என் மலர்
நீங்கள் தேடியது "ship"
- இந்த பயங்கர விபத்தில் பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்த கார், பைக் உள்ளிட்ட பல வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின
- தண்ணீரில் தத்தளிக்கும் பலரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில், பால்டிமோர் பாலம் உள்ளது. இந்த பாலம் 2.6 கி.மீ நீளம் கொண்டது. இந்நிலையில் நள்ளிரவு 1.30 மணிக்கு இந்த பெரிய பாலத்தின் அடியில் சரக்கு கப்பல் ஒன்று துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென சரக்கு கப்பல் பாலத்தின் மீது மோதியது. இதில் பால்டிமோர் பாலம் நொறுங்கி விழுந்தது. இந்த பயங்கர விபத்தில் பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்த கார், பைக் உள்ளிட்ட பல வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின
தண்ணீரில் தத்தளிக்கும் பலரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அதேநேரம், பலி எண்ணிக்கை குறித்த முழு விவரம் இன்னும் தெரிய வில்லை. அங்கு மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

அமெரிக்காவில் பெரிய பாலம் இடிந்து உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாலம் இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் வாகன போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
https://www.instagram.com/reel/C4-IEy-JoWP/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==
- உள்நாட்டில், மக்கள் மற்றும் பொருட்களை ஏற்றிச்செல்வதில் கப்பல் சேவை சிறப்பிடம் பெறுகிறது.
- கப்பல்கள் மூலம் வாணிபத்தை பெருக்கி நாட்டின் பொருளாதாரம் மேம்பட பாடுபட நாம் உறுதியேற்போம்.
ஒவ்வொரு ஆண்டும், தேசிய கடல்சார் தினம் ஏப்ரல் 5 ந் தேதி கொண்டாடப்படுகிறது. சர்வதேச வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிப்பது நாட்டின் கடல்சார் வாணிப துறை. நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் பெரிய அளவிலான பொருட்களை எடுத்து செல்வதற்கு கப்பல்கள் பயன்படுத்தப்படுகின்றன.
உள்நாட்டில், மக்கள் மற்றும் பொருட்களை ஏற்றிச்செல்வதில் கப்பல் சேவை சிறப்பிடம் பெறுகிறது.
உலக வர்த்தகம் மற்றும் பொருளாதார பரிமாற்றத்தில் தேசிய கடல்சார் துறையின் முக்கியத்துவம் குறித்து பொது மக்களுக்குப் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் தேசிய கடல்சார் தினம் ஏப்ரல் - 5 கொண்டாடப்படுகிறது.

'சிந்தியா ஸ்டீம் நேவிகேஷன்' கம்பெனி லிமிடெட்டின் முதல் கப்பலான எஸ்.எஸ்.லாயல்டியின் முயற்சி இந்தியாவின் வழிசெலுத்தலில் வரலாற்று தருணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இது வெளிநாடுகளுக்கு தனது பயணத்தைத் தொடங்கியது. குறிப்பாக கடல் வழிகள் முன்பு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்டதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
1964- ம் ஆண்டு ஏப்ரல் 5- ந் தேதி முதல் தேசிய கடல்சார் தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை மேம்படுத்துவதில் இந்தியாவின் கடல்சார் துறையின் முயற்சிகள் மற்றும் பங்களிப்புகளை அங்கீகரித்து விழிப்புணர்வு பரப்பும் நோக்கத்துடன் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

சுற்றுச்சூழல் மாசு, திருட்டு மற்றும் மாறும் வர்த்தக இயக்கவியல் ஆகியவை இத்துறை எதிர்கொள்ளும் சில சவால்களாகும். இந்தத் தொழிலின் போராட்டங்கள் குறித்து நமது கவனத்தை ஈர்ப்பதும், தீர்வுகளை திறம்பட கண்டறிய நாம் ஒன்றுபட உதவுவதும் இந்த தினத்தின் நோக்கம்.
கடல்சார் துறையை மேம்படுத்துவதற்காக அதில் ஈடுபட்டுள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு சிறப்பு விருதுகள் இன்று வழங்கப்படுகிறது. இளைய தலைமுறையினர் அதிகளவில் கடல்சார் தொழிலில் ஈடுபட வேண்டும்.
கப்பல்கள் மூலம் உள்நாட்டு, வெளிநாட்டு ஏற்றுமதி - இறக்குமதி வாணிபத்தை பெருக்கி நாட்டின் பொருளாதாரம் மேம்பட பாடுபட நாம் அனைவரும் இந்த தினத்தில் உறுதியேற்போம்.
- பிலிப்பைன்ஸ் கப்பல் மீது சீன கடலோர காவல்படை தண்ணீர் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியது.
- சீனாவின் அனுமதியின்றி இக்கடல் பகுதியில் எந்த கப்பலும் செல்ல கூடாது என மிரட்டி வருகிறது
தென் சீனக் கடலில் உள்ள பல சிறிய தீவுகளை மலேசியா, பிலிப்பைன்ஸ், சீனா போன்ற நாடுகள் உரிமை கொண்டாடி வருகின்றன. இதனால் அடிக்கடி தென் சீனக் கடலில் மோதல் நடக்கிறது.
பிலிப்பைன்சுக்கும் சீனாவுக்கும் இடையில் தென் சீனக் கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வருகிறது.இந்த விவகாரத்தில் சீனாவுக்கும் பிலிப்பைன்சுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது தென் சீனக் கடலில் சென்று கொண்டிருந்த பிலிப்பைன்ஸ் சரக்கு கப்பல் மீது சீன கடலோர காவல்படையின் கப்பல் தண்ணீர் பீரங்கிகள் மூலம் தண்ணீரை பீச்சியடித்து தாக்குதல் நடத்தியது. இதனால் தென் சீனக் கடலில் இன்று பதட்டம் ஏற்பட்டது.
இது குறித்து பிலிப்பைன்ஸ் நாட்டு அதிகாரி ஒருவர் கூறியதாவது :-
சீனாவின் கடலோரக் காவல்படை தென் சீன கடலில் சென்று கொண்டிருந்த எங்களது பிலிப்பைன்ஸ் கப்பலை இன்று காலையில் நீர் பீரங்கிகளால் 8 முறை சுட்டது. கப்பலின் உபகரணங்கள் சேதமாகி உள்ளது.

சீனாவின் அனுமதியின்றி இக்கடல் பகுதியில் எந்த கப்பலும் செல்ல கூடாது என சீன கடலோர காவல் படை மிரட்டி வருகிறது. சீன கடலோரக் காவல்படையின் துன்புறுத்தல் மற்றும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் மிகவும் கண்டிக்க தக்கது என தெரிவித்தார்.
#Philippines accuses #China's coast guard of damaging its vessel in #SouthChinaSea
— DD News (@DDNewslive) April 30, 2024
Two Chinese coast guard vessels used water cannons against the Philippine ship, which was patrolling together with a civilian fisheries vessel pic.twitter.com/Y95G3VNOCJ
- ஒரு இந்திய மாலுமி மட்டும் விடுவிக்கப்பட்டு அவர் நாடு திரும்பினார்.
- மாலுமிகளின் விடுதலையானது ஈரானின் மனிதாபிமான நடவடிக்கையாகும்.
தெக்ரான்:
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் இஸ்லாமிய புரட்சி படையை சேர்ந்த 3 முக்கிய அதிகாரிகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும் கடந்த மாதம் 13-ந்தேதி ஓமன் வளைகுடா அகில் ஹார்முஸ் ஜலசந்தியையொட்டிய பகுதியில் இஸ்ரேல் தொடர்புடைய எம்.எஸ்.சி. ஏரீஸ் என்ற சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்தது.
அந்த கப்பலில் 17 இந்தியர்கள் உள்பட 25 மாலுமிகள் இருந்தனர். இந்திய மாலுமிகளை மீட்க ஈரானுடன் இந்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. இதற்கிடையே ஒரு இந்திய மாலுமி மட்டும் விடுவிக்கப்பட்டு அவர் நாடு திரும்பினார்.
இந்த நிலையில் சுமார் 20 நாட்களுக்கு பிறகு 16 இந்திய மாலுமிகள் உள்பட கப்பலில் இருந்த 24 பேரையும் ஈரான் விடுவித்துள்ளது.
இது தொடர்பாக ஈரான் வெளியுறவுத் துறை மந்திரி ஹூசைன் அமிராபக்துல்லா ஹியன் கூறுகையில், "இஸ்ரேலுக்குத் தொடர்புடையதாக கடந்த மாதம் சிறைபிடிக்கப்பட்ட எம்.எஸ்.சி. ஏரீஸ் சரக்குக் கப்பலில் பணிபுரிந்த அனைத்து மாலுமிகளும் விடுவிக்கப்பட்டனர்.
மாலுமிகளின் விடுதலையானது ஈரானின் மனிதாபிமான நடவடிக்கையாகும். கப்பலின் கேப்டன் தலைமையில் மாலுமிகள் அனைவரும் அவரவர் சொந்த நாட்டுக்குத் திரும்பலாம். ஆனால் கப்பல் மட்டும் ஈரான் காவலிலேயே இருக்கும்" என்றார்.
- சிறப்பு கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் கப்பலில் இறங்கி அதில் இருந்த இந்திய மாலுமிகள் உள்பட 25 பேரையும் சிறை பிடித்தனர்.
- கப்பலில் இருந்த கேரளாவை சேர்ந்த ஆன்டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் விடுவிக்கப்பட்டு சொந்த ஊர் அனுப்பி வைக்கப்பட்டார்.
துபாய்:
ஐக்கிய அரபு அமீரக கடற்கரை பகுதியில் இருந்து மும்பை நவசேவா துறைமுகத்துக்கு கடந்த மாதம் 12-ந்தேதி எம்.எஸ்.சி. ஏரிஸ் என்று பெயரிடப்பட்ட சரக்கு கப்பல் கண்டெய்னர் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது.
போர்ச்சுகீசிய கொடியுடன் இஸ்ரேலுடன் தொடர்புடைய இந்த கப்பலில் இந்தியா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், ரஷியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 25 மாலுமிகள் பயணம் செய்தனர். இதில் 3 தமிழர்கள் உள்பட 18 பேர் இந்தியர்கள் ஆவார்கள்.
இந்த சரக்கு கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தி அருகில் வந்து கொண்டிருந்த போது ஈரானின் புரட்சி படையை சேர்ந்த சிறப்பு கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் கப்பலில் இறங்கி அதில் இருந்த இந்திய மாலுமிகள் உள்பட 25 பேரையும் சிறை பிடித்தனர். பின்னர் அவர்கள் ஈரான் நாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஈரான் கடற்படையினரிடம் சிக்கிய இந்திய மாலுமிகளை மீட்க மத்திய அரசு முயற்சியினை மேற்கொண்டது. இதையடுத்து இந்தியர்களை விடுவிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
கப்பலில் இருந்த கேரளாவை சேர்ந்த ஆன்டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் விடுவிக்கப்பட்டு சொந்த ஊர் அனுப்பி வைக்கப்பட்டார். கொச்சி விமான நிலையத்துக்கு வந்த அவருக்கு அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதன் தொடர்ச்சியாக மேலும் இந்திய மாலுமிகள் 5 பேர் நேற்று மாலை ஈரானில் இருந்து சொந்த நாட்டுக்கு திரும்புவதை பந்தர் அப்பாசில் உள்ள இந்திய துணை தூதரகம் உறுதிபடுத்தி உள்ளது. இது தொடர்பாக இந்திய தூதரகம் எக்ஸ் வலைதள பக்கத்தில் தகவலை வெளியிட்டு ஈரானுக்கு இந்தியா நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இவர்களை தொடர்ந்து மற்ற இந்திய மாலுமிகளும் இன்னும் ஓரிரு நாளில் சொந்த நாட்டுக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.
- கப்பல் மீதும் ஏவுகணைகள் வீசப்பட்டது.
- சேத விவரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
ஏமன்:
பாலஸ்தீனத்தில் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசாவில் இஸ்ரேல் படையினர் 7 மாதங்களுக்கு மேலாக கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
காசா மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் செங்கடல் பகுதியில் வரும் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இஸ்ரேல் நாட்டுக்கு செல்லும் சரக்கு கப்பல்களை குறி வைத்து அவர்கள் தாக்கி வருகிறார்கள். இதனால் செங்கடல் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக நேற்று செங்கடலில் ரோசா மற்றும் வான்டேஜ் பகுதிகளில் சென்ற கிரேக்க மற்றும் பர்படாஸ் நாட்டை சேர்ந்த 2 கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை சரமாரியாக வீசி தாக்கினார்கள்.
மேலும் அரபிக்கடல் பகுதியிலும் அமெரிக்க நாட்டு கப்பல் மீதும் ஏவுகணைகள் வீசப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த தாக்குதலில் சேத விவரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
- 2 மாலுமிகள் கடலில் விழுந்த நிலையில் அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
- மீட்கப்பட்ட மாலுமிகள் ஸ்பெயினின் கார்டகினா நகருக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
மாஸ்கோ:
ரஷியாவின் ஜெயின் பீட்டர்ஸ் பெர்க் நகரில் இந்து கடந்த 12ம் தேதி விளாடிவொஸ்டோக் நகரில் உள்ள துறைமுகத்திற்கு சரக்கு கப்பல் புறப்பட்டது. அந்த கப்பலில் 16 மாலுமிகள் பயணித்தனர்.
இந்நிலையில், கடந்த 22ம் தேதி மத்திய தரைக்கடல் வழியாக கடல் வழியாக கப்பல் சென்றுகொண்டிருந்தது. ஸ்பெயினின் அகுலியாஸ், அல்ஜீரியாவின் ஓரன் நகர்களுக்கு அருகே சர்வதேச கடல்பரப்பில் மத்திய தரைக்கடலில் சென்றுகொண்டிருந்தபோது கப்பலின் எஞ்சின் அறையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தீ மளமளவென கப்பலின் பிற பகுதிகளுக்கும் பரவியது. இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த ஸ்பெயின் கடற்படையினர் மற்றும் அப்பகுதியில் சென்றுகொண்டிருந்த பிற கப்பல்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதில் ரஷிய கப்பலில் இருந்து 14 மாலுமிகள் உயிருடன் மீட்கப்பட்டனர். அதேவேளை, 2 மாலுமிகள் கடலில் விழுந்த நிலையில் அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மீட்கப்பட்ட மாலுமிகள் ஸ்பெயினின் கார்டகினா நகருக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் ரஷியாவுக்கு திரும்பி அனுப்பப்பட உள்ளனர். அதேவேளை, தீப்பற்றிய சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது.
- அதிக எடை கொண்ட கிரேனை கொண்டு சென்றபோது விபத்து.
- 16 பேரில் 14 பேர் காயமின்றி உயிர் தப்பிய நிலையில் இருவரை காணவில்லை.
மத்திய தரைக்கடலில் பயணம் மேற்கொண்டபோது ஸ்பெயின் மற்றும் அல்ஜீரியா இடையில் ரஷிய உரிமையாளருக்கு சொந்தமான சரக்கு கப்பல் கவிழ்ந்து மூழ்கியது.
கப்பல் மூழ்கியதற்கு தாக்குதல்தான் காரணம் உள்ள கப்பல் உரிமையாளர் குற்றம்சாட்டியுள்ளார். கப்பலில் இரண்டு மூன்று இடங்களில் வெடிக்கும் சத்தம் கேட்டது. எஞ்ஜின் பக்கத்தில் சேதம் அடைந்தது. தொடர்ந்து கப்பலை இயக்க முடியாமல் புானதாக தெரிவித்துள்ளார்.
கப்பலில் இரண்டு அதிக எடை கொண்ட கிரேன் மற்றும் மற்ற பொருட்கள் இருந்தது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து ரஷியாவின் கிழக்கு கடற்கரையில் மிக தொலைவில் உளள விளாடிவோஸ்டாக் துறைமுகத்திற்கு கப்பல் சென்றபோது விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்கள்ளான கப்பலில் 16 பணியாளர்கள் இருந்துள்ளனர். இவர்கள் லைஃப் ஜாக்கெட் மூலம் காயமின்றி உயிர்தப்பி ஸ்பெயினுக்கு சென்றுள்ளனர். இரண்டு பேரை காணவில்லை.
- ரஷியாவுக்கு தொடர்பு இருப்பதாக நேட்டோ கூட்டமைப்பு குற்றம்சாட்டியது.
- கடற்பகுதியில் விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலம் ரோந்து பணி அதிகரிக்கப்பட்டது.
ஸ்டாக்ஹோம்:
உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோ கடலுக்கு அடியில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு வயர்களை பொருத்தி வருகிறது. அதன்படி பால்டிக் கடற்பகுதி வழியாக ஐரோப்பிய நாடான லாட்வியாவுக்கு மின்சார வயர் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் அந்த வயர்களை மர்ம கும்பல் சேதப்படுத்தியது.
இதில் ரஷியாவுக்கு தொடர்பு இருப்பதாக நேட்டோ கூட்டமைப்பு குற்றம்சாட்டியது. எனவே பால்டிக் கடற்பகுதியில் விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலம் ரோந்து பணி அதிகரிக்கப்பட்டது. அப்போது பால்டிக் கடற்பகுதியில் சந்தேகப்படும்படி சென்ற ஒரு கப்பலை சுவீடன் கடலோர போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். அதேபோல் பின்லாந்து-எஸ்டோனியா இடையே செல்லும் மின்சார வயர்களை கடந்த மாதம் ரஷிய கப்பல் சேதப்படுத்தியதாக பின்லாந்து குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டை போக்க வெளிநாடுகளில் இருந்து ஆற்று மணலை அரசே இறக்குமதி செய்து பொதுப்பணித்துறை மூலம் பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
கடந்த செப்டம்பர் மாதம் 21-ந் தேதி மலேசியாவில் இருந்து 56 ஆயிரத்து 750 மெட்ரிக்டன் ஆற்று மணல் சரக்கு கப்பல் மூலம் எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்த மணல் துறைமுக வளாகத்தில் இருப்பு வைக்கப்பட்டு பொதுப்பணித்துறை மூலம் நேரடியாக ஒரு யூனிட் மணல் ரூ.10,350 என்ற விலையில் இணைய தளத்தில் பதிவு செய்தவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த 21-ந் தேதி மலேசியாவில் இருந்து 52 ஆயிரத்து 68 மெட்ரிக் டன் ஆற்று மணல் கப்பலில் எண்ணூர் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில் 55 ஆயிரம் மெட்ரிக் டன் மலேசிய ஆற்று மணல் ஏற்றிய நிலையில் 3-வது கப்பல் எண்ணூர் துறைமுகத்துக்கு நேற்று வந்தது. ஏற்கெனவே 2-வது கப்பலில் வந்த மணல் விற்பனை இன்னும் தொடங்கப்படாத நிலையில் 3-வது கப்பலிலும் மணல் கொண்டு வரப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் மழைக்காலம் என்பதால் உள்ளூர் மணலுக்கு தட்டுப்பாடு ஏற்படும். எனவே ஒரே வாரத்தில் 2 கப்பல்களில் சுமார் 1 லட்சத்து 7 ஆயிரம் மெட்ரிக் டன் மணல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 3 கப்பல்களில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் மெட்ரிக் மணல் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. #EnnorePort
காரைக்கால்:
மும்பையில் இருந்து புதுவை மாநிலம் காரைக்காலில் உள்ள துறைமுகத்துக்கு தனியார் கப்பல் ஒன்று தூர்வாரும் பணிக்கு வந்தது. அந்த கப்பலில் கேப்டன் உள்பட 7 பேர் பணியில் இருந்தனர். துறைமுக பகுதியில் தூர்வாரும் பணி முடிந்து அடுத்த பணிக்காக அந்த கப்பல் காரைக்கால் அருகே நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி ‘கஜா’ புயல் கரையை கடந்தது.
இதன் காரணமாக காரைக்கால் பகுதியில் கடல் கொந்தளிப்பு, பயங்கர சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது. காரைக்கால் பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது.
மேலும் பலத்த சூறாவளி காற்றானது நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்ட மும்பை கப்பலை கரை நோக்கி இழுத்து வந்தது. அதில் இருந்த ஊழியர்கள் கப்பலை நிறுத்துவதற்கு முயற்சி செய்தும் பயனில்லை.
இதனால் அந்த கப்பல் காரைக்கால் அருகே மேலவாஞ்சூர் கடலில் தரைதட்டி நின்றது. அந்த கப்பலில் இருந்த ஊழியர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.
தரைதட்டி நிற்கும் கப்பலை மீட்க மும்பையில் இருந்து கப்பல் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த கப்பல் இதுவரை காரைக்கால் துறைமுகத்துக்கு வரவில்லை. இதனால் அந்த தரைதட்டிய கப்பலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 4 நாட்களாக கப்பல் அதே இடத்தில் நிற்கிறது.
இது குறித்து காரைக்கால் தனியார் துறைமுக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தரைதட்டி நிற்கும் கப்பலை மீட்பதற்கு 3 இழுவை கப்பல்கள் தேவைப்படும். ஒரு கப்பல் காரைக்கால் துறைமுகத்தில் உள்ளது. மீதி 2 கப்பல்கள் மும்பையில் இருந்து வரவேண்டும். ஆனால் தற்போது கஜா புயலை அடுத்து தொடர்ந்து புயல்கள் வர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் மும்பையில் இருந்து இழுவை கப்பல்களை வரவைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
புயல், மழை ஓய்ந்து இயல்புநிலை திரும்பிய பிறகுதான் மும்பையில் இருந்து இழுவை கப்பல்களை வரவழைக்க முடியும். அதுவரை இந்த கப்பல் அதே இடத்தில்தான் நிற்கும்.
பொதுவாக கடலின் நீர்மட்டம் அதிகளவு இருந்தால்தான் இழுவை கப்பலை இயக்க முடியும். தற்போது காரைக்கால் கடலில் நீர்மட்டம் குறைவாகவே உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாகவும் தரைதட்டி நிற்கும் கப்பலை மீட்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் மும்பையில் இருந்து இழுவை கப்பல்கள் வரவழைக்கப்பட்டு இந்த கப்பலை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கப்பலில் உள்ள 7 ஊழியர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அவர்கள் ஏற்கனவே வைத்துள்ளனர். எனவே அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. இதுவரை அவர்களும் கப்பலில் இருந்து இறங்கி வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #gajacyclone #ship #heavyrain
கடந்த 400 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து நறுமண பொருட்களை ஏற்றிக் கொண்டு போர்ச்சுக்கல் நாட்டுக்கு சென்ற கப்பல் லிஸ்பன் அருகே கடலில் மூழ்கியது.
அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் ஈடுபட்டனர். இந்த நிலையில் அந்த கப்பல் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது.
