என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் ராகுல் காந்தி ஒரே நாளில் 4 இடங்களில் பிரசாரம்
Byமாலை மலர்9 April 2019 9:59 AM GMT (Updated: 9 April 2019 9:59 AM GMT)
தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரே நாளில் கிருஷ்ணகிரி, சேலம், திருமங்கலம், தேனி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்ய உள்ளார். #RahulGandhi
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. ஏற்கனவே பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆகியோர் முதற்கட்ட பிரசாரத்தை கடந்த மாதம் தொடங்கினார்கள்.
இருவரும் கன்னியாகுமரி தொகுதியில் பிரசாரம் செய்தார்கள். மீண்டும் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட பிரதமர் மோடியும், காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட ராகுலும் தமிழகம் வருகிறார்கள்.
ராகுல் காந்தி வருகிற 12-ந்தேதி தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
பெங்களூரில் இருந்து ஹெலிகாப்டரில் காலையில் கிருஷ்ணகிரி வருகிறார். காங்கிரஸ் வேட்பாளர்கள் செல்லக்குமார் மற்றும் ஓசூர் தொகுதி தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.
பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் சேலம் செல்கிறார். அங்கு தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன், நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் கட்சி வேட்பாளர் சின்ராஜ், ஈரோடு ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தி, கள்ளக்குறிச்சி தி.மு.க. வேட்பாளர் கவுதமசிகாமணி ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார்.
பின்னர் அங்கிருந்து தேனி செல்கிறார். அங்கு காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். தமிழக தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு கேரளா செல்கிறார்.
தேனியில் ராகுல் பிரசார கூட்டம் நடத்துவதற்காக பெரியகுளம் பைபாஸ் சாலையில் சுமார் 40 ஏக்கர் நிலத்தை சரி செய்து மேடை அமைக்கும் பணி, ஹெலிகாப்டர் இறங்குதளம் தயாராகி வருகிறது. #RahulGandhi
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. ஏற்கனவே பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆகியோர் முதற்கட்ட பிரசாரத்தை கடந்த மாதம் தொடங்கினார்கள்.
இருவரும் கன்னியாகுமரி தொகுதியில் பிரசாரம் செய்தார்கள். மீண்டும் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட பிரதமர் மோடியும், காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட ராகுலும் தமிழகம் வருகிறார்கள்.
ராகுல் காந்தி வருகிற 12-ந்தேதி தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
பெங்களூரில் இருந்து ஹெலிகாப்டரில் காலையில் கிருஷ்ணகிரி வருகிறார். காங்கிரஸ் வேட்பாளர்கள் செல்லக்குமார் மற்றும் ஓசூர் தொகுதி தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.
பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் சேலம் செல்கிறார். அங்கு தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன், நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் கட்சி வேட்பாளர் சின்ராஜ், ஈரோடு ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தி, கள்ளக்குறிச்சி தி.மு.க. வேட்பாளர் கவுதமசிகாமணி ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார்.
அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருமங்கலம் செல்கிறார். அங்கு மதுரை கம்யூனிஸ்டு வேட்பாளர், விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர், சாத்தூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார்.
பின்னர் அங்கிருந்து தேனி செல்கிறார். அங்கு காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். தமிழக தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு கேரளா செல்கிறார்.
தேனியில் ராகுல் பிரசார கூட்டம் நடத்துவதற்காக பெரியகுளம் பைபாஸ் சாலையில் சுமார் 40 ஏக்கர் நிலத்தை சரி செய்து மேடை அமைக்கும் பணி, ஹெலிகாப்டர் இறங்குதளம் தயாராகி வருகிறது. #RahulGandhi
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X