என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் பிரசாரம்"

    • தொகுதியில் எந்த பிரச்சனைக்கும் எங்களை அணுகலாம்.
    • மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் காங்கிரசுக்கு ஓட்டு போட வேண்டும்.

    தமிழகம், புதுவைக்கான சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

    தேர்தலுக்கான முன் ஏற்பாடுகளை அரசியல் கட்சிகள் தொடங்கி விட்டன. எந்தெந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு, வேட்பாளர் யார்? என்ற ஆலோசனையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக உள்ளன.

    அதேபோல் முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் புதிய வேட்பாளர்கள் மக்களை சந்திக்க தொடங்கி விட்டனர். கட்சி தாவல் படலங்களும் அரங்கேற தொடங்கியுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி இழந்த செல்வாக்கை பெற்று புதுவை காங்கிரசின் கோட்டை என்பதை நிலை நாட்ட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனர்.

    இதனால் மற்ற கட்சிகளை விட ஒரு படி மேலே சென்று தேர்தல் பிரசாரத்தையே தொடங்கியுள்ளனர். புதுவை நெல்லித்தோப்பு தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திய அரசியலமைப்பை காப்போம் பிரசார பொதுகூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

    கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் காங்கிரசுக்கு ஓட்டு போடுங்கள் என வாக்கு சேகரிக்கும் பணியை தொடங்கினார். அவர் மேலும் பேசியதாவது:-

    ரங்கசாமி ஆட்சியில் என்ன செய்துள்ளார்? கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினாரா? தேர்தல் தினத்தில் கொடுக்கும் பணத்தை வைத்து முடிவெடுத்தால் உங்கள் வாழ்க்கை இருண்டு விடும். யாருக்கு ஓட்டு போட்டால் தொகுதி வளர்ச்சியடையும் என சிந்திக்க வேண்டும்.

    தொகுதியில் எந்த பிரச்சனைக்கும் எங்களை அணுகலாம். வரும் தேர்தலில் காங்கிரசுக்கு வாக்களியுங்கள். மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் காங்கிரசுக்கு ஓட்டு போட வேண்டும். உங்களுக்கு வேண்டியதை செய்து தருவோம்.

    இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பெத்தபெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், கார்த்திகேயன், சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • கடந்த ஆண்டு துணை அதிபர் வெரோனிகா அபாத் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
    • தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருவதால் அதிபரின் அதிகாரங்கள் விரைவில் சின்தியாவிடம் மாற்றப்பட உள்ளன.

    குயிட்டோ:

    தென் அமெரிக்க நாடான ஈகுவடாரில் அதிபர் டேனியல் நோபோவா தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. இவரது பதவிக்காலம் விரைவில் முடிகிறது. எனவே நாடாளுமன்ற தேர்தலுக்கான 2-வது கட்ட வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஏப்ரல்) நடைபெற உள்ளது. இதில் ஆளுங்கட்சி சார்பில் அதிபர் டேனியல் நோபோவாவும், அவரை எதிர்த்து இடதுசாரி வேட்பாளர் லூயிசா கோன்சலசும் போட்டியிடுகின்றனர்.

    அந்த நாட்டு சட்டத்தின்படி தேர்தல் பிரசாரத்தின்போது அதிபரின் அதிகாரங்கள் துணை அதிபரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். ஆனால் அதிபருடன் நிலவிய கருத்து வேறுபாட்டால் கடந்த ஆண்டு துணை அதிபர் வெரோனிகா அபாத் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

    இந்த பதவி காலியாக இருந்ததால் அதிபரின் அதிகாரங்கள் மாற்றப்படாமல் இருந்தன. இந்தநிலையில் ஆளுங்கட்சியின் பொதுச்செயலாளரான சின்தியா கெல்லிபர்ட்டை இடைக்கால அதிபராக நியமித்து அதிபர் டேனியல் உத்தரவிட்டுள்ளார். தற்போது அங்கு தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருவதால் அதிபரின் அதிகாரங்கள் விரைவில் சின்தியாவிடம் மாற்றப்பட உள்ளன.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பணிக்குழுவில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களை தொடர்பு கொண்டு அனைவரும் 27-ந்தேதி ஈரோடு சென்று பிரசாரத்தை தொடங்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.
    • 11 அமைச்சர்களும் ஈரோட்டில் 27-ந்தேதியில் இருந்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மரணம் அடைந்ததை அடுத்து அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    ஆளும் தி.மு.க. தனது கூட்டணி கட்சியான காங்கிரசுக்கே இந்த தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது.

    காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இவர் நேற்று தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    அது மட்டுமின்றி கூட்டணி கட்சி தலைவர்களான ம.திமு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் மற்றும் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்பட கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளிடமும் ஆதரவு கேட்டார்.

    இதை தொடர்ந்து இன்று முதல் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோடு தொகுதியில் தனது பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.

    ஈரோடு தொகுதியில் நடைபெறும் தேர்தல் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால் இந்த தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தி.மு.க. தேர்தல் வியூகம் வகுத்து வருகிறது.

    இதற்காக 11 அமைச்சர்களை உள்ளடக்கிய 31 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்துள்ளது.

    இந்த குழுவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எஸ்.முத்துசாமி, எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், அர.சக்கரபாணி மு.பெ.சாமிநாதன், வி.செந்தில் பாலாஜி, ஆவடி சா.மு.நாசர், கயல்விழி செல்வராஜ் ஆகிய 11 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    இவர்களுடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான அந்தியூர் செல்வராஜ், கோவை நா.கார்த்திக், தளபதி முருகேசன், தொ.அ. ரவி, தா.உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், சேலம் ஆர்.ராஜேந்திரன், டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம், நல்லசிவம், பத்மநாபன், பா.மு.முபாரக், மதியழகன், ராஜேஸ்குமார், மதுரா செந்தில், பெ.பழனியப்பன், பிரகாஷ், திருப்பூர் செல்வராஜ், ஐ.பி.செந்தில்குமார், தடங்கம் சுப்ரமணி ஆகிய 20 பேர்களும் இடம்பெற்றுள்ளனர்.

    அமைச்சர்களில் கே.என்.நேரு, முத்துசாமி மட்டுமே ஈரோட்டில் முகாமிட்டு உள்ளனர். மற்ற அமைச்சர்கள் இன்னும் ஈரோடு செல்லவில்லை.

    மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நாளை நடைபெறுவதால் அந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுக்கூட்டம் முடிந்ததும் அமைச்சர்கள் ஈரோடு செல்ல உள்ளனர்.

    இதற்கிடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பணிக்குழுவில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களை தொடர்பு கொண்டு அனைவரும் 27-ந்தேதி ஈரோடு சென்று பிரசாரத்தை தொடங்குமாறு அறிவுறுத்தி உள்ளார். இதனால் 11 அமைச்சர்களும் ஈரோட்டில் 27-ந்தேதியில் இருந்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் 280 பூத் (வாக்குச்சாவடி) உள்ளது. அதை 11 அமைச்சர்களுக்கும் பிரித்து கொடுத்து அதற்கேற்ப பணியாற்றுமாறும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசார பணிகளை சென்னையில் இருந்தபடி கவனித்து வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 2-வது வாரம் அங்கு சென்று பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த தேதியில் பிரசாரத்திற்கு செல்வார் என்ற விவரம் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்டாலும் அவர்களை விட தி.மு.க.வினர்தான் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பே தி.மு.க. அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி ஆகியோர் ஈரோட்டில் 'கை' சின்னத்துக்கு வீடு வீடாக சென்று வாக்குசேகரித்தது குறிப்பிடத்தக்கது.

    • கட்சி வேட்பாளரை ஆதரித்து டி.டி.வி.தினகரன் 12-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை ஈரோட்டில் பல்வேறு பரிமாணங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
    • இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா குறித்து புகார் எழுந்துள்ளது. இது கண்டனத்திற்குரியது.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று அ.ம.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சண்முகவேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எங்களுக்கு தேர்தல் களம் புதியதல்ல. பாராளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என பல தேர்தல்களை சந்தித்துள்ளோம். ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் மக்களை சந்தித்து ஆளும் அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை எடுத்துரைப்போம். மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு போன்ற மக்கள் பிரச்சினையை முன்வைத்து களம் காணுவோம்.

    குறைந்த வாக்குகள் முந்தைய தேர்தலில் பெற்றிருந்தாலும், இந்த தேர்தல் எங்களுக்கான தேர்தலாக பார்க்கிறோம். டி.டி.வி.தினகரன் மக்களை நேரடியாக நியாயமான முறையில் சந்தித்து வாக்கு சேகரிக்க கூறியுள்ளார்.

    அ.தி.மு.க.வில் இலையைப் பிடிக்க இரு அணிகளிடையே போட்டி நடந்து வருகிறது. நாங்கள் தனி கட்சியாக நின்று செயல்படுகிறோம். ஈரோடு கிழக்கு தொகுதியில் அடிப்படை வசதி கூட செய்யப்படவில்லை. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கு பிறகு தற்போது 2-வது முறையாக இடைத்தேர்தலை சந்திக்கிறோம்.

    எங்கள் கட்சி வேட்பாளரை ஆதரித்து டி.டி.வி.தினகரன் 12-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை ஈரோட்டில் பல்வேறு பரிமாணங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா குறித்து புகார் எழுந்துள்ளது. இது கண்டனத்திற்குரியது.

    பணம் பட்டுவாடா குறித்து நாங்களும் தேர்தல் கமிஷனில் புகார் அளிப்போம். மத்திய, மாநில தேர்தல் ஆணையம் ஒருங்கிணைந்து செயல்பட்டு பணபட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் தேர்தல் ஆணையம் ராணுவத்தை கொண்டு வந்து பணம் பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முன்னாள் அமைச்சர்கள் கே.எஸ். செங்கோட்டையன், கே.வி. ராமலிங்கம் தலைமையில் வேட்பாளர் கே.எஸ். தென்னரசு ஈரோடு மணல்மேட்டில் இரட்டை இலை சின்னத்துடன் பிரசாரத்தை தொடங்கினார்.
    • வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கே.எஸ். தென்னரசு, ஓ.பி.எஸ் அணி சார்பில் செந்தில் முருகன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

    இதன் காரணமாக கடந்த 3-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இருந்த தென்னரசு வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. அ.தி.மு.க.வினர் பிரச்சாரத்தையும் தொடங்காமல் இருந்து வந்தனர். எனினும் முக்கிய அமைப்பினர், விசைத்தறியாளர்கள், வணிகர் சங்க பேரமைப்பினரை முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, கே.வி. ராமலிங்கம், கருப்பணன் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் சந்தித்து ஆதரவு திரட்டி வந்தனர்.

    இந்நிலையில் இரட்டை இலை சின்னம் தங்களுக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு பொதுக்குழுவைக் கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியது.

    பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதங்களை அவைத்தலைவர் தலைமை தேர்தல் கமிஷனில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதன்படி பொதுக்குழு உறுப்பினர்கள் 2501 பேர் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் கொடுத்தனர்.

    அந்த கடிதத்தை அவை தலைவர் தமிழ் மகன் உசேன் நேற்று டெல்லி தேர்தல் கமிஷனில் வழங்கினார். இந்நிலையில் ஓ.பி.எஸ்.அணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த செந்தில் முருகன் தனது வேட்பு மனுவை வாபஸ் பெறுவார் என்று அறிவிக்கப்பட்டது.

    மேலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்போம் என்று கூறினர். இதனால் நீண்ட இழுபறி முடிவுக்கு வந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கே.எஸ். தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது உறுதியானது.

    இதையடுத்து இன்று காலை முன்னாள் அமைச்சர்கள் கே.எஸ். செங்கோட்டையன், கே.வி. ராமலிங்கம் தலைமையில் வேட்பாளர் கே.எஸ். தென்னரசு ஈரோடு மணல்மேட்டில் இரட்டை இலை சின்னத்துடன் பிரசாரத்தை தொடங்கினார்.

    முதலில் அந்த பகுதியில் உள்ள முருகன், எல்லை மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு அ.தி.மு.க.வினர் பிரசாரத்தை தொடங்கினர். வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர். மற்ற அரசியல் கட்சியினர் பிரசாரத்தை தொடங்கிய நிலையில் அ.தி.மு.க. சார்பில் இன்று முதல் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    • நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனியாக நின்று வாங்கிய வாக்கு சதவிகிதம் எவ்வளவு?
    • எத்தனை பூத்துகளுக்கு பூத் கமிட்டி அமைக்க ஆட்கள் இருக்கிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜி பிரசாரம் மேற்கொண்டார்.

    அவருக்கு தந்தை, பெரியார் மற்றும் கலைஞர் வேட அணிந்து சிறுவர்கள் வரவேற்பு அளித்தனர். மேலும் அப்பகுதி மக்கள் வாழைமரம் மற்றும் தோரணம் கட்டியும் மலர்கள் தூவியும் பிரசாரத்திற்கு வந்த அமைச்சரை வரவேற்றனர்.

    பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் சந்திப்பதால் நாட்டின் பொருளாதாரம் உயரவா போகிறது. மக்கள் சுபிட்சம் அடைவார்களா. இல்லை இலங்கை பிரச்சனை தீருமா? என்ன நடக்கப் போகிறது.

    ஏற்கனவே ஒன்றாக இருந்தவர்கள், தேர்தலை சந்தித்தவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் எத்தனை இடங்களில் வெற்றி பெற்றார்கள். இந்த தேர்தல் களம் பெரியார் மண் இது. ஈரோட்டு மண் மகத்தான வெற்றியை கைச்சின்னத்திற்கு கொடுக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

    அனைத்து வீடுகளிலும் கோலமிட்டு ஆரத்தி எடுத்து வரவேற்கின்றனர். அவர்களின் மனநிலை எங்களுக்கு ஆதரவாக இருக்கின்றார்கள். இந்த தொகுதியில் போட்டி என்பது இல்லை. நோட்டாவை விட குறைவாக வாக்குகள் பெற்ற அ.ம.மு.க. இந்த முறை தேர்தலில் பின்வாங்கி இருக்கிறது. இதைப்பற்றி எல்லாம் பேச விரும்பவில்லை.

    85 சதவிகிதம் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றி இருக்கின்றோம். மற்றவற்றையும் முதல்-அமைச்சரின் கவனத்திற்க்கு கொண்டு சென்று நிறைவேற்றுவோம் என்ற உறுதியை மக்களுக்கு அளித்து வருகின்றோம்.

    ஈரோடு மாநகராட்சிக்கு ரூ.300 கோடிக்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. சாலை உள்கட்டமைப்பு வசதிகள், மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட திட்டங்களுக்கு மக்கள் சான்றாக இந்த இடைத்தேர்தல் மட்டுமல்லாமல் அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலிலும் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை மக்கள் வெற்றி பெறச்செய்வார்கள்.

    அண்ணாமலை குறித்த கேள்விக்கு, பா.ஜ.க.வில் எத்தனை தொண்டர்கள் இருக்கிறார்கள் என்பதை அவர்களிடம் முதலில் கேளுங்கள். நாங்கள் தைரியமாக சொல்கின்றோம். அவர்களின் உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு.?

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனியாக நின்று வாங்கிய வாக்கு சதவிகிதம் எவ்வளவு? எத்தனை பூத்துகளுக்கு பூத் கமிட்டி அமைக்க ஆட்கள் இருக்கிறார்கள். இது போன்ற கேள்விகளுக்கு பதில் கேட்ட பிறகு நான் பதில் சொல்கிறேன். முதல்-அமைச்சரின் திட்டங்களுக்கு அடுத்து வரும் தேர்தல்களிலும் தி.மு.க மட்டுமே வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகிற 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை 3 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.
    • 13-ந்தேதி மாலையில் திருநகர் காலனியில் பொதுக்கூட்டத்தில் சீமான் பேசுகிறார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர், அமைச்சர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    இதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்.பி., மற்றும் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திருமாவளவன், வைகோ, மற்றும் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களும் பிரசாரம் செய்கிறார்கள். இதற்கான அதிகார பூர்வ தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ். தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி வருகிற 12-ந்தேதி முதல் பிரசாரம் தொடங்குகிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. 12-ந்தேதி பிரசாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து 5 நாட்கள் தீவிர பிரசாரம் செய்யப்போவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. பின்னர் தேர்தலுக்கு முந்தைய 2 நாட்களிலும் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகிற 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை 3 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.

    13-ந்தேதி மாலையில் திருநகர் காலனியில் பொதுக்கூட்டத்தில் சீமான் பேசுகிறார். தொடர்ந்து 2 நாட்கள் வேட்பாளருடன் பிரசாரம் செய்து ஆதரவு திரட்டுகிறார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

    தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்த்தை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் 12-ந் தேதி பிரசாரம் செய்வதாக இருந்தது. ஆனால் திடீரென அது ஒத்திவைக்கப்பட்டது. பிரேமலதா, விஜயபிரபாகர் பிரசாரம் குறித்த விவரம் இன்னும் ஓரிரு நாளில் தெரியவரும் என்று கட்சியினர் தெரிவித்து உள்ளனர்.

    • தேர்தலுக்கு இன்னும் 17 நாட்களே உள்ளதால் பிரசாரம் அனல் பறக்கிறது.
    • இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிட்டாலும் தி.மு.க.-அ.தி.மு.க. இடையேதான் நேரடி போட்டி நிலவி வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4-ந்தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து இந்த தொகுதிக்கு வருகிற 27-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

    இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 31-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை நடந்தது. இதில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, ஓ.பி.எஸ். அணி சார்பில் செந்தில்முருகன், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், அ.ம.மு.க. சார்பில் சிவபிரசாந்த் உள்பட 96 பேர் 121 வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

    இந்த நிலையில் தனது அணி வேட்பாளர் வாபஸ் பெறப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இதே போல் குக்கர் சின்னம் கிடைக்காததால் அ.ம.மு.க.வும் போட்டியிடாது என்று டி.டி.வி. தினகரன் அறிவித்தார்.

    இதையடுத்து நேற்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. இதில் காங்கிரஸ், அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட 83 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. இதில் ஓ.பி.எஸ். அணி வேட்பாளர் உள்பட 38 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

    வாபஸ் பெறுவதற்கு முன்பே ஓ.பி.எஸ். அணி வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் அ.ம.மு.க. வேட்பாளர் சிவபிரசாந்த் தனது வேட்பு மனுவை நாளை வாபஸ் பெறுகிறார்.

    வேட்பு மனுக்கள் நாளை மாலை 3 மணிவரை திரும்ப பெறலாம். பின்னர் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு அவர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும்.

    இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததால் ஈரோடு கிழக்கு தொகுதியில் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது. தி.மு.க., காங்கிரஸ், கூட்டணி கட்சியினர் மற்றும் அ.தி.மு.க., கூட்டணி கட்சியினர், நாம் தமிழர், தே.மு.தி.க.வினரும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 24, 25-ந் தேதிகளில் தீவிர பிரசாரம் செய்கிறார். இதே போல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 19,20-ந் தேதிகளில் பிரசாரம் செய்கிறார். கனிமொழி எம்.பி., 16-ந் தேதி பிரசாரம் செய்கிறார்.

    இதே போல் எடப்பாடி பழனிசாமியும் ஈரோடு கிழக்கு தொகுதியில் 2 கட்ட பிரசாரம் செய்ய முடிவு செய்து உள்ளார். தனது முதல் கட்ட பிரசாரத்தை அடுத்த வாரம் தொடங்க உள்ளார். பின்னர் 2-வது கட்ட பிரசாரத்தை தேர்தலுக்கு முந்தைய கடைசி வாரத்தில் செய்கிறார்.

    பிரசாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி நேற்று அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    அப்போது எடப்பாடி பழனிசாமி பேசும்போது, கட்சி தொண்டர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். தொழில் அதிபர்கள், நெசவாளர்கள், விவசாயிகளின் ஆதரவை பெற வேண்டும். தி.மு.க. ஆட்சிக்கு வந்த 21 மாதங்களில் ஈரோடு மாவட்டம் அல்லது ஈரோடு கிழக்கு தொகுதிக்கு என்ன செய்தது. மேலும் ஓட்டு பெறுவதற்காக தி.மு.க. பல வாக்குறுதிகளை அளிக்கும். ஆனால் அவர்கள் எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றமாட்டார்கள் என்று எடுத்து கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என்றார். தொடர்ந்து கூட்டம் முடிந்து வெளியே வந்த அவர் சாலை ஓரம் இருந்த கடையில் டீ குடித்து விட்டு புறப்பட்டு சென்றார்.

    தேர்தலுக்கு இன்னும் 17 நாட்களே உள்ளதால் பிரசாரம் அனல் பறக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிட்டாலும் தி.மு.க.-அ.தி.மு.க. இடையேதான் நேரடி போட்டி நிலவி வருகிறது.

    தி.மு.க.வை பொருத்தவரை அவர்கள் ஆட்சி ஏற்ற பிறகு வரும் முதல் இடைத்தேர்தல் இது. இதனால் இந்த இடைத்தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனர். இதற்காக 11 அமைச்சர்கள் உட்பட 31 பேர் அடங்கிய தேர்தல் பணி குழு அமைக்கப்பட்டது.

    தி.மு.க. சார்பில் வேட்பாளர் அறிவிப்பதற்கு முன்பே அமைச்சர்கள் முத்துசாமி, நேரு பிரசாரத்தை தொடங்கினர். பின்னர் தி.மு.க. சார்பில் முக்கிய அமைச்சர்கள் பலரும் ஈரோட்டிலேயே முகாம் அமைத்து பிரசாரம் செய்து வருகிறார்கள். 4 அல்லது ஐந்து வார்டுகளுக்கு ஒரு அமைச்சர் என்ற வகையில் குழு அமைக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன், கே.என்.நேரு, எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன், சக்கரபாணி, செந்தில் பாலாஜி, காந்தி, சேகர்பாபு, நாசர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்ய நாதன், சி.வி.கணேசன், ராமச்சந்திரன், கீதா ஜீவன், கயல்விழி செல்வராஜ் உள்பட 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் முகாமிட்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பொதுமக்களை கவரும் வகையில் விதவிதமாக திண்ணை பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று மாலை கருங்கல்பாளையம் ராஜாஜி புரம் பகுதியில் நடந்த பிரசாரத்தில் அமைச்சர் சி.வி. கணேசன், வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடன் அந்தப் பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு வழிபட்டார். இது போல் அமைச்சர் தங்கம் தென்னரசு இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அமைச்சர் செஞ்சி மஸ்தான் பரோட்டா போட்டு கொடுத்து வாக்கு சேகரித்தார்.

    இதேபோல் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் 30 பேர் உட்பட 121 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 10 நாட்களுக்கு முன்பே ஈரோட்டில் முகாமிட்டு தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் தாமதமாக அறிவிக்கப்பட்டாலும் தேர்தல் பணிகளை அவர்களும் ஏற்கனவே தொடங்கி விட்டனர். முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கருப்பண்ணன், கே.வி. ராமலிங்கம், செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோரும் தொகுதியில் முகாமிட்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பொதுமக்களை கவரும் வகையில் விதவிதமாக பிரசாரம் செய்து வருகின்றனர். அ.தி.மு.க.வினர் பிரசாரத்தை தொடங்கும் முன்பு அந்த பகுதியில் உள்ள கோவில்களில் சென்று வழிபட்டு பூஜை செய்து பிரசாரத்தை தொடங்கி வருகின்றனர்.

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் டீ கடையில் பொதுமக்களுக்கு டீ போட்டு கொடுத்தும், துணிகளுக்கு அயன் செய்தும் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்தார்.

    இன்று காலை கருங்கல்பாளையம் பகுதியில் வீடு, வீடாக சென்று பூ வழங்கி, கோவில் பிரசாதங்கள் கொடுத்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது இன்று மாலை நடைபெறும் வேட்பாளர் அறிமுக கூட்டத்துக்கு குடும்பத்துடன் வந்து பங்கேற்க வேண்டும் அழைப்பு விடுத்தார்.

    தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் ஆனந்த் கடந்த சில நாட்களாக வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பொதுமக்கள் காலை தொட்டு வணங்கி வாக்கு சேகரித்தார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மேனகா நவநீதனும் வாக்கு சேகரித்து வருகிறார். அப்போது பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடாமல் நேர்மையான முறையில் ஓட்டு போட வேண்டும் என்று சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தி வாக்கு சேகரித்தார்.

    • தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் 520 வாக்குறுதிகள் கொடுத்தது. ஆனால் பலவற்றை இன்றும் நிறைவேற்றவில்லை.
    • நீட், கல்விக்கடன் ரத்து செய்வோம், கியாஸ் மானியம், பெட்ரோல், டீசல் மானியம் தருவோம் என்றார்கள் ஆனால் இதுவரை செய்யவில்லை.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 2011-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் இருந்து செல்லும்போது தமிழகத்தில் முதியோர் ஓய்வு ஊதியத்துக்காக ஆண்டுக்கு ரூ.1200 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. சுமார் 12 லட்சம் பேர் ஓய்வூதியம் பெற்றனர்.

    ஆனால் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் 32 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது. பிறகு எடப்பாடி பழனிசாமி மேலும் 5 லட்சம் பேரை சேர்த்து 37 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கினார். இதற்காக ஆண்டுக்கு ரூ.4200 கோடி நிதி செலவிடப்பட்டது. 2011-ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சியில் ரூ.500 மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அது ரூ.ஆயிரமாக உயர்த்தப்பட்டது.

    தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் ஓய்வூதியத்தை ரூ.1500 என உயர்த்துவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் இதுவரை நிறைவேற்றவில்லை. மாறாக 15 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் தங்க சுரங்கங்கள் மூடப்பட்டிருந்த போதிலும் எடப்பாடி 1 லட்சம் பேருக்கு திருமணத்திற்காக தங்க காசுகளை வழங்கினார்.

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா திருமண உதவித்தொகை திட்டம் தாலிக்கு தங்கம் கொண்டு வந்ததே பெண்கள் உயர்கல்வி பயில வேண்டும் என்பதற்காக தான். பிளஸ்-2 வரை படித்தால் ரூ.25000, பட்டம் பயின்றால் ரூ.50,000 என்று அறிவித்தார். தங்கத்தையே பார்க்காத பல ஏழை குடும்பங்கள் திருமணத்திற்கு ஒரு சவரன் தாலிக்கு தங்கம் வழங்கினார்.

    ஆனால் அதையும் தி.மு.க. ஆட்சி நிறுத்திவிட்டது. இன்று ஏதோ உயர்கல்வி பயில ஆயிரம் ரூபாய் வழங்குவதாக கூறுகிறார்கள். ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பெண்களுக்கு ஸ்கூட்டி, அம்மா சிமெண்ட், அம்மா குடிநீர், அம்மா உப்பு, லேப்டாப், 2000 மினி கிளினிக்குகள் போன்ற எண்ணற்ற திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன .

    தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் 520 வாக்குறுதிகள் கொடுத்தது. ஆனால் பலவற்றை இன்றும் நிறைவேற்றவில்லை. நீட், கல்விக்கடன் ரத்து செய்வோம், கியாஸ் மானியம், பெட்ரோல், டீசல் மானியம் தருவோம் என்றார்கள் ஆனால் இதுவரை செய்யவில்லை. தி.மு.க. ஆட்சியில் சொல்வார்கள் ஆனால் செய்ய மாட்டார்கள். திட்டங்கள் வரும் ஆனால் வராது என்ற நிலையில் தான் வாக்குறுதிகள் உள்ளன.

    ஆனால் ஜெயலலலிதா கொடுத்த வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றினார். அ.தி.மு.க. ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரிகள் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போன்ற பல வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. முடக்கப்பட இருந்த இரட்டை இலையை பாதுகாத்தவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவர் இன்று மாலை ஈரோட்டில் நடக்கும் வேட்பாளர் அறிமுக பிரம்மாண்ட கூட்டத்தில் பங்கேற்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்க வரும் 15-ந் தேதி கடைசி நாளாகும். இது மேலும் நீட்டிக்கப்படாது.
    • மின் கட்டண உயர்வு பற்றி பேசும் அ.தி.மு.க., பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, நூல் விலை உயர்வு குறித்து பேசுவதில்லை.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட வீரப்பன்சத்திரத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை 200 யூனிட்டில் இருந்து 300 ஆகவும், விசைத்தறியாளர்களுக்கு 750 யூனிட்டில் இருந்து 1000 யூனிட் ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என உறுதி அளித்திருந்தோம். தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், அந்த அறிவிப்பினை வெளியிட முடியவில்லை.

    எனவே இலவச மின்சார அளவை உயர்த்தி வழங்குவதற்கான அரசாணை வெளியிட மத்திய தேர்தல் ஆணையத்திடம் தமிழக அரசு விண்ணப்பித்துள்ளது. தேர்தல் முடிந்ததும் தமிழகம் முழுவதும் விசைத்தறி, கைத்தறிகளுக்கான இலவச மின்சாரம் உயர்த்தி வழங்கப்படும்.

    கடந்த 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மின்கட்டணம் 180 சதவீதம் உயர்த்தப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் தற்பொழுது 30 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் நீச்சல் குளம், திரையரங்கு போன்ற வசதிகள் உள்ளன. எனவே தான் அதற்கு தனியாக வணிக மின்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மேலும் அ.தி.மு.க. ஆட்சியில் மின்வாரியத்திற்கு ரூ.1.5 லட்சம் கோடி கடன் சுமை ஏற்பட்டது. அதை சரிக்கட்டவே தற்போது மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் மின்மிகை மாநிலம் என்று பேசினாலும் ஒரு மெகாவாட் மின்சாரம் கூட கூடுதலாக உற்பத்தி செய்யவில்லை.

    தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களால்தான், தமிழகத்தில் மின் உற்பத்தி அதிகரித்தது. தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்து, மின்மிகை மாநிலம் என அ.தி.மு.க. ஆட்சியில் அறிவித்துக் கொண்டார்கள்.

    தற்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் 1½ லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பை வழங்கினோம். அ.தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசின் பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷனிடமிருந்து, அதிக வட்டிக்கு மின்வாரியம் கடன் வாங்கி இருந்தது. அந்த வட்டியை குறைத்துள்ளோம். மின் விநியோகத்தில் மின்சார இழப்பு 17 சதம் உள்ளது. அதை கடந்தாண்டு 0.7 சதம் குறைத்துள்ளோம்.

    நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 26 ஆயிரம் புதிய ட்ரான்ஸ்பார்மர்கள் நிறுவப்பட்டுள்ளன. விவசாய பயன்பாடு மற்றும் குடியிருப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டு, மின் கட்டணத்தை நுகர்வோர் தெரிந்து கொள்ள விரைவில் வசதி செய்யப்படும். அ.தி.மு.க. ஆட்சியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலக்கரி, மின் உற்பத்தி நிலையங்களிடமிருந்து காணாமல் போனது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு துறையிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. விரைவில் விசாரணை அறிக்கை வெளிவரும்.

    அ.தி.மு.க. ஆட்சியில் மின் துறையில் நடந்த தவறுகள் குறித்து முன்னாள் அமைச்சர் தங்கமணியுடன் பொதுவெளியில் நான் விவாதம் செய்ய தயாராக இருக்கிறேன். அவர் தயாரா?

    மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்க வரும் 15-ந் தேதி கடைசி நாளாகும். இது மேலும் நீட்டிக்கப்படாது. இவ்வாறு இணைப்பதால் வீடுகளுக்கு வழங்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது.

    தமிழகத்தின் தற்போதைய மின் உற்பத்தி திறன் 32 ஆயிரம் மெகாவாட்டாகும். இதையடுத்த 10 ஆண்டுகளில் 64 ஆயிரம் என உயர்த்த திட்டமிட்டு பணிகளை தொடங்கி உள்ளோம்.

    மின் கட்டண உயர்வு பற்றி பேசும் அ.தி.மு.க., பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, நூல் விலை உயர்வு குறித்து பேசுவதில்லை. மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தவில்லை. அ.தி.மு.க. ஈ.பி.எஸ். அணி பா.ஜ.க.வின் பி டீமாக செயல்படுகிறது. அ.தி.மு.க. ஒன்றுபட்டாலும், இரட்டை இலை சின்னம் கிடைத்தாலும் தி.மு.க. தேர்தலில் மகத்தான வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோட்டில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் வீடு வீடாக சென்று வாக்காளர்கள் விவரங்கள், சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
    • வேட்பாளர் அறிவிக்கப்பட்டதும் அதிமுக சார்பில் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கியது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வருகிற 27-ந்தேதி நடைபெறுகிறது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார்.

    அவருக்கு ஆதரவாக 20 அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். இதனால் தி.மு.க.வுக்கு எதிராக பலமான வேட்பாளரை நிறுத்தும் வகையில் அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை நடத்தினார்.

    இதற்காக ஈரோட்டில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் வீடு வீடாக சென்று வாக்காளர்கள் விவரங்கள், சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் ஏற்கனவே இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். வேட்பாளர் அறிவிக்கப்பட்டதும் அதிமுக சார்பில் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கியது.

    முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, கருப்பண்ணன், கே.வி.ராமலிங்கம், நத்தம் விஸ்வநாதன் ஆர்.பி உதயகுமார், செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர் என 30-க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள் ஈரோட்டில் முகாமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களை கவரும் வகையில் அவர்கள் வித்தியாசமான முறையில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று காலை அதிமுக வேட்பாளர் கே .எஸ். தென்னரசு மணல்மேடு பகுதி முழுவதும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, கே.வி.ராமலிங்கம், தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் விடியல் சேகர் ஆகியோரும் வீடு, வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். பொதுமக்களை கவரும் வகையில் எம்.ஜி.ஆர். வேடத்துடன் நிர்வாகிகள் சிலரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    • தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதியில் இளங்கோவனை ஆதரித்து கடைசி 2 நாட்கள், அதாவது 24, 25-ந் தேதிகளில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.
    • அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈரோட்டில் 5 நாட்கள் பிரசாரம் செய்ய திட்டமிட்டு உள்ளார்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 31-ந்தேதி தொடங்கி 7-ந்தேதி வரை நடைபெற்றது.

    மனுக்கள் பரிசீலனை மற்றும் வாபசுக்கான அவகாசங்கள் முடிந்த நிலையில் தற்போது இடைத்தேர்தல் களத்தில் 77 வேட்பாளர்கள் உள்ளனர்.

    அரசியல் கட்சிகளை பொறுத்தவரை தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் ஆகிய 4 பேர் களம் இறங்கி உள்ளனர். என்றாலும் இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி- அ.தி.மு.க. இடையே தான் நேரடி பலப்பரீட்சை ஏற்பட்டு இருக்கிறது.

    நேற்று வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் சின்னங்கள் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

    தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதியில் இளங்கோவனை ஆதரித்து கடைசி 2 நாட்கள், அதாவது 24, 25-ந் தேதிகளில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். அவரது உத்தரவுக்கேற்ப தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

    இந்தநிலையில் அ.தி.மு.க.வும் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளது. அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈரோட்டில் 5 நாட்கள் பிரசாரம் செய்ய திட்டமிட்டு உள்ளார். இந்த 5 நாட்களில் 19 பொதுக்கூட்டங்களில் அவர் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அவர் எங்கெங்கு சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்கிறார் என்கிற விவரம் வருமாறு:-

    வீரப்பம்பாளையம் (பொதுக்கூட்டம்) வழி: விவேகானந்தா சாலை, கணபதி நகர் சாலை, வெட்டுக்காட்டு வலசு, விவேகானந்தா சாலை, நாராயண வலசு, ஹவுசிங் யூனிட் அடுக்குமாடி அம்பேத்கர் நகர், ஹவுசிங் யூனிட் - ஈ பிளாக் - புறநகர், நியூ டீச்சர்ஸ் காலனி, திருமால் நகர் , டவர் லைன் காலனி, குமலன்குட்டை (மாரியம்மன் கோயில் அருகில்), செல்வம் நகர், முருகேசன் நகர், சரோஜினி நகர், திரு.வி.க. வீதி, டீச்சர்ஸ் காலனி, ஆட்சியர் அலுவலகம் சம்பத் நகர், காசியண்ணன் வீதி, ஆண்டவர் வீதி, காளியப்ப கவுண்டர் தோட்டம், ஹவுசிங் யூனிட்.

    பெரியவலசு நால் ரோடு (பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்). வள்ளியம்மை வீதி, பிரசாத் வீதி, லால்பகதூர் வீதி, வாய்க்கால்மேடு, இந்திரா நகர், ராதாகிருஷ்ணா வீதி, கொங்குநகர் 1, 2, சுப்பிரமணிய சிவா வீதி, கொத்துக்கார வீதி, ஔவையார் வீதி, சேக்கிழார் வீதி, ஜான்சி நகர், அப்பன் நகர், முனிசிபல் காலனி, மாணிக்கம் வீதி, கல்யாண விநாயகர் கோயில், பவளம் வீதி, சத்யா வீதி, நகராட்சி குடியிருப்பு பாலசுப்பிரமணிய நகர் லே அவுட், அண்ணாமலை லேஅவுட், சின்னமுத்து வீதி 1, 2, வாரணாசி வீதி.

    இடையன்காட்டுவலசு (பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்). பிரபா தியேட்டர், ராஜகணபதி விநாயகர் கோயில், சின்ன முத்து மெயின் வீதி, அரசு மருத்துவமனை ரவுண்டானா, மீனாட்சி சுந்தரனார் சாலை (பிரப் ரோடு), கலைமகள் பள்ளி வழியாக எஸ்.கே.சி. ரோடு, பவர்ஹ வுஸ் வீதி, படேல் வீதி, சூரம்பட்டி நால்ரோடு, பெரியார் நகர் ஆர்ச், காந்திஜி ரோடு, பன்னீர் செல்வம் பார்க்.

    மணிக்கூண்டு (பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்). ஈஸ்வரன் கோயில் வீதி, கொங்கலம்மன் வீதி, மஜீத் வீதி, எல்லை மாரியம்மன் கோயில், சக்தி மெயின் ரோடு, பேருந்து நிலையம், சத்தி மெயின் ரோடு, ஏபிடி ரோடு, சாந்தாங்காடு, அபிராமி வீதி, காந்திஜி வீதி, அண்ணாமலை நகர், ஜான்சி நகர், பாரதி வீதி, எம்.ஜி.ஆர். வீதி, குமரன் வீதி, தங்கவேல் வீதி, துரைசாமி வீதி, பாரதிதாசன் வீதி, திரு.வி.க. வீதி, ஐயர் காடு, வீரப்பன்சத்திரம் (பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்).

    16-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 5 மணி அக்ரஹாரம் பகுதி. அசோகபுரம் பகுதி, களிராவுத்தர் குளம் (பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்). தண்ணீர் பந்தல்பாளையம், காமராஜ் நகர், பூம்புகார் நகர், காட்டூர் வீதி, நஞ்சப்பா நகர்.

    வண்டிப்பேட்டை (பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்). கான்வென்ட் ஸ்கூல், அன்னை சத்யா நகர்.

    நெரிகல் மேடு (பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்). கலைமகள் வீதி, லட்சுமி நகர், ராஜ வீதி, தீரன் சின்னமலை வீதி, கரிகாலன் வீதி, அதியமான் வீதி, பவானி மெயின் ரோடு, நெரிகல் மேடு, 16 மெயின் ரோடு.

    காவேரி ரோடு சின்ன மாரியம்மன் கோயில் அருகில் (பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்). நேரு வீதி, முருகன் வீதி, காவேரி ரோடு, தெப்பக்குளம், மாசிமலை வீதி, ஏ.பி.டி. ரோடு, சேரன், சோழன், பாண்டியன் வீதி, திருமலை வீதி, பெரியகுட்டை வீதி, பல்லவன் வீதி, காவேரி ரோடு, பவானி மெயின் ரோடு.

    வைராபாளையம் பள்ளிக்கூடம் அருகில் (பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்). மாரியம்மன் கோயில் வீதி, பள்ளிக்கூடம் வீதி, கந்தசாமி வீதி, நேதாஜி வீதி, பட்டேல் வீதி, ராஜ கணபதி நகர்.

    கிருஷ்ணம்பாளையம் ஓங்காளியம்மன் கோயில் அருகில் (பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்). பச்சியம்மன் கோயில் வீதி, சொக்காய் தோட்டம், விநாயகர் கோயில் வீதி 1, அழகரசன் நகர், கணபதிபுரம், வண்டியூரான் கோயில் வீதி, ராஜகோபால் தோட்டம், கிருஷ்ணம்பாளையம் காலனி, சித்தன் நகர், ஜீவா நகர், கமலா நகர், கக்கன் நகர், ராமமூர்த்தி நகர், ராமசாமி நகர், மாதேஸ்வரன் கோயில் வீதி, பம்பிங் ஸ்டேஷன் ரோடு, மாதவ காடு, சாமியார் வீதி, ஓ.எம்.ஆர். காலனி, ஸ்டேட் பேங்க் காலனி, ஆர்.கே.வி. நகர், புதுமை காலனி, ஜெயகோ பால் வீதி, காமராஜர் பள்ளி.

    ராஜாஜிபுரம் (பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்). பூங்குன்றனார் வீதி, காந்தி புரம், கந்தசாமி சந்து, கண்ணையன் வீதி, சாம்பகாடு, ரங்க வீதி, வீர வீதி, பிள்ளையார் கோயில் வீதி, சகன் வீதி, வரதப்பா வீதி, ஜானகி அம்மாள் லே அவுட், சுப்பையா வீதி, குரங்கு குட்டை, மில் வீதி.

    17-ந்தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு கருங்கல்பாளையம் பகுதி, பெரியார் நகர் பகுதி சுப்பிரமணியம் கோயில், காவேரி ரோடு ராஜகோபால் தோட்டம் (பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்). வண்டியூரான் கோயில், காமாட்சியம்மன் கோயில் வீதி.

    தேர்முட்டி (பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்). சின்ன மாரியம்மன் கோயில், அரசு இளங்கோ வீதி, பொன்னுசாமி வீதி, மரப்பாலம், மரப்பாலம் மெயின் ரோடு, பெரிய மாரியம்மன் கோயில் வீதி, ரங்கநாதன் வீதி, கற்பகம் லே அவுட்.

    மோசிகீரனார் வீதி- 3 (பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்). மோசிகீரனார் வீதி 1. மாதவ கிருஷ்ணன் வீதி, மாரிமுத்து வீதி, அகத்தியர் வீதி.

    வி.வி.சி.ஆர். நகர் (பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்). வளையக்கார வீதி, காடிகானா முக்கு, மகாஜனா மேல்நிலைப்பள்ளி, அர்பன் பேங்க், கச்சேரி வீதி, அருள்மொழி வீதி, நடராஜா தியேட்டர் ஹவுசிங் யூனிட், மரப்பாலம்.

    சமாதானம்மாள் சத்திரம் (பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்). பெரியார் நகர், காளைமாடு சிலை, டீசல் ஷெட், பெரிய தோட்டம் வழியாக கிரான்மடை பாலம் வீதி 1, 2,3, 4, தேவா வீதி, லட்சுமணன் வீதி, என்.ஜி.ஜி.ஓ. காலனி, மாரப்பன் வீதி 1,2, சூரம்பட்டி நால்ரோடு வழியாக பூசாரி சென்னிமலை வீதி, காந்தி நகர், பழனியப்பா வீதி.

    24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு டீச்சர்ஸ் காலனி வழியாக கிராமடை ஜெகநாதபுரம் காலனி, சூரம்பட்டி நால் ரோடு, பெரியார் நகர் வழியாக ஜவான் பில்டிங், தங்கப்பெருமாள் கோயில் வழியாக கள்ளுக்கடைமேடு.

    பழைய ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, சமாதானம்மாள் சத்திரம், பேபி மருத்துவமனை வழியாக மரப்பாலம், மண்டப வீதி வழியாக காரை வாய்க்கால், வளையக்கார வீதி, இந்திரா நகர், கருங்கல்பாளையம், கோட்டையார் வீதி ரங்கநாதர் வீதி வழியாக, சின்ன மாரியம்மன் கோயில் மைதானம், காந்தி சிலை, மணிக்கூண்டு, சித்திக் திடல், அசோகபுரி, நேதாஜி ரோடு சென்ட்ரல் தியேட்டம், பன்னீர் செல்வம் பார்க். (பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்).

    25.2.2023- சனிக்கிழமை காலை வெட்டுக்காட்டுவலசு (19வது வார்டு), நாச்சாயி டீ கடை, சம்பத் நகர், பெரிய வலசு, குளம் - காந்தி நகர், அக்ரஹாரம் வண்டிப் பேட்டை, சத்யா நகர், நெரி கல்மேடு, வைரா பாளையம், கிருஷ்ணம்பா ளையம், கே.என்.கே.ரோடு, ராஜாஜி புரம், மெட்ராஸ் ஹோட்டல், எல்லை மாரியம்மன் கோயில், முத்துசாமி வீதி, பழனிமலைக் கவுண்டர் வீதி, தெப்பக்குளம், வீரப்பன்சத்திரம் (பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்).

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×