search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "selfimmulution"

    • திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் தாய், மகள், பேத்தி தீக்குளிக்க முயற்சி செய்தனர்
    • பாதுகாப்பு நின்றிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்

    திருச்சி,

    திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதை.தொடர்ந்து வழக்கம் போல் நுழைவாயில் பகுதியில் போலீசார் மனுதாரர்களை சோதனைக்கு உட்படுத்தி உள்ளே அனுப்பி வைத்தனர்.இருந்த போதிலும் போலீசின் கண்ணில் சிக்காமல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மண்ணெண்ணெய் பாட்டிலுடன் கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் சென்றனர். பின்னர் கலெக்டர் கார் நிறுத்தப்படும் பகுதியில் நின்று கொண்டு திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் 3 பேரையும் மீட்டு விசாரித்தனர். விசாரணையில் தீக்குளிக்க முயன்றவர்கள் திருச்சி முசிறி கீழத்தெரு பகுதியைச் சேர்ந்த பாண்டியன் மனைவி பாப்பாத்தி (வயது 65)அவரது மகள் மாலதி( 40 )பேத்தி ஹரிப்பிரியா( 8 )என்பது தெரியவந்தது.இவர்களுக்கு சொந்தமான வீட்டை உறவினர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.இதற்கு நீதி கேட்டு வருவாய்த்துறை அலுவலகங்களில் பலமுறை மனு அளித்தும் எந்த தீர்வும் காணப்படவில்லை. இதனால் மனவேதனையில் இருந்த அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.தகவல் அறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி அவர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது

    • அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயற்சி செய்தார்
    • கீழப்பழுவூர் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம்

    அரியலூர்,

    திருநெல்வேலி நகரம், குன்றுத் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன் மனைவி பேச்சியம்மாள்(30). இவர் தற்போது அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் சுண்ணாம்பு கால்வாய் தெருவிலுள்ள ஒரு வாடகை வீட்டில் தனது கணவருடன் வசித்து வருகிறார்.கடந்த 20.5.2023 அன்று இவர்களது 7 வயது மகளை, வீட்டின் உரிமையாளர் ராமசாமி மகன் பரமசிவம் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்தகாவும், இது குறித்து புகாரின் பேரில் மகளிர் காவல் நிலைய போலீஸôர் வழக்குப் பதிந்தனர்.மேலும், பரமசிவம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பேச்சியம்மாள் கடந்த 19.6.2023 அன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார்.இந்நிலையில் கடந்த 24.6.2023 அன்று கீழப்பழுவூர் காவல் நிலைய ஆய்வாளர் சகாய அன்பரசு, உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி மற்றும் சிலர், பேச்சியம்மாள் வீட்டுக்குச் சென்றதாகவும், அங்கு அவரிடம் பரமசிவம் மீது கொடுக்கப்பட்ட புகார் மனுவை திரும்ப வேண்டும் என்றும், இல்லையென்றால் உன் மீது பொய் வழக்குப் போட்டு, சிறையில் அடைப்பதாகவும் கூறி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.இதனால் மன உளைச்சலில் இருந்த பேச்சியம்மாள் திங்கள்கிழமை தனது கைகுழந்தை, கணவர் லட்சுமணனுடன் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸôர் தடுத்து நிறுத்தினர்.இதையடுத்து பேச்சியம்மாள்,கேனில் கொண்டு வந்த மண்ணெண்ணயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்த போது போலீஸôர் தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றி, வலுக்கட்டயமாக வேனில் ஏற்றி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் பேச்சியம்மாளை கடைசி வரை ஆட்சியரை சந்திக்க விடாமல் போலீஸôர் தடுத்தனர். இச்சம்பவம் ஆட்சியர் அலுலகம் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது
    • வாரிசு சான்றிதழ் வாங்க 7 லட்சம் வரை கொடுத்து ஏமாந்த விரக்தியில் விபரீத முயற்சி

    திருச்சி,

    திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள மாதா கோவில் தெரு இடையாற்று மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி அமல சாந்தி (வயது 39). இவரது பெரியம்மாவுக்கு சொந்தமாக ரூ. 2 கோடி மதிப்பிலான சொத்து தஞ்சாவூரில் உள்ளது. இதனை தனது பெயருக்கு மாற்றம் செய்ய வாரிசு சான்றிதழ் வாங்குவதற்கும், பெயர் மாற்றம் செய்வதற்கும் இரு நபர்களிடம் ரூ. 7 லட்சம் கொடுத்து ஏமாந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் இன்று குடும்பத்துடன் வந்து திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தலையில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவரை தடுத்து அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    ×