என் மலர்
நீங்கள் தேடியது "Rohit"
- பும்ரா பந்துவீச்சில் கருண் நாயர் அடுத்தடுத்து சிக்சர், போர் என பவுண்டர்கள் விளாசினார்
- ரன் ஓட முயன்றபோது பும்ரா மீது கருண் நாயர் மோதினார்.
ஐ.பி.எல். தொடரின் 29-வது லீக் ஆட்டம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி திரில் வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் டெல்லி அணி பெற்ற முதல் தோல்வி இதுவாகும்.
இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய கருண் நாயர் 40 பந்தில் 5 சிக்சர், 12 பவுண்டரி உள்பட 89 ரன்கள் குவித்து அவுட்டானார்.
குறிப்பாக பும்ரா பந்துவீச்சில் அடுத்தடுத்து சிக்சர், போர் என பவுண்டர்கள் விளாசி அனைவரின் புருவத்தையும் உயர்த்த வைத்தார்.
ரன் ஓட முயன்றபோது பும்ரா மீது கருண் நாயர் மோதினார். இதனையொட்டி டைம் அவுட் நேரத்தில் கருண் நாயரிடம் பும்ரா வாங்கிக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து ஹர்திக் பாண்ட்யா உடன் கருண் நாயர் பேசினார்.
இந்த வாக்குவாதத்திற்கு நடுவே ரோகித் மைதானத்தில் சிரித்தபடியே நின்றுகொண்டிருந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
- முதல் போட்டி ஜனவரி 25 தொடங்கி 29 வரை நடைபெற உள்ளது
- 2022 டிசம்பரில் பாகிஸ்தானை 3-0 என இங்கிலாந்து வென்றது
இம்மாதம், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இந்தியாவில் டெஸ்ட் போட்டி தொடர் நடைபெறவுள்ளது.
இந்திய அணிக்கு ரோஹித்தும், இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்சும் கேப்டனாக உள்ளனர்.

முதல் போட்டி ஜனவரி 25 தொடங்கி 29 வரை ஐதராபாத் நகரின் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது.
பிற போட்டிகள் விசாகப்பட்டினம் (பிப்ரவரி 2-6), ராஜ்கோட் (பிப்ரவரி 15-19), ராஞ்சி (பிப்ரவரி 23-27) மற்றும் தரம்சாலா (மார்ச் 7-11) ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
இரு நாடுகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகளில் இதுவரை அதிக ரன்கள் குவித்த முதல் 5 வீரர்கள்:
சச்சின் டெண்டுல்கர்
2535 ரன்கள் - 32 ஆட்டங்கள் - 7 நூறுகள் - 51.73 சராசரி
ஜோ ரூட்
2526 ரன்கள் - 25 ஆட்டங்கள் - 9 நூறுகள் - 63.15 சராசரி
சுனில் கவாஸ்கர்
2483 ரன்கள் - 38 ஆட்டங்கள் - 4 நூறுகள் - 38.20 சராசரி
அலஸ்டர் குக்
2431 ரன்கள் - 30 ஆட்டங்கள் - 7 நூறுகள் - 47.66 சராசரி
விராட் கோலி
1991 ரன்கள் - 28 ஆட்டங்கள் - 5 நூறுகள் - 42.36 சராசரி
கடந்த 2022 டிசம்பர் மாதம், பாகிஸ்தானுடன் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்திய-இங்கிலாந்து அணியினர் இதுவரை 131 முறை மோதியுள்ளனர். அதில் இங்கிலாந்து 50 ஆட்டங்களில் வென்றது; இந்தியா 31 ஆட்டங்களில் வென்றது. 50 ஆட்டங்கள் சமன் (draw) ஆகியுள்ளது.
- ஜனவரி 25 அன்று முதல் போட்டி ஐதராபாத்தில் நடைபெறுகிறது
- இந்திய-இங்கிலாந்து அணியினர் 131 முறை மோதியுள்ளனர்
இம்மாதம், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் போட்டித் தொடர் இந்தியாவின் பல நகரங்களில் நடைபெறுகிறது.
இந்திய அணிக்கு ரோஹித்தும், இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்சும் கேப்டனாக உள்ளனர்.
முதல் போட்டி ஜனவரி 25 தொடங்கி 29 வரை ஐதராபாத் நகரின் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. பிற போட்டிகள் விசாகப்பட்டினம் (பிப்ரவரி 2-6), ராஜ்கோட் (பிப்ரவரி 15-19), ராஞ்சி (பிப்ரவரி 23-27) மற்றும் தரம்சாலா (மார்ச் 7-11) ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன.
இரு நாடுகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகளில் இதுவரை அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள்:
ஜேம்ஸ் ஆண்டர்சன் (வேகப்பந்து வீச்சாளர்)
ஆட்டங்கள் - 35 விக்கெட்டுகள் - 139 சராசரி - 24.89 சிறப்பு - 5/20
பகவத் சந்திரசேகர் (லெக் ஸ்பின்னர்)
ஆட்டங்கள் - 23 விக்கெட்டுகள் - 95 சராசரி - 27.27 சிறப்பு - 8/79
அனில் கும்ப்ளே (லெக் பிரேக்)
ஆட்டங்கள்- 19 விக்கெட்டுகள் - 92 சராசரி - 30.59 சிறப்பு - 7/115
ஆர். அஸ்வின் (ஆஃப் ஸ்பின்னர்)
ஆட்டங்கள் - 19 விக்கெட்டுகள் - 88 சராசரி - 28.59 சிறப்பு - 6/55

பிஷன் சிங் பேடி (இடக்கர ஸ்பின்)
ஆட்டங்கள் - 22 விக்கெட்டுகள் - 85 சராசரி - 6/71 சிறப்பு - 29.87
கபில் தேவ் (வேகப்பந்து வீச்சாளர்)
ஆட்டங்கள் - 27 விக்கெட்டுகள் - 85 சராசரி - 37.34 சிறப்பு - 6/91
பிஎஸ் பேடி மற்றும் கபில் தேவ் இருவரும் தலா 85 விக்கெட்டுகளை வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய-இங்கிலாந்து அணியினர் இதுவரை 131 முறை மோதியுள்ளனர். அதில் இங்கிலாந்து 50 ஆட்டங்களில் வென்றது; இந்தியா 31 ஆட்டங்களில் வென்றது. 50 ஆட்டங்கள் சமன் (draw) ஆகியுள்ளது.
- தற்சமயத்தில் பும்ரா உலகின் முழுமையான பவுலராக திகழ்கிறார்.
- யார்கர் பந்துகளை வீசும் திறமையை கொண்டிருக்கும் அவர் டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு அவர் தேவை.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. முதல் போட்டியில் தோல்வியடைந்ததற்கு 2-வது போட்டியில் இந்தியா பதிலடி கொடுத்தது. இரண்டாவது போட்டியில் இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இதன் மூலம் ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலராகவும் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய மூன்று வகையான ஐசிசி தரவரிசையிலும் நம்பர் ஒன் இடத்தை பிடித்த முதல் பவுலர் என்ற மாபெரும் உலக சாதனையும் அவர் படைத்துள்ளார்.
இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடக்கவிருக்கும் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் பும்ரா, ரோகித், விராட் ஆகியோர் மேட்ச் வின்னர்களாக இருப்பார்கள் என முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் வெர்னோன் பிளாண்டர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-
தற்சமயத்தில் பும்ரா உலகின் முழுமையான பவுலராக திகழ்கிறார். அவர் நிலையான லைன் மற்றும் லென்த்தை பிடித்து தொடர்ச்சியாக பந்து வீசும் திறமையை கொண்டிருப்பதாலேயே டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இப்படி வெற்றிகரமாக செயல்படுகிறார்.
புதிய தந்தை ஸ்விங் செய்து ஸ்டம்பை நோக்கி கொண்டு வரும் அவர் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சவாலை கொடுக்கிறார். மாற்றங்களை செய்து தெறிக்க விடக்கூடிய யார்கர் பந்துகளை வீசும் திறமையை கொண்டிருக்கும் அவர் டி20 உலகக் கோப்பையை வெல்ல உங்களுக்கு தேவை. பும்ரா, விராட், ரோகித், ஆகியோர் மேட்ச் வின்னர்களாக இருப்பார்கள். அவர்கள் அந்த தருணங்களுக்காக வாழ்கிறார்கள். அவர்கள் முக்கிய வீரர்களாக இருப்பார்கள்.
இவ்வாறு பிளாண்டர் கூறினார்.
- எம்.எஸ்.டோனி, விராட் கோலி, ரோகித் நடனமாடுவது போன்ற ஏஐ வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது.
- அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் பகிர்ந்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று நடந்து வருகிறது.
ஆன்டிகுவாவில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், ஏ .ஆர்.ரகுமான் இசையில் ஸ்ரேயா கோஷல் பாடிய நன்னாரே பாடலுக்கு எம்.எஸ்.டோனி, விராட் கோலி, ரோகித் நடனமாடுவது போன்ற ஏஐ வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது.
அந்த வீடியோவை ஸ்க்ரீன் ரெக்கார்டு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் பகிர்ந்துள்ளார்.
அதில், "அருமையான வெற்றி. என்னை மன்னித்து விடுங்கள் சகோதரர்களே. ஒரு அற்புதமான வீடியோவை நான் பதிவிட்டுள்ளேன். எனது முதல் ஸ்க்ரீன் ரெக்கார்டாக இதை உருவாக்கியவருக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.
- டிராவிட்டுக்கு பிரியா விடை கொடுக்கும் விதமாக இந்திய வீரர்கள் செய்த செயல் வைரலாகி வருகிறது.
- ரோகித் சர்மா விராட் கோலியிடன் ராகுல் டிராவிட்டை இப்படி செய்யலாம் என கூறினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இருந்து வருகிறார். அவரது பதவி காலம் இந்த 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியுடன் முடிவுக்கு வருகிறது.
அவர் பயிற்சியாளராக தனது கடைசி உலகக் கோப்பை போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் டி20 உலகக் கோப்பையில் கைப்பற்றும் முதல் டிராபி இது தான். வீரராகவோ, கேப்டனாகவோ உலகக் கோப்பையை கையில் ஏந்தி சாதிக்க முடியாத ராகுல் டிராவிட் ஒரு பயிற்சியாளராக தனது உலகக் கோப்பை ஏக்கத்தை தணித்து இருக்கிறார்.
இந்நிலையில் அவருக்கு பிரியா விடை கொடுக்கும் விதமாக இந்திய வீரர்கள் செய்த செயல் வைரலாகி வருகிறது. அந்த வகையில் ராகுல் டிராவிட்டை இந்திய வீரர்கள் தலைக்கு மேலாக தூக்கி போட்டு கொண்டாடி மகிழ்ந்தனர். இதனை ரோகித் சர்மா விராட் கோலியிடம் கூறி இதனை செய்தனர். அவர்களது செயலை ராகுல் டிராவிட்டும் ஏற்றுக் கொண்டு அவர்களுடன் சந்தோசத்தை வெளிப்படுத்தினார்.
டிராவிட்டின் பயிற்சியில் கீழ் இந்திய அணி 2023-ம் ஆண்டு நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், 50 ஓவர் உலகக் கோப்பை ஆகியவற்றில் இறுதிப்போட்டியில் தோல்வி கண்டிருந்தது.
- டி20 உலகக் கோப்பையுடன் ரோகித், விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் டி20யில் இருந்து ஓய்வை அறிவித்தனர்.
- மற்றொரு இந்திய வீரரான தவான் அனைத்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
2024-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட வீரர்கள் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர். சிலர் டி20 என ஒரு வடிவ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர்.
அந்த வகையில் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த வீரர்கள் யார் என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
டீன் எல்கர்

இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஓய்வு அறிவிப்பை தொடங்கிய வீரராக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டீன் எல்கர் உள்ளார். அவர் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது அனைத்து விதமான போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவர் தென் ஆப்பிரிக்கா அணிக்காக 86 டெஸ்ட், 8 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளார். 86 போட்டியில் 14 சதம் 23 அரைசதம் விளாசியுள்ளார். இவர் தலைமையில் தென் ஆப்பிரிக்கா 18 போட்டிகளில் விளையாடி 9-ல் வெற்றியும் 8-ல் தோல்வியும் கண்டுள்ளது.
டேவிட் வார்னர்

அதே மாதத்தில் ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இவர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதனை தொடர்ந்து டி20 உலகக் கோப்பை தொடருடன் டி20 போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தார். ஒருநாள் தொடரில் இருந்து 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வை அறிவித்தார்.
இவர் ஆஸ்திரேலியாவுக்காக 112 டெஸ்ட் போட்டி விளையாடி 8786 ரன்களும் 161 ஒருநாள் போட்டியில் விளையாடி 6932 ரன்களும் எடுத்துள்ளார். 2 வடிவத்திலும் சேர்த்து 48 சதம் விளாசியுள்ளார்.
கிளாசன்

ஜனவரி மாதத்தில் 3 வீரராக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கிளாசன் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தார். இவர் 2019-ம் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிய இவர் 4 டெஸ்ட்டில் மட்டுமே விளையாடி உள்ளார். ஒருநாள் மற்றும் டி20 தொடரில் கவனத்தை செலுத்தி அதிரடியாக விளையாடி வருகிறார்.
நீல் வாக்னர்

நியூசிலாந்து அணியை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னர். இவரும் இந்த ஆண்டில் தனது ஓய்வை அறிவித்துள்ளார். இவர் 2012-ம் ஆண்டு டெஸ்ட்டில் அறிமுகமாகினார். 64 டெஸ்ட் போட்டியில் விளையாடிய இவர் 260 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2021-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை வென்ற அணியில் இவர் இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொலின் மன்ரோ

நியூசிலாந்து அணியின் தொடங்க வீரர் கொலின் மன்ரோ. இவர் கடந்த மே மாதம் அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்தார். 2020-ம் ஆண்டு டி20 அணியில் இடம் பிடித்த இவர் 65 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் 57 ஒருநாள் போட்டி ஒரு டெஸ்ட்டில் நியூசிலாந்து அணிக்காக விளையாடி உள்ளார். இந்த ஆண்டு நடைபெற்ற டி20 அணியில் இவர் இடம் பிடிக்காத நிலையில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார் என்பது குறிப்பிடதக்கது.
தினேஷ் கார்த்திக்

இந்திய அணியில் இடம் கிடைக்காமல் ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வந்தவர் தமிழக வீரரான தினேஷ் கார்த்திக். இவர் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் 2022-ம் ஆண்டு இந்திய டி20 அணியில் இடம் பிடித்தார். அந்த தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்லவில்லை.
அதன்பிறகு 2024-ம் ஆண்டு ஐபிஎல் தொடர் தான் கடைசி என அறிவித்தார். இதனையடுத்து 2024 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்தார்.
இந்திய அணிக்காக 26 டெஸ்ட், 94 ஒருநாள் போட்டி, 60 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தமாக ஒரு சதம் 17 அரை சதம் விளாசியுள்ளார்.
கேதர் ஜாதவ்

இந்த ஆண்டு ஜூன் மாதம் கேதர் ஜாதவ் அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இவர் கடைசியாக 2020-ம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடினார். 73 ஒருநாள் போட்டி, 9 டி20 போட்டியில் விளையாடியுள்ள இவர், 2 சதம், 6 அரை சதம் விளாசியுள்ளார். 2019 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இவர் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடதக்கது.
விராட் கோலி, ரோகித் சர்மா, ஜடேஜா

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய பேட்டர்களான விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ஆல் ரவுண்டரான ஜடேஜா ஆகியோர் 2024-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையுடன் தங்களது ஓய்வு முடிவை அறிவித்தனர்.
விராட் கோலி இந்திய அணிக்காக 125 டி20 போட்டிகளில் விளையாடி 1 சதம் 38 அரைசதம் விளாசியுள்ளார். ரோகித் சர்மா 159 டி20 போட்டிகளில் விளையாடி 5 சதம் 32 அரைசதம் விளாசியுள்ளார். ஜடேஜா 74 டி20 போட்டிகளில் விளையாடி 54 விக்கெட்டும் 515 ரன்களும் எடுத்துள்ளார்.
ஜேம்ஸ் ஆண்டர்சன்

இங்கிலாந்து அணியின் மிகவும் வயதான வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன்(42). இவர் 2009-ல் டி20யிலும் 2015 ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வந்த இவர் இவர் இந்த ஆண்டு மே மாதம் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். டெஸ்ட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இவர் 3-வது இடத்தில் உள்ளார்.
இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட்டில் 704 விக்கெட்டும் ஒருநாள் போட்டியில் 269 விக்கெட்டும் டி20 18 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.
ஷிகர் தவான்

இந்திய அணியின் தொடங்க வீரர் ஷிகர் தவான். இடதுகை பேட்டரான இவர் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அனைத்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்தார்.
இவர் 2013-ம் ஆண்டு இந்திய அணி ஐசிசி சாம்பியன் டிராபியை வெல்ல உதவினார். அந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் ஷிகர் தவான் ஆவார். இதுமட்டுமல்லாமல் 2014 ஆசிய கோப்பை, 2015 உலகக் கோப்பை, 2017 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய தொடர்களில் இந்தியாவின் அதிக ரன்கள் குவித்த வீரர் ஷிகர் தவான்.
இந்திய அணிக்காக 34 டெஸ்ட் (2315 ரன்கள்), 167 ஒருநாள் போட்டி (6793 ரன்கள்), 68 டி20 போட்டிகளில் (1759 ரன்கள்) விளையாடி உள்ளார். மொத்தமாக 24 சதம், 55 அரை சதம் விளாசியுள்ளார்.
இவர் 2022-ம் ஆண்டு கடைசியாக இந்திய அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடதக்கது.
டேவிட் மலான்

ஐசிசி தரவரிசையின் முன்னாள் நம்பர் ஒன் டி20 பேட்டர் இங்கிலாந்து அணியை சேர்ந்த டேவிட் மலான். இவர் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அனைத்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு அணிக்காக மூன்று வடிவிலான போட்டிகளிலும் சதம் அடித்த வீரர்களில் (ஜாஸ் பட்லர்) இவரும் ஒருவர். இவர் இங்கிலாந்து அணிக்காக மொத்தமாக 8 சதம், 32 அரை சதம் விளாசியுள்ளார்.
மொயின் அலி

இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி. இவர் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். 37 வயதான அலி கடைசியாக வெற்றி பெற்ற இரண்டு ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியில் இடம் பெற்றிருந்தார். 2019-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2022-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் முக்கியமான வீரராக இருந்தவர்.
இவர் இங்கிலாந்து அணிக்காக மொத்தமாக 6678 ரன்கள் குவித்துள்ளார். இதில் 8 சதம் விளாசியுள்ளார். 366 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.
ஷகிப் அல் ஹசன்

வங்கதேச அணியின் முன்னாள் கேப்டனும் ஆல்ரவுண்டருமான ஷகிப் அல் ஹசன், டெஸ்ட் மற்றும் டி20 போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். ஒருநாள் போட்டியில் மட்டும் தொடர்ந்து விளையாடுவதாக தெரிவித்தார்.
டி20-யில் 13 அரைசதம் உள்பட 2251 ரன்களும் 149 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட்டில் 4000 ரன்களும் 240 விக்கெட்டும் இவர் வீழ்த்தியுள்ளார்.
மஹ்முதுல்லாஹ்

வங்கதேச அணியின் ஆல் ரவுண்டர் மஹ்முதுல்லாஹ். இவர் 2021-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாடி வந்த இவர் இந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருடன் ஓய்வை அறிவித்தார். வங்கதேச அணியில் டி20 போட்டிகள் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இவர் 2-வது இடத்தில் உள்ளார். இவர் 141 டி20 போட்டிகளில் விளையாடி 2443 ரன்களும் 40 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டியில் இன்னும் ஓய்வை அறிவிக்காமல் உள்ளார்.
மேத்யூ வேட்

ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் மேத்யூ வேட். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2011-ல் அறிமுகமான வேட், ஆஸ்திரேலியாவுக்காக 36 டெஸ்ட், 97 ஒருநாள் மற்றும் 92 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
டெஸ்டில் 1613 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 1867 ரன்களும், டி20-யில் 1202 ரன்களும் எடுத்துள்ளார். 2021-ல் ஆஸ்திரேலியாவின் முதல் ஐசிசி டி20 உலகக் கோப்பை பட்டத்தை வெல்ல இவர் முக்கிய பங்கு வகித்தார். அந்த தொடரின் அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்தார் என்பது குறிப்பிடதக்கது.
விருத்திமான் சகா

இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் விருத்திமான் சகா நவம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2024-25 ரஞ்சி டிராபி சீசனின் முடிவில் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தார்.
சகா 2010 முதல் 2021 வரை 40 டெஸ்ட் மற்றும் ஒன்பது ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடினார். டெஸ்ட்டில் மூன்று சதங்களுடன் 1353 ரன்களை எடுத்தார். ஒருநாள் போட்டிகளில் அவர் பேட்டிங் செய்த ஐந்து போட்டிகளிலும் சேர்ந்து 41 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்தியாவுக்கான அவரது கடைசி போட்டி 2021-ல் நியூசிலாந்திற்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது.
சித்தார்த் கவுல்

இந்திய பந்துவீச்சாளர் சித்தார்த் கவுல். 34 வயதான பஞ்சாப் கிரிக்கெட் வீரர், இந்தியாவிற்கு வெளியே உள்ள மற்ற லீக்குகளிலும், இந்தியாவில் ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்களுக்கான டி20 லீக்குகளிலும் விளையாடுவதற்கு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
கவுல் 2018 முதல் 2019 வரை இந்தியாவுக்காக மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டியில் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாத அவர் டி20-யில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இவர்களை தவிர சௌரப் திவாரி (இந்தியா), வருண் ஆரோன் (இந்தியா), பரிந்தர் ஸ்ரான் (இந்தியா), சித்தார்த் கவுல் (இந்தியா), டேவிட் வைஸ் (தென்னாப்பிரிக்கா), சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் (நெதர்லாந்து), ஷானன் கேப்ரியல் (வெஸ்ட் இண்டீஸ்), வில் புகோவ்ஸ்கி (ஆஸ்திரேலியா), டி20-யில் மட்டும் பிரையன் மசாபா (உகாண்டா) ஆகிய வீரர்களும் இந்த ஆண்டில் ஓய்வை அறிவித்துள்ளனர்.
- முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
- இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஓவல்:
இங்கிலாந்திற்கு எதிராக ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ரோகித் சர்மா 5 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 250 சிக்ஸ்ர்கள் குவித்த முதல் இந்தியர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனை படைத்ததில் சர்வதேச அளவில் முதல் இடத்தில் அப்ரிடி (351சிக்ஸர்), இரண்டாவது இடத்தில் கிறிஸ் கெயில் (331சிக்ஸர்), 3வது இடத்தில் ஜெயசூர்யா (270 சிக்ஸர்) உள்ளனர். ரோகித் சர்மாவுக்கு 4வது இடம் கிடைத்துள்ளது.
நேற்றைய போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதி விரைவாக 150 விக்கெட்களை கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். மொத்தம் 80 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஷமி 150 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார்.
இதற்கு முன்னர் இந்திய வீரர் அஜித் அகர்கர் 97 போட்டிகளில் விளையாடி 150 ஒருநாள் விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். சர்வதேச அளவில் அதி விரைவாக 150 விக்கெட்களை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்ஸ் மற்றும் பாகிஸ்தானின் சக்லைன் முஷ்டாக் ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.
இனிடையே நேற்றைய போட்டியில் 7.2 ஓவர் வீசிய இந்திய வேகபந்து வீச்சாளர் பும்ரா 19 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றி இருந்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தின் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.