என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SachinTendulkar"

    • கழுத்தில் பேட்டைப் பிடித்து கிரிக்கெட் விளையாடிய அமீரின் வீடியோ அண்மையில் வைரலானது
    • காஷ்மீர் சென்றுள்ள சச்சின் டெண்டுல்கர், அமீரை சந்தித்துப் பேசி, பேட் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

    2 கைகளையும் இழந்த ஜம்மு காஷ்மீர் பாரா கிரிக்கெட் அணியின் கேப்டன் அமீர் ஹூசைனை இன்று சச்சின் டெண்டுல்கர் நேரில் சந்தித்து பேசினார்.

    கழுத்தில் பேட்டைப் பிடித்து கிரிக்கெட் விளையாடிய அமீரின் வீடியோ அண்மையில் வைரலானபோது, அவரைப் பாராட்டி X தளத்தில் பதிவிட்டிருந்தார் சச்சின்.

    பேட்டி ஒன்றில் சச்சினை சந்திக்க ஆசை என கூறியிருந்தார் அமீர். அதனை நிறைவேற்றும் விதமாக, காஷ்மீர் சென்றுள்ள சச்சின் டெண்டுல்கர், அமீரை சந்தித்துப் பேசி, பேட் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

    • வீரர் ஒருவர் தொடர்ந்து விளையாட வேண்டுமா என்பது தேர்வுக்குழு உறுப்பினர்களின் முடிவுகளிலும் உள்ளது.
    • ரோகித் சர்மா எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை அவரே முடிவு செய்வார்.

    மும்பை:

    இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா நெருக்கடியில் இருக்கிறார். ஆஸ்திரேலிய பயணத்தில் 6 இன்னிங்சில் வெறும் 31 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதேபோல விராட் கோலியின் பேட்டிங்கும் மோசமாக இருந்தது.

    இதனால், முன்னாள் வீரர்கள் பலரும் மூத்த வீரர்களை கடுமையாக விமர்சித்தனர். மூத்த வீரர்கள் ஓய்வு முடிவை அறிவித்து, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற விமர்சனங்களும் எழுந்தன.

    இந்த நிலையில் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை ரோகித் சர்மாவே முடிவு செய்வார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சச்சின் டெண்டுல்கர் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை அவர் முடிவு செய்ததாக நம்புகிறேன். அது போன்று ரோகித் சர்மா எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை அவரே முடிவு செய்வார். ஓய்வு என்பது ஒருவரது தனிப்பட்ட முடிவாகும்.

    சர்வதேச கிரிக்கெட்டில் எவ்வளவு காலம் விளையாட வேண்டும், அணிக்காக எந்த அளவுக்கு தனது பங்களிப்பை வழங்க வேண்டும் என்பது எல்லாம் சம்பந்தப்பட்ட வீரரின் தனிப்பட்ட முடிவை பொறுத்து அமையும். தேர்வுக் குழு உறுப்பினர்களின் கைகளில் இறுதி முடிவு உள்ளது என்பதே உண்மை. வீரர் ஒருவர் தொடர்ந்து விளையாட வேண்டுமா என்பது தேர்வுக்குழு உறுப்பினர்களின் முடிவுகளிலும் உள்ளது.

    இவ்வாறு மஞ்ச்ரேக்கர் கூறினார்.

    • இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
    • இந்தியா, இங்கிலாந்து இடையிலான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது.

    புதுடெல்லி:

    இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி அசத்தியது.

    இதையடுத்து, இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது. ஒருநாள் போட்டிகள் நாக்பூர், கட்டாக், அகமதாபாத்தில் நடைபெற உள்ளன.

    ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ரோர் அணிக்கு திரும்பி உள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், இந்தத் தொடரில் ரோகித் சர்மா மேற்கொண்டு 134 ரன்கள் எடுத்தால் சச்சினின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடிக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

    இந்தத் தொடரில் ரோகித் சர்மா இன்னும் 134 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை விட விரைவாக 11,000 ரன்களை அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்துவார். சச்சின் டெண்டுல்கர் 276வது இன்னிங்சில் 11 ஆயிரம் ரன்களை கடந்திருந்தார்.

    ரோகித் சர்மா தற்போது 257 இன்னிங்ஸ்கள் விளையாடி, 10,866 ரன்களை குவித்துள்ளார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் அவர் 134 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார்.

    இந்தப் பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி தனது 222-வது இன்னிங்சில் அந்த சாதனையை நிகழ்த்தி நம்பர் ஒன் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தன் வீட்டு பால்கனிக்கு காயமடைந்த நிலையில் வந்த பருந்தை பாதுகாத்து உணவளித்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. #SachinTendulkar
    மும்பை:

    இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் சச்சின் வீட்டு பால்கனியில் பருந்து ஒன்று அடிப்பட்ட நிலையில் வந்தது. காயமடைந்து இருந்ததால் அதனால் பறக்க முடியவில்லை. இதையடுத்து சச்சின் அந்த பருந்துக்கு உணவு அளித்து பத்திரமாக பார்த்துக்கொண்டார்.

    பின்னர் பருந்து குறித்து விலங்குகள் மீட்புக்குழுவிற்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் பறவையை மீட்டு கொண்டு சென்றனர். அந்த வீடியோவுடன் காயமடைந்த பறவைகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மும்பையைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த நிபுணர்களுடன் சச்சின் கலந்தாலோசிக்கிறார். மேலும், இது போன்று விலங்குகளை பாதுகாக்க வேண்டும் என தனது ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

    சச்சின் பதிவு செய்த இந்த வீடியோவை 54 ஆயிரம் மக்கள் கண்டு ரசித்துள்ளனர். ஏராளமானோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர். சச்சின் அனைவருக்கும் முன்னுதாரணமாக விளங்குவதாக பலர் கூறினர். #SachinTendulkar

    முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சக்கரநாற்காலி கிரிக்கெட் அணிக்கு 4 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.#SachinTendulkar #wheelchaircricketteam
    புதுடெல்லி:

    இந்திய சக்கரநாற்காலி கிரிக்கெட் அணியின் தலைமை செயலாளர்  பிரதீப் ராஜ் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அணிக்கு 4 லட்சம் ரூபாய் பேட்டியளித்தாக தெரிவித்தார்.

    சக்கரநாற்காலி கிரிக்கெட் அணிக்கு  பொருளாதார ரீதியாக உதவி தேவைப்படுவதாக சச்சினுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சச்சின் டெண்டுகல்கரின் அலுவலக அதிகாரிகள் சில கேள்விகள் கேட்டனர். அடுத்த மூன்று நாட்களில் 4.39 லட்சம் ரூபாயை சச்சின் நன்கொடையாக வழங்கினார்.

    சச்சின் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த பிரதீப், ஆசிய கோப்பை போட்டியில் சக்கரநாற்காலி அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறும் என தெரிவித்தார். #SachinTendulkar  #wheelchaircricketteam

     
    ×