என் மலர்
நீங்கள் தேடியது "SEBI"
- கடந்த 2018 - 19ம் நிதியாண்டில், மொத்தம் 19.54 கோடி ரூபாய்க்கு பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார்.
- இயற்கையான முறையில் பிறக்காத பிரதமருக்கு நாங்கள் எழுப்பும் கேள்விகள் என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
அதானி குழுமத்தின் முறைகேடுகள் தொடர்பாக கடந்த 2023 ஜனவரி 24 இல் ஹிண்டன்பெர்க் வெளியிட்ட அறிக்கை மீது இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதானி குழும முறைகேடு புகாா் தொடா்புடைய நிதி நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில் செபியின் தலைவரும், அவரது கணவரும் பங்குகளை வைத்திருப்பதால் அக்குழுமத்துக்கு எதிரான விசாரணையில் செபி ஈடுபடவில்லை என்று கடந்த ஆகஸ்ட் 10 ஆம் ஹிண்டன்பா்க் மற்றொரு குற்றச்சாட்டை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியது.
இந்த குற்றச்சாட்டுக்கு செபி தலைவர் மாதபி பூரி புச் மற்றும் அதானி குழுமம் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. இவை அனைத்தும் உள்நோக்கம் கொண்டவை என்று மாதபி பூரி புச் மற்றும் அவரது கணவர் இருவரும் இணைத்தும் தற்போது மற்றொரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் செபி மாதபியின் மீது காங்கிரஸ் தொடர்ந்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பாஜக அரசு மவுனம் காப்பது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது.
செபி தலைவர் சீன நிறுவனங்களில் முதலீடு செய்கிறார் என்ற புதிய குற்றச்சாட்டைக் காங்கிரஸ் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த விஷயம் பிரதமர் மோடிக்கு தெரியுமா என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
இயற்கையான முறையில் பிறக்காத பிரதமருக்கு நாங்கள் எழுப்பும் கேள்விகள் என்று தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ள மாநிலங்களவை காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் ,
பட்டியலிடப்பட்ட பத்திரங்களில் செபி தலைவர் மாதபி பூரி புச் வணிகம் செய்துள்ளார். இந்தியாவிற்கு வெளியே அதிக மதிப்புள்ள முதலீடுகளை செய்துள்ளார். எல்லைப்பகுதியில் இந்தியா சீனா இடையே மோதல் போக்கு தீவிரமடைந்து வரும் சூழலில் செபி தலைவரோ, சீன நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார். இந்த விஷயம் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தெரியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா, செபி தலைவர் கடந்த 2018 - 19ம் நிதியாண்டில், மொத்தம் 19.54 கோடி ரூபாய்க்கு பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார். உள்நாடு மட்டுமின்றி சீனா உட்பட பல வெளிநாட்டு நிதி திட்டங்களிலும் முதலீடு செய்துள்ளார் என்று குற்றம் சாட்டினார்.
- மாதபி புச், அவரது கணவர் பங்குகளை வைத்திருந்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
- குற்றச்சாட்டுக்களை மாதபி புச் மற்றும் அவரது கணவர் திட்டவட்டமாக மறுத்தனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன் பர்க், கடந்த ஆண்டு இந்தியாவின் அதானி குழுமம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அறிக்கை வெளியிட்டது. அதில் அகானி குழுமம் வெளிநாடுகளில் உருவாக்கிய நிறுவனங்களில் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை ஒழுங்காற்று வாரியம் (செபி) தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவர் பங்குகளை வைத்திருந்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
இது நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எனினும், இந்த குற்றச்சாட்டுக்களை மாதபி புச் மற்றும் அவரது கணவர் திட்டவட்டமாக மறுத்தனர். மேலும் தங்களின் வாழ்க்கை மற்றும் நிதி பரிமாற்றங்கள் திறந்த புத்தகம் போன்றது என்று அவர்கள் கூறினர். எனினும், இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை விசாரிக்க பாராளுமன்ற குழு அமைக்க வலியுறுத்தின.
அதன்படி காங்கிரஸ் எம்.பி.யும், அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செலாளர் கே.சி. வேணுகோபால் தலைமையிலான பாராளுமன்ற குழு முன் செபி தலைவர் மாதபி புச் இன்று ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பியிருந்தது.
எனினும், இன்று நடைபெற இருந்த பாராளுமன்ற குழு கூட்டத்தில் மாதபி புச் ஆஜராகவில்லை. இதையடுத்து இன்றைய கூட்டம் மற்றொரு தேதிக்கு ஒத்திவைத்து பாராளுமன்ற குழு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "முதல் கூட்டத்திலேயே, நாங்கள் எங்களது ஒழுங்குமுறை அமைப்புகளை மறு ஆய்வு செய்ய முடிவெடுத்திருக்கிறோம். செபி மறு ஆய்வுக்கான கூட்டத்தை கூட்டியிருந்தோம். இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினோம். அவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதில் இருந்து விலக்கு வேண்டும் என கோரினர், நாங்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தோம். அதன்பிறகு, அவர்கள் ஆஜராவதாக உறுதியளித்தனர்."
"எனினம், இன்று காலை 9.30 மணி வாக்கில் செபி தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள் எங்களை தொடர்பு கொண்டு தனிப்பட்ட அவசரநிலை காரணமாக இன்று டெல்லிக்கு பயணம் செய்ய இயலாது என்று தெரிவித்தனர். ஒரு பெண்ணிடம் இருந்து இந்த கோரிக்கை வந்துள்ளதால், நாங்கள் இன்றைய கூட்டத்தை வேறொரு தேதிக்கு ஒத்திவைக்க முடிவு செய்திருக்கிறோம்," என்றார்.
- மாதபி பூரி புச், எம்.பி. மஹூவா மொய்த்ரா ஆஜராக வேண்டும்.
- லோக்பால் அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் செபி அமைப்பின் தலைவர் மாதபி பூரி புச் மற்றும் புகார் தாரரான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. மஹூவா மொய்த்ரா ஆகியோர் வருகிற ஜனவரி 8ம் தேதி நேரில் ஆஜராக லோக்பால் அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதானி குழுமம் பங்குச் சந்தையில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி தலைவர் மாதபி பூரி புச்-க்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டி இருந்தது.
இந்த விவகாரத்தில் மாதபி பூரி புச் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் தொடர்ச்சியாக வலியுறத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், செபி தலைவர் மாதபி பூரி புச் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்.பி. மஹூவா மொய்த்ரா லோக்பால் அமைப்பில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு தொடர்பாக வருகிற 28ம் தேதி விசாரணை நடைபெறும் என்றும் அதில் செபி அமைப்பின் தலைவர் மாதபி பூரி புச் மற்றும் எம்.பி. மஹூவா மொய்த்ரா உள்ளிட்டோர் ஆஜராக வேண்டும் என்று லோக்பால் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது.
- மீதமுள்ள பங்குகள் பொது பங்குகளாக இருக்க வேண்டும்.
- பொதுத்துறை வங்கிகளில் மத்திய அரசு அதிக அளவு பங்குகளை தன்வசம் வைத்துள்ளது.
5 பொதுத்துறை வங்கிகள் ஒவ்வொன்றிலும் தனது 20 சதவீத பங்கை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியின் விதிமுறைகளை பின்பற்றும் விதமாக இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறது என்று கூறப்படுகிறது. சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின், புரோமோட்டார் வசம் 75 சதவிகித பங்குகள்தான் இருக்க வேண்டும் என்பதே செபியின் விதிமுறை.
மீதமுள்ள பங்குகள் பொது பங்குகளாக இருக்க வேண்டும். ஆனால் பொதுத்துறை வங்கிகளில் மத்திய அரசு அதிக அளவு பங்குகளை தன்வசம் வைத்துள்ளது.
எனவே மகாராஷ்டிரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி ஆகியவற்றின் 20 சதவீத பங்குகளை மத்திய அரசு விற்க விரைவில் அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்படும் என்று கூறப்படுகிறது.
- மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி துஹின் காந்தா பாண்டே செபி அமைப்பு தலைவராக நியமிக்கப்பட்டார்.
- இவர் மத்திய அரசின் நிதித்துறை செயலராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:
மத்திய அமைச்சரவை செயலராக இருந்த ராஜிவ் கவுபா பணி நிறைவு பெற்றார். அப்பதவிக்கு நிதித்துறை செயலராக இருந்த டி.வி. சோமநாதன் மத்திய அமைச்சரவை செயலராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து காலியாக இருந்த நிதித்துறை செயலர் பதவிக்கு துஹின் காந்தா பாண்டே நியமனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், இந்திய பங்கு பரிவர்த்தனை அமைப்பின் (செபி) தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் இப்பதவியில் 3 ஆண்டுகள் இருப்பார். இதற்கான உத்தரவை மத்திய அரசு நியமனக்குழு பிறப்பித்தது.
கடந்த 1987-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். கேரடரான துஹின் காந்தா பாண்டே முதலீடு மற்றும் பொதுத்துறை செயலராக இருந்து வந்தார்.
- செபி அமைப்பின் புதிய தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம் செய்யப்பட்டார்
- அதானி குழுமம் பங்குச் சந்தையில் முறைகேடு செய்ததாக ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டி இருந்தது.
அதானி குழுமம் பங்குச் சந்தையில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி தலைவர் மாதபி பூரி புச்-க்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டி இருந்தது.
இந்த விவகாரத்தில் மாதபி பூரி புச் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் தொடர்ச்சியாக வலியுறத்தப்பட்டு வந்தது.
இதனிடையே இந்திய பங்கு பரிவர்த்தனை அமைப்பின் (செபி) தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம் செய்யப்பட்டார் இவர் இப்பதவியில் 3 ஆண்டுகள் இருப்பார். இதற்கான உத்தரவை மத்திய அரசு நியமனக்குழு பிறப்பித்தது.
இந்நிலையில், செபி முன்னாள் தலைவர் மாதபி புரி புச் மற்றும் 5 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மும்பை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
செபி முன்னாள் தலைவர் மாதபி புரி புச் மற்றும் 5 பேர் மீது மீது பங்குச் சந்தை மோசடி மற்றும் ஒழுங்குமுறை மீறல்கள் தொடர்பாக விசாரிக்க வேண்டுமென பத்திரிகையாளர் ஒருவர் தாக்கல் செய்த மனுவின் பேரில் நீதிபதி சஷிகாந்த் ஏக்நாத்ராவ் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
- எதிர்க்கட்சிகள் சார்பில் தொடர்ச்சியாக வலியுறத்தப்பட்டு வந்தது.
- ஒழுங்குமுறை மீறல்கள் தொடர்பாக விசாரிக்க வேண்டும்.
அதானி குழுமம் பங்குச் சந்தையில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி தலைவர் மாதபி பூரி புச்-க்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டி இருந்தது.இந்த விவகாரத்தில் மாதபி பூரி புச் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் தொடர்ச்சியாக வலியுறத்தப்பட்டு வந்தது.
அதன்படி, செபி முன்னாள் தலைவர் மாதபி புரி புச் மற்றும் 5 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மும்பை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. செபி முன்னாள் தலைவர் மாதபி புரி புச் மற்றும் 5 பேர் மீது மீது பங்குச் சந்தை மோசடி மற்றும் ஒழுங்குமுறை மீறல்கள் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி சஷிகாந்த் ஏக்நாத் ராவ் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி 30 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று பத்திரிகையாளர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக செபி அறிவித்துள்ளது. விளையாட்டுத்தனமான மனு மீது நீதிமன்றம் இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளதாக செபி தெரிவித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று செபி தெரிவித்து இருக்கிறது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக செபியிடம் எந்த கருத்தும் கேட்கப்படாமல் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக செபி குற்றம்சாட்டியுள்ளது.
- அதானி குழுமம் பங்குச் சந்தையில் முறைகேடு செய்ததாக ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டி இருந்தது.
- செபி முன்னாள் தலைவர் மாதபி புரி புச் மீது வழக்கு பதிவு செய்ய மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதானி குழுமம் பங்குச் சந்தையில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி தலைவர் மாதபி பூரி புச்-க்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டி இருந்தது.இந்த விவகாரத்தில் மாதபி பூரி புச் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாக வலியுறுத்தினார்
அதன்படி, செபி முன்னாள் தலைவர் மாதபி புரி புச் மற்றும் 5 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மும்பை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. செபி முன்னாள் தலைவர் மாதபி புரி புச் மற்றும் 5 பேர் மீது மீது பங்குச் சந்தை மோசடி மற்றும் ஒழுங்குமுறை மீறல்கள் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி சஷிகாந்த் ஏக்நாத் ராவ் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி 30 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று பத்திரிகையாளர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் செபி மேல்முறையீடு செய்தது.
இந்நிலையில், பங்குச் சந்தை முறைகேடு மற்றும் ஒழுங்குமுறை மீறல் புகாரில் செபி முன்னாள் தலைவர் மாதவி பூரி புச் உள்பட 6 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு நடவடிக்கை எடுக்க 4 வாரம் தடை விதித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.