என் மலர்
நீங்கள் தேடியது "Sanjay Dutt"
தமிழகம் - புதுவையில் 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (18-ந்தேதி) தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் அன்றைய தினம் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, கமல்ஹாசன் கட்சி, டி.டி.வி.தினகரன் கட்சி, சீமான் கட்சிகளிடையே 5 முனை போட்டி நிலவுகிறது.
கடந்த மார்ச் மாதம் 10-ந் தேதி தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. உடனேயே அனைத்து அரசியல் கட்சியினரும் பிரசாரத்தை தொடங்கினர்.
முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விஜயகாந்தின் மனைவி பிரேமலதா ஆகியோர் அ.தி.மு.க- பா.ஜனதா, கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டனர்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் மட்டும் நேற்று பிரசாரம் செய்தார்.


பிரதமர் நரேந்திரமோடி தேர்தல் பிரசாரத்திற்காக 6 முறை தமிழகம் வந்தார். பா.ஜனதா மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசினார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் தமிழகத்தில் பிரசாரம் செய்தார்.
இப்படி அகில இந்திய தலைவர்களின் தேர்தல் பிரசாரத்தாலும் தமிழக தேர்தல் களத்தில் அனல் பறந்தது.
சுமார் ஒரு மாதமாக தலைவர்கள் சூறாவளி சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு ஆதரவு திரட்டினர். இந்த பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
நாளை (17-ந்தேதி) எந்த தேர்தல் பணியிலும் அரசியல் கட்சியினர் ஈடுபட கூடாது. வாக்காளர்களுக்கு பூத்-சிலிப் கொடுக்கும் பணி நாளை தீவிரமாக நடைபெறும்.
நாளை மறுநாள் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறுவதால் அங்கு மட்டும் இரவு 8 மணி வரை பொதுமக்கள் ஓட்டுப்போடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் 845 வேட்பாளர்களும், சட்ட சபை தொகுதிகளில் 269 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
தேர்தலில் 5.99 கோடி வாக்காளர்கள் ஓட்டுப்போட தகுதியானவர்கள் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 100 சதவீத ஓட்டுப்பதிவு என்கிற இலக்கை எட்டுவோம் என்று மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இன்று மாலை பிரசாரம் முடிவடைந்தவுடன் தொகுதிகளில் தங்கியுள்ள வெளி ஆட்கள் அனைவரும் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்றும், இதை மீறி தங்கி இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
ஓட்டுப்பதிவின்போது அசம்பாவிதங்கள் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 160 கம்பெனி துணை ராணுவப் படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஒரு கம்பெனியில் 100 பேர் வரை இருப்பார்கள். இதன்மூலம் 16 ஆயிரம் துணை ராணுவப் படையினர் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர்.
சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசாரும், 20 கம்பெனி துணை ராணுவப்படையினரும் பாதுகாப்புக்காக குவிக்கப்படுகிறார்கள். #LoksabhaElections2019 #pollcampaign #pollcampaignends #campaignendsinTN


தூத்துக்குடி:
தூத்துக்குடியில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் கலந்துகொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசு மக்களுக்கு எதனையும் செய்யாமல் ஏமாற்றிவிட்டது. பண மதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி,வரி, சிறுதொழில்களை நசுக்குதல், விலைவாசி உயர்வு என மோடி அரசு தொடர்ந்து மக்கள் விரோத அரசாகவே செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் மூலமாக அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் தொழில்நிறுவனங்களே அதிக பலன் பெற்றுள்ளன. மற்ற தொழில்நிறுவனங்கள் எல்லாம் நசுக்கப்பட்டுள்ளன.
தமிழக மீனவர்கள் பாதிக்கப்பட்டபோதும், கஜா புயல் பாதிப்புகள் ஏற்பட்டபோதும் கூட மோடி பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க உடனடியாக வரவில்லை. ஆனால் இப்போது அடிக்கடி வருகிறார்.
ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போது மத்திய அரசு தமிழக வளர்ச்சிக்காக எதனையும் செய்ய முன்வரவில்லை. இதனால் பா.ஜ.க. அரசையே ஜெயலலிதா வெறுத்தார். ஆனால் இன்றுள்ள எடப்பாடி தலைமையிலான அரசு மோடியுடன் தேர்தல் கூட்டணி வைத்துள்ளது. ஏனென்றால் முதல்வர், துணைமுதல்வர், அமைச்சர்கள் என ஒவ்வொருவரும் அதிகளவில் ஊழல்களை அரங்கேற்றி வருகின்றனர். இதற்கு துணையாக மோடியின் உதவி தேவைப்படுவதாலேயே இப்படி பேசி வருகின்றனர். கன்னியாகுமரியில்13-ந் தேதி நடைபெறும் கூட்டம் அரசியல் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார். #Congress #SanjayDutt

சென்னை:
தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு முழுவதும் நான் மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் செய்து வருகிறேன். 50 வருடமாக ஆட்சியில் இல்லாமல் இருந்தும் காங்கிரசுக்கு பலமான அடித்தளம் இருக்கிறது. மக்கள் காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.
மத்தியில் ஆளும் மோடி மீதும், தமிழகத்தில் ஆளும் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்.-க்கு எதிராகவும் அலை வீசுகிறது.
தேர்தல் நேரத்தில் ஊழல் இல்லாத நிர்வாகத்தை தருவேன். வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் தருவேன். பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். பெட்ரோல், டீசல், கியாஸ் விலை கட்டுப்படுத்தப்படும் என்று மோடி அறிவித்தார்.
ஆனால் இவற்றில் எதை யாவது மோடி நிறைவேற்றினாரா? மத்திய பா.ஜனதா ஆட்சியில் 100 சதவீத ஊழல் நடக்கிறது. பெட்ரோல், டீசல், கியாஸ் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. மக்களுக்கு ரூ.15 லட்சம் கொடுப்பேன் என்று சொல்லி விட்டு மக்கள் பணத்தை பல்வேறு வரிகள் மூலம் பிடுங்குகிறார்கள்.
மத்திய மந்திரி எம்.ஜே. அக்பர் பாலியல் புகாரில் சிக்கினார். மோடி எந்த பதிலும் சொல்லாமல் மவுனமாக இருக்கிறார். மக்கள் கிளர்ந்து எழுந்ததால் அக்பர் பதவி விலகினார். உத்தரபிரதேசத்தில் பா. ஜனதா மந்திரிகள் மீதே கற்பழிப்பு வழக்கு உள்ளது. ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
ரபேல் போர் விமானம் வாங்கியதால் நடந்த ஊழல் குறித்து ராகுல்காந்தி விளக்கம் கேட்டு சில மாதங்கள் ஆன பிறகும் மோடி பதில் சொல்லவில்லை. சின்னச்சின்ன விஷயங்களுக்கு எல்லாம் டுவிட்டரில் பதிவு செய்யும் மோடி ஏன் ராகுல் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் மவுனமாக இருக்கிறார்?

மத்தியில் நடைபெறும் ஊழல் அரசை போல் மாநிலத்திலும் ஊழல் அரசு நடக்கிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலை துறை டெண்டர் விவகாரத்தில் உறவினருக்கு விட்டுக் கொடுத்ததாக குற்றச்சாட்டு உள்ளது. ஐகோர்ட்டு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
விசாரணை முடியும் வரை முதல்-அமைச்சர் பதவி விலக வேண்டும் ஓ.பி.எஸ்., விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள் மீதும் ஊழல் புகார்கள் உள்ளன. இவற்றை கோர்ட்டு நேரடி கண்காணிப்பில் தனி விசாரணை குழு அமைத்து விசாரிக்க வேண்டும்.
தமிழகத்தை பொறுத்த வரை பா.ஜனதாவுக்கு அடித்தளம் இல்லை. எப்படியாவது நுழைய வேண்டும் என்பதற்காக மோடி அ.தி.மு.க. அரசை ஆட்டி வைக்கிறார். டெல்லியில் மோடி வாசிப்பதற்கு ஏற்ப தமிழ் நாட்டில் இவர்கள் ஆடுகிறார்கள்.
ஜெயலலிதா எதிர்த்த அனைத்து திட்டங்களையும், மோடியின் நிர்பந்தத்தால் தற்போதைய அ.தி.மு.க. அரசு ஆதரித்துள்ளது. தி.மு.க. மூழ்கும் கப்பல் அதில் இணைபவர்களும் மூழ்குவார்கள் என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை கூறி இருப்பது மிகப்பெரிய ஜோக். யார் மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள். யார் நீந்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.
தேசிய அளவில் வகுப்பு வாத பா.ஜனதா அரசை வீழ்த்த மதசார்பற்ற ஜனநாயக கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்று காங்கிரஸ் பாடுபட்டு வருகிறது. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது.
பா.ஜனதாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். 2004 தேர்தலை விட மகத்தான அளவில் 39 தொகுதிகளையும் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி கைப்பற்றும்.
மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் அனைத்தும் எங்கள் கூட்டணியில் இணையலாம். கமல்ஹாசன் காங்கிரசுடன் சேர விருப்பம் தெரிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் தி.மு.க. அல்லாத காங்கிரஸ் என்பது முரண்பாடாக உள்ளது. தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது. கமலுக்காக தி.மு.க.வுடன் உள்ள உறவை காங்கிரஸ் முறிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது கோபண்ணா, அருள்பெத் தையா, சி.பி.செல்வம், அசன்சேக் ஆகியோர் உடன் இருந்தனர். #Kamalhaasan #DMK #Congress #sanjayDutt
தமிழக காங்கிரஸ் கட்சியில் உருவான கோஷ்டி பூசல் கடந்த மாதம் உச்சகட்டத்தை எட்டியது. மாநில தலைவர் திருநாவுக்கரசரை மாற்ற வேண்டும் என எதிர் தரப்பில் உள்ள மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கினர். பாஜகவில் இருந்து வந்த திருநாவுக்கரசர், கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்ற குற்றச்சாட்டை மேலிடத்தில் வைத்தனர். இதனால் நிச்சயம் மாற்றம் வரும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர்.

‘திமுக-காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது. வரும் பாராளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுகிறோம்’ என்றும் சஞ்சய் தத் குறிப்பிட்டார். #Thirunavukkarasar #Congress
கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடனான கலந்தாய்வு கூட்டம் கரூரில் திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார்.
இதில் சிறப்பு விருந்தினராக தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டம் தொடங்கியதும் சஞ்சய்தத், மாவட்ட தலைவர் சின்னசாமி, பேங்க் சுப்பிரமணி, ஸ்டீபன் பாபு ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர். அப்போது திடீரென கீழே இருந்த சில நிர்வாகிகள் ஆளுக்கொரு நாற்காலியை தூக்கி கொண்டு மேடை நோக்கி வந்தனர். இதற்கு மேடையில் இருந்த ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து நிர்வாகிகளுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ந்த சஞ்சய்தத் அனைவரையும் அமைதி காக்கும்படி எச்சரித்தார். ஆனால் கூச்சல் நின்ற பாடில்லை. இதனால் வெறுத்து போனஅவர் நானே கீழே போய் அமருகிறேன் என பார்வையாளர் இருக்கையில் விறுவிறுவென சென்று உட்கார்ந்துவிட்டார்.
இதனை சற்றும் எதிர்பாராத நிர்வாகிகள் வேறு வழி தெரியாமல் நாற்காலிகளை அங்கேயே போட்டுவிட்டு நேராக சஞ்சய்தத்தின் பின்னால் போய் இடம் பிடித்தனர். பின்னர் சஞ்சய்தத், மைக்கில் பேசுபவர்கள் மட்டும் ஒவ்வொருவராக மேடை ஏறி பேசுங்கள் என்றார். பின்னர் ராகுல் பாணியில் தன்னந்தனியாக பேசி சென்றனர்.
அதன்பின்னர் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத் பேசும்போது, 50 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சிக்கு வரமுடியாத சூழலில் இருக்கிறோமே என்கிற கவலை வேண்டாமா? இதை விடுத்து மேடையில் உட்காருவதற்காக போட்டி போடலாமா என சாடினார். மேலும் கட்சி கட்டுப்பாட்டினை மீறி ஒழுக்கக்கேடாக நடப்பவர்கள் பொறுப்பிலிருந்து விலக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்புவேன் என எச்சரித்தார்.
பின்னர் நிருபர்களிடம் சஞ்சய்தத் கூறும்போது, 2014 தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றை கூட மோடி நிறைவேற்றவில்லை. நடைபெற இருக்கும் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இனி நமக்கு ஏறுமுகம் தான் என மகிழ்ச்சி தெரிவித்தார். #Congress
அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சஞ்சய்தத் கோபியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த மாவட்டம் தோறும் தொண்டர்களின் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி அவர்களுடைய கருத்துக்களை கேட்டு வருகிறோம்.

மத்திய அரசும், தமிழக அரசும் மக்களை ஏமாற்றி வருகிறது. இவர்களுக்கு வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #Congress #sanjayDutt


