்டிங்கை விட டோனி மிகச் சிறந்ததாக கையாண்டார் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக் பாராட்டியுள்ளார்.
இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.
ரிக்கி பாண்டிங்கிடம் அற்புதமான அணி இருந்தது. டோனியும் சிறந்த அணியை பெற்றிருந்தார். என்னைப் பொறுத்த வரை இருவரும் சிறப்பாக செயல்பட்டு நல்ல கேப்டன்ஷிப் சாதனைகளை படைத்துள்ளார்கள். அவர்களை நாம் பிரிக்க முடியாது. இருப்பினும் ரிக்கி பாண்டிங்கை விட இந்திய கிரிக்கெட்டில் எம்எஸ் டோனி நிறைய அரசியல் ரீதியான நிகழ்வுகளை கொண்டிருந்தார். அது தான் ரிக்கி பாண்டிங்கை விட டோனியை முன்னிலைப்படுத்தும் அம்சமாகும். ரிக்கி பாண்டிங்கின் மற்றொரு விஷயம் என்னவென்றால் அவரைச் சுற்றி நிறைய அனுபவமிக்க கிரிக்கெட் வீரர்கள் இருந்தார்கள்.
உண்மையில் அவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையில் எப்படி அசத்த வேண்டும் என்பதை தெரிந்திருந்தார்கள். அதனால் விளையாட்டின் சில அம்சங்களை மட்டுமே பாண்டிங் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது. அவரது தலைமையில் பெரும்பாலான வீரர்கள் அணுகுமுறைகள், ஒழுக்கம், என்ன செய்ய வேண்டும் என்ற அனைத்தையும் தெரிந்து வைத்திருந்தார்கள். ஆனால் டோனி தலைமையில் அப்படி ஒரு அணியில்லை. அது கடினமான ஒன்று. அத்துடன் இந்தியாவில் இருந்த அரசியலை கையாண்ட விதத்தில் அவரை விட டோனி முன்னிலை பெறுகிறார். சாரி ரிக்கி.
இவ்வாறு பிராட் ஹாக் கூறினார்.
- ரிஷப் பண்ட் விளையாடுவதற்கு உடற்தகுதியுடன் இல்லை என்றாலும், அவர் எங்கள் அணிக்கு தேவை.
- மார்ச் மாதத்தின் மத்தியில் டெல்லி கேப்பிடல்ஸ் முகாம் தொடங்கப்படும்.
மும்பை:
கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரிஷப் பண்ட், முதற்கட்ட சிகிச்சைகளை வெற்றிகரமாக முடித்துள்ளார். சமீபத்தில் தான் டேராடூனில் இருந்து மும்பையில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இன்னும் 4 வாரங்களில் மேலும் ஒரு அறுவை சிகிச்சை இருப்பதாக தெரிகிறது. தசை நார் கிழிந்துள்ளதால் ரிஷப் பண்ட் பழைய உடற்தகுதிகளை பெற்று குணமடைந்து வருவதற்கு குறைந்தது ஒரு வருடம் ஆகிவிடலாம் எனக்கூறப்படுகிறது. இதனால் இந்தாண்டு நடக்கவுள்ள ஐபிஎல், டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆசிய கோப்பை, உலகக்கோப்பை போன்ற முக்கிய கிரிக்கெட் தொடர்களில் ரிஷப் பண்ட் இடம்பெற போவதில்லை.
இந்நிலையில் பண்ட் ஐபிஎல் தொடருக்கு வரும்படி டெல்லி கேப்பிடல்ஸ் அணி பயிற்சியாளர் ரிக்கிப் பாண்டிங் அழைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
ரிஷப் பண்ட் விளையாடுவதற்கு உடற்தகுதியுடன் இல்லை என்றாலும், அவர் எங்கள் அணிக்கு தேவை. ஒரு கேப்டனாக அவரின் செயல்பாடுகள், சிரிப்புகள், அணியை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்வது போன்றவை கண்டிப்பாக டெல்லி அணிக்கு தேவை.

எனவே ரிஷப் பண்ட் பயணம் மேற்கொள்ளும் அளவிற்கு தயாராகிவிட்டால் போதும், ஐபிஎல் போட்டிகளின் போது டக் அவுட்டில் எனக்கு அருகில் அமர்ந்திருக்க வேண்டும். மார்ச் மாதத்தின் மத்தியில் டெல்லி கேப்பிடல்ஸ் முகாம் தொடங்கப்படும். அப்போது இருந்து அனைத்து நாட்களிலும் ரிஷப் பண்ட், என்னுடன் பயணம் செய்ய விரும்புகிறேன். அவர் இருந்தாலே போதும்.
இவ்வாறு ரிக்கிப் பாண்டிங் கூறியுள்ளார்.
ரிஷப் பண்ட் விளையாட மாட்டார் என்பதால் டெல்லி அணியின் அடுத்த கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. கேப்டன்சியில் அதிக அனுபவம் கொண்ட வார்னர், ஐபிஎல் தொடரிலும் 2016ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு கோப்பையை வென்றுக்கொடுத்தார். பாண்டிங்கும் வார்னர் மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பதால் அதிக வாய்ப்புள்ளது.
- ஒரு நாள் போட்டியில் 3 ஆண்டுக்கு பிறகு அவர் அடித்த முதல் சதம் இதுவாகும்.
- ரோகித்சர்மா ஒருநாள் போட்டியில் தனது 30-வது சதத்தை பதிவு செய்தார்.
இந்தூர்:
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் நேற்று பகல்-இரவு மோதலாக அரங்கேறியது. 'டாஸ்' ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தார்.
அதன்படி கேப்டன் ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். அபாரமாக ஆடிய ரோகித் சர்மா 83 பந்துகளில் தனது 30-வது சதத்தை பூர்த்தி செய்தார். ஒரு நாள் போட்டியில் 3 ஆண்டுக்கு பிறகு அவர் அடித்த முதல் சதம் இதுவாகும்.
இதனையடுத்து சுப்மன் கில்லும் 72 பந்துகளில் சதத்தை சுவைத்தார். தனது 21-வது ஒரு நாள் போட்டியில் ஆடும் அவருக்கு இது 4-வது சதமாகும். ஒரு நாள் போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சதம் காண்பது இது 10-வது நிகழ்வாகும்.
இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 385 ரன்கள் குவித்தது. நியூசிலாந்துக்கு எதிராக இந்தியாவின் 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
இமாலய இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி 41.2 ஓவர்களில் 295 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷர்துல் தாக்குர் ஆட்டநாயகன் விருதையும், சுப்மன் கில் (3 ஆட்டத்தில் 360 ரன்) தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.
இந்திய அணியின் கேப்டன் ரோகித்சர்மா 101 ரன்கள் எடுத்து தனது 30-வது சதத்தை பதிவு செய்தார். ஒருநாள் போட்டியில் அதிக சதங்கள் எடுத்தவர்களின் பட்டியலில் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் (49 சதம்), விராட் கோலி (46) ஆகியோருக்கு அடுத்துள்ள ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங்குடன் (30 சதம்) 3-வது இடத்தை ரோகித் சர்மா பகிர்ந்துள்ளார்.
இவர்களுக்கு அடுத்த இடத்தில் இலங்கையின் சனத் ஜெயசூர்யா (28 சதம்) இருக்கிறார்.
- உலகில் பல்வேறு வீரர்கள் செய்ய முயற்சித்து வரும் விஷயங்களை சூர்யகுமார் அசால்ட்டாக செய்துவிடுகிறார்.
- 2022-ம் ஆண்டு மட்டும் 31 டி20 போட்டிகளில் விளையாடிய 1,164 ரன்களை விளாசி ஐசிசி-யின் சிறந்த டி20 வீரர் என்ற விருதை பெற்றார்.
மும்பை:
இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக வலம் வருபவர் சூர்யகுமார் யாதவ். இவர் 2022-ம் ஆண்டு மட்டும் 31 டி20 போட்டிகளில் விளையாடிய 1,164 ரன்களை விளாசி ஐசிசி-யின் சிறந்த டி20 வீரர் என்ற விருதை பெற்றார்.
டி20 கிரிக்கெட்டில் கலக்கிய சூர்யகுமார் யாதவ் அடுத்ததாக 50 ஓவர் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்களிலும் தடம் பதித்து வருகிறார். நியூசிலாந்து தொடரில் முழுமையாக வாய்ப்பை பெற்ற சூர்யகுமார் யாதவ், அடுத்த மாதம் வரவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் தேர்வாகியுள்ளார்.
இந்நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவை போல ஒரு வீரரை பார்த்ததே கிடையாது என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கிப் பாண்டிங் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
இது குறித்து ரிக்கி பாண்டிங் கூறியதாவது:-
ஆட்டத்தின் சிந்தனைகள், திறமைகளை வைத்து பார்த்தால் டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவை போல ஒரு வீரரை நான் பார்த்ததே இல்லை. உலகில் பல்வேறு வீரர்கள் செய்ய முயற்சித்து வரும் விஷயங்களை சூர்யகுமார் அசால்ட்டாக செய்துவிட்டு, அடுத்த சவால்களுக்கு சென்றுவிடுகிறார்.
இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சூர்யகுமார் யாதவ் செய்வதை போலவே நிறைய வீரர்கள் செய்ய முயற்சிப்பார்கள் என நான் கேள்விப்பட்டு வருகிறேன். இது கேட்பதற்கே எவ்வளவு நன்றாக உள்ளது. 360 டிகிரியிலும் அடிக்கிறார் என நாம் பேசி வருகிறோம். ஆனால் விக்கெட் கீப்பருக்கு பின்னால் அவர் அடிக்கும் சிக்ஸர்கள், ஃபைன் லெக் திசையில் அடிக்கும் ஷாட்கள் அவரின் பெயரை கூறும் அளவிற்கு உள்ளது.

சூர்யகுமார் 5 - 6 ஆண்டுகளாக ஐபிஎல்-ல் விளையாடி வருகிறார். ஆனால் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு உடலை ஃபிட்டாக வைத்திருக்கிறார். இந்திய அணியில் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், போன்று சூர்யகுமாரும் தரமான ஃபிட்னஸுடன் இருக்கிறார். இப்படியே இருந்தால் நிச்சயம் ஒரு அசைக்க முடியாத வீரராக உருவெடுப்பார் என ரிக்கிப் பாண்டிங் கூறியுள்ளார்.
- தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற போட்டியுடன் அவர் விடை பெற்றிருக்க வேண்டும்.
- பேட்ஸ்மேனாக இருக்கும் நீங்கள் ரன்களை அடிக்கவில்லை என்றால் நீங்களாகவே உங்களது இடத்தை காலி செய்ய வேண்டும்.
சிட்னி:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரன் குவிக்க திணறினார். முதல் டெஸ்டில் 2 இன்னிங்சிலும் சேர்த்து 11 ரன்னே எடுத்தார். 2-வது டெஸ்டில் முதல் இன்னிங் சில் 15 ரன் எடுத்த அவர் காயம் காரணமாக 3-வது டெஸ்டில் விலகினார்.
இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து டேவிட் வார்னர் ஓய்வு பெற வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று நினைத்தால் அவர் தனது 100-வது போட்டியை மெல்போர்னில் விளையாடி இரட்டை சதம் அடித்த பிறகு ஓய்வு பெற்றிருக்க வேண்டும். சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் ஓய்வு பெறும் சிறந்த தருணத்தை அவர் தவற விட்டு விட்டார். அனைத்து வீரர்களும் இதைதான் விரும்புவார்கள். ஆனால் இந்த வாய்ப்பு வார்னருக்கு வராமல் கூட போகலாம். ஏனென்றால் அதற்கு இன்னும் 12 மாதங்கள் இருக்கிறது.
தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, ஆஷஸ் தொடருக்கு முன்பாக நடைபெற உள்ளது. இந்த இறுதிப் போட்டியில் வார்னரை விளையாட வைக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விரும்பும் என்று கருதுகிறேன்.
அதே போல் ஆஷஸ் தொடரின் கடைசி போட்டி வரை அவர் விளையாட வாய்ப்பு உள்ளது. ஆனால் ஒரு பேட்ஸ்மேனாக நீங்கள் ரன்களை அடிக்கவில்லை என்றால் நீங்களாகவே உங்களது இடத்தை காலி செய்ய வேண்டும். இதுபோன்ற நிலைமை என்னை போன்றவர்களுக்கும் நடந்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு வார்னர் இந்நேரம் ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சிட்னியில் நடந்த போட்டியுடன் அவர் விடை பெற்றிருக்க வேண்டும். ஏனென்றால் மெல்போர்னில் தனது 100-வது போட்டியில் இரட்டை சதம் அடித்திருந்தார். சொந்த ஊரான சிட்னியில் தனது 101-வது போட்டியில் சிறப்பாக தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்திருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
36 வயதான டேவிட் வார்னர் 103 டெஸ்டில் 8,158 ரன்கள் எடுத்துள்ளார். 25 சதம், 34 அரை சதம் அடித்துள்ளார்.
- நான் கோலி குறித்து பலமுறை திரும்பத் திரும்ப ஒரே கருத்தைதான் சொல்லிக் கொண்டு வருகிறேன்.
- பேட்ஸ்மேன் ஆக நீங்கள் தடுமாறும் போது உங்களைப் பற்றி உங்களுக்கே தெரிய வரும்.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தன்னுடைய பழைய அதிரடி ஆட்டத்தை மீட்டு விட்டார். எனினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் கடைசியாக சதம் அடித்தார். அதன் பிறகு மூன்றரை ஆண்டுகளாக அவர் டெஸ்ட் போட்டியில் சதம் அடிக்கவில்லை.அதுபோக கடைசியாக விளையாடிய 15 டெஸ்ட் இன்னிங்சில் ஒருமுறை கூட அரை சதம் அடிக்கவில்லை.
நடப்பு பார்டர் கவாஸ்கர் தொடரில் 5 இன்னிங்ஸ் விளையாடிய விராட் கோலி மொத்தமே 111 ரன்கள் தான் அடித்துள்ளார்.
இந்நிலையில் பேட்ஸ்மேன்களுக்கு இந்த தொடர் கெட்ட கனவாக இருக்கிறது என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியவதாவது:-
ஆடுகளம் பேட்ஸ்மேன்களை மிகவும் சோதிக்கிறது. எனினும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் தோற்று விட்டு மூன்றாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா வென்ற விதம் பாராட்டத்தக்கது. பந்து நன்றாக திரும்புகிறது. பந்தின் பவுன்சும் கணிக்க முடியாத அளவுக்கு மாறுபட்டுக் கொண்டே இருக்கிறது. இதன் மூலம் நீங்கள் ஆடுகளத்தில் நம்பிக்கையை இழந்து விடுவீர்கள். இப்படிப்பட்ட தருணத்தில் உங்களால் பேட்டிங் செய்வது மிகவும் கடினமாகும்.
இப்படிப்பட்ட சூழல் தொடர்ந்து உங்களுக்கு நடந்து கொண்டே இருந்தால் உங்களால் பேட்டிங் செய்ய முடியாது. நான் கோலி குறித்து பலமுறை திரும்பத் திரும்ப ஒரே கருத்தைதான் சொல்லிக் கொண்டு வருகிறேன். சாம்பியன் வீரர்கள் எப்படியும் தங்களுக்கான பாதையை கண்டுபிடித்து விடுவார்கள். தற்போது விராட் கோலிக்கு ரன் வறட்சி ஏற்பட்டு இருக்கலாம்.
ஆனால் பேட்ஸ்மேன் ஆக நீங்கள் தடுமாறும் போது உங்களைப் பற்றி உங்களுக்கே தெரிய வரும். அதனால் நான் விராட் கோலி ஃபார்ம் குறித்து கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. ஏனென்றால் அவர் மீண்டும் ரன் குவிப்பார் என முழு நம்பிக்கை எனக்கு உள்ளது.
ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி வரும் 9-ம் தேதி தொடங்கிறது.
- ஐபிஎல் சீசனில் ஒரு அணி தொடக்கம் முதல் இறுதி வரை ஆதிக்கம் செலுத்துவது பெரிய விஷயம்.
- ஏலத்தில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.
டெல்லி:
ராஜஸ்தான் ராயல்ஸ் வலுவான அணியாக இருப்பதாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இன்று 16-வது ஐபிஎல் சீசன் தொடங்க உள்ள நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த சீசனில் ராஜஸ்தான் அணி இறுதிப் போட்டியில் விளையாடி தோல்வியை சந்தித்தது. அணிக்கு வலு சேர்க்கும் வகையில் ஜோ ரூட் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோரை இந்த சீசனுக்காக ஏலத்தில் எடுத்துள்ளது ராஜஸ்தான்.
இந்நிலையில், அனைத்து அணிகளும் சம பலத்துடன் இருப்பதாகவும். ராஜஸ்தான் அணி வலுவாக இருப்பதாகவும் பாண்டிங் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் சீசனில் ஒரு அணி தொடக்கம் முதல் இறுதி வரை ஆதிக்கம் செலுத்துவது பெரிய விஷயம். அதனால் யார் வெல்வார்கள் என சொல்வதும் கடினம். கடந்த ஆண்டு புதிய அணியான குஜராத் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. கடந்த முறை இறுதிப் போட்டியில் விளையாடிய ராஜஸ்தான் அணி இந்த முறை வலுவான அணியை அதனை அடிப்படையாக வைத்தே கட்டமைத்துள்ளது. ஏலத்தில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். மற்ற அணிகளுடன் ஒப்பிடுகையில் ராஜஸ்தான் வலுவாக உள்ளது.
என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், டெல்லி அணியில் இடம்பெற்றுள்ள யாஷ் துல் மற்றும் அமன் கான் ஆகியோருக்கு இந்த சீசன் சிறப்பானதாக அமையும் என பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
- வெவ்வேறு காலக்கட்டங்களில் ஆடிய வீரர்களை ஒப்பிடமுடியாது என்று பாண்டிங் கூறினார்.
- சச்சின் டெண்டுல்கர் தான் எனது காலக்கட்டத்தில் நான் பார்த்த டெக்னிக்கலாக சிறந்த வீரர்.
கிரிக்கெட் கடவுள் என்றழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு இன்று 50-வது பிறந்தநாள். சர்வதேச கிரிக்கெட்டில் 24 ஆண்டுகள் விளையாடி, 200 டெஸ்ட், 463 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டி என மொத்தம் 667 சர்வதேச போட்டிகளில் ஆடி 100 சதங்களுடன் 34357 ரன்களை குவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை விளாசிய ஒரே வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் சச்சின் டெண்டுல்கர். சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 75 சதங்களை விளாசியுள்ள நிலையில், அவர் 100 சதங்கள் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பாரா என்பதுதான் பெரும் விவாதமாக இருந்துவருகிறது. மேலும் சச்சின் டெண்டுல்கருடன் விராட் கோலி ஒப்பிடப்படுகிறார்.
இது குறித்து ரிக்கி பாண்டிங் பேசியதாவது:-
நான் எப்போதுமே சொல்லிவருகிறேன். சச்சின் டெண்டுல்கர் தான் எனது காலகட்டத்தில் நான் பார்த்த டெக்னிக்கலாக சிறந்த பேட்ஸ்மேன். ஒரு பவுலிங் அணியாக நாம் எந்தவிதமான திட்டங்களுடன் சென்றாலும், அவையனைத்தையும் முறியடித்துவிடுவார் சச்சின். அது இந்தியாவாக இருக்கட்டும் அல்லது ஆஸ்திரேலியாவாக இருக்கட்டும். எந்த இடமாக இருந்தாலும் சச்சின் தெறிக்கவிடுவார்.
வெவ்வேறு காலக்கட்டத்தில் ஆடிய வீரர்களை ஒப்பிட முடியாது. நான் பார்த்ததில் தலைசிறந்த வீரர் சச்சின் டெண்டுல்கர் தான். மிகத்திறமையான பேட்ஸ்மேன் என்பதால் தான் 200 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கிறார். விராட் கோலியும் நன்றாக ஆடுகிறார். விராட் கோலி மிகச்சிறந்த வீரர் தான். சச்சின் 100 சதங்கள் அடித்திருக்கிறார். விராட் கோலியை இப்போது சச்சினுடன் ஒப்பிட முடியாது. கோலியின் கெரியர் முடியட்டும். பிறகு பார்த்துக்கொள்ளலாம்.
என்று பாண்டிங் கூறினார்.
- ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் செயல்பட்டு வருகிறார்.
- இந்த ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடிய டெல்லி 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 8 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.
ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் செயல்பட்டு வருகிறார். இந்த ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடிய டெல்லி 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 8 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. இதனால் பிளே ஆப் சுற்றில் இருந்து இந்த அணி வெளியேறியது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் தனது நிறுவனத்தின் தயாரிப்பான பாண்டிங் ஒயின்சை டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் உள்ள டியூட்டி ப்ரீ என்ற வரியில்லா விற்பனை நிலையத்தில் தொடங்கி வைத்தார்.
- ஜூன் 7-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
- கடந்த முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் இந்திய அணி தோற்றது.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. வரும் ஜூன் 7-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் இந்த போட்டி தொடங்குகிறது. கடந்த முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் தோற்று கோப்பையை இழந்த இந்திய அணி இம்முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.
இந்நிலையில், இந்திய அணி துருப்பு சீட்டாக விராட் கோலி மற்றும் புஜாரா இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்திய அணிக்கு எதிரான வியூகத்தில் கோலி குறித்து ஆஸ்திரேலிய அணியினர் நிச்சயம் பேசிக்கொண்டு இருப்பார்கள். அதில் சந்தேகமே இல்லை. அதே போல புஜாரா குறித்தும் நிச்சயம் பேசி வருவார்கள். அவர்கள் இருவரும் இந்தியா அணியின் முக்கிய வீரர்கள்.
கடந்த காலங்களில் புஜாரா, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி உள்ளார். இறுதிப் போட்டி நடைபெற உள்ள ஆடுகளமும் ஆஸ்திரேலியாவில் இருப்பது போல இருக்கலாம். அதனால் புஜாராவை விரைவாக அவுட் செய்வது அவர்களது இலக்காக இருக்கும்.
கடந்த சில வாரங்களாக விராட் கோலி அபார ஃபார்மில் இருக்கிறார் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். அது டி20 கிரிக்கெட் என்றாலும் அவரது ஃபார்ம், ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாகும். தான் சிறந்த ஃபார்மில் இருப்பதாக அவரே என்னிடம் தெரிவித்தார்.
என பாண்டிங் கூறினார்.