என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RTO"

    • கிராம அலுவலர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
    • திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. அபிநயா தலைமையில் இந்த கலந்தாய்வு நடந்தது.

    திருமங்கலம்

    திருமங்கலம் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட திருமங்கலம், திருப்பரங்குன்றம் மற்றும் கள்ளிக்குடி தாலுகாக்களை சேர்ந்த கிராமநிர்வாக அலுவலகர்களுக்கான பணிமாறுதலுக்கான கலந்தாய்வு நடந்தது.

    திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. அபிநயா தலைமையில் இந்த கலந்தாய்வு நடந்தது. ஏ பிரிவு கிராமத்தில் ஓராண்டு பணிபுரிந்த வி.ஏ.ஓ.க்கள், பி பிரிவு கிராமத்தில் 3 ஆண்டுகள் பணிபுரிந்த வி.ஏ.ஓ.க்கள் இதில் கலந்து கொண்டனர். திருமங்கலம் தாலுகாவிற்குட்பட்ட பணிமாறுதல் செய்யப்பட்ட வி.ஏ.ஓ.க்கள் விவரம் வருமாறு:-

    காங்கேயநத்தம் கிராமத்தை சேர்ந்த வி.ஏ.ஓ. ரமேஷ் அங்கிருந்து வடகரைக்கு பணிமாறுதல் பெற்றார். வடகரை வி.ஏ.ஓ. சுகுமார், திரளி பிட் 1 வி.ஏ.ஓ.வாக மாற்றப்பட்டார். மைக்குடி வி.ஏ.ஓ. ராஜா திருமங்கலம் நகருக்கும், திருமங்கலம் பாலமுருகன், மைக்குடி வி.ஏ.ஓ.வாகவும் பணிமாறுதல் பெற்றனர்.

    கரடிக்கல் சேகரன், குன்னனம்பட்டிக்கும் அங்கிருந்த பூமாரி கரடிக்கல் வி.ஏ.ஓ.வாகவும் பணிமாறுதல் பெற்றனர். திரளி பிட் 1 ரவிச்சந்திரன், கிண்ணி மங்கலத்துக்கு வி.ஏ.ஓ.வாக பணிமாறுதல் பெற்றார்.

    கள்ளிக்குடி தாலுகாவில் தூம்பகுளம் முருகேசன், குராயூர் பிட் 1 வி.ஏ.ஓ.வாக செல்கிறார். குராயூர் பிட் 1 வைரன் இடையநத்தம் வி.ஏ.ஓ.வாக மாறியுள்ளார். இடையநத்தம் அருணோதயா, மருதங்குடி வி.ஏ.ஓ.வாக சென்றுள்ளார்.

    திருப்பரங்குன்றம் தாலுகா முல்லாகுளம் சக்திவேலு, மேலநெடுங்குளம் வி.ஏ.ஓ.வாகவும், மேலநெடுங்குளம் தமிழரசி முல்லாகுளம் வி.ஏ.ஓ.வாகவும் பணிமாறுதலாகி சென்றனர். 

    லஞ்ச வழக்கில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கியின் 6-வது லாக்கரை லஞ்ச ஒழிப்பு போலீசார் திறந்து சோதனை செய்தனர். #RTO #DVACRaid

    கடலூர்:

    கடலூர் செம்மண்டலம் தவுலத் நகர் பகுதியை சேர்ந்த பாபு (வயது 55). விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

    கடந்த 11-ந் தேதி சுற்றுலா வேனுக்கு தகுதி சான்றிதழ் வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது விழுப்புரம் லஞ்சஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த புரோக்கர் செந்தில்குமார் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேரும் சிலையில் அடைக்கப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து கடலூரில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவின் வீட்டில் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில் ரூ.30 லட்சம், தங்கநகைகள் மற்றும் வெள்ளி நகைகளை கைப்பற்றினர்.

    பாபுவின் வங்கி லாக்கர்களில் தங்க நகைகள் மற்றும் ஆவணங்கள் மறைத்து வைத்திருக்கலாம் என லஞ்ச ஒழிப்பு போலீசார் கருதினர். அதனைத் தொடர்ந்து கடந்த 19-ந் தேதி கடலூர் மஞ்சக்குப்பம் மற்றும் பாரதி சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பாபுவின் பெயரில் உள்ள 3 வங்கி லாக்கர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் திறந்து சோதனையிட்டனர்.

    அதில் 10 கிலோ தங்க நகைகள், 20 கிலோ வெள்ளி பொருட்கள்இருந்தன. பின்பு அவற்றை மதிப்பீடு செய்து மீண்டும் லாக்கர்களில் வைத்து பூட்டி சீல் வைத்தனர்.

    இந்த நிலையில் விழுப்புரம் லஞ்சஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் போலீசார் 2-வது முறையாக கடலூர் செம்மண்டலத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்றனர். பின்பு அங்கு பாபுவின் பெயரில் இருந்த 2 லாக்கர்களை திறந்து சோதனை செய்தார்கள். அதில் 500 கிராம் தங்க நகைகள் பலகோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் இருந்தன.

    இதையடுத்து நகை மதிப்பீட்டாளரை வரவழைத்து நகைகள் மதிப்பிடப்பட்டன. பின்பு நகைகளும், சொத்து ஆவணங்களும் லாக்கரில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    கடலூர் மஞ்சக்குப்பம் விநாயகர் கோவில் அருகே உள்ள தனியார் வங்கியிலும் பாபுவின் பெயரில் லாக்கர் உள்ளது. அந்த லாக்கரிலும் கோடிக்கணக்கான நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

    இன்று காலை விழுப்புரம் லஞ்சஒழிப்பு போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் 4 போலீசார் கடலூர் வந்தனர். பின்பு அவர்கள் அந்த வங்கிக்கு சென்று பாபுவின் பெயரில் உள்ள 6-வது லாக்கரை திறந்து சோதனை செய்தனர். அதிலும் தங்க நகைகளும், ஏராளமான சொத்துக்களின் ஆவணங்களும் இருந்தன.

    இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் 2 ஆயிரம் பவுன் தங்க நகைகள், வெள்ளி நகைகள் இருப்பது தெரியவந்தது. மேலும் பாபுவின் பெயரில் கோடிக் கணக்கான சொத்துக்கள் கடலூர், சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருப்பது தெரிய வந்துள்ளது. கடலூரில் 6 இடங்களில் வீடுகள் உள்ளன.

    மேலும் அவர் பினாமி பெயரிலும் சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. #RTO #DVACRaid

    லஞ்ச வழக்கில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் மேலும் 3 லாக்கர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் திறந்து சோதனை செய்தனர். #RTO #DVACRaid

    விழுப்புரம்:

    கடலூர் செம்மண்டலம் தவுலத் நகரை சேர்ந்தவர் பாபு (வயது55). இவர் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி அருகே உள்ள கூத்தக்குடியை சேர்ந்த ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் முத்துக் குமாரின் சுற்றுலா வேனுக்கு தகுதி சான்றிதழ் வழங்க மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.

    அவருக்கு உடந்தையாக இருந்த அவரது உதவியாளர் செந்தில்குமாரும் கைது செய்யப்பட்டார்.

    இதையடுத்து மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு வசித்து வந்த கடலூர் செம்மண்டலம் தவுலத் நகரில் உள்ள வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது, அவரது வீட்டில் இருந்து ரூ.30 லட்சம் ரொக்கம், 200 பவுன் தங்க நகைகள், 15 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பல்வேறு சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

    பாபுவின் 21 வங்கி கணக்குகளையும், 6 லாக்கர்களையும் வங்கி அதிகாரிகள் மூலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் முடக்கினர். இதேபோல் அவரது உதவியாளர் செந்தில் குமாரின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன.

    இந்த நிலையில் வங்கிகளில் பாபு வைத்துள்ள லாக்கர்களை திறந்து ஆய்வு செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர். இதையொட்டி விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் மற்றும் போலீசார் கடந்த 19-ந் தேதி திடீரென்று கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்த லாக்கரை திறந்தனர்.

    அதில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இருந்தன. அதன் பின்பு அவர்கள் கட லூர் பாரதி சாலையில் உள்ள மற்றொரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்று அங்கு பாபு பெயரில் இருந்த 2 லாக்கர்களையும் திறந்தனர். அதிலும் தங்க நகைகளும், வெள்ளி நகைகளும் அதிகமாக இருந்தன.

    மொத்தம் 3 லாக்கர்களிலும் 11 கிலோ தங்கம், 20 கிலோ வெள்ளி நகைகள் இருந்தன. ஆய்வு செய்த பின்னர் அந்த நகைகளை மீண்டும் அதே லாக்கர்களில் வைத்து பூட்டி சீல் வைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் பாபு பெயரில் கடலூர் செம்மண்டத்தில் உள்ள ஒரு அரசு வங்கியில் மேலும் 3 லாக்கர்கள் இருப்பது தெரியவந்தது. அந்த லாக்கர்களிலும் தங்க நகைகளும், வெள்ளி பொருட்களும் இருக்கலாம் என போலீசார் கருதினர்.

    இந்த நிலையில் இன்று காலை செம்மண்டலத்தில் உள்ள அந்த வங்கிக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்றனர். அங்கு பாபு பெயரில் இருந்த 3 லாக்கர்களையும் திறந்தனர். அதிலும் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் இருந்ததாக தெரிகிறது. போலீசார் தொடர்ந்து அந்த லாக்கர்களில் எவ்வளவு நகைகள் உள்ளது என்று மதிப்பீடு செய்து வருகின்றனர். #RTO #DVACRaid

    கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றும் பாபு, லஞ்சம் வாங்கியதாக கைதான நிலையில் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கட்டுக்கட்டாக பணம், நகை கைப்பற்றப்பட்டுள்ளது. #RTO #DVACRaid
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வரும் பாபு என்பவர் வாகன தரச்சான்றிதல் வழங்க லஞ்சம் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து, செம்மண்டலத்தில் உள்ள அவரது வீட்டில் போலீசார் இன்று சோதனை நடத்தினர்.

    அப்போது, அவரது வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டன. கையாள் எண்ண முடியாததால் பணம் எண்ணும் இயந்திரம் கொண்டு வரப்பட்டு எண்ணப்பட்டது. ரூ.35 லட்சம் பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 
    48 மாணவர்கள் பஸ்சில் இருக்க சாலையில் ஆர்டிஓ அதிகாரிகள் நிற்பதை கண்ட டிரைவர், பஸ்ஸை நடுரோட்டில் நிறுத்திவிட்டு ஓட்டமெடுத்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள நாதபுரம் என்ற பகுதியில் கடந்த வாரம் 48 பள்ளி மாணவர்கள் சென்ற பஸ்சின் டிரைவர் சாலை ஓரம், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நிற்பதை கண்டுள்ளார். உடனே, பஸ்சை நிறுத்தி விட்டு மாணவர்களை அப்படியே தவிக்க விட்டு அங்கிருந்து ஓட்டமெடுத்துள்ளார்.

    இதனை அடுத்து, பேருந்தில் இருந்த மாணவர்களை ஆர்டிஓ அதிகாரிகள் வீட்டுக்கு கொண்டு போய் சேர்த்துவிட்டு பஸ்சை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பள்ளி நிர்வாகிகள் வந்து பேசிப்பார்த்தும், டிரைவர் வந்தால்தான் பஸ்சை திருப்பி ஒப்படைக்க முடியும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    17 பேர் செல்லக்கூடிய சிறிய பஸ்சில் 48 மாணவர்கள் இருந்துள்ளனர். இதனால், அதிகாரிகளை கண்டு பயந்த அந்த டிரைவர் பஸ்சை நிறுத்திவிட்டு ஓடியதாக தெரியவந்துள்ளது. 
    தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுலவகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவிட்டுள்ளது. #RTO #TransportDept #MadrasHC
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார அலுவலகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் எனவும், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தங்களது சொத்து கணக்குகளை போக்குவரத்து துறை செயலாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    ×