என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரிக்கெட்"

    • ஜடேஜாவை தவிர மற்ற 3 வீரர்களும் ஏற்கனவே இருப்பது போல ‘ஏ பிளஸ்’ ஒப்பந்தத்தில் இருப்பார்கள்.
    • ஸ்ரேயாஸ் அய்யர் தற்போது மிகவும் சிறப்பான நிலையில் உள்ளார்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) ஆண்டு தோறும் வீரர்களின் ஒப்பந்த முறையை மாற்றி அமைத்து அறிவித்து வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி ஒப்பந்தங்களை அறிவித்தது. ஆனால் இந்த முறை தாமதம் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே ஒப்பந்தம் தொடர்பாக வீரர்களை பி.சி.சி.ஐ. இறுதி செய்து விட்டதாகவும் இந்த வாரம் இறுதியில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது. 2025-26ம் ஆண்டு பி.சி.சி.ஐ.யின் வீரர்கள் ஒப்பந்த விவரம் 1, 2 நாட்களாகவும் வெளியிடப்படும் என்று மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

    ரோகித் சர்மா, வீராட் கோலி, பும்ரா ஆகியோர் 'ஏ' பிளஸ் கிரேடில் இருக்கிறார்கள். அவர்கள் அதே நிலையில் இருப்பார்கள் என்று தெரிகிறது. 20 ஓவர், டெஸ்ட், ஒருநாள் போட்டி ஆகிய 3 வடிவங்களிலும் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு ஏ பிளஸ் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை வென்ற பிறகு கோலி, ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெற்றனர். இதில் ஜடேஜாவை தவிர மற்ற 3 வீரர்களும் ஏற்கனவே இருப்பது போல 'ஏ பிளஸ்' ஒப்பந்தத்தில் இருப்பார்கள்.

    உள்ளூர் போட்டியில் ஆட மறுத்ததால் ஸ்ரேயாஸ் அய்யர், இஷான்கிஷன் ஆகியோர் கடந்த ஆண்டு ஒப்பந்தபட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

    ஸ்ரேயாஸ் அய்யர் தற்போது மிகவும் சிறப்பான நிலையில் உள்ளார். இதனால் அவர் கிரிக்கெட் வாரிய ஒப்பந்த பட்டியலில் இடம்பெறுகிறார். அவர் 'ஏ' கிரேடில் இடம்பெறுகிறார்.

    இஷான்கிஷன் பி.சி.சி.ஐ. ஒப்பந்த பட்டியலில் இடம் பெறுவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. ஏனென்றால் உள்ளூர் போட்டியில் அவரது ஆட்டம் எதிர்ப்பார்த்த அளவுக்கு சிறப்பாக அமையவில்லை.

    • இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் தொடரிலும், டி20 தொடரிலும் விளையாடவுள்ளது.
    • இந்த தொடர் ஆகஸ்ட் 17-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

    நடப்பு ஐபிஎல் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் அடுத்த மாதம் 25-ந் தேதியுடன் முடிவடைகிறது.

    இந்த தொடர் முடிவடைந்தவுடன் இந்திய அணி ஜூன் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரானது ஜூன் 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4-ம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.

    இதனையடுத்து இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டி அட்டவணையானது இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது ஆகஸ்ட் 17-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 23-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

    அதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஆகஸ்ட் 26-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

    இந்திய டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தொடர்வார் என்றும் ஒருநாள் தொடருக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக செயல்படுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ரோகித் சர்மாவுக்கு ஒருநாள் தொடரில் இருந்து ஓய்வு அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    வங்கதேசம் - இந்தியா தொடர் அட்டவணை

    முதல் ஒருநாள் போட்டி - ஆகஸ்ட் 17, மிர்பூர்

    இரண்டாவது ஒருநாள் போட்டி - ஆகஸ்ட் 20, மிர்பூர்

    மூன்றாவது ஒருநாள் போட்டி - ஆகஸ்ட் 23, சட்டோகிராம்

    முதல் டி20 போட்டி - ஆகஸ்ட் 26, சட்டோகிராம்

    இரண்டாவது டி20 போட்டி - ஆகஸ்ட் 29, மிர்பூர்

    மூன்றாவது டி20 போட்டி - ஆகஸ்ட் 31, மிர்பூர்

    • ஐ.சி.சி. சாா்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்பட்டு வருகிறது.
    • 2 பந்துகளால் பேட்ஸ் மேன்கள் ரன்களை குவிக்க வசதியாக உள்ளது என்ற புகாா் எழுந்துள்ளது.

    உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் மற்றும் ஒருநாள் போட்டி விதிகளில் மாற்றம் கொண்டு வர சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) திட்டமிட்டுள்ளது.

    ஐ.சி.சி. சாா்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்பட்டு வருகிறது. இதன் புள்ளிகள் நடை முறையில் மாறுதல் கொண்டு வரப்படுகிறது. அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் போது இந்த மாறுதல் நடைமுறைக்கு வரும்.

    ஒவ் வொரு ஆட்டத்திலும் வெற்றியின் வித்தியாசத்தை பொறுத்து போனஸ் புள்ளிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எதிர் அணிகளின் பலத்தை பொறுத்தும், சொந்த மைதானம் இல்லாமல் வெளி மைதானங்களில் வெல்வதை பொறுத்தும் புள்ளிகள் வழங்கப்படுகிறது.

    ஒருநாள் போட்டியில் தற்போது ஒரு இன்னிங்சில் 2 பந்துகள் பயன்படுத்தும் முறை ரத்து செய்யப்படும். முன்னாள் கேப்டன் கங்குலி தலைமையிலான குழு இது தொடா்பாக பரிந்துரைத்து உள்ளது.

    2 பந்துகளால் பேட்ஸ் மேன்கள் ரன்களை குவிக்க வசதியாக உள்ளது என்ற புகாா் எழுந்துள்ளது. இதனால் ஒரே ஒரு பந்தை பயன்படுத்த முடிவு செய் யப்பட உள்ளது. டெஸ்ட் ஆட்டங்களில் டைமா் கடிகாரத்தை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    ஜிம்பாப்வேயில் இந்த வார இறுதியில் நடைபெறும் ஐ.சி.சி. கூட்டத்தின் போது இதுகுறித்து முடிவு எடுக்கப் படும் என்று கூறப்படுகிறது. 

    • 2028-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது.
    • 128 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி இடம்பெற்றுள்ளது.

    கடந்தாண்டு ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. அடுத்த ஒலிம்பிக் போட்டி 2028-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது.

    2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டு இடம்பெற்றுள்ளது. 128 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி இடம்பெற்றுள்ளது. கடைசியாக 1900-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

    லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் (ஆண்கள்,பெண்கள்) 6 அணிகள் பங்கேற்கும் என்று இன்று போட்டி அமைப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஒவ்வொரு அணியிலும் 15 வீரர்கள் வீதம் 90 வீரர்களுக்கு ஒலிம்பிக்கில் அனுமதி வழங்கப்படும். பெண்கள் பிரிவிலும் இதே நிலைதான் செயல்படுத்தப்படும்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி) இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட்இண்டீஸ், நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய 12 நாடுகள் முழுநேர உறுப்பினர்களாகும். 94 நாடுகள் அசோசியேட் உறுப்பினர்கள் ஆகும். தகுதி சுற்று மூலம் 6 அணிகள் மட்டுமே ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • பாகிஸ்தான் செய்தி சேனலுக்கு பாகிஸ்தான் வீரர் சஜித் கான் பேட்டி அளித்தார்.
    • 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சஜித் கான் 59 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்

    கிரிக்கெட் வீரர் ஆகவில்லை என்றால் தான் ஒரு கேங்ஸ்டராக ஆகியிருப்பேன் என்று பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சஜித் கான் தெரிவித்துள்ளார்.

    நீங்கள் கிரிக்கெட் வீரராக ஆகவில்லை என்றால் என்னவாக இருந்திருப்பீர்கள் என்று பாகிஸ்தான் செய்தி சேனலில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

    பாகிஸ்தான் அணிக்காக 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சஜித் கான் 59 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • செல்போன் மூலமாக சூதாட்டம் நடத்தி வந்ததாக தெரியவந்தது.
    • கைதான 4 பேரின் வங்கிக்கணக்கை முடக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    ஹிங்கோலி:

    ஹிங்கோலி பகுதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் நடந்து வருவதாக ஜல்னா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் முஸ்தகீம் சேக் என்பவர் செல்போன் மூலமாக சூதாட்டம் நடத்தி வந்ததாக தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக மேலும் 4 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து ரூ.8 லட்சத்து 53 ஆயிரம் ரொக்கம் உள்பட பல பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் கைதான 4 பேரின் வங்கிக்கணக்கை முடக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • அவர்கள் வெற்றி பெறும்போது நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
    • மாநிலங்களுக்கு இடையேயான புத்தராஜா கிரிக்கெட் கோப்பை போட்டிகளை ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    ஒடிசாவை சேர்ந்த 95 வயதான மூதாட்டி சபித்ரி மஜ்ஹி, பல வருடங்களாக விளையாடுவதற்கு GROUND இல்லாமல் இருந்த கிராமத்து சிறுவர் மற்றும் இளைஞர்களுக்காக தன்னுடைய 5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளார்.

    ஒடிசாவின் நுவாபாடா மாவட்டத்தில் சிங்கஜார் என்ற கிராமம் அமைந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக, இந்த கிராமத்தில் கிரிக்கெட், கால்பந்து மற்றும் கபடி போன்ற மாநிலங்களுக்கு இடையேயான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    சிங்கஜார், விளையாட்டுகளை விரும்பும் கிராமமாக மாநிலத்தில் தனக்கென ஒரு பெயரைப் பெற்றுள்ளது. இருந்தபோதிலும், கிராம மக்கள் ஒவ்வொரு ஆண்டும் தனியார் விளையாட்டு மைதானங்களை புதுப்பித்து மாநிலங்களுக்கு இடையேயான புத்தராஜா கிரிக்கெட் கோப்பை போட்டிகளை ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    எனவே விளையாட தங்களுக்கென ஒரு மைதானம் இல்லாதது குறித்து குழந்தைகளின் ஏக்கத்தை பார்த்த அந்த கிராமத்தை சேர்ந்த விளையாட்டு ஆர்வலரான 95 வயது மூதாட்டி சபித்ரி மாஜி, விளையாட்டு மைதானம் கட்டுவதற்காக தனது ஐந்து ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். தற்போது, நன்கொடையாக வழங்கப்பட்ட நிலத்தில் அரசாங்கம் ஒரு அரங்கம் கட்ட வேண்டும் என்று கிராம மக்கள் கோருகின்றனர்.

    தனது முடிவு குறித்து பேசிய மூதாட்டி சபித்ரி மாஜி ''எங்கள் கிராமத்தின் குழந்தைகள் விளையாட்டுகளில் பங்கேற்பதைப் பார்ப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. அவர்கள் வெற்றி பெறும்போது நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் அவர்களுக்கு வழங்கிய விளையாட்டு மைதானத்தில் குழந்தைகள் விளையாடுகிறார்கள், உடற்பயிற்சி செய்கிறார்கள், ஆரோக்கியமாக இருக்கிறார்கள்'' என்று தெரிவிக்கிறார்.

    முன்னதாக மூதாட்டி, கிராமத்தில் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, கல்லூரி மற்றும் கோவிலுக்கு நிலங்களை நன்கொடையாக வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. சபித்ரி மாஜியின் கணவர் நிலம்பர் மாஜி 10 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். 

    • லெக்ஸ் பிரிட்மெனின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
    • இவர் ஏற்கனவே டொனால்டு டிரம்ப், எலான் மஸ்க் உள்ளிட்ட பிரபலங்களை பேட்டி எடுத்துள்ளார்.

    புதுடெல்லி:

    அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிரபல கணினி அறிவியல் விஞ்ஞானி லெக்ஸ் பிரிட்மென். செயற்கை நுண்ணறிவு ஆய்வாளரான இவர் பாட்காஸ்ட் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

    இவரது பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் டொனால்டு டிரம்ப், எலான் மஸ்க் உள்ளிட்ட உலக பிரபலங்களை பேட்டி எடுத்துள்ளார்.

    லெக்ஸ் பிரிட்மெனின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அவரிடம் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளித்தார். இந்த நிகழ்ச்சி சுமார் 3 மணி நேரம் 17 நிமிடங்கள் நடந்தது.

    இந்நிலையில், சிறந்த கிரிக்கெட் அணி எது இந்தியாவா, பாகிஸ்தானா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பிரதமர் மோடி பதில் கூறியதாவது:

    விளையாட்டுக்கு உலகம் முழுவதையும் உற்சாகப்படுத்தும் சக்தி இருப்பதாக நினைக்கிறேன்.

    விளையாட்டு உணர்வு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைக்கிறது. மனித பரிணாம வளர்ச்சியில் விளையாட்டு முக்கிய பங்கு வகிக்கிறது என உண்மையிலேயே நம்புகிறேன். அவை வெறும் விளையாட்டுகள் அல்ல, அவை மக்களை ஆழமான மட்டத்தில் இணைக்கின்றன.

    இப்போது யார் சிறந்தவர் அல்லது இல்லாதவர் என்ற கேள்விக்கு வருகிறேன். விளையாட்டின் நுட்பங்களைப் பொறுத்தவரை நான் ஒரு நிபுணர் அல்ல. அதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் மட்டுமே அதை மதிப்பிட முடியும்.

    எந்த அணி சிறந்தது, எந்த வீரர்கள் சிறந்தவர்கள் என்பதை அவர்களால் மட்டுமே தீர்மானிக்க முடியும். ஆனால் சில நேரங்களில், முடிவுகள் தாங்களாகவே பேசுகின்றன.

    சில நாட்களுக்கு முன்புதான் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. அதன் முடிவு எந்த அணி சிறந்தது என்பதை வெளிப்படுத்தியது என தெரிவித்தார்.

    • உலகளாவிய இந்த கிரிக்கெட் ‘லீக்’ போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன.
    • ஐ.பி.எல்., பி.பி.எல். (பிக் பாஷ் லீக்) போட்டிகளுக்கு இடையூறு இல்லாத நேரத்தில் இந்த சர்வதேச லீக் போட்டியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    ரூ.4347 கோடியில் உலக கிரிக்கெட் 'லீக்' சவுதி அரேபியா திட்டம்இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) சார்பில் ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இது மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் 20 ஓவர் லீக் தொடர் நடத்தப்படுகிறது.

    ஐ.பி.எல். போலவே ஆஸ்திரேலியாவின் பிக்பாஷ் லீக் போட்டியும் புகழ்பெற்றது. தென் ஆப்பிரிக்க லீக் உள்ளிட்ட பல போட்டிகளும் பிரபலம் அடைந்து வருகிறது.

    இந்த நிலையில் உலகளாவிய கிரிக்கெட் லீக் போட்டியை நடத்த சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது. இதற்காக அந்த நாடு ரூ.4347 கோடியை முதலீடு செய்ய தயாராக உள்ளது. கால்பந்து, பார்முலா 1 கார் பந்தயத்தில் சவுதி அரேபியா முதலீடு செய்து இருந்தது. தற்போது பிரபலமாக இருக்கும் கிரிக்கெட் லீக் போட்டியையும் நடத்த முடிவு செய்து உள்ளது.

    உலகளாவிய இந்த கிரிக்கெட் 'லீக்' போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன. டென்னிஸ் கிராண்ட்சிலாம் போன்று இதை நடத்த திட்டமிட்டுள்ளது.

    சவுதி அரேபியா உள்ள எஸ்.ஆர்.ஜே நிறுவனம் இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி) தொடர்ந்து பேசி வருகிறது. ஆஸ்திரேலியாவின் தொழில் முறை லீக்குகளின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி டேனி டவுன்செனட் தலைமையிலான குழு இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    ஐ.பி.எல்., பி.பி.எல். (பிக் பாஷ் லீக்) போட்டிகளுக்கு இடையூறு இல்லாத நேரத்தில் இந்த சர்வதேச லீக் போட்டியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    • தனது குடும்பத்தினருடன் மும்பையில் இருந்து கோவாவுக்கு சுற்றுலா சென்றார்.
    • கர்நாடக மாநிலம் பெலகாவி வழியாக பயணித்துள்ளார்.

    முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் ஜாம்பவானாக கருதப்படுபவர் சச்சின் தெண்டுல்கர். இவர் கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வுபெற்றார்.

    தற்போது இவர் தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்று பொழுதை கழித்து வருகிறார். இந்தநிலையில் அவர் தனது குடும்பத்தினருடன் மும்பையில் இருந்து கோவாவுக்கு சுற்றுலா சென்றார்.

     இதற்காக அவர் கர்நாடக மாநிலம் பெலகாவி வழியாக பயணித்துள்ளார். அப்போது அவர் பெலகாவி புறநகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டீக்கடைக்கு சென்று டீ குடித்தார்.

    மேலும், அவரது ரசிகரான கடை உரிமையாளருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • கே.எல். ராகுல் 4,9 மற்றும் 9 என மூன்று போட்டிகளில் மோசமாக விளையாடியுள்ளார்.
    • தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிராக தினேஷ் கார்த்திக் காயம் அடைந்தார்.

    இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா உடன் கே.எல். ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கி வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள மூன்று போட்டிகளில் அவர் 4, 9 மற்றும் 9 ரன்கள் என மோசமான ஃபார்மில் உள்ளார்.

    பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அரைசதம் விளாசியிருந்தால், ஆஸ்திரேலியாவில் பேக்-ஃபுட் வீரர்கள் சிறப்பாக விளையாட முடியும். கே.எல். ராகுல் பேக்-ஃபுட் வீரர் என்பதால் இந்திய அணி நிர்வாகம் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளது.

    இருந்தாலும், மோசமாக விளையாடி வருவதால் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதேபோல் தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடவில்லை. அவருக்கு போதுமான பந்துகள் கிடைக்கவில்லை என்றாலும், பாகிஸ்தானுக்கு எதிராக இக்கட்டான நிலையில் ஆட்டம் இழந்து விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

    இதற்கிடையே, அதிரடி வீரரும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட்-க்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடியுள்ளார். இதனால் கே.எல். ராகுல், தினேஷ் கார்த்திக் ஆகியோரில் ஒருவரை நீக்கிவிட்டு ரிஷப் பண்ட்-க்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

    இந்திய அணி நாளை வங்காளதேசத்தை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டிக்கு முன்னதாக இன்று இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

    அப்போது தினேஷ் கார்த்திக் நாளைய போட்டியில் பங்கேற்பாரா? கே.எல். ராகுல் நீக்கப்படுவாரா? என்பது குறித்த கேள்விக்கு ராகுல் டிராவிட் பதில் அளித்தார்.

    ராகுல் டிராவிட் அளித்த பேட்டியின் முழு விவரம் பின்வருமாறு:-

    கே.எல். ராகுல் தலைசிறந்த வீரர். ஆடுகளத்தில் சாதனைகள் மூலம் அதை அவர் நிரூபித்துள்ளார். அவர் சூப்பராக பேட்டிங் செய்து வருகிறார். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு இந்தத் தொடர் எளிதானதாக அமையவில்லை. இதுபோன்ற விஷயம் டி20-யில் நிகழும். இந்த தொடர் மிகவும் சவாலானது. பயிற்சி ஆட்டத்தில் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் ஆகியோருக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அடுத்த சில போட்டிகளில் எல்லா துறைகளிலும் சரியான வகையில் செயல்படுவோம் என்று நம்புகிறேன்.

    அவருடைய திறமை மற்றும் தரம் எங்களுக்கு தெரியும். இந்த கண்டிசனுக்கு அவர் மிகவும் பொறுத்தமானவர். சிறந்த ஆல்-ரவுண்ட் விளையாட்டை பெற்றுள்ளார். சிறந்த பேக்-ஃபுட் வீரர். இந்த கண்டிசனுக்கு இதுபோன்ற வீரர்தான் தேவை. அவர் பந்தை எதிர்கொள்ளும் விதத்தில் நாங்கள் மகிழ்ச்சியாகத்தான் உள்ளோம்.

    வீரர்களுடன் நாங்கள் ஏராளமான பேசியுள்ளோம். சரியான தகவலை இங்கே பகிர்ந்து கொள்வது கடினம். ஆனால் வார்த்தை மற்றும் செயல் மூலமாக அவருக்கு நாங்கள் கடந்த ஓராண்டாக ஆதரவாக இருக்கிறோம் என்பதை உறுதியாக கூற இயலும். இந்த தொடரில் இந்திய அணி செல்லும் பாதை குறித்து தெளிவாக உள்ளோம். அவற்றில் இருந்து பின் வாங்கவில்லை. நாங்கள் ஏராளமான போட்டிகளில் விளையாடியுள்ளோம்.

    தினேஷ் கார்த்தில் இன்று நல்ல முறையில் பயிற்சி மேற்கொண்டார். துரதிருஷ்டவசமாக, பந்தை துள்ளி பிடிக்கும்போது கீழே விழுந்து காயம் ஏற்பட்டது. சிகிச்சை மேற்கொண்டு நல்ல நிலையில் உள்ளார். பயிற்சி மேற்கொண்டார். நாளைய போட்டிக்கு முன் அவருடைய உடல் நிலை எப்படி இருக்கிறது என்பது மதிப்பீடு செய்ய வேண்டும். அவர் பழைய உடல் தகுதியை பெற, சிறந்த பயிற்சி அளித்துள்ளோம். நாளை காலை அவர் எவ்வாறு உள்ளார் என்பதை பார்த்து, அதன் பிறகு இறுதி முடிவு எடுப்போம்.

    தினேஷ் கார்த்திக் இந்த தொடரில் எப்படி விளையாடினார் என்பதை மதிப்பீடுவது மிகவும் கடினம். ஏனென்றால், அவருக்கு விளையாடும் வகையில் போதுமான பந்துகள் கிடைக்கவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு பந்துதான் கிடைத்தது. நெதர்லாந்துக்கு எதிராக விளையாடவில்லை. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சூர்யகுமார் யாதவ் உடன் இணைந்து ஒரு பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தினார் என நாங்கள் நினைத்தோம். இதுதான் எங்களுக்கு தேவை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலக கோப்பை முடிந்த உடன் இந்தியா நியூசிலாந்து சென்று டி20 தொடரில் விளையாடுகிறது.
    • ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான அணியில் ஷுப்மான் கில்லுக்கு இடம் கிடைத்துள்ளது.

    இந்தியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் நடைபெற்று வருகிறது. இன்று காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற காலிறுதியில் பஞ்சாப்- கர்நாடகா அணிகள் விளையாடின.

    டாஸ் வென்ற கர்நாடகா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் விளையாடி வரும் ஷுப்மான் கில் அபாரமாக விளையாடி 55 பந்தில் 11 பவுண்டரி, 9 சிக்சர்களுடன் 126 ரன்கள் குவித்தார். மற்றொரு வீரர் அன்மோல்ப்ரீத் சிங் 43 பந்தில் 59 ரன்கள் விளாசினார். இதனால் பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் குவித்தது.

    தற்போது உலகக் கோப்பையில் விளையாடி வரும் இந்தியா, அதன்பிறகு நியூசிலாந்து சென்று 3 டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது. முன்னணி வீரர்கள் பலருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் ஷுப்மான் கில் இடம் பிடித்துள்ளார்.

    இந்த அணியில் சதம் பிடித்ததை சதம் விளாசி ஷுப்மான் கில் கொண்டாடியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் கில் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்புள்ளது.

    ×