என் மலர்
நீங்கள் தேடியது "SAvPAK"
- தென் ஆப்பிரிக்கா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
- இந்த போட்டியை காண வந்த கர்ப்பிணி ரசிகைக்கு குழந்தை பிறந்தது.
ஜோகனஸ்பெர்க்:
பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. அடுத்து நடந்த ஒருநாள் தொடரின் முதல் இரு போட்டிகளில் பாகிஸ்தான் வென்று தொடரை 2-0 என கைப்பற்றியது.
இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜோகனஸ்பெர்கில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 308 ரன்கள் குவித்தது. இதையடுத்து, களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 42 ஓவரில் 271 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை பாகிஸ்தான் 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.
இந்நிலையில் 3-வது போட்டியை காண வந்த கர்ப்பிணி ரசிகைக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. உடனே மைதானத்தில் இருந்த மருத்துவ குழு உதவியுடன் அந்த பெண்ணுக்கு ஆண் குழந்த பிறந்தது. இதனையடுத்து அங்குள்ள விளம்பரப் பலகையில் இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
- இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் படுதோல்வி அடைந்ததால் அணியில் இருந்து நீக்கம்.
- தற்போது பேட்டிங்கை வலுப்படுத்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்கா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்த போட்டிக்கான பாகிஸ்தான் ஆடும் லெவன் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக முல்தானில் நடந்த டெஸ்டில் பாபர் அசாம் நீக்கப்பட்டார். முதல் டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிராக தோல்வியடைந்ததால் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
அவருக்கு பதிலாக கம்ரான் கலாம் அணியில் சேர்க்கப்பட்டார். கம்ரான் குலாம் முதல் போட்டியிலேயே சதம் அடித்து பாகிஸ்தான் டெஸ்டனில் தொடர்ந்து இடம் பிடித்தார். இந்த நிலையில் அணியின் பேட்டிங்கை வலுப்படுத்த தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பாபர் அசாம் 55 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி (100 இன்னிங்ஸ்) 3997 ரன்கள் அடித்துள்ளார். இதில் 9 சதம், 26 அரைசதங்கள் அடங்கும். சராசரி 43.9 ஆகும்.
ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் டெஸ்ட் அணி சொந்த மண்ணில் வங்கதேசத்திற்கு எதிராக டெஸ்ட் தொடரை 0-2 என இழந்தது. இங்கிலாந்துக்கு எதிராக 2-1 எனக் கைப்பற்றியது.
குர்ராம் ஷேசாத், முகமது அப்பாஸ் ஆகிய இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.
- சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கம்ரான் குலாம் 54 ரன்னில் அவுட் ஆனார்.
- தென் ஆப்பிரிக்கா தரப்பில் டேன் பேட்டர்சன் 5 விக்கெட்டும் கார்பின் போஷ் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பாகிஸ்தான் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஷான் மசூத்- சைம் அயூப் களமிறங்கினர். மசூத் 17 ரன்களிலும் சைம் அயூப் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த பாபர் அசாம் மீண்டும் அணியில் இடம் பெற்றார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் களமிறங்கிய பாபர் அசாம் 4 ரன்னில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த சவுத் ஷகீல் 14, ரிஸ்வான் 27, சல்மான் 18, ஆமீர் ஜமால் 28 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுப்பக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கம்ரான் குலாம் அரை சதம் விளாசினார். அவர் 54 ரன்னில் அவுட் ஆனார்.
இறுதியில் பாகிஸ்தான் அணி 211 ரன்னில் ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் டேன் பேட்டர்சன் 5 விக்கெட்டும் கார்பின் போஷ் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- கம்ரான் குலாம் அரை சதமடித்து 54 ரன்னில் அவுட் ஆனார்.
செஞ்சுரியன்:
பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 57.3 ஓவரில் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் கம்ரான் குலாம் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதம் கடந்தார். அவர் 54 ரன்னில் ஆட்டமிழந்தார். அமீர் ஜமால் 28 ரன்னிலும், முகமது ரிஸ்வான் 27 ரன்னிலும் அவுட்டாகினர்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் டேன் பேட்டர்சன் 5 விக்கெட்டும், கார்பின் போஷ் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடர்ந்த தென் ஆப்பிரிக்கா முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்துள்ளது.
முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். தொடக்க ஆட்டக்காரர் மார்கிரம் 47 ரன்னுடனும், பவுமா 4 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
- கடைசியில் அதிரடியாக விளையாடிய கார்பின் போஷ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 81 ரன்கள் குவித்தார்.
- பாகிஸ்தான் தரப்பில் குர்ரம் ஷாஜாத், நசீம் ஷா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று செஞ்சூரியனில் தொடங்கியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி விளையாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 211 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கம்ரான் குலாம் 54 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, அமர் ஜமால் 28 ரன்களும், முகமது ரிஸ்வான் 27 ரன்களும் எடுத்தனர்.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் டேன் பீட்டர்சன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கார்பின் போஸ்ச் 4 விக்கெட்டுகளையும், மார்கோ யான்சென் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக மார்க்ரம் டோனி டி ஜோர்ஜி களமிறங்கினர். டோனி டி ஜோர்ஜி 2, ரிக்கல்டன் 8, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 9 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் சிறப்பாக ஆடிய மார்க்ரம் அரை சதம் விளாசினர்.
அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். சிறப்பாக ஆடிய மார்க்ரம் 89 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசியில் அதிரடியாக விளையாடிய கார்பின் போஷ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 81 ரன்கள் குவித்தார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 301 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 91 ரன்கள் பாகிஸ்தானை விட முன்னிலையில் உள்ளது.
பாகிஸ்தான் தரப்பில் குர்ரம் ஷாஜாத், நசீம் ஷா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
செஞ்சுரியன்:
பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 57.3 ஓவரில் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் கம்ரான் குலாம் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதம் கடந்தார். அவர் 54 ரன்னில் ஆட்டமிழந்தார். அமீர் ஜமால் 28 ரன்னிலும், முகமது ரிஸ்வான் 27 ரன்னிலும் அவுட்டாகினர்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் டேன் பேட்டர்சன் 5 விக்கெட்டும், கார்பின் போஷ் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் மார்கிரம் 89 ரன் எடுத்தார். கார்பின் போஷ் 81 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பாகிஸ்தான் சார்பில் குர்ரம் ஷசாத், நசீம் ஷா தலா 3 விக்கெட்டும், அமீர் ஜமால் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
90 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. சயீம் அயூப் 27 ரன்னும், ஷான் மசூத் 28 ரன்னும், கம்ரான் குலாம் 4 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில், இரண்டாவது நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்துள்ளது.
- தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- பாகிஸ்தான் 2வது இன்னிங்சில் 237 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
செஞ்சுரியன்:
பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 57.3 ஓவரில் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் கம்ரான் குலாம் அரை சதம் கடந்து, 54 ரன்னில் ஆட்டமிழந்தார்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் டேன் பேட்டர்சன் 5 விக்கெட்டும், கார்பின் போஷ் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மார்கிரம் 89 ரன் எடுத்தார். கார்பின் போஷ் 81 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பாகிஸ்தான் சார்பில் குர்ரம் ஷசாத், நசீம் ஷா தலா 3 விக்கெட்டும், அமீர் ஜமால் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
90 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. 2-வது நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், மூன்றாம் நாள் நேற்று நடைபெற்றது. பாபர் அசாம் அரை சதம் கடந்து 50 ரன்னில் அவுட்டானார். சவுத் ஷகீல் அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 237 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் மார்கோ யான்சென் 6 விக்கெட்டும், ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சில் களமிறங்கியது. 19 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து தென் ஆப்பிரிக்கா அணி திணறியது.
மூன்றாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் எடுத்துள்ளது.
இன்னும் இரண்டு நாள் மீதமுள்ள நிலையில் 121 ரன்கள் எடுத்தால் தென் ஆப்பிரிக்கா அணியும், 7 விக்கெட்களை வீழ்த்தினால் பாகிஸ்தானும் வெற்றி பெறும் என்பதால் இந்த டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
- பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடைபெற்றது.
- முதல் டெஸ்டில் பாகிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
செஞ்சுரியன்:
பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 57.3 ஓவரில் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனை அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
90 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சில் விளையாடிய பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 237 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.
ஒருகட்டத்தில் 99 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் தென் ஆப்பிரிக்கா அணி தத்தளித்தது. அந்த சமயத்தில் ரபாடா - யான்சன் ஜோடி அதிரடியாக விளையாடினர். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 150 ரன்கள் அடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தென் ஆப்பிரிக்கா அணி தகுதி பெற்றுள்ளது.
மேலும் முதல் முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா அணி தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடைபெற்றது
- ரபடா - யான்சன் ஜோடி அதிரடியாக விளையாடி தென் ஆப்பிரிக்கா அணியை வெற்றி பெற வைத்தனர்.
பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 57.3 ஓவரில் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனை அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
90 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சில் விளையாடிய பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 237 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.
ஒருகட்டத்தில் 99 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் தென் ஆப்பிரிக்கா அணி தத்தளித்தது. அந்த சமயத்தில் ரபாடா - யான்சன் ஜோடி அதிரடியாக விளையாடினர். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 150 ரன்கள் அடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தென் ஆப்பிரிக்கா அணி தகுதி பெற்றுள்ளது.
இப்போட்டியின் 2 ஆவது இன்னிங்சில் அதிரடியாக விளையாடிய ரபாடா 31 ரன்களை அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய 3 ஆவது தென் ஆப்பிரிக்க வீரர் என்ற சாதனையை ரபாடா படைத்துள்ளார்.
டெஸ்டில் 300 விக்கெட்டுகள் மற்றும் 1000 ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்க வீரர்கள்
ஷான் பொல்லாக் - 3,781 ரன்கள் மற்றும் 421 விக்கெட்டுகள்
டேல் ஸ்டெய்ன் - 1,251 ரன்கள் மற்றும் 439 விக்கெட்டுகள்
ககிசோ ரபாடா - 1,024 ரன்கள் மற்றும் 321 விக்கெட்டுகள்
- தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.;
- 2வது டெஸ்டில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
கேப் டவுன்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கேப்டவுனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கியது. மார்கிரம் 17 ரன்னும், வியான் முல்டர் 5 ரன்னும் எடுத்தனர். ஸ்டப்ஸ் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
தொடக்க ஆட்டக்காரர் ரியான் ரிகல்டன் சிறப்பாக ஆடி சதமடித்து அசத்தினார். அவருக்கு கேப்டன் பவுமா நன்கு ஒத்துழைப்பு கொடுத்து சதமடித்தார்.
4வது விக்கெட்டுக்கு இணைந்த ரிகல்டன், பவுமா ஜோடி 235 ரன்கள் சேர்த்த நிலையில் பவுமா 106 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 316 ரன்கள் எடுத்துள்ளது, ரியான் ரிகல்டன் 176 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- ரியான் ரிக்கெல்டன் 259 ரன்கள் குவித்தார்.
- பவுமா மற்றும் கைல் வெர்ரைன் சதம் அடித்தனர்.
தென்ஆப்பிரிக்கா- பாகிஸ்தான் இடையிலான 2-வது டெஸ்ட் கேப்டவுனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது. ரியான் ரிக்கெல்டன், பவுமா ஆகியோரின் சதத்தால் தென்ஆப்பிரிக்கா நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்கள் குவித்தது. ரிக்கெல்டன் 176 ரன்களுடனும், பெடிங்காம் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பெடிங்காம் 5 ரன்னில் வெளியேறிய நிலையில் அடுத்து விக்கெட் கீப்பர் கைல் வெர்ரைன் களம் இறங்கினார். இவர் ரிக்கெல்டனுடன் சேர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரிக்கெல்டன் இரட்டை சதம் விளாசி 259 ரன்னில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் விக்கெட் கீப்பர் கைல் வெர்ரைன் சிறப்பாக விளையாடி சதம் அடித்து 100 ரன்னிலேயே ஆட்டம் இழந்தார். வேகப்பந்து வீச்சாளர் மார்கோ யான்சன் 54 பந்தில் 62 ரன்கள் விளாசினார். கேஷப் மகாராஜ் 35 பந்தில் 40 ரன்கள் அடிக்க தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 141.3 ஓவர்களில் 615 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.
பாகிஸ்தான் அணி சார்பில் முகமது அப்பாஸ், சல்மான் ஆகா தலா 3 விக்கெட்டும் மிர் ஹம்சா, குர்ராம் ஷேசாத தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- 10 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
- 2 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
கேப்டவுன்:
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே தென் ஆப்பிரிக்கா 615 ரன்களும், பாகிஸ்தான் 194 ரன்களும் அடித்தன.
இதனையடுத்து பாலோ ஆன் ஆன நிலையில் தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக ஷான் மசூத் மற்றும் பாபர் அசாம் களமிறங்கினர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 205 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். பாபர் அசாம் 81 ரன்களில் ஆட்டமிழந்தார்.
3-வது நாள் முடிவில் பாகிஸ்தான் 1 விக்கெட்டை இழந்து 213 ரன்கள் அடித்தது. ஷான் மசூத் 102 ரன்களுடனும், குர்ரம் ஷசாத் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். அந்த சூழலில் 4-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து ஆடிய குர்ரம் ஷசாத் 18 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த கம்ரான் குலாம் 28, சவுத் ஷகீல் 23 என விக்கெட்டை இழந்தனர். ஒருமுனையில் சிறப்பாக விளையாடிய மசூத் 145 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ரிஸ்வான்- சல்மான் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடினர்.
ரிஸ்வான் 41, சல்மான் 48, ஜமால் 34, ஹம்சா 16 என விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 478 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு 58 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 7.1 ஓவரில் 61 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.