என் மலர்
நீங்கள் தேடியது "Santa Claus"
- வணிக வளாகங்களில் சாண்டாவை கொழுப்பாக மாற்றுவதற்கு முயற்சி மேற்கொள்ளக்கூடாது.
- மகிழ்ச்சியான உறவு முறை மற்றும் உணவு, பானங்களின் அடிப்படையில் குழந்தைகள் நாம் நினைப்பதைவிட அதிகமாக சாப்பிடுவார்கள்.
சிட்னி:
கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25-ந்தேதி உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து பரிசுப்பொருட்களை வழங்கி வருகிறார்கள்.
வீடு வீடாக சென்றும் மக்கள் அதிகமாக கூடும் வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களில் கிறிஸ்துமஸ் தாத்தா பரிசுகளை வழங்குகிறார்கள். பொதுவாக கிறிஸ்துமஸ் தாத்தா உடல் பருமனுடன் இருப்பார்.
இந்த நிலையில் உடல் பருமனான கிறிஸ்துமஸ் தாத்தாக்களை வணிக வளாகங்களில் தடை செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலியாவை சேர்ந்த சுகாதார நிபுணர் வின்சென்ட் கான்ட்ரா வினாட்டா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதிக எடை கொண்ட கிறிஸ்துமஸ் தாத்தா ஒரு மோசமான முன்னுதாரணத்தை அமைத்து அதிகமாக சாப்பிடுவதை ஊக்குவிப்பதால் அனைத்து உடல் பருமனான சாண்டா கிளாசை (கிறிஸ்துமஸ் தாத்தா) தடை செய்ய வேண்டும். சாண்டா உடல் பருமனாக இருப்பார் என்று நாம் எதிர்பார்க்கக்கூடாது.
ஏனென்றால் அது தவறான செய்தியை அளித்துவிடும். நீங்கள் நிறைய சாப்பிட வேண்டும். அதை பண்டிகைகளுடன் தொடர்புப்படுத்தி கொண்டாட வேண்டும் என்பதற்கு எதிராக போராட விரும்புகிறேன். அதிக எடையுடன் இருப்பதை மகிழ்ச்சியுடன் தொடர்புபடுத்தக்கூடாது.
புதிய நெறிமுறைகளை வகுத்து சாண்டா கிளாஸ் பருமன் இல்லாமல் இருக்க நான் விரும்புகிறேன். கிறிஸ்துமஸ் தாத்தா உடையின் முன்பகுதியில் தலையணைகள் அல்லது வேறு பொருட்களை திணிக்கும் பழக்கம் முடிவுக்கு வரவேண்டும்.
வணிக வளாகங்களில் சாண்டாவை கொழுப்பாக மாற்றுவதற்கு முயற்சி மேற்கொள்ளக்கூடாது. இது மகிழ்ச்சியான உறவு முறை மற்றும் உணவு, பானங்களின் அடிப்படையில் குழந்தைகள் நாம் நினைப்பதைவிட அதிகமாக சாப்பிடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
டாக்டர் வின்செண்டின் இந்த கருத்துக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. பீட்டர் ஹக் கூறும்போது, 'ஒல்லியான சாண்டா என்ற யோசனை ஆபத்தானது. நாள் முழுவதும் நிறைய குழந்தைகளை சந்திக்க சாண்டாஸ் வலுவாக இருக்க வேண்டும்' என்றார்.
- சாண்டா கிளாசின் உண்மையான பெயர் `செயின்ட் நிக் கோலஸ்.
- 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவ பிஷப் ஆவார்.
கிறிஸ்துமஸ் என்றாலே எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் கதாபாத்திரமாக இருப்பவர் கிறிஸ்துமஸ் தாத்தா. 1930-ம் ஆண்டுக்கு முன், கிறிஸ்துமஸ் தாத்தாவின் ஆடைகள் சிவப்பு நிறத்தில் இல்லை. நீலம், வெள்ளை மற்றும் பச்சை நிறத்தில்தான் இருந்தன. அதன் பிறகு 1930-ம் ஆண்டு சாண்டாவின் சிவப்பு ஆடை பிரபலமானது. அன்று முதல் இன்று வரை, கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது உலகம் முழுவதும் உள்ள மக்கள் சிவப்பு நிற சாண்டாவை நினைவுகூர்கின்றனர். சாண்டா கிளாசின் உண்மையான பெயர் `செயின்ட் நிக் கோலஸ். அவர் 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவ பிஷப் ஆவார். துருக்கியில் பிறந்த அவர், ஏழைகளுக்கு உதவுவதற்காக தனது செல்வம் அனைத்தையும் கொடுத்து ஒரு புனிதரானார்.
சாண்டா கிளாசுக்கு செயின்ட் நிக்கோலஸ், பாதர் கிறிஸ்துமஸ், தாத்தா புரோஸ்ட் மற்றும் கிரிஸ் கிரிங்கில் உள்ளிட்ட பல பெயர்கள் உள்ளன. பல நாடுகளில், கிறிஸ்துமஸ் தினம் அன்று சாண்டா கிளாஸ் வருவார் என்று குழந்தைகள் ஆவலுடன் காத் திருக்கிறார்கள்.
கனடா நாடு சாண்டாவிற்கு ஒரு அஞ்சல் இடுகையை வழங்கியது. அங்கு மக்கள் சான்டா கிளாசுக்கு கடிதங்கள் எழுதலாம். அதற்கான அஞ்சல் குறியீடு, `H0H0H0'. இந்த அஞ்சல் சேவை ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிர கணக்கானவர்களுக்கு பதிலளிக்கிறது. ஜார்ஜியா மற்றும் அரிசோனா, அமெரிக்கா மற்றும் பின்லாந்தில் சாண்டா கிளாஸ் என்ற பெயரில் பல நகரங்கள் உள்ளன.
1822-ம் ஆண்டு கிளமென்ட் மூர் எழுதிய `கிறிஸ்துமசுக்கு முந்திய இரவு' எனும் கட்டுரையில் கிறிஸ்துமஸ் தாத்தா பற்றி குறிப்பிட்டு இருக்கிறார். அதுமட்டுமின்றி அவர் எழுதிய `ஜிங்கில் பெல் ஜிங்கில் பெல்' என்ற கவிதையில் கதாநாயகனாக கிறிஸ்துமஸ் தாத்தா இடம் பெறுகிறார். அதனாலேயே இன்றும் கிறிஸ்துமஸ் கலைநிகழ்ச்சிகள் நடக்கும் எல்லா இடத்திலும் கிறிஸ்துமஸ் தாத்தா வருகை நிச்சயமாக இடம்பெறும்.
அப்போது ஜிங்கில் பெல் பாடல் ஒலிக்கப்படும். அதன் பின்னரே கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்தவர் சாக்லேட்டுகளை வீசிக்கொண்டு வருவார். அவரது கைகுலுக்கலுக்கும், அவரை பார்ப்பதற்கும் ஆவலாய் இருக்கும் ரசிகர் பட்டாளம் ஒன்று கூடும்.
இவ்வாறு கிறிஸ்துமஸ் தாத்தா பற்றி பல செய்திகள் இருந்தாலும், கிறிஸ்துமசின் மையச்செய்தியான பகிர்தலை பரிசுகள் கொடுப்பதன் மூலம் கிறிஸ்துமஸ் தாத்தா வெளிப்படுத்துகிறார். கடவுள் தன் ஒரே மகனை தன் மக்களுக்காக கொடுக்கிறார். இதுவே கிறிஸ்துமசின் மையமாக இருக்கிறது.
இதனை உள்வாங்கி தன்னிடம் இருப்பதை இல்லாதவருக்கு பகிர்ந்து கொடுக்கும் தாராள மனதை கற்றுக்கொடுக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா, அர்த்தமுள்ள விதத்தில் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட அழைப்பு விடுப்பவராக இருக்கிறார்.
- ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் அனைத்திலும் சுற்றுலா பயணிகளால் அறைகள் நிறைந்துவிட்டன.
- விழாவில் பங்கேற்ற சுற்றுலா பயணிகள், குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா பரிசு வழங்கினார்.
புதுச்சேரி:
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாடுவதற்காக பிரான்சு உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுவையில் குவிந்துள்ளனர்.
இதனால் புதுவை மற்றும் அதனையொட்டியுள்ள ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் அனைத்திலும் சுற்றுலா பயணிகளால் அறைகள் நிறைந்துவிட்டன.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி புதுவை நகர பகுதியில் உள்ள தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடந்தது.
இதில் வெளிமாநில மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்திருந்த கிறிஸ்தவர்கள், சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர்.
தனியார் ஒட்டல்கள், விடுதிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் சுற்றுலா பயணிகள் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினர்.
விழாவில் பங்கேற்ற சுற்றுலா பயணிகள், குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா பரிசு வழங்கினார்.
- சாண்டா கிளாசின் உண்மையான பெயர் சாண்டா நிக்கோலஸ்.
- புனித நிக்கோலசின் மண்டை ஓட்டில் இருந்து விஞ்ஞானிகள் பயன்படுத்தி உள்ளனர்.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை கட்டி வருகிறது. கிறிஸ்துமஸ் சீசனில் இரவு நேரங்களில் சாண்டா கிளாஸ், குழந்தைகளுக்கு பல பரிசுகளை வழங்கி சுற்றி வருவதை காண முடியும்.
அடர்ந்து வளர்ந்த வெள்ளை தாடி, வெள்ளை பார்டர் வைத்த சிகப்பு நிற வெல்வெட் அங்கி அணிந்த சிரித்த முகம், இவற்றோடு முதுமையை பிரதிபலிக்கும் உடல் அமைப்புடன் வசீகரமாக சாண்டா கிளாஸ் வலம் வருவார்.
கிறிஸ்தவ பிஷப்பான சாண்டா கிளாசின் உண்மையான பெயர் சாண்டா நிக்கோலஸ். துர்க்கிஸ்தானில் உள்ள மயூரா நகரில் பிறந்த இவர் மலைகளில் பனி நிறைந்த இடங்களில் வசிப்பதாக நம்பப்படுகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நிக்கோலஸ் குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்குவது வழக்கம்.
இந்நிலையில் சாண்டா கிளாசின் உண்மையான முகத்தை விஞ்ஞானிகள் வெளிப்படுத்தி உள்ளனர். சாண்டா கிளாசின் நிஜ வாழ்க்கை ஆயரான புனித நிக்கோலசின் மண்டை ஓட்டில் இருந்து அவரது முகத்தை தடயவியல் ரீதியாக மீண்டும் உருவாக்கம் செய்து விஞ்ஞானிகள் பயன்படுத்தி உள்ளனர்.

இந்த புதிய ஆய்வில் முதன்மை ஆசிரியரான சிசரோ மோரேஸ் கூறுகையில், சாண்டா கிளாஸ் வலுவான மற்றும் மென்மையான முகம் கொண்டவர் என்பதை அவரது முக அமைப்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இது 1823-ம் ஆண்டு கவிதையில் விவரிக்கப்பட்டுள்ள அவரது முகத்துடன் ஒத்துப்போகிறது என்றார். அடர்ந்த தாடியுடன் கூடிய சாண்டா கிளாசை பற்றி நினைக்கும் போது நம் மனதில் இருக்கும் உருவத்தை நினைவூட்டுகிறது என்றும் மோரேஸ் கூறினார்.
1950-ம் ஆண்டில் லூய்கி மார்டினோவோல் சேகரிக்கப்பட்ட தரவுகளை பயன்படுத்தியும், மண்டை ஓட்டை 3-டியில் வரைந்தும் சாண்டா கிளாஸ் உருவத்தை வடிவமைத்ததாக கூறி உள்ளனர்.
- அதிகளவிலான டிரோன்களை பயன்படுத்தி சாகசம் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு, கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பெற்றது.
- வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி 10 கோடி பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.
மேற்கத்திய நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் களைகட்ட தொடங்கி உள்ளது. இந்தநிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் மான்ஸ்பீல்ட்டு நகரில் பிரபல தனியார் நிறுவனம் ஒன்று டிரோன் சாகசத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.
அந்த வகையில் இரவுநேரத்தில் வானத்தில் 5 ஆயிரம் டிரோன்களை பயன்படுத்தி வானில் உலா வரும் வகையிலான ராட்சத கிறிஸ்துமஸ் தாத்தா போன்ற தோற்றத்தை உருவாக்கினர். வானில் பறக்கவிடப்பட்ட டிரோன்களால் ஆன பூமி உருண்டையை பின்னணியாக கொண்டு கிறிஸ்துமஸ் தாத்தா ஒருவர் பரிசுபெட்டியுடன் கலைமான்களால் பூட்டப்பட்ட ரதத்தில் உட்கார்ந்தவாறு செல்வதை காட்சிப்படுத்தினர்.
அதிகளவிலான டிரோன்களை பயன்படுத்தி சாகசம் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு, கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பெற்றது. இந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி 10 கோடி பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.
- ஆரம்பத்தில் உள்ளூரில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து நடித்து வந்தார்.
- ஆன்-லைனில் பிரபலமாவதற்கு அவரது நகைச்சுவை அம்சம் முக்கிய காரணமாக உள்ளது.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டி வரும் நிலையில், கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து 68 வயது முதியவர் ஒருவர் ரூ. 44 லட்சம் சம்பாதித்திருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.
எடி ரிச் என்ற அந்த முதியவர் 1995-ம் ஆண்டு தனது பக்கத்து வீட்டுக்காரர்கள் கேட்டு கொண்டதற்காக கிறிஸ்துமஸ் தாத்தாவாக நடிக்க தொடங்கினார். பின்னர் கிறிஸ்துமஸ் காலத்தில் கிறிஸ்துமஸ் தாத்தாவாக நடித்து ஆன்-லைனில் பிரபலமாகி லட்சக்கணக்கில் பணம் ஈட்டினார். இவருக்கு அவரது மகன் கிறிஸ் உதவி செய்து வருகிறார்.
கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் சேர்ந்து இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 44 லட்சம் வருமானம் ஈட்டி உள்ளனர். ஆரம்பத்தில் உள்ளூரில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து நடித்து வந்த அவர், தற்போது ஆன்-லைனில் பிரபலமாவதற்கு அவரது நகைச்சுவை அம்சம் முக்கிய காரணமாக உள்ளது.
ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அவர் மக்களை சிரிக்க வைப்பதை பெருமையாக கருதுகிறார். அவர் கூறுகையில், நான் மக்களை கவனித்து கொள்ள விரும்புகிறேன். என்னால் முடிந்தவரை அவர்களுக்கு திருப்பித்தர விரும்புகிறேன் என்றார்.
- ராஜீவ்காந்தியுடன் அவருடைய மகனான ராகுல்காந்தி அமர்ந்து இருப்பது போன்ற ஏஐ புகைப்படங்கள் இணையத்தில் வைரல்
- இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
உலகம் நவீனமயமாக்கலில் வீறுநடை போடுகிறது. புதிய புதிய தொழில்நுட்ப வசதிகள் அறிமுகமாகி வருகின்றன. இதில் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அனைவரையும் வியக்க வைக்கிறது.
தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் இங்கிலாந்து ராணி எலிசபெத், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, சட்டமேதை அம்பேத்கர், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், தொழில் அதிபர் ரத்தன் டாடா, மற்றும் மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தியுடன் அவருடைய மகனான ராகுல்காந்தி அமர்ந்து இருப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஆம் ஆத்மி கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து இருப்பது போல ஒரு ஏஐ வீடியோவை வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில், கெஜ்ரிவால் பெண்களுக்கு இலவச பயணச்சீட்டு, இலவச மின்சாரம் உள்ளிட்ட பல பரிசுகளை வழங்குகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.