என் மலர்
நீங்கள் தேடியது "satellites"
- கடந்த 5 ஆண்டுகளில் 177 வெளிநாட்டு செயற்கை கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன.
- இதில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 19 நாடுகளின் செயற்கைக்கோள்களும் அடங்கும்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் 177 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது.
இஸ்ரோவின் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி-எம்கே3 ராக்கெட்டுகள் மூலம் கடந்த 2018 முதல் 2022 வரை என 5 ஆண்டுகளில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 19 நாடுகளின் 177 செயற்கைக்கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
இதுபோன்ற வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் மூலம் 94 மில்லியன் அமெரிக்க டாலரும், 46 மில்லியன் யூரோவும் அந்நியச் செலாவணியாக இந்தியாவுக்கு கிடைத்துள்ளது என தெரிவித்தார்.
- இரு விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ஆய்வுப்பணியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது.
- தொழில்நுட்பக் கோளாறால் இந்த நிகழ்வு ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ தெரிவித்தது.
பெங்களூரு:
இரு செயற்கைக்கோள்களை விண்வெளியில் இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. இதற்காக கடந்த 30-ம் தேதி தலா 220 கிலோ எடை கொண்ட சேஸர், டார்கெட் ஆகிய விண்கலன்களை உள்ளடக்கிய ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள், பி.எஸ்.எல்.வி. சி60 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அத்துடன் 24 ஆய்வுக்கருவிகளும் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த இரு விண்கலன்களும் பூமியில் இருந்து 475 கி.மீ. சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அவற்றின் தொலைவு படிப்படியாக 20 கி.மீ. குறைக்கப்பட்டு அவை ஒன்றோடு ஒன்று ஒருங்கிணைக்கப்படவுள்ளன.
இதையடுத்து, இரு விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ஆய்வுப்பணி ஜனவரி 9-ம் தேதி காலை 8 மணி முதல் நடைபெறும் என இஸ்ரோ திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், விண்கலன்களை விண்வெளியில் ஒருங்கிணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த நிகழ்வு ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சில தொழில்நுட்ப இடையூறுகள் காரணமாக திட்டமிட்டபடி விண்கலன்கள் இணையும் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- மீண்டும் செயற்கைக்கோள்களை படிப்படியாக தூரத்தை குறைத்துக்கொண்டே விஞ்ஞானிகள் வந்தனர்.
- இரண்டு செயற்கைக்கோள்களும் 230 மீட்டர் தொலைவில் கொண்டுவரப்பட்டது.
'ஸ்பேடெக்ஸ்' திட்டத்தின் கீழ் இரண்டு செயற்கைக்கோள்களை கடந்த 7-ந் தேதி இணைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் எதிர்பாராத செயற்கைக்கோள் நகர்வு காரணமாக ஸ்பேடெக்ஸ் பணியில் தாமதங்கள் ஏற்பட்டன. குறிப்பாக 500 மீட்டரில் இருந்து 225 மீட்டராக அதனுடைய தூரத்தை குறைக்கும் போது, எதிர்பாராத விதமாக நடந்த செயலால் 2 செயற்கைக்கோள்களும் 6.5 கிலோமீட்டர் தூரத்துக்கு விலகி சென்றன.
பின்னர் மீண்டும் இணைப்பு பரிசோதனையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். தொடர்ந்து கடந்த 9-ந் தேதி மீண்டும் இணைக்க முயற்சித்தனர். ஆனால் பல்வேறு காரணங்களால் அதுவும் முடியாமல் போனது.
இந்த நிலையில் மீண்டும் செயற்கைக்கோள்களை படிப்படியாக தூரத்தை குறைத்துக்கொண்டே விஞ்ஞானிகள் வந்தனர். நேற்று முன்தினம் இரவு 500 மீட்டர் அளவில் கொண்டு வர முயற்சித்தனர் அதில் பல்வேறு தடைகள் ஏற்பட்டதால் நேற்று இரவு 1.5 கிலோமீட்டர் தூரத்திற்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து விஞ்ஞானிகள் கட்டுப்பாட்டு அறையில் இருந்து வழங்கிய சிக்னல்களால் இரண்டு செயற்கைக்கோள்களும் 230 மீட்டர் தொலைவில் கொண்டுவரப்பட்டது.
தொடர்ந்து இதனுடைய வேகத்தை குறைத்து இரண்டு செயற்கைக்கோள்களையும் இணைக்கும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் நேற்று இரவு தீவிரமாக ஈடுபட்டனர். தீவிரமாக வேலை செயல்படுத்தினால் இந்த தொழில்நுட்பத்தை அறிந்த 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெரும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
- ஸ்பே டெக்ஸ் திட்டத்தின் கீழ் 2 செயற்கைக்கோள்களுக்கு இடையேயான தூரத்தை குறைத்து வந்தது.
- தற்போது 2 விண்கலங்களும் மீண்டும் பாதுகாப்பான தூரத்திற்கு நகர்த்தப்பட்டு விட்டது.
பெங்களூரு:
சர்வதேச விண்வெளி மையத்தைப் போல, வரும் 2035-ம் ஆண்டுக்குள் சொந்த விண்வெளி மையத்தை அமைக்க இந்தியா முயற்சித்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக விண்வெளியில் 2 செயற்கைக்கோள்களை இணைக்கும் முயற்சியில் இந்தியாவின் விண்வெளி கழகமான இஸ்ரோ ஈடுபட்டுள்ளது.
இதற்காக கடந்த டிசம்பர் 30-ந்தேதி பி.எஸ்.எல்.வி. சி60 ராக்கெட் மூலம் தலா 220 கிலோ எடை கொண்ட எஸ்.டி.எக்ஸ்01 (சேஸர்) மற்றும் எஸ்.டி.எக்ஸ்02 (டார்கெட்) ஆகிய விண்கலன்களை உள்ளடக்கிய ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் விண்ணில் ஏவப்பட்டது.
இதில் 24 ஆய்வு கருவிகளும் அனுப்பி வைக்கப்பட்டன. புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட பின்னர் 2 செயற்கைக்கோள்களும் ஒரே சுற்று வட்டப்பாதையில் ஒன்றன்பின் ஒன்றாக இஸ்ரோ சுற்றி வரச் செய்தது.
இதையடுத்து ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ் 2 செயற்கைக்கோள்களுக்கு இடையேயான தூரத்தை குறைத்து வந்தது.
இந்த நிலையில் இன்று அதிகாலை உந்துசக்தி குறைக்கப்பட்டு, மெல்ல மெல்ல செயற்கைகோள்களுக்கு இடையிலான தூரம் மேலும் குறைக்கப்பட்டது.
2 செயற்கைக்கோள்களுக்கு இடைப்பட்ட தொலைவு 230 மீட்டர் தூரத்தில் இருந்து 15 மீட்டராக குறைக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக இடையேயான தூரம் 3 மீட்டராக குறைக்கப்பட்டது.
இதுகுறித்து இஸ்ரோ தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, இரு விண்கலன்களுக்கு இடையேயான தூரம் 15 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் தூரத்தை 3 மீட்டராக குறைக்கும் சோதனை முயற்சியும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது 2 விண்கலங்களும் மீண்டும் பாதுகாப்பான தூரத்திற்கு நகர்த்தப்பட்டு விட்டது. தரவுகளை ஆய்வு செய்த பிறகு 2 விண்கலங்களையும் ஒருங்கிணைக்கும் பணி நடக்கும் என்று தெரிவித்து உள்ளது. 2 செயற்கைக்கோளும் வினாடிக்கு 10 மில்லிமீட்டர் வேகத்தில் ஒன்றையொன்று நெருங்கி நகர்த்தப்பட உள்ளது.
விண்வெளியில் செயற்கைக்கோள்களை இணைக்கும் சோதனையை ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் வெற்றிகரமாக செய்திருக்கின்றன. அடுத்தபடியாக இந்தியா இந்த சோதனையை செய்ய இருக்கிறது.
இதன் மூலம் இஸ்ரோ புதிய மைல்கல்லை நெருங்கி இருக்கிறது.
கொடைக்கானல் அப்சர்வேட்டரியில் வானியல் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சூரியனை குறித்த ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் அங்கு பணிபுரியும் விஞ்ஞானி குமரவேல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
11 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனில் புள்ளிகள் தோன்றி வருகின்றன. இதில் 5½ ஆண்டுகள் குறைவாகவும், 5½ ஆண்டுகள் அதிகமாகவும் புள்ளிகள் தோன்றுகின்றன. கடந்த 2013-ம் ஆண்டு சூரியனில் அதிக புள்ளிகள் காணப்பட்டன. இதனிடையே கடந்த இரண்டு நாட்களாக பூமியைவிட சுமார் 5 மடங்கு அளவில் பெரியதாக சூரிய புள்ளி தோன்றியுள்ளது. இதன் காரணமாக சூரிய காந்தப்புயல் அடிக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன.
இதனால் பூமிக்கு நேரடியாக பாதிப்பு இல்லையென்றாலும் சூரிய புள்ளிகள் வெடித்து சிதறும்போது செயற்கைக்கோள்களுடன் உள்ள தொடர்பு துண்டிக்கும் அபாயம் உள்ளது. இதனால் தொலைத்தொடர்பு சாதனங்களின் பாகங்கள் பாதிப்பு அடையும் நிலை ஏற்படும். இதன் நிலைமை குறித்து இனி அடுத்து வரும் சில நாட்களில் தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார். #Sun #Satellites
இஸ்ரோ தலைவர் சிவன் சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
இஸ்ரோ சார்பில் பள்ளி மாணவர்களுக்கு புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி 8, 9-ம் வகுப்புக்கு செல்லும் மாணவர்களில் மாவட்டத்துக்கு தலா 3 பேர் தேர்வு செய்யப்பட்டு விண்வெளி பயிற்சி அளிக்கப்படும்.
சிறிய ரக செயற்கை கோள்களை உருவாக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன்மூலம் விண்வெளி படிப்பில் மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்படும்.
பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் கடைசி பகுதியில் மாணவர்கள் உருவாக்கும் சிறிய ரக செயற்கைகோள்கள் பொருத்தி சோதனை செய்யப்படும்.
பி.எஸ்.எல்.வி.சி-44 ராக்கெட் வருகிற 24-ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ஆண்டு 17 செயற்கைகோள்கள், 14 ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்படும்.
சிறிய ரக செயற்கைகோளான எஸ்.எஸ்.எல்.வி. முதல் முறையாக இந்த ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்டு மாதம் ஏவப்படும்.
அதேபோல விண்ணில் இருந்து பூமிக்கும், பூமியிலிருந்து விண்ணுக்கும் மறு சுழற்சி ராக்கெட் சோதனை செய்து பார்க்கப்படும்.
ககன்யான் என்ற மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டப் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு விண்கலமும், 2021-ம் ஆண்டு ஜூலையில் ஒரு விண்கலமும், 2021-ம் ஆண்டு டிசம்பரில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டமும் செயல்படுத்தப்படும்.
ஒரு பயணத்தில் 3 பேர் விண்வெளிக்கு செல்வார்கள். அங்கு அவர்கள் 7 நாட்கள் தங்கி இருப்பார்கள். இதற்காக தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. அவர்களுக்கு 6 முதல் 12 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும்.
சந்திராயன்-2 ஏவப்படுவதில் தாமதம் ஏற்படுவதற்கு காரணம், அதில் புதிய யுக்திகளை சேர்த்து நீண்ட காலம் செயல்படுவதற்கு பணிகள் நடக்கிறது. அதற்கு பல கட்ட சோதனை நடைபெறுவதால் தாமதம் ஆகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #ISRO #Sivan
பூமியின் நிலத்தடி நீர்மட்டத்தை (நன்னீர்) அமெரிக்காவின் ‘நாசா’ அனுப்பிய செயற்கைக்கோள்கள் மூலம் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். உலக அளவில் 34 மண்டலங்களை சுமார் 14 ஆண்டுகளாக ஆய்வு செய்த விஞ்ஞானிகள் அதன் முதற்கட்ட தகவல்களை தற்போது வெளியிட்டு உள்ளனர்.
இதில் பூமியின் ஈரப்பதம் மிகுந்த பகுதிகள் மேலும் ஈரமாகவும், உலர்ந்த பகுதிகள் மேலும் உலர்ந்து கொண்டே போவதாகவும் கண்டறியப்பட்டு உள்ளது. இதற்கு மோசமான நீர் மேலாண்மை, பருவநிலை மாற்றம் மற்றும் இயற்கை சுழற்சி உள்ளிட்ட பல காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள், மத்திய கிழக்கு நாடுகள், கலிபோர்னியா மற்றும் ஆஸ்திரேலியாவில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதாகவும், இதனால் ஏற்கனவே பிரச்சினைகள் உருவாகி இருப்பதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வுக்காலத்தில் வட இந்தியாவில் போதுமான மழை இருந்தபிறகும் அரிசி, கோதுமை போன்ற பயிர்களுக்காக நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சியதாக அந்த ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.
இது எதிர்கால வறட்சிக்கு நல்லதல்ல என்று கூறியுள்ள விஞ்ஞானிகள், பூமியை பொறுத்தவரை நிலத்தடி நீரே மிகவும் அத்தியாவசிய வளமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். #NASA