search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்கள்"

    ஒரு கண் பார்வையை மருத்துவ மொழியில் ‘மோனோகுலர் வி‌‌ஷன்’ என்கிறார்கள். ஒற்றைக் கண் பார்வை இழப்பு என்பது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்படலாம்.
    ஒரு கண் பார்வையை மருத்துவ மொழியில் ‘மோனோகுலர் வி‌‌ஷன்’ என்கிறார்கள். சிலருக்கு சில மணி நேரம் மட்டும் பார்வை இழப்பு ஏற்படும். சிலருக்கு சில நாள்களுக்கு மட்டும் பார்வை இழப்பு ஏற்படலாம். சிலருக்குப் பார்வைக் குறைபாடு சில ஆண்டுகளாகக் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்டுக்கொண்டே வந்திருக்கலாம். ஒற்றைக் கண் பார்வை இழப்பு என்பது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்படலாம். ஒரு கண் பார்வை இழப்பை, சிகிச்சையளிக்கக்கூடிய பாதிப்பு, சிகிச்சையளிக்க முடியாத பாதிப்பு என இரண்டாகப் பிரிக்கலாம்.

    ஒரு கண் பார்வை நேராகவும், அடுத்த கண்ணின் பார்வை விலகிய நிலையிலும் காணப்படுவதை மாறுகண் என்கிறோம். மாறுகண் இருப்பவர் அதிர்‌‌ஷ்டசாலி என்ற தவறான கண்ணோட்டம் இருக்கிறது. மருத்துவ ரீதியாக, மாறுகண்ணை குணப்படுத்தவில்லை என்றால், பார்வையை இழக்க நேரிடும். எந்தக் கண்ணின் பார்வை விலகிய நிலையில் இருக்கிறதோ, அந்தக் கண்ணின் நரம்பு வழியாகச் செல்லும் தகவல்கள் மூளையில் சரியாகப் பதிவாகாது.

    மற்றொரு கண்ணிலிருந்து செல்லும் தகவல்கள் தெளிவாகப் பதிவாகும். இந்த நிலை தொடரும்போது, ஒரு கட்டத்தில் எந்தக் கண்ணிலிருந்து தெளிவான தகவல் கிடைக்கவில்லையோ, அந்தத் தகவல்களை மூளை புறக்கணிக்கத் தொடங்கும். அப்போது மூளை புறக்கணித்த கண்ணின் செயல்பாடு குறையத் தொடங்கும். குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர் எந்தச் சிகிச்சையளித்தாலும் பயனளிக்காது. அழகியல் சிகிச்சைக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டு, விலகியிருக்கும் கண்ணை நேராக்க முடியும். ஆனால், பார்வையைத் திரும்பப் பெற முடியாது.

    கிட்டப் பார்வை, தூரப் பார்வை பிரச்சினைகள் இரு கண்களிலும் ஏற்பட வேண்டும் என்பது இல்லை. ஒரு கண்ணில் மட்டும் சிலருக்கு இந்தப் பிரச்னை ஏற்படும். அப்போது, நன்றாகத் தெரியும் கண்ணை வைத்து சமாளித்துக்கொண்டே இருப்பார்கள். நன்றாக இருக்கும் கண்ணில் அதிக அழுத்தம் கொடுக்கும் போது தலைவலி ஏற்படும். அதன் பிறகுதான் மருத்துவரை நாடுவார்கள். சிலர், ஒரு கண்ணில் பிரச்சினை இருக்கிறது என்பதை உணராமலேயே இருப்பார்கள். ஆரம்பத்திலேயே கண்டறிந்து இதற்குத் தீர்வு காணாவிட்டால், குறைபாடுள்ள கண்ணில் பார்வையை இழக்க நேரிடும். உலக அளவில் கிட்டப் பார்வை, தூரப் பார்வையால் பார்வை இழப்பது அதிகரித்து வருகிறது. கிட்டப் பார்வை, தூரப் பார்வையால் மாறு கண் பிரச்சினையும் ஏற்படலாம்.

    குழந்தைகளைப் பொறுத்தவரை ஒரு கண் பார்வை இழப்புக்குப் பிரதான காரணம், பள்ளியில் சக வயதினரோடு பழகும்போது பென்சில், பேனாக்களால் கண்ணில் ஏற்படும் விபத்துகள். இவை தவிர, பட்டாசு விபத்துகள், கழிவறையில் பயன்படுத்தும் ஆசிட் போன்ற ரசாயனங்கள், சுண்ணாம்பு போன்றவை கண்ணில்படுதல் காரணமாகவும் ஒரு கண்ணில் பார்வையை இழப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. அரிதாக, ரத்தச்சோகை, கண்களில் புற்றுநோய், தலசீமியா போன்ற ரத்தம் சார்ந்த குறைபாடுகள், சாலை விபத்துகள் ஆகியவையும் குழந்தைகளின் ஒரு கண் இழப்புக்குக் காரணமாக அமைகின்றன.

    அதேபோல தாயின் கர்ப்பப்பையிலிருந்து குழந்தை வெளியே வரும்போது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டு உபகரணங்களைப் பயன்படுத்தி குழந்தையை வெளியே எடுக்க முயல்வார்கள். அப்போது அந்த உபகரணங்களைச் சரியாகக் கையாளவில்லை என்றால், கண்களில் அதிக அழுத்தம் ஏற்பட்டு, ஒரு கண்ணில் பார்வையை இழக்க நேரிடும். அதனால் தான் ஐந்து வயதுக்குள் அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாயம் கண் பரிசோதனை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

    கணினி, மொபைல், தொலைக்காட்சியை அதிகமாக பார்ப்பதால் கண்ணில் சோர்வு, கருவளையங்கள் உருவாகிறது. உங்கள் கண்கள் பிரகாசிக்க உதவும் 5 இயற்கை கண் மாஸ்க்குகளை பார்க்கலாம்.
    கணினி திரைகள், மொபைல் போன்கள் மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றின் தொடர்ச்சியான பார்வையால் கண் சோர்வு மற்றும் கரு வளையங்கள் உருவாகிறது. உங்கள் கண்களுக்கு போதுமான ஓய்வு தவிர தினசரி உடற்பயிற்சி முக்கியம், அது பார்வை நரம்புகளுக்கு ஆக்சிஜன் சப்ளையை அதிகரிக்க  உதவுகிறது. உங்கள் கண்கள் பிரகாசிக்க உதவும் இயற்கை வீட்டு வைத்தியங்களை பார்க்கலாம்.

    1. வெள்ளரிக்காய் பிழிந்து அதன் சாற்றை, அரை மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். இச்சாற்றை கண்களில் மசாஜ் செய்து 30 நிமிடங்கள் விடவும். பிறகு குளிர்ந்த நீரில் அதை கழுவவும். கண்கள் பிரகாசிப்பதை உடனே காணலாம்.

    2. பாதாம் எண்ணெய் தோலில் ஒரு ஹைட்ரேட்டர் போல் செயல்படுகிறது. இது கருவளையத்தையும் குறைக்கும். பாதாம் எண்ணெயுடன் தேன் கலந்து தினம் இரவு கண்களைச் சுற்றி மசாஜ் செய்ய வேண்டும்.

    3. சோர்வான கண்களுக்கு இது சிறந்த மருந்தாகும். சிறிய அளவு காட்டனை ரோஸ் வாட்டரில் நனைத்து 15 நிமிடங்கள் கண்களில் வைக்கவும். இது கண்சோர்வை குறைக்கும்.
     
    4. 4 தேக்கரண்டி பால் மற்றும்  2 தேக்கரண்டி சமையல் சோடாவை ஒன்றாக கலக்கவும். அதை சிறிது நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும், கண்களைச் சுற்றி இந்த குளிர்ந்த கிரீம்மை மாஸ்க் போல் பயன்படுத்துங்கள். 20-25 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். உங்கள் கண்கள் புத்துயிர் மற்றும் ஆரோக்கியம்  பெரும்.

    5. பச்சை தேயிலை, கறுப்பு தேநீர் மற்றும் பல்வேறு பிற மூலிகை தேநீர் வகைகள் கருவளையத்திற்கு பெரிய தீர்வாகும். 5 முதல் 10 நிமிடங்களுக்கு குளிர்சாதன பெட்டியில் சில தேநீர் பைகளை வைக்கவும். பின்னர் 10-15 நிமிடங்கள் உங்கள் கண்களில் இந்த குளிர்ந்த தேநீர் பைகளை வைக்கவும். இது உங்கள் கண்களை சுற்றியுள்ள வீக்கம் மற்றும் கருவளையத்தை நீக்கும். 
    கண்களுக்கு காஜல்களைப் பயன்படுத்தும்போது நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும். செயற்கையான காஜல் எதுவுமே கண்களுக்கு நன்மையைத் தராது.
    காஜல் கண்களுக்கு அழகு சேர்ப்பது மட்டுமல்லாமல் மாசிலிருந்தும் பாதுகாக்க உதவுகிறது. சீக்கிரம் அழியாது என்பதற்காகச் செயற்கை ரசாயனப் பொருள்கள் அதிகளவில் கலந்த காஜலைச் சிலர் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், அதில் லெட் சல்பேட் போன்ற ரசாயனம் கலந்திருப்பதால் கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். இப்போது, புதிதாக பென் (pen) மாதிரியான வடிவில் ப்ரௌன், ப்ளாக் கலர்ஸில் கிடைக்கின்றன. இவை மாதிரியான காஜல்களைப் பயன்படுத்தும்போது நாம்தான் மிகக் கவனமாக இருக்க வேண்டும். செயற்கையான காஜல் எதுவுமே கண்களுக்கு நன்மையைத் தராது.  

    இந்தப் பாதிப்புகளைத் தவிர்க்க வீட்டிலேயே காஜல் தயாரிக்கலாம். கரிசலாங்கண்ணி சாற்றில் ஊறவைத்துக் காய்ந்த, காட்டன் திரியை நல்லெண்ணெய் ஊற்றிய விளக்கில் எரியவிடவும். அந்த விளக்கின் மேல் பகுதியில் குமிழ் போன்ற பாத்திரத்தைப் பாதி திறந்த நிலையில் வைக்கும்போது, அதில் கரித்துகள் படியும். இதை பேஸ்ட் மாதிரி எடுத்து வைத்து, அதனுடன் விளக்கெண்ணெய் கலந்து பயன்படுத்தினால் கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும்; பக்க விளைவுகளும் கிடையாது.

    ஹெர்பல் காஜல்ஸ் அதிகமாகக் குமிழ் மாதிரியான வடிவில்தான் அதிகம் வரும். ஆனால், இது சீக்கிரமே அழிந்துவிடாமல் இருப்பதற்குக் கொஞ்சம் விளக்கெண்ணெய்யைக் கலந்துகொண்டு பயன்படுத்தலாம்.

    காஜலைப் பயன்படுத்துவதைப் போலவே ரிமூவ் செய்வதிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

    செயற்கையான ரிமூவர்ஸில் ஆல்கஹால் அதிகமாக இருக்கும். ஆல்கஹால் இருந்தால்தான் காஜல், மஸ்காரா, ஐ ஷேடோவை முழுமையாகச் சுத்தப்படுத்த முடியும். ரிமூவர்ஸ் எப்போதாவது பயன்படுத்துவது தவறு இல்லை. தினமும் என்றால், கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

    காஜல் கண்களுக்கு உட்பகுதில போடுவது ஒரு வகை, கண்களின் கீழ்ப் பகுதியில் போடுவது மற்றொரு வகை. கண்கள் பெரிதாக, அழகாகத் தெரிய வேண்டும் என நினைப்பவர்கள் கண்களின் உட்பகுதியிலும் கீழ்ப்பகுதியிலும் காஜல் அப்ளைப் பண்ணும்போது ரொம்ப அட்ராக்டிவான அழகைக் கொடுக்கும். கண்கள் சிறியதாக இருப்பவர்கள், குட்டி லைன் மாதிரி காஜல் போடலாம். திக்கா போட்டால் கண்கள் இன்னும் ரொம்பச் சிறியதாகத் தெரியும்.
    பெண்களின் அழகை அதிகரித்து காட்டுவது புருவங்கள். புருவங்களின் அழகை பாதுகாக்க என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    புருவங்களை எப்போதும் திரெடிங் முறையில் அகற்றுவதே மிகவும் நல்லது. சிலர் வாக்சிங் முறையிலும் அகற்றுவதுண்டு. வாக்சிங் செய்வதால் நாளடைவில் அந்த இடத்துத் தசைகள் சுருங்கித் தொய்ந்து போகக் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே வாக்சிங் முறையில் புருவங்களை நீக்ககூடாது சிலர் பிளேடு உபயோகித்துப் புருவங்களை ஷேப் செய்வதும் உண்டு.

    இந்த முறை மிகவும் ஆபத்தானது. அப்படி அகற்றும் போது அந்த இடத்து முடிகள் மறுபடி வளரும் போது மிகவும் அடர்த்தியாக மற்றும் ஒழுங்கற்ற முறையில் வளரும்.  எனவே இவ்வாறு செய்யகூடாது. புருவங்கள் நரைத் திருந்தால் மஸ்காராவை உபயோகித்து கருப்பாக்கிக் கொள்ளலாம். மஸ்காரா பிரஷ்ஷை லேசாகக் காயவைத்து நரையை மறைக்கத் தடவலாம். ஐப்ரோபென்சில் உபயோகிப்பதை விட இப்படிச் செய்வது மிகவும் அழகாக, இயற்கையாக இருக்கும்.

    கண்களுக்கு அடிக்கடி ஐபேட் உபயோகிக்கலாம். இது கண்கள் குளிர்ச்சி அடைவதற்கும், புருவங்களின் சீராக வளர்வதற்கும் உதவும். புருவங்களின் வளர்ச்சிக்கு லாவண்டர், ரேஸ்மெரி, மாதிரியான அரோமா எண்ணெய்கள் மிகவும் சிறந்தவை. அவற்றை சூடுபடுத்தாமல் அப்படியே மசாஜ் செய்ய உபயோகிக்க வேண்டும்.
    பெண்களுக்கு சென்சிட்டிவ் கண்கள் இருப்பது கொஞ்சம் ரிஸ்க்கான விஷயமாகத்தான். சென்சிட்டிவ் கண்களுடைய பெண்களுக்கான எளிய மேக்கப் டிப்ஸை பார்க்கலாம்.
    சென்சிட்டிவ்வான கண்களை உடையவர்களுக்கு கண்களில் எரிச்சல் ஏற்படுவது பொதுவான ஒன்று. இது அவர்களுடைய அன்றாட வேலைகளைப் பெரும்பாலும் பாதிக்கிறது. அதுவும், பெண்களுக்கு சென்சிட்டிவ் கண்கள் இருப்பது கொஞ்சம் ரிஸ்க்கான விஷயமாகத்தான் உள்ளது. குறிப்பாக, அவர்கள் தங்கள் கண்களை அழகு படுத்திக்கொள்ள நினைக்கும் போது, மிகவும் சிரமப்படுவார்கள். அவர்கள் கண்களுக்கு சரியாக மேக்கப் செய்யவில்லையென்றால், கண்களில் எரிச்சல் ஏற்படும், கண்கள் கலங்கும், பலருக்கு கண்கள் சிவந்து விடும். சென்சிட்டிவ் கண்களுடைய பெண்கள் மேற்கொள்ள வேண்டிய சில எளிய மேக்கப் டிப்ஸ்கள்.

    * சுத்தம் செய்யப்படாத பிரஷ்சைக் கொண்டு உங்கள் கண்களுக்கு மேக்கப் செய்தால் அதில் உள்ள அழுக்குகள் உங்கள் கண்களைப் பாதிக்கும். எனவே, அந்த பிரஷ்சை சோப்பு அல்லது ஷாம்பு போட்டு சுத்தமாகக் கழுவி, சுத்தமான துணியால் துடைத்து விட்டு, அப்புறம் உபயோகிக்கவும்

    * உங்களுக்கு சென்சிட்டிவ்வான கண்கள் இருந்தால், பவுடர் ஷேடோக்கள் அல்லது பளபளப்பான ஷேடோக்களைப் பயன்படுத்துவதை தவிருங்கள். அதற்குப்பதில், க்ரீம் ஷேடோக்களையே பயன்படுத்துங்கள்.

    * கண்களின் உள் பகுதிகளில் லைனிங் செய்வது நல்லதுதான். அது கண்களைப் பெரிதாகவும் அழகாகவும் காட்டும். ஆனால், சென்சிட்டிவ் கண்கள் உடையவர்கள் இதைத் தவிர்த்தே ஆகவேண்டும்.

    * பிரைமர்கள் மற்றும் பவுண்டேசன் ஆகியவை மிகவும் முக்கியம். அவை உங்கள் சென்சிட்டிவ்வான கண்களைப் பாதிக்காத வகையில் பார்த்துக்கொள்ளும். ஆனால் சரியான மற்றும் தரமான பிரைமர்கள் மற்றும் பவுண்டேசன் பொருள்களை மட்டும் பயன்படுத்தவும்.

    * சென்சிட்டிவ்வான கண்களுக்கு மஸ்காரா ஒரு வில்லன்தான். அதில் உள்ள நார்ச்சத்துப்பொருள்கள் கண்களுக்கு நல்லதல்ல. எனவே, மஸ்காராவைத் தவிர்க்கவும்.

    * சென்சிட்டிவ்வான கண்களை அதிக கவனத்துடன் பராமரிக்க வேண்டும். மேக்கப் போடும்போது கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கண்களைக் கசக்கக்கூடாது.

    * எவ்வளவு அக்கறையோடு உங்கள் கண்களுக்கும் முகத்துக்கும் மேக்கப் போடுகிறீர்களோ, அதே அக்கறையோடும் நேரத்தோடும் சரியான வழிமுறைகளோடும் மேக்கப்பை தேவையில்லாத போது கலைத்துவிடவும் வேண்டும். உங்கள் சென்சிட்டிவ்வான கண்களுக்கு இதுதான் பாதுகாப்பு.

    * சென்சிட்டிவ்வான கண்களை உடைய நீங்கள், அடர்த்தியான கருமைநிற கண் மையைப் பயன்படுத்துவதற்கு பதில், சில லைட்டான நிறங்களைப் பயன்படுத்திப் பாருங்கள். அது உங்கள் கண்களுக்கு மிகவும் நல்லது.

    கண்கள் உங்கள் உடலின் ஆரோக்கியத்தினை எளிதாய் வெளிப்படுத்தி விடும். கண்களின் ஆரோக்கியத்தினை அறிந்து கொள்வது எப்படி என்று பார்க்கலாம்.
    உங்கள் கண்கள் உங்களுக்கு சொல்வது என்ன? கண்கள் உங்கள் உடலின் ஆரோக்கியத்தினை எளிதாய் வெளிப்படுத்தி விடும்.

    * கண்ணில் இரைப்பையின் முடிகாலில் வரும் கட்டி மிகவும் வலி கொடுக்கும். சில நாட்கள் முதல் சில மாதங்கள் வரை கூட இருக்கக்கூடும். பொதுவில் உடனடி மருத்துவ உதவி பெறுவதே இதற்கு தீர்வாக அமையும். ஆனால் தொடர்ந்து ஒரே இடத்தில் வருவது, நீண்ட கால தொந்தரவு இவைகளை காலம் தாழ்த்தாமல் உடனடியாக கவனிக்க வேண்டும்.

    * புருவ முடி சிலருக்கு சீக்கிரமாகவே மெலிந்து வரும். வயது, சக்தியின்மை, ஸ்ட்ரெஸ் இவையெல்லாம் ஒரு காரணம் என்றாலும் தலையில் வழுக்கை ஏற்படுவது போல புருவ முடியிலும் ஏற்படலாம். தைராய்டு குறைபாடு காரணமாக இருக்கலாம். உரிய கவனம் கொள்ளுங்கள்.

    இன்றைய கால கட்டத்தில் கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து காலை முதல் இரவு வரை வேலை செய்வதே வழக்கமாகி விட்டது. கம்ப்யூட்டர் முன்னேற்றம் உலகையே உங்களிடம் அழைத்து வந்துவிடும் என்றாலும் கண்களுக்கு ஏற்படும் அதிக உழைப்பு பற்றி கண்டிப்பாக கண் மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்.

    * கண்கள் சற்று வெளிவந்தது போல் இருந்தாலும் தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம்.

    * கண் வெள்ளை, மஞ்சள் நிறத்தில் இருந்தால் அனைவரும் அறிந்ததே. மஞ்சள்காமாலைக்கு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    * சர்க்கரை நோய் பலவித கண் பிரச்சினைகளை கொடுக்கலாம். வருடம் ஒருமுறை கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    * திடீரென கண் பார்வை மங்குதல், சரியான பார்வை இன்மை போன்றவை உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவை.
    காஜலை போட்டவர்கள் சரியாக அதனை நீக்காமல் இருப்பதும் கருவளையத்திற்கு காரணம். ஆகவே அத்தகைய காஜலை சரியாக நீக்குவதற்கு ஒரு சில டிப்ஸ் இருக்கிறது.
    பெண்கள் அழகுக்காக பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தான் காஜல். அவ்வாறு தினமும் காஜலைப் பயன்படுத்தும் பெண்கள் ஒரு நாள் அதனை பயன்படுத்தவில்லை என்றாலும், பார்க்க ஏதோ ஒன்று குறைந்தது போல் காணப்படுவர். அதிலும் காஜல் நிறைய வகையில் தற்போது கடைகளில் விற்கப்படுகின்றன.

    மேலும் அந்த காஜலை வீட்டிலே கூட தயாரிக்கலாம் அல்லது காஸ்மெடிக்ஸ் கடைகளில் வாங்கலாம். தற்போது அவ்வாறு காஜலைப் பயன்படுத்தும் பெண்களுக்கு இருக்கும் ஒரு பிரச்சனை தான், கண்களுக்கு போடும் காஜல் கலைந்துவிட்டு, முக அழகை கெடுத்துவிடுகின்றன. அதனாலேயே நிறைய பெண்களுக்கு கருவளையம் வந்துவிட்டது போன்று காணப்படுகிறது.

    சிலசமயங்களில் அந்த காஜலை போட்டவர்கள் சரியாக அதனை நீக்காமல் இருப்பதும் கருவளையத்திற்கு காரணம். ஆகவே அத்தகைய காஜலை சரியாக நீக்குவதற்கு ஒரு சில டிப்ஸ் இருக்கிறது. அவை இதோ……

    * தினமும் முகத்தை கிளின்சிங் மில்க்கை வைத்து கழுவ வேண்டும். இதுவும் மேக்கப்பில் ஒரு வித பகுதி தான். அதிலும் முகத்திற்கு என்னதான் மேக்கப் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ போட்டாலும், கிளின்சிங் மில்க்கால் கழுவ வேண்டும். அதிலும் காஜலை எளிதாக நீக்குவதற்கு, கிளின்சிங் மில்க்கை முகத்திற்கு தடவி, முகம் மற்றும் கண்களுக்கு நன்கு மசாஜ் செய்ய வேண்டும். பின் அதனை ஒரு காட்டனை வைத்து, துடைத்து எடுக்க வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் காஜல் வருவதோடு, அழுக்குகளும் வந்துவிடும். இல்லையெனில் மேக்கப் ரிமூவல் க்ரீம் என்று விற்கப்படும் கிரீமையும் பயன்படுத்தி நீக்கலாம்.

    * காஜல் பயன்படுத்தியதால் ஏற்படும் கருவளையத்தை தடுப்பதற்கு, தினமும் படுப்பதற்கு முன், எண்ணெயை வைத்து நன்கு மசாஜ் செய்து, தூங்க வேண்டும். அவ்வாறு மசாஜ் செய்ய பயன்படுத்தும் எண்ணெய் ஆலிவ் அல்லது ஆமணக்கெண்ணெயை பயன்படுத்தினால் நல்லது. இவ்வாறு எண்ணெயை பயன்படுத்தினால், கண் இமைகள் நன்கு வளர்வதோடு, காஜலும் எளிதில் நீங்கும். வேண்டுமென்றால், எண்ணெயை பயன்படுத்தி மசாஜ் செய்ததும், ஒரு காட்டனை வைத்து துடைத்துவிட்டு, பின் ஃபேஸ் வாஷை பயன்படுத்தலாம்.

    * வாஸ்லினை பயன்படுத்தி கண்களுக்கு அடியில் சிறிது நேரம் மசாஜ் செய்து, பின்னர் காட்டனை வைத்து, துடைக்க வேண்டும். இதனால் காஜல் எளிதில் நீங்கிவிடும்.

    ஆகவே மேற்கூறியவாறெல்லாம் செய்தால், காஜல் எளிதில் நீங்குவதோடு, கருவளையம் ஏற்படாமலும் இருக்கும்.

    நம் உடலில் உள்ள உறுப்புகளில் கண்களின் பணி மிகவும் முக்கியமானது. இன்று கண்களை பாதுகாக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை பார்க்கலாம்.
    கண்களை பாதுகாக்க தொலைக்காட்சிக்கு அருகில் உட்கார்ந்து பார்க்காதீர்கள். உங்கள் தொலைக்காட்சியின் செங்குத்தான உயர அளவு 10 அங்குலம் இருந்தால் நீங்கள் 10 அடி தொலைவில் இருந்து டி.வி. பாருங்கள்.

    மங்கலான வெளிச்சத்தில் புத்தகங்களை படிக்காமல், பின்புறத்தில் இருந்து விளக்கின் வெளிச்சம் பிரகாசமாக புத்தகத்தின் மீது விழும் நிலையில் படிப்பது எளிதாக இருக்கும்.

    குழந்தைகளுக்கு மாறுகண் தானாகவே சரியாகாது. அது அதிர்ஷ்டமும் அல்ல. தொடக்க நிலையிலேயே முறையான சிகிச்சை மற்றும் பயிற்சி இருந்தால் மாறுகண் சரியாகும் வாய்ப்பு உள்ளது. ஆனால், அலட்சியமாக இருந்தால் பார்வை பறிபோய் விடும்.

    கேரட்டில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளதால், பார்வைத் திறனை பாதுகாக்கும் சக்தி அதற்கு உண்டு. ஆனால், கேரட் சாப்பிடுவதன் மூலம் இழந்த பார்வைத்திறனை மேம்படுத்த முடியாது.

    இறந்தவர்களின் கண் தானமாக கிடைத்தபிறகு, தேவைப்படுவோருக்கு முழு கண்ணும் மாற்றுச் சிகிச்சை செய்யப்படுவதில்லை. மாறாக தானமாக பெற்ற கண்ணில் உள்ள விழி வெண்படலம் (கார்னியா) மட்டுமே மாற்றுச் சிகிச்சையில் பொருத்தப்படுகிறது. 
    தற்போது குழந்தைகளுக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அதிகமாக உள்ளது. நீண்ட நேரம் டி.வி. பார்ப்பதும், கம்ப்யூட்டர், செல்போன் உபயோகிப்பதும் கண் பார்வையை அதிகம் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
    மனித உறுப்புகளில் தலைசிறந்தது கண். கண் இல்லாவிட்டால் உலகமே இல்லை. ‘எண்ணும், எழுத்தும் கண்ணென தகும்’ கண்ணுடையர் என்பவர் கற்றோர் என்று கண்களின் முக்கியத்துவத்தை வள்ளுவர் வலியுறுத்துகிறார். குழந்தைகளிடம் அன்பு காட்டும் போது எந்த உறுப்புகளையும் அடைமொழியிட்டு அழைக்காமல் ‘கண்ணே மணியே’ என்று கூறி தான் கொஞ்சி மகிழ்கிறோம்.

    தற்போது குழந்தைகளுக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அதிகமாக உள்ளது. பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள் கணிசமான அளவில் கண்ணாடி அணிந்து கொண்டு செல்வதைப் பார்க்கிறோம். பொதுவாக குழந்தைகளுக்கு கண் உறுப்பின் வளர்ச்சி 18 வயது வரை இருக்கும். தூரப்பார்வை, கிட்டப்பார்வை மாறிக்கொண்டே இருக்கும். நீண்ட நேரம் டி.வி. பார்ப்பதும், கம்ப்யூட்டர், செல்போன் உபயோகிப்பதும் கண் பார்வையை அதிகம் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

    முன்பெல்லாம் குழந்தை அழுதால் தாலாட்டு பாடல்களை பாடியோ, விளையாட்டுப் பொருட்களை காட்டியோ சமாதானப்படுத்துவார்கள். ஆனால் தற்போது செல்போனில் கார்ட்டூன் படத்தை போட்டும் அதை குழந்தைகளின் பார்வையில் படும்படி வைத்து விடுகிறார்கள். அதை குழந்தை ஊன்றி கவனிக்கும் போது கண்களில் அழுத்தம் ஏற்பட்டு கண் பாதிப்பு வர அதிகம் வாய்ப்பு உள்ளது.



    இந்த பழக்கத்தை பெற்றோர்கள் கைவிட வேண்டும். அது மட்டுமின்றி குழந்தைகளை வருடத்திற்கு ஒருமுறை கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பல குழந்தைகளுக்கு மாறு கண் இருக்கிறது. அதை 2 வழிகளில் சரி செய்யலாம்.ஒன்று கண்ணாடி அணிந்து கண் பயிற்சி செய்ய வேண்டும். அது சரியாகா விட்டால் கண் அறுவை சிகிச்சை மேற் கொள்ளலாம். அதன் மூலம் கண்களை சரி செய்யலாம்.

    வீட்டில் குழந்தைகள் டி.வி. பார்ப்பதாலும், கம்ப்யூட்டர் முன்பு அதிக நேரம் அமர்ந்து இருப்பதாலும் கண் எரிச்சல், கண் சிவப்பு, பார்வைக் கோளாறு ஏற்படுகிறது. இதற்கு என்ன காரணம்? கம்ப்யூட்டரை உபயோகிக்கும்போது கண்களை சிமிட்டிக்கொண்டே இருக்கவேண்டும். கண்களை சிமிட்ட மறந்து விடுகிறார்கள். இதனால் கண்ணீர் வரண்டு விடுகிறது. தொடர்ந்து கண்கள் சிவப்பாக மாறி, பார்வைக் கோளாறுக்கு வழி வகுக்கிறது.

    இதை தவிர்க்க கண்ணுக்கு பயிற்சி அவசியம். கண்களில் கோளாறு ஏற்பட்டால் கண் மருத்துவரை அணுகி கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும். கண்களில் மருந்திட்டு பிரச்சினையை சரி செய்து கொள்ள வேண்டும்.புத்தகம் படிக்கும்போது இந்தப் பிரச்சினை வராது. கம்ப்யூட்டரை பார்க்கும்போது ‘பிக்சர் இமேஜ்’ தெளிவாக இருக்காது. கண் அழுத்தத்துடன் பார்க்கும்போது கோளாறு ஏற்படுகிறது. ஆகவே கண்களை சிமிட்டுங்கள்.குழந்தைகள் தூரப்பார்வை, கிட்டப்பார்வை கோளாறு காரணமாக கண்ணாடி அணிந்து கொண்டு உள்ளனர். அதற்காக கவலைப்பட வேண்டாம். 20 வயதில் ‘லாசிக்’ சிகிச்சை மூலம் கண்ணாடியை அகற்றி விடலாம்.
    மனித உறுப்புகளில் தலைசிறந்தது கண். கண் இல்லாவிட்டால் உலகமே இல்லை. சர்க்கரை வியாதி அதிகமானால் கண்கள் கடுமையாக பாதிக்கும்.
    இன்று(அக்டோபர் 11-ந்தேதி) உலக கண்பார்வை தினம்

    மனித உறுப்புகளில் தலைசிறந்தது கண். கண் இல்லாவிட்டால் உலகமே இல்லை. ‘எண்ணும், எழுத்தும் கண்ணென தகும்’ கண்ணுடையர் என்பவர் கற்றோர் என்று கண்களின் முக்கியத்துவத்தை வள்ளுவர் வலியுறுத்துகிறார். குழந்தைகளிடம் அன்பு காட்டும் போது எந்த உறுப்புகளையும் அடைமொழியிட்டு அழைக்காமல் ‘கண்ணே மணியே’ என்று கூறி தான் கொஞ்சி மகிழ்கிறோம்.

    தற்போது குழந்தைகளுக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அதிகமாக உள்ளது. பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள் கணிசமான அளவில் கண்ணாடி அணிந்து கொண்டு செல்வதைப் பார்க்கிறோம். பொதுவாக குழந்தைகளுக்கு கண் உறுப்பின் வளர்ச்சி 18 வயது வரை இருக்கும். தூரப்பார்வை, கிட்டப்பார்வை மாறிக்கொண்டே இருக்கும். நீண்ட நேரம் டி.வி. பார்ப்பதும், கம்ப்யூட்டர், செல்போன் உபயோகிப்பதும் கண் பார்வையை அதிகம் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

    முன்பெல்லாம் குழந்தை அழுதால் தாலாட்டு பாடல்களை பாடியோ, விளையாட்டுப் பொருட்களை காட்டியோ சமாதானப்படுத்துவார்கள். ஆனால் தற்போது செல்போனில் கார்ட்டூன் படத்தை போட்டும் அதை குழந்தைகளின் பார்வையில் படும்படி வைத்து விடுகிறார்கள். அதை குழந்தை ஊன்றி கவனிக்கும் போது கண்களில் அழுத்தம் ஏற்பட்டு கண் பாதிப்பு வர அதிகம் வாய்ப்பு உள்ளது.

    இந்த பழக்கத்தை பெற்றோர்கள் கைவிட வேண்டும். அது மட்டுமின்றி குழந்தைகளை வருடத்திற்கு ஒருமுறை கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பல குழந்தைகளுக்கு மாறு கண் இருக்கிறது. அதை 2 வழிகளில் சரி செய்யலாம்.ஒன்று கண்ணாடி அணிந்து கண் பயிற்சி செய்ய வேண்டும். அது சரியாகா விட்டால் கண் அறுவை சிகிச்சை மேற் கொள்ளலாம். அதன் மூலம் கண்களை சரி செய்யலாம்.

    வீட்டில் குழந்தைகள் டி.வி. பார்ப்பதாலும், கம்ப்யூட்டர் முன்பு அதிக நேரம் அமர்ந்து இருப்பதாலும் கண் எரிச்சல், கண் சிவப்பு, பார்வைக் கோளாறு ஏற்படுகிறது. இதற்கு என்ன காரணம்? கம்ப்யூட்டரை உபயோகிக்கும்போது கண்களை சிமிட்டிக்கொண்டே இருக்கவேண்டும். கண்களை சிமிட்ட மறந்து விடுகிறார்கள். இதனால் கண்ணீர் வரண்டு விடுகிறது. தொடர்ந்து கண்கள் சிவப்பாக மாறி, பார்வைக் கோளாறுக்கு வழி வகுக்கிறது.

    இதை தவிர்க்க கண்ணுக்கு பயிற்சி அவசியம். கண்களில் கோளாறு ஏற்பட்டால் கண் மருத்துவரை அணுகி கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும். கண்களில் மருந்திட்டு பிரச்சினையை சரி செய்து கொள்ள வேண்டும்.புத்தகம் படிக்கும்போது இந்தப் பிரச்சினை வராது. கம்ப்யூட்டரை பார்க்கும்போது ‘பிக்சர் இமேஜ்’ தெளிவாக இருக்காது. கண் அழுத்தத்துடன் பார்க்கும்போது கோளாறு ஏற்படுகிறது. ஆகவே கண்களை சிமிட்டுங்கள்.குழந்தைகள் தூரப்பார்வை, கிட்டப்பார்வை கோளாறு காரணமாக கண்ணாடி அணிந்து கொண்டு உள்ளனர். அதற்காக கவலைப்பட வேண்டாம். 20 வயதில் ‘லாசிக்’ சிகிச்சை மூலம் கண்ணாடியை அகற்றி விடலாம்.

    இன்னொரு பொதுவான பிரச்சினையாக சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்களை குறிப்பிடலாம். இன்னும் 5 வருடத்தில் 5 பேரில் ஒருவர் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் சொல்லி இருக்கிறது. சர்க்கரை வியாதி அதிகமானால் கண்கள் கடுமையாக பாதிக்கும். கண்ணில் புரை ஏற்படும். கண் நரம்புகளை பாதிக்கும். ‘காட்ராக்ட்’ முறை அறுவை சிகிச்சை மூலம் கண் புரையை எளிதாக அகற்றி விடலாம்.

    புதிதாக ‘பிளேடுலெஸ் அறுவை சிகிச்சை’ என்ற முறை அறிமுகமாகி உள்ளது. இந்த அறுவை சிகிச்சை மூலம் கண் புரையை ஊசி இல்லாமல், தையல் போடாமல் அகற்றி விடலாம். 15 நிமிடத்தில் அறுவை சிகிச்சை முடிந்து வீட்டுக்கு சென்று விடலாம்.

    சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு கண் நரம்புகள் பாதிக்கப்பட்ட நிலையில் ஆக்சிஜன் குறைந்து புது ரத்தக் குழாய்கள் உருவாகிறது. இதனால் ரத்தம் கசிந்து பார்வை இழப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் 6 மாதத்துக்கு ஒருமுறை கண் மருத்துவரை அணுகி விழித்திரை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    இன்னொரு முக்கியமான கண் பிரச்சினை ‘குவாகோமா’. கண்களில் அழுத்தம் அதிகமாகி நீண்ட நாட்கள் கவனிக்காமல் விட்டால் கண் பார்வை இழக்கக்கூடும். இந்த நோய் கண் புரைக்குப் பிறகு பார்வை இழப்புக்கு இரண்டாவது காரணம். இதை ‘அமைதியான திருடன்’ என்று கூறுவார்கள். இதை நோயாளி அறியாமலேயே கண் பார்வை இழக்க வாய்ப்பு உள்ளது. இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிவில் நடு பார்வை மட்டும் இருக்கும். ‘சைடு’ பார்வை இருக்காது. இதற்கு கண் சொட்டு மருந்து போட்டுக்கொள்ள வேண்டும்.

    அது சரியாகாத பட்சத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.மது அதிகம் அருந்தினால் கண்களில் உள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டு கண் பார்வை குறையக்கூடும். நம் நாட்டில் அதிகம் பேருக்கு கருவிழி படல பிரச்சினைகளால் கண் பார்வை பாதிக்கப்படுகிறது. அதற்கு இறந்தவரின் கண்களை பொருத்தினால் பார்வை கொடுக்க முடியும். யார் இறந்தாலும் கண் தானம் செய்யலாம். இதில் உடல் முழுவதும் புற்று நோய் பரவி இறந்தவர்கள், ‘எய்ட்ஸ்’ நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் தவிர மற்றவர்கள் கண் தானம் செய்யலாம்.

    ‘தானத்தில் சிறந்தது கண் தானம்.’ கண் தானம் செய்து உங்களால் ஒருவர் உலகத்தை காண வழி செய்யுங்கள்.

    டாக்டர் விஜய் சங்கர்
    வறண்ட கண்கள் பாதிப்புகள் யாருக்கும் எந்த வயதிலும் வரும். என்றாலும் ஆண்களை விட பெண்களுக்கு இப்பாதிப்பு அதிகம் ஏற்படும்.
    * கண் எரிச்சல்,
    * கண்ணில் உறுத்துதல்,
    * கண் இமைகள் கனத்து இருத்தல்,
    * கண்களில் சோர்வு,
    * கண் சிவத்தல்,
    * கண் வலி,
    * அடிக்கடி பார்வை மங்கியது போல் இருத்தல்,
    * கண்ணில் லென்ஸ் போடுபவர்களுக்கு போட முடியாமல் வலி எடுத்தல் ஆகியவைகளை இதனால் ஏற்படும் பாதிப்பாக கூறுவர்.

    இந்த பாதிப்புகள் யாருக்கும் எந்த வயதிலும் வரும். என்றாலும் ஆண்களை விட பெண்களுக்கு இப்பாதிப்பு அதிகம் ஏற்படும். கண்ணில் நீர் வரும் முறையில் ஏற்படும் மாறுபாடு இதற்கு ஒரு முக்கிய காரணம் ஆகின்றது. மேலும் காற்று, புகை, வறண்ட காற்று போன்ற பல காரணங்கள் வறண்ட கண் பாதிப்பிற்கு காரணம் ஆகின்றன.

    ஆனால் வயது கூடும் பொழுது இப்பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகளும் கூடுகின்றது. மேலும்,

    * லென்ஸ் அணிபவர்கள்,
    * ஹார்மோன் மாறுபாடு- குறிப்பாக பெண்களின் கர்ப்ப காலம், மாதவிடாய் காலம் போன்றவை,
    * சர்க்கரை நோய்,
    * தைராய்டு குறைபாடு,
    * வைட்டமின் ஏ சத்து குறைபாடு,
    * சில வகை மருந்துகள்,
    * முறையாக கண் சிமிட்டாமல் கம்ப்யூட்டர், புத்தகம் போன்ற இவற்றினை உற்று பார்த்துக் கொண்டிருப்பது போன்றவைகளும் வறண்ட கண் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.

    இதனை முறையாக மருத்துவம் மூலம் கவனிக்காவிட்டால் கண்ணில் புண், கிருமி பாதிப்பு போன்றவை ஏற்படும்.  வெது வெதுப்பான வெந்நீர் ஓத்தடம் மூலம் சிறிது நிவாரணம் கிடைக்கும்.

    * அதிக நேரம் கம்ப்யூட்டர், படிப்பு என்று இருப்பவர்கள் கண் மருத்துவர் ஆலோசனையின் பெயரில் கண்ணுக்கான சொட்டு திரவம் பயன்படுத்தலாம்.
    * கண் சொட்டு மருந்துகளும் பரிந்துரையின் பேரில் பயன்படுத்தலாம்.
    * தேவையான அளவு நீர் குடிக்க வேண்டும்.
    * காபி, டீ இவற்றினை குறைத்துக் கொள்ள வேண்டும்.
    * ஆல்கஹால் தவிர்க்க வேண்டும்.
    * வெளியில் செல்லும் பொழுது கண்களை பாதுகாக்க கறுப்பு கண்ணாடி அணிய வேண்டும்.
    * புகை பிடிப்பதனை நிறுத்துங்கள்.
    * புகை பிடிப்பவர்கள் அருகில் நிற்காதீர்கள்.
    * கண்களை சுத்தமாக வைத்திருங்கள்.
    * கண்களை சிமிட்ட பழகுங்கள். (அதாவது ஒன்றினை உற்று பார்க்காமல் கண்களை மூடி, திறக்க பழகுங்கள்).
    * கண்டிப்பாய் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

    (ஆணுக்கும் பெண்ணுக்கும் இயற்கை படைப்பின் வித்தியாசங்களை நாம் அறிவோம்). ஆனால் ஆண், பெண் தூக்கம் முறையிலும் படைப்பின் வித்தியாசத்தினால் சில தாக்குதல்கள் இருக்கின்றன. இதனை சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. பெண்கள் தூக்கமின்மையால் அவதிப்படுவதன் காரணம் அவர்களுள் ஏற்படும் ஹார்மோன் வித்தியாசங்களால் என ஆய்வுகள் கூறுகின்றன.

    மேலும் அவைகூறுவது ஆண்களை விட பெண்களுக்கு அதிக தூக்கம் தேவைப்படுகின்றது என்பதுதான். அதற்கான காரணங்களையும் அந்த ஆய்வுகள் விவரித்துள்ளன.

    * பெண்கள் அஷ்டாவதானி போல் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய அதிகம் மூளையை உபயோகிக்கின்றனர். அநேகமாக இவ்வாறு பகல் பொழுதில் அவர்கள் வேலை செய்வதால் இரவில் அவர்கள் கூடுதல் நேரம் தூங்க வேண்டியது அவசியமாகின்றது என்பது ஆய்வுகளின் முடிவு.

    * பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் தேவையான அளவு தூக்கம் இருப்பதில்லை. இது அவர்களுக்கு குறைந்த சக்தியினை அளித்து விடுகின்றது. இக்காலங்களில் இவர்கள் பகலில் 20-30 நிமிடங்கள் வரை (ழிணீஜீ) எனப்படும் ஓய்வினை எடுக்க வேண்டும். இரவும் வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமாகவே தூங்கச் செல்ல வேண்டும்.

    * மாதவிடாய் காலங்களில் ஏற்படும் தூக்கமின்மை காரணமாக அதிக மறதி அவர்களுக்கு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவேதான் முந்தைய காலங்களில் இக்காலங்களில் அவர்களை வீட்டு வேலைகள் செய்ய விடாமல் ஓய்வு கொடுத்திருந்திருக்கலாம். ஆனால் அதன் உண்மையான பொருளை ஆராயாமல்-அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அவர்களை மேலும் பலவீனமாக்கி விட்டது அறியாமையே.

    * ஆபீஸ், குடும்பம் என விடாது வேலை செய்வது அவர்களை மிகவும் சோர்வானவர்கள் ஆக்கி விடுகின்றதாம். எனவே அவர்களுக்கு கூடுதல் ஓய்வும், தூக்கமும் தேவைப்படுகின்றது என்பதனை அறிவோமாக.

    கண்ணுக்கு மட்டும்தான் உள்ளத்தையும் சேர்த்துப் பிரதிபலிக்கும் குணம் இருக்கு. கண்களை அழகாக காட்ட எளிய முறையில் அலங்காரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    இன்று, பெரும்பாலான இளம் பெண்கள் மொபைலையும், அலுவலகம் செல்லும் பெண்கள் கம்ப்யூட்டரையும், இல்லத்தரசிகள் டி.வி-யையும் பார்த்துட்டே இருக்காங்க. இதனால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகம்.

    கண்களுக்கான ரிலாக்ஸிங் ட்ரீட்மென்ட் ப்ளஸ் கண் கருவளையத்துக்கான சிகிச்சை என டூ இன் ஒன் பார்லர் சிகிச்சையான ‘ஐ ட்ரீட்மென்ட்’ பற்றி இங்கே பார்ப்போம். இதில், முதல்ல கண்களை க்ளென்ஸிங் மூலமா சுத்தப்படுத்தி, ஒரு பேக் போட்டுவிடுவார்கள். அதை அலசிய பிறகு, மசாஜ் க்ரீம் கொண்டு கண்களுக்கு நல்லா மசாஜ் கொடுப்பார்கள் இது முடிஞ்சதும், ஐ ஜெல் மூலம் மசாஜ் கொடுப்பார்கள். மீண்டும் ஒரு பேக் போட்டு விடுவார்கள். இந்த ட்ரீட்மென்ட் காரணமா கண்கள் புத்துணர்ச்சி பெறுவதோட, கருவளையமும் கொஞ்சம் கொஞ்சமா மறைஞ்சுடும். இப்போது தினமும் போடக்கூடிய கண் அலங்காரத்திற்கான டிப்ஸை பார்க்கலாம்.

    ஐபுரோ பாலட்: கண், புருவத்துக்கு என ஐபுரோ பாலட்கள் காஸ்மெடிக் கடைகளில் கிடைக்கின்றன. இதில் மூன்று நிறங்கள் இருக்கும். இதில் உள்ள பிரஷ் மூலம், இந்த வண்ணங்களை தேவைக்கு ஏற்ப கலந்து, புருவ முடிகளின் மீது மட்டும் தடவலாம். இது புருவத்தை பளிச்சென்று காட்டும்.

    ஐலாஷ்: மார்க்கெட்டில் பலவிதமான செயற்கை இமை முடிகள் கிடைக்கின்றன. இதனுடன் கொடுக்கப்படும் பசையின் உதவியால் இதை கண் இமைகளில் ஒட்டிக்கொண்டால், இமை முடிகள் நீண்டு, அடர்ந்து இருப்பது போன்ற அழகிய தோற்றத்தைக் கொடுக்கும். கவனம்… தரமான பிராண்ட் பார்த்து வாங்கவும்.

    ஐ ஷேடோ: தரமான ஐ ஷேடோ உபயோகிப்பதால், கண்களில் அலர்ஜி ஏற்படுவதைத் தடுக்கலாம். ஐ ஷேடோக்களின் துகள்கள், கண்களின் உள்ளே போய், அலர்ஜி மற்றும் கட்டியை ஏற்படுத்திவிடும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, கண்களுக்கு ஐ ஷேடோ தடவும் முன்பாக, ஐ ப்ரைமர் தடவிவிட்டு அப்ளை செய்தால், கண் இமைகளை அலர்ஜியில் இருந்து காக்கலாம்.

    ×