search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sisters suicide attempt"

    • மாட்டின் உரிமையாளர் குடும்பத்தினர், சந்தியா மற்றும் சிந்தியாவை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
    • சகோதரிகள் 2 பேரும் திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வந்துள்ளனர்.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகில் உள்ள காந்திபுரி பகுதியை சேர்ந்தவர்கள் சந்தியா(வயது 23), சிந்தியா(21). இவர்கள் 2 பேரும் சகோதரிகள்.

    இதில் சந்தியாவின் ஒன்றரை வயது பெண் குழந்தையை அதே பகுதியை சேர்ந்த ஒருவருடைய மாடு முட்டியதாகவும், இதனால் அந்த குழந்தைக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் மாட்டின் உரிமையாளர் குடும்பத்தினர், சந்தியா மற்றும் சிந்தியாவை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சகோதரிகள் 2 பேரும் திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வந்துள்ளனர். ஆனால் போலீசார் புகாரை பெறாமல் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது.

    இதனால் அவர்கள் 2 பேரும் நேற்றிரவு திருச்செந்தூர் பஸ் நிலையம் முன்பு உடலில் டீசல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். அப்போது அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் அவர்களை தடுத்து காப்பாற்றினர். இதனையடுத்து தாலுகா காவல்துறையினருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தங்களுக்கு சொந்தமான இடத்தை அபகரித்து கொண்டு தங்களுக்கு பணம் தர மறுப்பதாக கூறி சகோதரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தாங்கள் கொண்டு வந்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

    திண்டுக்கல்:

    பழனி ஆர்.எப்.ரோடு பகுதியை சேர்ந்தவர்கள் நாகரத்தினம்(40) மற்றும் முத்துமாணிக்கம்(42). சகோதரிகளான இவர்கள் இன்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். அப்போது தங்களது சகோதரர் போஸ் என்பவர் தங்களுக்கு சொந்தமான இடத்தை அபகரித்து கொண்டு தங்களுக்கு பணம் தர மறுப்பதாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் தாங்கள் கொண்டு வந்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதனையடுத்து அங்கு பணியில் இருந்த காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் தெரிவிக்கையில், பழனி ஆர்.எப்.ரோட்டில் தங்கள் குடும்பத்திற்கு சொந்தமான 60 செண்ட் நிலம் உள்ளது.

    அந்த இடத்தை சகோதரர் போஸ் என்பவர் டாஸ்மாக் மற்றும் பார் வைக்க அனுமதி அளித்து அதில் வரும் வருமானத்தை தான் மட்டுமே அனுபவித்து வருகிறார். எங்களுக்குரிய பங்கை கேட்டபோது அதை தராமல் ஏமாற்றி வருகிறார். மேலும் அடியாட்கள் வைத்து மிரட்டி வருகிறார்.

    இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் தலையிட்டு இப்பிரச்சினையில் உரிய தீர்வு எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    இதனையடுத்து அவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து சென்றனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×