search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 105991"

    அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் கமல்ஹாசன் இன்று பிரசாரம் மேற்கொள்வார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    அரவக்குறிச்சி:

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், இந்து மதத்தை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர்கள் மீது அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் நிர்ணயித்தபடி அரவக்குறிச்சி தொகுதியில் இன்று (வியாழக்கிழமை) கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்வாரா? என தொண்டர்களிடையே குழப்பம் நிலவியது. எனினும் தேர்தல் விதிகளை பின்பற்றி பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் அதிகாரி அனுமதி வழங்கிவிட்டதாக கரூர் மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தெரிவித்தனர்.



    மேலும் இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு தென்னிலையில் திறந்தவேன் மூலம் கமல்ஹாசன் பிரசாரத்தை தொடங்குகிறார். பின்னர் தொப்பம்பட்டி, நொய்யல், தளவாபாளையம் ஆகிய இடங்களில் வேட்பாளர் மோகன்ராஜிக்கு ஆதரவு கேட்டு தொடர்ந்து பேசுகிறார். வேலாயுதம்பாளையம் மலைவீதியில் இரவு 8.15 மணியளவில் நடக்கிற பொதுக்கூட்டத்திலும் அவர் பங்கேற்று பேசுகிறார் என மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்து தீவிரவாதி என்று விமர்சனம் தொடர்பாக கமல் பிரசாரத்துக்கு தடை விதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    சென்னை:

    அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளின் இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது.

    பிரசாரம் ஓய்வதற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் இந்த தொகுதிகளில் அனல்பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது.

    நடிகர் கமல்ஹாசன் இந்த 4 தொகுதிகளிலும் தனது மக்கள் நீதிமய்யம் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் அவர் அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் செய்தார்.

    அந்த ஊரில் கமல்ஹாசன் பிரசாரம் செய்யும்போது, சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார்.

    அவர் பேசுகையில், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து” என்று பேசினார். மத நல்லிணக்கம், மத ஒற்றுமை பற்றி பேசுகின்றனர். தேசிய கொடியில் உள்ள 3 வண்ணங்களும் அப்படியே இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

    காந்தி சிலை முன்பு நின்று கொண்டு சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவன் பெயர் நாதுராம் கோட்சே. காந்தியின் கொள்ளுப் பேரனான நான், அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்துள்ளேன் என்று கூறினார். கமல் தனது பேச்சின் போது ஆவேசமாக இதை குறிப்பிட்டார்.

    கமலின் இந்த பேச்சு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் எதிரொலித்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாரதிய ஜனதா, அ.தி.மு.க. தலைவர்கள் கமலின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிவசேனா கட்சியும் கமலின் பேச்சை கண்டித்துள்ளது.

    அதே நேரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி கமலின் கருத்தை வரவேற்றுள்ளது. இதனால் கமலின் இந்து தீவிரவாதி பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் வலுத்து வருகிறது.

     


    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒழுக்கத்தை கடைபிடித்த காந்தியின் கொள்ளுப்பேரன் என்று கூறுவதற்கு கமல் தகுதி இல்லாதவர். அவரது பேச்சு கண்டிக்கத்தக்கது.

    தேர்தல் ஆணையம் கமல் மீது நடவடிக்கை எடுப்பதுடன் பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, “மக்கள் நீதிமய்யம் முளையிலேயே கிள்ளி எரியப்பட வேண்டிய வி‌ஷ செடி. சிறுபான்மையினர் ஓட்டுக்காக இந்துக்களை கமல் இழிவுப்படுத்தி உள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

    மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த விவகாரம் பற்றி டெல்லியில் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர், “தீவிரவாதிக்கும், கொலைகாரனுக்கும் வித்தியாசம் தெரியாமல் கமல் பேசியுள்ளார். இது சிறுபான்மையினரை கவரும் செயலாகும் என்று தெரிவித்தார்.

    பா.ஜனதா மூத்த தலைவரான சுப்பிரமணியசாமி கூறும்போது, இந்து மக்களை இழிவுப்படுத்திய கமலின் கட்சிக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    அதே நேரத்தில் கமல் ஹாசனின் ‘இந்து தீவிரவாதி’ கருத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோர் வர வேற்றுள்ளனர்.


    இதற்கிடையே கமல் மீது டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதா கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த கட்சியின் சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் அஸ்வினிகுமார் உபாத்யாயா அளித்த மனுவில், கமல்ஹாசன் தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளார்.

    எனவே, அவரது கட்சியின் பதிவை ரத்து செய்ய வேண்டும். குறைந்தது 5 நாட்களாவது அவரது பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட வேண்டும்என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடமும் பா.ஜனதா சட்டப்பிரிவு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த புகார் மனுக்கள் மீது எதுபோன்று நடவடிக்கை எடுக்கலாம் என்பது பற்றி தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. எனவே கமலின் பிரசாரத்துக்கு தடைவிதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்த நிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் நேற்று கமல் தனது பிரசாரத்தை திடீரென ரத்து செய்தார். ‘இந்து தீவிரவாதி’ கருத்தால், பா.ஜனதா மற்றும் இந்து அமைப்பினர் மத்தியில் கமலுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே கமலின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இது பற்றி மக்கள் நீதி மய்யம் கட்சியின் கரூர் மாவட்ட பொறுப்பாளர் புகழ் முருகன் கூறுகையில், வேலாயுதம்பாளையத்தில் கமல்ஹாசன் பங்கேற்க இருந்த பொதுக்கூட்டத்துக்கு தமிழக முதல்வர் வருகை, வைகோ பிரச்சாரம் போன்றவற்றால் அனுமதி கிடைக்கவில்லை. இதனால் பொதுக்கூட்டத்தை நாளை மறுநாள் 16-ந்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளோம் என்றார்.

    இந்து அமைப்புகள், பா.ஜ.க. எதிர்ப்பு ஆகியவற்றால் கமல்ஹாசனின் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே நாளை மறுநாள் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கேட்டு கமல் கட்சியினர் தேர்தல் அதிகாரிகளிடம் மனு கொடுக்க நேற்று சென்றனர். இரவு 11 மணி வரை காத்திருந்த அவர்களிடம், இன்று காலை வருமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் திரும்பி சென்றனர்.

    நாளை மறுநாள் 16-ந்தேதி கமல்ஹாசன் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட தென்னிலை, பரமத்தி, நொய்யல் ஆகிய இடங்களில் திறந்த வேனில் நின்றவாறு பிரசாரம் செய்ய கமல் திட்டமிட்டுள்ளார். மாலையில் வேலாயுதம்பாளையத்தில் பொதுக்கூட்டத்தில் பேசவும் அவர் முடிவு செய்துள்ளார். இதற்கு முறையான அனுமதி கிடைக்குமா? என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.

    இதற்கிடையே சமூக வலைதளங்களில் கமல்ஹாசனை மிக கடுமையாக கேலியும், கிண்டலும செய்து நிறைய பேர் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

    மகாராஷ்டிராத்தில் இறுதிக்கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் ஓய்கிறது. மும்பையில் பிரதமர் நரேந்திர மோடியும், ஷீரடியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்கள். #LokSabhaElections2019 #PMModi #RahulGandhi
    மும்பை :

    மகாராஷ்டிராத்தில் 48 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.

    இந்த தொகுதிகளுக்கு 4 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் கட்டமாக கடந்த 11-ந் தேதி 7 தொகுதிகளுக்கும், 18-ந் தேதி 10 தொகுதிகளுக்கும், 23-ந் தேதி 14 தொகுதிகளுக்கும் என மொத்தம் 31 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்து விட்டது.

    4-வது மற்றும் இறுதிக்கட்டமாக வட மும்பை, வடமேற்கு மும்பை, வடகிழக்கு மும்பை, வடமத்திய மும்பை, தென்மத்திய மும்பை, தென்மும்பை, நந்துர்பர், துலே, தின்டோரி, நாசிக், பால்கர், பிவண்டி, கல்யாண், தானே, மாவல், சிரூர், ஷீரடி ஆகிய 17 தொகுதிகளுக்கு வருகிற 29-ந் தேதி (திங்கட்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது.

    இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்கள். கட்சி தலைவர்களும் தங்களது வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் 17 தொகுதிகளிலும் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நாளை (சனிக்கிழமை) ஓய்கிறது.

    மும்பையில் உள்ள 6 தொகுதிகளில் பா.ஜனதா - சிவசேனா கூட்டணி கட்சிகள் தலா 3 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.



    இவர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) மும்பை வருகிறார்.

    மும்பை பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்தில் பிரதமருடன் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும் பங்கேற்கிறார்.

    இதற்காக பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு பிரசார பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

    இதேபோல அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இன்று பிரசாரம் செய்ய  மகாராஷ்டிராம் வருகிறார். ஷீரடி பாராளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட சங்கம்நேர் பகுதியில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகிறார்.

     மகாராஷ்டிராத்தில் கடைசி கட்ட தேர்தல் நடைபெற இன்னும் இரண்டே நாட்கள் உள்ள நிலையில், பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரே நாளில் முற்றுகையிட்டு பிரசாரம் செய்கிறார்கள்.

    இதனால் மும்பை உள்ளிட்ட 17 தொகுதிகளில் தேர்தல்களம் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. #LokSabhaElections2019 #PMModi #RahulGandhi
    உத்தர பிரதேசத்தில் எதிரும் புதிருமான தலைவர்கள் முலாயம் சிங் யாதவ், மாயாவதி இருவரும் பல ஆண்டுகளுக்கு பின் ஒரே மேடையில் தோன்றி பிரசாரம் செய்தது தொண்டர்களை உற்சாகமடைய செய்துள்ளது. #MulayamMayawati #LokSabhaElections2019
    மெயின்புரி:

    உத்தர பிரதேசத்தில் எதிரும் புதிருமாக இருந்த பகுஜன் சமாஜ்- சமாஜ்வாடி கட்சிகள், இந்த பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் எனும் நோக்கத்துடன் கூட்டணி அமைத்து களமிறங்கியுள்ளன. இதற்காக இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், மெயின்புரியில் இன்று நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில், சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் ஒரே மேடையில் அமர்ந்து பிரசாரம் செய்தனர். அரசியலில் எதிரும் புதிருமான இரு தலைவர்களும், பல ஆண்டுகளுக்குப் பிறகு கருத்து வேறுபாடுகளை மறந்து  ஒரே மேடையில் பிரசாரம் செய்தது கட்சி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மேடையில், முதலில் பேசிய சமாஜ்வாடி எம்எல்ஏ, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியின் காலைத் தொட்டு வணங்கி அவரை வரவேற்று பேசினார். அப்போது, தனது ஆதரவாளர்கள் அனைவரும் மாயாவதிக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.



    பின்னர் உரையாற்றிய முலாயம் சிங், “நீண்ட காலத்திற்குப் பிறகு தானும் மாயாவதியும் ஒரே மேடையில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாம் அவரை வரவேற்பதுடன், கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளும் அவரை வரவேற்று, நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

    மாயாவதி பேசும்போது, “தலைவர் முலாயம் சிங் யாதவ், சமுதாயத்தின் அனைத்து தரப்பினரையும் தன்னுடன் இணைத்துள்ளார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் உண்மையான  தலைவர். குறிப்பாக, பிற்படுத்தப்பட்ட மக்களின் உண்மையான தலைவர். மோடி போன்று போலியான தலைவர் அல்ல” என பாராட்டினார். #MulayamMayawati #LokSabhaElections2019
    இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 4 சட்டசபை தொகுதிகளிலும் வருகிற 19-ந்தேதி வரை பிரசாரம் செய்ய தடை விதித்து தேர்தல் கமி‌ஷன் அறிவித்துள்ளது. #Assemblybypoll
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுடன் 18 சட்டசபை தொகுதிக்கு நாளை மறுநாள் (18-ந்தேதி) ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

    இதையொட்டி தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணியுடன் அரசியல் கட்சியின் பிரசாரம் ஓய்கிறது. அதன்பிறகு யாரும் பிரசாரம் செய்யக் கூடாது என்று தேர்தல் கமி‌ஷன் அறிவித்துள்ளது.

    இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டபிடாரம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கு மே 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதால் அங்கு பிரசாரம் செய்யலாமா? என்று அரசியல் கட்சியினர் தேர்தல் கமி‌ஷனில் கேட்டிருந்தனர்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு இந்த 4 தொகுதி மக்களும் ஓட்டுப்போட உள்ளதால் இந்த 4 தொகுதிகளிலும் இப்போது பிரசாரம் செய்ய முடியாது என்று தேர்தல் கமி‌ஷன் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

    பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 4 தொகுதிகளிலும் நடைபெற உள்ளதால் தேர்தல் விதிப்படி இன்று மாலை 6 மணியுடன் இங்கு பிரசாரம் முடிகிறது.

    எனவே இடைத்தேர்தலை காரணம் காட்டி இங்கு பிரசாரம் செய்ய முடியாது. 4 சட்டசபை தொகுதிகளிலும் இன்று மாலை 6 மணியில் இருந்து வருகிற 19-ந்தேதி வரை பிரசாரம் செய்யக் கூடாது. அதன்பிறகு இந்த 4 தொகுதிகளிலும் தொடர்ந்து பிரசாரம் செய்யலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Assemblybypoll
    கடின உழைப்பால் மக்கள் ஈட்டிய பணம் பிரதமர் மோடியின் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்படுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். #RahulGandhi #PMModi #LokSabhaCampaign
    ஆக்ரா:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கட்சித்தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இதில் நேற்று அவர் உத்தரபிரதேசத்தின் பதேபூர் சிக்ரி தொகுதி வேட்பாளரும், மாநில கட்சித்தலைவருமான ராஜ் பப்பரை ஆதரித்து பிரசாரம் செய்தார்

    அப்போது அவர் பிரதமர் மோடியையும், அவரது பிரசார செலவினங்களையும் கடுமையாக தாக்கி பேசினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    சமீப காலமாக நீங்கள் தொலைக்காட்சிகளை பார்த்தால் பிரதமர் மோடியைத்தான் உங்களால் பார்க்க முடியும். ரேடியோவை சுவிட்ச் ஆன் செய்தால், பிரதமர் மோடி தனது வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்கிறார். சாலைகளில் கூட மோடியின் பிரசார சாதனங்கள்தான் நிறைந்து காணப்படுகின்றன. தொலைக்காட்சியில் 30 நிமிட விளம்பரத்துக்கு லட்சக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது.



    பிரதமரின் இத்தகைய பிரசாரத்துக்கு யார் பணம் கொடுக்கிறார்கள்? என்று யாருக்கும் தெரியாது. மோடி, தனது பாக்கெட்டில் இருந்து கொடுப்பதில்லை. வெறும் விளம்பரத்துக்காக இப்படி கோடிக்கணக்கில் செலவழிப்பதற்கு பணம் எங்கிருந்து வருகிறது என்று நீங்கள் நினைத்து பார்த்தது உண்டா?

    மக்கள் கடின உழைப்பால் ஈட்டிய பணம்தான் இதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது. பொதுமக்களின் பணம் இவ்வாறு விளம்பரத்துக்காக பயன்படுத்தப்படுவது மட்டுமின்றி, அம்பானி, மெகுல் சோக்சி போன்ற தொழிலதிபர்களுக்கும் வழங்கப்படுகிறது. விவசாயிகளின் வளர்ச்சியை விட தொழிலதிபர்களுக்குத்தான் பா.ஜனதா அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது.

    ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் உத்தரபிரதேசத்தில் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் போன்ற மாநிலங்களில் தேர்தலின் போது விவசாயிகளுக்காக கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் 10 நாட்களில் நிறைவேற்றப்பட்டன. அந்த மாநிலங்களில் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டன.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

    இதைப்போல குஜராத்தின் மகுவா பகுதியிலும் நேற்று ராகுல்காந்தி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ரபேல் விவகாரம் தொடர்பாக மோடி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘பிரான்சிடம் இருந்து 126 ரபேல் விமானங்கள் வாங்குவதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த விமானங்களை மத்திய அரசின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் இணைந்து தயாரிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அனில் அம்பானிக்காக இந்த ஒப்பந்தத்தையே மோடி மாற்றிவிட்டார். விமானங்களுக்கு காங்கிரஸ் ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலை கொடுப்பதுடன், மொத்த விமானங்களின் எண்ணிக்கையையும் 36 ஆக குறைத்து விட்டார். இதன் மூலம் அனில் அம்பானிக்கு ரூ.30 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது’ என்று தெரிவித்தார்.  #RahulGandhi #PMModi #LokSabhaCampaign
    காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி 2-ம் கட்டமாக தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திருப்பரங்குன்றம் ஆகிய 4 இடங்களில் நாளை பிரசாரம் செய்கிறார்.
    சேலம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 18-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி 2-ம் கட்டமாக தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திருப்பரங்குன்றம் ஆகிய 4 இடங்களில் நாளை (12-ந் தேதி) பிரசாரம் செய்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் காலை 10 மணியளவில் பெங்களூரு வருகிறார்.

    அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு கிருஷ்ணகிரி ஆண்கள் கலைக் கல்லூரியில் இறங்குகிறார். தேவராஜ மஹால் அருகே அமைக்கப்பட்டு பொதுக்கூட்ட மேடையில் கிருஷ்ணகிரி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் டாக்டர் செல்லக்குமார், ஓசூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சத்யா, தர்மபுரி தி.மு.க. வேட்பாளர் செந்தில்குமார், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வக்கீல் மணி, அரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோரை ஆதரித்து பேசுகிறார்.

    பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு சேலம் ஹோலிகிராஸ் கல்லூரியில் வந்திறங்குகிறார். தொடர்ந்து காரில் சேலம் ஊத்துமலை அருகே அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட மேடைக்கு வருகிறார்.

    அங்கு சேலம் தி.மு.க. வேட்பாளர் பார்த்திபன், கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, நாமக்கல் கொங்கு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சின்ராஜ், ஈரோடு ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தி, கள்ளக்குறிச்சி தி.மு.க. வேட்பாளர் பொன்.கவுதமசிகாமணி, விழுப்புரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார் ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    பின்னர் ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு செல்லும் அவர் அங்கிருந்து தனி விமானத்தில் மதுரைக்கு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் தேனி செல்லும் அவர் புதிய பஸ் நிலையம் அருகே அணைஞ்சி விளக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்பட பலருக்கு ஆதரவு கேட்டு பேசுகிறார்.

    அங்கிருந்து ஹெலிகாப்டரில் மதுரை செல்லும் அவர் திருப்பரங்குன்றம் மண்டேலாநகரில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் பேசுகிறார்.

    இதில் மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் வெங்கடேசன், விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்தாகூர், நெல்லை தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம், தூத்துக்குடி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி, கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், ராமநாதபுரம் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி, சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திசிதம்பரம் உள்பட பலருக்கு ஆதரவு திரட்டுகிறார். இதையொட்டி காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு பின் திரும்பிய மன்சூர்அலிகான் மீண்டும் தனது வழக்கமான பாணியில் பிரசாரம் செய்தார். #MansoorAliKhan
    பழனி:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் நாம்தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர்அலிகான் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நூதனமான முறையில் பிரசாரம் செய்து மக்களோடு மக்களாக இணைந்து வாக்குசேரித்து வருகிறார். இது பெரும்பாலான பொதுமக்களை மிகவும் கவர்ந்துள்ளது.

    நிலக்கோட்டை பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரது கட்சி தொண்டர்கள் மன்சூர்அலிகானை ஆஸ்பத்தரியில் சேர்த்தனர். சிகிச்சை முடிந்து மீண்டும் தனது பழைய பாணியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

    பழனியை அடுத்துள்ள வண்டிவாய்க்கால் பகுதியில் மீன் சந்தையில் மன்சூர்அலிகான் தனது ஆதரவாளர்களுடன் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அங்குள்ள வாத்துகளை தூக்கி கையாலே எடை பார்த்து விலை நிலவரங்களை கேட்டறிந்தார். அதன்பிறகு மீன் விலை நிலவரங்களை கேட்டறிந்து பொதுமக்களை அழைத்து விற்பனை செய்தார்.

    மீனை அதன் செதில்களை சீவி சுத்தப்படுத்தி கழிவுகளை அகற்றி பொதுமக்களிடம் கொடுத்தார். பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக்கூடாது என்பதற்காக அவர்கள் கொண்டு வந்த பைகளில் மீன்களை வழங்கினார். அனைவரும் எனக்கு ஓட்டு போடுங்கள் நான் வாரம் தோறும் வந்து உங்களுக்கு மீன் வெட்டி தருகிறேன் என்று கூறினார்.

    அதனைத் தொடர்ந்து மீன் வியாபாரிகளிடம் சேர்ந்து செல்பியும் எடுத்துக் கொண்டார். #MansoorAliKhan
    தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரே நாளில் கிருஷ்ணகிரி, சேலம், திருமங்கலம், தேனி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்ய உள்ளார். #RahulGandhi
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. ஏற்கனவே பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆகியோர் முதற்கட்ட பிரசாரத்தை கடந்த மாதம் தொடங்கினார்கள்.

    இருவரும் கன்னியாகுமரி தொகுதியில் பிரசாரம் செய்தார்கள். மீண்டும் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட பிரதமர் மோடியும், காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட ராகுலும் தமிழகம் வருகிறார்கள்.

    ராகுல் காந்தி வருகிற 12-ந்தேதி தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

    பெங்களூரில் இருந்து ஹெலிகாப்டரில் காலையில் கிரு‌ஷ்ணகிரி வருகிறார். காங்கிரஸ் வேட்பாளர்கள் செல்லக்குமார் மற்றும் ஓசூர் தொகுதி தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் சேலம் செல்கிறார். அங்கு தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன், நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் கட்சி வேட்பாளர் சின்ராஜ், ஈரோடு ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தி, கள்ளக்குறிச்சி தி.மு.க. வேட்பாளர் கவுதமசிகாமணி ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருமங்கலம் செல்கிறார். அங்கு மதுரை கம்யூனிஸ்டு வேட்பாளர், விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர், சாத்தூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார்.



    பின்னர் அங்கிருந்து தேனி செல்கிறார். அங்கு காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். தமிழக தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு கேரளா செல்கிறார்.

    தேனியில் ராகுல் பிரசார கூட்டம் நடத்துவதற்காக பெரியகுளம் பைபாஸ் சாலையில் சுமார் 40 ஏக்கர் நிலத்தை சரி செய்து மேடை அமைக்கும் பணி, ஹெலிகாப்டர் இறங்குதளம் தயாராகி வருகிறது. #RahulGandhi
    பாராளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் மோடி இன்று (செவ்வாய்க் கிழமை) கர்நாடகம் வருகிறார். அவர் சித்ரதுர்கா, மைசூருவில் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். #PMModi #BJP #LokSabhaElections2019
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக வருகிற 18 மற்றும் 23-ந் தேதிகளில் பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது.

    பெங்களூரு, சித்ரதுர்கா, மைசூரு உள்பட தென் கர்நாடகத்தில் உள்ள 14 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக வருகிற 18-ந் தேதி ஓட்டுப் பதிவு நடக்கிறது.

    முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 14 தொகுதிகளில் 241 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த நிலையில் மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு அதாவது சிவமொக்கா, தார்வார், சிக்கோடி, பெலகாவி உள்ளிட்ட பகுதிகளில் 2-வது கட்ட தேர்தல் வருகிற 23-ந் தேதி நடக்கிறது.

    கர்நாடகத்தில் காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். பிரதமர் மோடி ஏற்கனவே, தார்வார், கலபுரகி ஆகிய நகரங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று (செவ்வாய்க் கிழமை) கா்நாடகம் வருகிறார். அவர் மதியம் 1 மணிக்கு சித்ரதுர்காவில் நடைபெறும் கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு பா.ஜனதாவுக்கு வாக்கு சேகரிக்கிறார்.

    அதை முடித்துக் கொண்டு மோடி மைசூருவுக்கு வருகிறார். அவர் மைசூரு மகாராஜா கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொள்கிறார். இதற்காக அங்கு மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    மேலும் பிரசார கூட்டத்தை தொண்டர்கள், பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருக்கைகள் போடப்பட்டு உள்ளது. மேலும் பொதுக்கூட்ட நுழைவாயில்களில் மெட்டல்-டிடெக்டர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. கூட்டத்திற்கு வரும் பொதுமக்களை தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    மைசூருவில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்திய காட்சி.

    மேலும் மைசூரு மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பணியில் 7 போலீஸ் சூப்பிரண்டுகள், 11 கூடுதல் போலீஸ்சூப்பிரண்டுகள், 50 இன்ஸ்பெக்டர்கள், கர்நாடக ஆயுதப்படை போலீசார் 12 குழுவினர், குதிரைப்படையினர், ரோந்துக்குழுவினர் என சுமார் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    அதுபோல் மோடி வருகையையொட்டி இன்று மதியம் 12 மணி முதல் இரவு 7 மணி வரை மைசூருவில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

    மண்டஹள்ளி விமான நிலையத்தில் இருந்து மைசூரு-ஊட்டி சாலை, அரண்மனை அருகில் உள்ள கன்ஹவுஸ் சர்க்கிளில் இருந்து சாமராஜா டபுள்ரோடு, ராமசாமி சர்க்கிள், ஜே.எல்.பி. ரோடு, ஆர்.டி.ஓ. சர்க்கிள், மகாத்மா காந்தி ரோடு ஆகிய சாலைகளில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு உள்ளது.

    சித்ரதுர்கா மற்றும் மைசூரு தேர்தல் பிரசாரத்தில் மோடியுடன் கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா உள்பட முன்னணி தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

    இந்த பிரசாரத்தை முடித்த பிறகு பிரதமர் மோடி மீண்டும் 12, 13-ந் தேதிகளில் பிரசாரம் செய்ய கர்நாடகம் வருகிறார்.

    அதன் பிறகு 18-ந் தேதி (முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடைபெறும் தினம்) வட கர்நாடகத்தில் வாக்கு சேகரிக்க மோடி திட்டமிட்டுள்ளார்.

    மோடி வருகையையொட்டி பா.ஜனதா தலைவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். #PMModi #BJP #LokSabhaElections2019
    மகாராஷ்டிரத்தில் முதல்கட்டமாக 7 தொகுதிகளுக்கு வருகிற 11-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. நாளையுடன் பிரசாரம் ஓய்வதால் வேட்பாளர்கள் தீவிர ஓட்டு வேட்டை நடத்தி வருகின்றனர். #Maharashtra #ParliamentElection
    மும்பை :

    மராட்டியத்தில் மொத்தம் உள்ள 48 பாராளுமன்ற தொகுதிகளுக்கு 4 கட்டமாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக வரும் 11-ந் தேதி வார்தா, ராம்டெக், நாக்பூர், பண்டாரா- கோண்டியா, கட்சிரோலி-சிமூர், , யவத்மால்-வாசிம் ஆகிய 7 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தொகுதிகளில் 116 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியான கடந்த 28-ந் தேதிக்கு பிறகு, பிரசாரம் சூடுபிடித்தது. முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 7 தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. வேட்பாளர்கள் மட்டுமல்லாமல், மாநில அரசியல் கட்சி தலைவர்கள், தேசிய கட்சி தலைவர்களும் வீதி வீதியாக சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

    கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தனர்.

    தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியுடன் ஓய்கிறது. அதன்பிறகு, தேர்தல் தொடர்பான பிரசாரம், பொதுக்கூட்டம், ஊர்வலம், பேரணி நடத்த அனுமதி கிடையாது.

    மேலும், செல்போன் எஸ்.எம்.எஸ்., பேஸ்புக், டுவிட்டர், டி.வி., ரேடியோ, எப்.எம். போன்ற எலக்ட்ரானிக் பிரசாரங்களுக்கும் நாளை மாலை 6 மணிக்கு மேல் தடை விதிக்கப்பட்டுள்ளது.



    அதையும் மீறி யாராவது தேர்தல் பிரசாரம் மேற்கொண்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்து உள்ளது.

    முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 7 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 1 கோடியே 30 லட்சத்து 35 ஆயிரத்து 181 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 66 லட்சத்து 71 ஆயிரம் பேர் ஆண்களும், 63 லட்சத்து 64 ஆயிரம் பேர் பெண்களும் அடங்குவர், 181 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆவர்.

    இதற்காக 14 ஆயிரத்து 919 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.

    மேலும் தேர்தலுக்கு கிட்டத்தட்ட 44 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்படுகிறது. மொத்தம் 73 ஆயிரத்து 837 ஊழியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

    அதுமட்டுமின்றி ஓட்டுப்போட வரும் வாக்காளர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்துதர தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. கொளுத்தும் வெயிலை மனதில் கொண்டு வாக்காளர்களுக்கு குடிக்க தண்ணீரும், நிழலுக்காக பந்தலும் அமைக்கப்படுகிறது.

    தேர்தலுக்கு தேவையான பொருட்கள் உடனுக்குடன் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இருந்து வழங்கப்படுகிறது. முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 11-ந் தேதி அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர்கள் ஓட்டுப்போடலாம். மாலை 6 மணிக்கு முன்பாக வாக்குச்சாவடிக்கு வருபவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

    கடைசி நேரத்தில் கூட்டம் அதிகமாக இருந்தால் மாலை 6 மணிக்கு முன்னதாக வரும் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்படும். அனைவரும் வாக்களித்த பிறகே அந்த பூத்தில் வாக்குப்பதிவு முடிக்கப்படும்.

    மேலும் நக்சல் ஆதிக்கம் நிறைந்த கட்சிரோலி- சிமூர் பாராளுமன்ற தொகுதியில் காலை 7 மணியில் இருந்து பிற்பகல் 3 மணிவரை தேர்தல் நடைபெறுகிறது. #Maharashtra #ParliamentElection
    பிரதமர் மோடி 9 மற்றும் 13-ந் தேதிகளிலும், ராகுல் 12-ந்தேதியும் தேனி தொகுதியை குறிவைத்து பிரசாரம் செய்ய இருப்பதால் தமிழக தேர்தல் களத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #PMModi #RahulGandhi
    தேனி:

    தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற 18-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

    அதே தினத்தன்று தமிழகம், புதுச்சேரியில் காலியாக உள்ள 19 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது.

    வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 19-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரை நடந்தது. மார்ச் 29-ந்தேதி வேட்பாளர்கள் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது.

    தமிழக தேர்தல் களத்தில் மொத்தம் 845 வேட்பாளர்கள் உள்ளனர். இவர்களில் 65 பேர் பெண்கள் ஆவார்கள்.

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, டி.டி.வி. தினகரன் கட்சி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் இடையே 5 முனைப்போட்டி நடைபெறுகிறது.

    தேர்தல் பிரசாரம் ஓய்வதற்கு இன்னும் 10 நாட்களே உள்ளது. எனவே அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் முதல் கட்ட பிரசாரத்தை முடித்துள்ளனர். அதே போல் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி சென்னை மற்றும் நாகர்கோவிலில் பிரசாரத்தை முடித்துள்ளார்.



    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகின்றனர். தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 20-ந் தேதி முதல் மாவட்டம் தோறும் பிரசாரம் நடத்தி வருகிறார்.

    இதே போல் கூட்டணி கட்சி தலைவர்களும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான தலைவர்கள் தங்களது முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்து விட்டனர்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி, ராகுல் 2-ம் கட்ட பிரசாரத்துக்காக தமிழகத்துக்கு வர உள்ளனர். தற்போதைய தகவல்படி மோடி 2 தடவையும், ராகுல் ஒரு தடவையும் தமிழ்நாட்டுக்கு வர உள்ளனர்.

    மோடி 9 மற்றும் 13-ந் தேதிகளிலும், ராகுல் 12-ந்தேதியும் தமிழகம் வருகிறார்கள். அவர்கள் இருவரும் தேனி தொகுதியை குறிவைத்து பிரசாரம் செய்ய இருப்பதால் தமிழக தேர்தல் களத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது.

    தேனி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் நிறுத்தப்பட்டுள்ளார். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும், அ.ம.மு.க. சார்பில் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ் செல்வனும் போட்டியிடுகிறார்கள்.

    இதனால் தேனி தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. அதோடு அங்கு தேர்தல் களமும் சூடு பிடித்துள்ளது. வெற்றியை தட்டிப் பறிக்க 3 வேட்பாளர்களிடமும் கடும் சவால் ஏற்பட்டுள்ளது.

    தேனி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதியின் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தேனியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி வருகிற 12-ந்தேதி பிரசாரம் செய்ய உள்ளார்.

    இதற்காக தேனி நகர் பைபாஸ் ரோடு புது பஸ்நிலையம் செல்லும் சாலையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு ராகுல்காந்தி பேசுகிறார். காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் வேட்பாளர் இளங்கோவன் மற்றும் தி.மு.க., காங்கிரஸ் நிர்வாகிகள் பொதுக்கூட்டம் நடக்க உள்ள இடத்தை பார்வையிட்டு தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    ராகுல் பிரசாரம் செய்துவிட்டு செல்லும் அடுத்த நாளே அதாவது 13-ந் தேதி பிரதமர் மோடி ஆண்டிப்பட்டியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அப்போது தேனி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமார், ஆண்டிப்பட்டி சட்டமன்ற அ.தி.முக. வேட்பாளர் லோகிராஜன், பெரியகுளம் அ.தி.மு.க. வேட்பாளர் மயில்வேல், ஆகியோரை ஆதரித்து பேசுகிறார்.

    இதற்காக ஆண்டிப்பட்டி அருகே எஸ்.ரெங்கநாதபுரம் பிரிவில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    தேனி மாவட்டத்தில் பிரதமர் மோடியும், ராகுல் காந்தியும் போட்டி பிரசாரம் செய்ய உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தலைவர்கள் வருகையையொட்டி தேனி மாவட்டத்தில் கட்சி தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் சுறுசுறுப்பு அடைந்துள்ளனர். #LokSabhaElections2019 #PMModi #RahulGandhi

    ×