என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "salem news"

    • பால் கொள்முதல் விலையை ரூ.10 உயர்த்த வேண்டும் என்று விவசாய சங்கத்தினர் சேலம் கலெக்டரிடம் இன்று மனு கொடுத்தனர்.
    • பால் விலையை லிட்டருக்கு ரூ. 10 உயர்த்தி தர பரிசீலனை செய்யுமாறு தமிழக கால்நடை வளர்ப்போர் சங்கம் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.

    சேலம்:

    தமிழக இயற்கை விவ சாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் இன்று காலை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    கடந்த 3 ஆண்டாக பருத்திக் கொட்டை, புண்ணாக்கு, தவிடு போன்ற பொருட்கள் கடுமையான விலை ஏற்றம் அடைந்து உள்ளது. ஆட்கள் கூலியும் அதிகரித்து உள்ளதால், பால் கொள்முதல் விலையை உயர்த்த பால் உற்பத் தியாளர்கள், விவசாய சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.

    ஆனால் லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி உள்ளது வருத்தம் அளிக்கிறது. எனவே பால் உற்பத்தியாளர் சங்கங்கள், விவசாய சங்கங்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தி, பால் விலையை லிட்டருக்கு ரூ. 10 உயர்த்தி தர பரிசீலனை செய்யுமாறு தமிழக கால்நடை வளர்ப்போர் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்து உள்ளனர். 

    • ஏற்காட்டில் ஒரு பெண்ணுக்கு ஆம்புலன்சில் குழந்தை பிறந்தது.
    • ஆம்புலன்சை சாலையின் ஓரமாக நிறுத்திய ஊழியர்கள், பெண்ணுக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 25). கூலி தொழிலாளி. இவரது மனைவி நந்தினி (20). நிறைமாத கர்ப்பிணியான நந்தினிக்கு இன்று அதிகாலை 1 மணி அளவில் பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஏற்காடு அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் பணியில் இருந்த சிகாமணி மற்றும் ஓட்டுநர் ஆசைத்தம்பி ஆகியோர் வந்து நந்தினியை வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் ஆத்து பாலம் அருகே ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது நந்தினிக்கு பிரசவ வலி அதிகமானது. அதை தொடர்ந்து ஆம்புலன்சை சாலையின் ஓரமாக நிறுத்திய ஊழியர்கள், நந்தினிக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தனர்.

    இதையடுத்து 1.30 மணி அளவில் நந்தினிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக நந்தினி, குழந்தையை சேலம் அரசு மருத்துவமனை கொண்டு வந்து சேர்த்தனர். குறித்த நேரத்தில் பிரசவம் பார்த்து தாயையும், சேயையும் காப்பாற்றிய ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர் சிகாமணி மற்றும் ஓட்டுநர் ஆசைத்தம்பி ஆகியோருக்கு நந்தினியின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

    • விவசாயிகள் கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய சேலம் கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளர்.
    • காப்பீடு திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக ஒரு குடும்பத்துக்கு 5 பசு, எருமைகளுக்குக் காப்பீடு செய்து கொள்ளலாம்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கால்நடை காப்பீடு செய்ய 3,600 குறியீடு நிா்ணயம் செய்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.35 ஆயிரம் வரை மானியத்துடன் காப்பீடு செய்து கொள்ளலாம். வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவா்களுக்கு ரூ. 50 மானியத்திலும், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவா்கள், தாழ்த்தப்பட்டவா் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.70 மானியத்திலும் காப்பீடு செய்யப்படும்.

    இத் திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக ஒரு குடும்பத்துக்கு 5 பசு, எருமைகளுக்குக் காப்பீடு செய்து கொள்ளலாம். இத் திட்டத்தில் இரண்டரை வயது முதல் 8 வயது உடைய பசு மற்றும் எருமைகளுக்கும் மற்றும் 1 முதல் 3 வயதுடைய வெள்ளாடு, செம்மறி ஆடுகளுக்கும் காப்பீடு செய்து கொள்ளலாம்.

    ஓராண்டு காப்பீடு கட்டணமாக அதிகபட்சமாக கால்நடையின் மதிப்பில் 2 சதவீதமும், மூன்றாண்டு காப்பீடு கட்டணமாக அதிகபட்சமாக கால்நடையின் மதிப்பில் 5 சதவீதமும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ரூ. 35, 000-க்கு மேல் காப்பீடு செய்யப்படும் கால்நடைகளுக்கு அதிகப்படியான மதிப்பிற்கான காப்பீடு கட்டணத்தை கால்நடை உரிமையாளரே செலுத்த வேண்டும். காப்பீடு செய்ய விரும்பும் கால்நடை வளா்ப்போா் அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தினை அணுகி பயன்பெறலாம் என சேலம் கலெக்டர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சேலத்தில் குரூப்-1 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு நடைபெறுகிறது.
    • இலவச மாதிரி தேர்வு வருகிற 13-ந் தேதி அன்று ஏற்காடு அடிவாரம் பகுதியில் அமைந்துள்ள விநாயகா மிஷன் மருந்தியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணை யத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-1-ல் அடங்கிய பணிகளுக்கான தேர்வு வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது.

    இதையொட்டி சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக இலவச மாதிரி தேர்வு வருகிற 13-ந் தேதி அன்று ஏற்காடு அடிவாரம் பகுதியில் அமைந்துள்ள விநாயகா மிஷன் மருந்தியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இத்தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.

    மேலும் தேர்வு நாளன்று தேர்வு நடைபெறும் வளாகத்தில் காலை 8 மணி முதல் 9 மணிக்குள் தேர்விற்கு விண்ணப்பித்த நகல் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும். காலை 9 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். சேலம் மாவட்டத்தை குரூப்-1 தேர்வுக்கு தயாராகும் தகுதிவாய்ந்த தேர்வர்கள் இந்த மாதிரித்தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • கடும் குளிர் காலநிலையிலும் பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
    • சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் பூக்கள் விற்பனைக்கும் ஏற்றுமதிக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    அன்னதானப்பட்டி:

    சேலம் பூ மார்க்கெட்டுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அதே போல் சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் பூக்கள் விற்பனைக்கும் ஏற்றுமதிக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    கடந்த மாதம் ரூ.1200 வரை என விற்கப்பட்டு வந்த மல்லி இன்று கிலோவுக்கு ரூ.600 வரை விலை குறைந்து ரூ.600 என விற்கப்பட்டு வருகிறது. அதே போல ரூ.600 க்கு விற்ற முல்லை ரூ.200வரை விலை குறைந்து இன்று ரூ.400 என விற்கப்படுகிறது. மற்ற ரக பூக்களின் விலையும் கணிசமாக சரிந்துள்ளது.

    சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை நிலவரம் (1 கிலோவுக்கு) வருமாறு :-

    மல்லிகை- ரூ.600, முல்லை- ரூ.400, ஜாதி மல்லி- ரூ.280, காக்கட்டான்- ரூ.200, கலர் காக்கட்டான் - ரூ.200, சி.நந்தியா வட்டம் - ரூ.180, சம்மங்கி- ரூ.15, சாதா சம்மங்கி- ரூ.30, அரளி- ரூ.150, வெள்ளை அரளி- ரூ.150, மஞ்சள் அரளி- ரூ.150, செவ்வரளி- ரூ.180, ஐ.செவ்வரளி- ரூ.180, நந்தியா வட்டம்- ரூ.180. தற்போது ஐப்பசி மாத நிலவரப்படி குளிர் காலநிலை நிலவுகிறது.

    வருகிற கார்த்திகை, மார்கழி மாதங்களில் கடும் குளிர் காலநிலை நிலவும். அதற்கடுத்து தை மாதம் பொங்கல் பண்டிகை வரை பூக்கள் விற்பனை சீசன் நன்றாக இருக்கும் என வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர்.

    • சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த நாட்டாமங்கலம் பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் இரவு வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பி வரவில்லை.
    • நாட்டமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள மழைநீர் வடிகால் ஓடையில் பிணமாக கிடந்தார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த நாட்டமங்கலம் பகுதியை சேர்ந்த செங்கோட்டையன்.

    இருசக்கர வாகனம் மெக்கானிக்கான இவருக்கு திருமணம் ஆகி அம்பிகா என்று மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் நாட்டமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள மழைநீர் வடிகால் ஓடையில் இன்று காலை செங்கோட்டையன் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து மேட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மேட்டூர் போலீசார் செங்கோட்டையனின் உடலை மீட்டு, மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், செங்கோட்டையன் எவ்வாறு இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு பஸ்களில் டிஜிட்டல் பெயர் பலகை இல்லாததால் 20 கண்டக்டர்களுக்கு மெமோ கொடுத்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
    • ஓமலூர், வாழப்பாடி, எருமாபாளையம், ராசிபுரம், பணிமனை பஸ்களில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    சேலம்:

    சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழக வணிக பிரிவு மேலாளர் செல்வகுமார் தலைமையில் பயண சீட்டு பரிசோதகர்கள் கடந்த 12-ந்தேதி காலை 5.30 மணிக்கு சேலம் புதிய பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

    இதில் ஓமலூர், வாழப்பாடி, எருமாபாளையம், ராசிபுரம், பணிமனை பஸ்களில் ஆய்வு செய்யப்பட்டது.

    இந்த ஆய்வில் பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டவில்லை. மழை நீர் ஒழுகுகிறது. டிஜிட்டல் போர் பிட்டிங் செய்யவில்லை. வழிதட எண், ஊர் பெயர் கையால் எழுதப்பட்டுள்ளது உள்ளிட்ட குறைகள் கண்டறியப்பட்டது. இது தொடர்பாக 20 பஸ்களின் கண்டக்டர்களுக்கு மெமோ கொடுக்கப்பட்டது.

    அதிகாரிகளின் இந்த நடவடிக்கை டிரைவர்கள், கண்டக்டர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • சேலத்தில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • மாணவியின் தாய் ஓமலூரில் நடந்த உறவினர் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள சென்றிருந்தபோது மாணவி தூக்குபோட்டு கொண்டார்.

    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சி ரம்யா கார்டன் பகுதியை சேர்ந்தவர் சித்தேஸ்வரன். இவரது மகள் சிந்துஜா (வயது 17).

    இவர் பிளஸ்-1 படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தட்டச்சு கற்று வந்தார். சிந்துஜாவின் தாய் நேற்று ஓமலூரில் நடந்த உறவினர் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள சென்றிருந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த சிந்துஜா திடீரென நேற்று இரவு சேலையை கழுத்தில் மாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவலின் பெயரில் கன்னங்குறிச்சி போலீசார் சம்பவத்திற்கு சென்று சிந்துஜாவின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிந்துஜா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் ? என்பது குறித்து போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போலி பாஸ்போர்ட் எடுத்து சிங்கப்பூரில் வேலை பார்த்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    • கைதான வாலிபர் மீது ஆள்மாறாட்டம், போலி பாஸ்போர்ட் என 6 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    சேலம்:

    சேலம் வீரகனூர் அருகே உள்ள வடக்கு ராமநாதபுரத்தை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 46). இவர் அம்மம்பாளையத்தில் உள்ள ஆவினில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது பெயரில் அவரது உறவினரான தெற்கு ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் (37) என்பவர் வீரமுத்து பெயரில் போலியாக பாஸ்போர்ட் 2002-ம் ஆண்டு எடுத்து சிங்கப்பூரில் டிரைவராக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது.

    இது குறித்து வீரமுத்து சேலம் குற்றப்பிரிவு போலீசில் கடந்த ஆண்டு புகார் அளித்தார். அதன் பேரில் டிஎஸ்பி இளமுருகன் மற்றும் போலீசார், ஆள்மாறாட்டம், போலி பாஸ்போர்ட் என 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். மேலும் ராஜேஷ் நாடு திரும்பும் போது தகவல் கொடுக்குமாறு லுக் அவுட் நோட்டீஸ் விமான நிலையத்துக்கு அனுப்பினர்.

    இதையடுத்து ராஜேஷ் நேற்று திருச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் அங்குள்ள அதிகாரிகள் பிடித்து சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.

    அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் எனக்கு 17 வயது என்பதால் பாஸ்போர்ட் எடுக்க முடியாது. எனவே வீரமுத்து ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை திருடி பாஸ்போர்ட் எடுத்ததாக தெரிவித்தார். இதையடுத்து ராஜேசை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சேலத்தில் தடைசெய்யப்பட்ட 103 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    • தடை செய்யப்பட்ட பொருட்–களை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கடைகளில் மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்கள் மற்றும் சேலம் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வில் சுமார் 103 கிலோ எடையுள்ள, தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஒருமுறையே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி தட்டுகள், டம்ளர்கள், ஸ்பூன்கள், உறிஞ்சு குழல்கள் மற்றும் கேரி பேக்குகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    மேலும் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

    இதுபோன்ற ஆய்வுகள் அடிக்கடி மேற்கொள்ளப்படும் எனவும், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இதுபோன்ற ஒருமுறையே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி பொருட்களை உபயோகம் மற்றும் விற்பனை செய்வதை தவிர்க்குமாறும், நெகிழி கேரி பேக்கிற்கு பதிலாக மஞ்சப்பை போன்ற மாற்றுப் பொருட்களை பயன்படுத்துமாறும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தவறும்பட்சத்தில் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

    • சேலத்தில் கடந்த 16-ந் தேதி இளம்பெண் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இளம்பெண்ணின் தற்கொலைக்கு தூண்டிய மாமியார் கைது செய்யப்பட்டார்.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமர்.

    இவரது மனைவி கவிதா (வயது 25). இவர் கடந்த ஏப்ரல் மாதம் 16-ந்தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். விசாரணை அதிகாரி உதவி கமிஷனர் அசோகன் தொடர்ந்து உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்.

    அதில், கவிதா தற்கொலைக்கு அவரது மாமியார் கல்யாணி (52), தொந்தரவு செய்ததே காரணம் என தெரியவந்தது. இதனால் கல்யாணியை நேற்று போலீசார் கைது செய்தனர்.

    • கார்த்திகை மாத அமாவாசையொட்டி சேலத்தில் பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
    • கோவில்கள், வீடுகளில் பூஜைக்காக அதிகளவில் பயன்படுத்துவதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

    அன்னதானப்பட்டி: 

    சேலம் பூ மார்க்கெட்டுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அதே போல் சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இன்று கார்த்திகை மாத அமாவாசையையொட்டி கோவில்களுக்கும், வீடுகளில் சாமிக்கு பூஜைகள் செய்து படைக்கவும் பூக்கள் அதிகளவில் மக்கள் வாங்கிச் சென்றனர். இதன் காரணமாக சேலத்தில் உள்ள பூ , மார்க்கெட்டுகளில் அதிகாலை முதலே பூக்கள் விற்பனை களை கட்டியது.

    சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை நிலவரம் (1 கிலோ கணக்கில்):-

    மல்லிகை - ரூ.1000, முல்லை - ரூ500, ஜாதி மல்லிகை - ரூ.280, காக்கட்டான் - ரூ.280, கலர் காக்கட்டான் - ரூ.240, சி.நந்தியா வட்டம் - ரூ.80, சம்மங்கி - ரூ.50, சாதா சம்மங்கி - ரூ.50, அரளி - ரூ.220, வெள்ளை அரளி - ரூ.220, மஞ்சள் அரளி - ரூ.220, செவ்வரளி - ரூ.240, ஐ.செவ்வரளி - ரூ.240, நந்தியா வட்டம் - ரூ.80, என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டது.

    தொடர்ந்து வருகிற வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமையில் விற்பனை நன்றாக இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ×