என் மலர்
நீங்கள் தேடியது "SAvPAK"
- ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் அடைந்த தோல்வி தான் பாகிஸ்தானை இப்படியொரு இக்கட்டான சூழலில் சிக்க வைத்துள்ளது.
- சென்னை ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு எடுபடும் என்பதால் அதற்கு ஏற்ப வியூகத்தை கச்சிதமாக பயன்படுத்த வேண்டியது முக்கியம்.
13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் 26-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, தென்ஆப்பிரிக்காவை சந்திக்கிறது. தனது முதல் இரு ஆட்டங்களில் நெதர்லாந்து, இலங்கையை தோற்கடித்த பாகிஸ்தான் அணி அதன் பிறகு இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளிடம் வரிசையாக தோற்று சிக்கலில் தவிக்கிறது. எஞ்சிய 4 லீக்கிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பில் பாகிஸ்தான் நீடிக்க முடியும். ஒன்றில் தோற்றாலும் வெளியேற வேண்டியது தான். அதனால் இன்றைய ஆட்டம் அவர்களுக்கு வாழ்வா-சாவா போராட்டம் என்பதில் சந்தேகமில்லை.
'அணி சரிவில் இருந்து மீள்வதற்காக ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் அனைவரும் ஆதரவாக நிற்கிறோம். ஊக்கப்படுத்துகிறோம். ஆனால் உலகக்கோப்பை முடிந்ததும் செயல்பாட்டை ஆராய்ந்து, அணியின் நலன் கருதி அதிரடி முடிவு எடுப்போம்' என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதாவது பாபர் அசாமின் கேப்டன் பதவிக்கு ஆபத்து என்பதை மறைமுகமாக கூறியுள்ளது. இதுவும் பாபர் அசாமுக்கு கூடுதல் நெருக்கடியாக இருக்கும்.

பயிற்சியில் பாகிஸ்தான் அணி வீரர்கள்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் அடைந்த தோல்வி தான் பாகிஸ்தானை இப்படியொரு இக்கட்டான சூழலில் சிக்க வைத்துள்ளது. 282 ரன்கள் சேர்த்த போதிலும் அதை வைத்து ஆப்கானிஸ்தானை கட்டுப்படுத்த முடியாமல்போய் விட்டது.
சொதப்பலான சுழற்பந்து வீச்சும், மந்தமான பீல்டிங்கும் தான் தோல்விக்கு காரணம் என்று அந்த அணியின் கேப்டன் பாபம் அசாம் புலம்பி தீர்த்தார். சேப்பாக்கம் ஆடுகளம் மெதுவானது. சுழலுக்கு உகந்தது. அதனால் ஷதப் கான், முகமது நவாஸ் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும். இதே போல் பேட்ஸ்மேன்களும் ஒருசேர கைகொடுக்க வேண்டும். விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் (302 ரன்) நன்றாக ஆடுகிறார். கேப்டன் பாபர் அசாம், இமாம் உல்-ஹக், அப்துல்லா ஷபிக், இப்திகர் அகமது ஆகியோரும் நிலைத்து நின்று ஆடினால் சவாலான ஸ்கோரை அடையலாம்.
யாரும் எதிர்பாராத வகையில் எழுச்சி பெற்றுள்ள தென்ஆப்பிரிக்க அணி 4-ல் வெற்றி (இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்காளதேசத்துக்கு எதிராக), ஒன்றில் தோல்வி (நெதர்லாந்துக்கு எதிராக) என்று 8 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடம் வகிக்கிறது.
பேட்டிங்கில் எதிரணி பவுலர்களை திணறடிக்கும் தென்ஆப்பிரிக்க அணியினர் நடப்பு தொடரில் 4 முறை 300 ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர். இதில் இலங்கைக்கு எதிராக 428 ரன்கள் எடுத்து வரலாறு படைத்தது அடங்கும். குயின்டான் டி காக் (3 சதத்துடன் 407 ரன்), ஹென்ரிச் கிளாசென் (15 சிக்சருடன் 288 ரன்), எய்டன் மார்க்ரம் (265 ரன்) சூப்பர் பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் ரபடா, கோட்ஜி, யான்சென் (தலா 10 விக்கெட்), கேஷவ் மகராஜ் (7 விக்கெட்) கலக்குகிறார்கள். சரியான நேரத்தில் தென்ஆப்பிரிக்க அணி சிறந்த நிலையை அடைந்திருக்கிறது.
ஆனால் சென்னை ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு எடுபடும் என்பதால் அதற்கு ஏற்ப வியூகத்தை கச்சிதமாக பயன்படுத்த வேண்டியது முக்கியம். மொத்தத்தில் தங்களது வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் உத்வேகத்துடன் அந்த அணியினர் களத்தில் வரிந்து கட்டுவார்கள்.
ஒரு நாள் போட்டியில் இவ்விரு அணிகள் இதுவரை 82 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கிறார்கள். இதில் 51-ல் தென்ஆப்பிரிக்காவும், 30-ல் பாகிஸ்தானும் வென்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. உலகக்கோப்பையில் மோதிய 5 ஆட்டங்களில் 3-ல் தென்ஆப்பிரிக்காவும், 2-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
பாகிஸ்தான்: அப்துல்லா ஷபிக், இமாம் உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், சாத் ஷகீல், ஷதப் கான், இப்திகர் அகமது, ஷகீன் ஷா அப்ரிடி, உஸ்மா மிர், ஹசன் அலி, ஹாரிஸ் ரவுப்.
தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், ரீஜா ஹென்ரிக்ஸ் அல்லது பவுமா (கேப்டன்), வான்டெர் டஸன், மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ யான்சென், ஜெரால்டு கோட்ஜி, கேஷவ் மகராஜ், ரபடா, தப்ரைஸ் ஷம்சி அல்லது லிசாத் வில்லியம்ஸ்.
பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- முதலில் விளையாடி தென் ஆப்பிரிக்கா அணி 183 ரன்கள் எடுத்தது.
- தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 172 ரன்கள் மட்டுமே எடுத்தது.
டர்பன்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி டர்பனில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 183 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக டேவிட் மில்லர் 40 பந்தில் 82 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் அப்ரிடி, அப்ரார் அகமது தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து 184 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 172 ரன் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 11 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் ரிஸ்வான் 74 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து சொதப்பி வரும் பாபர் அசாம் இந்த போட்டியில் டக் அவுட் ஆனார்.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக ஜார்ஜ் லிண்டே 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டி வரும் 13-ம் தேதி சென்சூரியனில் நடைபெறுகிறது.
- டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 206 ரன்களைக் குவித்தது.
செஞ்சுரியன்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி செஞ்சுரியனில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமாக முகமது ரிஸ்வான் 11 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து இறங்கிய பாபர் அசாம் சயீம் அயூபுடன் ஜோடி சேர்ந்தார். 2வது விக்கெட்டுக்கு 87 ரன் சேர்த்த நிலையில் பாபர் அசாம் 31 ரன்னில் அவுட்டானார். இர்பான் கான் 30 ரன்னில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய சயீம் அயூப் அரை சதம் கடந்தார்.
இறுதியில், பாகிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 206 குவித்தது. சயீம் அயூப் 98 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதையடுத்து, 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்குகிறது.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 206 ரன்களை எடுத்தது.
- தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 210 ரன்களை எடுத்து வென்றது.
செஞ்சுரியன்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி செஞ்சுரியனில் இன்று நடைபெறறது.
டாஸ் வென்று முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்தது. சயீம் அயூப் 98 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். பாபர் அசாம் 31 ரன்னிலும், இர்பான் கான் 30 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து, 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரியான் ரிக்கல்டன் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரீசா ஹென்ரிக்ஸ் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசி சதம் கடந்து அசத்தினார். அவருக்கு வான் டெர் டுசன் நன்கு ஒத்துழைப்பு வழங்கினார்.
3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 157 ரன்கள் சேர்த்த நிலையில் ஹென்ரிக்ஸ் 117 ரன்னில் வெளியேறினார். 63 பந்தில் 10 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 117 ரன்களை எடுத்தார். வான் டெர் டுசன் அரை சதம் கடந்தார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி கடைசி ஓவரில் 3 விக்கெட்டுக்கு 210 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 தொடரை 2-0 என கைப்பற்றி அசத்தியது.
- முதல் இரு போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா வென்று தொடரை 2-0 என கைப்பற்றியது.
- மழை காரணமாக 3வது டி20 போட்டி ரத்துசெய்யப்படுகிறது என நடுவர்கள் அறிவித்தனர்.
ஜோகன்னஸ்பர்க்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி ஜோகன்னஸ்பர்கில் நேற்று நடைபெற இருந்தது. அப்பகுதியில்
மழை தொடர்ந்து பெய்தது. இதனால் போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
ஆனாலும் மழை நிற்காமல் பெய்தது. இதையடுத்து, மழை காரணமாக போட்டி ரத்துசெய்யப்படுகிறது என நடுவர்கள் அறிவித்தனர் .
போட்டி கைவிடப்பட்டாலும் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
- முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்றது.
- இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தான் அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் நடந்து முடிந்துள்ள டி20 தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடந்து வருகிறது.
இதில் முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று கேப்டவுனில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் கேஷவ் மஹாராஜ் காயம் காரணமாக பாகிஸ்தான் ஒருநாள் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காயம் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் லெவனில் கேசவ் மகராஜ்-க்கு பதிலாக பெஹ்லுவாயோ இடம்பிடித்திருந்த நிலையில், தற்போது மஹராஜ் இத்தொடரில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார்.
மஹாராஜ் விலகியதை அடுத்து அவருக்கு மற்று வீரராக ஜோர்ன் ஃபார்டுயின் தென் ஆப்பிரிக்க அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேற்கொண்டு எதிர்வரும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் கேஷவ் மஹாராஜ் இடம்பிடித்த நிலையில் தற்போது அவரால் டெஸ்ட் தொடரில் விளையாட முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
- டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 329 ரன்கள் குவித்தது.
கேப் டவுன்:
பாகிஸ்தான் அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் நடந்து முடிந்துள்ள டி20 தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கேப்டவுனில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 49.5 ஓவரில் 329 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முகமது ரிஸ்வான் 80 ரன்னும், பாபர் அசாம் 73 ரன்னும், கம்ரான் குலாம் 63 ரன்னும் எடுத்தனர்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் மாகாபா 4 விக்கெட்டும், மார்கோ ஜேன்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து, 330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. அந்த அணியின் ஹென்ரிச் கிளாசன் மட்டும் அதிரடியாக ஆடினார். அவர் 74 பந்தில் 4 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 97 ரன்கள் குவித்து சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா 43.1 ஓவரில் 248 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.இதன்மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை பாகிஸ்தான் 2-0 என கைப்பற்றியுள்ளது.
பாகிஸ்தான் சார்பில் ஷாஹின் அப்ரிடி 4 விக்கெட்டும், நசீம் ஷா 3 விக்கெட்டும், அப்ரார் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் கிளாசன் 97 ரன்னில் அவுட் ஆனார்.
- பாகிஸ்தான் 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்கா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி கேப்டவுனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 329 ரன்களைக் குவித்தது.
இதனையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ஹென்ரிச் கிளாசென் 97 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் அந்த அணி 43.1 ஓவர்களில் 248 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அஃப்ரீடி 4 விக்கெட்டுகளையும், நசீம் ஷா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.
இந்நிலையில் இப்போட்டியில் ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ஹென்ரிச் கிளாசனுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. அதன்படி இப்போட்டியில் 97 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்த ஹென்ரிச் கிளாசன் விரக்தியில் ஸ்டம்புகளை காலால் எட்டி உதைத்தார். இது ஐசிசி விதிமுறைகளுக்கு எதிரானதாகும். அதன்படி இது ஐசிசி விதிமுறை 2.2 -ன் படி இது குற்றமாகும்.
இதன் காரணமாக கிளாசனுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிப்பதுடன், ஒரு கரும்புள்ளியையும் வழங்குவதாக ஐசிசி அறிவித்துள்ளது. மேலும் இதனை கிளாசனும் ஒப்புக்கொண்டதன் காரணமாக மேற்கொண்டு விசாரணைக்கு வர தேவையில்லை என்று ஐசிசி அறிவித்துள்ளது.
- டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
- மழை காரணமாக போட்டி 47 ஓவராகக் குறைக்கப்பட்டது.
ஜோகனஸ்பெர்க்:
பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.
அடுத்து நடந்த ஒருநாள் தொடரின் முதல் இரு போட்டிகளில் பாகிஸ்தான் வென்று தொடரை 2-0 என வென்றுள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜோகனஸ்பெர்கில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 47 ஓவராகக் குறைக்கப்பட்டது.
அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 308 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் சயீம் அயூப் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் 101 ரன்னில் அவுட்டானார்.
பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் அரை சதம் கடந்து அவுட்டாகினர். சல்மான் ஆகா 33 பந்தில் 48 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 3 விக்கெட்டும், யான்சென், போர்டுயின் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்குகிறது.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 308 ரன்கள் குவித்தது.
- அந்த அணியின் சயீம் அயூப் சதமடித்து அசத்தினார்.
ஜோகனஸ்பெர்க்:
பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.
அடுத்து நடந்த ஒருநாள் தொடரின் முதல் இரு போட்டிகளில் பாகிஸ்தான் வென்று தொடரை 2-0 என வென்றுள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜோகனஸ்பெர்கில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 47 ஓவராகக் குறைக்கப்பட்டது.
அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 308 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் சயீம் அயூப் சிறப்பாக ஆடி சதமடித்து 101 ரன்னில் அவுட்டானார். பாபர் அசாம், முகமது ரிஸ்வான் அரை சதம் கடந்தனர். சல்மான் ஆகா 33 பந்தில் 48 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 3 விக்கெட்டும், யான்சென், போர்டுயின் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பவுமா 8 ரன்னிலும், ஜோர்ஜி 26 ரன்னிலும், மார்கிரம் 19 ரன்னிலும் அவுட்டாகினர்.
ஹென்ரிச் கிளாசன் ஒரளவு தாக்குப்பிடித்து அரை சதம் கடந்து 81 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் கார்பின் போஸ்ச் 40 ரன் எடுத்தார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா 42 ஓவரில் 271 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் பாகிஸ்தான் டக்வொர்த் லிவிஸ் முறையில் 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.
பாகிஸ்தானின் சுபியான் மகீம் 4 விக்கெட்டும், நசீம் ஷா, ஷாஹின் அப்ரிடி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது சயீம் அயூபுக்கு அளிக்கப்பட்டது.
- 3 வடிவிலான தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
- இதில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது.
ஜோகனஸ்பெர்க்:
பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.
அடுத்து நடந்த ஒருநாள் தொடரின் முதல் இரு போட்டிகளில் பாகிஸ்தான் வென்று தொடரை 2-0 என கைப்பற்றியது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜோகனஸ்பெர்கில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 47 ஓவராகக் குறைக்கப்பட்டது.
அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 308 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் சயீம் அயூப் சிறப்பாக ஆடி சதமடித்து 101 ரன்னில் அவுட்டானார். தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 3 விக்கெட்டும், யான்சென், போர்டுயின் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 42 ஓவரில் 271 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் பாகிஸ்தான் டக்வொர்த் லிவிஸ் முறையில் 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.
ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது சயீம் அயூபுக்கு அளிக்கப்பட்டது.
இதன் மூலம் தென்னாப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணிலேயே ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் செய்த அணி என்ற வரலாற்று சாதனை படைத்தது பாகிஸ்தான். 3 போட்டிகள் கொண்ட தொடரை 0-3 என கைப்பற்றியது.
- தொடர்ச்சியாக அதிக இன்னிங்சில் டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் 2-ம் இடத்தை அப்துல்லா ஷபிக் பிடித்துள்ளார்.
- இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர், ஆஸ்திரேலிய அணியின் ரிக்கி பாண்டிங் ஆகியோரும் இந்த பட்டியலில் உள்ளனர்.
பாகிஸ்தான் அணி- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்தது.
இந்நிலையில் இப்போட்டியில் பாகிஸ்தான் அணி தரப்பில் தொடக்க வீரராக களமிறங்கிய அப்துல்லா ஷபிக் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிக மோசமான சாதனையை படைத்துள்ளார்.
அதன்படி இப்போட்டியில் அப்துல்லா ஷபிக் டக் அவுட்டில் வெளியேறியதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த முதல் தொடக்க வீரர் எனும் சாதனையை இவர் படைத்துள்ளார்.
முன்னதாக, பார்ல் மற்றும் கேப்டவுனில் நடந்த முதல் மற்றும் இரண்டாவது ஒருநாள் போட்டிகளில் மார்கோ ஜான்சனின் பந்துவீச்சில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த அப்துல்லா ஷபிக், கடைசி ஒருநாள் போட்டியின் போது காகிசோ ரபாடா பந்துவீச்சில் 0 ரன்களில் வெளியேறியதன் காரணமாக இந்த மோசமான சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன் மூன்று போட்டிகள் கொண்ட இருதரப்பு ஒருநாள் தொடரில் சூர்யகுமார் தொடர்ந்து மூன்று முறை 0 அவுட்டாகியுள்ளார்.
அதன்படி அவர் கடந்தாண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூன்று போட்டிகளிலும் டக் அவுட்டாகினார். இருப்பினும் அவர் மிடில் ஆர்டரில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக இன்னிங்சில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த வீரர்கள் வரிசையிலும் இரண்டாம் இடத்தை அப்துல்ல ஷபிக் பிடித்துள்ளார்.
இவரைத் தவிர்த்து இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர், ஆஸ்திரேலிய அணியின் ரிக்கி பாண்டிங், இலங்கை அணியின் ஜெயவர்தனே, இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ், ஆஸ்திரேலியாவின் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், ஷேன் வாட்சன், பாகிஸ்தானின் சல்மான் பட், ஷோயப் மாலிக், உள்ளிட்ட பல வீரர்கள் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்த மோசமான சாதனையை படைத்துள்ளனர்.