என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rotten Fish"

    • வேளாங்கண்ணி கடற்கரை ஓரங்களில் தரமற்ற அழுகிய மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு வந்த ரகசிய தகவலின் பேரில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • நீண்ட நாட்களான பழைய மீன்கள் மற்றும் கலர் அதிகம் சேர்த்து பார்வைக்கு மற்றும் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவ ட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற புனித ஆரோ க்கிய மாதா பேராலயத்திற்கு தினம்தோறும் ஆயிரக்க ணக்கான மக்கள்வந்து செல்கின்றனர். வேளா ங்கண்ணி பேருந்து நிலையம் மற்றும் வேளாங்கண்ணி கடற்கரை ஓரங்களில் ஏராளமான வறுவல் மீன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    இங்கு தரமற்ற அழுகிய உபயோகத்திற்கு பயன்படுத்த முடியாத மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு வந்த ரகசிய புகாரைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் வேளாங்கண்ணி பஸ் நிலையத்தில் இருந்து வேளாங்கண்ணி கடற்கரை வரை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆய்வில் கடைகளில் விற்பனை செய்யப்படும் மீன்கள் அழுகி நீண்ட நாட்கள் ஆன பழைய மீன்கள் மற்றும் கலர் அதிகம் சேர்த்து பார்வைக்கு மற்றும் குளிர்சாதன பெட்டியில் 10க்கும் மேற்பட்ட கடைகளில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து தரமற்ற சுமார் 100 கிலோ மீன்கள் மற்றும் இறைச்சிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த கடைகளுக்கு சீர் வைத்தனர். மேலும் கடை ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் ஒரு லட்சம் அபராதம் விதித்து உரிமையாளர்களை எச்சரி த்தனர். வேளாங்கண்ணியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் திடீர் ஆய்வால் பரபரப்பு ஏற்பட்டது.

    • மீன் சந்தைக்கு கெட்டுபோன மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 3 லாரிகளில் வந்த 9600 கிலோ மீன்கள் கெட்டுபோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்து வந்தாலும் பறவை காய்ச்சல் மற்றும் புதிய வகை நோரோ வைரஸ் காய்ச்சல் ஆகியவை பரவி வருகிறது.

    நோரோ வைரஸ், அசுத்தமான தண்ணீர் மூலம் பரவுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், கெட்டு போன உணவு வகைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.

    இதற்காக மாநிலம் முழுவதும் சுகாதார துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் திருவனந்தபுரத்தை அடுத்த அஞ்சுதெங்கு பகுதியில் உள்ள மீன் சந்தைக்கு கெட்டுபோன மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மீன் மார்க்கெட்டுக்கு அதிரடியாக சென்றனர். அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மீன்களை அவர்கள் சோதனை செய்தனர்.

    அதிகாரிகளின் சோதனையில் மார்க்கெட்டில் இருந்த சுமார் 10 டன் மீன்கள் அழுகிய நிலையில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவை அனைத்தையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை உடனடியாக அழித்தனர்.

    இதுபற்றி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறும்போது, அஞ்சு தெங்கு பகுதியில் உள்ள மார்க்கெட்டுக்கு வெளியூரில் இருந்து மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதில் 3 லாரிகளில் வந்த 9600 கிலோ மீன்கள் கெட்டுபோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பெரிய குழி தோண்டி கொட்டி மீன்கள் அனைத்தும் அழிக்கப்பட்டது, என்றார்.

    ×