search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 102598"

    தஞ்சை பெரிய கோவிலில் உள்ள புல் தரையில் தண்ணீர் ஊற்றி பராமரிக்கப்பட்டு வருகிறது. கோவில் வளாகத்தில் உள்ள தரை விரிப்புகள் மீது தண்ணீர் பாய்ச்சி குளுமையாக வைக்கப்பட்டுள்ளது.
    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்றது. தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பெரிய கோவிலுக்கு வந்து செல்கின்றனர். தற்போது தஞ்சையில் வரலாறு காணாத அளவுக்கு வெயில் அடிக்கிறது.

    100 டிகிரியை தாண்டி அடிக்கும் வெப்பத்தால் பெரிய கோவில் வளாகத்தில் உள்ள கருங்கல் தரைகளில் நடப்பதற்கு சுற்றுலா பயணிகள் கஷ்டப்பட்டனர். இதை போக்குவதற்கு வளாகத்தில் அனைத்து புறங்களிலும் தரைவிரிப்புகள் விரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் அடிக்கடி தண்ணீர் பாய்ச்சி குளுமையாக வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மேட்டில் நடந்து செல்லும்போது வெப்பத்தின் தாக்கம் தெரியவில்லை. இதேப்போல் அங்குள்ள புற்கள் வெயிலால் அடிக்கடி காய்ந்து போகும் நிலை ஏற்பட்டது. இதை தடுக்க புல் தரையிலும் தண்ணீர் தெளித்து பராமரிக்கப்படுகிறது.

    மேலும் புற்கள் சீராக வளர்வதற்கு அடிக்கடி அதனை எந்திரம் மூலம் மட்டமாக்கும் பணியும் நடந்து வருகிறது. இப்படி செய்வதால் புற்கள் சீராகவும், பசுமையாகவும் வளர்கிறது. இந்த பணி வெயில் காலத்தில் மட்டுமில்லாமல் அனைத்து காலங்களிலும் தொடர வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் விருப்பமாகும்.

    ஆதி திராவிடர் விடுதி வளாகத்தினை முறையாக பராமரிக்காமல் இருந்த காரணத்திற்காக விடுதி காப்பாளரை கலெக்டர் ‘சஸ்பெண்டு’ செய்ய உத்தரவிட்டார்.
    கோவை:

    கோவை பாலசுந்தரம் ரோட்டில், மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறையின் மூலம் டாக்டர் அம்பேத்கர் ஆதி திராவிடர் கல்லூரி மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது.

    இவ்விடுதியில் 174 கல்லூரி மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். இவ்விடுதியின் பராமரிப்பு பணிக்கென ஒரு விடுதிக் காப்பாளர், 3 சமையலர், ஒரு உதவி பணியாளர், ஒரு துப்புறவு பணியாளர் என மொத்தம் 6 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்நிலையில் இவ்விடுதியில் இன்று மாவட்ட கலெக்டர் ராஜாமணி திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது விடுதியின் சமையல் அறை, மாணவர்கள் அறை, கழிப்பறை, மற்றும் விடுதி வளாகம் என ஒவ்வொரு பகுதிகளிலும் கலெக்டர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

    இவ்விடுதி வளாகத்தினை முறையாக பராமரிக்காமல் இருந்த காரணத்திற்காக தனது பணியினை சரிவர மேற்கொள்ளாத விடுதி காப்பாளர் ஆர்.ஜெகநாதனை ‘சஸ்பெண்டு’ செய்ய கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டார்.

    மேலும், விடுதியினை முறையாக 2 நாட்களுக்குள் சீர்செய்யும்படியும், மாவட்ட கலெக்டர் ராசாமணி மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். #tamilnews
    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி முறையாக பராமரிக்கப்படுகிறது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. #GovernmentStaff #Teacher #PensionScheme #TNGovernment
    சென்னை:

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி முறையாக பராமரிக்கப்படுகிறது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி பராமரிப்பு பற்றி தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வரும் நிலையில் அது பற்றிய உண்மை நிலையை விளக்க வேண்டியது அவசியமாகிறது.

    பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை 2003-ல் நடைமுறைக்கு கொண்டுவந்த பின்பு, அத்திட்டப்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு, அதற்கு ஈடாக 10 சதவீதம் தொகையை அரசு வழங்கி வருகிறது. இத்திட்டப்படி இந்தத் தொகைகளை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை நிறுவனத்துக்கு மாற்றம் செய்ய முடிவெடுக்காத நிலையில் இந்த நிதி தனி பொதுக்கணக்கில் இருப்பு வைத்து பராமரிக்கப்படுகிறது.

    இந்த நிதி அவ்வப்போது மத்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் கருவூல பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது. சேமநல வைப்பு நிதி வட்டி வீதத்தின்படி வட்டியைக் கணக்கிட்டு, அத்தொகைக்கும் கருவூல பத்திரங்களில் கிடைக்கும் வட்டிக்கும் உள்ள வித்தியாசத் தொகையை மாநில அரசே பொறுப்பேற்று அதை கருவூல பத்திர முதலீட்டில் கிடைக்கும் வட்டியுடன் இந்த பொதுக் கணக்கு நிதியில் சேர்க்கப்படுகிறது.

    அந்தவகையில் அரசு 2017-18-ம் ஆண்டு வரை ரூ.2,115.47 கோடி கூடுதல் வட்டியை வழங்கியுள்ளது. இந்த நிதியில் உரியவாறு ஆண்டுதோறும் பிடித்தம் செய்யப்படும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புத் தொகை, அதற்கு ஈடான அரசின் பங்களிப்புத் தொகை மற்றும் அதற்கான வட்டித் தொகை முறையாக சேர்க்கப்படுகிறதா? என மத்திய கணக்கு ஆய்வாளரால் சரிபார்க்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை இந்த நிதியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு ரூ.8,283.97 கோடியுடன் அரசின் பங்களிப்பாகப் பெறப்பட்ட ரூ.8,283.97 கோடியும், பெறப்பட்ட வட்டியாக ரூ.5,252.90 கோடியும் பொதுக்கணக்கில் இருப்பு வைக்கப்பட்டு முறையாக பராமரிக்கப்படுகிறது.

    நடப்பு ஆண்டிலும் பெறப்படும் பங்களிப்புத் தொகை முறையாக வரவு வைக்கப்படுவதுடன் ஆண்டின் இறுதியில் அதற்கான வட்டியும் கணக்கிடப்பட்டு அதுவும் இந்த பொதுக் கணக்கு நிதியில் சேர்க்கப்படும். ஒவ்வொரு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியரின் கணக்கிலும் அவர்களின் பங்களிப்புத் தொகை எவ்வளவு?, அரசு அதற்கு ஈடாகச் செலுத்திய தொகை எவ்வளவு?, சேர்ந்துள்ள வட்டித் தொகை எவ்வளவு? என்பதை முறையாக அரசு தகவல் தொகுப்பு விவர மையம் மூலம் கணக்கிட்டு கணக்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. அதன் விவரத்தை சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் http://cps.tn.gov.in/pub-l-ic இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிதி தனி பொதுக்கணக்கு வட்டியுடன் பராமரிக்கப்பட்டு வருகிறது. எனவே பிடித்தம் செய்யப்பட்ட நிதி முறையாக பராமரிக்கப்படுவதுடன் அதற்கான வட்டி, சேமநல நிதிக்கு தற்போது கிடைக்கும் வட்டி அளவான 8 சதவீதம் என்ற அடிப்படையில் கணக்கிடப்பட்டு சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 
    வளசரவாக்கம் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை பராமரிப்புக்கு மாதந்தோறும் தமிழக அரசு ரூ.2,165 வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #RescueChild
    சென்னை:

    வளசரவாக்கம் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தொடர் பராமரிப்பில் இருந்து வந்தது.

    சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உத்தரவுப்படி அந்த குழந்தைக்கு தாய்ப்பால் வங்கியில் இருந்து தாய்ப்பால் வழங்கப்பட்டது. இப்போது அந்த குழந்தை சீராக உடல் ஆரோக்கியமாக உள்ளது.

    இந்த குழந்தையை தொடர் பாதுகாப்புக்காக அமைச்சர் விஜயபாஸ்கர் சமூக நலத்துறையிடம் ஒப்படைக்கும் விதமாக அமைச்சர் சரோஜாவிடம் ஒப்படைத்தார். பின்னர் அந்த குழந்தை காருண்யா தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்த குழந்தைக்கு தேவையான தாய்ப்பால் வழங்கப்படுவதுடன் குழந்தை பராமரிப்புக்காக மாதந்தோறும் தமிழக அரசு ரூ.2,165 வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. #RescueChild

    தாஜ்மகால் உலக பாரம்பரிய சின்னம் என்று அளித்து உள்ள அங்கீகாரத்தை யுனஸ்கோ திரும்பப்பெற்று விட்டால் என்ன செய்வீர்கள்? என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. #TajMahal #SupremeCourt
    புதுடெல்லி:

    உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிற தாஜ்மகால், சுற்றுச்சூழல் மாசு காரணமாக தனது பொலிவை இழந்து வருகிறது.

    சமீபத்தில் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடுமையாக கருத்து தெரிவித்தது. தாஜ்மகாலை பாதுகாக்க முடியாவிட்டால் இடித்துவிடுங்கள் என்று மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு கூறியது.



    இது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் மதன் பி. லோகுர், தீபக் குப்தா ஆகியோர் நேற்று விசாரித்தனர்.

    அப்போது ஏற்கனவே உத்தரவிட்டபடி, தாஜ்மகால் பாதுகாப்பு தொடர்பான வரைவு திட்டத்தை தாக்கல் செய்யாததை நீதிபதிகள் கடுமையாக சாடினர்.

    தாஜ்மகால் பாதுகாப்புக்கு பொறுப்பான தொல்லியல் ஆய்வு அமைப்பு, இந்த விஷயத்தில் ஆலோசிக்கப்படாதது கண்டு நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

    அப்போது அட்டார்னி ஜெனரல் (மத்திய அரசின் தலைமை வக்கீல்) கே.கே. வேணுகோபாலிடம் நீதிபதிகள், “யுனஸ்கோவின் உலக பாரம்பரிய மையம் பாரீசில் இருக்கிறது. தாஜ்மகால் பாதுகாப்பு நிர்வாக திட்டத்தை அங்கு தாக்கல் செய்கிறீர்களா? இதை நீங்கள் தாக்கல் செய்யவில்லை. தாஜ்மகால் உலக பாரம்பரிய சின்னம் என்று அளித்து உள்ள அங்கீகாரத்தை யுனஸ்கோ திரும்பப்பெற்று விட்டால் என்ன செய்வீர்கள்?”என காட்டமாக கேட்டனர்.

    மேலும் தாஜ்மகால் பராமரிப்பு, பாதுகாப்புக்கு யார் பொறுப்பு என்பது குறித்து அட்டார்னி ஜெனரல் 30-ந் தேதிக்குள் தெரிவிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  #TajMahal #SupremeCourt #Tamilnews
    சென்னை-கூடூர் இடையே பராமரிப்பு பணி காரணமாக இன்று (வியாழக்கிழமை) முதல் 30-ந் தேதி வரை (25-ந் தேதி தவிர) மின்சார ரெயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன
    சென்னை:

    சென்னை-கூடூர் இடையே பராமரிப்பு பணி காரணமாக இன்று (வியாழக்கிழமை) முதல் 30-ந் தேதி வரை (25-ந் தேதி தவிர) மின்சார ரெயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    * மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி இடையே இரவு 12.15 மணிக்கும், கும்மிடிப்பூண்டி-மூர்மார்க்கெட் இடையே நள்ளிரவு 2.45 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

    * மூர்மார்க்கெட்-சூலூர்ப்பேட்டை இடையே அதிகாலை 4.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் எண்ணூர் வரை மட்டுமே இயக்கப்படும். மறுமார்க்கமாக அதிகாலை 4.55 மணிக்கு இயக்கப்படும் சூலூர்ப்பேட்டை-மூர்மார்க்கெட் இடையே இயக்கப்படும் மின்சார ரெயில் எண்ணூரில் இருந்து புறப்படும்.

    * கும்மிடிப்பூண்டி-சூலூர்ப்பேட்டை இடையே அதிகாலை 5.38 மணிக்கு சிறப்பு மின்சார ரெயில் இயக்கப்பட உள்ளது.

    மேற்கண்ட தகவல்கள் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளன. 
    நாகக்குடையான் ஊராட்சியில், பராமரிப்பின்றி காணப்படும் சிறுவர் பூங்கா சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் பல்வேறு ஊராட்சிகளில் அரசின் செலவில் சிறுவர்களின் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கிற்காக பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த பூங்காக்களில் சறுக்கு விளையாட்டு உபகரணம், ஊஞ்சல், உடற்பயிற்சி சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் பல்வேறு ஊராட்சிகளில் சிறுவர் பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் பராமரிப்பு இன்றி துருப்பிடித்து சேதமடைந்துள்ளன. இதே போல நாகக்குடையான் ஊராட்சியில் ஜீவா நகர் சாலையில் ஊராட்சி சேவைக்கட்டிடத்தின் எதிர்புறத்தில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பூங்கா பராமரிப்பின்றி காணப்படுகிறது. பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் பராமரிப்பின்றி பழுதடைந்துள்ளது. ஆடு, மாடுகள் கட்டும் இடமாக மாறியுள்ளது.

    மேலும், சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது. பல லட்ச ரூபாய் செலவு செய்து அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா மக்களுக்கு உபயோகப்படாமல் உள்ளது.

    எனவே பராமரிப்பின்றி காணப்படும் சிறுவர் பூங்காவை சீரமைத்து பழுதடைந்துள்ள விளையாட்டு உபகரணங்களை மாற்றி அமைக்கசம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என அந்த பகுதி பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். 
    ×