என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RJD"

    • இன்று (மே 21)காலை பிகாரி தாக்கூர் சவுக்கிற்கு அருகிலுள்ள படா டெல்மா பகுதியில் நடந்த மோதலின்போது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
    • இந்த நிகழ்வுகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பீகார் முன்னாள் துணை முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ், தோல்வி பயத்தில் சிலர் இதுபோன்ற செயல்களைச் செய்து வருகிறார்கள் என்று தெரிவித்தார்.

    மக்களவைத் தேர்தல் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு நேற்று (மே 20) மகாராஷ்டிரா, பிகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள முக்கிய தொகுதிகளுக்கு நடந்து முடிந்தது. பீகார் மாநிலம் சரண் மாவட்டத்திலும் நேற்று வாக்குப்பதிவு நடந்த நிலையில் அங்குள்ள பாஜக மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி ஆதரவாளர்கள் வாக்குப்பதிவில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி மோதலில் ஈடுபட்டு வருகின்றார்.

    இன்று (மே 21)காலை பிகாரி தாக்கூர் சவுக்கிற்கு அருகிலுள்ள படா டெல்மா பகுதியில் நடந்த மோதலின்போது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இறந்தவர் சந்தன் யாதவ் (25) என அடையாளம் காணப்பட்டார். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

     

     

    பின்னர், அவர்களில் இருவர் மேல் சிகிச்சைக்காக பாட்னாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் மோதல் வலுவடைவதைத் தடுக்க சரண் மாவட்டத்தில் 48 மணி நேரத்துக்கு இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்வுகளுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள பீகார் முன்னாள் துணை முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ், தோல்வி பயத்தில் சிலர் இதுபோன்ற செயல்களைச் செய்து வருகிறார்கள் என்று தெரிவித்தார். 

    • பாரதிய ஜனதா கட்சிக்கு 240 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது.
    • சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாரின் கட்சிகள் ஆதரவு பெற்று பிரதமர் மோடி மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்க உள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில் பாரதிய ஜனதா கட்சிக்கு 240 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது.

    இதனால் 16 எம்.பி.க்கள் வைத்துள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் 12 எம்.பி.க்கள் வைத்துள்ள நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் ஆதரவு பெற்று பிரதமர் மோடி மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்க உள்ளார்.

    இந்நிலையில், இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தந்தால் நிதிஷ் குமாருக்கு பிரதமர் பதவி தருவதாக கூறினார்கள் என ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் கே.சி.தியாகி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு "இதுதொடர்பாக எனக்கு எந்தத் தகவலும் வரவில்லை என தெரிவித்தார்.

    இதனையடுத்து, இது தொடர்பாக பேசிய பீகார் எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் மிருத்யுஞ்சய திவாரி, "நிதிஷ்குமார் ஒரு 'பிரதமர் மெட்டிரியல்', ஆனால் பாஜக கூட்டணியில் அவர் தலை குனிந்து உள்ளார்" என்று கிண்டலாக தெரிவித்துள்ளார்.

    • பாராளுமன்ற தேர்தலில் பெரிய மாநிலங்களில் தமிழ்நாட்டில் மட்டும் தான் பாஜக ஒரு இடங்களில் வெல்லவில்லை
    • தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.

    மக்களவைத் தேர்தலில் 292 இடங்களை கைப்பற்றி பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. இன்று இரவு 7.15 மணிக்கு மோடி 3 வது முறையாக மீண்டும் பதவியேற்க உள்ளார். அவருடன் முக்கிய இலாக்காக்களை உள்ளடக்கிய 30 அமைச்சர்கள் முதற்கட்டமாக பதவியேற்க உள்ளனர்.

    கடந்த தேர்தல்களில் தனிப்பெரும்பான்மையுடன் யாரையும் எதிர்பார்க்காமல் ஆட்சியமைத்த பாஜக இந்த முறை ஆர்.ஜே.டி, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் தயவை எதிர்நோக்கியுள்ளது.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் பெரிய மாநிலங்களில் தமிழ்நாட்டில் மட்டும் தான் பாஜக ஒரு இடங்களில் வெல்லவில்லை. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.

    இந்நிலையில் தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் பாஜக வெற்றி பெறாதது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "மே 28, 2023 நினைவிருக்கிறதா? செங்கோலுடன் மோடி புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் நுழைந்த நாள். செங்கோல் என்பது தமிழர் வரலாற்றின் மதிப்பிற்குரிய அடையாளமாக உள்ளது, ஆனால் தமிழ் வாக்காளர்களும் உண்மையில் இந்தியாவின் வாக்காளர்களும் மோடியின் பாசாங்குகளை நிராகரித்துள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் அவர் அத்துமீறிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு அடிபணிய வேண்டிய நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.

    • பீகாரில் மக்கள்தொகை விகிதத்திற்கு ஏற்ப வேட்பாளர்கள் நிறுத்தப்பட வேண்டும்.
    • முஸ்லிம் மக்களை ஓட்டு வங்கிகளாக மட்டும் தான் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி பார்க்கிறது.

    தேர்தல் வியூக நிபுணராக இருந்த பிரசாந்த் கிஷோர், ஜன சுராஜ் என்ற அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். அடுத்த ஆண்டு நடக்கும் பீகார் சட்டசபை தேர்தலில் அக்கட்சி போட்டியிடுகிறது.

    இந்நிலையில், பீகார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரசாந்த் கிஷோர், 2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் வெல்வதுதான் எங்கள் ஜன சுராஜ் கட்சியின் நோக்கம். 243 தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிடுவோம். அதில் குறைந்தபட்சம் 40 பெண் வேட்பாளர்களை நிறுத்துவோம்.

    பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 40 முஸ்லிம் வேட்பாளர்களை நாங்கள் நிறுத்துவோம். மாநிலத்தின் மக்கள்தொகையில் 18-19% முஸ்லிம்கள் இருந்தாலும் பீகார் சட்டமன்றத்தில் 19 முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள்தான் உள்ளனர்.

    பீகாரில் மக்கள்தொகை விகிதத்திற்கு ஏற்ப வேட்பாளர்கள் நிறுத்தப்பட வேண்டும். முஸ்லிம் மக்களை ஓட்டு வங்கிகளாக மட்டும் தான் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி பார்க்கிறது. நான் அக்கட்சிக்கு சவால் விடுகிறேன், பீகாரின் முஸ்லிம் மக்கள்தொகைக்கு ஏற்ப முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? அப்படியென்றால் குறைந்தது 40 சட்டசபை தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்.

    ராஷ்டிரிய ஜனதா எங்கெல்லாம் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்துகிறார்களோ அங்கெல்லாம் நாங்கள் இந்து வேட்பாளர்களை நிறுத்துவோம். ஆகவே முஸ்லிம்களின் மக்கள்தொகை விகிதத்திற்கு ஏற்ப அக்கட்சி சீட்டு வழங்கவேண்டும்.

    வரும் சட்டமன்ற தேர்தலில் எங்கள் கட்சிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் தான் போட்டியே. கடந்த மக்களவை தேர்தலில் 243 தொகுதிகளில் 176 இடங்களை தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்தது. ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கு இங்கு இடமில்லை. எங்கள் கட்சியை சேர்ந்தவர் தான் பீகார் முதல்வராக பதவி ஏற்பார்.

    நான் 2014 இல் நரேந்திர மோடியை ஆதரித்தேன். 2015 முதல் 2021 வரை பாஜகவை எதிர்க்கும் கட்சிகளை ஆதரித்தேன். இந்தியாவில் 80% இந்துக்கள் இருந்தும் பாஜகவிற்கு கடந்த மக்களவை தேர்தலில் 37% ஓட்டு தான் விழுந்தது. பாஜகவின் வெறுப்பு அரசியலுக்கு எதிராக 40% இந்துக்கள் வாக்களித்துள்ளனர்" என்று அவர் தெரிவித்தார்.

    • மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பத்து தொகுதிகளில் போட்டியிடுகிறது.
    • மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி பத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த மாதம் 20-ந்தேதி 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

    மகாராஷ்டிராவில் மகாயுதி, மஹா விகாஸ் அகாதி என இரண்டு பெயர்களில் மெகா கூட்டணி உள்ளன.

    மகாயுதி கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய மூன்று கட்சிகள் உள்ளன. மகாயுதி கூட்டணிதான் ஆட்சி அமைத்துள்ளது. ஏக்நாத் ஷிண்டே முதல்வராக இருந்து வருகிறார். அஜித் பவார் மற்றும் பா.ஜ.க.வின் பட்நாவிஸ் ஆகியோர் துணை முதல்வராக உள்ளனர்.

    மகா விகாஸ் அகாதி என்ற எதிர்க்கட்சி கூட்டணியில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திரா பவார்), உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் உள்ளன.

    இந்நிலையில், மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து விசிக போட்டியிடுகிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்

    இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன், மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பத்து தொகுதிகளிலும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி பத்து தொகுதிகளிலும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. பிற தொகுதிகளில் இந்தியா கூட்டணியை ஆதரிக்கிறோம்" என்று தெரிவித்தார்.

    கங்காபூர், பத்நாபூர், நன்டெட் (தெற்கு), ஹிங்கோலி, கல்மனுரி, வாஸ்மாட், தெக்லூர், அவுரங்காபாத் (மையம்), முள்ளன்ட் ( மும்பை), கன்னட் ஆகிய 10 தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது.

    பிவாண்டி, மலேகோன், வாசிம், அவுரங்காபாத் (மேற்கு), அவுரங்காபாத் (கிழக்கு), புலம்பிரி, மும்பை மலாட், தாராவி, போக்கர்டன் ஜல்னா, துலே ஆகிய 10 தொகுதிகளில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் போட்டியிடுகிறது

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்
    • எங்களுக்கு வானுலக சொர்க்கம் தேவையில்லை. இந்த நிலம் சொர்க்கமாக்கப்பட வேண்டும்.

    அரசியலமைப்பு மீதான விவாதம் நேற்று மாநிலங்களவையில் நடைபெற்றது. அப்போது மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பேசும்போது 'அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்' என முழக்கமிடுவது இப்போது பேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால் சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று பேசினார்.

    அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இன்று காலை 11 மணிக்கு மாநிலங்களவை கூடியதும் இது தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 2 மணிக்கு அவை மீண்டும் கூடியது. அப்போதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள். அமித் ஷா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராஷ்டிரிய ஜனதா தள மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ் ஜா, "அமித் ஷாவின் பேச்சு அருவருப்பாக இருந்தது. எங்களுக்கு வானுலக சொர்க்கம் தேவையில்லை. இந்த நிலம் சொர்க்கமாக்கப்பட வேண்டும், அதுதான் அம்பேத்கரின் விருப்பமும் கூட. அவர் மனதில் இருப்பது வாய் தவறி வெளியே வந்துவிட்டது. இதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    லாலு பிரசாத் கட்சியில் ‘சீட்’ வழங்குவதில் ஏற்பட்ட மோதல் காரணமாக தேஜ் பிரதாப் யாதவ், கட்சியின் மாணவர் அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். #LaluPrasad #TejPratap
    பாட்னா:

    பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றன.

    இந்த கூட்டணிக்கு சரியான போட்டியை ஏற்படுத்துகிற விதத்தில் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ், ராஷ்ட்ரிய லோக்சமதா, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மத சார்பற்றது), விகாஷீல் இன்சான் கட்சிகள் மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    இந்த நிலையில் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியில் ‘சீட்’ வழங்குவதில் மோதல் வெடித்துள்ளது. லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் ஆதரவாளர்களுக்கு ‘சீட்’ மறுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதேபோன்று கூட்டணி கட்சித்தலைவர்களுடனான பேச்சுவார்த்தையில் லாலு பிரசாத்தின் இளையமகன் தேஜஸ்வி பிரசாத் யாதவை ஈடுபடுத்தி விட்டு, தேஜ் பிரதாப் யாதவை ஓரங்கட்டியதாகவும் கூறப்படுகிறது.

    இதில் கடும் அதிருப்தி அடைந்த தேஜ் பிரதாப் யாதவ், கட்சியின் மாணவர் அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து நேற்று விலகினார். இதை ‘பேஸ்புக்’ பக்கத்தில் அவரே தெரிவித்துள்ளார். 
    பீகாரில் தனி பெரும்பான்மையுள்ள கட்சி நாங்கள் என்பதால், எங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என வலியுறுத்தி ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் கவர்னரை இன்று சந்தித்தனர். #RJD #SatyapalMalik #TejashwiYadav
    பாட்னா:

    கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், ஆட்சியமைக்க தேவையான 112 இடங்களை எந்த கட்சியும் பெறவில்லை. அதிகபட்சமாக பாஜக 104 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் 78 இடங்களிலும், மஜத 37 இடங்களிலும் வென்றன.

    பெரும்பான்மை கிடைக்காத நிலையில் எடியூரப்பாவை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். நேற்று காலை எடியூரப்பா முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். பெரும்பான்மை இல்லாத நிலையில், அதிக இடங்களை வைத்துள்ள கட்சி ஆட்சியமைக்கலாம் என விளக்கம் அளிக்கப்பட்டது.

    இதற்கிடையே, பீகாரில் நாங்களே தனிப்பெரும் கட்சி. எனவே நாங்கள் ஏன் ஆட்சியமைக்கக் கூடாது? என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் முக்கிய தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.



    இந்நிலையில், பீகாரில் தனி பெரும்பான்மை கட்சி என்பதால் எங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என வலியுறுத்தி தேஜஸ்வி யாதவ் உள்பட கூட்டணி கட்சிகள் கவர்னரை இன்று சந்தித்து கடிதம் அளித்தன.

    இதுதொடர்பாக, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் முக்கிய தலைவரும், முன்னாள் துணை முதல் மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பீகார் ராஜ்பவனுக்கு சென்றனர். அவர்கள் கவர்னர் சத்யபால் மாலிக்கை சந்தித்து, ஆட்சி அமைக்க கோரும் கடிதம் அளித்தனர் என தெரிவித்தனர்.

    கடந்த 2015-ல் நடந்த பீகார் சட்டசபை தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 80 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 71 தொகுதிகளிலும், பாஜக 53 இடங்களிலும் வென்றது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி அமைத்தது. பின்னர், 2017-ல் திடீரென ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் கூட்டணியிலிருந்து விலகி பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #RJD #SatyapalMalik #TejashwiYadav
    கர்நாடகாவில் தனிப்பெரும் கட்சி என்பதால் பாஜக ஆட்சியமைக்க கவர்னர் அழைத்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், பீகாரில் நாங்கள் தனிக்கட்சி நாங்கள் என்பதால் ஏன் ஆட்சியமைக்க கூடாது? என தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார். #BJP #RJD
    பாட்னா:

    கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், ஆட்சியமைக்க தேவையான 112 இடங்களை எந்த கட்சியும் பெறவில்லை. அதிகபட்சமாக பாஜக 104 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் 78 இடங்களிலும், மஜத 37 இடங்களிலும் வென்றன.

    பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மஜத ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. ஆனால், தனிப்பெரும் கட்சி நாங்களே எனவே எங்களையே ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என எடியூரப்பா அம்மாநில கவர்னர் பாஜுபாய் வாலாவை சந்தித்தார்.

    குமாரசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர்களும் 118 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்துடன் கவர்னரை சந்தித்தனர். திடீர் திருப்பமாக நேற்றிரவு எடியூரப்பாவை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். இன்று காலை எடியூரப்பா முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.

    பெரும்பான்மை இல்லாத நிலையில், அதிக இடங்களை வைத்துள்ள கட்சி ஆட்சியமைக்கலாம் என விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், பீகாரில் நாங்களே தனிப்பெரும் கட்சி ஏன் நாங்கள் ஆட்சியமைக்க கூடாது? என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் முக்கிய தலைவர், முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

    நாளை மதியம் கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளதாகவும் தேஜஸ்வி யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    கடந்த 2015-ம் ஆண்டு நடந்த பீகார் சட்டசபை தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 80 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 71 தொகுதிகளிலும், பாஜக 53 இடங்களிலும் வென்றது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது போலவே, கூட்டணி ஆட்சி அமைத்தது.

    பின்னர், 2017-ம் ஆண்டு திடீரென ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார், கூட்டணியிலிருந்து விலகி பின்னர் பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    கர்நாடகாவில் பா.ஜ.க. கட்சி ஆட்சி அமைத்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி நாளை தர்ணா போராட்டம் அறிவித்துள்ளது. #RJDdharna #BJPgovtinKarnataka
    பாட்னா :

    கர்நாடகாவில் பெரும்பான்மை பெறாத நிலையில் பா.ஜ.க. ஆட்சியமைத்ததை கண்டித்து லாலு பிரசாத் யாதவின் ராஷ்ரிய ஜனதா தளம் கட்சி நாளை தர்ணா போராட்டம் அறிவித்துள்ளது.

    பாட்னாவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் துணை தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ரகுவன்ஷ் பிரசாத் சிங், ‘தனிப்பெரும்பான்மை இல்லாமல் கர்நாடகத்தில் பாஜக ஆட்சியமைத்தற்கு  ராஷ்ரிய ஜனதா தளம் கட்சி கண்டனம் தெரிவிகின்றது.

    மேலும், இதை எதிர்த்து பீகார் தலைநகர் பாட்னாவில் மிகப்பெரிய அளவில் தர்ணா போராட்டம் நடைபெறும். இதில், பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் மட்டுமல்லாமல் கட்சியின் அணைத்து முன்னணியினர் மற்றும் தொண்டர்களும் பங்கேற்க உள்ளனர். கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர பீகார் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைமையிடங்களிலும் நாளை தர்ணா போராட்டம் நடைபெறும்’ என தெரிவித்துள்ளார்.

    பெரும்பான்மை இடங்களை வைத்துள்ள காங்கிரஸ்- மஜத கூட்டணியை புறக்கணித்துவிட்டு, எடியூரப்பாவை ஆட்சியமைக்க கவர்னர் வஜுபாய் வாலா அனுமதித்ததன் மூலம் குதிரை பேரம் நடைபெற வழிவகுத்துள்ளார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். #RJDdharna #BJPgovtinKarnataka
    ×