search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக"

    ஆர்.எஸ்.ராஜேசை ஆதரித்து என்.எம்.பாஸ்கரன் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனர். #LokSabhaElections2019

    பெரம்பூர்:

    பெரம்பூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் மற்றும் வடசென்னை தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோரை ஆதரித்து 36-வது வார்டு முன்னாள் கவுன்சிலர் என்.எம்.பாஸ்கரன் தலைமையில் 36-வது வட்ட கிழக்கு, மேற்கு ஆகிய பகுதிகளில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனர்.

    36-வது கிழக்கு வட்ட பொறுப்பாளர் என்.எம்.பாஸ்கரன் தலைமையில், பொறுப்பாளர்கள் அசாம்பாக்கியம், செந்தாமரைக் கண்ணன், தேவி, ஆனந்தன், ஜோசப், பிரகாஷ், மூர்த்தி,மேரி ராஜகுமாரி, செல்வராஜ், குண சேகர், மீனா, ரவிசங்கரன், பிச்சா பதி, செல்வராஜ், பாலமுருகன், நெல்சன், அன்னக்கிளி, உதயராஜ், பாபுராவ், ராமய்யா, மங்களம், ஜான்பாஸ்கோ, சேட்டு,சுரேஷ், ஸ்ரீநாத்ராஜ், விஜயன், நாகராஜ், வசந்தி, சந்தோஷ்பாபு, தாமோதரன், செல்வி, முத்துசிவா, கார்மேகம், ரோசி, ஜெயக்குமார், தாமோதரன், ராஜி, பால்ச்சாமி, இருதயராஜ், சண்முகம், ஆறுமுகம், முனிரத்தினம், மோகன், கனகசபை, கோட்டீஸ்வரன், மனோகரன், கஜேந்திரன், பிரேம் குமார், மணிவண்ணன், சுரேஷ், திருநாவுக்கரசு மற்றும் கூட்டணி கட்சியினர் ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர். #LokSabhaElections2019

    காஞ்சிபுரம் பாராளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம்குமரவேல் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் உத்திரமேரூர். வாலாஜாபாத், காஞ்சிபுரம் பகுதிகளில் கொளுத்தும் வெயிலில் இரட்டைஇலைக்கு வாக்குகள் சேகரித்தார். #LokSabhaElections2019

    திருப்போரூர்:

    காஞ்சிபுரம் பாராளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம்குமரவேல் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் உத்திரமேரூர். வாலாஜாபாத், காஞ்சிபுரம் பகுதிகளில் கொளுத்தும் வெயிலில் இரட்டைஇலைக்கு வாக்குகள் சேகரித்தார்.

    அப்போது அவர், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து மக்கள் குறைகளை தீர்த்து வைப்பேன். மத்திய மாநில அரசின் திட்டங்கள் ஏழைகளுக்கு கிடைக்க பாடுபடுவேன் என கூறி வாக்கு சேகரித்தார். முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம், மேற்குமாவட்ட செயலாளர் வாலாஜாபாத் கணேசன், மைதிலிதிருநாவுக்கரசு, அ.தி.மு.க. நிர்வாகிகள், பா.ம.க. தே.மு.தி.க., பா.ஜ.க, த.மா.கா. புரட்சிபாரதம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் வேட்பாளருடன் சென்று வாக்கு சேகரித்தனர்.  #LokSabhaElections2019

    காஞ்சிபுரம் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல், திருப்போரூர் சட்ட மன்ற வேட்பாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் ஆகியோர் முட்டுக்காடு, தையூர் உள்ளிட்ட பல கிராமங்களில் வாக்குகள் சேகரித்தனர். #LoksabhaElections2019

    திருப்போரூர்:

    காஞ்சிபுரம் பாராளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல், திருப்போரூர் சட்ட மன்ற வேட்பாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் ஆகியோர் திருப்போரூர் ஒன்றியத்திற்குட்பட்ட நாவலூர், முட்டுக்காடு, படூர், கேளம்பாக்கம், தையூர் உள்ளிட்ட பல கிராமங்களில் வாக்குகள் சேகரித்தனர்.

    ஒவ்வொரு கிராமத்திலும் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், கூட்டணி கட்சியினர் திரண்டு வந்து மேள தாளத்துடன் ஆளுயுர மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர்.

    வேட்பாளர்கள் பொதுமக்களிடம் இரட்டை இலைக்கு வாக்களித்து நாங்கள் வெற்றிபெற்றால் இப்பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், மற்றும் மத்திய, மாநில அரசின் திட்டங்கள் கிராமப்புற மக்களையும் சென்றடைய பாடுபடுவோம் மேலும் தங்கள் பகுதி குறைகளை நேரிடையாக சந்தித்து தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

    தையூரில் ஜேபி எந்திரம் மூலம் மலர்தூவி வேட்பாளர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். முன்னாள் எம்.பி காஞ்சி பன்னீர்செல்வம், பா.ம.க. ஏகாம்பரம், வாசு, தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் அனகை முருகேசன், மாவட்ட துணைசெயலாளர் எஷ்வந்த்ராவ், மாவட்ட அம்மாபேரவை ஆனூர் பக்தவச்சலம், மாவட்ட வர்த்தக பிரிவு ராகவன், திருப்போரூர் ஒன்றியசெயலாளர் தையூர் குமரவேல், நாவலூர் ரகு, முட்டுக்காடு பாஸ்கரன், கேளம்பாக்கம் வினோத்கண்ணன், தையூர் ராஜா, த.மா.கா கோவிந்தராஜ், பிஜேபி கோதண்டன், புரட்சி பாரதம் சிவலிங்கம்;, தே.மு.தி.க. ஒன்றியசெயலாளர் கோபிநாத், உள்ளிட்ட கூட்டணி கட்சிநிர்வாகிகள், தொண்டர்கள் வேட்பாளருடன் சென்று வாக்குகள் சேகரித்தனர். #LoksabhaElections2019

    திருப்போரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் திருப்போரூர் பேரூராட்சி பகுதியில் கொளுத்தும் வெயிலில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். #LokSabhaElections2019 #ADMK

    திருப்போரூர்:

    திருப்போரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் திருப்போரூர் பேரூராட்சி பகுதியில் கொளுத்தும் வெயிலில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அனைத்து வார்டுகளிலும் வீதி வீதியாக சென்று இப்பகுதி மக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறி பாராளுமன்றம், சட்டமன்றத்துக்கு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

    முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, சிட்லபாக்கம் ராஜேந்திரன், தண்டரை மனோகரன், ஒன்றிய செயலாளர் குமரவேல், நகர செயலாளர் முத்து, டி.டி.மோகன், பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா. புரட்சி பாரதம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், வேட்பாளருடன் சென்று வாக்கு சேகரித்தனர். #LokSabhaElections2019 #ADMK

    பூந்தமல்லி ஓன்றியம் காட்டுபாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பூந்தமல்லி தொகுதி அதிமுக வேட்பாளர் க.வைதியநாதன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். #LokSabhaElections2019

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி ஓன்றியம் காட்டுபாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பூந்தமல்லி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் க.வைதியநாதன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அவருடன் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, ஒன்றிய செயலாளர் ஜி.திருநாவுக்கரசு, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சி.ஒய்.ஜாவித் அகமத், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் கே.எஸ்.ரவிசந்திரன், வயலை நடராஜன் ஊராட்சி கழக செயலாளர் கே.ஜி.டி.கெளதமன், மணவாளன், கோவிந்தராஜ் , சிகாமணி, சுதாகர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சென்று வாக்கு சேகரித்தனர். #LokSabhaElections2019

    டாக்டர் வைத்திலிங்கத்திற்கு ஆதரவாக அமைச்சர் பா.பென்ஜமின் வீதி வீதியாக பிரசாரம் செய்து வருகிறார். #LokSabhaElections2019

    சென்னை:

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அ.வைத்திலிங்கம் போட்டியிடுகிறார்.

    மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் அவருக்கு ஆதரவாக ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் அவர் கொளுத்தும் வெயிலில் வாக்கு சேகரித்தார்.

    படித்தவரை தேர்வு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்பினால் தான் பல்வேறு திட்டங்களை கொண்டு வர முடியும். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக் கூடிய மக்களின் மனநிலையை அறியக் கூடிய மருத்துவராக வைத்திலிங்கம் இருப்பதால் அவரை வெற்றி பெற செய்யுங்கள் என்று மதுரவாயல் தொகுதிக்கு உட்பட்ட சென்னை மாநகராட்சி வார்டுகளில் ஆதரவு திரட்டினார்.

    அமைச்சர் பா.பென்ஜமினுடன் திருவள்ளூர் மாவட்ட அவை தலைவர் கா.சு. ஜனார்த்தனம், வட்ட செயலாளர் கந்தன், பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் கே.என். சேகர், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பிரகாஷ் மற்றும் அ.தி.முக.. கூட்டணி கட்சி நிர்வாகிகள் பிரசாரத்தில் ஈடுபட்டனர். #LokSabhaElections2019

    காஞ்சி வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து வரலட்சுமி மதுசூதனன் பிரசாரம் செய்தார். #LokSabhaElections2019

    சென்னை:

    மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில் பகுதியில் காஞ்சி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் வீதி வீதியாக சென்று உதய சூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டார்.

    அப்போது வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    சிங்கபெருமாள் கோவில் பகுதிக்கு எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.50 லட்சத்தில் குடிநீர் வசதி, மழைநீர், கழிவுநீர் கால்வாய் வசதி செய்யப்படும்.

    ஒரே கட்சியை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ. இருந்தால் மக்களுக்கான நலத்திட்டங்கள் நிறைவேற்ற வசதியாக இருக்கும். எனவே உதய சூரியன் சின்னத்தை மறவாதீர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத்தொடர்ந்து கூடு வாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலை பஜாரில் வீதி வீதியாக சென்று வாக்கு கேட்டார்.

    பிரசாரத்தின் போது எம்.கே.தண்டபாணி, கே.பி.ராஜன், ஆப்பூர் சந்தானம் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.
    #LokSabhaElections2019

    மதுராந்தகம், அச்சரபாக்கத்தில் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் தீவிர வாக்கு சேகரித்தார்.

    திருப்போரூர்:

    காஞ்சி பாராளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம்குமரவேல், மதுராந்தகம் நகராட்சியில் 24 வார்டுகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார் மற்றும் கருங்குழி பேரூராட்சி, அச்சரபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கிராம மக்களின் முக்கிய அடிப்படைத்தேவைகளை மீண்டும் வெற்றிபெற்றால் செய்து தருவதாக உறுதியளித்து வாக்குகள் சேகரித்தார்.

    மதுராந்தகம் பகுதியில் எம்.ஜி.ஆர் வேடமணிந்த தொண்டருடன் வேட்பாளர் மரகதம்குமரவேல் வீடு வீடாக சென்று வாக்குகள் சேகரித்தார். வேட்பாளருடன் அ.தி.மு.க. மாநில இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி, ஒன்றிய செயலாளர் அப்பா துரை, நகரசெயலாளர் ரவி, கருங்குழி பழனி, மஞ்சுளா புருஷோத்தமன், அச்சரபாக்கம் மெய்யப்பன், சுப்பிரமணி, முருகதாஸ், பா.ம.க மாநில துணைசெயலாளர் பொன். கங்காதரன், மாவட்ட செயலாளர் கோபால கண்ணன், தேமுதிக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், பா.ஜ.க நிர்வாகிகள் செந்தமிழரசு, தயாளன், ருத்திரகோட்டி, பாலாஜி, த.மா.கா. ஆதிகேசவலு, பழனி, புரட்சிபாரதம் உள்ளிட்ட கூட்டணியினர் சென்று ஆதரவு திரட்டினர்.

    பூந்தமல்லி தொகுதி அதிமுக வேட்பாளர் க.வைதியநாதன் நேமம், சித்துகாடு, திருமணம், மேல் மணம்பேடு, அன்னம்மேடு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி தொகுதி அதிமுக வேட்பாளர் க.வைதியநாதன் நேமம், சித்துகாடு, திருமணம், மேல் மணம்பேடு, அன்னம்மேடு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது அவர், திருவள்ளூர், எல்லாபுரம், பூந்தமல்லி ஒன்றிய விவசாயிகளுக்கு விவசாய கருவிகள், உரங்கள் மானிய விலையில் வழங்கப்படும் என்றார். அவருடன் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி, அமைச்சர் பா.பென்ஜமின், மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன், முன்னாள் எம்.எல்.ஏ இரா.மணிமாறன், ஒன்றிய செயலாளர் ஜி.திருநாவுக்கரசு, உள்பட புரட்சிபாரதம் கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் சென்று வாக்கு சேகரித்தனர்.

    இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் எஸ்.ஆறுமுகம் மற்றும் காஞ்சிபுரம் பாராளுமன்ற வேட்பாளர் மரகதம் குமரவேல் ஆகியோருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் வாக்குகள் சேகரித்தார். #LokSabhaElections2019 #ADMK

    திருப்போரூர்:

    திருப்போரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் மற்றும் காஞ்சிபுரம் பாராளுமன்ற வேட்பாளர் மரகதம்குமரவேல் ஆகியோருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சரும் கழக அமைப்பு செயலாளருமான வி.சோமசுந்தரம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் வாக்குகள் சேகரித்தார்.

    அப்போது பேசிய வேட்பாளர் ஆறுமுகம், மத்திய, மாநில அரசின் திட்டங்கள் நேரிடையாக கிராமமக்களுக்கு கிடைக்க முக்கிய பங்காற்றுவேன் என்றார். அவருடன் துணை செயலாளர் எஸ்வந்த்ராவ், மஞ்சளாரவிக்குமார், ஆனூர் பக்தவச்சலம், விஜயரங்கன், அரிதாஸ், பா.ம.க. காரணை ராதா, முன்னாள் சேர்மன் வாசு,விவசாயபிரிவு மாம் பாக்கம்லட்சுமணன், கூட்டுறவு சங்கதலைவர் ரத்தினம், சாலூர் ஜானகிராமன், தேமுதிக, த.மா.கா, புரட்சிபாரதம், உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் சென்று வாக்கு சேகரித்தனர்.  #LokSabhaElections2019 #ADMK

    அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #ADMK

    ராயபுரம்:

    வடசென்னை பாராளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ், மற்றும் பெரம்பூர் சட்டமன்றதொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.எஸ். ராஜேஷ், ஆகியோரை ஆதரித்து கழக அவைத் தலைவர் இ.மதுசூதனன், மற்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், ஆகியோர் 36-வது வட்டம் முல்லை நகரில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

    கொடுங்கையூர் பள்ளிக் கூட சாலை அருகில் உள்ள காந்தி சிலை, எம்.ஆர்.நகர் மீன் மார்க்கெட், பாரதி நகர், சாஸ்திரி நகர், பி.வி.காலனி, எஸ்.ஆர்.பூக்கடை, உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று ஆதரவு திரட்டினார். பிரசாரத்தின் போது சரத்குமார் பேசியதாவது:-

    எதிர்கட்சிகளின் சூழ்ச்சிக்கு வாக்காளர்கள், துணை போக வேண்டாம். மெகா கூட்டணி தமிழகத்தில் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

    அம்மா விட்டுச் சென்ற பணியை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செய்து வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ்.ஆறுமுகம் மற்றும் காஞ்சிபுரம் தொகுதி அதிமுக பாராளுமன்ற வேட்பாளர் மரகதம் குமரவேல் ஆகியோரை ஆதரித்து சிட்லப்பாக்கம் ச.ராஜேந்திரன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். #LokSabhaElections2019 #ADMK

    தாம்பரம்:

    திருப்போரூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் மற்றும் காஞ்சிபுரம் தொகுதி அ.தி.மு.க. பாராளுமன்ற வேட்பாளர் மரகதம் குமரவேல் ஆகியோரை ஆதரித்து காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் ச.ராஜேந்திரன் மேலக் கோட்டையூர் கிராமத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது வயல்வெளியில் விவசாயம் செய்து கொண்டிருந்த கிராமப்புற பெண்களிடம் அ.தி.மு.க. அரசால் பெண்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ள மகத்தான திட்டங்களான தாலிக்கு தங்கம், கர்ப்பிணி உதவித்தொகை, கலப்பு திருமண உதவித் தொகை, பெண்களுக்கு பாதி விலையில் ஸ்கூட்டி, பள்ளி மாணவர்களுக்கு மடிக் கணினி, சைக்கிள் பிறக்கும் குழந்தைகளுக்காக பரிசு பெட்டி போன்றவற்றை அ.தி.மு.க. அரசு கிராமப்புற பெண்கள் பயனடையும் வகையில் செயல்படுத்தி வருகிறது.

    அதிமுக அரசில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டங்களை பார்த்து வியந்த பிற மாநில அரசுகள் தற்போது அ.தி.மு.க. அரசின் இந்த திட்டங்களை அவர்கள் மாநிலத்தில் செயல்படுத்தி வருகின்றனர் இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. என்று எடுத்துக்கூறி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார் அவருடன் மாவட்ட வர்த்தகப் பிரிவு செயலாளர் காசிராஜன் மற்றும் நிர்வாகிகள் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சென்று ஆதரவு திரட்டினர். #LokSabhaElections2019 #ADMK

    ×