search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கபடி"

    சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் - பாரதிராஜா நடிப்பில் உருவாகி இருக்கும் `கென்னடி கிளப்' படக்குழுவின் முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. #KennadiClub #Sasikumar
    `ஏஞ்சலினா', `சாம்பியன்' படங்களைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `கென்னடி கிளப்'. சசிகுமார், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படம் மகளிர் கபடியை கருவாக கொண்டு உருவாகி வருகிறது.

    சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், காயத்ரி மற்றும் புதுமுகங்கள் மீனாட்சி, நீது, சவும்யா, ஸ்ம்ர்தி, சவுந்தர்யா உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.


    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் டப்பிங் நேற்று துவங்கியதாக சசிகுமார் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் இந்த படத்தை தயாரித்துள்ளார். #KennedyClub #Sasikumar #Bharathiraja #Suseenthiran

    சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் - பாரதிராஜா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் கென்னடி கிளப் படக்குழுவுக்கு இயக்குநர் பாரதிராஜா விருந்து அளித்தார். #KennedyClub #Sasikumar
    நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் `கென்னடி கிளப்'.

    இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா முழுக்க பல மாநிலங்களில் நடைபெற்றது. அதேபோல் தமிழகத்திலும் பல்வேறு ஊர்களில் நடத்தப்பட்டு வந்தது. இப்படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளுக்காக விழுப்புரத்தில் பிரம்மாண்டமான தளம் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது.



    இதில் நிஜ வீராங்கனைகளும் நடித்தனர். பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். நேற்று முன்தினத்தோடு பாரதிராஜாவின் பகுதி முடிவடைந்த நிலையில், நேற்று அவரது இல்லத்தில் படத்தில் நடித்த நிஜ வீராங்கனைகள், இயக்குநர், உதவி இயக்குநர்கள் மற்றும் படக்குழுவில் பணியாற்றியவர்களுக்கு மதிய விருந்தளித்து உபசரித்தார்.

    இந்த படத்தில் பாரதிராஜாவுடன் சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், காயத்ரி மற்றும் புதுமுகங்கள் மீனாட்சி, நீது, சவும்யா, ஸ்ம்ர்தி, சவுந்தர்யா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். டி.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். #KennedyClub #Sasikumar #Bharathiraja #Suseenthiran

    சுசீந்தரன் இயக்கத்தில் சசிகுமார் - பாரதிராஜா முக்கிய வேடங்களில் நடிக்கும் `கென்னடி கிளப்' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் தமிழ் புத்தாண்டுக்கு ரிலீசாக இருக்கிறது. #KennedyClub #Sasikumar
    ஏஞ்சலினா, சாம்பியன் படங்களைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `கென்னடி கிளப்'. சசிகுமார், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படம் மகளிர் கபடியை கருவாக கொண்டு உருவாகி வருகிறது. 

    சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், காயத்ரி மற்றும் புதுமுகங்கள் மீனாட்சி, நீது, சவும்யா, ஸ்ம்ர்தி, சவுந்தர்யா உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

    படம் பற்றி சுசீந்திரன் பேசும் போது, 

    ‘‘பெண்கள் கபடியை மையமாக கொண்ட கதை, இது. இந்தியா முழுவதும் எங்கெல்லாம் கபடி போட்டி நடைபெற்றதோ அங்கெல்லாம் சென்று நிஜ போட்டிகளை படமாக்கி இருக்கிறோம். சேலம், ஈரோடு, கோவை, மதுரை, கன்னியாகுமரி, மும்பை, அகமதாபாத் ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தினோம்.



    பெரும்பாலான காட்சிகளை 4 கேமராக்கள் மூலம் படமாக்கி இருக்கிறோம். இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக மகாராஷ்டிரா சென்றோம். அங்கிருந்து சுமார் 180 கிலோ மீட்டர் தொலைவில் இசாத்பூர் என்ற இடத்தில் படப்பிடிப்பை நடத்தி வருகிறோம். ஹரியானாவில் நடைபெற இருக்கும் நிஜ போட்டியையும் படமாக்க திட்டமிட்டு இருக்கிறோம்.

    சீன மொழிக்கான டப்பிங் உரிமை (ரூ.2 கோடிக்கு) படம் வெளியாவதற்கு முன்பே விற்பனை ஆகியிருக்கிறது. இறுதிக்கட்டத்தில் உள்ள இந்த படம் தமிழ் புத்தாண்டுக்கு திரைக்கு வரும்.’’ என்றார். #KennedyClub #Sasikumar #Bharathiraja #Suseenthiran

    இந்திய கபடி அணியின் முன்னணி வீரராக திகழ்ந்த அனுப் குமார் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். #Kabaddi #AnupKumar
    இந்திய கபடி அணியின் முன்னணி வீரராக திகழ்ந்தவர் அனுப் குமார். இவர் கடந்த 2006-ம் ஆண்டு தெற்காசிய போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக அறிமுகம் ஆனார். இவரது தலைமையில் இந்திய கபடி அணி ஆசிய போட்டியில் தங்கம் வென்றுள்ளது. 2014-ம் ஆண்டு தங்கம் வென்ற அணியில் ஒரு வீரராக இடம்பிடித்திருந்தார்.

    கடந்த 15 வருடங்களாக கபடி விளையாடி வந்த அனுப் குமார், நேற்று தனது ஓய்வை அறிவித்தார். 2006-ம் ஆண்டு விளையாட்டிற்கான அர்ஜூனா விருதை வென்றுள்ளார். இவரது தலைமையில் புரோ கபடி லீக்கின் 2-வது சீசனில் மும்பை அணி (U Mumba) கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
    ஈஷா கிராம புத்துணர்வு இயக்கம், தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத்துடன் இணைந்து நடத்தும் கபடி போட்டி நாளைத் தொடங்குகிறது.
    சென்னை:

    2018-ம் ஆண்டுக்கான 14-வது ஈஷா கிரா மோத்ஸவ விளையாட்டு போட்டிகள் தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கியது. அனைத்து மாவட்டங்களிலும் முதல் கட்ட கைப்பந்து மற்றும் எறிப்பந்து போட்டிகள் நிறவடைந்துள்ளன.

    இந்த நிலையில், ஈஷா கிராம புத்துணர்வு இயக்கம், தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத்துடன் இணைந்து நடத்தும் கபடி போட்டிகள் நாளை (10-ந்தேதி) தொடங்குகிறது. இந்த போட்டிகள் மாவட்டம், மண்டலம், மாநிலம் என 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. மாவட்ட அளவிலான போட்டிகள் வருகிற 10, 11, 17, 18 ஆகிய தேதிகளில் 32 மாவட்டங்களிலும் நடைபெறும்.

    இதையடுத்து, கோவை, வேலூர், திருச்சி மற்றும் மதுரை ஆகிய இடங்களில் மண்டல அளவிலான கபடி போட்டிகள் நடத்தப்படும். மாநில அளவிலான இறுதிப் போட்டிகள் டிசம்பர் 8-ந்தேதி மற்றும் 9-ந்தேதிகளில் நடைபெற உள்ளது.

    இந்த கபடி போட்டியில் 2,250 கிராமப்புற அணிகளும், 27 ஆயிரம் வீரர்-வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர். மொத்தம் ரூ. 20 லட்சத்து 50 ஆயிரம் பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது.

    ஆண்களுக்கான போட்டியில் மாநில அளவில் முதல் 4 இடங்கள் பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ. 2 லட்சம், ரூ. 1 லட்சம், ரூ. 50 ஆயிரம் பரிசு தொகையாக வழங்கப்படும்.

    இதேபோல், பெண்களுக்கான போட்டியில் முதல் 4 இடங்கள் பிடிக்கும் அணிகளுக்கும் முறையே ரூ. 1 லட்சம், ரூ. 50 ஆயிரம், ரூ. 25 ஆயிரம், ரூ. 25 ஆயிரம் பரிசு தொகையாக வழங்கப்படும்.

    இதுதவிர, மண்டலம் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் 4 இடங்கள் பிடிக்கும் அணிகளுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.
    சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் - பாரதிராஜா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் `கென்னடி கிளப்' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. #KennedyClub #SasiKumar #Bharathiraja
    சுசீந்திரன் இயக்கத்தில் ஜீனியஸ் படம் வருகிற அக்டோபர் 26-ஆம் தேதி திரைக்கு வருகிறது. மேலும் ஏஞ்சலினா, சாம்பியன் உள்ளிட்ட படங்களையும் இயக்கி முடித்துள்ளார். இந்த இரு படங்களின் பின்னணி வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தனது அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார்.

    அதன்படி சுசீந்திரன் இயக்கும் அடுத்த படத்தில் சசிகுமார் மற்றும் இயக்குனர் இமயம் பாரதிராஜா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். `கென்னடி கிளப்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சூரி, முனீஸ்காந்த், மீனாட்சி, காயத்ரி, நீது, சௌமியா, ஸிம்ரிதி, சௌந்தர்யா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் நடிக்க பாலிவுட்டில் இருந்து வில்லனை தேடிவருகிறார் சுசீந்திரன்.

    பாண்டியநாடு, பாயும் புலி மற்றும் மாவீரன் கிட்டு உள்ளிட்ட படங்களுக்கு பிறகு சுசீந்திரன் இயக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். குருதேவ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் இந்த படத்தை தயாரிக்கிறார்.



    பழனியை கதைக்களமாக கொண்டு உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று துவங்கியது. அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.

    இயக்குனர் சுசீந்திரனின் தந்தை புகழ்பெற்ற கபடிக்குழுவின் நிறுவனர். அவர் 40 வருடமாக அந்த கபடி குழுவை நடத்தி பயிற்சியளித்து வருகிறார். அவரிடம் பயிற்சி பெற்ற பலர் தேசிய மற்றும் உலகளாவிய போட்டிகளில் பங்குபெற்று பதக்கங்கள் வென்றுள்ளனர். இந்த படத்தில் நிஜ பெண் கபடி வீராங்கனைகளும் நடிக்கிறார்கள்.

    வெண்ணிலா கபடிக்குழு படத்திற்கு பிறகு கபடியை மையமாக வைத்து சுசீந்திரன் இயக்கும் படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. #KennedyClub #SasiKumar #Bharathiraja

    24 அணிகள் பங்கேற்கும் சென்னை ஓபன் மகளிர் கபடி போட்டி நாளை தொடங்கி இரண்டு நாட்கள் ராணிமேரி கல்லூரி மைதானத்தில் நடக்கிறது.
    சென்னை:

    கபடி ஸ்டார் மற்றும் ராணிமேரி கல்லூரி சார்பில் சென்னை ஓபன் மகளிர் கபடி போட்டி நடத்தப்படுகிறது. இந்தப்போட்டி நாளையும் (4-ந்தேதி), நாளை மறுநாளும் (5-ந்தேதி) ராணிமேரி கல்லூரி மைதானத்தில் நடக்கிறது.

    சர்வதேச கபடி சம்மேளன நிறுவன தலைவரான ஜனார்த்தன்சிங். கெலாட்டின் பிறந்தநாளையொட்டி நடத்தப்படும் இந்தப்போட்டியில் 24 அணிகள் பங்கேற்கின்றன.

    எத்திராஜ், கபடி ஸ்டார், தமிழ்நாடு போலீஸ், ராணிமேரி கல்லூரி, சாய் (தர்மபுரி), தமிழ் தலைவாஸ், ஏ.எம்.ஜெயின் (மீனம்பாக்கம்) போன்ற முன்னணி அணிகள் இதில் கலந்து கொள்கின்றன. நாக்அவுட் மற்றும் ‘லீக்’ முறையில் போட்டிகள் நடக்கிறது.

    இந்தப்போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.74 ஆயிரமாகும். சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு சுழற்கோப்பையுடன் ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். 2-வது முதல் 6-வது இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.20 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.4 ஆயிரம், ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.

    நாளை காலை 10.30 மணிக்கு இந்தப்போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தொடங்கி வைக்கிறார். இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை போட்டி அமைப்பாளர் கோல்டு எம்.ராஜேந்திரன் செய்து வருகிறார்.
    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனின் பிறந்த நாளையொட்டி தாய்மண் விளையாட்டு கழகம் சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி நடத்தப்படுகிறது. #Thirumavalavan #Kabaddi

    சென்னை:

    சென்னை சாலிகிராமம் ஆவிச்சி மேல்நிலைப் பள்ளியில் இன்று மாலை 6 மணிக்கு கபடி போட்டி தொடங்குகிறது.

    இதில் தமிழகம் முழுவதும் இருந்து 40 அணிகள் பங்கேற் கின்றன. கபடி போட்டி தொடக்க விழாவிற்கு தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் வி.கோ.ஆதவன் தலைமை தாங்குகிறார். தயாளன், பனையூர் பாபு ஆகியோர் போட்டியை தொடங்கி வைக்கிறார்கள்.

    போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம் பண முடிப்பும், அம்பேத்கர் நினைவு கோப்பையும், 2-வது பரிசாக ரூ.40 ஆயிரம் பணமுடிப்பும் காமராஜர் நினைவு கோப்பையும் வழங்கப்படுகிறது.

    3-வது பரிசாக ரூ.30 ஆயிரம் பணமுடிப்பும் மற்றும் தொல்காப்பியர் நினைவு கோப்பையும், 4-வது பரிசாக ரூ.20 ஆயிரம் பணமுடிப்பும், தன்ராஜ் பாளையம்மாள் நினைவு கோப்பையும் வழங் கப்படுகிறது.

    நாளை (ஞாயிற்றுக் கிழமை) மாலை இறுதி போட்டி நடத்தப்பட்டு இரவு பரிசளிப்பு விழா நடக்கிறது. விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பணமுடிப்பை வழங்குகிறார்.

    நிகழ்ச்சியில் வி.கோ.ஆதவன், விருகை தொகுதி செயலாளர் கரிகால் வளவன், ராஜசேகரன், தி.மு.க. வக்கீல் எம்.ஸ்ரீதர், ஏ.எம்.கணேஷ், கோ.ராம லிங்கம், வி.என்.கண்ணன், ஜெ.செந்தில்குமார், வி.என். ஜெயகாந்தன், அப்துல் அஜீஸ், திலீப், மாவட்ட செயலாளர்கள் ரவிசங்கர், இரா.செல்வம், நா.செல்லத் துரை, அம்பேத்வளவன், அன்புசெழியன், சூ.க.ஆத வன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    கபடி ஆட்டம் விரைவில் ஒலிம்பிக் போட்டியில் இடம் பெறும் என்று மத்திய விளையாட்டு துறை மந்திரி ராஜ்யவர்தன்சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #RajyavardhanSingh
    புதுடெல்லி:

    டெல்லி மேல்-சபையில் நேற்று மத்திய விளையாட்டு துறை மந்திரி ராஜ்யவர்தன்சிங் ரத்தோர் பேசுகையில், ‘பலம், திறமை, வேகம், சிந்திக்கும் ஆற்றல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்படக்கூடிய கபடி ஆட்டம் தற்போது 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் விளையாடப்பட்டு வருகிறது. மிகவும் குறைந்த விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தும் இந்த போட்டியை நிச்சயம் உலகம் ஏற்றுக்கொள்ளும். இறுதியாக கபடி ஆட்டம் விரைவில் ஒலிம்பிக் போட்டியில் இடம் பெறும் என்று நம்புகிறேன். மாநில விளையாட்டு சங்கங்கள் அனைத்தும் தேசிய விளையாட்டு கொள்கையை ஏற்று அதன்படி வெளிப்படையாக தேர்தல் மற்றும் நிர்வாகத்தை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்தார். #RajyavardhanSingh
    ×